அம்பிகா: என்எஸ்சி சட்டவரைவை நியாயப்படுத்த ஜகார்த்தா தாக்குதல் ‘வசதியாக’ போய்…

“அரசமைப்புக்கு  விரோதமான”  தேசிய  பாதுகாப்பு  மன்ற  சட்டவரைவை  நியாயப்படுத்துவதற்கு  கடந்த  வாரம்   நிகழ்ந்த  ஜகார்த்தா  பயங்கரவாதத்  தாக்குதலைச்  சுட்டிக்காட்டுவது  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்குக்கு  “வசதியாக”ப்  போய்  விட்டது  என்கிறார்   வழக்குரைஞர்  மன்ற  முன்னாள்  தலைவர்  அம்பிகா  ஸ்ரீநிவாசன். TakNakDictator  கூட்டமைப்பின்  சார்பில்  விடுத்துள்ள  ஊடக  அறிக்கையில்  என்எஸ்சி …

ஹாஷிம் அப்துல்லா இசி-இன் அடுத்த தலைவர்

தேர்தல்  ஆணைய(இசி)த்தின்   புதிய  தலைவராக  ஹாஷிம்  அப்துல்லா  பெயர்  குறிப்பிடப்பட்டிருக்கிறார். இப்போதைய  தலைவர்  அப்துல்  அசீஸ்  முகம்மட்  யூசுப்  இம்மாதம்  பணி  ஓய்வு  பெறுகிறார். ஜனவரி  24-இல்  ஹாஷிம்  தலைவர்  பதவியை  ஏற்பார்  என  பெர்னாமா  கூறிற்று. ஹாஷிம்  இப்போது  அவ்வாணையத்தின்  துணைத்  தலைவராக  இருக்கிறார்.  2014  செப்டம்பரிலிருந்து …

மகாதிர்: நஜிப்பை அகற்றும் முயற்சியைக் கைவிட மாட்டேன்

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்    அவரது  நிலையை  வலுப்படுத்திக்  கொண்டிருப்பதுபோல்  தோன்றினாலும்  அவரைப் பதவியிலிருந்து  அகற்றும்  முயற்சியைக்  கைவிடுவதில்லை  என்பதில்  உறுதியுடன்  இருக்கிறார்  டாக்டர்  மகாதிர்  முகம்மட். “அதை  நான் கைவிடவில்லை.  ஏனென்றால்  அது  முக்கியமான  ஒன்று. “நஜிப்பின்  ஆட்சியில்  பொருளாதாரம்,  அரசியல்,  அறிவியல்,  தொழில்நுட்பம்,  அறிவு  எல்லாமே …

பத்துமலை தைப்பூசத்தில் பாதுகாப்புக்கு போலீஸ் உத்தரவாதம்

வார  இறுதியில்  பத்துமலை  தைப்பூசத்  திருவிழாவுக்கு  பக்தர்கள் பயமின்றி   போய்வரலாம்  என  சிலாங்கூர்  போலீஸ்   உத்தரவாதம்  அளித்துள்ளது. பத்துமலை  ஸ்ரீசுப்ரமணியர்  சுவாமி  ஆலயத்தில்  ஜனவரி  15-இலிருந்து  போலீசார்  காவல்  பணியில்  ஈடுபட்டிருப்பதாக  சிலாங்கூர்  போலீஸ்  படைத்  தலைவர்  அப்துல்  சமா  மாட்  கூறினார். ஜனவரி  24வரை  காவல்  பணி …

பாஸ்-அம்னோ ஒத்துழைப்புக்கு கேவியஸ் வரவேற்பு

மைபிபிபி  தலைவர்  எம். கேவியஸ்,  பாஸும்  அம்னோவும்  ஒத்துழைப்பதை  ஆதரிக்கிறார்.  நாட்டில்  இன  ஒற்றுமைக்கும்  அரசியல்  நிலத்தன்மைக்கும்  பாஸ்-அம்னோ  ஒத்துழைப்பு  தேவை  என்கிறார் அவர். அது  ஒற்றுமையை,  குறிப்பாக  மலாய்க்காரரிடையே  ஒற்றுமையை  வலுப்படுத்தி  வருங்காலத்தில்  நாடு  மேலும்  முன்னோக்கிச்  செல்ல  உந்துவிசையாக  விளங்கும். “சாத்தியமானால்,  அரசியல்   நிலைத்தன்மையின்  பொருட்டு …

