பாஸ் பிரதமர் பதவியைக் கொடுக்க முன்வந்ததாம்: கூ லி அதை…

தேர்தலில்  வெற்றி பெற்றால்  பிரதமர்  பதவி  ஏற்க  வேண்டும் என்று  பாஸ்  கேட்டுக்கொண்டதை  அம்னோ குவா  மூசாங்  எம்பி  தெங்கு  ரசாலி  ஏற்றுக்கொண்டாராம். பாஸ் தலமைச்  செயலாளர்  முஸ்டபா  அலி  இத்தகவலை  வெளியிட்டிருக்கிறார். 13வது பொதுத்  தேர்தலுக்கு  முன்பாக  நடந்த  கதை  இது.  ஆனால், பிகேஆர்  அதற்கு  மறுப்புத் …

நஜிப்பின் அரசியல் நிதி திட்டம்: எதற்கு?, கேட்கிறார் மகாதிர்

  பிரதமர் நஜிப் அறிவித்துள்ள அரசியல் நிதி விதிமுறைக்களுக்கான ஒரு தேசியக் குழு தேவையற்றது என்று முன்னாள் பிரதமர் மகாதிர் கருதுகிறார். "இது குழுக்கள் அமைப்பது பற்றியதல்ல. ஆகவே, குழுக்கள் அமைக்க வேண்டிய தேவையில்லை. "அப்படியே (அவர்கள்) அவரை (நஜிப்பை) விசாரித்தாலும், அது தூக்கி எறியப்படும்", என்று மகாதிர்…

நூருல்: தந்தைக்குச் சிறையில் கெடுபிடிகள் அதிகரிக்கின்றன

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கைக்  கவிழ்க்கும்  சதித் திட்டம்  ஒன்று  இருப்பதாகக்  கூறப்பட்டதை  அடுத்து  சிறை  அதிகாரிகள்  அன்வார்  இப்ராகிமுக்கு  அதிகமதிகமான  கட்டுப்பாடுகளை   விதித்து  வருகிறார்களாம். இதனைச்  செய்தியாளர்களிடம்  தெரிவித்த  நூருல்  இஸ்ஸா  அன்வார்,  தம்  தந்தையார்  நீதிமன்றங்களுக்கு  வரும்போது  லிம்  கிட்  சியாங்,  ரபிஸி  ரம்லி,  சிலாங்கூர் …

மலேசியாகினிக்குத் தடை போட என்ஜிஓ கோரிக்கை

அரசாங்க- ஆதரவு  என்ஜிஓ-வான  Pertubuhan Minda dan Sosial Prihatin (பிஎம்எஸ்பி)  இணையச்  செய்தித்தளமான  மலேசியாகினிக்கு   உடனடியாக  தடை  விதிக்க  வேண்டும்  என மலேசியத்  தொடர்பு,  பல்லூடக  ஆணையத்திடம்(எம்சிஎம்சி) வலியுறுத்தியுள்ளது. அந்த  என்ஜிஓ-வின்  ஆலோசகர்  ராமேஷ்  ராவ், 13வது  பொதுத்  தேர்தலிலிருந்து  அச்செய்தித்  தளம்  “முரணான,  குழப்பம்தரக்கூடிய,  அவதூறு …

பத்திரிகைச் சுதந்திரத்துக்கு மிரட்டல் விடுப்பதை நிறுத்துவீர்

அரசாங்கம்,  பத்திரிகைச்  சுதந்திரத்துக்கும்  கருத்துரைக்கும்  சுதந்திரத்துக்கும்  விடுக்கும்  மிரட்டல்களை  நிறுத்திக்கொள்ள  வேண்டும்  என அரசு-சாரா  அமைப்புகள்  கேட்டுக்கொண்டுள்ளன. முற்போக்குத்  தொடர்புமுறை  சங்கமும்  பெர்சத்துவான்  கெசெடாரான் கம்முனிடி  சிலாங்கூரும் (எம்பவர்)  இன்று  விடுத்த  ஒரு கூட்டறைக்கையில்  மலேசியாவில்  செயல்படும்  இணையச்  செய்தித்  தளங்களைப்  பதிவு  செய்ய  வேண்டும்  என்று  சட்டம் …

மூத்தோர் ஆணையம் அமைத்து அரசாங்கக் கவிழ்ப்புப் பற்றி விசாரிக்க வேண்டும்

பிரதமர்  நஜிப்  அப்துல் ரசாக், சட்டத்துறைத்  தலைவர்  அப்துல்  கனி  பட்டேலையும்  துணைப்  பிரதமர் முகைதின்  யாசினையும்  பதவிநீக்கம்  செய்தது  பல  ஊகங்களுக்கு  இடமளித்தது. அது, பிரதமரைக்  கவிழ்க்கும்  திட்டத்தை  முறியடிக்கும்  நடவடிக்கை  எனச்  சிலர்  கூறிகொண்டிருக்கிறார்கள். இன்னும்  பலர்  பலவிதமாக  பேசிக்  கொள்கிறார்கள். இதற்கு  முடிவு காண …

