ஏழைகள் மற்றும் சிறுபான்மையினருக்கான நீதியை அரசாங்கம் ஒருபோதும் விட்டுக்கொடுக்காது, எந்தவொரு இனக்குழு மக்களையும் ஒடுக்குவதை பொறுத்துக்கொள்ளாது என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறினார். "சமீபத்தில் மூன்று இந்திய ஆண்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை, ஒரு விசுவாசியாக, நான் ஏற்றுக்கொள்வது அல்லது மன்னிப்பது கடினம்" என்று அவர் இன்று மலேசிய…
சுல்தான் கடிந்துகொண்டிருப்பதை வைத்து தம்மைக் குற்றம் சொல்வது தவறு என்கிறார்…
மஇகா தலைவர் ஜி.பழனிவேல் தம் நாடாளுமன்றத் தொகுதியில் ஏற்படும் வெள்ளப் பெருக்குப் பிரச்னைகளுக்குத் தீர்வுகாணத் தாம் எதுவும் செய்யவில்லை என்று கூறப்படுவதை மறுக்கிறார். நேற்று பகாங் ஆட்சியாளர் சுல்தான் அஹ்மட் ஷா சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு எதிர்வினையாக அவர் இவ்வாறு கூறினார். “அவர் என்ன செய்தார்? ஒன்றுமே இல்லை......இதுபோன்ற பேரிடர் …
அம்னோ பேராளர்கள் உணர்ச்சிவயப்பட வைக்கும் விவகாரங்களை விலக்கி வைக்க வேண்டும்
அம்னோ ஆண்டுப் பேரவையில் கலந்துகொள்ளும் பேராளர்கள் இனம், சமயம் தொடர்பிலான எளிதில் உணர்ச்சிவசப்படவைக்கும் விவகாரங்களைப் பெரிதுபடுத்திப் பேசாதிருப்பது நல்லது எனத் தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர் அறிவுறுத்தியுள்ளார். உறுப்பினர்களின் தனிப்பட்ட பிரச்னைகளையெல்லாம் பேரவைக்குக் கொண்டுவரக் கூடாது. “தனிப்பட்ட விவகாரங்கள், எளிதில் உணர்ச்சிவசப்பட வைக்கும் இன விவகாரங்கள்,…
பணி நீக்கம் செய்யப்பட்ட 97 தொழிலாளர்களை கேடிஎம்பி மீண்டும் வேலைக்கு…
வேலைநிறுத்த மறியலில் ஈடுபட்டதற்காக பணி நீக்கம் செய்யப்பட்ட 97 தொழிலாளர்களை கேடிஎம்பி மீண்டும் வேலைக்கு எடுத்துக் கொண்டது. ஆனால், அவர்களுடமைய சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. இதில் காரணம் கோரும் கடிதம் பெற்றவர்களும் அடங்குவர் என்று கேடிஎம்பியின் தலைவர் நாவாவி அஹ்மட் கூறினார். ஆனால், அவர்கள் மீண்டும் தங்களுடைய…
வழக்குரைஞர் மன்றம் அரசுக்காக வழக்கு தொடுக்கும் அமைப்பல்ல
வழக்குரைஞர் மன்றம், அது அரசு சார்பாக குற்றவியல் வழக்குகளை நடத்தும் அமைப்பல்ல என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளது. அந்த அமைப்பு பெர்காசா தலைவர் இப்ராகிம் அலிக்கு எதிராக குற்றவழக்கு தொடுக்கும் அதிகாரத்தை சட்டத்துறை தலைவர்(ஏஜி) அப்துல் கனி பட்டேய்லிடம் கேட்டுப்பெற வேண்டும் என பிகேஆர் எம்பி கூய் ஹிசியாவ் லியாங் கூறியிருப்பது…
சிபு எம்பி: மருந்துகளுக்கு ஜிஎஸ்டி வேண்டாமே
குறிப்பிட்ட மருந்துகளுக்கு மட்டுமல்லாமல் எல்லா வகை மருந்துகளுக்கும் பொருள், சேவை வரியிலிருந்து விலக்களிக்கப்பட வேண்டும் என டிஏபி-இன் சிபு எம்பி கேட்டுக்கொண்டிருக்கிறார். இப்போதுள்ள முறைப்படி வரி விதிக்கப்பட்ட மருந்துகளையும் வரியற்ற மருந்துகளையும் பிரித்துப் பார்ப்பது மருந்தகங்களுக்கு சிரமமாக இருக்கும். “அரசாங்கம் 4வது பதிப்பாக வெளிவந்துள்ள தேசிய அத்தியாவசியப் பட்டியலில் …
