எஸ்ஆர்சி நிதி மாற்றிவிட்டது பற்றிக் கருத்துரைக்க நிதி அமைச்சர் II…

இரண்டாவது  நிதி  அமைச்சர்  அஹ்மட்  ஹுஸ்னி  ஹனாட்ஸ்லா,  எஸ்ஆர்சி  இண்டர்நேசனல்  நிறுவனத்திலிருந்து  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கின்  வங்கிக்  கணக்குக்குப்  பணம்  மாற்றிவிடப்பட்டது  பற்றிக்  கருத்துரைக்க  மறுத்து  விட்டார். “அதன்மீது விசாரணை  நடைபெற்றுக்  கொண்டிருக்கிறது.  அதனால்  கருத்துரைக்க  இயலாது”, என்று  புத்ரா  ஜெயாவில்  செய்தியாளர்களிடம்  அவர்  தெரிவித்தார். போலீசாரும் …

‘இபிஎப் சந்தாதாரர்களுக்கு 2015-க்கு நியாயமான லாப ஈவு கிடைக்கும்’

தொழிலாளர்  சேம  நிதி (இபிஎப்),  2015-க்கு  ஒரு  நியாயயமான  லாப  ஈவை  வழங்கும்  என  இபிஎப்  துணைத்  தலைமை  செயல்  அதிகாரி(முதலீடு)  முகம்மட்  நாசிர்  அப்துல்  லத்திப்  கூறுகிறார். ஆனால், எத்தனை  விழுக்காடு  லாப  ஈவை  எதிர்பார்க்கலாம்  என்று  வினவியதற்கு  அவரிடம்  பதிலில்லை. சீனப்  புத்தாண்டுக்குப்  பின்னர்தான்  அது …

லெவி கட்டணத்தை உயர்த்துமுன்னர் கலந்து ஆலோசிக்காதது ஏன்?, மஇகா இளைஞர்கள்…

அரசாங்கம்  வெளிநாட்டுத்  தொழிலாளர்களுக்கு  லெவி  கட்டணத்தை  உயர்த்தியதால்  வணிகர்கள்  கடுமையாக  பாதிக்கப்பட்டிருப்பதாக  மஇகா  இளைஞர்கள்  குறிப்பிட்டுள்ளனர். “வெளிநாட்டுத்  தொழிலாளர்களுக்கான  லெவி  கட்டணத்தை  உயர்த்துமுன்னர்  சம்பந்தப்பட்டவர்களுடன்  கலந்து  ஆலோசித்திருக்க  வேண்டும். “அப்படிச்  செய்திருந்தால்  வணிகர்கள்,  குறிப்பாக  சிறு  வணிகர்கள்  தொழில்  நடத்த  சிரமப்படுவதும்  லெவி  கட்டணம் இரட்டிப்பாக்கப்படுவதை  அவர்கள்  தாங்க …

அம்னோவே என் பல்கலைக்கழகம்: குறைகூறுவோருக்கு பாஷாவின் பதிலடி

படிக்காதவர்  எப்படி  மந்திரி  புசாராகலாம்  என்று  குறைகூறுவோருக்கு   “அம்னோதான்  என்  பல்கலைக்கழகம்”  எனப்  பதில்  கூறியுள்ளார்  புதிய  கெடா  மந்திரி  புசார்  அஹ்மட்  பாஷா  முகம்மட்  ஹனிபா. 22 வயதிலேயே  குடும்பப்  பொறுப்பை  ஏற்க  வேண்டியதாயிற்று  என பாஷா  பெரித்தா  ஹரியானுக்கு  வழங்கிய  நேர்காணலில்  கூறினார். தம்  தந்தையார்…

கெடாவில் புதிய மந்திரி புசார் பதவியேற்பு

கெடா  அம்னோ  துணைத்  தலைவர் அஹ்மட் பாஷா முகமட்  ஹனிபா  அம்மாநிலத்தின் புதிய மந்திரி புசாரானார்.  அவரது  பதவியேற்பு  இஸ்தானா  அனாக்  புக்கிட்டில்  நடைபெற்றது. முக்ரிஸ் மகாதிர் பதவி  விலகியதை  அடுத்து பாஷா  இன்று கெடாவின் 12வது மந்திரி புசாரானார்.    

