இயக்குநர் ஜெனரல் சிராஜுத்தீன் சுஹைமி கூறுகையில், இதுபோன்ற நடத்தையை இயல்பான ஒன்றாக ஏற்றுக்கொள்ளச் செய்யும் எந்தவொரு முயற்சியையும் ஜாகிம் மற்றும் மாநில இஸ்லாமிய சமய அதிகாரிகள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். ஜாக்கிம் (JAKIM) தலைமை இயக்குநர் சிராஜுதீன் சுஹைமீ, இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த மாநில இஸ்லாமிய சமய…
அஸ்மின்: ஆண்டு இறுதி வாக்கில் நாட்டின் தலைமை மாறலாம்
சிலாங்கூர் மந்திரி புசார் அஸ்மின் அலி ஆண்டு இறுதிக்குள் நாட்டின் உயர்த் தலைமைத்துவம் மாறும் என்று நம்புகிறார். நாடாளுமன்றத்தில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதில் பிஎன் எம்பிகளுடன் சேர்ந்து கொள்வாரா என்று வினவப்பட்டதற்கு அஸ்மின் இவ்வாறு கூறினார். “இப்போது பக்கத்தான் ரக்யாட் …
பெர்சே நஜிப்புக்கு எதிரான நம்பிக்கையில்லா வாக்கெடுப்புக்கு வலு சேர்க்கும்
பிஎன் எம்பிகளும் எதிரணி எம்பிகளும் சேர்ந்து பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கு எதிராக நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு கொண்டுவரும் திட்டம் இப்போதைக்கு வேண்டுமானால் சாத்தியமற்ற ஒன்றாக தோன்றலாம். ஆனால், வாரக் கடைசி பெர்சே 4 பேரணிக்குப் பிறகு நிலமை மாறலாம் என்கிறது எக்கோனமிஸ்ட் சஞ்சிகை. நஜிப்பை வெளியேற்றும் மற்ற வழிகள் …
ரிம2.6 பில்லியனில் பெரும்பகுதியைத் திரும்பப் பெற வேண்டும்: நஜிப் மீது…
அம்னோவைப் பிரதிநிதிப்பதாகக் கூறிக்கொள்ளும் கட்சி உறுப்பினர் ஒருவர், கட்சித் தலைவர் நஜிப் அப்துல் ரசாக்குக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளார். அதில் அவர், கட்சிக்குக் கொடையாக வழங்கப்பட்ட ரிம2.6 பில்லியனில் வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டதாகக் கூறப்படும் பணத்தில் பெரும்பகுதியை மீட்டெடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். நஜிப்பின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் …
‘1எம்டிபி பற்றிப் பேச அஞ்சேன்’, முன்னாள் எஸ்பி அதிகாரி
போலீஸ் சிறப்புப் பிரிவு முன்னாள் துணை இயக்குனர் அப்துல் ஹமிட் படோர், அப்பிரிவிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்டது பற்றிச் செய்தியாளர்களிடம் பேசியதற்காக என்ன தண்டனை கொடுக்கப்பட்டாலும் ஏற்கத் தயாராக உள்ளார்.. “கொஞ்சம்கூட அஞ்சவில்லை. “எந்தத் தண்டனை என்றாலும் ஏற்கத் தயார். நான் ஒரு போலீஸ் அதிகாரி. அதற்குரிய கண்ணியத்துடன் நடந்து …
பெர்சே 4 பேரணியை ஊக்குவிக்கும் இணையத்தளங்கள் முடக்கப்படும்