மலேசிய இந்துக்கள் எதிர்நோக்கும் சவால்கள் பற்றி புதுடில்லி, உலக இந்து…
அனைத்துலக இந்து மாநாடு இம்மாதம் நவம்பர் 21 இருந்து 23 வரை 3 நாட்களுக்கு புதுடில்லியில் நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் பல இந்து அமைச்சர்கள், மாநில ஆளுநர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளவிருக்கின்றனர். இந்த மநாட்டில் கலந்து கொள்ள மலேசியாவில் இருந்து முன்னாள் அமைச்சர் ச.…
வேள்பாரி: மஇகா தலைவர் இனியும் பதவியில் இருக்க தகுதி இல்லை
பகாங் சுல்தானின் கடுங்கோபத்துக்கு ஆளான மஇகா தலைவர் ஜி.பழனிவேல் பதவி விலகுவதே நல்லது. இவ்வாறு வலியுறுத்திய அக்கட்சியின் வியூக இயக்குனர் வேள்பாரி, சுற்றுப்புற அமைச்சராக இருக்கும் தகுதி பழனிவேலுக்கு இல்லை என்றும் கட்சித் தலைவர் என்ற முறையிலும் தவறுக்குமேல் தவறு செய்து வந்திருக்கிறார் என்றும் குற்றச்சாட்டுகளை அடுக்கினார். “பழனிவேல் …
மின் ஆலைத் திட்டங்கள் 1எம்டிபி-க்கு வழங்கப்பட்டிருப்பதால் மின்கட்டணம் உயரலாம்
அரசாங்கம், மின் ஆலைத் திட்டங்களை 1மலேசியா மேம்பாட்டு நிறுவனத்துக்குக் கொடுத்திருப்பதால் எதிர்காலத்தில் மின்கட்டணம் உயரப் போகிறது என பெட்டாலிங் ஜெயா டிஏபி எம்பி டோனி புவா எச்சரிக்கிறார். நெகிரி செம்பிலான், கெடா, மலாக்கா ஆகிய மாநிலங்களில் மூன்று மின் ஆலைகள் அமைக்கும் குத்தகை 1எம்டிபி-க்குக் கொடுக்கப்பட்டுள்ளது. சாபாவில் மேலும் …
காடிர்: அச்ச உணர்வுதான் அம்னோவின் கடைசி ஆயுதம்
அம்னோ, மலாய்க்காரர்களைத் தன் பிடிக்குள் வைத்துக்கொள்ள விரும்பினால் அச்ச உணர்வுதான் அதற்குப் பயன்படக்கூடிய கடைசி ஆயுதமாகும். கடந்த பொதுத் தேர்தலில் மலாய்க்காரர்கள் அம்னோவுக்குத் திரும்பி வந்தார்களென்றால் அதற்கான முக்கிய காரணங்களில் சீனர்கள்மீது அவர்களுக்குள்ள பயமும் ஒன்று என்கிறார் ஏ.காடிர் ஜாசின். “ஜோகூரில் சீன, இந்திய ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கில் தேர்தல் …
இப்ராகிமுக்கு எதிராக வழக்கு தொடுக்கும் அதிகாரத்தை வழக்குரைஞர் மன்றத்துக்குக் கொடுங்கள்
பெர்காசா தலைவர் இப்ராகிம் அலிக்கு எதிராக வழக்கு தொடுக்கும் அதிகாரத்தைச் சட்டத்துறைத் தலைவர்(ஏஜி) அப்துல் கனி பட்டேய்ல் வழக்குரைஞர் மன்றத்துக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அவ்வழக்கை நடத்த எஜி “தயக்கம் காட்டுவது”போல் தெரிவதாக பிகேஆர் எம்பி கூய் ஹிசியாவ் லியோங் கூறினார். “பொதுநலனைக் கருத்திக்கொண்டு இப்ராகிம்மீது வழக்கு …
சரவாக்கில் மின்கட்டணம் குறைகிறது
சரவாக்கில், 2015-இல் வீடுகளுக்கான மின்சாரக் கட்டணம் குறையும் என முதலமைச்சர் அடினான் சாதேம் கூறினார். இதனால் குறைந்த வருமானம் பெறுவோர் அதிக நன்மை அடைவர் என்றாரவர். ஏற்கனவே அம்மாநிலத்தில் 70,000 பேர் கூட்டரசு அரசாங்கத்திடமிருந்து மின்கட்டண உதவித் தொகையாக ரிம20 பெற்று வருகிறார்கள். புதிய திட்டம் அமலுக்கு வரும்போது …
ரயிஸ்: நஜிப்போல் ஜோடிக்கப்பட்ட படம் சமுதாயத்துக்கு எதிரான ஒரு குற்றமாகும்
