கோவிட்-19 பெருந்தொற்றைத் தொடர்ந்து தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் மின்சார நுகர்வு கடுமையாகக் குறைந்தது என்ற நிறுவனத்தின் வாதத்தை நீதிபதி தள்ளுபடி செய்தார். "போர்ட் கிள்ளானில் (Port Klang) உள்ள நிறுவனத்தின் வளாகத்தை ஆய்வு செய்தபோது, காணாமல் போன முனைய முத்திரைகள் (terminal seals) மற்றும் கூடுதல் மின்சுற்று (additional circuit)…
ஐஜிபி-க்கு அராஜகவாதிகள் கொலை மிரட்டல்
“அனாக் மலேசியா எண்டி டெமொக்ரசி” என்று தன்னை அழைத்துக்கொள்ளும் ஒரு தரப்பு போலீஸ் படைத் தலைவர் (ஐஜிபி) காலிட் அபு பக்காரைக் கொல்லபோவதாக மிரட்டியுள்ளது. யு-டியுப்பில் முகமூடி அணிந்த மூவர் அம்மிரட்டலை விடுத்தனர். அதில் பேசிய ஒருவர், அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகியவை வளர்ந்த நாடுகளாக மற்றவர்களால் மதிக்கப்படும் …
ரோஸ்மாவின் தலை அலங்காரத்தில் அக்கறை காட்டும் அமட் மஸ்லானுக்குக் கண்டனம்
மக்களுக்குக் கவலைதரும் பிரச்னைகளில் கவனம் செலுத்தாமல் ரோஸ்மாவின் சிகை அலங்காரத்தில் அக்கறை காட்டும் நிதி துணை அமைச்சர் அஹ்மட் மஸ்லானை பிகேஆர் எம்பி நுருல் இஸ்ஸா அன்வார் சாடினார். பிரதமரின் துணைவியார் ரோஸ்மா மன்சூர், வீடு வந்து தலை அலங்காரம் செய்து விடும் சேவைக்கான கட்டணம் ரிம1,200 ஆகக் …
அரச மன்னிப்பு கோருகிறது அன்வாரின் குடும்பம்
குதப்புணர்ச்சி வழக்கு 2 இல் ஐந்தாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள அன்வார் இப்ராகிம் அரச மன்னிப்பு கோருவதற்கான கால அவகாசம் காலாவதியாவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக அவரது குடும்பத்தினர் அவருக்கு அரச மன்னிப்பு கோரும் விண்னப்பத்தை அரண்மனையில் சார்வு செய்தனர். "அரச மன்னிப்புக்கான முறையீடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றங்கள் குற்றவாளி என தீர்ப்பளித்திருக்கலாம்,…
அன்வாருக்கு துணைப் பிரதமர் பதவி: தமக்கு எதுவும் தெரியாது என்கிறார்…
எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு முன்பு துணைப் பிரதமர் பதவி வழங்க நஜிப் முன்வந்ததாக கூறப்படுவது பற்றி தமக்கு எதுவும் தெரியாது என்று துணைப் பிரதமர் முகைதின் யாசின் கூறினார். "அந்த பிரச்சனை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அதைப் பற்றி நாளிதழ்களில் மட்டுமே படித்தேன். "எனினும்,…
அன்வார் அரச மன்னிப்பு கோருவாரா?
