ஏப்ரல் 15 அன்று கிள்ளான் பள்ளத்தாக்கில் 11 இடங்களில் குடிவரவுத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், வீட்டுப் பணியாளர்களைக் குறிவைக்கும் கடத்தல் கும்பலிடமிருந்து எட்டு இந்தோனேசியப் பெண்கள் மீட்கப்பட்டனர். இந்தக் கும்பல் கடந்த ஒரு ஆண்டாகச் செயல்பட்டு வருவதாக நம்பப்படுவதாக குடிவரவுத் துறை இயக்குநர் தலைவர் ஜகாரியா ஷாபான்…
புதிய முறையில் தமிழ்ப் பாடம் நடத்திய மா.நன்னன் காலமானார்
மலேசியவாழ் தமிழ் மக்களுக்கு நீண்ட காலம் தொன்மொழியாம் தமிழைப் பயிற்றுவித்த மூத்த தமிழறிஞரும் இலக்கியப் படைப்பாளரும் இன உணர்வாளரும் பகுத்தறிவாளருமான பேராசிரியர் மா. நன்னன் தமிழகத்தின் தலைநகரில் காலமானார். ஆஸ்ட்ரோ தமிழ் அலைவரிசைகளில் ஒன்றான வானவில்லின்வழி இவரது பாடங்கள் நமக்கு அறிமுகமாயின. தொடக்கப்பள்ளி ஆசிரியராக பொது வாழ்வைத் தொடங்கிய…
அருள் கந்தாவைச் சேர்த்தால், கஜனாவுக்கு போராபத்து, புவா கூறுகிறார்
கஜனா நேசனல் பெர்ஹாட், அஸ்மான் மொக்தாருக்குப் பதிலாக அருள் கந்தா கந்தசாமியை அதன் நிருவாக இயக்குனராக வேலைக்கு அமர்த்தினால் அது கஜனாவுக்கு ஒட்டுமொத்தப் பேராபத்தாகும் என்று பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் டோனி புவா கூறுகிறார். சிங்கப்பூர் ஸ்டிரேட்ஸ் டைம்ஸ் வெளியிட்டுள்ள ஒரு கட்டுரையில் அஸ்மானில் இடத்தில்…
ஹுஸ்னி, ஊழல் குதிரையைப் பின்தொடராதீர்
தீர்க்கப்படாத பல ஊழல் அவதூறுகளைச் சுட்டிக்காட்டி தாம்புன் நாடாளுமன்ற உறுப்பினர் அஹமட் ஹுஸ்னி ஹனாட்ஸ்லா "தூய குதிரையைப்" பின்தொடர வேண்டுமேயன்றி ஊழல் குதிரையை அல்ல என்று பிகேஆர் சுங்கைப் பட்டாணி நாடாளுமன்ற உறுப்பினர் ஜொஹாரி அப்துல் கூறினார். பக்கத்தானின் ஆறு குதிரைகளைவிட (தலைவர்கள்) தாம் ஒரு குதிரையை…
மலேசியக் கோப்பை வெற்றி பணத்தை, ஜேடிதி வெள்ள நிவாரண பணிக்கு…
ஜொகூர் காற்பந்து குழுவான, ஜொகூர் டாருல் தக்ஷிம் (ஜேடிதி), மலேசிய கோப்பையை வென்று பெற்ற வெகுமதி பணத்தை, பினாங்கு வெள்ள நிவாரண நிதிக்கு வழங்கவுள்ளதாக தெரிகிறது. கடந்த சனிக்கிழமை, 2017 மலேசியக் கிண்ணக் காற்பந்து போட்டியில், கெடாவை 2-0 என்ற கோல் கணக்கில் வென்று, ஜேடிதி மலேசியக் கோப்பையை…
இஸ்லாம் அல்லாதவர்கள் சூராவ்வில் தங்க அனுமதித்தேன் – பிலால் ஒப்புக்கொண்டார்
ஜோர்ஜ்டவுன், தாமான் ஃப்ரி ஸ்கூல் சூராவ்வில், சீன ஆடவர்களும் பெண்களும் தங்க தான் அனுமதித்ததை, அதன் பிலால் ஒப்புக்கொண்டார். சீனர்கள் சிலர் அந்தச் சூராவ்வில் தங்கியிருந்த படங்கள், தகவல் ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து, சப்னோ துகிஜோ எனும் அந்த 50 வயது பிலால், பெரித்தா ஹரியான் இணையப் பத்திரிக்கையிடம்…
ஏசுவின் சிலை உடைப்பு நிறுத்தி வைக்கப்பட்டது
