அக்டோபர் 7, 2023 அன்று இஸ்ரேலிய தாக்குதல் தொடங்கியதிலிருந்து காசாவில் கொல்லப்பட்ட 237 பத்திரிகையாளர்களை நினைவுகூரும் வகையில் நேற்று இரவு டத்தாரான் மெர்டேகாவில் 70க்கும் மேற்பட்டோர் ஒற்றுமையைக் காட்டினர். கேகார் செயற்பாட்டாளர்களால் நடத்தப்பட்ட அந்த நிகழ்ச்சி இரவு 8 மணிக்குத் தொடங்கி, பல்வேறு நிகழ்வுகளால் நிரம்பியிருந்தது. அதில் சமீபத்தில்…
‘அன்வாருக்கு சிலாங்கூர் அரசமைப்பு புரியவில்லை’
பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம், சிலாங்கூர் மந்திரி புசாராக தம் மனைவியைத் தேர்ந்தெடுத்திருப்பது அவருக்கு மாநில அரசமைப்புப் புரிந்துகொள்ளவில்லை என்பதைக் காண்பிப்பதாக சிலாங்கூர் பாரிசான் நேசனல் (பிஎன்) தலைவர் நோ ஒமார் கூறுகிறார். “மந்திரி புசாரை மாற்ற வேண்டுமானால் அதற்கு இரண்டு வழிகள்தான் உண்டு. இப்போதைய மந்திரி …
ஐயோ! டிஎபி ஆளும் பினாங்கில் இஸ்லாத்திற்கு ஆபத்து, அலறுகிறார் முன்னாள்…
பினாங்கு தீவில் முஸ்லிம்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சனைகளை வெளிப்படுத்தி பேசிய முன்னாள் தலைமை நீதிபதி அப்துல் ஹமிட் முகமட், தடுத்து நிறுத்தப்படாவிட்டால் அது பரவக்கூடும் என்று கூறுகிறார். அவர் குறிப்பிட்டவற்றில் ஒன்று, அம்மாநிலத்தில் இஸ்லாமிய நடவடிக்கைகளுக்கு நிதியளிப்பு பெறுவதில் சிரமம் இருக்கிறது ஏனென்றால் இதர சமய அமைப்புகளும் அவர்களுக்குரிய…
நூற்றுக்கணக்கானோர் நீதிகேட்டு தூதரகங்கள்மீது படையெடுப்பு
எம்எச் 17 துயரச் சம்பத்தில் பலியானவர்களுக்கு நீதி வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பிஎன் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தில் கிட்டதட்ட 500 பேர் கலந்துகொண்டனர். அவர்கள் ரஷ்ய, உக்ரேனிய தூதரகங்கள் உள்ள சாலைகளிலும் ஐநா அலுவலகத்திலும் திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் "Justice 4 MH17" என்ற வாசகம் …
காலிட்: நான் இன்னமும் எம்பி-தான்; எதுவரை என்றால்……
தாம் இன்னமும் சிலாங்கூரின் மந்திரி புசார்தான் என்பதை வலியுறுத்திய அப்துல் காலிட் இப்ராகிம், தம்மை வெளியேற்ற விரும்பினால் சட்ட முறைப்படிதான் அதைச் செய்ய வேண்டும் என்றார். முன்பு, அடுத்த தேர்தல்வரை மந்திரி புசாராக தொடர்வது உறுதி என்று சொல்லி வந்தவரின் பேச்சு இப்போது மாறியுள்ளது. மந்திரி புசார் பதவி …
முன்னாள் சிஜே: பினாங்கில் இஸ்லாத்துக்கு ஆபத்து
பினாங்கில் முஸ்லிம்கள் பிரச்னைகளை எதிர்நோக்குவதாகவும் தீர்வுகாணாவிட்டால் நிலைலை மோசமடையும் என்றும் முன்னாள் தலைமை நீதிபதி அப்துல் ஹமிட் எச்சரித்துள்ளார். இஸ்லாமிய நடவடிக்கைகளுக்கு நிதி ஒதுக்கீடு பெறுவதுகூட சிரமமாக இருக்கிறது என முன்னாள் முப்தி ஒருவர் குறைப்பட்டுக் கொண்டதாக அவர் சொன்னார். ஏனென்றால் மற்ற சமய தரப்பினரும் தங்களுக்கும் உரிய …
ஹுடுட் பற்றிப் பேசவில்லையா? மறுக்கிறார் அன்வார்