வீழ்ச்சியைத் தடுக்க விரைந்து செயல்படுவீர்: ஆட்சியாளர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் வலியுறுத்து

முகைதின்  யாசின்,   தெங்கு  ரசாலி  ஹம்சா  போன்ற  அம்னோ  அரசியல்வாதிகளும்  மலாய்  ஆட்சியாளர்களும்  விரைந்து  செயல்பட்டு  நாடும்  நாட்டின்  பொருளாதாரமும்  மேலும்  வீழ்ச்சியடைவதைத்  தடுத்து  நிறுத்த  வேண்டும்  என     மூத்த  செய்தியாளர்  ஏ.காடிர்  ஜாசின்  கேட்டுக்கொண்டிருக்கிறார். 2013  பொதுத்  தேர்தலுக்குப்  பின்னர்  பல  முறைகேடுகளை  எதிர்நோக்கிவரும்  பிரதமர்  நஜிப் …

1எம்டிபி-இன் பண்டார் மலேசியா விற்பனைக்கு எதிராக ரபிஸி போர்க்கொடி

1எம்டிபி,  பண்டார்  மலேசியா  பங்குகளை  IWH-CREC (இஸ்கண்டர்  மலேசியா  ஹோல்டிங்ஸ்- சீன ரயில்வே  எஞ்சினியரிங்  கார்ப்பரேசன்) குழுமத்துக்கு  விற்பதைத்  தடுக்கும்  முயற்சியில்  பிகேஆர்  உதவித்  தலைவர்  ரபிஸி  ரம்லி  முழுமூச்சாக  இறங்கியுள்ளார். அந்த  விற்பனைக்கு  அனுமதி  அளிக்க  வேண்டாம்  என்று  கேட்டுக்  கொண்டு  தாபோங்  ஹாஜி(டிஎச்)க்கும்   பணிஓய்வு  நிதி …

டிபிபிஏ-எதிர்ப்புப் பேரணியில் பெர்சேயும் இணைகிறது, பேரணி பெர்சே4-கை விட பெரிதாக…

சனிக்கிழமை  கோலாலும்பூர்  டாட்டாரான்  மெர்டேகாவில்,  பசிபிக்  மண்டல  வர்த்தகப்  பங்காளித்துவ  ஒப்பந்த(டிபிபிஏ)த்துக்கு  எதிரான  கண்டனப்  பேரணியில்  பெர்சேயும்  சேர்ந்துகொள்ளும். இதனைத்  தெரிவித்த  பெர்சே  தலைவர்  மரியா  சின்  அப்துல்லா,  அது  ஆகஸ்ட்  மாதம்  நடைபெற்ற  பெர்சே 4  பேரணியைவிடப்  பெரிதாக  இருக்கும்  என்றார். பந்தா டிபிபிஏ  என்னும்  என்ஜிஓ-களின் …

ஜகார்த்தாவில் மகளிர்-மட்டும் போக்குவரத்துச் சேவை கொடிகட்டிப் பறக்கிறது

10  மில்லியன்  பேர்  வாழும்  ஜாகார்த்தாவில்  மகளிர்-மட்டுமே  போக்குவரத்துச்  சேவைகள்  நல்ல  வரவேற்பைப்  பெற்றுள்ளன. பெண்கள்  இவற்றில் பயணம்  செய்வது  வசதியாகவும்  இருக்கிறது.  பாதுகாப்பாகவும்  இருக்கிறது. லேடிஜெக்கும்  சிஸ்டர்  ஓஜெக்கும்  மகளிர்-மட்டும்  டெக்சி  சேவையைத்  தொடங்கி  நான்கு  மாதங்கள்தான்  ஆகின்றன.  ஆனால்,  தொழில்  அருமையாக  நடக்கிறது. “பொது  மினிவேன் …

