ஜொகூர் பாருவில் உள்ள உலு திராம் காவல் நிலையத்தில் இன்று அதிகாலை முகமூடி அணிந்த சந்தேக நபர் நடத்திய தாக்குதலில் இரண்டு போலீசார் கொல்லப்பட்டனர் மற்றும் ஒருவர் காயமடைந்தார். ஜொகூர் காவல்துறைத் தலைவர் எம் குமார் கூறுகையில், அதிகாலை 2.45 மணியளவில் சந்தேக நபர் ஒரு துப்பாக்கி மற்றும்…
பீர் போத்தல்களை அடித்து நொறுக்கிய குற்றத்திற்காக ஜமால் கைது செய்யப்பட்டார்
நேற்று ஷா ஆலாம், சிலாங்கூர் செயலகக் கட்டிடத்திற்கு வெளியில் பீர் போத்தல்களை அடித்து நொறுக்கியக் குற்றத்திற்காக சுங்கை பெசார் அம்னோ தலைவர், ஜமால் யூனுஸ் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார். “செகிஞ்சாங்கில், அம்னோ தொகுதி கூட்டம் நிறைவடைந்த பிறகு, நான் போலிசாரால் சுற்றி வளைக்கப்பட்டு, கைது செய்யப்பட்டேன். என்னைப் பொறுத்தவரை, இது ஒரு மூர்க்கமான…
எம்.ஏ.சி.சி. ‘வாரிசான்’ உதவித் தலைவரைத் தடுத்து வைத்தது
பார்ட்டி வாரிசான் சபா (வாரிசான்) உதவித் தலைவர் பீட்டர் அந்தோணி, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் (எம்.ஏ.சி.சி.) தடுத்து வைக்கப்பட்டார். நேற்று மாலை, கோத்தா கினாபாலு எம்.ஏ.சி.சி. அலுவலகத்திற்கு, விசாரணைக்கு வந்த அவர் தடுத்து வைக்கப்பட்டதை எம்.ஏ.சி.சி. உறுதிபடுத்தியதாக ஃப்ரி மலேசியா டுடே செய்தி கூறியது. நாளை காலை,…
மகாதிர்: துங்குவின் அம்னோ சுதந்திரம் பெற்றுக் கொடுத்தது; இன்றைய அம்னோ…
நாட்டிற்குச் சுதந்திரம் பெற்றுத்தந்ததில் கட்சியின் பங்கு பற்றி அம்னோ தலைவர்கள் தற்பெருமை அடித்துக்கொள்கிறார். ஆனால், இன்றைய அம்னோ அதற்கு எதிர்மாரானதைச் செய்கிறது என்று மகாதிர் கூறுகிறார். "இன்றைய அம்னோவிலிருக்கும் கயவர்களைப் போன்றவர்களால் சுதந்திரத்தைப் பெற்றிருக்கவே முடியாது. நல்லகாலமாக, அதை துங்கு அப்துல் ரஹ்மான் வழி நடத்தினார். "அதை…
பி.எஸ்.எம். : வீடுடைப்பு விவகாரம், அஸ்மின் அலியின் நிலைபாடு என்ன?
சுபாங் விமான நிலையப் பள்ளிவாசல் பணியாளர்களின் வீடு மற்றும் கடையை இடித்துத் தள்ளிய விவகாரத்தில் தனது நிலைப்பாடு என்னவென்று, சிலாங்கூர் மந்திரி பெசார் அஸ்மின் அலி விளக்க வேண்டுமென்று, மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) கேட்டுக்கொண்டுள்ளது. சுபாங் விமான நிலைய மசூதி கட்டப்பட்ட போது, அதன் வளாகத்தைச் சுற்றி…
மஇகா அதன் கடமையைச் செய்திருந்தால் இந்தியர்களுக்கு ஒரு செயல்திட்டம் தேவையில்லையே
மக்கள் கருத்து ‘இந்தியர்களுக்காக மஇகா நிறைய செய்திருந்தால் அவர்கள் இன்னும் ஏழைகளாக இருப்பது ஏன்?’ பெயரிலி2475: மஇகா பொருளாளர் எஸ். வேள்பாரி அவர்களே, நீங்கள் டிஏபியைப் பார்த்து இந்தியர்களுக்கு என்ன செய்தாய் என்று கேட்டீர்களே, ஒரு கேள்வி அது சிறுபிள்ளைத்தனமான கேள்வி. இந்தியர்களில் ஏழைகளாக இருப்போருக்கும் தமிழ்ப் …
அலி ஹம்சா கூற்று அதிர்ச்சியளிக்கிறது: கிட் சியாங் சீற்றம்
ஆசிரியர்களை அம்னோவில் சேரச் சொல்வதில் தப்பேதுமில்லை என்று கூறியுள்ள அரசாங்கத் தலைமைச் செயலாளர் அலி ஹம்சாவை டிஏபி நாடாளுமன்றத் தலைவர் லிம் கிட் சியாங் சாடினார். அலியின் கூற்று அதிர்ச்சியளிக்கிறது என்றவர் ஓர் அறிக்கையில் கூறினார். “இதே அலி, ஆசிரியர்கள் டிஏபி-இலும் மற்ற பக்கத்தான் ஹரபான் கட்சிகளிலும் சேரலாம் …
