கேமரன் தொகுதி 15வது பொதுத் தேர்தலில் மீண்டும் மஇகா கைக்கு…

மஇகா தலைவர் எஸ்.விக்னேஸ்வரன், கேமரன் மலை தொகுதி இப்போது மஇகா உறுப்பினர் அல்லாத பிஎன் வேட்பாளர் ஒருவரிடம் இருந்தாலும் அந்த நாடாளுமன்றத் தொகுதி மஇகாவுக்கே திரும்பி வரும் என்கிறார். “அத்தொகுதியில் பிஎன் வேட்பாளர் ரம்லி வெற்றி பெற்றாலும் வருங்காலத்தில் நாங்கள்தான் அங்கு போட்டியிடுவோம்”, என்றவர் நேற்றிரவு மஇகா தலைமையகத்தில்…

அடுத்த பொதுத் தேர்தலில், கேமரன் மலையில் மஇகா நிச்சயம் போட்டியிடும்

அடுத்த பொதுத் தேர்தலில், கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் கண்டிப்பாக போட்டியிடுவோம் என்று மஇகா கூறியுள்ளது. அத்தொகுதி மஇகாவுக்குச் சொந்தமானது, இம்முறை இடைத்தேர்தலுக்காக அந்நாற்காலி பிஎன்–னுக்கு இரவல் கொடுக்கப்பட்டது என்று கட்சியின் தேசியத் தலைவர் எஸ் விக்னேஸ்வரன் தெரிவித்தார். “முன்பு நான் கூறியதுபோல், அத்தொகுதி இரவல் கொடுக்கப்பட்டுள்ளது, பிஎன்…

அரசு பள்ளிகளில் பணியில் இருந்த துப்புரவு பணியாளர்கள் மற்றும் பாதுகாவலர்கள்…

ஜனவரி மாதத் தொடக்கத்தில், எந்தவொரு முன் அறிவிப்பும் இன்றி, பள்ளிகளில் ஒப்பந்த துப்புரவு பணியாளர்களாகவும் பாதுகாவலர்களாகவும் இருந்த பணியாளர்களைப் பணி நீக்கம் செய்தது தொடர்பில், அவர்களுக்கு மலேசியக் கல்வி அமைச்சு உதவ வேண்டுமென, அரசு சாரா நிறுவனமான, அரசு ஒப்பந்த தொழிலாளர் கூட்டணி (ஜேபிகேகே) கல்வி அமைச்சைக் கேட்டுக்கொண்டது.…

பெட்ரோல் விலை 5 சென் குறைந்தது, டீசல் விலையில் மாற்றமில்லை

இன்று நள்ளிரவு தொடக்கம், அடுத்த ஒரு வாரத்திற்கு, ரோன் 95 மற்றும் ரோன் 97 பெட்ரோல் விலை 5 சென் குறைய உள்ளது. இதன்வழி, ரோன் 95, லிட்டருக்கு RM1.93-க்கும், ரோன் 97 லிட்டருக்கு RM2.23-க்கும் விற்கப்படும். அதேசமயம், டீசலின் விலை லிட்டருக்கு RM2.18-ஆக நிலை நிறுத்தப்படுகிறது. உலக…

துரோனோ விவசாயிகளை வெளியேற்றிட மீண்டும் நீதிமன்ற நடவடிக்கை, விவசாயிகள் அதிர்ச்சி 

பேராக், துரோனொவில், கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக, விவசாயம், கால்நடை மற்றும் மீன் வளர்ப்பில் ஈடுப்பட்டு வரும் 8 விவசாயிகளைக் கட்டாயமாக வெளியேற்றிட, பேராக் மேம்பாட்டு வாரியம், வழக்கறிஞர்கள் வாயிலாக சம்மன் அனுப்பியுள்ளது. பேராக் பக்காத்தான் ஹராப்பான் அரசின் கீழ் இயங்கிவரும் ‘பேராக் மேம்பாட்டு வாரியம்’ அனுப்பிய சம்மனைக் கேள்விப்பட்ட…

கீழ் மட்டத்திலிருந்து வேலை செய்ய நஜிப்பிடம் கற்றுக்கொள்ளுங்கள், ஹராப்பானுக்கு அம்பிகா…