மலாக்கா மாநிலத்தில் போர்ச்சுகீஸ் குடியிருப்பில் ஏசுநாதர் சிலையின் பிரதி உடைக்கப்படுவது மந்திரி பெசார் இட்ரீஸ் ஹருனின் தலையீட்டால் நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால், இந்த நிறுத்தி வைப்பு தற்காலிகமானதே என்று மலாக்கா வரலாற்று நகரமன்ற (எம்பிஎம்பி) உறுப்பினர் ஜோசெப் சாந்தா மாரியா கூறியதாக தெ ஸ்டார் செய்தி கூறுகிறது.…
வெள்ள நிலையை நேரில் காண, துணைப் பிரதமர் பினாங்கு சென்றார்
வெள்ள நிலையை நேரில் கண்டறிய, பினாங்கு மாநிலம் சென்ற துணைப் பிரதமர் ஷாஹிட் ஹமிடியை, மாநில முதல்வர் லிம் குவான் எங் இன்முகத்துடன் வரவேற்றார். அவருடன் டிஏபியின் மூத்தத் தலைவர் லிம் கிட் சியாங்கும் உடன் இருந்தார். “நாங்கள் வெவ்வேறு கருத்துகள் மற்றும் அரசியல் பாதை கொண்டிருந்தாலும், வெள்ளத்தில்…
போலீஸ் 1எம்டிபி விசாரணை அறிக்கைகளை எஜியிடம் கொடுத்து விட்டது
1எம்டிபி மீதான போலீஸ் விசாரணை அறிக்கை சட்டத்துறை தலைவர் (எஜி) அலுவலத்தில் தாக்கல் செய்யப்பட்டு விட்டதென்றும் எஜியிடமிருந்து அதற்கான பதிலுக்காக போலீஸ் காத்திருப்பதாகவும் துணைப் பிரதமர் அஹமட் ஸாகிட் ஹமிடி கூறுகிறார். போலீஸ் விசாரணை அறிக்கை பல தடவைகளில் எஜியின் அலுவலகத்தில் தாக்கல் செய்யப்பட்டு விட்டது. மேற்கொண்டு…
ஷாபி எம்எசிசிக்கு மீண்டும் அழைக்கப்பட்டுள்ளர், உதவியாளர் கூறுகிறார்
இன்று காலையில் மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையம் (எம்எசிசி) பார்ட்டி வாரிசான் சாபாவின் தலைவர் முகமட் ஷாபி அப் மீண்டும் அழைத்துள்ளதாக ஷாபியின் உதவியாளர்களில் ஒருவர் கூறினார். "சில ஆவணங்கள சரிபார்ப்பதற்கு அவர் தேவைப்படுகிறார்" என்று தமது பெயரை வெளியிட விரும்பாத அந்த உதவியாளர் மலேசியாகினியிடம் கூறினார்.…
பினாங்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ ரிம1 மில்லியன் சிலாங்கூர் அளித்தது
பினாங்கு மாநிலத்தை முடக்கியுள்ள பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ சிலாங்கூர் மாநில அரசு ரிம1 மில்லியன் நன்கொடை வழங்கியுள்ளது. இதனை சிலாங்கூர் மந்திரி புசார் அஸ்மின் அலி நேற்றிரவு அறிவித்தார். இத/ற்கும் மேலாக, சிலாங்கூர் மாநில அரசின் ஊழியர்கள் பினாங்கை சுத்தம் செய்யும் நடவடிக்கையில் உதவுவதற்கும் பயன்படுத்தப்படுவர் என்று…
இன்னும் அதிகம் வேண்டுமானால், பி.என்.-ஐ ஆதரியுங்கள், சீனர்களிடம் நஜிப் வேண்டுகோள்
14-வது பொதுத் தேர்தலை எதிர்கொள்வதற்கு ஏதுவாக, சீனர்களிடம் அக்கட்சியைப் பற்றி பிரச்சாரம் செய்ய வேண்டுமென, இன்று பிரதமர் நஜிப் ரசாக் மசீச பேராளர்களைக் கேட்டுக்கொண்டார். “பொதுத் தேர்தலில் வென்றாலும், ஜனநாயக செயற்கட்சியால் (டிஏபி) அரசாங்கத்தை அமைக்க முடியாது என சீன சமூகத்திடம் சொல்லுங்கள்,” என பிரதமர் கூறினார். “அவர்களால்…
குவான் எங் : பினாங்கில் அவசரக்கால அறிவிப்பு இல்லை
