ஏழைகள் மற்றும் சிறுபான்மையினருக்கான நீதியை அரசாங்கம் ஒருபோதும் விட்டுக்கொடுக்காது, எந்தவொரு இனக்குழு மக்களையும் ஒடுக்குவதை பொறுத்துக்கொள்ளாது என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறினார். "சமீபத்தில் மூன்று இந்திய ஆண்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை, ஒரு விசுவாசியாக, நான் ஏற்றுக்கொள்வது அல்லது மன்னிப்பது கடினம்" என்று அவர் இன்று மலேசிய…
அம்னோ பொதுக்கூட்டத்தில் தாய்மொழிப்பள்ளிகளை அழிக்கக் கோரும் முன்மொழிதல்கள்
எதிர்வரும் அம்னோ பொதுக்கூட்டத்தில் தாய்மொழிப்பள்ளிகளை அழிக்கக் கோரும் முன்மொழிதல்கள் முதன்மையான விவகாரமாக இருக்கும் என்று அம்னோ உதவித் தலைவர் ஹிசாமுடின் ஹுசேன் கூறுகிறார். அதனைத் தவிர்த்து தேச நிந்தனைச் சட்டமும் விவாதத்துக்குரியதாக இருக்கும் என்றாரவர். தாய்மொழிப்பள்ளிகளை அழித்து விட்டு ஒரே மொழிப்பள்ளிகள் நிறுவப்பட வேண்டும் என்று அம்னோவிலிருந்து வலுத்த…
சிலாங்கூர் குளறுபடிகளுக்கு நஜிப் பொறுப்பேற்க வேண்டும்
அரசியல்வாதிகள் சாகும்வரை பதவியில் இருக்க முடியாது என்கிறார் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட். அந்த வகையில், சிலாங்கூர் அம்னோ தலைவர்கள் பதவி விலக வேண்டும் என்ற அவரது கோரிக்கையை அவர் மீண்டும் வலியுறுத்தினார். இருக்கும் தலைவர்களால் மாற்றத்தை உண்டுபண்ண முடியாத நிலையில் பதவியை அடுத்தவரிடம் ஒப்படைப்பதே முறையாகும் என்றாரவர்.…
இளைஞர் தினச் செலவு ரிம93 மில்லியன் மீதான கணக்கறிக்கை எங்கே?
புத்ரா ஜெயாவில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் இளைஞர் தினத்துக்காக 2011 தொடங்கி கடந்த நான்காண்டுகளாக ரிம93 மில்லியன் செலவிடப்பட்டிருக்கிறது என்று கூறும் பாஸ் கட்சியின் பொக்கோக் செனா எம்பி மாபூஸ் ஒமார், அச் செலவினம் மீதான கணக்குத் தணிக்கை அறிக்கை வெளியிடப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டிருக்கிறார். 2011-இல், இளைஞர் தினத்துக்குச் …
பினாங்கு சிஎம் பதவிக்குச் சுழல்முறையைக் கொண்டுவரலாம்
பினாங்கு முதலமைச்சர் பதவிக்குச் சுழல்முறையை அறிமுகப்படுதலாம் என டிஏபி தஞ்சோங் பூங்கா சட்டமன்ற உறுப்பினர் தே ஈ சியு பரிந்துரைத்துள்ளார். அத்துடன் ஒருவர் இரண்டு தவணைக்கு மட்டுமே பதவி வகிக்கலாம் என்றும் வரையறுக்கப்பட வேண்டும். இதன்வழி, மகளிர் உள்பட, மற்ற தலைவர்களுக்கும் பினாங்கை ஆட்சிசெய்யும் வாய்ப்பு கிடைக்கும் என்றவர் …
மாணவர்கள்மீது போலீசை ஏவுவது பொதுப் பணத்தை விரயமாக்கும் செயல்
யுனிவர்சிடி மலேசியா சாபா(யுஎஸ்எம்) வளாகத்தில் கலகக் தடுப்புப் போலீசை நிறுத்தி வைப்பதும் மாணவ ஆர்வலர்களைக் கைது செய்வதும் ‘வரிப்பணத்தை விரயமாகும் செயல்’ என பிகேஆர் இளைஞர் பகுதி கூறியது. மாணவர்களைக் கைது செய்ததற்கான காரணத்தைக்கூட போலீசால் சொல்ல முடியவில்லை என்பது அவர்கள் மாணவர் இயக்கத்தை “ஒடுக்கும்” கருவிகளாகத்தான் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள் …
500 தவறுகள் செய்த சுங்கத்துறை முகவர், ஆனால், அவர்மீது நடவடிக்கை…
