மத்திய கிழக்கு போர்ச் சூழல் நிலவியபோதிலும், இந்த மாதம் மலேசியாவின் சுற்றுலாத் துறை 2.4 சதவீதம் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக சுற்றுலா, கலை மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ தியோங் கிங் சிங் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முகநூல் பதிவிட்டுள்ள அவர், மார்ச் 1 முதல் 26…
ஐஎஸ்-ஸில் உரிமைகளே இருக்காது, என்று என்எஸ்சி-யை நியாயப்படுத்துகிறார் நஜிப்
சிவில் உரிமைகளுக்குக் கோரிக்கை விடுக்கும் மலேசியர்களுக்கு தீவிரவாத ஐஎஸ் ஆட்சியில் ஒரு உரிமையும் இருக்காது என்பதை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் நினைவுறுத்தினார். ஆகவே, தேசிய பாதுகாப்பு மன்ற சட்டவரைவு கொண்டுவரப்பட்டது நியாயமே ஆகும் என்றாரவர். கோலாலும்பூரில் பாதுகாப்பு மீதான மாநாட்டில் உரையாற்றிய நஜிப், தீவிரவாதிகளின் மிரட்டல்களுக்கு எதிரான …
ரிம1.2 பில்லியன் செலவு செய்தாயிற்று, பிடிஎன்னை மூடுவதே நல்லது
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், வியாழக்கிழமை 2016 பட்ஜெட்டை மறுபரிசீலனை செய்யும்போது தேசிய குடிமையியல் பிரிவு(பிடிஎன்)க்கு மூடுவிழா நடத்துவதே நல்லது. பிடிஎன்னை தேசிய ஒற்றுமையை வளர்ப்பதற்காக ஒட்டுமொத்தமாக திருத்தி அமைக்கப்போவதாகக் கூறுவதெல்லாம் வீண் வேலை என டிஏபி பெருந் தலைவர் லிம் கிட் சியாங் ஓர் அறிக்கையில் கூறினார்.…
பிடிஎன்னைச் சீரமைக்க வேண்டும்- அஸ்லினா
வெவ்வேறு வகை பாதுகாப்பு மிரட்டல்கள் நிலவுவதைப் பார்க்கையில் தேசிய குடிமையியல் பிரிவை(பிடிஎன்)ச் சீரமைக்க வேண்டிய தேவை இருப்பதாகக் கருதுகிறார் பிரதமர்துறை அமைச்சர் அஸ்லினா ஒஸ்மான் கூறினார். மக்கள் அரசாங்கத்துக்கு சிறந்த “கண்களாகவும் காதுகளாகவும்” இருத்தல் வேண்டும் என்றாரவர். “தேசிய பாதுகாப்பை அச்சுறுத்தும் மருட்டல்களை மக்கள் உணர்ந்திருக்க வேண்டும். ஆனால், …
சரவாக் ரிப்போர்ட்: நஜிப், எங்கள் மீது வழக்குத் தொடருங்கள்
சரவாக் ரிப்போர்ட் வலைத்தளம் பொய்யான அறிக்கைகளை வெளியிடுகிறது என்று பிரதமர் நஜிப் கருதினால், அந்த வலைத்தளத்திற்கு எதிராக வழக்குத் தொடருமாறு சரவாக் ரிப்போர்ட் பிரதமருக்கு இன்று சவால் விட்டுள்ளது. மலேசிய பல்லூடக மற்றும் தகவல் தொடர்பு ஆணையம் (எம்சிஎம்சி) சரவாக் ரிப்போர்ட் மற்றும் இன்னொரு வெளிநாட்டு வலைத்தளமான ஏசியா…
சாமிவேலு: என்னைச் சாடாதீர், பணம் கொண்டு வருகிறேன்
சிறப்புத் தூதர் போன்ற பதவிகளை அகற்ற வேண்டும் என்ற கூக்குரலுக்கிடையில், இந்தியா மற்றும் தெற்காசியாவுக்கான சிறப்புத் தூதர் ச. சாமிவேலு தம்மைச் சாட வேண்டாம் ஏனென்றால் தாம் நாட்டிற்குப் பணம் கொண்டு வருவதாகக் கூறினார். கட்டட நிர்மாணிப்புத் தொழிலில் மலேசியா மிகுந்த அனுபவத்தைப் பெற்றுள்ளது என்று கூறிய சாமிவேலு,…
மலேசியாகினி விலை போகாது, முருகா!