15 மணி நேரத்திற்கும் மேலான, பலத்த காற்றையும், கடுமையான மழையையும் தொடர்ந்து, பினாங்கில் ஏற்பட்ட வெள்ளம், வரலாற்றிலேயே மிக மோசமானதாக கருதப்படுகிறது. சமீபத்தில் பினாங்கு மாநில சட்ட மன்றத்தில், கடந்த 2013-ம் ஆண்டு முதல் அக்டோபர் 15 வரை 119 முறை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவும், அதில் இவ்வாண்டு மட்டும்…
எஸ்பிஎம், எஸ்டிபிஎம் தேர்வுகள் திட்டமிட்டப்படி நடக்கும், கல்வி அமைச்சு உறுதி…
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களான பினாங்கு மற்றும் கெடாவில் எஸ்பிஎம் மற்றும் எஸ்டிபிம் தேர்வுகள் திட்டமிட்டப்படி நாளை தொடங்கும். பினாங்கில் 159 மையங்களில் 23, 114 மாணவர்களும், கெடாவில் 261 மையங்களில் 34, 672 மாணவர்களும் இத்தேர்வுகளில் பங்கேற்பர் என்று கல்வித் துணை அமைச்சர் பி. கமல்நாதன் பெர்னாமாவுக்கு…
100 நோயாளிகள், 4 குழந்தைகள் பினாங்கு மருத்துவமனையிலிருந்து இடமாற்றம்
பினாங்கில், கடுமையான மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால், 104 நோயாளிகள் மற்றும் புதிதாகப் பிறந்த நான்கு குழந்தைகள், நேற்று பினாங்கு மருத்துவமனையிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்டனர். வடகிழக்கு வட்டாரத்தில் இதுவரை இரண்டு இறப்புக்கள் பதிவாகியுள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அறை, பிறந்த குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை அறை மற்றும் கீழ்…
15 மணி நேர தொடர் அடைமழை, பலத்த காற்று –…
நேற்று முன்தினம் அதிகாலையில் இருந்து, சுமார் 15 மணி நேரம் தொடர்ந்து பெய்துவரும் அடைமழையால், பினாங்கு மாநிலம் நிலைகுத்தியது. வெள்ளம் காரணமாக, நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியதால், 5 மாவட்டங்கள் மூடப்பட்டுள்ளன. மேலும், கனத்த மழையோடு, மதியம் 2 மணிக்குத் தொடங்கிய பலத்த காற்று அதிகாலை 5 மணி…
வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தொழிற்சங்கத்தில் சேர அனுமதிக்கப்பட வேண்டும்
வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தொழிற்சங்கத்தில் சேர அனுமதிக்கப்பட வேண்டும் ஏனென்றால் அது இறுதியில் மலேசியர்களுக்குப் பயன் அளிக்கும் என்று கஜனாவின் முன்னாள் தலைமைச் செயலாளர் முகமட் ஷெரிப் முகமட் காசிம் கூறினார். வெலிநாட்டுத் தொழிலாளர்கள் தொழி/ர்சங்கத்தில் சேர்ந்தால், அவர்களின் சம்பளம் உயரும். அவர்களின் சம்பளம் உயர்ந்தால். முதலாளிகளுக்கு மலிவான…
லியோ : மது, சலவை பிரச்சனையில் மதத்தைத் திணிக்க வேண்டாம்
இன, மத அடிப்படையில் இந்த நாட்டைப் பிரிக்க மலேசியர்கள் விரும்பவில்லை. எனவே, மதத்தை மற்றவர்கள் மீது திணிக்கக்கூடாது என மசீச தலைவர் லியோ தியோங் லாய் கூறினார். சமீபத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய ‘பீர் திருவிழா’ மற்றும் இஸ்லாமியர்களுக்கு மட்டுமான சலவை கடை இரண்டையும் தொட்டு அவர் பேசினார். “ஒரு…