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் ஒரு இந்து குருக்கள்போல் காட்சியளிக்கும் படத்தைப் பதிவிட்டவர்களை முன்னாள் அமைச்சர் ரயிஸ் யாத்திம் கண்டித்தார். அச்செயல், “சமுதாயத்தின் சிந்தனை நோயுற்றிருப்பதைப் பிரதிபலிக்கிறது” என்றார். இதற்கெதிராக பள்ளிகளிலும் இதர கல்விக் கழகங்களிலும் அறநெறிகள் கற்றுத்தரப்பட வேண்டும் என முன்னாள் தகவல், தொடர்பு அமைச்சருமான அவர் …
ரோன்95 விலை குறைவதாக அம்னோ பேரவையில் அறிவிப்பீர்
அடுத்த வார அம்னோ பேரவையில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் ரோன்95 மற்றும் டீசல் விலைகள் குறைக்கப்படுவதாக அறிவிக்க வேண்டும். தவறினால் டிசம்பர் 31-இல் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை எதிர்நோக்க வேண்டியிருக்கும். இவ்வாறு எச்சரித்த பாண்டான் எம்பியும் பிகேஆர் தலைமைச் செயலாளருமான ரபிஸி ரம்லி, அம்னோ தலைவர் அவ்வாறு அறிவிப்பது…
எம்ஏசிசி அதிகாரிகளைத் தண்டிக்கச் சொல்லி தியோ குடும்பத்தினர் நஜிப்புக்குக் கோரிக்கை
தியோ பெங் ஹொக்-கின் இறப்புக்குக் காரணமானவர்களைப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் டிஏபி எம்பிகள் உள்பட, 40-க்கு மேற்பட்டவர்கள் இன்று நாடாளுமன்றத்தின் நுழைவாயிலில் ஆர்ப்பாட்டம் செய்தனர். அவர்கள், தியோவின் இறப்பில் சம்பந்தப்பட்டவர்கள் என்று சொல்லப்படும் மூன்று அதிகாரிகளின் -சிலாங்கூர் எம்ஏசிசி விசாரணைப் பிரிவுத் …
ஐஜிபி: அமைச்சரின் கூற்றை மறுக்கிறேன்; சாபாவில் எல்லாம் பாதுகாப்பாகவே உள்ளது
சாபாவில் நிலவரம் பாதுகாப்பாக இல்லை என்று சுற்றுலா, பண்பாட்டு அமைச்சர் முகம்மட் நஸ்ரி அசீஸ் கூறியிருப்பதை இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீஸ் காலிட் அபு பக்கார் ஒத்துக்கொள்ளவில்லை. அதற்கு மாறாக, அடிக்கடி கடத்தல் சம்பவங்கள் நிகழ்ந்த நிலை மாறி இப்போது அம்மாநிலம் பாதுகாப்பாக உள்ளது, சுற்றுப்பயணிகளும் தொடர்ந்து குவிகிறார்கள…
மலேசிய தினம் பற்றி அறியாதிருக்கிறதே: டிஏபி-யைச் சாடுகிறார் ஷப்ரி
டிஏபி-யும் அதன் எம்பிகளும் மலேசிய தினம் என்றால் என்ன, சுதந்திர தினம் என்றால் என்ன என்பதை “அறியாதவர்களாக” இருக்கிறார்களே என்று தொடர்பு, பல்லூடக அமைச்சர் ஷப்ரி சிக், அங்கலாய்த்துக் கொள்கிறார். இன்று நாடாளுமன்றத்தின் கேள்வி நேரத்தின்போது சுதந்திர தினத்தைவிட தேசிய நாளைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்று லிம் …
இந்தியா, புதுடில்லியில் உலக ஹிந்து மாநாடு
உலகின் மூத்த சமயத்தினர் ஹிந்துக்கள். பெரும்பாலான ஹிந்துக்கள் பாரத தேசத்தில் இருப்பினும் உலகெங்கும் ஹிந்துக்கள் வாழ்கின்றனர். அந்நிலையில், உலக ஹிந்து பேரவை ஓர் அதிகாரப்பூர்வ இயக்கமாக இல்லாமல், உலக ஹிந்துக்களை ஒன்றிணைக்கும் ஒரு தளமாக இயங்கி வருகின்றது. ஆகவே, உலகை ஹிந்துக்களின் ஒருமித்த சிந்தனை மற்றும் செயல்பாட்டினை…
நஜிப்பை இந்து குருக்கள்போல் காண்பிக்கும் படம் குறித்து போலீசில் புகார்