இன்று தைப்பூசம். மலேசியாவின் முன்னணி இணையச் செய்தித்தளமான மலேசியாகினி விற்பனைக்கு இல்லை என்று அதன் நிருவனர்கள் பகிரங்கமாக இன்று அறிவித்துள்ளனர். பல பிரபலமான இணையச் செய்தித்தளங்களை, மலேசியாவின் முன்னணி செய்தித்தளம் உட்பட, அம்னோ உறவுகள் வாங்குவதற்கு திட்டமிட்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்திகள் குறித்து எதிர்வினையாற்றிய மலேசியாகினியின் தலைமைச் செயல்முறை…
மலேசியாவில் ஒரு நாளைக்கு ஒரு நேப்பாளி இறக்கிறாராம்
மலேசியாவில் ஒவ்வொரு வாரமும் ஒன்பது நேப்பாளிகள் உயிரிழப்பதாக அதிர்ச்சிதரும் செய்தியை கோலாலும்பூரில் நேப்பாள தூதரகம் கடந்த ஆண்டு இறுதியில் வெளியிட்டிருந்தது. வேலை செல்லும் இவர்கள் பத்திரமாக திரும்புவார்களா என்பதே சந்தேகமாம். வேலையின்போதே இறப்பதே இவர்களின் வாழ்க்கையாகி விட்டதாம். கடந்த 12 ஆண்டுகளில் 3,000 நேப்பாளிகள் மலேசியாவில் இறந்து போனதாக …
‘மாமாக் குண்டர் கும்பலை’ச் சேர்ந்தவன் போலீசால் சுட்டுக் கொல்லப்பட்டான்
நேற்று பிற்பகல், சாங்காட் ஜெரிங் டோல் சாவடியில் போலீசார் ‘மாமாக் குண்டர் கும்பலை’ச் சேர்ந்த ஒருவனைச் சுட்டுக் கொன்றதுடன் மற்றும் இருவரைச் சிறை பிடித்தனர். நேற்று காலை நெகிரி செம்பிலான் ராசாவில் நடந்த கொள்ளை பற்றித் தகவல் கிடைத்ததும் தைப்பிங் போலீசார் சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கி டோல் சாவடி …
ஹாடி: வர்த்தகம் சீனர்கள் கையில், அதனால்தான் டிஏபி டிபிபிஏ-யை ஆதரிக்கிறது
பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங், டிஏபி டிபிபிஏ-ஐ ஆதரிப்பதாகக் குற்றஞ்சாட்டினார். மலேசியாவில் வர்த்தகம் சீனர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதுதான் அதற்குக் காரணம் என்றும் அவர் சொன்னார். டிஏபி-யை சிங்கப்பூரின் பெரும்பான்மை சீனர்களுடனும் அவர் இனைத்துப் பேசினார். “நம் குத்தகையாளர்கள் மேம்பட்ட சாதனங்களையும் அனுபவத்தையும் ஆற்றலையும் கொண்ட அவர்களின் (டிபிபி…
டிபிபிஏ-யை விரும்பும் அம்னோ சீனர்கள் கட்சியாகத்தான் இருக்க வேண்டும்: ஹாடிக்கு…
பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங் ஒட்டி உறவாடும் அம்னோவில் சீனர்கள் நிறைந்திருக்கிறார்களோ என்று டிஏபி பிரச்சாரப் பிரிவுத் தலைவர் டோனி புவா கிண்டலடித்துள்ளார். சீனர்கள் வணிகத்தில் கொடிகட்டி பறப்பதால்தான் டிஏபி பசிபிக் மண்டல வர்த்தகப் பங்காளித்துவ ஒப்பந்த(டிபிபிஏ)த்தை ஆதரிக்கிறது என அப்துல் ஹாடி கூறியிருப்பதற்கு புவா இவ்வாறு …
எஸ்யுபிபி: ஹாடியை சரவாக்கில் அனுமதிக்கக் கூடாது
கிறிஸ்துவர்களை இழித்தும் பழித்தும் பேசிய பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங் சரவாக்கில் கால் பதிக்கத் தடை விதிக்க வேண்டும் என்று சரவாக் ஐக்கிய மக்கள் கட்சி (எஸ்யுபிபி) கேட்டுக் கொண்டிருக்கிறது. படித்தவர்கள் கிறிஸ்துவத்தைப் புறக்கணிப்பதாக ஹாடி பாஸ் கட்சிப் பத்திரிகையான ஹராகாவில் குறிப்பிட்டிருப்பதை எஸ்யுபிபி தலைமைச் செயலாளர் …