களத்தில் இறங்கி வேலை செய்வதைப் பற்றி, முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிடம் இருந்து, பக்காத்தான் ஹராப்பான் பிரதிநிதிகள் கற்றுக்கொள்ள வேண்டும் என்று வழக்கறிஞர் அம்பிகா ஸ்ரீனிவாசன் தெரிவித்தார். அண்மையில், குறிப்பாக, கேமரன் மலை இடைத் தேர்தலின் போது, கீழ்மட்டத் தலைவர்கள், உள்ளூர் சமூகத் தலைவர்கள் மற்றும் பொதுமக்களைச் சந்தித்து…

நஜிப்: நான் இறங்கிவிட்டேன், ஆனால் ரிங்கிட் இன்னும் கொடூரமாக இறங்கிவிட்டது

தான் பிரதமர் பதவியிலிருந்து விலகினால், ரிங்கிட்டின் மதிப்பு உயரும் என்ற பக்காத்தான் ஹராப்பானின் முந்தையக் குற்றச்சாட்டு குறித்து, நஜிப் ரசாக் மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளார். "நான் இறங்கிவிட்டேன், (லிம்) குவான் எங் ஏறிவிட்டார். ஆனால், ரிங்கிட்டின் மதிப்பு கொடூரமாக இறங்கிவிட்டது. இதற்கு குவான் எங்-கின் பதில் என்ன?" என்று…

நஜிப்பின் ஊழல் வழக்கு: 421 ஆவணங்கள் வழக்கறிஞரிடம் சமர்ப்பிக்கப்பட்டது

கோலாலம்பூர் உயர்நீதிமன்றம், RM2.28 பில்லியன் மதிப்புள்ள 1எம்டிபி சம்பந்தப்பட்ட நான்கு குற்றச்சாட்டு வழக்கு விசாரணைக்காக, முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் சம்பந்தப்பட்ட 421 ஆவணங்களை வழங்கியுள்ளது. அத்தகவலை, வழக்கு விசாரணை குழுவுக்குத் தலைமையேற்றிருக்கும் மூத்த பொது வழக்குரைஞர், கோபால் ஶ்ரீ ராம் கோலின் லோரன்ஸ் செகுவேரா முன்னிலையில் தெரிவித்தார்.…

மூத்த செய்தியாளர்: வாங் கெலியான் சவக்குழிகளை அம்பலப்படுத்தியது நான், போலீஸ்…

பெர்லிஸ் காட்டுப் பகுதிகளில் பலர் புதைக்கப்பட்டிருந்த சவக்குழிகளை முதன்முதலாக அம்பலப்படுத்தியது போலீஸ் என்று கூறப்படுவதைக் கேட்டு ஆத்திரமடைகிறார் இப்போது நின்றுபோன ஓர் ஆங்கில நாளிதழின் செய்தியாளர். அச் செய்தியை வெளியில் கொண்டு வந்த பெருமைக்கு இன்னொரு ஆங்கில நாளேடும் உரிமை கொண்டாடுவது அவருக்கு எரிச்சலை உண்டு பண்ணுகிறது. “எத்தனையோ…

சுல்தான் அப்துல்லா மாமன்னராக பதவிப் பிரமாணம்

பகாங் சுல்தான், அல்-சுல்தான் அப்துல்லா ரி’யாதுடின் அல்-முஸ்தபா பில்லா ஷா இன்று, பாரம்பரிய சடங்குகளுடன் மாட்சிமை தங்கிய மாமன்னராக பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டார். அதே சடங்கில் பேராக் ஆட்சியாளர் சுல்தான் நஸ்ரின் ஷாவும் துணைப் பேரரசராக பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார். அவ்விருவரையும் பேரரசராகவும் துணைப் பேரரசராகவும்…

ஆய்வு: 60விழுக்காடு மலாய்க்காரர்களுக்கு ஹரப்பான்மீது அதிருப்தி

கடந்த ஆண்டின் இறுதி மாதங்களில் நாடு முழுக்க மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வு அவ்வாய்வில் கலந்துகொண்ட மலாய்காரர்களில் 60 விழுக்காட்டினர் பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கத்தின்மீது அதிருப்தி கொண்டிருப்பதைக் காண்பித்தது. அந்த ஆய்வில் கலந்துகொண்ட மலாய்க்காரர்களில் 54.4 விழுக்காட்டினர், மலாய்க்காரர் உரிமைகளையும் அதிகாரப்பூர்வ சமயமாக இஸ்லாத்தையும் நிலைநாட்டுதல் போன்ற மலாய்க்காரர் நலத்…