அரச மலேசிய சுங்கத்துறை, தம் முகவர்கள் திரும்பத் திரும்பத் தவறுகள் செய்தாலும்கூட கண்டுக்கொள்வதில்லை என 2013 தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கை கண்டித்துள்ளது. இதற்கு எடுத்துக்காட்டாக, ஒரு முகவர் முன்றாண்டுக் காலத்தில் 500 தவறுகள் செய்திருப்பதை அது சுட்டிக்காட்டியது. 17 சுங்கத்துறை முகவர்கள் ஓராண்டுக்குமேல் செயல்படாமலேயே இருந்திருக்கிறார்கள். அவர்கள்மீதும் எந்த …
மருந்துகளுக்கு ஜிஎஸ்டி வேண்டாம்: மருந்தாளுநர்கள் கோரிக்கை
பொருள். சேவை வரியிலிருந்து மருந்துகளுக்கு விலக்களிக்கப்பட வேண்டும் என மலேசிய மருந்தாளுநர் கழகம்(எம்பிஎஸ்) அரசாங்கத்துக்குக் கோரிக்கை விடுத்துள்ளது. “நோயுற்றிருக்கும் அல்லது மருந்து உட்கொள்ள வேண்டிய நிலையில் உள்ள” ஒருவருக்கு வரி விதிக்கப்படுவது முறையல்ல என எம்பிஎஸ் தலைவர் நன்சி ஹோ ஓர் அறிக்கையில் கூறினார். இதன் தொடர்பில் எல்லா …
அச்சு ஊடகம் மாற வேண்டும் என்கிறார் உத்துசான் துணை ஆசிரியர்
செய்தித்தாள் போன்ற அச்சு ஊடகங்கள், காலத்துக்கு ஏற்ப மாற்றம் காண வேண்டும். அப்போதுதான் நல்ல முன்னேற்றம் கண்டிருப்பதாகக் கருதப்படும் சமூக ஊடகங்களுடன் போட்டியிட முடியும். இதனை வலியுறுத்திய உத்துசான் மலேசியா குழுமத்தின் துணை செய்தியாசிரியர் சைனி ஹசன், வாசகர்கள் தகவல்களை விரைவாகப் பெற சமூக ஊடகங்களை நாடுவதால் இனி, …
பேராசைதான் மரங்களை வெட்டிச்சாய்க்கிறது; உயிர்களையும் காவு கொள்கிறது
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், மலேசிய காடுகள் விரைவாக அழிக்கப்படுவதால் விளையக்கூடிய விபரீதங்களை தம் வலைப்பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.. “பலர் பலியாகி இருக்கிறார்கள், இன்னும் பலர் பலியாகலாம்”, என்றவர் எச்சரிக்கிறார். ஊழலும் பேராசையும் சேர்ந்து நம் காடுகளை விரைந்து அழித்துவருவதாக அவர் குறிப்பிட்டார். காடுகள் அழிக்கப்படுவதே வெள்ளப் பெருக்குகளும் …
கைதான எட்டு மாணவ ஆர்வலர்களும் விடுவிக்கப்பட்டனர்
நேற்றிரவு யுனிவர்சிடி மலேசியா சாபா (யுஎம்எஸ்)-வில், கைது செய்யப்பட்ட மாணவர் எண்மரும் நள்ளிரவு வாக்கில் போலீஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர். அவர்கள்மீது குற்றம் எதுவும் சாட்டப்படவில்லை. மலாயாப் பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் ஃபாஹ்மி சைனல் உள்பட, அந்த எண்மரும் நேற்றிரவு எட்டு மணி அளவில் தடையையும் மீறி பல்கலைக்கழகத்தில் …
படிக்க ஆர்வமில்லாதவர்களுக்குப் பல்கலைக்கழகங்களில் இடமளிக்காதீர்
ஒழுங்கு நடவடிக்கையை எதிர்நோக்கும் யுஎம்8 போன்ற மாணவப் போராட்டவாதிகள் உள்பட, பல்கலைக்கழகங்களிலிருந்து நீக்கப்படும் மாணவர்களுக்கு இடமளிக்கத் தயார் என சிலாங்கூர் அரசு கூறுவது தவறு. இவ்வாறு கூறிய கெராக்கான் இளைஞர் தலைவர் டான் கெங் லியாங், பொதுப் பல்கலைக்கழகங்களில் சொற்ப இடங்களே உள்ளன என்றும் அவை படிப்பில் ஆர்வமுள்ளவர்களுக்கே…
முன்னாள் படைவீரர்கள் இறந்த பின்னரும் ரிம12மில்லியன் ஓய்வூதியம் வழங்கப்பட்டது