சுஹாகாம்: பல்கலைக்கழக மாணவர்களுக்குக் கட்டுப்பாடு கூடாது

பல்கலைக்கழகங்கள்  மாணவர்களின்  அடிப்படை  உரிமைகளுக்கு  மதிப்பளிப்பதற்காக  சட்டத்தில்  அவசர  திருத்தம்  செய்யப்பட  வேண்டும்  என்கிறது  மலேசிய  மனித  உரிமை  ஆணையம் (சுஹாகாம்). பல்கலைக்கழகங்கள் பல்கலைக்கழகங்களில்  பின்பற்றுவதற்காக  விதிமுறைகளை  வகுக்கும்போதும்  செயல்படுத்தும்போதும்    மாணவர்களின்  அடிப்படை  உரிமைகளுக்கு  மதிப்பளிக்க  வேண்டும்  என  சுஹாகாம்  தலைவர்  ஹஸ்மி  அகாம்  கேட்டுக்கொண்டார். “குறிப்பாக, பல்கலைக்கழகங்கள் …

நஜிப்புக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை பாஸ் ஆதரிக்கும்

நாடாளுமன்றத்தில்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்மீது  நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு  நடைபெறுமானால்  பாஸ்  அதற்கு  ஆதரவாக  வாக்களிக்கும். “பிரதமருக்கு  எதிராக  நம்பிக்கையில்லா  தீர்மானம்  கொண்டுவரப்பட்டால்  பாஸ்  அதை  ஆதரிக்கும். ஏனென்றால், 1எம்டிபி-க்கு  எதிராக  இதுவரை  எடுக்கப்பட்ட  நடவடிக்கைகளும்  ரிம2.6 பில்லியன்  ‘நன்கொடை’ தொடர்பில்  முன்வைக்கப்பட்ட  விளக்கமும்  மக்களுக்குத்  திருப்தி  அளிக்கவில்லை”,…

பெர்சே: போலீஸ் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராகச் செயல்படக்கூடாது

அரசாங்கத்தைக் கவிழ்க்க மக்களைத் தூண்டிவிடக் கூடாது என்று பெர்சேவுக்கு போலீஸ் விடுத்திருந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து போலீசார் ஆகஸ்ட் 29 இல் நடைபெறவிருக்கும் பெர்சே 4 பேரணிக்கு எதிரான நடவடிக்கை எடுத்தால் அது போலீசாரே நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு கெடுதல் விளைவிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாகும் என்று அந்த அரசு சார்பற்ற அமைப்பு…

ஹாடி பிரதமரிடம் பிரியமாக இருக்கிறார் அதனால் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு வெற்றிபெறாது

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்குக்கு  எதிராகக்  கொண்டுவரப்படும்  நம்பிக்கையில்லாத்  தீர்மானம்  வெற்றிபெறும்  என்ற  நம்பிக்கை  டிஏபி  பெருந்  தலைவர்  லிம்  கிட்  சியாங்குக்கு  இல்லை. எதிரணியிலேயே  அதற்கு  எதிர்ப்பு  இருக்கும், குறிப்பாக  பாஸ்  அதை  ஆதரிக்காது  என்றவர்  நினைக்கிறார். அம்னோ  தலைவர்  ஒருவர் எதிரணி  மற்றும்  ஆளும்  கட்சி …

டிபிகேஎல்லிடம் ‘பணிந்து போகவில்லை’:பெர்சே வலியுறுத்து

பெர்சே  கோலாலும்பூர்  மாநகராண்மைக்  கழகத்துக்கு  விட்டுக்கொடுத்து  ‘அடிபணிந்து  போவதாக’க்  கூறப்படுவதை  அக்கூட்டமைப்பின்  தலைவர்  மரியா  சின்  அப்துல்லா  மறுத்துள்ளார். ஆகஸ்ட்  29-30 இல்  பேரணி  நடத்த  வேண்டாம்  என்றும்  பேரணியை  வேறு  இடங்களில்  நடத்துமாறும்  டிபிகேஎல்  கேட்டுக்கொண்டிருப்பதை  மரியா  சுட்டிக்காட்டினார். ஆனாலும், பெர்சே 4  பேரணி  டட்டாரான்  வட்டாரத்தில்தான் …