சுவாராம் : போக்கா சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள 142…

குற்றவியல் தடுப்புச் சட்டம் (போக்கா) 1959-இன் கீழ், விசாரணையின்றி சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அனைத்து சிறுவர்களையும் விடுவிக்க வேண்டும் என்று மனித உரிமைகள் அமைப்பு, சுவாராம் அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. நாடாளுமன்றப் பதில்களிலிருந்து பெறப்பட்ட புள்ளிவிவரங்களின் படி, 2018 வரை, அந்த 142 போக்கா கைதிகளில் பலர் 18 வயதிற்கு…

திருடப்பட்ட 1எம்டிபி பணத்தை, மலேசியா திரும்பப்பெறும்

கையாடல் செய்யப்பட்ட 1எம்டிபி பணத்தை, மலேசியா விரைவில் திரும்பப் பெறக்கூடும் என்று நிதியமைச்சர் லிம் குவான் ஏங் தெரிவித்தார். “அது பில்லியன் கணக்கான தொகை அல்ல, ஆனால் முதல் கட்டமாக, குறிப்பிட்ட ஒரு தொகை மலேசியாவிற்குக் கொடுக்கப்படும், இது ஒரு நல்ல செய்தி. அதனைத் தொடர்ந்து, மீதப் பணமும்…

கேமரன் மலை வீழ்ச்சிக்குப் பின்னர், செமிஞ்சேயில் ஹராப்பான் மீண்டெழ வாய்ப்புண்டா?

இன்னும் ஒரு மாத காலத்தில், பக்காத்தான் ஹராப்பான் செமிஞ்சே சட்டமன்ற இடைத்தேர்தலை எதிர்கொள்ள உள்ளது. 14-வது பொதுத் தேர்தலில் (ஜிஇ14) 8,964 பெரும்பான்மை வாக்குகளுடன் வெற்றி பெற்ற போதிலும், தற்போதைய அரசியல் மாற்றங்களை ஹராப்பான் தெரிந்து கொள்ள வேண்டும், தனது போட்டியாளர்களான, பிஎன் மற்றும் பாஸ் தரப்பைக் குறைத்து…

செமிஞ்சே இடைத்தேர்தல் : பிஎஸ்எம் போட்டியிடும் வாய்ப்பு அதிகம்

மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.), சிலாங்கூர், செமிஞ்சே இடைத்தேர்தலில் போட்டியிடும் தனது முடிவை, இவ்வார இறுதியில், கட்சியின் மத்தியச் செயலவை கூட்டத்திற்குப் பிறகு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. “போட்டியிடும் வாய்ப்பு அதிகம் உள்ளது,” எனக் கட்சியின் மத்தியச் செயலவை உறுப்பினர் எஸ் அருட்செல்வன், மலேசியாகினியிடம் தெரிவித்தார். கடந்த பொதுத்…

B40 குழுவினர் சொந்த வீடு பெற, பேங்க் நெகாரா RM1…

குறைந்த வருமானம் பெறும் குடும்பத்தினர் (B40), தங்கள் முதல் வீட்டிற்குக் கடன் பெற உதவும் வகையில், பேங்க் நெகாரா (பிஎன்எம்) RM1 பில்லியன் நிதி உதவியை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘பிஎன்எம் கட்டுப்படி விலை வீடு நிதி’யின் கீழ், மாத குடும்ப வருமானம் RM2,300 அல்லது அதற்கும் குறைவாக பெறுபவர்கள், RM150,000…

டாக்டர் எம்: அம்னோ கேமரனில் வென்றது ஆச்சரியமான ஒன்றில்லை

கடந்த சனிக்கிழமை, கேமரன் மலையில் இடைத்தேர்தல் முடிவு அதிர்ச்சியளிக்கும் ஒன்றல்ல என்று பக்காத்தான் ஹராப்பான் தலைவர் டாக்டர் மகாதிர் தெரிவித்துள்ளார். அம்னோ எப்போதும் கிராமப்புறங்களில் வலுவாக இருக்கும் என்று அவர் கூறினார். "அதுமட்டுமின்றி, துரதிருஷ்டவசமாக அவர்கள் இனப் பிரச்சனைகளைக் கையாளுகின்றனர்," எனப் பிரதமர் குறிப்பிட்டார். கடந்த இடைத் தேர்தலோடு,…