ஜமால் சிலாங்கூர் செயலகத்துக்கு வெளியில் பீர் போத்தல்களை அடித்து நொறுக்கினார்
சுங்கை புசார் அம்னோ தலைவர் ஜமால் முகம்மட் யூனுஸ் மறுபடியும் சிலாங்கூர் அரசுக்கு எதிராக போர்க் கொடி தூக்கினார். இன்று காலை அவர் சிலாங்கூர் செயலகக் கட்டிடடத்துக்கு வெளியில் பெட்டிகளில் பீர் போத்தல்களை நிரப்பி வைத்து ஒரு சம்மட்டியால் அடித்து நொறுக்கினார். “குடிக்க விரும்பினால், (சிலாங்கூர் மந்திரி புசார்) …
‘எச்’ என்று பிரதமர்துறையில் யாருமில்லை: சைட் சித்திக்குக்கு நஜிப் உதவியாளர்…
பிரதமர் அலுவலகத்தில் ‘எச்’ என்ற பெயரில் எவருமில்லை என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் உதவியாளர் தெங்கு சரிபுடின் தெங்கு அஹ்மட் கூறினார். “அந்தப் பெயர் கொண்ட அதிகாரி எவரும் பிரதமர் அலுவலகத்தில் இல்லை அப்படி எவரும் பிரதமருக்கு வேலை செய்யவுமில்லை”, என சினார் ஹரியானிடம் அவர் தெரிவித்தார்.…
சர்வாதிகார ஆட்சிதான் மாணவர்களைக் கட்சியின் கொடியைப் பிடிக்கச் சொல்லும், மகாதிர்…
சர்வாதிகார ஆட்சி மட்டும்தான் மாணவர்களைக் கட்சியின் கொடியைப் பிடிக்கவும் கட்சியின் பாட்டை பாடவும் சொல்லும் என்று மகாதிர் முகமட் கூறினார். புத்ரா ஜெயா பிரிசிங்ட் 14 (1) தேசியப்பள்ளியில் மாணவர்கள் அம்னோ ஹீடோப் என்று பாடியது மற்றும் கட்சியின் கொடியை அசைத்தது பற்றி அவரிடம் கேட்கப்பட்டது. தாம்…
நஜிப் அரசு ஊழியர்களைக் குறைவாக மதிப்பிடக்கூடாது என்கிறார் அஸ்மின் அலி
சிலாங்கூர் மந்திரி புசார் அஸ்மின் அலி அரசு ஊழியர்களைக் குறைவாக மதிப்பிடக்கூடாது என்ற கருத்தைக் கொண்டிருக்கிறார். அரசு ஊழியர்களுக்கு, அவர்கள் எங்கிருந்தாலும் சரி, நாட்டில் என்ன நடக்கிறது என்பது தெரியும் என்றாரவர். எதிரணியினர் ஆட்சிக்கு வந்தால், அரசு ஊழியர்களின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் சாத்தியம் இல்லை என்று…
பேங்க் நெகரா தவறிழைக்கும் நிதி நிறுவங்களின் பெயர்களை வெளியிட்டு அசிங்கப்படுத்தும்
பேங்க் நெகரா 2018 ஜவவரியிலிருந்து விதிமுறைகளைப் பின்பற்றாத நிதி நிறுவனங்கள்மீதும் அவர்களின் இடையீட்டாளர்கள்மீதும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை வெளியிடும். இதனைத் தெரிவித்த பேங்க் நகரா ஆளுநர் முகம்மட் இப்ராகிம், நிதி நிறுவனங்களின் பெயர்கள், அவை புரிந்த தவறுகள், அவற்றுக்காக விதிக்கப்பட்ட அபராதத் தொகைகள் போன்ற விவரங்கள் மத்திய வங்கி அகப்பக்கத்தில் …
ரிம100 மில்லியன் களவாடிய அமைச்சின் ஐந்து அதிகாரிகளை எம்ஏசிசி அடையாளம்…
மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையம் (எம்ஏசிசி) ஓர் அமைச்சின் ஐந்து அதிகாரிகள் பத்து நிறுவனங்களுடன் சேர்ந்து ரிம100 மில்லியன் ரிங்கிட்வரை சுருட்டியிருக்கலாம் என நம்புகிறது. அமைச்சின் பெயரை அது குறிப்பிடவில்லை. “பல ஆண்டுகளாக அவர்கள் இதைச் செய்து வந்துள்ளனர். திட்டங்களைச் செயல்படுத்துவதாகக் கூறிக்கொண்டு செயல்படுத்தாமலேயே பணத்தை அமுக்கி விடுவார்கள்.…
