மத்திய கிழக்கு போர்ச் சூழல் நிலவியபோதிலும், இந்த மாதம் மலேசியாவின் சுற்றுலாத் துறை 2.4 சதவீதம் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக சுற்றுலா, கலை மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ தியோங் கிங் சிங் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முகநூல் பதிவிட்டுள்ள அவர், மார்ச் 1 முதல் 26…
ஸுரைடா சரவாக்கில் நுழைவதைத் தடுத்தது கோழைத்தனம்
பிகேஆர் மகளிர் தலைவர் ஸுரைடா கமருடின் சரவாக்கில் நுழைய தடை விதிக்கப்பட்டிருப்பதை “ஒரு கோழைத்தனமான செயல்” என அக்கட்சியின் உதவித் தலைவர் நுருல் இஸ்ஸா அன்வார் வருணித்தார். அட்னான் சடேம் சரவாக் முதலமைச்சராக பொறுப்பேற்றபோது பல சீரமைப்புகளைச் செய்யப்போவதாக உறுதி கூறினார். ஆனால், இன்னமும் “ஜனநாயகமற்ற முடிவுகளைத்தான்” செய்கிறார் …
நஜிப்பின் வங்கிக் கணக்குகள்மீது விசாரணை தொடர வேண்டும்
மலேசிய ஊழல்தடுப்பு ஆணையமும் சட்டத்துறைத் தலைவர் முகம்மட் அபாண்டி அலியும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் தனிப்பட்ட வங்கிக் கணக்குகள்மீதான புலன் விசாரணை தொடர்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்று டிஏபி-இன் பூச்சோங் எம்பியும் டிஏபி தேசிய சட்டப் பிரிவுத்…
ரிம2.6பில்லியன் பற்றிய வங்கிக் கணக்கறிக்கைகள் பெறுவதைத் தடுத்தது ஏன்? ஏஜி…
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்குக் கொடுக்கப்பட்டதாக கூறப்படும் ரிம2.6 மில்லியன் பற்றிய வங்கி அறிக்கைகளை வெளிநாட்டு வங்கிகளிடமிருந்து பெறுவதற்கு மலேசிய ஊழல்தடுப்பு ஆணைய(எம்ஏசிசி)த்துக்கு அனுமதி அளிக்காதது ஏன் என்பதைச் சட்டத்துறைத் தலைவர் முகம்மட் அபாண்டி அலி…
நீர்மூழ்கிக் கொள்முதலில் ரசாக் பாகிண்டா கமிஷன் பெற்றாராம்
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, மலேசியாவுக்கு ஸ்கோர்பியன் நீர்மூழ்கிகள் விற்கப்பட்டது மீதான விசாரணை மீண்டும் தொடங்கியுள்ளது. அந்த விசாரணையில் பிரதமர் நஜிப்புக்கு நெருக்கமான ஒருவருக்கு சட்டவிரோதமாக கமிஷன் தொகை கொடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டிருக்கிறது. இந்த விசாரணையில் முதன்முதலாக குற்றஞ்சாட்டப்பட்டவர் பிரெஞ்ச் நிறுவனமான Thales-இன் அனைத்துலக துணை நிறுவனத்தின் தலைவர் பெர்னார்ட் பயோக்கோ,72.…
ஜேபிஏ உதவிச் சம்பளக் குறைப்பு ஏற்கத்தக்கதல்ல
நேற்று அறிவிக்கப்பட்ட 2016 பட்ஜெட் திருத்தம் ஆயிரக்கணக்கான இளம் மலேசியர்களின் கனவுகளைச் சிதறடித்து விட்டதாக டிஏபி எம்பி ஸைரில் கீர் ஜொகாரி கூறினார். இந்த இளைஞர்கள் சிறந்த தேர்வு முடிவுகளைப் பெறுவதற்காக பாடுபட்டுப் படித்திருக்கிறார்கள். அரசாங்க உதவிச் சம்பளத்தைப் பெறலாம் என்று நம்பி நேரத்தையும் பணத்தையும் செலவிட்டிருக்கிறார்கள். அவப்பேறாக,…
பொங்கல் கருத்துக்களம்