பெர்சே 4-குக்கு டட்டாரான் மெர்டேகாவில் இடமில்லை

டட்டாரான்  மேர்டேகாவில்  பேரணி நடத்துவது  முடியாத  செயல்  என்று கோலாலும்பூர்  மாநகராண்மைக்  கழக (டிபிகேஎல்) மேயர்  முகம்மட்  அமின்  நோர்டின்  அப்துல்  அசீஸ்  கூறினார். மெர்டேகா  தினக்  கொண்டாட்டத்துக்கான  ஒத்திகைகளுக்கும்  மற்ற  ஏற்பாடுகளுக்கும்   டட்டாரான்  மெர்டேகா  பயன்படுத்திக்  கொள்ளப்படும்  என்பதே  இதற்குக்  காரணம்  என்றும்  அமின்  நோர்டின்  கூறினார்.…

நஜிப்: மலேசியா தோல்வி அடைந்த நாடா? இல்லவே இல்லை

மற்ற  நாடுகளைவிட  சிறப்பாக  செயல்பட்டுவரும்  மலேசியா, நிச்சயமாக  ஒரு  தோல்வி  கண்ட  நாடு  அல்ல  என்கிறார்  பிரதமர்  நஜிப்  அப்துல் ரசாக். “இதில்  வேடிக்கை என்னவென்றால்  இந்தத் ‘தோல்வி கண்ட’ நாடுதான்  2014-2015 இஸ்லாமியப்  பொருளாதாரக்  குறியீட்டில் (GIEI)  முதலிடத்தில்  இருக்கிறது”, என்றாரவர். இன்று  காஜாங்கில்  அனைத்துலக வசத்தியா…

மகாதிர் பிரதமராக இருந்தால் ஊழல் தடுப்பாளர்கள் அவர் அருகில்கூட செல்ல…

டாக்டர்  மகாதிர்  முகம்மட்,  மலேசிய  ஊழல்தடுப்பு  ஆணைய(எம்ஏசிசி)த்தின்   விசாரணையைப்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  கெடுக்கப்  பார்க்கிறார்  எனக்  குற்றஞ்  சாட்டுகிறார்.  ஆனால், அந்த  முன்னாள்  பிரதமர்  மட்டும்  இப்போது  பதவியில்  இருந்தால் ஊழல்தடுப்பு  ஆணையம்  அவர்மீது  விசாரணையையே  தொடங்கி  இருக்காது. நஜிப்பின்  வங்கிக்  கணக்கில்  ரிம2.6 பில்லியன் …

மகாதிர்: பிரதமர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் பயனற்றது

  நாடாளுமன்ற மக்களவையில் எடுக்கப்படும் ஒரு நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் வழி பிரதமர் நஜிப் பதவியிலிருந்து அகற்றப்பட மாட்டார் என்று முன்னாள் பிரதமர் மகாதிர் கூறுகிறார். இது மிகக் கடினமானது ஏனென்றால் கிட்டத்தட்ட அனைத்து அம்னோ உறுப்பினர்களும் அவருக்குக் கடமைப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. தீர்மானத்தை நிறைவேற்ற எதிர்க்கட்சிக்கு போதுமான உறுப்பினர்கள்…

“குகைகள் யுனெஸ்கோ அங்கீகாரம் பெற தகுதி பெறவில்லை”

  பத்துமலை உலகப் பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ உலகப் பாரம்பரியப் பட்டியலில் இடம்பெற மலேசியா மனு தாக்கல் செய்யாது. மாறாக, அந்தச் சுற்றுலா   சின்னமான அவ்விடத்தை ஒரு தேசிய பாரம்பரியத் தளமாக அறிவிக்க சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சு உறுதியளிக்கிறது என்று தஸ்டார்ஓன்லைன் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.…

அரசாங்கத்தைக் கவிழ்க்க சதி என்பதை ரபிடா நம்பவில்லை

அரசாங்கத்தையும்  பிரதமர்  நஜிப்  அப்துல் ரசாக்கையும்  கவிழ்க்க  அம்னோ  தலைவர்  ஒருவர்  சதி  செய்கிறார்  என்று  கூறப்படுவதை  முன்னாள்  அமைச்சர்  ரபிடா  அசீஸ்  நம்பவில்லை. துணைப்  பிரதமர்  அஹ்மட்  ஜாஹிட்  ஹமிடி  அவ்வாறு  கூறுவதைக்  கேட்டு  அதிர்ச்சி  அடைவதாக  அவர்  குறிப்பிட்டார். “சதித்  திட்டங்கள்  (தலைமையை) முடிவு  செய்வதில்லை.…