சிங்கப்பூரில் ரிம1.2 மில்லியன் திருடிய பணிப்பெண்ணுக்குச் சிறை

வேலை  செய்த  வீட்டில்  நகைகளும்  ரொக்கமுமாக  ரிம1,220,000  களவாடிய  பணிப்பெண்னுக்கு  சிங்கப்பூர்  நீதிமன்றம்  இரண்டரை  ஆண்டுச்  சிறைத்  தண்டனை  விதித்தது. பிலிப்பீன்ஸ்  நாட்டைச்  சேர்ந்தவரான  மேரி  ஜேன்  இம்போர்டண்ட்  எஸ்கலானா,48, 2014க்கும்  2015  அக்டோபருக்குமிடையில்  அந்தத்  திருட்டை  நடத்தியதாக  த  ஸ்ரேய்ட்ஸ்  டைம்ஸ்  கூறியது. எஸ்கலானா திருடிய  நகைகளை …

தேச நிந்தனை வழக்கை இரத்துச் செய்ய இராயர் கோரிக்கை

ஸ்ரீடெலிமா   சட்டமன்ற  உறுப்பினர் ஆர்.எஸ்.என். இராயரின்  வழக்குரைஞர்  கோபிந்த்  சிங்  டியோ,  தம்  கட்சிக்காரர்மீது சுமத்தப்பட்டுள்ள  தேச  நிந்தனைக்  குற்றச்சாட்டை  ஆட்சேபித்து  அவர்மீதான  வழக்கைத்  தள்ளுபடி  செய்ய  வேண்டுமென  பினாங்கு  செஷன்ஸ்  நீதிமன்றத்தில்  வாதிட்டார். 2014,  மே  மாதம்  சட்டமன்றத்தில்  “செலாக்கா”  என்ற  சொல்லைப்  பயன்படுத்தியதற்காக  இராயர்மீது  தேச …

செகாமாட் மருத்துவனை குளிரூட்டி பழுதுபார்க்கப்பட்டது

செகாமாட்  மருத்துவமனையின்  சிசு  தீவிரக்  கவனிப்புப்  பிரிவில் ஜனவரி  9-இலிருந்து  சரியாக  வேலை  செய்யாதிருந்த  குளிரூட்டி  சரிசெய்யப்பட்டது. இப்போது  அம்மருத்துவமனையில்  குளிர்சாதன  வசதி   நன்கு  செயல்படுவதாக  சுகாதார  அமைச்சர்  டாக்டர்  எஸ். சுப்ரமணியம்  கூறினார். “அரசாங்க   மருத்துவமனைகளில்  தொழில்நுட்ப  அல்லது  பராமரிப்புப்  பிரச்னைகள்   ஏற்படும்போது  அவற்றைச்  சரிசெய்து    நோயாளிகளுக்குப் …

மத மாற்று விவகாரங்களில் சுப்ரமணியம் உண்மையைச் சொல்கிறாரா?, குலா கேட்கிறார்

  சிவில் சட்டப்படி திருமணம் புரிந்துகொண்ட தம்பதிகளுக்கிடையில் மத மாற்றம் காரணமாக ஏற்படும் குழந்தை பராமரிப்பு தகராறு சிவில் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட வேண்டும் என்று அமைச்சரவை கொள்கையளவில் மீண்டும் தெரிவித்திருப்பதாக சுகாதார அமைச்சர் டாக்டர் எஸ். சுப்ரமணியம் மீண்டும் கூறியுள்ளது குறித்து டிஎபி ஈப்போ பாரட் நாடாளுமன்ற…

டிபிபிஏ தொடர்பில் புத்ரா ஜெயா மலாய் ஆட்சியாளர்களின் ஆலோசனையை நாட…

அரசாங்கம்  பசிபிக்  மண்டல  வர்த்தகப்  பங்காளித்துவ  ஒப்பந்தத்தை  ஏற்பதற்குமுன்  ஆட்சியாளர்  மன்றத்தின்  ஆலோசனையை  நாடுவது  நல்லது  என்கிறது  மலாய் வர்த்தக,  தொழிலியல்  சங்கங்களின்  சம்மேளனம்(டிபிஎம்எம்). டிபிபிஏ  நாட்டின்  இறையாண்மையைப்  பாதிக்கக்கூடியது  என்பதால்  அவ்வாறு  செய்வது  அவசியம்  என   டிபிஎம்எம்  தலைவர்  சைட்  அலி  அலாட்டாஸ்  கூறினார். அதை  நாடாளுமன்றமே…