பள்ளி நிகழ்வில் நாட்டின் வரலாறுதான் விவரிக்கப்பட்டது
என்ஜிஓ ஒன்று புத்ரா ஜெயா தொடக்கநிலை பள்ளியில் அம்னோவை நினைவுபடுத்தும் வகையில் அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்ததையும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டதையும் குறைகூறியதை அடுத்து கூட்டரசு பிஎன் இளைஞர் தலைவர் முகம்மட் ரஸ்லான் ரபில் அதைத் தற்காத்துப் பேசியுள்ளார். “நானும் அங்கிருந்தேன், அங்கு ‘நம் நாட்டின் விடுதலைதான்’ விவரிக்கப்பட்டது. “மலாயன் யூனியனுக்கு எதிரான …
பி.எஸ்.எம். : மலேசிய ஏர்லைன்ஸ்-சின் முன்னாள் ஊழியர்களைத் தொழிற்துறை நீதிமன்றத்தில்…
மலேசிய ஏர்லைன்ஸ் சிஸ்டம் பெர்ஹாட்டின் (மாஸ்) ஊழியர்கள், கடந்த 2 ஆண்டுகளாகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள போதிலும், இன்னும் அவர்களைத் தொழிற்துறை நீதிமன்றத்திற்குக் கொண்டுசென்று, ஆலோசனை பெறாமல் இருக்கும் மனித வள அமைச்சர் , ரிச்சர்ட் ரியோட்டின் போக்கை மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) சாடியுள்ளது. கடந்த 2015-ல்,…
பள்ளி வளாகத்தில் அம்னோ கொடிகள் பறக்க, மாணவர்கள் “ஹிடோப் அம்னோ”…
புத்ரா ஜெயா பிரிசிங்ட் 14 (1) தேசியப்பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் வகுப்பு அலங்கரிப்பு மற்றும் இசை நிகழ்ச்சி போட்டியில் பங்கேற்றனர். அந்நிகழ்ச்சியின் கருப்பொருள் "அம்னோ மற்றும் சுதந்திரம் # நெகாராகு என்பதாகும். அத்தொடக்கப்பள்ளியின் வளாகம் முழுவதும் அம்னோ கொடிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மாணவர்கள் அம்னோ கொடிகளை உயர்த்திக்காட்டிக் கொண்டு கட்சியின்…
காஜாங் மருத்துவமனையின், முன்னாள் ஊழியர்களின் 6 வீடுகள் தீபாவளிக்குப் பிறகு உடைக்கப்படும்
காஜாங் மருத்துவமனையின் முன்னாள் ஊழியர்கள் சிலர், தங்கள் வீடுகளிலிருந்து அக்டோபர் 22-ல் வெளியேற ஒப்புக் கொண்டதால், அவர்கள் குடியிருந்த 6 வீடுகள் உடைபடுவதிலிருந்து தப்பின. இன்று காலை, உலு லங்காட் மாவட்ட நில அலுவலகம் மற்றும் காவல்துறையினரின் அமலாக்கப் பிரிவினர் சுங்கை ஜெலோக், காஜாங், சிலாங்கூரில் அமைந்துள்ள முன்னாள்…
கையூட்டு கொடுக்க முயன்றது குறித்து சைட் சாதிக் புகார் செய்ய…
பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா இளைஞர் தலைவர் சைட் சாதிக் கூறுவதுபோல் அவருக்குக் கையூட்டு கொடுக்கும் முயற்சி நடந்திருந்தால் அது குறித்து அவர் மலேசிய ஊழல்தடுப்பு ஆணையத்திடம் புகார் செய்ய வேண்டும் என பினாங்கு முதல்வர் லிம் குவான் எங் கூறினார். அதுதான் முறையாகும் என்று கூறிய அவர், …
அமனாவின் காலிட் சமட் ஜோகூரில் போட்டி
14வது பொதுத் தேர்தலில் அமனா கட்சி ஷா ஆலம் எம்பி காலிட் சமட்டை ஜோகூரில் களமிறக்க முடிவு செய்திருப்பதை அக்கட்சித் துணைத் தலைவர் சலாஹுடின் ஆயுப் இன்று உறுதிப்படுத்தினார். காலிட், அவரின் தமையனாரான பெல்டா தலைவர் ஷாரிர் சமட்டுக்கு எதிராக ஜோகூர் பாரு நாடாளுமன்றத் தொகுதியில் களமிறக்கப்படும் வாய்ப்புள்ளதையும் …
இருமொழி திட்டதிற்கு எதிரான வழக்கில் – முதல் கட்ட வெற்றி!