‘மலேசிய தேர்தல்களில் வெற்றிபெற பில்லியன்கள் தேவையில்லை’

முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்,  தேர்தல்  செலவுகளுக்காக  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கிடம்  ரிம2.6 பில்லியன்  நன்கொடை  கொடுக்கப்பட்டதாகக்  கூறப்படுவதை  நம்பத்  தயாராக  இல்லை. ஐந்து  பொதுத்  தேர்தல்களில்  பிஎன்னை  வெற்றிக்கு  அழைத்துச்  சென்றுள்ள  மகாதிர்  மலேசியாவில்  தேர்தலில்  வெற்றிபெற  அவ்வளவு  செலவாவதில்லை  என்றார். “யுஎஸ்$700 மில்லியன்  …

டேவானில் தூங்கும் பழக்கம் இல்லை- கெடாவின் புதிய மந்திரி புசார்

கெடாவின்  மந்திரி  புசாராக  நியமிக்கப்பட்டிருக்கும் அஹ்மட்  பாஷா   முகம்மட்  ஹனாப்யா   மாநிலச்  சட்டமன்றக்  கூட்டங்களில்  தாம்  என்றும்  குட்டித்   தூக்கம்  போட்டதில்லை  என்று  திட்டவட்டமாகக்  கூறி  இன்று  காலை  முக்ரிஸ்  மகாதிர்  அவர்  தூங்கும்  பழக்கம்  உள்ளவர்  எனக்  கூறியிருந்ததை  மறுத்தார். குட்டித்  தூக்கம்  போடுவதைப்போல்  கண்களை  மூடிக் …

கைருடின் ஏஜிக்கு எதிராக நீதிமன்றத்தில் மனு தாக்கல்

முன்னாள் அம்னோ  பத்து  கவான்  துணைத் தலைவரான  கைருடின்  அபு  ஹாசான், சட்டத்துறைத்  தலைவராக  முகம்மட்  அபாண்டி  அலி  நியமிக்கப்பட்டதைச்  செல்லாது  என்று  அறிவிக்கக்  கோரி  நீதிமன்றத்தில்  மனு  தாக்கல்  செய்துள்ளார். பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  சம்பந்தப்பட்ட  இரண்டு   வழக்குகளைக்  கைவிட்ட  அபாண்டியின்  முடிவை  மறு  ஆய்வு …

நஜிப் தலைமையில் அம்னோ பலவீனமடைந்துள்ளது: சாடுகிறார் முக்ரிஸ்

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக் தலைவராக  இருக்கும்வரை  அம்னோ  பலவீனமாகத்தான்  இருக்கும்  என்று   முக்ரிஸ்  மகாதிர்  காட்டமாகக்  குறிப்பிட்டார். கெடா  மந்திரி  புசார்  பதவியிலிருந்து  விலகுவதை  அறிவிப்பதற்காகக்  கூட்டப்பட்டிருந்த  செய்தியாளர்  கூட்டத்தில்  முக்ரிஸ்   பேசினார். “இதைச்  சொல்ல  வருத்தமாக  உள்ளது. நஜிப் உள்ளவரை  அம்னோ  இப்போதிருப்பதைப்போல்  மிகவும்  பலவீனமாகத்தான் …