பெர்சே 4 பேரணியை பிரபலப்படுத்தியும் அது பற்றிய செய்திகளை வெளியிட்டும் அதில் சேருமாறு மக்களை ஊக்குவித்தும் வரும் இணையத்தளங்களை மலேசிய தொடர்பு பல்லூடக ஆணையம் (எம்சிஎம்சி) முடக்கும். அந்த இணையத்தளங்களால் நாட்டின் நிலைத்தன்மைக்கு மிரட்டல் ஏற்படலாம் என்று கூறும் உள்துறை அமைச்சின் அறிக்கை ஒன்றை ஆணையம் சுட்டிக்காட்டியது. “எனவே …
அவசரகாலம் பிரகடனப்படுத்தப்பட்டால் பெர்சே 4-இல் இராணுவம் தலையிடும்
அரசாங்கம் அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தினால் வாரக் கடைசியில் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ள பெர்சே பேரணியில் இராணுவம் தலையிடும் என்று ஆயுதப்படைத் தலைவர் சுல்கிப்ளி முகம்மட் ஸின் கூறினார். “அவசரகால நிலை அறிவிக்கப்பட்டால் மட்டுமே ஆயுதப்படை தலையிடும். “பொது ஒழுங்குக்கு மிரட்டல் என்ற நிலைமையில்தான் நிலைமையைக் கட்டுப்படுத்த நாங்கள் போலீசின் பணியை …
சைபுடின்: மாணவர்களுக்கு பெர்சே 4-இல் கலந்துகொள்ள உரிமை உண்டு
முன்னாள் உயர்க் கல்வி துணை அமைச்சர் சைபுடின் அப்துல்லா பல்கலைக்கழக ,மாணவர்கள் பெர்சே 4 பேரணியில் கலந்துகொள்வதைத் தடுக்கும் பல்கலைக்கழகங்களைக் கண்டித்துள்ளார். “சில பல்கலைக்கழகத் தலைவர்கள் அம்னோ தலைவர்கள்போல் நடந்து கொள்கிறார்கள். மாணவர்கள் பெர்சே 4 பேரணியில் கலந்துகொள்ளக் கூடாது என்று அறிக்கை விட வேண்டியதில்லையே. “அது அவர்களை…
காடிர்: பெர்சே 4ஆல் நஜிப்பை வெளியேற்ற முடியாது
மக்களோ நாடாளுமன்றமோ விரைவில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைப் பதவியிலிருந்து வெளியேற்றும் என்பது நடவாத காரியம் என்கிறார் நியு ஸ்ரேய்ட்ஸ் முன்னாள் தலைமை செய்தியாசிரியர் ஏ. காடிர் ஜாசின். வார இறுதியில் நடக்கும் பெர்சே பேரணிக்கு எவ்வளவுதான் மக்கள் ஆதரவு தந்தாலும் அது நடக்காது. “நஜிப்பைக் கவிழ்ப்பதுதான் பெர்சே-இன் …
மலேசியத் தலைநகரிலும் சுற்றுப்புறத்திலும் புகைமூட்டம்
அண்டை நாடான இந்தோனேசியாவில் காடுகள் எரிக்கப்படுவதால் மலேசியத் தலைநகரமும் தீவகற்பத்தின் பல பகுதிகளும் புகைமூட்டத்தில் மூழ்கிக் கிடப்பதாக சுற்றுசூழல், வானிலை ஆய்வுத் துறை தெரிவித்தது. புகைமூட்டம், செப்டம்பர் நடுப்பகுதியில் மொன்சூன் பருவ நிலை முடிவுக்கு வரும் வரையில் நீடிக்கும் என மலேசிய வானிலை ஆய்வுத் துறை பேச்சாளர் ஹிஷாம் …
பெர்சே-எதிர்ப்புக் குழுவிடம் போலீஸ் விசாரணை
சிவப்புச் சட்டை அணிந்த பெர்சே- எதிர்ப்புக் குழுவினரை போலீசார் விசாரணைக்கு அழைத்துள்ளனர். செவ்வாய்க்கிழமை அவர்கள் சோகா பேரங்காடிக்கு முன்புறத்தில் ஒன்றுதிரண்டது பற்றி அவர்களிடம் விசாரிக்கப்படும். “அதன் ஏற்பாட்டாளர்களும் அதில் கலந்துகொண்டவர்களும் இன்று மூன்று மணிக்கு டாங் வாங்கிக்கு அழைக்கப்பட்டு அவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படும்” என்று டாங் வாங்கி …
அம்பிகா: தலைவர்கள் தருவது குப்பைகள், பெர்சே அளிப்பது நம்பிக்கை!