ஜிபிஎம்: தைப்பூச நல்வாழ்த்துகள்
தமிழ் அறவாரியம் உட்பட 28 இந்திய, சீன மற்றும் மலாய் அமைப்புகளின் கூட்டமைப்பான மலேசிய செயல்திட்ட கூட்டமைப்பு (ஜிபிஎம்) அதன் தைப்பூச நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது. A…
உபகாரச் சம்பளம்: டாக்டர் சுப்ரமணியம் மௌனம் களைவாரா?, குலா கேட்கிறார்
ஜேபிஎ எனப்படும் அரசாங்க உபகாரச் சம்பளம் நிறுத்தப்பட்டதாக பிரதமர் துறை அமைச்சர் டாக்டர் வீ கா சியோங் அறிவித்திருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது என்கிறார் டிஎபி நாடாளுமன்ற உறுப்பினர் மு. குலசேகரன். கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு அரசாங்கம் இது வரையில் வெளிநாடுகளிலும் உள்நாட்டுப் பல்கலைக்கழகங்களிலும் பயிலுவதற்காக கொடுத்து வந்த இந்த நிதியை திடீரென்று நிறுத்துவது…
பொருளாதார சுணக்கத்திலும் சுகாதாரச் சுற்றுப் பயணம் வளர்ச்சி கண்டது
பொருளாதாரச் சுணக்கம் ஏற்பட்டிருந்தாலும் அது சுகாதாரச் சுற்றுப்பயணிகளின் வருகையைப் பாதிக்கவில்லை என்று சுகாதார அமைச்சர் டாக்டர் எஸ்.சுப்ரமணியம் கூறினார். மலேசியாவில் சுகாதாரச் சுற்றுப்பயணத் துறை தொடர்ந்து வளர்ச்சி கண்டு வருவதாகவும் 2014-இல் 800,000 சுற்றுப்பயணிகள் மருத்துவ சிகிச்சை நாடி வந்தார்கள் என்பதை மலேசிய சுகாதாரச் சுற்றுலா மன்ற (எம்எச்டிசி) …
பிஜே பல்கலைக்கழகமொன்றில் வெடிகுண்டு அச்சம்
பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தின் காரணமாக பணியாளர்களும் மாணவர்களும் பல்கலைக்கழக வளாகத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவினர் பல்கலைக்கழக முழுவதும் சோதனை செய்து வருவதாக போலீஸ் வட்டாரம் ஒன்று தெரிவித்தது. பல்கலைக்கழகத்தில் கவனிப்பாரின்றி காணப்பட்ட பை ஒன்றுதான் வெடிகுண்டு வைக்கப்பட்டிருக்கலாம் என்ற …
கருத்துக்கணிப்பில் பெரும்பாலோர் டிபிபிஏ-க்கு ஆதரவு
கெராக்கான் இளைஞர்கள் இணையத்தில் நடத்திய ஆய்வு ஒன்றில் மலேசியர்களில் பெரும்பாலோர் பசிபிக் மண்டல வர்த்தக பங்காளித்துவ ஒப்பந்தத்தை (டிபிபிஏ) ஆதரிப்பது தெரிகிறது. 1,499 பேர் கலந்துகொண்ட ஆய்வில் 1,107 பேர், கிட்டத்தட்ட 75 விழுக்காட்டினர் டிபிபிஏ மலேசியாவுக்கு நன்மையைக் கொண்டு வரும் என்றனர். “பெரும்பாலோர் டிபிபிஏ-க்கு ஆதரவு தெரிவித்தனர்.…
கெடாவில் எதிரணி புதிய அரசை அமைக்கும் வாய்ப்புள்ளது: ஆய்வாளர்
கெடா மாநிலத்தில் மந்திரி புசார் முக்ரிஸ் மகாதிரை வெளியேற்ற ஒருங்கிணைத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதால் அங்கு எதிரணி புதிய அரசாங்கத்தை அமைக்கும் வாய்ப்பு இருப்பதாகக் கருதுகிறார் அரசியல் ஆய்வாளர் ஒருவர். அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களில் நால்வர் அல்லது ஐவர் ஆதரவு கொடுத்தால் போதும் எதிரணி ஒரு சிறு பெரும்பான்மையில் …
காடிர்: இணையச் செய்தித் தளங்களை வளைத்துப்போட முயல்கிறது நஜிப் முகாம்