முக்ரிஸ் பதவி விலகினார்: பாஷா கெடாவின் புதிய எம்பி

கெடாவில்  இரண்டு  வாரம்  நீடித்த  அரசியல்  நெருக்கடி  முடிவுக்கு  வந்தது. மந்திரி  புசார்  பதவியைவிட்டு  விலக  முக்ரிஸ்  மகாதிர்  முன்வந்தார். இன்று  தம்  பதவி  விலகலை  அறிவித்த  முக்ரிசிடம்  அடுத்த  மந்திரி  புசார்  யார்  என்று  வினவியதற்கு,“அஹ்மட்  பாஷா   முகம்மட்  ஹனாப்யாதான்” என்றார். கூடவே, “பதவி  ஏற்பின்போது  அவர் …

முக்ரிஸ்: பதவி விலகும்படி ஆட்சியாளர்கள் கூறவில்லை

கெடா  மந்திரி  புசார்  பதவியிலிருந்து  விலகுமாறு  கெடா  அரசப்  பேராளர்  மன்றம்  கேட்டுக்கொண்டதாக  அரசாங்க- ஆதரவு  ஊடகங்களிலும்  வலைப்பதிவுகளிலும்  வெளிவந்த  செய்திகளை  முக்ரிஸ்  மகாதிர்  மறுத்தார். “கெடா  அரசப்  பேராளர்  மன்றம்  பதவி  விலகல்  கடிதத்தில்  கையொப்பமிடுமாறு  என்னை  நெருக்கியதாகவும்,  இரண்டு  தடவை  அவ்வாறு  கேட்டுக்கொண்டதாகவும்  நான்  அதற்கு …

பேர் வாங்க வேண்டும் என்பதற்காக எம்ஏசிசி-யைத் தாக்குவதா: முன்னாள் சிஎம்-மைச்…

மலேசிய ஊழல்தடுப்பு  ஆணையத்தை  விட்டு  சற்றே  விலகி  இரும்  பிள்ளாய்  என  மலாக்கா  முதலமைச்சர்  முகம்மட்  அலி  ருஸ்தமுக்கு ”தோழமை” உணர்வுடன்  ஆலோசனை  கூறியுள்ளார்    பெர்காசா  தலைவர்  இப்ராகிம்  அலி, “எம்ஏசிசியை  விட்டு  விடுங்கள். சில  தரப்புகளிடம்  நல்ல  பேர்  வாங்க  வேண்டும்  என்பதற்காகத்தான்  நீங்கள்  இப்படி  நடந்து …

பிஏசி தலைவர்: 1எம்டிபி கணக்காய்வு தொடரும்

தேசிய  கணக்காய்வுத்  துறை (ஜேஏன்)  1எம்டிபி  மீதான  இறுதி  கணக்கறிக்கையை   தாக்கல்  செய்வது  தாமதப்படலாம்   என்று  கூறப்பட்டிருப்பதை  நாடாளுமன்ற  பொதுக்  கணக்குக்குழு (பிஏசி)  மறுத்துள்ளது. “தேசிய  கணக்காய்வுத்  துறை  1எம்டிபி  மீதான  இறுதி  கணக்காய்வு  அறிக்கையை (திட்டமிட்டபடி)  பிப்ரவரியில்   தாக்கல்  செய்யும்  என்பதை  பிஏசி  வலியுறுத்துகிறது”,  என  அதன் …

மாரா பல்கலைக்கழகம், வங்கி போன்றவற்றை அமைக்கும்

மஜ்லிஸ்  அமானா  ராக்யாட்(மாரா)  வங்கி   திறப்பது  உள்பட  பல்வேறு  திட்டங்களை  முன்னெடுக்கும். இதன்  தொடர்பில்  பேங்க்  நெகாரா  மலேசியாவுடன்  பேச்சுகள்    நடத்தப்போவதாக  புறநகர்,  வட்டார  மேம்பாட்டு  அமைச்சர்  இஸ்மாயில்  சப்ரி   யாக்கூப்  கூறினார். “வங்கிக்குப்  பெயரை  இன்னும்  தீர்மானிக்கவில்லை.  ஆனால்,  திட்டமிடல்  தொடங்கி  விட்டது”, என  நேற்றிரவு  சாபாவில் …