இந்நாட்டில் மக்களின் உரிமைகள் குறித்து ஆட்சியில் அமர்ந்திருக்கும் தலைவர்களுக்கு நினைவூட்ட நடத்தப்படும் மக்கள் பேரணி என்றால் அது பெர்சே இயக்கம் நடத்தும் பேரணிதான். பெர்சேயின் ஏற்பாட்டில் ஆகஸ்ட் 29-30 இல் நடக்கவிருக்கும் பெர்சே 4 பேரணி தலைவருகளுக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்பேரணி அரசாங்கத்தைக் கவிழ்க்கும் நோக்கம் கொண்டது என்று…
மலேசியர்கள் முட்டாள்கள் என்று எண்ணாதீர், நஜிப்புக்கு மகாதிர் அறிவுரை
பிரதமர் நஜிப்பும் அவருடைய ஆதரவாளர்களும் மலேசியர்கள் முட்டாள்கள் என்ற எண்ணம் கொண்டிருப்பதை நிறுத்த வேண்டும் என்று மகாதிர் கூறுகிறார். நஜிப்பின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் போடப்பட்ட ரிம2.6 பில்லியன் ஒரு நன்கொடை என்று மலேசியர்களை நம்பவைக்கும் முயற்சிகளை கைவிட வேண்டும் என்று மகாதிர் அவரது அகப்பக்கத்தில் எழுதியுள்ளார்.…
போலீஸ் படைத் தலைவருக்கு உயர் அதிகாரிகளை மாற்றும் அதிகாரம் கிடையாது
போலீஸ் படைத் தலைவர் ஏஎஸ்பி பதவிக்குக் கீழே உள்ளவர்களைத்தான் இடமாற்றம் செய்ய முடியும். அதற்குமேலே உள்ளவர்களை இடமாற்றம் செய்ய போலீஸ் ஆணையத்தின் ஒப்புதல் தேவை என்கிறார் முன்னாள் இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீஸ் மூசா ஹசான். போலீஸ் சிறப்புப் பிரிவு துணைத் தலைவரான போலீஸ் துணை ஆணையர் அப்துல் …
பெர்சே: டட்டாரானுக்குள் செல்லவில்லை. பிறகு ஏன் டிபிகேஎல் அனுமதி?
தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெர்சே, டட்டாரான் மெர்டேகாவில் பெர்சே 4 பேரணி நடத்தப்படவில்லை என்பதால் அதன் உரிமையாளரின் அனுமதியைப் பெற வேண்டிய அவசியமில்லை எனக் கூறியுள்ளது. இதை கோலாலும்பூர் மாநகர் மன்றத்திடமும் (டிபிகேஎல்) தெளிவுபடுத்தியிருப்பதாக பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லா தெரிவித்தார். “நாங்கள் டட்டாரான் மெர்டேகாவுக்குள் நுழையப் …
நஜிப்பின் ரிம2.6 பில்லியனுக்கும் 1எம்டிபி-க்கும் தொடர்புண்டு: மகாதிர் உறுதி
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் சொந்த வங்கிக் கணக்கில் போடப்பட்ட ரிம2.6 பில்லியனுக்கும் அரசாங்கத்துக்குச் சொந்தமான முதலீட்டு நிறுவனமான 1எம்டிபி-க்கும் தொடர்பு உண்டு என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் உறுதியாக நம்புகிறார். அப்பணத்துக்கும் 1எம்டிபிக்கும் சம்பந்தமில்லை அது ஒரு நன்கொடை என்று மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம்…
ஊழல்-எதிர்ப்பு மாநாட்டைப் பிரதமர் தொடக்கிவைக்க மாட்டார்
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், அடுத்த வாரம் கோலாலும்பூரில் நடைபெறும் அனைத்துலக ஊழல்- எதிர்ப்பு மாநாட்டைத் தொடக்கிவைக்கப் போவதில்லை. இதனை அம்மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ள மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) உறுதிப்படுத்தியது. பிரதமர்துறை அமைச்சர் பால் லவ்தான் மாநாட்டைத் தொடக்கி வைப்பார் என எம்ஏசிசி துணைத் தலைமை ஆணையர்…
ரஹ்மான்: பெர்சே 4ஆல் பொருளாதாரம் பாதிக்கப்படும்