ஹுடுட் விவகாரம் பற்றித் தாம் பேசுவதே இல்லை என்று சரவாக் டிஏபி குற்றம் சாட்டியிருப்பதை பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் மறுத்தார். ஜூலை 9-இல், சிலாங்கூர் கிளப்பில் நடந்த ஒரு கருத்தரங்கில்கூட அது பற்றிப் பேசியதாக அவர் சொன்னார். “இன, சமய வேறுபாடின்றி எல்லாருக்கும் நீதி தேவை…
நஜிப்புக்கு அவரின் அரசியல் வைரிகளும் பாராட்டு
லிம் கிட் சியாங்கும் அன்வார் இப்ராகிமும் எம்எச் 17 விவகாரத்தை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கையாளும் விதத்தைப் பாராட்டியுள்ளனர். மலேசிய வழக்குரைஞர் மன்றத்தின் முன்னாள் தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசனும் டிவிட்டரில் பிரதமரைப் பாராட்டினார். கறுப்புப் பெட்டிகளைப் பெறும் முயற்சியில் நஜிப் வெற்றி பெற்றதற்காக லிம் பாராட்டுத் தெரிவித்துக் …
தகவல் தருவோருக்கு வெகுமதி அளித்து ஊக்குவிக்கலாம்
தகவல் தருவோருக்கு தாராளமாக வெகுமதி வழங்கலாம் என்று கூறும் வழக்குரைஞர் மன்றத் தலைவர் கிறிஸ்டபர் லியோங், அது மேலும் பலரைத் தகவலளிக்க ஊக்குவிக்கும் என்கிறார். “2010 தகவல் அளிப்போர் பாதுகாப்புச் சட்டம் பகுதி 26, வெகுமதி அளிக்க வகை செய்கிறது. “சம்பந்தப்பட்ட சட்ட அமலாக்கத் துறைதான் வெகுமதி கொடுப்பது பற்றி …
அமெரிக்கக் குற்றச்சாட்டு சுத்த பொய் – ரஷ்ய தூதர்
மலேசிய விமான நிறுவனத்தின் எம்எச் 17-ஐ சுட்டு வீழ்த்தியதில் மாஸ்கோவுக்கும் பங்குண்டு என்பதற்கு ஆதாரங்கள் இருப்பதாக அமெரிக்கா கூறுவதை மலேசியாவுக்கான ரஷ்ய தூதர் லியுட்மிலா ஜி வொரோப்யேவா மறுக்கிறார். இதற்கு முன்னரும் இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகளை வாஷிங்டன் சொன்னதுண்டு ஆனால், எதையும் நிரூபித்ததில்லை என்றாரவர்.. “முதலில், ஆதாரத்தைக் காண்பிக்கட்டும். ஈராக்கில்,…
காலிட்டைச் சந்திப்பது பற்றி சுல்தான் இன்னும் முடிவு செய்யவில்லை
சிலாங்கூர் சுல்தான் ஷராபுதின் இட்ரிஸ் ஷா, பாஸ் எம்பி காலிட் சமத்துக்கு பேட்டியளிப்பது பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை என்கிறார் சுல்தானின் தனிச் செயலாளர் முகம்மட் முனிர் பானி. நேற்று அம்னோ-ஆதரவு இணையத்தளமான எஜண்டா டெய்லி-இல் சுல்தானைச் சந்திக்க காலிட் செய்திருந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக செய்தி வெளியிடப்பட்டிருந்தது. கடிதம் கிடைக்கப்பெற்றதாக …
கிட் சியாங் போலீசாரால் விசாரிக்கப்படவிருக்கிறார்
டிஎபியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங் த ரோக்கெட் என்ற தளத்தில் தியோ பெங் கோக் மரணம் குறித்து சமீபத்தில் வெளியிட்டிருந்த கருத்து குறித்து அவரிடம் விரைவில் போலீஸ் வாக்குமூலம் பெறும். கிட் சியாங் வெளியிட்டுள்ள கருத்து தேச நிந்தனைக் கூறுகளைக் கொண்டிருப்பதால் போலீஸ் பல புகார்களைப்…
பாஸ்: மாஸ் புரிந்த பாவங்கள் அல்லாவின் சினத்திற்கு இட்டுச் சென்றது