பிரதமர்மீது வழக்கு இல்லை என்ற ஏஜி-இன் முடிவை எதிர்த்து நீதிமன்றம்…

முன்னாள்  அமைச்சர்  சைட்  இப்ராகிம்,  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்மீது  வழக்குத்  தொடுப்பதில்லை  என்று   சட்டத்துறைத்  தலைவர்   முகம்மட்  அபாண்டி  அலி  செய்துள்ள  முடிவை  நீதிமுறை  மேலாய்வுக்கு  எடுத்துச்  செல்கிறார். “நீதிமுறை  மேலாய்வு  செய்ய  வேண்டும்  என்று  கேட்டுக்கொண்டு  உயர்நீதி  மன்றத்தில்  மனு  செய்திருக்கிறேன்”,  என்று  சைட்  தெரிவித்தார்.…

அப்படியானால் மைபிபிபி-க்கு பழனிவேலைத் தலைவராக்க வேண்டியதுதானே: கேவியஸுக்கு வேள்பாரி பதிலடி

மஇகா  முன்னாள்  தலைவர்  ஜி.பழனிவேல்  ஒரு  பெருந்  தலைவர்  என்று   மைபிபிபி  தலைவர்  எம். கேவியஸ்   கருதுவாரானால்  அவர், தம்  கட்சித்  தலைமைப்  பொறுப்பிலிருந்து  விலகி  பழனிவேலைத்  தலைவராக  ஆக்கி  விடலாமே  என்று  மஇகா  மத்திய  செயல்குழு  உறுப்பினர்  எஸ்.வேள்பாரி   கிண்டலடித்துள்ளார். நேற்று,  கேவியஸும்  பிஎன்னுக்குத்  தோழமை  பாராட்டும் …

சுவீஸ் ஏஜிமீது மலேசிய அமைச்சர் கடும் தாக்கு

சுவீஸ்  சட்டத்துறைத்  தலைவர் (ஏஜி) 1எம்டிபி  மீதான  விசாரணை  தொடர்பில்  “நெறிமுறைகளை  மீறி  தப்பான  தகவல்களைப்  பரப்பி  வருகிறார்”  எனத்  தொடர்பு,  பல்லூடக  அமைச்சர்  சைட்  கெருவாக்  குற்றம்  சாட்டியிருப்பதாக  பிரிட்டனின்  த  கார்டியன்  நாளேடு  கூறியது. “ஒரு  நாட்டின்  உயர்  அதிகாரி  இன்னொரு  நாட்டின்  உள்விவகாரம்  பற்றிப்  …

தொடரும் மஇகா கூத்து

  பாரிசான் ஆதரவு இந்திய அரசியல் கட்சிகள் ஜி. பழனிவேல்தான் உண்மையான மஇகா தலைவர் என்று கூறி அவருக்கு ஆதரவு தெரிவித்தன. இன்று, கோலாலம்பூர் பிரிக்பீல்ட்ஸ்சில் ஜி. பழனிவேல் ஏற்பாடு செய்திருந்த "ஒற்றுமை பொங்கல்" நிகழ்ச்சிக்குப் பின்னர் ஒரு செய்தியாளர் கூட்டத்தீல் பேசிய மைபிபிபி தலைவர் எம். கேவியல்,…

பள்ளிகளில் அரசியல் கூடாது என்ற பாடத்தைக் கற்றுக் கொண்டிருப்பார் முகைதின்

பள்ளிக்கூடங்கள்  சுதந்திரமாக  செயல்பட  வேண்டும்.  அங்கு  அரசியல்  கட்டுப்பாடுகள்  கூடாது. இதை  முன்னாள்  துணைப்  பிரதமர்  முகைதின்  யாசின்  இப்போது  உணர்ந்திருப்பார்.   நேற்று  சுபாங்  ஜெயா,  ஸ்கோலா  மெனாங்கா  கெபாங்சான்  யுஎஸ்ஜே4-இல்  முகைதின்  உரையாற்றச்  சென்றபோது  அங்கு  அவர்  பேசுவதற்குத்  தடை  விதிக்கப்பட்டது  அவருக்கு  நல்லதொரு  பாடமாகும். “பள்ளிகளை …