குதப்புணர்ச்சி வழக்கு 2 இல் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு ஐந்தாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு சுங்கை பூலோ சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் தண்டனையிலிருந்து விடுபடவும் தமது பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற இருக்கையை வைத்துக்கொள்ளவும் பேரரசரிடம் அரச மன்னிப்பு கோருவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அன்வார்…
ரோஸ்சுக்கு எதிராக மஇகா வழக்கு தொடர்ந்துள்ளது
மஇகாவுக்கு அனுப்பப்பட்டுள்ள உத்தரவுகளை சங்கங்களின் பதிவகம் (ரோஸ்) திரும்பப்பெற வேண்டும் எனக் கோரும் வழக்கு நேற்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கை மஇகாவின் மத்திய செயற்குழுவின் உறுப்பினரும் அதன் வியூக இயக்குனருமான ராமலிங்கம் சங்கங்களின் பதிவகம் மற்றும் அதன் தலைமை இயக்குனர் முகம்மட் ராஸின் அப்துல்லா ஆகியோருக்கு…
முஸ்லிம் சிறுவன்: தந்தைக்கு எதிராக போலீஸ் புகார் செய்ய கட்டாயப்படுத்தப்…
ஒரு 14 வயது பள்ளி மாணவனை அவனது தந்தைக்கு எதிராகப் போலீஸ் புகார் செய்யும்படி அவனை பரோயில் ஓர் இஸ்லாமிய சமய மையத்தின் அறை ஒன்றில் மூன்று மணி நேரத்திற்கு மேலாக அடைத்து வைத்திருந்ததாக அச்சிறுவன் கூறினான். அச்சிறுவனின் இரு ஆசிரியர்கள் அவனின் இந்து தந்தை அவனை…
அம்னோ தலைவர்: ஷாபியின் பிரச்சாரம் எதிர்விளைவை ஏற்படுத்தி விட்டது
அன்வார் இப்ராகிம் குதப்புணர்ச்சி வழக்கு 2 ஐ உச்சநீதிமன்றத்தில் சட்டத்துறை அலுவலகத்தை பிரதிநிதித்து நடத்திய அம்னோ சார்புடைய வழக்குரைஞர் முகமட் ஷாபி அப்துல்லா மேற்கொண்ட பிரச்சாரங்கள் எதிர்விளைவை ஏற்படுத்தியுள்ளது என்று ஒரு மூத்த அம்னோ தலைவர் ஒப்புக்கொண்ட்டுள்ளார். பெயரை வெளியிட விரும்பாத அத்தலைவர் அப்பிரச்சாரத்திற்கு அம்னோ அனுமதி…
சிருல்: தற்போதைக்கு நான் ஒன்றும் சொல்வதற்கில்லை
இன்று நடைபெறும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சிருல் அஸார் ஒமார் மற்றும் பாஸ் தகவல் பிரிவு தலைவர் மாபுஸ் ஒமாருக்கு இடையிலான டெலியுரையாடல் சிருல் தாம் தற்போதைக்கு ஒன்றும் சொல்வதற்கில்லை என்றதால் பெரும் ஏமாற்றத்தில் முடிந்தது. "நான் ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் பாதுகாப்பில் இருப்பதால்…
மாபுஸ்: சிருலுடனான டெலியுரையாடல் நடக்குமா, நடக்காதா?
ஆஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சிருல் அஸார் ஒமாருடனான டெலியுரையாடல் நடைபெறுமா என்பது நாளைக்குத்தான் தெரியும் என்று பாஸ் கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் மாபுஸ் ஒமார் கூறினார். ஆஸ்திரேலிய குடிநுழைவுத்துறை முன்னாள் போலீஸ் படை கொமாண்டோவான சிருல் பேட்டி அளிப்பதற்கு அனுமதிக்காது என்று அண்மையச் செய்தி கூறுகிறது…
டிஎபி எம்பி எச்சரிக்கை: ஹூடுட் மசோதா தாக்கல் செய்தால், பாஸ்…
எதிர்வரும் மார்ச் 18 இல் கிளந்தான் பாஸ் மாநில அரசு ஹூடுட் சட்ட மசோதாவை தாக்கல் செய்யுமானால் அக்கட்சி பாக்கத்தானிலிருந்து விலகிக்கொண்டு விட்டதாக கருத்தப்படும் என்று டிஎபி நாடாளுமன்ற உறுப்பினர் கோபிந்த் சிங் டியோ எச்சரித்தார். "பாஸ் ஹூடுட் மசோதா தாக்கல் செய்வதை மேற்கொண்டால் அது பாக்கத்தானின் பொதுவான…
நமது பல்கலைக்கழகங்கள் உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களுக்குச் சமமானவையா?
