மாற்று உரிமைகோரல்கள் இருந்தபோதிலும், அமைச்சரவை உறுப்பினர்களுக்கிடையிலான ஒத்துழைப்பு வலுவாகவே நீடிக்கிறது என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் இன்று உறுதிப்படுத்தியுள்ளார். அமைச்சரவைக்குள் நிலவும் ஒத்துழைப்புதான் அரசியல் ஸ்திரத்தன்மைக்கு பங்களித்த காரணிகளில் ஒன்றாகும் என்றும், இது அரசாங்கம் நாட்டின் திசையைத் தீர்மானிக்க உதவியது என்றும் அன்வார் கூறியதாக வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.…
சுஹாகாம் பற்றிப் பலருக்குத் தெரியவில்லை, நீதிபதிகளுக்குக்கூட
மனித உரிமை ஆணையம், சுஹாகாம் அமைக்கப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு பத்தாண்டுகள் ஆகிவிட்டன. பொதுமக்கள் பலருக்கு அப்படி ஓர் அமைப்பு இருப்பது தெரியவில்லை. சில நீதிபதிகளுக்குக்கூட அது இருப்பது தெரியவில்லை. வியாழக்கிழமை, சுஹாகாம் ஆணையர் நிக் சலிடா சுஹய்லா நிக் சாலே கோலாலும்பூர், கம்போங் கிரிஞ்சியில், சுஹாகாமை மக்களிடம் பிரபலப்படுத்தும் …
மகாதிரை எதிர்கொள்ள பயமில்லையாம், குபாங் பாசு எம்பி கூறுகிறார்
14 ஆவது பொதுத் தேர்தலில் முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட் குபாங் பாசு தொகுதியில் போட்டியிட வந்தால், தாம் அவரை எதிர்கொள்ள அஞ்சவில்லை என்று குபாங் பாசு நாடாளுமன்ற உறுப்பினர் முகமட் ஜொகாரி பஹாரும் கூறுகிரார். தமக்கு மகாதிரை நன்கு தெரியும், ஏனென்றால் மகாதிர் பிரதமராக இருந்த…
எம்பி: கெடாவில் ஹரப்பான் செராமாவுக்கு வந்த கூட்டம் மலாய் சுனாமிக்கு…
நேற்றிரவு கெடாவில் பக்கத்தான் ஹரப்பான் ஏற்பாடு செய்திருந்த ஒரு செராமாவுக்கு வந்த 15,000 பேரடங்கிய கூட்டம் எதிர்வரும் பொதுத் தேர்தலில் மலாய் சுனாமி ஏற்படப்போவதற்கான அறிகுறி என்கிறார் டிஏபி எம்பி லியு சின் தோங். முகநூலில் பதிவிட்டிருந்த குளுவாங் எம்பி-ஆன லியு, அடக்குமுறை நிலவும் சூழலில் மழையையும் பொருட்படுத்தாமல் …
ரயிஸ்: தரக்குறைவாக பேசும் எம்பிகளை அவைத் தலைவர் தண்டிக்க வேண்டும்
அம்னோ மூத்த தலைவர் ஒருவர், நாடாளுமன்றத்தில் "go to hell"(செத்துப் போ) போன்ற இழிவான சொல்களைப் பயன்படுத்துவோரை நாடாளுமன்றத் தலைவர் தண்டிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். “நாட்டின் உன்னத கழகமான நாடாளுமன்றத்தில் மரியாதைக் குறைவான சொல்களும் ‘செத்துப் போ’ ‘செலாகா’ போன்ற ஒருவரை இழிவுபடுத்தும் சொல்களும் பயன்படுத்தப்படுவதை அவைத் …
ஜிஇ14இன்போது குழப்பம் விளைவிக்கக்கூடிய மேலும் பலரை அடையாளம் காணும் முயற்சியில்…
போலீசார் 14வது பொதுத் தேர்தலின்போது “கடைசிநேரத் திடீர் தாக்குதல் நடத்தி”க் குழப்பம் விளைவிக்கக்கூடிய தனிப்பட்டவர்களையும் அமைப்புகளையும் அடையாளம் காண தொடர்ந்து ஆய்வுகள் செய்து வருகின்றனர். இதுவரை அப்படிப்பட்ட 1,100 தனிப்பட்டவர்களும் அமைப்புகளும் அடையாளம் காணப்பட்டிருப்பதாக இன்ஸ்பெக்டர் ஜெனரல் அப் போலீஸ் (ஐஜிபி) பூசி ஹருன் கூறினார். இது தேசிய …
பெர்சே மற்றும் சுவாராம் அலுவலகத்தில் போலீஸ்