பெட்டாலிங் ஜெயா விவேகனந்தா தமிழ்ப்பள்ளிக்கு எதிரான மே 19 இயக்கத்தினரின் வழக்கு செப்டம்பர் 28 இல் கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் முதல் கட்ட விசாரணைக்கு வந்தது. அதைத் தள்ளுபடி செய்யுமாறு கோரிய அரசு தரப்பு வழக்கறிஞரின் வாதம் தோற்றதால், இந்த வழக்கு முழுமையான விசாரணைக்கு உட்படும் என அறிவிக்கப்பட்டது. இருமொழித்…
ஆஸ்திரேலியா: காணாமல்போன எம்எச் 370 விமானம் தொடர்பான மர்மம் நீடிப்பது…
மலேசிய விமான நிறுவனத்தின் காணாமல்போன எம்எச்370 விமானத்தைத் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட ஆஸ்திரேலிய அதிகாரிகள் அது தொடர்பான வெளியிட்டுள்ள இறுதி அறிக்கையில் விமானத்துக்கு என்னவானது என்ற மர்மம் நீடிப்பது “ஏற்றுக்கொள்ளமுடியாதது” என்று கூறினார்கள். “விமானத்தைக் கண்டுபிடித்தாலொழிய அதற்கு என்னவானது என்பதைத் துல்லியமாகக் கூறுவதற்கில்லை”, என ஆஸ்திரேலிய போக்குவரத்துப் …
புக்கிட் பிந்தாங் கருப்புப் பெட்டியில் குண்டு இல்லை
நேற்றிரவு கோலாலும்பூர், புக்கிட் பிந்தாங்கில் பிரபலமான பொருள் விற்பனை மையத்தின் நுழைவாயிலுக்கு அருகில் கண்டெடுக்கப்பட்ட ஒரு கருப்புப் பெட்டியில் குண்டு எதுவும் இல்லை என்பதை போலீஸ் உறுதிப்படுத்தியது. சந்தேகத்துக்குரிய அப்பெட்டி குறித்து தொலைபேசி அழைப்பு கிடைத்ததும் குண்டைச் செயலிழக்கச் செய்யும் குழு ஒன்று அங்கு அனுப்பப்பட்டதாக டாங் வாங்கி …
எதிரணி ஆட்சியில் வாழ்க்கை இருண்டு விடும்: அரசுப் பணியாளர்களுக்கு நஜிப்…
இன்று புத்ரா ஜெயா அனைத்துலக மாநாட்டு மண்டபத்தில் சுமார் 5,000 அரசுப் பணியாளர்களிடையே உரையாற்றிய பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் எதிரணி ஆட்சிக்கு வந்தால் அவர்களின் வாழ்க்கை இருண்டு விடும் என்று எச்சரித்தார். ஆளும் கூட்டணியும் அரசுச் சேவையும் பிரிக்க முடியாதபடி ஒன்றிணைந்துள்ளன என்றாரவர். “அதனால்தான் சில தரப்பினர், …
14-வது பொதுத் தேர்தல் : ம.இ.கா.-வின் வேட்பாளர்கள் யார் யார்?
ம.இ.கா. தேசியத் தலைவர் எஸ்.சுப்ரமணியம், கட்சியின் சார்பாக 14-வது பொதுத் தேர்தலில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர் பட்டியலைப் பிரதமரிடம் கொடுத்துவிட்டதாக அறிவித்தது, கட்சி உறுப்பினர்களிடையே தேர்தல் காய்ச்சலை ஏற்படுத்திவிட்டது. சில பிரதான ஊடகங்களின் அறிக்கையை மேற்கோளிட்டு கூறுகையில், “பிரதமர் வேட்பாளர் யார் என்பதை தீர்மானிப்பார், வேட்பாளர்களின் இறுதி பட்டியல் மலேசிய…