இன்று பொங்கல் விழாக்கள் மிக பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. குறுஞ்செய்திகள், மின்னியல் வாழ்த்துக்கள் என பரபரப்பான விழாவாக அமைகிறது. அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகளும் போட்டிப் போட்டுக் கொண்டு பொங்கலை அவரவர் தொகுதிகளில் வைப்பதும் வழக்கமாகி வருகிறது. ஆனால், இந்த கொண்டாட்டங்கள் பொங்கலின் உண்மையான நோக்கத்தையும் அர்த்தத்தையும் மக்களுக்கு எவ்வளவு…
நஜிப்பைக் குற்றம் சாட்டும் எம்ஏசிசி-இன் பரிந்துரையை ஏஜி புறந்தள்ளினார்
மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்மீது குற்றம் சாட்ட வேண்டும் என்று பரிந்துரைத்ததாகவும் சட்டத்துறைத் தலைவர் முகம்மட் அபாண்டி அலி அதைப் புறக்கணித்தார் என்றும் ராய்ட்டர்ஸ் செய்தி ஒன்று கூறியது. பிரதமர்மீது நம்பிக்கை…
இசி தலைவர் பெர்சே தலைவர்களைச் சந்திக்க திட்டம்
புதிதாக நியமிக்கப்பட்ட தேர்தல் ஆணையத் தலைவர் முகம்மட் ஹாஷிம் அப்துல்லா பெர்சே 2.0 தலைவர் மரியா சின் அப்துல்லாவைச் சந்திக்க ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார். பெர்சே 2.0 எழுப்பியுள்ள விவகாரங்கள் குறித்து அதனுடன் விவாதிக்கப்போவதாக இன்று புத்ரா ஜெயாவில் செய்தியாளர்களிடம்…
ஜிஎஸ்டி-ஆல் விலை உயர்வு என்ற தப்பெண்ணத்தை உடைக்கும் முயற்சியில் சுங்கத்துறை
அரச மலேசிய சுங்கத்துறை பொருள், சேவை வரிதான் விலைவாசி உயர்வுக்குக் காரணம் என்ற எண்ணத்தை உடைத்தெறிய கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறது. நெறிகெட்ட வியாபாரிகள்தான் விலை உயர்வுக்குக் காரணம் எனச் சுங்கத்துறை தலைமை இயக்குனர் கசாலி அஹ்மட் கூறினார். அவர்கள்தான் காரணமில்லாமல் பொருள்களின் விலைகளைக் உயர்த்தி விட்டார்கள். “விலை உயர்வுக்கு…
எம்சிஎம்சி மேலும் நான்கு வலைத்தளங்களை முடக்கியது
மலேசிய தொடர்ப்பு, பல்லூடக ஆணையம் (எம்சிஎம்சி) syedsoutsidethebox, tabunginsider,fotopages, Din Turtle ஆகிய நான்கு வலைத்தளங்களை முடக்கிப் போட்டிருக்கிறது. இன்று காலையிலிருந்து அவ்வலைத்தளங்களுக்குள் செல்ல முடியவில்லை. syedsoutsidethebox முடக்கப்படும் என்பதை சைட் அக்பர் அலி கடைசியாக இட்டிருந்த பதிவில் குறிப்பிட்டிருந்தார். தாபோங் இன்சைடர் புதிதாக உருவாக்கப்பட்ட ஒரு வலைத்தளம்.…
‘வழக்கு முடிந்துவிட்டது; பிரதமர்மீது சேற்றை வாரி வீசாதீர்’
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் அரசியல் எதிரிகள் அவர்மீது தாக்குதல் தொடுப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என அம்னோ செராஸ் தொகுதித் தலைவர் சைட் அலி அல்ஹாப்ஷி கோரிக்கை விடுத்துள்ளார். “அவரின் எதிரிகள் அவரைச் சேற்றுக்குள் இழுத்துச் செல்கிறார்கள். விஷத்தைக் கொட்டி அவரது பெயரைக் களங்கப்படுத்துகிறார்கள். அவரின் குடும்பத்தாரையும் விட்டு…
ரபிஸி: சுதந்திரமாக செயல்படும் சிறப்பு அரசு வழக்குரைஞர் தேவை