பெர்சே 4 பேரணியை ஒத்திவைக்க வேண்டும் என நகர்ப்புற நல்வாழ்வு, வீடமைப்பு, ஊராட்சி அமைச்சர் அப்துல் ரஹ்மான் டஹ்லான் வலியுறுத்தினார். பேரணி நடத்தினால் பொருளாதாரம்தான் மோசமாக பாதிக்கப்படும் என்றவர் எச்சரித்தார். “பெர்சே நடத்தப்படும் நேரம் சரியல்ல. மலேசியர்களுக்கு பில்லியன் கணக்கில் பண இழப்பும் வேலை இழப்பும் ஏற்பட்டுள்ளது. பொருளாதாரத்…
போலீசாரின் இரட்டை நியாயம்: கெராக்கான் இளைஞர் பகுதி சாடல்
நேற்றிரவு நாடாளுமன்றத்துக்கு வெளியில் ஆர்ப்பாட்டம் செய்த மாணவர்கள் கைது செய்யப்பட்டார்கள். அதேவேளை பெர்சே-எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கைது செய்யப்படவில்லை. ஏன் இந்த இரட்டை நியாயம் என கெராக்கான் இளைஞர் துணைத் தலைவர் எண்டி யோங் கேள்வி எழுப்பியுள்ளார். மாணவர்கள் அமைதியான முறையில் எதிர்ப்பைத் தெரிவிக்கவே நாடாளுமன்றத்துக்குமுன் கூடினார்கள் என …
கேஎல் சிபிஓ: பெர்சே 4 சட்ட விரோதமானது
வார இறுதியில் கூட்டரசுத் தலைநகரில் நடத்தத் திட்டமிடப்பட்டிருக்கும் பெர்சே 4 பேரணி சட்டவிரோதமானது. ஏனென்றால் பேரணி ஏற்பாட்டாளர்கள் 2012 அமைதிப்பேரணிச் சட்டத்தில் காணப்படும் ஒரு நிபந்தனையை நிறைவேற்றத் தவறிவிட்டனர். அச்சட்டத்தின் பகுதி 9-இன்படி ஏற்பாட்டாளர்கள் எங்கு பேரணி நடத்த நினைக்கிறார்களோ அதற்கு அந்த இடத்தின் உரிமையாளர்களின் அனுமதியைப் பெற்றிருக்க …
பகாங் எம்பியும் எக்ஸ்கோவும் சொத்து விவரத்தை அறிவிப்பர்
பகாங் மந்திரி புசாரும் அம்மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் 11 பேரும், விரைவில் தங்கள் சொத்து விவரங்களை அறிவிப்பார்கள். ஊழல் எதிர்ப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக அவர்கள் இவ்வாறு செய்கிறார்கள். விரைவில் சொத்து விவரங்களை அறிவிக்கப் போவதாக மந்திரி புசார் அட்னான் யாக்கூப் தெரிவித்தார் என இன்றைய பெரித்தா ஹரியான் …
சிங்கப்பூர் அதிபர் நாடாளுமன்றத்தைக் கலைத்தார்
சிங்கப்பூரில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்தது. இது அந்நாட்டில் விரைவில் பொதுத் தேர்தல் நடக்கப்போகிறது என்பதற்கு அறிகுறியாகும். பிரதமரின் ஆலோசனையின்பேரில் அதிபர் டோனி டான், நாடாளுமன்றத்தைக் கலைத்தார் என அரசாங்க அறிக்கை கூறியது. -ராய்ட்டர்ஸ்
நஜிப்பின் ரிம2.6 பில்லியன் பற்றி விவாதிக்க வழக்குரைஞர் மன்றம் அவசரக்…
வழக்குரைஞர் மன்றம், விசாரணைகளில் நிகழ்ந்துள்ள குறுக்கீடுகள் பற்றி விவாதிப்பதற்காக அவசரக் கூட்டமொன்றை நடத்த முடிவு செய்துள்ளது. அதில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் சொந்தக் கணக்கில் போடப்பட்டதாகக் கூறப்படும் ரிம2.6 பில்லியன் பற்றியும் விவாதிக்கப்படும். கடந்த வெள்ளிக்கிழமை நடந்த ஒரு சிறப்புக் கூட்டத்தில் அவசரக் கூட்டம்(இஜிஎம்) நடத்துவது பற்றி …
ரபிடா: ரிம2.6 பில்லியன் அம்னோவில் அந்நியர் செல்வாக்குக்கு வழிகோலியதா?
முன்னாள் அமைச்சர் ரபிடா அசீஸ், பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், மத்திய கிழக்குக் கொடையாளர் ஒருவர் கொடுத்ததாகக் கூறப்படும் ரிம2.6 பில்லியனைப் பெற்றுக்கொண்டிருப்பது அந்நியர்கள் அம்னோவில் ஆதிக்கம் செலுத்த இடமளித்து விடாதா என்று கேள்வி எழுப்பியுள்ளார். “பிஎன் அரசாங்கத்தின் முதுகெலும்பே அம்னோதான். அம்னோவில் செல்வாக்குடன் இருந்தால் அரசாங்கத்திலும் செல்வாக்கு …