மலேசிய விமான நிறுவனமான மாஸ் புரிந்த பாவங்கள் அல்லாவின் கோபத்திற்கு இட்டுச் சென்றுள்ளது என்று எம்எச்17 பேரிடரைத் தொடர்ந்து கருத்துரைத்த கெடா பாஸ் இளைஞர் தகவல் பிரிவு தலைவர் அஹமட் தார்மிஸி சுலைமான கூறுகிறார். மதுபானம் வழங்குதல் இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. மாஸ் விமான பணிப் பெண்கள்…
மன்னிப்பு கேட்காததால் காலிட்டின் கோரிக்கையை சுல்தான் நிராகரித்தார்
சிலாங்கூர் சுல்தான் ஷராபுதின் இட்ரிஸ் ஷாவைச் சந்திக்க ஷா ஆலம் எம்பி காலிட் அப்துல் சமத் செய்து கொண்டிருந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. அந்த பாஸ் எம்பி தம் செயலுக்கு மன்னிப்பு கேட்கவில்லை என்பதுதான் அதற்குக் காரணமாகும். சிலாங்கூர் இஸ்லாமிய சமய மன்ற(மாயிஸ்)த்தின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று காலிட் …
சரவாக் பக்காத்தானிலிருந்து டிஏபி வெளியேறுவதை பாஸ் தடுக்காது
சரவாக் பக்காத்தானிலிருந்து வெளியேறுவது “அவசியம் என்று டிஏபி நினைத்தால்” தாராளமாக வெளியேறலாம் என சரவாக் பாஸ் கூறியுள்ளது. சரவாக் டிஏபி நேற்று ஓர் அறிக்கையில், கிளந்தானில் ஹுடுட்-டை அமலாக்கும் நோக்கத்தை பாஸ் தலைமைத்துவம் கைவிடாவிட்டால் மாநிலக் கூட்டணியிலிருந்து வெளியேற கட்சியில் தீர்மானம் கொண்டுவரப்பட்டிருப்பதாகக் கூறியது. சரவாக் பாஸ் ஆணையர் …
சரவாக் டிஏபி மிரட்டல் : குவான் எங் கருத்துரைக்க மறுப்பு
டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங், சரவாக்கில் டிஏபி-க்கும் பாஸுக்குமிடையில் மூண்டுள்ள சர்ச்சை குறித்து கருத்துரைக்க மறுத்தார். பின்னர் அதன்மீது அறிக்கை வெளியிடுவதாக பினாங்கு முதலமைச்சருமான லிம் கூறினார். உடனடியாகக் கருத்துரைக்க மறுப்பது ஏன் என்று வினவியதற்கு, “உங்களுக்கே தெரியும்” என்றார். “ஊடகங்கள் சுற்றி இருக்க நான் …
இளவயது மலாய்க்காரர்கள் டிஏபி-இல் சேர்வதால் கடுப்பானது இஸ்மா
மேலும் ஒரு மலாய்ப் பெண் டிஏபி-இல் சேர்ந்திருப்பது கண்டு ஈக்காத்தான் முஸ்லிமின் மலேசியா(இஸ்மா) கொதித்துப் போயுள்ளது. அது, இளம் மலாய்க்காரர்களை எளிதில் “ஏமாற்றுவதில்” டிஏபி வெற்றிகண்டு வருவதைக் காண்பிப்பதாக இஸ்மாவின் உதவித் தலைவர் அப்துல் ரஹ்மான் மாட் டாலி கூறினார். அவர், ஷபுரா ஒத்மான் அண்மையில் டிஏபி உறுப்பினரானது …
கிறிஸ்துவ குறுவட்டுகளைத் திருப்பிக் கொடுக்க நீதிமன்றம் உத்தரவு
கோலாலும்பூர் உயர் நீதிமன்றம், “அல்லாஹ்” என்னும் சொல்லைக் கொண்டிருந்ததற்காகக் கைப்பற்றப்பட்ட எட்டு கிறிஸ்துவ சமய குறுவட்டுகளை(சிடி) உரியவரிடமே திருப்பிக் கொடுக்குமாறு உள்துறை அமைச்சுக்கும் அரசாங்கத்துக்கும், ஆறாண்டுகளுக்குப் பிறகு, இன்று உத்தரவிட்டது. 2008, மே மாதம் சரவாக்கிய கிறிஸ்துவரான ஜில் அயர்லாந்திடமிருந்து அந்த சிடி-கள் கைப்பற்றப்பட்டன. சிடி-களைக் கைப்பற்றவும் அவற்றைத் …
கறுப்புப் பெட்டிகள் வல்லுனர்களிடம் கொடுக்கப்படும்