புத்ரா ஜெயா, இணையச் செய்தித் தளங்களை வாங்குவதற்கும் அவற்றைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளவும் முயல்வதாக மூத்த செய்தியாளர் ஏ.காடிர் ஜாசின் கூறுகிறார். பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் ஊடகப் பிரச்சாரங்களைக் கவனித்துக்கொள்பவர்தான் இந்த முயற்சிகளை முன்னெடுத்து வருகிறார் என இணையச் செய்தித் தளம் ஒன்றின் உரிமையாளர் ஒருவர் தம்மிடம் தெரிவித்ததாக …
நீதி மாளிகை சுவர்களில் ‘Tangkap Najib’ என்று எழுதப்பட்டிருந்தது
புத்ரா ஜெயாவில் நீதி மாளிகையின் தலைவாசலுக்கு அருகில் உள்ள சுவர்களில் "Tangkap Najib" (நஜிப்பைக் கைது செய்), "No Justice" (நீதி கிடையாது) என்று சிவப்பு வண்ணத்தில் எழுதப்பட்டிருந்தது. நேற்று காலைதான் அவ்வெழுத்துகள் கண்டுபிடிக்கப்பட்டதாக சின் சியு டெய்லி கூறியது. உதவி போலீஸ் படை உறுப்பினர் ஒருவர் காவல்…
நஜிப், எஸ்ஆர்சி-இலிருந்து ரிம42 மில்லியன் தம் கணக்குக்கு மாற்றிவிடப்பட்டதை ஒப்புக்கொண்டாரா?
பிரதமர் நஜிப் துன் ரசாக் 1எம்டிபி துணை நிறுவனம் எஸ்ஆர்சி இண்டர்நேசனல் நிறுவனத்திடமிருந்து ரிம 42 மில்லியன் தம் சொந்த வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்டதை ஒப்புக்கொண்டாரா என்பது உறுதியாக தெரியவில்லை. முன்னாள் மசீச தலைவர் டாக்டர் லிங் லியோங் சிக்கிற்கு எதிரான வழக்கு தொடர்பில் பிரதமர் வெளியிட்ட அறிக்கையில் …
ஒருதலைப்பட்சமான மதமாற்றத்துக்கு உடனே முடிவுகாண வேண்டும்: அனைத்து சமய மன்றம்…
குழந்தைகளை ஒருதலைப்பட்சமாக மதமாற்றம் செய்யும் விவகாரத்துக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என மலேசிய பொளத்தம், கிறிஸ்துவம், இந்துசமயம், சீக்கியம், தாவோயிசம் கூட்டு ஆலோசனை மன்றம் (MCCBCHST) வலியுறுத்தியுள்ளது. “பிரச்னைக்கான அடிப்படை காரணம், அதாவது வயதுக்கு வராத சிறார்களை ஒருதலைப்பட்சமாக மத மாற்றம் செய்யும் விவகாரத்துக்கு முடிவு காணப்பட …
நிபுணர்கள்: சட்டமன்றம் அல்லது அரசப்பேராளர் மன்றத்துக்கு மட்டுமே முக்ரிசை பதவிநீக்கும்…
கெடா மந்திரி புசார் முக்ரிஸ் மகாதிரைப் பதவியிலிருந்து வெளியேற்ற கெடா சட்டமன்றத்தில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு கொண்டுவர வேண்டும் அல்லது கெடா அரசப்பேராளர் மன்றம் அதன் அதிகாரத்தைப் பயன்படுத்தி அவரைப் பதவிநீக்கம் செய்ய முடியும். மாநிலச் சட்டமன்றக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தால் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை வைத்துத்தான் முக்ரிசின் நிலையைத் …
கெடா எம்பி முக்ரீஸை பதவியிலிருந்து வெளியேற்ற அம்னோவின் வெளிப்படையான போர்!
கெடா மாநில மந்திரி புசார் முக்ரீஸ் மகாதிரை அவரது பதவியிலிருந்து அகற்றுவதற்கான நடவடிக்கைகள் இப்போது முடுக்கிவிடப்பட்டுள்ளன. மாநில மந்திரி புசார் முக்ரீஸுக்கு எதிரான வெளிப்படையான போரை கெடா அம்னோ துணைத் தலைவர் அஹமட் பாஷா ஹனிப் இன்று தொடங்கினார். மாநில அம்னோ உறுப்பினர்கள் கெடா மாநில மந்திரி…