ரிம2.6பி. எஸ்ஆர்சி புலனாய்வு மீதான விசாரணை அறிக்கைகள் எம்ஏசிசி-க்கே திரும்ப…

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  சம்பந்தப்பட்ட  இரு  விவகாரங்கள்  மீதான  விசாரணை  அறிக்கைகள்  மேலும் விளக்கம்  கேட்டு  திருப்பி  அனுப்பப்பட்டதாக  சட்டத்துறைத்  தலைவர்  முகம்மட்  அபாண்டி  அலி  இன்று  கூறினார். நஜிபின்  வங்கிக்  கணக்கில்  இருந்த  ரிம2.6 பில்லியன்,  1எம்டிபி  துணை  நிறுவனம்  எஸ்ஆர்சி  இண்டர்நேசனல்  மூலமாக  நஜிப்பிடம் …

பயங்கரவாதத்துக்கு எதிராக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது- பிரதமர்

அரசாங்கம்  பாதுகாப்பை  முடுக்கிவிடும்படி  உத்தரவிட்டிருப்பதாக  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  கூறினார். “உலகின்  முக்கிய  நகரங்களில்  பயங்கரவாதத்  தாக்குதல்கள்  நிகழ்ந்துள்ளதை  அடுத்து  மலேசியாவில்  பயங்கரவாத  அச்சுருத்தல்  எழுமானால்  அதைச்  சமாளிக்கும்  வகையில்  நடவடிக்கைகளை  முடுக்கி  விடும்படி  அரசாங்கம்  பாதுகாப்புப்  படைகளுக்கு  உத்தரவிட்டுள்ளது”, என  நஜிப்  தம்  வலைப்பதிவில்  பதிவிட்டிருந்தார்.…

அம்பாங்கில் ஐஎஸ் ஆள் என்ற சந்தேகத்தின்பேரில் ஒருவர் கைது

போலீசார்  நேற்று  அம்பாங்கில்  ஐஎஸ்  தொடர்புள்ளவர்  என்ற  சந்தேகத்தின்பேரில் ஒருவரைக்  கைது  செய்தனர். இன்ஸ்பெக்டர்- ஜெனரல்  அப்  போலீஸ்  காலிட்   அபு  பக்கார்  இன்று  காலை  டிவிட்டரில்  இதைத்  தெரிவித்தார். “அம்பாங், ஜெலதேக்  எல்ஆர்டி-இல்  ஐஎஸ்  தொடர்புள்ளவர்  என்ற  சந்தேகத்தின்பேரில்  ஓர்  ஆடவரைக்  கைது  செய்த  சிறப்புப் பிரிவு …

ஊடகங்களிடம் நட்பாக நடந்து கொள்ள வேண்டும்-வான் ஜூனாய்டி

இயற்கைவள,  சுற்றுச்சூழல்  அமைச்சின்  அதிகாரிகள்,  அச்சு,  மின்னியல்  ஊடகங்களின்  செய்தியாளர்களை  ஒரு  மிரட்டலாகக்  கருதக்  கூடாது  என்று   அதன்  அமைச்சர்  வான்  ஜூனாய்டி  துவாங்கு  ஜப்பார்  கூறினார். செய்தி  வெளியிடும்  செய்தியாளர்கள்  தங்கள்  கடமையைத்தான்  செய்கிறார்கள். “நடப்புகளை  எப்படிப்  பார்க்க்கிறார்களோ  அப்படித்தான்  செய்தியாளர்கள்  அறிவிப்பார்கள். அதில் ஏதாவது  தவறு …