இன்று காலை பெட்டாலிங் ஜெயாவில் உள்ள பெர்சே மற்றும் மனித உரிமைக் குழுவான சுவாராம் அலுவலகத்துக்கு போலீஸ் அதிகாரிகள் வந்தனர். அவர்கள் நேற்று நாடாளுமன்றத்துக்கு வெளியில் நடந்த கண்டனக் கூட்டம் தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்கு வந்ததாக அறியப்படுகிறது. பெர்சே இடைக்காலத் தலைவர் ஷாருல் அமான் முகம்மட் சாஅரி, …
பொய்ச் செய்தித் தடுப்புச் சட்டவரைவைத் தள்ளி வைப்பது நல்லது- நசிர்…
பிரபல வங்கியாளர் நசிர் அப்துல் ரசாக், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொய்ச் செய்தித் தடுப்புச் சட்டவரைவைத் தள்ளிவைக்க வேண்டும் என்று விரும்புகிறார். பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் சகோதரரான நசிர், அது சட்டமாக்கப்படுவதற்குமுன்னர் முழுமையாக விவாதிக்கப்பட வேண்டும் என்று இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்றில் குறிபிட்டிருந்தார். “பொய்ச் செய்தியை வெறுப்பவன்தான் …
சர்ச்சைக்குள்ளான தேர்தல் எல்லை மறுசீரமைப்பு அறிக்கை அரசாங்க கெஜட்டில் பதிவு…
தேர்தல் ஆணையத்தின் சர்ச்சைக்குள்ளான தேர்தல் எல்லை மறுசீரமைப்பு அறிக்கையை நேற்று நாடாளுமன்றம் ஏற்றுக் கொண்டது. இன்று அது அரசாங்க கெஜெட்டில் பதிவு செய்யப்பட்டு சட்டமாகியுள்ளது. நேற்றைய தேதி இடப்பட்டுள்ள இந்த உத்தரவு இன்று அமலுக்கு வருகிறது. நேற்று மாலையில், தேர்தல் ஆணையத்தின் அறிக்கையை நாடாளுமன்றத்தின் மக்களவை 129 வாக்குகள்…
நச்சுத் தேனான ஹரப்பானிடமிருந்து விலகியிருங்கள், அரசு ஊழியர்களுக்கு நஜிப் எச்சரிக்கை
பக்கத்தான் ஹரப்பானின் "வெற்று வாக்குறுதிகளை" நம்ப வேண்டாம் என்று அரசு ஊழியர்களை பிரதமர் நஜிப் இன்று எச்சரித்தார். எதிர்க்கட்சிகளின் கூட்டணி அதிகாரத்தைப் பிடிப்பதற்காக நம்பத்தகாத மற்றும் மக்களைக் கவரும் வாக்குறுதிகளை அளிப்பதாக அவர் கூறினார். அரசு ஊழியர்களுக்கு வீடுகள் வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய அவர் வீட்டு வசதிகள்…
பணிப் பெண்ணை கொடுமைப்படுத்திய டத்தினுக்கு 8 ஆண்டு சிறைத் தண்டனை
தமது பணிப் பெண்ணை கொடுமைப் படுத்திய ஒரு டத்தின் குற்றவாளி என்று தீர்ப்பளித்த செசன்ஸ் நீதிமன்றம் அவருக்கு நன்னடத்தை பிணை வழங்கியிருந்தது. உயர் நீதிமன்றம் அத்தீர்ப்பை மாற்றி அவருக்கு 8 ஆண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது. அத்தீர்ப்பை மறுஆய்வு செய்த நீதி ஆணையர் துன் மஜிட் துன்…
போலியான செய்தி தடை மசோதா 2018 நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது
பிரதமர் துறை அமைச்சர் அஸலினா ஓத்மான் சைட் இன்று நாடாளுமன்றத்தில் போலியான செய்தி தடை வரைவு மசோதா 2018 -ஐ நாடாளுமனறத்தில் இரண்டாவது வாசிப்புக்காக தாக்கல் செய்தார். தற்போது அமலில் இருக்கும் சட்டங்கள், தேசநிந்தனைச் சட்டம் 1948 மற்றும் தொடர்புகள் மற்றும் பல்லூடக சட்டம் 1998 உட்பட,…
ஹரப்பான் வேட்பாளர்கள் பிகேஆர் சின்னத்தின் கீழ் போட்டியிடக்கூடும்!
