‘ஒன்றுபடுவீர்’- எதிரணியினருக்கும் அம்னோ கிளர்ச்சிக்காரர்களுக்கும் சைட் அறைகூவல்

முன்னாள்  அமைச்சர்  சைட்  இப்ராகிம்  எதிரணியினரும்  அம்னோவில்  உள்ள  கிளர்ச்ச்சிக்காரர்களும்  பொது  எதிரிகளான  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  மற்றும்  சட்டத்துறைத்  தலைவர்  முகம்மட்  அப்பாண்டி  அலி  ஆகியோருக்கு  எதிராக  ஒன்றுபட  வேண்டும்  என  வலியுறுத்துகிறார். “நஜிப்புக்கும்  அபாண்டிக்கும்  எதிராக  அதிகமாக  எதையும் செய்ய  முடியாது,  அடுத்த  பொதுத் …

மகனைப் பராமரிக்கும் உரிமை தந்தைக்கும் மகளைப் பராமரிக்கும் உரிமை தாயாருக்கும்…

இஸ்லாத்திற்கு மதமாற்றம் செய்யப்பட்ட குழந்தைகள்  சம்பந்தப்பட்ட வழக்கில்  அக்குழந்தைகளைச்  சந்தித்துப்  பேசிய  கூட்டரசு நீதிமன்றம்,  மகனைப் பராமரிக்கும்  உரிமையை  அவர்களின்  தந்தையான  இஸ்வான்  அப்துல்லா(என், வீரன்)வுக்கும்  மகளைப்  பராமரிக்கும்  உரிமையைத்  தாயார்  எஸ்.தீபாவுக்கும்  கொடுத்துத்  தீர்ப்பளித்தது. பிள்ளைகளின்  விருப்பத்தின்  அடிப்படையில்  அத்தீர்ப்பு  அளிக்கப்பட்டது. சிவில்  திருமண வழக்குகளில்  திருமணத்தை…

தீபா: என் மகனை இழந்தேன், சட்டங்கள் மாற வேண்டும்

மகனைப்  பராமரிக்கும்  உரிமையை  இழந்த  எஸ்.தீபா  இதன்  பிறகும்  யாரும்  இப்படிப்பட்ட  விவகாரத்தால்  பாதிக்கப்படக்  கூடாது   என்றார். “இப்படிப்பட்ட  (சிவில்  திருமணம் சம்பந்தப்பட்ட) வழக்குகளை  விசாரிக்கும்  உரிமை  சிவில்  நீதிமன்றங்களுக்கு  உண்டு  என  இன்று (கூட்டரசு  நீதிமன்றத்தில்)  தீர்ப்பளிக்கப்பட்ட  போதிலும்  நான்  என்  மகனை  இழந்து  விட்டேன். “மலேசியா …

பிஏசி தலைவர்: மேலும் சாட்சிகளை விசாரித்துக் கொண்டு போனால் 1எம்டிபி…

பொதுக்  கணக்குக்குழு,  1எம்டிபி விசாரணைக்காக  மேலும்  சாட்சிகளை  அழைக்கப்போவதில்லை. அதனிடம்  போதுமான  தகவல்கள்  உள்ளன  என்பதால்  மேலும்  சாட்சிகளை  விசாரிப்பது  “தேவையற்றது”. அது  அறிக்கை  தயாரிக்கப்படுவதைத்  “தாமதப்படுத்தி  விடும்”. “நான்  ஏற்கனவே  அறிவித்ததுபோல்   1எம்டிபி  நிர்வாகம்  பற்றி  பிப்ரவரி  11-இலும்  12-இலும்  சாட்சியம்  அளிக்கப்போகும்  (முன்னாள்  தலைவர்(  பக்கே …