முகநூலில், பிரதமர் நஜிப் அவ்துல் ரசாக்கை ஓர் இந்து குருக்கள்போல் காண்பிக்கும் படம் போடப்பட்டிருப்பதைக் கண்டு சினமடைந்துள்ளது மலாய் உரிமைக்காக போராடும் என்ஜிஓ-வான மர்டாபாட் ஜலினான் முஹிப்பா மலேசியா (எம்ஜேஎம்எம்). ‘பொலேலாந்த்’ முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ள அப்படம் பற்றி எம்ஜேஎம்எம் நேற்று போலீசில் புகார் செய்தது. அப்படத்தில் நஜிப்பின் …
சீனப் பள்ளிகளை மூடவேண்டும் என்ற ‘மடத்தனமான கூக்குரலை’ நிறுத்துவீர்
குறுகிய-மனமும், அறியாமையும் கொண்ட அரசியல்வாதிகள் சீனமொழிப் பள்ளிகளை இழுத்து மூடச் சொல்லி “மடத்தனமாக கோரிக்கைகள் " விடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என மசீச கேட்டுக்கொண்டிருக்கிறது. கேட்பதற்கு ஆள் இல்லையென்பதால் துணிச்சல்பெற்றுள்ள “பொறுப்பற்ற” அரசியல்வாதிகள் சிலர், சீனப்பள்ளிகள்(எஸ்ஜேகேசி) தேசிய ஒற்றுமைக்குத் தடையாக இருப்பதாகக் கூறிக்கொண்டு அவற்றை ஒழித்துக்கட்ட வேண்டும் என வலியுறுத்தி …
அமைச்சர்களே, உங்களுடையப் பிள்ளைகள் தேசியப்பள்ளியில் படிக்கிறார்களா?, லிம் கேட்கிறார்
அமைச்சர்கள் தங்களுடைய பிள்ளைகளும், பேரப்பிள்ளைகளும் தேசிய கல்வி அமைவுமுறையின் கீழ் பயின்றவர்களா என்பதை வெளிப்படுத்த வேண்டும் என்று டிஎபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் கேட்டுக்கொண்டார். கல்விக்காக பெருஞ்செலவு செய்யும் நாடு என்ற வசைப்பெயரைப் பெற்றிருந்த போதிலும் நாட்டின் அரசாங்கம் மற்றும் அரசியல் தலைமைத்துவம் இந்நாட்டின்…
இண்ட்ராப்: ஆசிரமத்தைத் தேசிய பாரம்பரிய சின்னமாக உடனே அறிவிப்பீர்
அரசாங்கம் 30-நாள் அறிவிக்கை கொடுத்துக் காத்திராமல் இப்போதே விவேகானந்தா ஆசிரமத்தைத் தேசிய பாரம்பரிய சின்னமாக அரசிதழில் பதிவு செய்ய வேண்டும் என இண்ட்ராப் கேட்டுக்கொண்டிருக்கிறது. அரசிதழில் பதிவுசெய்ய ஆவன செய்யப்படும் எனச் சுற்றுலா அமைச்சர் நஸ்ரி அப்துல் அசீஸ் கூறியதை வரவேற்கும் இண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி, அமைச்சர் உடனடியாக …
நிலச் சரிவுகளுக்கு அன்னிய தொழிலாளர்களே காரணம் என்று கூறுவதை நிறுத்துங்கள்
கேமரன் மலையில் வெள்ளங்களும் நிலச் சரிவுகளும் ஏற்பட அன்னிய தொழிலாளர்கள்தாம் காரணம் என்று சொல்லிக் கொண்டிருப்பதைத் துணைப் பிரதமர் முகைதின் யாசின் நிறுத்த வேண்டும் எனத் தொழிலாளர் உரிமைக்காக போராடும் என்ஜிஓவான தெனாகானிதாவும் மலேசிய சோசலிசக் கட்சியும் கோரிக்கை விடுத்துள்ளன. அன்னிய தொழிலாளர்கள்மீதுள்ள வெறுப்பின் காரணமாகத்தான் அவர் அவ்வாறு …
பாஸ்: டிஏபி வேண்டுமானால் பக்கத்தானிலிருந்து விலகலாம்
பாஸ் கட்சியை பக்கத்தான் கூட்டணியிலிருந்து விலக்க முயற்சி செய்வதை விடுத்து டிஏபி வேண்டுமானால் அக்கூட்டணியிலிருந்து விலகிக் கொள்ளலாம் என கிளந்தான் துணை மந்திரி புசார் நிக் அமார் அப்துல்லா கூறினார். பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங் பக்கத்தான் தலைமைத்துவ மன்றக் கூட்டங்களில் கலந்துகொள்வது அவசியம் என டிஏபி …