மகாதிர் முகமட் 1998 ஆம் ஆண்டில் அன்வார் இப்ராகிம்மை பதிவியிலிருந்து நீக்கியதைத் தொடர்ந்து பிகேஆர் தோற்றுவிக்கப்பட்டது. இருபது ஆண்டுகளுக்குப் பின்னர், எதிர்க்கட்சிகளின் கூட்டணியான பக்கத்தான் ஹரப்பானின் தலைவராக இருக்கும் மகாதிர், பிகேஆரின் வேட்பாளராக போட்டியிட வேண்டியிருக்கும். பல்வேறு கட்சிகளிடமிருந்து கிடைத்தத் தகவல்படி, கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஹரப்பானின்…
மகாதிர்: நான் நஜிப் மற்றும் ஹாடியுடன் விவாதம் புரிய விரும்புகிறேன்,…
அம்னோ தலைவர் நஜிப் ரசாக் மற்றும் பாஸ் தலைவர் ஹாடி அவாங் ஆகியோரைத் தவிர மற்றவர்களுடன் விவாதம் நடத்த தமக்கு விருப்பம் இல்லை என்று பக்கத்தான் ஹரப்பான் தலைவர் மகாதிர் கூறுகிறார். தம்முடைய தகுதியில் உள்ளவர்களுடன் மட்டுமே விவாதம் நடத்துவேன், அவர்களுடைய அடியாள்களுடன் அல்ல என்று அவர் மேலும்…
போலியான செய்தி மசோதா மீது நாடாளுமன்ற குழு அமைக்க வேண்டும்,…
மனித உரிமைகள் ஆணையம் (சுஹாகாம்) போலியான செய்தி மீது அரசாங்கம் ஒரு நாடாளுமன்ற குழுவை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. போலியான செய்தி தடை மசோதா 2018 -டை அதன் தற்போதைய வடிவத்தில் சுஹாகாம் ஆதரிக்க முடியாது என்று அதன் தலைவர் ரஸாலி இஸ்மாயில் இன்று வெளியிட்ட…
நாடாளுமன்றம் புதிய தேர்தல் எல்லைகளை சட்டமாக ஏற்றுக்கொண்டது
தேர்தல் ஆணையம் வரைந்திருந்த மேற்கு மலேசியாவுக்கான புதிய தேர்தல் எல்லைகளை மலேசிய நாடாளுமன்றம் இன்று ஏற்றுக்கொண்டு சட்டமாக்கியது. புதிய தேர்தல் எல்லைகள் முன்மொழிதலுக்கு 129 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர். 80 உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்தனர். எதிரணி உறுப்பினர் "தீப்பு" (மோசடி) என்று முழக்கமிட்டனர். அவர்களில் பெரும்பாலானோர்…
அம்னோ பேச்சுரிமையை முக்கியமற்ற அடிக்குறிப்பாக மாற்றிவிடலாகாது: ரயிஸ் அறிவுறுத்து
முன்னாள் அமைச்சர் ரயிஸ் யாத்திம் அம்னோ பேச்சுரிமையையும் தலைவர்களைக் குறை சொல்லும் உரிமையையும் முக்கியமற்ற அடிக்குறிப்பாக நினைத்து ஒதுக்கிவிடக் கூடாது என்றார். அம்னோ தகவல் தலைவர் அனுவார் மூசாவின் கூற்றுக்கு எதிர்வினையாக ரயிஸ் நேற்றிரவு முகநூலில் இவ்வாறு பதிவிட்டிருந்தார். 1எம்டிபி ஊழல்மீது மலேசிய அதிகாரிகள் விசாரணை செய்ய வேண்டும் …
தேர்தல் தொகுதி எல்லைகள் திருத்தப்பட்டதால் சிலாங்கூரில் ஹரப்பானும் பாஸும் 7…
தீவகற்ப மலேசியாவுக்கான இறுதி தேர்தல் தொகுதி எல்லை நிர்ணய அறிக்கை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஆளும் கட்சிக்குச் சாதகமான முறையில் தேர்தல் தொகுதிகளை நிர்ணயம் செய்துள்ள அந்த அறிக்கை 14வது பொதுத் தேர்தலில் பிஎன் வெற்றிக்கு வழிகோலுவதாகக் கருதப்படுகிறது. அறிக்கைக்கு மக்களவையின் ஒப்புதலைப் பெறுவது ஒரு பிரச்னையாக …
தாப்பாவில் சரவணனுக்கு எதிராக ரயிஸ் உசேன் களமிறக்கப்படுவாராம்