அன்வாரின் சிறைத்தண்டனையை முடிவுக்குக் கொண்டு வருவீர்: மனித உரிமைக் கண்காணிப்பு…

அன்வார்  இப்ராகிம்  சிறை  வைக்கப்பட்டு  ஒராண்டு  நிறைவுபெறும்  வேளையில்  மலேசிய  அரசாங்கம்  முன்னாள்  துணைப்  பிரதமரும்  எதிரணித்  தலைவருமான  அவரை  நிபந்தனையின்றி  விடுவிக்க  வேண்டும்  என  மனித  உரிமை  கண்காணிப்பு  அமைப்பு  கேட்டுக்  கொண்டிருக்கிறது. சிறையில்  இருக்கும்  காலத்தில்  அன்வாருக்கு  முறையான  மருத்துவச்  சிகிச்சை  கிடைப்பதை   அரசாங்கம் உறுதி …

அமானா: அம்னோ கைக்குப் போய்விடக்கூடாதே என்பதால்தான் பாஸின் இடங்களில் போட்டி…

பார்டி  அமானா  நெகாரா, பாஸ்  களமிறங்கும்  இடங்களில்  எல்லாம்  போட்டியிட  முடிவு  செய்துள்ளது  என்றால்  அந்த  இடங்கள்  அம்னோவின்  கைக்குப்  போய்விடக்  கூடாதே  என்ற  அக்கறைதான்  காரணமே  தவிர,  அதற்கு  பிகேஆரும்  டிஏபி-யும்  வேறு  இடங்களைக்  கொடுக்காதது  காரணமல்ல. இதனைத்  தெரிவித்த  சிலாங்கூர்  அமானா  இளைஞர்  தலைவர்  அப்பாஸ்  …

ஸிக்கா வைரசுக்கு எதிரான உயர் விழிப்புநிலையில் அமெரிக்கா

அமெரிக்க  நோய்க்  கட்டுப்பாட்டு, தடுப்பு  மையம் (சிடிசி),  ஸிக்கா  வைரஸ்  பரவலை  எதிர்க்க  அதன்  அவசர  நடவடிக்கை  மையத்தை உயர்  விழிப்பு  நிலையில்  வைத்துள்ளது. கொசுவால் பரப்பப்படும்  ஸிக்கா  வைரசை  எதிர்த்துப்  போராட  காங்கிரசிடம்  யுஎஸ்$1.8  பில்லியன்  கேட்கப்போவதாக   வெள்ளை  மாளிகை    அறிவித்துள்ள  வேளையில்  சிடிசியும்  விழிப்புநிலையை  முடுக்கிவிட …

சாலமன் தீவுகளில் வலுவான நிலநடுக்கம்

ரிக்டர்  கருவியில்  6.4  என்று  பதிவான  நிலநடுக்கம்  நேற்றிரவு  மணி  12.19க்கு  சாலமன்  தீவுகளைத்  தாக்கியதாக  மலேசிய  வானியல்  துறை  அறிவித்தது. சாபாவின்  செம்பூர்ணாவிலிருந்து  4.193 கிலோ  மீட்டர்  தொலைவில்  நிலநடுக்கம்  மையம்  கொண்டிருந்தது. நிலநடுக்கத்தால்  சுனாமி  ஏற்படும்  அபாயம்  இல்லை. இதனிடையே,  இன்று  நியு  சிலாந்தின்  தலைநகரமான …

சீனச் சக்கரவர்த்திபோல் உடை அணிந்து வம்பில் சிக்கிக்கொண்ட பாஸ் பிரதிநிதி

பாஸ்  கட்சியின் பாயா  ஜராஸ்  பாஸ்  சட்டமன்ற  உறுப்பினர்  முகம்மட்  கைருடின்  ஒத்மான் “சீனச் சக்கரவர்த்தி”போல்  உடை  தரித்து  சீனப்  புத்தாண்டுக்  கொண்டாட்டத்தில்  கலந்துகொண்டது  வம்பாக  போய்விட்டது. அவர்  அணிந்த  உடை  தாவோ  சமயத்தாரின்   எட்டு  தெய்வங்களில்   ஒன்றான  காவ்  குவோஜியு-வுக்குரிய  உடையாம். அந்த  உடைக்குச்  சமயத்  தொடர்பு  …