பிகேஆர் எம்பி ரபிஸி ரம்லி, நாடாளுமன்றம் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கு எதிரான வழக்குகளை மீண்டும் விசாரிக்கவும் மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) முறையீடு செய்யுமானால் அதன்மீது நடவடிக்கை எடுக்கவும் சுதந்திரமாக செயல்படும் அரசு வழக்குரைஞர் ஒருவரை நியமனம் செய்ய வேண்டும் என விரும்புகிறார். “சட்டமும் நாடாளுமன்ற…
புவா: மேலும் ரிம27மில்லியன் பிரதமர் கணக்கில் மாற்றிவிடப்பட்டிருப்பதை ஏஜி ‘காட்டிக்கொடுத்து…
எஸ்ஆர்சி இண்டர்நேசனல் நிறுவனத்திலிருந்து மேலும் ரிம27 மில்லியன் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் கணக்குக்குச் சென்றிருப்பதைச் சட்டத்துறைத் தலைவர் முகம்மட் அபாண்டி அலி, தன்னை அறியாமலேயே அம்பலப்படுத்தி விட்டார். இந்தக் கூடுதல் பணப் பட்டுவாடா நேற்று செய்தியாளர் கூட்டத்தில் அபாண்டி அலி கையில் வைத்திருந்த ஒரு விளக்க அட்டவணை…
எம்ஏசிசி ‘தெளிவான’ வழக்குகளில் ஏஜி-இன் முடிவின்மீது முறையீடு செய்யக்கூடும்
ரிம2.6 பில்லியன் மற்றும் எஸ்ஆர்சி இண்டர்நேசனல் வழக்குகளைக் கைவிடும் சட்டத்துறைத் தலைவர் முடிவுக்கு எதிராக மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம்(எம்ஏசிசி) முறையீடு செய்யும் சாத்தியம் உள்ளது. அவை, “ஒளிவுமறைவற்ற தெளிவான” வழக்குகள் என ஆணையத்தின் சிறப்பு நடவடிக்கை இயக்குனர் பாஹ்ரி முகம்மட் ஸின் த ஸ்டாரிடம் கூறினார். அவ்வழக்குகள் தொடர்பில் …
கெடா அரசியல் நெருக்கடியில் அரசப் பேராளர் மன்றம் நடுநிலை வகிக்கும்
கெடா அரசப் பேராளர் மன்றம் அம்மாநிலத்தில் நிலவும் அரசியல் நெருக்கடியில் எந்தத் தரப்பையும் ஆதரிப்பதில்லை என்று முடிவெடுத்துள்ளது. சம்பந்தப்பட்ட தரப்புக்களே பிரச்னையை தீர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அது அறிவுறுத்தியுள்ளது. “கெடா அரசப் பேராளர் மன்ற உறுப்பினர்கள் கெடாவில் ஏற்பட்டுள்ள அரசியல் சர்ச்சையைக் கவனத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த விவகாரத்தில் …
ரபிஸி அவதூறு குற்றம் புரிந்திருக்கிறார்: நீதிமன்றம் தீர்ப்பு
பாண்டான் எம்பியும் பிகேஆர் உதவித் தலைவருமான ரபிஸி ரம்லி அவதூறு குற்றம் செய்திருக்கிறார் என பெட்டாலிங் ஜெயா செஷன்ஸ் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. அக்குற்றத்துக்காக அவருக்கு ரிம1,800 அபராதம் விதிக்கப்பட்டது. ரிம1,800 என்பதால் அவரது எம்பி பதவி தப்பியது. அபராதம் ரிம2,000 அல்லது அதற்குமேல் போனால் அவர் நாடாளுமன்ற …
தாய்லாந்தில் கண்டெடுக்கப்பட்டவை எம்எச் 370 விமானத்தின் சிதைந்த பகுதிகள் அல்ல
தென் தாய்லாந்தில் கண்டெடுக்கப்பட்ட சிதைந்த பகுதிகள் போயிங் 777 ரக விமானத்தின் பகுதிகள் அல்ல என்பதால் அவை நிச்சயமாக காணாமல்போன மலேசிய விமானமான எம்எச்370-தின் பகுதிகளாக இருக்க முடியாது. சிவில் விமானப் போக்குவரத்துத் துறை, போக்குவரத்து அமைச்சு, மலேசிய விமான நிறுவனம் ஆகியவற்றின் நிபுணர்கள் அதை உறுதிப்படுத்தியுள்ளதாக போக்குவரத்து …
ஏஜி அபாண்டி அலி தாபோங் ஹாஜி இயக்குனராக நியமனம்