ஐஜிபி: பெர்சே புக்கிட் ஜாலில் அரங்கத்தைப் பயன்படுத்துவதே நல்லது

தேர்தல்  சீரமைப்புக்குப்  போராடும்  அமைப்பான  பெர்சே,  பெர்சே 4   பேரணியை  புக்கிட்  ஜாலிலில்  உள்ள   தேசிய  ஸ்டேடியத்தில்  நடத்துவதே  நல்லது  என்கிறார்  தேசிய  போலீஸ்  படைத்  தலைவர்  காலிட்  அபு  பக்கார். 100,000 பேர்  ஒன்றுகூடுவதற்கு  புக்கிட்  ஜாலில்  அரங்கமே  சரியான  இடம்  என  காலிட்  கூறினார். பேரணியை …

அரசியல் நன்கொடைச் சட்டத்தைக் கேலி செய்கிறார் சைபுடின்

அம்னோ  உறுப்பினர்  சைபுடின்  அப்துல்லா, பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கின்  அரசியல்  நிதி  மீதான  குழு  அமைக்கும்  திட்டத்தை  மறைமுகமாகக்  கேலி  செய்துள்ளார். “காட்டை  மொத்தமாக  அழித்து  ஏப்பம்  விட்டாயிற்று. இப்போது சுற்றுச்சூழல்  பற்றியும்  மரம்  நடுவது  பற்றியும் விவாதிக்க ஒரு  குழு  அமைக்க  முன்மொழியப்பட்டுள்ளது”, என  சைபுடின் …

நஜிப்பைக் கவிக்கத் திட்டமிடுபவர் வயதானவராம்: ஜாஹிட் கூறுகிறார்

துணைப்  பிரதமர்  அஹ்மட்  ஜாஹிட்  ஹமிடி, ‘வயோதிகர்’ ஒருவர்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கைக்  கவிழ்க்கச்  சதி  செய்வதாகக்  கூறினார். நேற்று  லூமுட்  அம்னோ  ஆண்டுக்  கூட்டத்தில்  இதைத்  தெரிவித்த  ஜாஹிட்  அந்த  மூத்த  சதிகாரரின்  பெயரை  வெளியிடவில்லை. “பெரிய இலட்சியத்தைக்  கொண்டவர். இப்போது ‘பின்வாசல் வழியாக’ நுழையப் …

அரசாங்கத்தைக் கவிழ்க்கும் முயற்சிகளை போலீஸ் ஆராயும்

அரசாங்கத்தைக்  கவிழ்க்கும்  இயக்கமொன்று   மேற்கொள்ளப்பட்டிருப்பதாக்  துணைப்  பிரதமர்  அஹ்மட்  ஜாஹிட் ஹமிடி  கூறியிருப்பதன்  தொடர்பில்  போலீசார்  மூன்று  புகார்களைப்  பெற்றுள்ளனர். அப்புகார்கள்மீது,   நாடாளுமன்ற  ஜனநாயகத்துக்குக்  கேடு  செய்யும்  நடவடிக்கைகள்  தொடர்பான  குற்றவியல்  சட்டம்  பகுதி  124பி-இன்கீழ்  விசாரணை நடத்தப்படும்  எனப்  போலீஸ் படைத்தலைவர்  காலிட்  அபு  பக்கார்  கூறினார்.…

சிலாங்கூரிடம் ‘யாரோ ஒருவருக்குக் கிடைத்த நன்கொடையை’விட ரிம1 பில்லியன் கூடுதலாகவே…

சிலாங்கூர்  மந்திரி  புசார்  அஸ்மின்  அலி, இன்று  காலை  மாநிலக்  கையிருப்புப்  பற்றிப்  பேசியபோது  பிரதமர்  நஜிப்  அப்துல் ரசாக்கையும்  இலேசாகக்  கிண்டலடித்தார். பிரதமர் பெயரைக்  குறிப்பிடாமலேயே, “2015 ஆகஸ்ட்  13  முடிய.  நம்  மாநிலத்  தொகுநிதியில் ரிம3.73 பில்லியன்  உள்ளது. இது  யாரோ  ஒருவருக்குக்  கிடைத்த  நன்கொடையைவிட …

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு சட்டவிரோதமானதல்ல

நம்பிக்கையில்லா  வாக்கெடுப்பின்  வழி  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கைக்  கவிழ்ப்பது  சட்டவிரோதமான  செயலல்ல  என்கிறார்  பிகேஆர்  எம்பி  ஒருவர். நம்பிக்கையில்லா  வாக்கெடுப்பு  என்பது  அரசமைப்புப்படியானது,  மக்களின்  விருப்பத்தைப்  பிரதிபலிப்பது  என  அலோர் ஸ்டார்  எம்பி  கூய் ஹிஸ்யாவ்  லியோங்  கூறினார். தேர்தல்கள்  மூலமாக  மட்டுமே  அரசாங்கத்தை  மாற்ற  முடியும் …