பிகேஆரும் டிஏபி-யும் சிலாங்கூரில் இடமளிக்கவில்லையா? அமானாவை நோக்கி பாஸ் கிண்டல்

சிலாங்கூரில்  பிகேஆரும்  டிஏபி-யும்  தங்கள்  தொகுதிகளை  அமானாவுக்கு  விட்டுக்  கொடுக்கத்  தயாராக  இல்லை  என்று  சிலாங்கூர்  பாஸ்   ஆணையர்  இஸ்கண்டர்  அப்  சமத்  கூறினார். அதனால்தான்  அமானா,  சிலாங்கூரில்  பாஸ்  போட்டியிடும்  இடங்களில்  பாஸுக்கு  எதிராக  போட்டியிட  விரும்புகிறது  என்றாரவர். “அமானா  எதற்காக  பாஸ்  தொகுதிகளில்  போட்டியிட  விரும்புகிறது …

அஸலினா: மற்ற நாடுகளில் அரசாங்க இரகசியங்கள் அம்பலமாவதில்லை

அதிகாரப்பூர்வ  இரகசியச்  சட்டத்தில் (ஓஎஸ்ஏ)  திருத்தங்கள்  கொண்டுவரும்  சட்டத்துறைத்  தலைவர்  முகம்மட்  அபாண்டி  அலியின்  முடிவு   இப்போதைக்கு  அவசியமான  ஒன்று  எனப்  பிரதமர்துறை  அமைச்சர்  அஸலினா  ஒத்மான்  நினைக்கிறார். நாட்டில்  அரசாங்கத்தின்  இரகசியங்கள்  அம்பலமாகி  இருப்பதை  அவர்  சுட்டிக்காட்டினார். “மற்ற  நாடுகளில்  இந்த  நிலை  இல்லை.  மலேசியாவில் நிறைய …

தைவான் நிலநடுக்கம்: இரண்டு நாள்களுக்குப் பிறகு இடிபாடுகளிலிருந்து ஒரு பெண்…

தைவானின்  தைனான்  நகரில், நில  நடுக்கத்தில்  இடிந்து  விழுந்த  ஒரு  கட்டிடத்தின்  இடிபாடுகளிலிருந்து  பெண்  ஒருவர்  இன்று  உயிருடன்  மீட்கப்பட்டார்.48 மணி  நேரத்துக்குமேல்  அவர்  இடிபாடுகளில்  சிக்கிக்  கொண்டிருந்தார். ஓர்  ஆடவரும்  இடிபாடுகளில்  சிக்கிக்  கொண்டிருப்பது  கண்டுபிடிக்கப்பட்டது. தைவானை  உலுக்கிய  நிலநடுக்கத்தில்  பலியானவர்  எண்ணிக்கை  35 ஆக உயர்ந்துள்ளது.…

ஏஜி முன்மொழிந்த ஓஎஸ்ஏ திருத்தங்கள் நஜிப்பின் பெயரைக் கெடுக்கும்

சட்டத்துறைத்   தலைவர்  முகம்மட்  அபாண்டி,  அதிகாரப்பூர்வ  இரகசிய  சட்ட(ஓஎஸ்ஏ)த்தின்கீழ்  கடுமையான  சட்டங்களைக்  கொண்டு  வருவது  பிரதமர்   நஜிப்  அப்துல்  ரசாக்குக்கு  நல்லது  செய்வதாக  இருக்காது  என்கிறார்  முன்னாள்  அமைச்சர்  ஒருவர். ஓஎஸ்ஏ-யை  வலுப்படுத்துவது  நஜிப்பின்  பெயரைக்  கெடுக்கும்  என  முன்னாள்  தகவல்  அமைச்சர்  சைனுடின்  மைடின்  கூறினார். “அது,…