எம்எச்17-இலிருந்து சில பெட்டிகள் ரஷ்ய-ஆதரவு பிரிவினைவாதப் படையினர் கண்டெடுத்திருப்பதாக. டோனெட்ஸ்க் மக்கள் குடியரசின் பிரதமர் எனச் சுயமாக. பிரகடனம் செய்து கொண்டிருக்கும் அலெக்சாண்டர் பொரோடாய் கூறினார் அவை அவ்விமானத்தின் கறுப்புப் பெட்டிகளாக இருக்கலாம் என நம்பப்படுகிறது ஆனால், வல்லுனர்கள்தாம் அதை உறுதிப்படுத்த வேண்டும். “அவை கறுப்புப் பெட்டிகள்தாம் என்பதை …
ஐநா பாதுகாப்பு மன்றத்தில் உக்ரேன்மீது தீர்மானம்
உக்ரேனில் மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதன் தொடர்பில் இன்று ஐநா பாதுகாப்பு மன்றத்தில் ஒரு தீர்மானம் கொண்டுவரப்படுகிறது. அத்தீர்மானம், விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டதைக் கண்டிப்பதுடன் அச்சம்பவத்துக்குக் காரணமானவர்களைக் கண்டுபிடித்துப் பொறுப்பாக்க வேண்டும் என்றும் விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தில் கிளர்ச்சிப்படையினர் எவ்வித மாற்றத்தையும் செய்யக் கூடாது என்றும் கேட்டுக்கொள்ளும். அச்சம்பவத்தில் …
எம்எச்17: இறந்தவர்களை ஹரிராயாவுக்கு முன்னர் கொண்டு வர வேண்டும், நஜிப்
சுட்டு வீழ்த்தப்பட்ட எம்எச்17 இல் கொல்லப்பட்ட அனைத்து மலேசிய குடிமக்களும் ஹரிராயாவுக்கு முன்னர் நாட்டிற்கு கொண்டு வரப்பட வேண்டும் என்று பிரதமர் நஜிப் கூறினார். "அடையாளம் காணப்பட்டவர்களை மலேசிய அரசாங்கம் நாட்டிற்கு கொண்டு வரும். அவர்கள் மலேசிய மண்ணில் அடக்கம் செய்யப்படுவர்" என்று நஜிப் இன்றிரவு கோலாலம்பூரில்…
நாடாளுமன்ற அவசரக் கூட்டம் எம்எச்370 தையும் விவாதிக்க வேண்டும், கிட்…
எதிர்வரும் புதன்கிழமை தொடங்கவிருக்கும் நாடாளுமன்ற அவசரக் கூட்டம் எம்எச்17 பேரிழைப்பை விவாதிப்பதோடு எம்எச்370 காணாமல் போனதையும் விவாதிக்க வேண்டும் என்று டிஎபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் இன்று கூறினார். இரண்டு பேரிழப்புகளுக்கிடையில் பல வேறுபாடுகள் இருக்கின்றன. முதல் இழப்பு இன்னும் ஒரு பெரிய மர்மமாக…
அனைத்துக்கட்சி தேர்வுக் குழு அமைக்க எம்பி அறைகூவல்
எதிர்வரும் புதன்கிழமை எம்எச் 17மீதான நாடாளுமன்றக் கூட்டம் நடத்துவதற்குமுன் அச்சம்பவத்தை விசாரிக்க நாடாளுமன்றத் தேர்வுக் குழுவை அமைக்க வேண்டும் என செகாம்புட் எம்பி லிம் லிப் எங் முன்மொழிந்திருக்கிறார். “எம்எச்-17 பற்றி ரஷ்ய, யுக்ரேய்ன் தூதர்களை விசாரிக்க அனைத்துக்கட்சி நாடாளுமன்றத் தேர்வுக்குழு அமைக்க வேண்டும் எனப் பிரதமர் நஜிப் …
ஏவுகணையைப் பாய்ச்சியவர் யார்? கண்டுபிடிக்கும் முயற்சியில் அமெரிக்கா தீவிரம்
செயற்கைக் கோள் படங்கள், எம்எச்17-ஐ சுட்டுவீழ்த்திய ஏவுகணை புகையைக் கக்கியவாறு தரையிலிருந்து விண்ணுக்குப் பாய்ந்து செல்வதைக் காண்பிக்கின்றன. அகச்சிவப்பு உணரிகள் விமானம் வெடித்தைப் பதிவு செய்துள்ளன. இவற்றை வைத்து ஏவுகணையைப் பாய்ச்சியவர்கள் யார், ஏன் பாய்ச்சினார்கள், எங்கிருந்து பாய்ச்சினார்கள் முதலிய விவரங்களைக் கண்டறியும் முயற்சியில் அமெரிக்க ஆய்வாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.…