ஜைட்டின் ‘இதயமற்ற நீதிபதிகள்’ கட்டுரை தொடர்பில் ஸ்டார் செய்தி ஆசிரியரிடம்…

முன்னாள்  அமைச்சர்  ஜைட்  இப்ராகிம்  மீதான  விசாரணையின்  ஒரு  பகுதியாக  போலீஸ்,  சண்டே  ஸ்டார்  ஆசியரியர்  எஸ்தர்  இங்-கிடம்  நேற்று  விசாரணை  நடத்தினர். விசாரணை சுமார்  45  நிமிடத்துக்கு  நீடித்ததாக  த  ஸ்டார்  ஆன்லைன்  தெரிவித்தது இங்குடன்  வழக்குரைஞர்  அமிர்  ஹம்சாவும்  சென்றிருந்தார். “போலீசுக்கு  முழு  ஒத்துழைப்பு  கொடுத்தோம்”,…

அமைச்சரவை: சிவில் திருமணப் பிரச்னைகளுக்கு சிவில் நீதிமன்றத்தில்தான் தீர்வு காணப்பட…

சிவில்  சட்டப்படி  திருமணம்  செய்து  கொண்டவர்கள்  அவர்களுக்கிடையிலான  பிரச்னைகளை  சிவில்  நீதிமன்றகளில்தான்  தீர்த்துக் கொள்ள  வேண்டும். புதன்கிழமை  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  தலைமையில்  கூடிய  அமைச்சரவைக்  கூட்டத்தில்  அது  கொள்கை  அளவில்  ஏற்றுக்கொள்ளப்பட்டதாக  சுகாதார  அமைச்சர்  டாக்டர்  எஸ். சுப்ரமணியம்  நேற்றிரவு  பத்து  மலையில்  நடைபெற்ற  பொங்கல் …

ஜிஎஸ்டி-இல் அதிகரிப்பு இல்லை: பிரதமர் உத்தரவாதம்

நாட்டின்  வருமானம்  குறைந்து  கொண்டு  வந்தாலும்  இம்மாதப்  பிற்பகுதியில்  பட்ஜெட்டைத்  திருத்தி  அமைக்கும்போது  பொருள்,  சேவை  வரி(ஜிஎஸ்டி)  அதிகரிக்கப்படாது  எனப்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  இன்று  உத்தரவாதம்  அளித்தார். “ஜிஎஸ்டி  அதிகரிக்கப்பட்டால்  அதை  ஏற்றுக்கொள்ளும்  சக்தி  மக்களுக்கு  இருக்காது. ஜிஎஸ்டி  அதிகரிப்புப்  பற்றி  யோசிக்கவில்லை”, என  இன்று …

ஜாகிம், ஐஎஸ்-எதிர்ப்புப் பிரச்சாரத்தை முடுக்கி விடுகிறது

அண்டை  நாடான  இந்தோனேசியாவில்  இஸ்லாமிய  தீவிரவாதிகளின்  தாக்குதல்  நிகழ்ந்துள்ளதை  அடுத்து  மலேசிய இஸ்லாமிய  மேம்பாட்டுத்  துறை(ஜாகிம்)  ஐஎஸ்- எதிர்ப்புப்  பிரச்சாரத்தை  முடுக்கி  விடும். ஐஎஸ்  அபாயத்தை  விளக்கும்  தகவல்  நடவடிக்கைகளை  ஜாகிம்  தீவிரப்படுத்தும்  என  அதன்  தலைமை  இயக்குனர்  ஒத்மான்  முஸ்டபா  தெரிவித்தார். இதற்காக  நாடு  முழுமையும் இமாம்களை …

பாஸ்: டிபிபிஏ மீது பொது கருத்துக்கணிப்பு தேவை, நாடாளுமன்றச் சிறப்புக்…

பசிபிக் மண்டல  பங்காளித்துவ  ஒப்பந்தம்  மீது  பொதுக்  கருத்துக்கணிப்பு  நடத்தப்படுவதையே   பாஸ்  விரும்புகிறது. அதற்காக  நாடாளுமன்றச்  சிறப்புக்  கூட்டம்  நடத்துவதில்  அக்கட்சிக்கு  உடன்பாடில்லை. “அந்த  ஒப்பந்தத்தில்  கையெழுத்திடுவதா  வேண்டாமா  என்பதை  முடிவு  செய்ய அரசாங்கம்  பொதுமக்களிடம்  கருத்துக்கணிப்பு   நடத்த  வேண்டும்  என  பாஸ்  முன்மொழிகிறது”,என  பாஸ்  துணைத்  தலைவர் …