சட்டத்துறைத் தலைவர் முகம்மட் அபாண்டி அலி தாபோங் ஹாஜி இயக்குனர் வாரியத்தில் ஒரு இயக்குனராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். தாபோங் ஹாஜி இணையத்தளம் இதைத் தெரிவித்தது. ஹஜ்ஜு யாத்திரிகர் வாரியத்தில் பணக்கையிருப்பு குறைந்து வருவதாகக் கூறப்படும் வேளையில் அவர் அவ்வாரியத்துக்கு நியமிக்கப்பட்டிருக்கிறார். முகம்மட் அபாண்டி தாபோங் ஹாஜி இயக்குனர் வாரியத்துக்கு …
எம்டியுசி தலைவர் காலிட் அடான் காலமானார்
மலேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (எம்டியுசி) தலைவர் காலிட் அடான் இன்று காலை மரணமடைந்தார். “அவர் குளியலறையில் விழுந்து விட்டதாக என்னிடம் தெரிவிக்கப்பட்டது”, என எம்டியுசி தலைமைச் செயலாளர் என்.கோபால கிருஷ்ணன் கூறினார். காலிட் அடானுக்கு வயது 63.
ஏஜி-இன் அறிவிப்பால் அஸ்மின் அதிர்ச்சி
ரிம2.6 பில்லியன் நன்கொடை தொடர்பில் தவறு எதுவும் நிகழவில்லை எனச் சட்டத்துறைத் தலைவர் முகம்மட் அபாண்டி அலி அறிவித்திருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்திருக்கிறார் முகம்மட் அஸ்மின் அலி(பிகேஆர்- கோம்பாக்). “அதிர்ச்சி அளிக்கிறது. நாடாளுமன்றத்தில்கூட விளக்கம் தரப்படவில்லை. நாட்டுக்கும் அரசாங்கத்துக்கும் களங்கம் உண்டுபண்ணிக் கொண்டிருந்த விவகாரத்தை மிக விரைவாக முடித்துக் …
நஜிப் அதிர்ஷ்டக்காரர் , பெரிய மனசுக்காரர்: ரபிஸி கிண்டல்
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் அதிர்ஷ்டம் அவருக்கு ரிம2.03 பில்லியன் கிடைத்தது; அவரது பெரிய மனசு அதைத் திருப்பிக் கொடுத்து விட்டது என பிகேஆர் உதவித் தலைவர் ரபிஸி ரம்லி கிண்டலடித்தார். மலேசிய ஊழல்தடுப்பு ஆணையத்தின் விசாரணை அறிக்கைகளின் அடிப்படையில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்மீது குற்றச்சாட்டு எதுவும் …
நஜிப் ரிம2.03 பில்லியனை சவுதி அரச குடும்பத்திடமே திருப்பிக் கொடுத்து…
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், அரசியல் நன்கொடையாக தம் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட ரிம2.6 பில்லியனில் ரிம2.03 பில்லியனைத் திருப்பிக் கொடுத்து விட்டார் எனச் சட்டத்துறைத் தலைவர் முகம்மட் அபாண்டி அலி கூறினார். அப்பணம், கடந்த பொதுத் தேர்தலின்போது பயன்படுத்திக் கொள்ளப்படவில்லை என்பதால் தேர்தல் முடிந்த இரண்டு மாதங்களில் …
ஏஜி: எஸ்ஆர்சி, ரிம2.6 பில்லியன் மீதான விசாரணை முடிந்தது: பிரதமர்…
மலேசிய ஊழல்தடுப்பு ஆணையத்தின் விசாரணை அறிக்கைகளின் அடிப்படையில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்மீது குற்றச்சாட்டு எதுவும் சுமத்தப்படாது. எஸ்ஆர்சி, ரிம2.6 பில்லியன் நன்கொடை மீதான விசாரணை அறிக்கைகளை முழுமையாக படித்துப் பார்த்து மனநிறைவு கொள்வதாக சட்டத்துறைத் தலைவர் முகம்மட் அபாண்டி அலி கூறினார். “உண்மைகளையும் சாட்சியங்களையும் அடிப்படையாக வைத்து …