மாநிலத்தில் குடியிருக்காதவர்களும், இனி பினாங்கில் மலிவு விலை வீடுகளை வாங்கலாம்

மாநிலத்தில் விற்பனையாகாமல் இருக்கும் வீடுகளுக்குத் தீர்வாக, பினாங்கு மாநில அரசு சில திட்டங்களை அறிவித்துள்ளது. வீடமைப்பு, நகர்புறம் மற்றும் கிராமத் திட்டமிடல் குழுவின் தலைவரான ஜக்டீப் சிங் டியோ, சந்தையில் தற்போதுள்ள வீடுகளில், 20 முதல் 40 விழுக்காடு வரை, மாநிலத்தில் வசிக்காதவர்கள் வாங்க அனுமதிப்பது அத்திட்டங்களில் ஒன்று…

கடப்பிதழை வைத்துக்கொள்ளும் தெங்கு அட்னான் முயற்சி நிராகரிக்கப்பட்டது

  கோலாலும்பூர் உயர் நீதிமன்றம் முன்னாள் கூட்டரசு பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர், தன்னுடைய கடப்பிதழைத் தன்னிடமே வைத்துக்கொள்ள அனுமதி கேட்டு செய்துகொண்ட மனுவை நிராகரித்தது. அவரது மனுவைத் தள்ளுபடி செய்த நீதிபதி முகம்மட் நஸ்லான் முகம்மட் கசாலி செஷன்ஸ் நீதிமன்றத்தின் தீர்ப்பை நிலைநிறுத்தி தெங்கு…

செமினியில் வெற்றி பெற ரயிஸ் சூத்திரம்: டோல் சாவடியை மூடுவீர்,…

பக்கத்தான் ஹரப்பான் மார்ச் மாத இடைத் தேர்தலில் செமினி சட்டமன்றத் தொகுதியைத் தக்க வைத்துக்கொள்ள ஒரு சூத்திரம் உரைக்கிறார் முன்னாள் அமைச்சர் ரயிஸ் யாத்திம். “ஒரு டோல் சாவடியை மூடுங்கள், எரிபொருள் விலையைக் குறையுங்கள். “2018 மே மாதத்துக்கு முன்பு பெல்டாவுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள். செமினியில் வெற்றி…

நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்நோக்கிய ரிட்சுவான் பெர்சத்து உயர் பதவிகளில் ஆசை…

மலாக்கா பெர்சத்து தலைவர் முகம்மட் ரிட்சுவான் கட்சியின் உயர் பதவிகள்மீது கண் வைத்திருப்பதாகக் கூறப்படுவதை மறுக்கிறார். ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள கட்சித் தேர்தலில் போட்டியிடும் எண்ணமெல்லாம் கிடையாது என்றும் அமைச்சர் பொறுப்பை நிறைவேற்றுவதற்கே முக்கியத்துவம் கொடுக்கப் போவதாகவும் அவர் மலேசியாகினியிடம் கூறினார். ரிட்சுவான் தொழில் முனைவர் மேம்பாட்டு அமைச்சராவார்.…

சட்டை விவகாரம்: மனோகரன் மீது இசி நடவடிக்கை?

கடந்த சனிக்கிழமை கேமரன் மலை இடைத் தேர்தலில் கட்சிச் சின்னம் பொறிக்கப்பட்ட சட்டை அணிந்து வாக்களிப்பு மையத்துக்குள் வந்த பக்கத்தான் ஹரப்பான் வேட்பாளர் எம்.மனோகரன்மீது நடவடிக்கை எடுப்பது குறித்து தேர்தல் ஆணையம் ஆலோசிக்கிறது. அவரது செயல் தேர்தல் சட்டம் பிரிவு 26(1) (ஜி)-இன்கீழ் ஒரு குற்றம் என்பதால் அவர்மீது…

ஹராப்பான் : கேமரன் இடைத்தேர்தல் நமக்கு ஓர் எச்சரிக்கை

கேமரன் மலை இடைத்தேர்தல் முடிவு, பிகேஆர் மற்றும் பக்காத்தான் ஹராப்பான் சில பலவீனங்களைச் சரிசெய்ய வேண்டியுள்ளது என்பதை நினைவுறுத்துகிறது என பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். "இது, பிகேஆர் மற்றும் ஹராப்பான் தலைவர்கள், பொருளாதாரம் மற்றும் வாழ்க்கை செலவுகள் பற்றிய மக்களின் கவலையை அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்கான…