எதிர்வரும் பொதுத் தேர்தலில் பெர்சத்துவின் தலைமை வியூக வகுப்பாளர் ரயிஸ் உசேன் தாப்பாவில் இளைஞர், விளையாட்டு துணை அமைச்சர் எம்.சரவணனுக்கு எதிராகக் களமிறக்கப்படுவார். கட்சி வட்டாரங்கள் இதனைத் தெரிவித்தன. இதன் தொடர்பில் அவர் நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றைச் செய்வார் என்று கூறப்படுகிறது. மலேசியாகினி ரயிசைத் தொடர்பு கொண்டபோது …
சாலே: பொய்ச் செய்திச் சட்டம் 1எம்டிபி விவாதத்தை ஒடுக்குவதற்கு அல்ல…
தொடர்பு, பல்லூடக அமைச்சர் சாலே சைட் கெருவாக் பொய்ச் செய்திகள் தடுப்புச் சட்டம் 1எம்டிபி மீது விவாதங்கள் நடப்பதைத் தடுப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட சட்டம் அல்ல என்கிறார். “அது உண்மையல்ல. 1எம்டிபி குறித்து விவாதிப்பதற்கோ பேசுவதற்கோ எந்தத் தடையுமில்லை”, என்றவர் தம் வலைப்பதிவில் கூறினார். தவறான தகவல்கள் “செய்திகள்” என்றும் …
தேர்தல் ஆணையத்தின் மோசடி அறிக்கைக்கு எதிராகப் பெர்சே ஆர்ப்பாட்டம்
நியாயமான, நேர்மையான மற்றும் தூய்மையான தேர்தலுக்காகப் போராடும் அமைப்பான பெர்சே தேர்தல் ஆணையத்தின் தேர்தல் தொகுதி எல்லை மறுசீரமைப்பு அறிக்கைக்கு எதிரான போராட்டத்தில் இன்று நாடாளுமன்றத்தில் களமிறங்கியது. தேர்தல் ஆணையத்தின் அறிக்கையை பிரதமர் நஜிப் ரசாக் இன்று காலை மணி 11.30 அளவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார்.…
ஜோ லோ உல்லாசப் படகை 1எம்டிபி பணத்திலிருந்துதான் வாங்கினார், டிஒஜே…
மலேசியரான ஜோ லோ யுஎஸ்$250 மில்லியன் மதிப்பிலான உல்லாசப் படகு ஈக்குவானிமிட்டியை 1எம்டிபியிலிருந்து திருடப்பட்ட பணத்திலிருந்துதான் வாங்கினார் என்று அமெரிக்க நீதித் துறை மீண்டும் கூறுகிறது. நேற்று, டிஒஜே மீண்டும் ஒரு மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில் 1எம்டிபியிலிருந்து பல பில்லியன் டாலர்கள் திருடப்பட்டதில் முக்கியமானவராக…
குவா மூசாங் பிகேஆர் உறுப்பினர்கள் 80 பேர் பாஸ் கட்சியில்…
பிகேஆர் கட்சி மீது நம்பிக்கை இழந்ததால், பிகேஆர் குவா மூசாங்கைச் சேர்ந்த 80 உறுப்பினர்கள் அக்கட்சியிலிருந்து வெளியேறி, இன்று பாஸ் கட்சியில் இணைந்தனர் பக்காத்தான் ஹராப்பான் தனது இலக்கை இழந்து, அதன் அசல் போராட்டத்திலிருந்து விலகி சென்றுகொண்டிருப்பதால், தாங்கள் இந்த முடிவை எடுத்ததாக, பிகேஆர் குவா மூசாங் தொகுதியின்…
தேர்தல் தொகுதி எல்லை நிர்ணய அறிக்கை: தடையை மீறிய ஆய்வாளர்…
அரசியல் ஆய்வாளர் வொங் சின் ஹுவாட், மக்களவையின் தடையாணையையும் மீறி தேர்தல் ஆணையத்தின் தேர்தல் தொகுதி எல்லை நிர்ணய அறிக்கையின் உள்ளடக்கத்தை ஒரு பொதுக் கருத்தரங்கில் வெளியிட்டார். “நாட்டுக்காக சட்டத்தை மீறப் போகிறேன். “அறிக்கைக்குத் தடையாணை போடப்பட்டுள்ளது......ஏனென்றால் எம்பிகள் அதன்மீது வாக்களிப்பதற்குமுன் அதில் உள்ள பலவற்றை மலேசியர்கள் அறியக்கூடாது …