சீனர்களின் ஆதரவு பிஎன்னுக்குத் திரும்ப வேண்டும்: ஜாஹிட்டின் சீனப் புத்தாண்டு…

துணைப்   பிரதமர்  அஹமட்  ஜாஹிட்  ஹமிடியிடம்  சீனப்  புத்தாண்டில்  அவரது  விருப்பம்  பற்றி  வினவப்பட்டது. பல  விருப்பங்கள்  இருப்பதாகக்  குறிப்பிட்ட  துணைப்  பிரதமர்,  சீனர்களின்  ஆதரவு  மீண்டும்  பிஎன்  பக்கம்  திரும்ப  வேண்டும்  என்பதும்  அவற்றில்  ஒன்று  என்றார். “குரங்கு  ஆண்டு  வளப்பம்மிக்க   ஆண்டாக  விளங்க  வேண்டும். “அதனால் …

இபிஎப் லாப ஈவு: 7விழுக்காடு வழங்க: ஃபோம்கா கோரிக்கை

ஊழியர்  சேம  நிதி அதன்  சந்தாதாரர்களுக்கு  ஏழு  விழுக்காடு    லாப  ஈவை  அறிவிக்க  வேண்டும்  என  மலேசிய  பயனீட்டாளர்  சங்கச்  சம்மேளனம்(ஃபோம்கா)   வலியுறுத்தியுள்ளது. உயர்ந்துவரும்  வாழ்க்கைச்  செலவு,  பொருள்,  சேவை  வரியின்  அமலாக்கம்,  ரிங்கிட்டின்  வீழ்ச்சி, தொழில்கள்  தட்டுத்  தடுமாறிக்  கொண்டிருக்கும்  நிலை  ஆகியவற்றைக்  கருத்தில்  கொண்டு  அரசாங்கம் …

‘மலேசியாவைக் குணப்படுத்தும்’ போராட்டத்தைத் தொடர்வேன்: முகைதின் சூளுரை

அம்னோ  துணைத்  தலைவர்  முகைதின்  யாசின்  “உண்மையை” நிலைநிறுத்தும்  போராட்டதைக்  கைவிடப்போவதில்லை  என்றும்  மலேசியா  தோற்றுப்போன  நாடாக  மாறுவதைத்  தடுக்கப்போவதாகவும்  அறிவித்துள்ளார்.. “ஒரு  போராட்டம்  தொடங்குகிறது.  இது  மலேசியாவைக்  குணப்படுத்தும்  போராட்டம்.  மலேசியாவைச்  சிறந்த  நாடாக்கும்  போராட்டம்”, என்று  முகைதின்  நேற்று  அவரது  முகநூல்  பக்கத்தில்  கூறியிருந்தார். “வாழ்க்கை …

சாலை விபத்தில் புலி பலியானது

இன்று  அதிகாலையில்  கெமாமான்  அருகில்  கிழக்குக்  கரை   விரைவுச்  சாலை  2-இல் (எல்பிடி2)  புலி  ஒன்று  சாலை  விபத்தில்  சிக்கி  மாண்டது. பின்னிரவு  மணி  ஒன்று  வாக்கில்  புலி   சாலையைக்  கடக்க  முயன்றபோது  கோலாலும்பூரிலிருந்து  கோலா  திரெங்கானு  சென்று  கொண்டிருந்த  ஒரு  எம்பிவி  வாகனத்தால்  அது  மோதித் தள்ளப்பட்டிருக்கலாம் …