தற்காப்பு அமைச்சு, முன்னாள் படைவீரர்கள் இறந்த பின்னரும் அவர்களுக்குத் தொடர்ந்து ஓய்வூதியம் வழங்கி வந்திருக்கிறது. அந்த வகையில் அரசாங்கத்துக்கு ஏற்பட்ட இழப்பு சுமார் ரிம12 மில்லியனாகும். 2011-க்கும் 2013-க்குமிடையில் காலமான 3,786 முன்னாள் படைவீரர்களுக்கு முன்னாள் படைவீரர் விவகாரத் துறை ஓய்வூதியம் என்ற வகையில் ரிம11. 94மில்லியனை வழங்கியுள்ளது.…
பைபிள் விவகாரத்தில் ‘இணக்கமான தீர்வு’ காண்பதே சிலாங்கூரின் நோக்கம்
பறிமுதல் செய்யப்பட்ட பைபிள்கள் விவகாரத்துக்குத் தீர்வு காண்பது பற்றி ஒவ்வொரு வாரமும் சிலாங்கூர் சுல்தானுடன் விவாதிக்கப்பட்டே வருகிறது என்கிறார் மந்திரி புசார் முகம்மட் அஸ்மின் அலி. மந்திரி புசார் மாநில நிலவரங்கள் குறித்து விவாதிப்பதற்கு ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் சிலாங்கூர் சுல்தானை பேட்டி காண்பது வழக்கம். “அச்சந்திப்புகளின்போது பல விவகாரங்கள்…
கணக்கறிக்கை: ரிம1மில்லியன் கையாடிய அதிகாரிமீது நடவடிக்கை இல்லை
மலேசிய தலமைக் கணக்காளர் துறை(ஜேஏஎன்எம்) அதிகாரி ஒருவர் கிட்டத்தட்ட ரிம1மில்லியனைக் கையாடல் செய்திருக்கிறார். ஆனால், அவர்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதைத் 2013 தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது. இந்த அதிகாரிக்குக் கோரிக்கையற்றுக் கிடக்கும் பணத்தைக் கண்டால் கொண்டாட்டம். பொய்யான ஆவணங்களைத் தயாரித்து அமுக்கி விடுவார். அந்த ஆசாமியின்…
விவேகனந்தா ஆசிரமம் பிரிக்பீல்ட்ஸ் “ஆன்மாக்களில்” ஒன்று, நூருல் இஸ்ஸா
கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸ்சில் அமைந்துள்ள 110 ஆண்டுகால பழமை வாய்ந்த விவேகனந்தா ஆசிரமம் வாணிக மேம்பாட்டு திட்டத்தால் பாதிக்கப்படாமல் காப்பாற்றப்பட வேண்டும் என்ற இந்திய சமூகத்தின் போராட்டத்திற்கு அரசியல் கட்சிகளும் ஆதரவு அளிக்க முன்வந்துள்ளன. இன்று காலை மணி 10.00 அளவில் சுமார் 300 ஆதரவாளர்கள் விவேகானந்தா ஆசிரமத்தின்…
சொங் வெய்: என்றும் ஏமாற்றியதில்லை
உலகின் முதல்தர பூப்பந்து ஆட்டக்காரரான லீ சொங் வெய், வாழ்க்கையில் தடைசெய்யப்பட்ட பொருள்களை என்றும் பயன்படுத்தியதில்லை என்று சொன்னார். “நான் ஏமாற்றியது இல்லை. தடைசெய்யப்பட்ட பொருள்களை நம்புவதில்லை”, என அந்த மலேசிய விளையாட்டு வீரர் இன்று முகநூலில் பதிவிட்டிருந்தார். தாம் சம்பந்தப்பட்ட இவ்விவகாரத்தில் பதில் அளிக்கப்படாத பல கேள்விகள்…
‘ஆணவம் பிடித்த’ அட்னான் பதவி விலக வேண்டும்: உத்துசான் கோரிக்கை
அம்னோவுக்குச் சொந்தமான உத்துசான் மலேசியா பகாங் மந்திரி புசார் அட்னான் யாக்கூப்மீது பாய்ந்துள்ளது. அவர் ஆணவம் பிடித்தவர் என்றும் அவர் பதவியில் தொடர்வது நல்லதல்ல என்றும் அது எச்சரித்தது. கேமரன் மலையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு அதில் மூவர் பலியானதை அடுத்து அச்செய்தித்தாள் இவ்வாறு காட்டமாகக் கருத்துத் தெரிவித்துள்ளது.…
மாணவர்கள் கூடுவதைத் தடுக்க இருளை நாடும் இன்னொரு பல்கலைக்கழகம்