மலேசியாவின் உயர்க்கல்வி இப்போது மேம்பாடடைந்துள்ள நாடுகளுக்கு, பிரிட்டன், ஜெர்மனி மற்றும் ஆஸ்திரேலியா உட்பட, சமமானதாக இருக்கிறது. இதனை இந்நாட்டின் உயர்நிலைக் கல்வி நிலையங்களில் 135,000 வெளிநாட்டு மாணவர்கள், மொத்த மாணவர்களில் 10 விழுக்காட்டினர், கல்வி பயில்வது உறுதிப்படுத்துகிறது என்று இரண்டாவது கல்வி அமைச்சர் இட்ரீஸ் ஜூசோ கூறியதாக…
கிளந்தான் ஹுடுட் சட்ட மசோதா மார்ச் 18 இல் தாக்கல்…
கிளந்தான் மாநில சட்டமன்றத்தின் அடுத்த கூட்டத் தொடரில் கிளந்தான் மாநில அரசு அதன் ஹூடுட் சட்ட திருத்த மசோதாவை மார்ச் 18 இல் தாக்கல் செய்கிறது. துணை மந்திரி புசார் முகமட் அமர் நிக் அப்துல்லா இதனை நேற்று உள்ளூர் சீன மன்றங்களின் தலைவர்கள் அளித்த சீன…
சிருல் அனைத்தையும் கூற ஆஸ்திரேலியா அனுமதிக்கக்கூடும்
அல்தான்துயா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் சிருல் அஸார் ஒமார் அது பற்றிய அனைத்தையும் தொலைக்காட்சி நேர்காணலில் கூற அனுமதிக்கக் கூடிய சாத்தியத்தை ஆஸ்திரேய குடிநுழைவுத்துறை நிராகரிக்கவில்லை. ஆனால், அதற்கான முறையான நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்று கூறியது. "பொதுவாக நேர்காணல்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள இடத்தின்…
அருட்செல்வம் விடுவிக்கப்பட்டார்
நேற்றிரவு கைது செய்யப்பட்ட மலேசிய சோசலிசக் கட்சியின் தலைமைச் செயலாளர் எஸ். அருட்செல்வம் இன்று பின்னேரத்தில் விடுவிக்கப்பட்டார். போலீசார் அவரை மேற்கொண்டு தடுத்து வைக்க முன்வைத்த கோரிக்கையை இன்று காலையில் மஜிஸ்திரேட் நீதிமன்றம் நிராகரித்து விட்டது. போலீசார் அவரை விசாரிக்க இன்று மாலை மணி 7.00 வரையில்…
சிருல் கூற்றைத் தள்ளுபடி செய்த ஐஜிபி-க்கு மாபூஸ் கண்டனம்
பாஸ் தகவல் தலைவர் மாபூஸ், அல்டான்துன்யாவை கொலை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சிருல், மலேசியாகினிக்குத் தொலைபேசிவழி வழங்கிய நேர்காணலில் தனக்கிடப்பட்ட உத்தரவுப்படி நடந்துகொண்டதாகக் கூறியிருப்பதைத் தள்ளுபடி செய்த இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீஸ் காலிட் அபு பக்காரைக் கடிந்து கொண்டிருக்கிறார். “சிருல் அப்படி ஒரு குற்றச்சாட்டை வெளியிட்டிருக்கும்போது அவர் அப்படி…
அருட்செல்வம் இன்று விடுவிக்கப்படலாம்
நேற்று கைது செய்யப்பட்ட மலேசிய சோசலிசக் கட்சியின் தலைமைச் செயலாளர் எஸ். அருட்செல்வம் இன்று விடுவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அருட்செல்வத்தை தொடர்ந்து தடுப்புக் காவலில் வைத்து விசாரிப்பதற்கு தேவைப் படும் நீதிமன்ற தடுப்புக்காவல் உத்தரவை வழங்க நீதிமன்றம் இன்று மறுத்து விட்டது. மஜிஸ்திரேட் முஸ்லினா முகம்மட் ஜமி…
அருட்செல்வம் போலீசாரால் கைது செய்யப்பட்டார்
எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் குற்றவாளி என அளிக்கப்பட்ட தீர்ப்பு பற்றி தெரிவித்த கருத்திற்காக பிஎஸ்எம் தலைமைச் செயலாளர் எஸ். அருட்செலவம் தேச நிந்தனைக்காக இன்று போலீசாரால் கைது செய்யப்பட்டார். இன்று மாலை சுமார் 10 போலீஸ்காரர்கள் காஜாங்கில் அருட்செல்வத்தின் வீட்டை திடீர்ச்சோதனை செய்து அவரின் கணினியை…
ஐஜிபி: கேள்விப்பட்ட செய்தியை வைத்து டிஏபி புகார் செய்துள்ளது
ஒரு புகார்மீது விசாரணை நடத்த போலீசுக்குப் “போதுமான ஆதாரங்கள்’ தேவை என்று இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீஸ் கூறுகிறார். குற்றவியல் நடைமுறை விதி, பிரிவு 110(1) (பி) அதை வலியுறுத்துகிறது- என்றாரவர். “வெறுமனே குற்றம் கூறுவது மட்டும் போதாது. ஊடகங்களில் அறிவிக்கப்பட்ட செய்தியை அடிப்படையாக வைத்து டிஏபி புகார் …
சிருலின் கூற்றை விசாரிப்பீர்: டிஏபி போலீசில் புகார்
முன்னாள் போலீஸ் அதிரடிப் பிரிவு வீரரான சிருல் அஸ்ஹார் உமரின் குற்றச்சாட்டை விசாரிக்க வேண்டும் என டிஏபி எம்பி ஒருவர் போலீஸில் புகார் செய்துள்ளார். தாமும் அதிரடிப் பிரிவின் இன்னொரு வீரரான அஸிலா ஹட்ரியும் தங்களுக்கு இடப்பட்ட நடந்துகொண்டதாகக் கூறியிருப்பது பற்றி விசாரிக்க வேண்டும் என்று டாங் வாங்கி …
நஜிப்: ‘சொன்னபடி நடந்தேன்’ என்ற சிருல் கூற்று ‘சுத்த மடத்தனம்’
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், முன்னாள் போலீஸ் அதிரடிப் பிரிவு வீரரான சிருல் அஸ்கார் உமர் உத்தரவுப்படி நடந்துகொண்டிருப்பதாக கூறியிருப்பதை “சுத்த மடத்தனம்” என்று கூறினார். இன்று கோலாலும்பூரில் மசீச சீனப்புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பில் கலந்துகொண்ட பிரதமர் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார். சிருல், மலேசியாகினிக்குத் தொலைபேசிவழி வழங்கிய …
சிருல்: சொன்னதைச் செய்தேன், அதன் பலனை அனுபவிக்கிறேன்
பெரும் மனக்குழப்பத்திலிருக்கும் முன்னாள் போலீஸ் காமாண்டோ சிருல் அஸார் ஒமார் நாட்டின் நலனைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக தமக்கு இடப்பட்ட கட்டளைகளைப் பின்பற்றியதாக விடாப்பிடியாக கூறிக்கொண்டிருக்கிறார். சொன்னதைச் செய்ததற்காக சிருல் இப்போது மரண தண்டனையை எதிர்கொண்டுள்ளார். "நான் இன்று இறந்தால், எனக்கு நிம்மதி கிடைக்காது, ஏனென்றால் என்னிடம்…
ஐஜிபி: சிருல் பேசும் வரையில் அல்தான்துயா பற்றிய புதிய விசாணை…
மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் போலீஸ் கமாண்டோ சிருல் அஸாகர் ஒமார் அல்தான்துயா வழக்கு சம்பந்தமாக புதிய தகவலை வெளியிடும் வரையில் போலீஸ் விசாரணையை மீண்டும் தொடங்கும் எண்ணம் கொண்டிருக்கவில்லை. "சில தரப்பினர் தூண்டிவிடுகிறார்கள் என்பதற்காக இந்த வழக்கில் புதிய விசாரணையைத் தொடங்குவதற்கான காரணம் ஏதும் இல்லை. "முதலில்…