நஜிப்பின் ரிம2.6 பில்லியன் ஒரு நன்கொடையாக இருக்க முடியாது என்கிறார்…

சவூதி  வெளியுறவு  அமைச்சர்  அடெல்  அல்-ஜூபிர்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கின்  வங்கிக்  கணக்கில்  இருந்த  ரிம2.6பில்லியன்  ஓர்  அரசியல்  நன்கொடையாக   இருக்க  முடியாது  என்றும்  அது  சவூதி  அரசாங்கத்திடமிருந்து  வந்திருக்க  வழியில்லை   என்றும்  நினைக்கிறார். அது “முதலீடு”  செய்வதற்கு  அனுப்பப்பட்ட  பணமாக  இருக்கலாம்  என்று  அவர்  குறிப்பிட்டார்.…

சாலே: சாபா சிஎம் பதவிக்குச் சுழற்சிமுறையைவிட இப்போதுள்ள முறையே சிறந்தது

சாபா முதலமைச்சர்  மூசா  அமான்  அப்பதவிக்கு  வந்து  அடுத்த  மாதத்துடன்  13 ஆண்டுகள்  ஆகும்  என்று  தெரிவித்த   அமைச்சர்  சாலே  சைட்   கெருவாக்,  முதலைமைச்சர்  பதவிக்கு  முன்பிருந்த  சுழற்சி  முறையைவிட  இப்போதுள்ள  முறையே  சிறந்தது  என்றார். 2003-இல்  மூசா  சாபா  வருவதற்கு முன்னர்  சாபா  முதலமைச்சர்கள்  சுழற்சிமுறையில்  நியமிக்கப்பட்டனர். …

ரியுகாஸலுக்கு எதிரான புகாரைத் தூதரகத்தின் வழி செய்யுமாறு ராவுக்கு பிரிட்டிஷ்…

சரவாக்  ரிப்போர்ட்  செய்தி  ஆசிரியர்  கிளேர்  ரியுகாஸல்- பிரவுனுக்கு  எதிராக  புகார்  செய்ய  முயன்ற  Pertubuhan Minda dan Sosial Prihatin Malaysia (பிஎம்எஸ்பி)  ஆலோசகர்  ராமேஷ்  ராவிடம்  மலேசிய  தூதரகத்தின்  மூலமாக  புகாரை  அனுப்பி  வைக்குமாறு  லண்டன்  போலீசார்  கூறி  விட்டனர். இச்சம்பவம்  நேற்று,  ராவ்  லண்டனில் …

ரசாக் பாகிண்டா ரிம137மி. பெற்றது ‘அதிகாரிகளுக்குக் கையூட்டுக் கொடுப்பதற்காக அல்ல’

அரசியல்  ஆய்வாளர்  அப்துல்  ரசாக்  பாகிண்டா  ஸ்கோர்பியன்  நீர்மூழ்கிக் கப்பல்  கொள்முதலில்  30 மில்லியன்  ஈரோக்கள் (ரிம137 மில்லியன்)  பெற்றதை  ஒப்புக்கொண்டார்.  ஆனால்,  அப்பணம்  பிரெஞ்ச்  நிறுவனமான  தேல்ஸின் சார்பில்   அரசாங்க  அதிகாரிகளுக்குக்  கையூட்டு  கொடுக்கப்  பயன்படுத்திக்  கொள்ளப்பட்டது  என்று  கூறப்படுவதை  மறுத்தார். “நான் வேலையை  முடித்துக்  கொடுத்தேன்.…

நஜிப் நன்கொடை விவகாரம் தீர்ந்தது வணிகத்தை ஊக்குவிக்கும்

ரிம2.6 பில்லியன்  நன்கொடை  விவகாரத்தில்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  குற்றமற்றவர்  என்ற  சட்டத்துறைத்  தலைவரின்  (ஏஜி)  அறிவிப்பு   நாட்டின்  வர்த்தகத்தை  ஊக்குவிக்கும்  உந்துவிசையாக  இருக்கும்  என  அமைச்சர்  ஒங்  கா  சுவான்  கூறினார். “அது (ஏஜி  முகம்மட் அபாண்டி  அலியின்  அறிவிப்பு) ஓரளவுக்கு  உதவும். அங்கிருந்து  நிலைமை …