ஜோமோ : இந்தியர்களைக் கவர, பிரதிநிதிகளின் வழி பணப் பட்டுவாடா
இந்தியர்களின் மனதைக் கவர, பிரதமர் நஜிப் ரசாக் பிரதிநிகளின் வழி பணப் பட்டுவாடா செய்வதாக, பொருளாதார நிபுணர் டாக்டர் ஜோமோ குவாமெ சுந்தரம் கூறினார். “பிரதமர், பிரதிநிதிகளின் வழி, ம.இ.கா.வினர் மட்டுமல்ல-பிறர் மூலமாகவும், சிறு சிறு இயக்கங்களை நிறுவி, பணத்தைக் கீழ்மட்டம் வரை கொண்டு செல்கின்றனர் (இந்தியர்களுக்கு). "அவர்…
எப்ஜிவி (FGV) ஊழல் 1எம்டிபியைவிட மிகப் பெரியது, ஜோமோ கூறுகிறார்
பெல்டா குளோபல் வெண்சர்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் (எப்ஜிவி) ஊழல் 1எம்டிபியைச் சுற்றியிருக்கும் ஊழலைவிட மிகப் பெரியது என்று பொருளாதார வல்லுனர் ஜோமோ குவாமெ சுந்தரம் கூறுகிறார். எதிரணியிலிருக்கும் ஒவ்வொருவரும் 1எம்டிபியின் மீது கவனம் செலுத்தும் போக்கைக் கொண்டுள்ளனர். ஆனால், பல முட்டாள்தனமான நடத்தைகள் நடைபெற்றுக்குக் கொண்டிருக்கின்றன. இவை…
பாஸுக்கு ரிம90 மில்லியன் கொடுத்ததை நஜிப் மறுக்கிறார்
பாஸுக்கு தாம் பணம் கொடுக்கவில்லை. அதனால்தான் பாஸ் சரவாக் ரிபோர்ட் ஆசிரியர் மீது வழக்கு தொடர்ந்துள்ளது. வழக்கின் முடிவுக்காக நாம் காத்திருப்போம். கிளேர் இப்போது குழப்பத்தில் இருக்கிறார் என்று நஜிப் கூறுகிறார். "பாஸுக்கு நாம் ரி90 மில்லியன் கொடுக்கவில்லை. அது பற்றி நான் கருத்துக் கூறமுடியாது, ஏனென்றால்…
அஸ்மின் அலி : வாழ்க்கைச் செலவினங்கள் உயர ஜி.எஸ்.டி. காரணம்
எதிர்க்கட்சி மீதான தாக்குதல்களுக்கு இடையே, 2018 வரவு செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்த நிதி அமைச்சர், நஜிப் ரசாக் போலல்லாமல், சிலாங்கூர் மந்திரி பெசார் முகம்மது அஸ்மின் அலி , சிலாங்கூர் 2018 பட்ஜெட்டை, மாநில அரசின் மீது கவனம் செலுத்தி தாக்கல் செய்தார். இருப்பினும், நேற்று பிற்பகல்…
நஜிப்புக்கு ‘மறைப்பதற்கு ஒன்றுமில்லை 3’ சொற்போர் நடத்த மகாதிர் சவால்
பிரதமர் நஜிப்புக்கு தம்முடன் பொது விவாதம் நடத்த வருமாறு மகாதிர் முகமட் மீண்டும் சவால் விட்டுள்ளார். மலேசியாகினி வெளியிட்டிருந்த ஒரு கட்டுரையில் பிரதமர் நஜிப் முன்னாள் பிரதமர் மகாதிர் மீது நடத்திய மறைமுகத் தாக்குதல்கள் மேற்கோள் காட்டப்பட்டிருந்தன. அத்தாக்குதல்கள் ஒவ்வொன்றுக்கும் மகாதிர் அவரது வலைத்தளப் பதிவில் இன்று…
மகாதிரின் மன்னிப்பு கோருதலை ஆண்டவன் ஏற்றுக்கொள்ளலாம், நான் மாட்டேன், நசிர்…
1987 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஓப்பராசி லாலாங் நடவடிக்கைக்காக டாக்டர் மகாதிர் மன்னிபுக் கோரினால், அது மனப்பூர்வமானதாக இருக்காது என்று மலேசிய சோசலிசக் கட்சியின் தலைவர் டாக்டர் முகம்ட் நசிர் ஹசிம் கூறுகிறார். நான் ஒரு சாதாரண மனிதன். மகாதிர் மன்னிப்பு கோரினாலும், நான் அதை என் மனதில்…
