இன்றிரவு தங்களுடைய பல்கலைக்கழக வளாகத்தில் கூடுவதற்கு மாணவர்கள் தயாராகிக் கொண்டிருக்கும் வேளையில் அதனைத் தடுப்பதற்கு இன்னொரு பல்கலைக்கழகம், இத்தடவை மலேசியா சாபா பல்கலைக்கழகம் (யுஎம்எஸ்), இருளை அரவணைத்துள்ளது. அப்பல்கலைக்கழகத்தில் மின்சார விநியோகம் நிறுத்தப்படவுள்ளது. மலாயா பல்கலைக்கழ மாணவர் மன்றத்தின் தலைவர் ஃபஹாமி ஸைநோல் இன்றிரவு கோத்தா கின்னாபாலுவில்…
ஆக்ஸ்பர்ட் யூனியன் மாதிரியான அமைப்பை யும் ஏற்படுத்த வேண்டும்
"சர்ச்சைக்குரிய நபர்கள்" உரையாற்றுவதற்காக அதன் வளாகத்திற்கு அழைக்கப்படுவதில் அதற்கு எவ்விதத் தொடர்பும் இல்லை என்பதை நிலைநிறுத்திக் கொள்வதற்கு மலாயா பல்கலைக்கழகம் உலகப் புகழ் பெற்றதும் சுயேட்சையானதுமான ஆக்ஸ்பர்ட் யூனியன் போன்ற ஓர் அமைப்பை உருவாக்க வேண்டும் என்று ஆலோசனை கூறப்பட்டுள்ளது. ஆக்ஸ்பர்ட் யூனியன் மாதிரியை பயன்படுத்துவதன் மூலம்…
பிஏஎம்: இரண்டாவது சோதனையிலும் ‘உறுதியானது’; பூப்பந்தாட்டக்காரருக்குத் தற்காலிகத் தடை
தேசிய பூ பந்து விளையாட்டு வீரர் ஒருவர்மீது இரண்டாவது தடவையாக நடத்தப்பட்ட சிறுநீர் சோதனையிலும் ஊக்க மருந்து கலந்திருப்பது உறுதியாகி இருப்பதால், விசாரணை முடியும்வரை அவர் விளையாட்டுகளில் கலந்துகொள்ளத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சோதனை முடிவுகளை மலேசிய பூ பந்து சங்க (பிஏஎம்) துணைத் தலைவர் நோர்சா ஜக்கரியா உறுதிப்படுத்தினார். ஆனால்,…
சிறப்புக் குழு கேமரன் வெள்ளத்தை ஆராயும்
சிறப்புப் பேரிடர் குழு, திங்கள்கிழமை கூடி கேமரன் மலையில் நிகழும் வெள்ளப் பெருக்குகள், நிலச்சரிவுகள் பற்றி விவாதிக்கும் எனப் பிரதமர்துறை அமைச்சர் ஷஹிடான் காசிம் கூறினார். அக்கூட்டத்துக்குப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தலைமை தாங்குவார். “அக்கூட்டம், வருங்காலத்தில் அப்படிப்பட்ட சம்பவங்கள் நடப்பதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் பற்றி விவாதிக்கும்”,…
பிடிபிடிஎன் புதியவர்களைத் தண்டிப்பது நியாயமல்ல
தேசிய உயர்க்கல்விக் கடன் நிதி (பிடிபிடிஎன்)-இலிருந்து ஆகக் கடைசியாகக் கடன் பெற்றவர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுக் கொண்டிருப்பார்கள். ஆனால், அந்நிதியிலிருந்து இனிமேல் கடன் பெறப்போகின்றவர்களை நினைக்கும்போதுதான் வருத்தமாக இருக்கிறது. அவர்களுக்கான கடன் தொகைகள் இம்மாதத்திலிருந்து குறைக்கப்படுவதுதான் இதற்குக் காரணமாகும். கடன் வாங்கியவர்கள் திருப்பிச் செலுத்தாததால் பிடிபிடிஎன் கல்விக் கடன் …
மகாதிர் கட்சியை இழிவுபடுத்துவதாக சிலாங்கூர் அம்னோ புலம்பல்
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், சிலாங்கூர் அம்னோ ‘ஊழல்’ தோற்றத்தைக் கொண்டிருப்பதாகக் கூறி கட்சியை இழிவுபடுத்தியிருக்கிறார் என அதன் செயலாளர் ஜொஹான் அப்துல் அசீஸ் கூறினார். தகுந்த ஆதாரமின்றி மகாதிர் அவ்வாறு கருத்துரைப்பது முறையாகாது என்றாரவர். “என்னைப் பொருத்தவரை துன் ஊழல் பற்றிக் குறிப்பிட்டிருப்பது தவறு. அதற்கான …