‘முக்ரிசை மாற்றுவதால் நாட்டுக்கு நன்மை இல்லை; பிரதமரை மாற்றினால்தான் நன்மை’

கெடா  மந்திரி  புசாரை  மாற்றுவதைவிட  பிரதமரை  மாற்றுவதே  நாட்டுக்கு  அதிக  நன்மையைக்  கொண்டு  வரும்  என்கிறார்  பாஸ்  நாடாளுமன்ற  உறுப்பினர்  ஒருவர். கெடாவில்  நிலவும்  அரசியல்  குழப்பநிலைமீது  கருத்துரைத்தபோது  பொக்கோக்  சேனா  எம்பி  மாபுஸ்  ஒமார்  அவ்வாறு  கூறினார். பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கின்  பலவீனங்களாலும்   தவறுகளாலும்  பெரிய …

வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு லெவி உயர்த்தப்பட்டிருப்பது ‘மிகவும் ஏமாற்றமளிக்கிறது’

வெளிநாட்டுத்  தொழிலாளர்களுக்கான  லெவி கட்டணம்   ரிம1,250-இலிருந்து   ரிம2,500-ஆக  திடீரென  உயர்த்தப்பட்டிருப்பதற்கு  மலேசிய  பொருள்  தயாரிப்பாளர்கள்  சங்கச்  சம்மேளனம் (எப்எம்எம்)   எதிர்ப்புத்  தெரிவித்துள்ளது. லெவியை உடனடியாக  உயர்த்துவது  ஏற்புடையதல்ல  என்று  கூறிய   எப்எம்எம்  அம்முடிவு  வர்த்தகத்தைப்  பாதித்து  சமூக-  பொருளாதார விளைவுகலையும்  உண்டுபண்ணும்  என்று  குறிப்பிட்டது. லெவியை  இப்போதைய  விகிதத்திலேயே …

சுவீஸ் ஏஜி ஜாஹிட்டின் ‘அரசியலில்’ இழுக்கப்படுவதை விரும்பவில்லை

மலேசிய  அரசு தொடர்புடைய  முதலீட்டு  நிறுவனமான 1எம்டிபி மீதான  விசாரணையில்  மலேசிய  சட்டத்துறைத்  தலைவர்  ஒத்துழைப்பார்  என்பதில்  “திருப்தி”  கொள்வதாக  சுவீஸ்  சட்டத்துறைத் தலைவர்  கூறினார். அவரது  ஊடக  அறிக்கையில்  அவர்  இதைத்  தெரிவித்தார். “பரஸ்பர  உதவி   கேட்டு  சுவிட்சர்லாந்து  விடுத்த  வேண்டுகோளை  ஏற்று  முழுமையான  ஒத்துழைப்பு  அளிக்கக் …

சிருல்: அல்டான்துயா கொலையில் ‘நஜிப் சம்பந்தப்படவில்லை’

போலீஸ்  அதிரடிப்படையின்  முன்னாள்  வீரரான   சிருல்  அஸ்ஹார்,  2006-இல்  மங்கோலிய  பெண்  அல்டான்துன்யா  கொல்லப்பட்டதில்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்குக்கு  எந்த  வகையிலும்  தொடர்பில்லை  என்று  சத்தியம்  செய்கிறார். “சில  தரப்புகள்  குறிப்பிட்ட   ஒருவரைக்  கவிழ்க்கும்  நோக்கத்தைக்  கொண்டிருப்பதாக  அறிகிறேன். ஆனால்,  யாரையும்  பழித்துரைக்கும்  பழக்கம்  எனக்கு  இல்லை.…