சிலாங்கூர் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரக் கழகத்தின் (Selangor Information Technology & Digital Economy Corporation) ஆலோசகராக நூருல் இஸ்ஸா அன்வாரின் நியமனத்தை பெர்சத்து உச்ச கவுன்சில் உறுப்பினர் வான் அஹ்மத் பய்சல் வான் அகமது கமால் ஆதரித்தார். சிடெக்கை மேலும் வளர்ப்பதற்குத் தேவையான அனைத்தையும்…
ஹாடிக்கு உதவுமாறு தூதரகத்துக்கு பிரதமர் உததரவு
இஸ்தான்புல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங்குக்குத் தேவையான உதவிகளைச் செய்யுமாறு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் துருக்கியிலுள்ள மலேசிய தூதரகத்துக்கு உத்தரவிட்டிருக்கிறார். “ஹாடி ஆவாங் இஸ்தான்புல் மருத்துவமனையில் இருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதும் இன்று காலை தூதரகத்தைத் தொடர்புகொண்டு தேவையான உதவிகளை வழங்கும்படி கூறினேன்”, என …
வாக்காளர் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் டிஏபி கவலை
தெலோக் இந்தான் இடைத் தேர்தலில் பிற்பகல் மணி 2வரை 52.21 விழுக்காட்டினர் அல்லது 31,286 பேர் வாக்களித்திருப்பதாக தேர்தல் ஆணையம் (இசி) கூறியது. இளம் வாக்காளர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாய் இசி தலைவர் அப்துல் அசீஸ் முகம்மட் யூசுப் டிவி 3 செய்தியில் கூறினார். பிற்பகலில் நிலைமை மாறலாம் …
எம்ஏசிசி விசாரணைக்கு உள்பட்ட தயிப்புக்கு ஏன் துன் பட்டம்?
முன்னாள் சரவாக் முதலமைச்சர் அப்துல் தயிப் முகம்மட்மீது ஊழல்-தடுப்பு ஆணையத்திடம் எண்ணற்ற புகார்கள் செய்யப்பட்டுள்ள வேளையில் அவருக்குப் பேரரசர் துன் பட்டம் வழங்கியது சரவாக்கியர்களுக்கு வியப்பளிக்கிறது என சரவாக் பிகேஆர் தலைவர் பாரு பியான் கூறியுள்ளார். தென்கிழக்காசியாவின் மிகப் பெரிய பணக்காரர்ர்களில் ஒருவராகக் கருதப்படும் தயிப், 33 ஆண்டுகள் …
இஸ்வானிடமிருந்து இன்னும் பிள்ளை மீட்டுத் தரப்படவில்லை
சிரம்பான் உயர் நீதிமன்றம், எஸ். தீபாவின் வழக்கில் அவரின் ஆறு வயது மகனை மதம் மாறிய தந்தை இஸ்வான் அப்துல்லாவிடமிருந்து மீட்டுக்கொடுக்குமாறு போலீசுக்கு உத்தரவிட்டு எட்டு நாளாகிறது. உயர் நீதிமன்றம், பிள்ளைகளைப் பராமரிக்கும் உரிமையை தீபாவுக்கு அளித்த இரண்டாவது நாள் இஸ்வான் ஆறு-வயது மகனைக் கடத்திச் சென்றார். சிரம்பான் …
தெலோக் இந்தானில் வாக்களிப்பு மெதுமெதுவாக சூடு பிடிக்கிறது
தெலோக் இந்தான் இடைத் தேர்தலில் வாக்களிப்பு சுறுசுறுப்பாக நடைபெறுகிறது. இந்த இடைத் தேர்தல் டிஏபி-இன் டியானா சோபியா முகம்மட் டாவுட்டுக்கும் பிஎன்- னின் மா சியு கியோங்-குமிடையிலான நேரடிப் போட்டியாக அமைந்துள்ளது. 13-வது பொதுத் தேர்தலுக்குப் பிறகு நடைபெறும் போட்டிமிக்க ஒரு தேர்தலாகவும் இது விளங்குகிறது. காலை எட்டு …
இந்திரா காந்தி வழக்கு: சிவில் நீதிமன்றம் ஷரியா நீதிமன்றத்தை விட…
சிவில் உயர்நீதிமன்றம் ஷரியா நீதிமன்றத்தை விட உயர்வான நீதிபரிபாலனத்தைக் கொண்டது என்று ஈப்போ உயர்நீதிமன்ற நீதிபதி இன்று தீர்ப்பளித்தார். இஸ்லாத்திற்கு மதம் மாறாத இந்திரா காந்தி நீதி மன்ற உத்தரவுப்படி தமது குழந்தையை தம்மிடம் ஒப்படைக்குமாறு இஸ்லாத்திற்கு மதம் மாறிவிட்ட தமது முன்னாள் கணவருக்கு எதிராகத் தொடர்ந்திருந்த…
இந்திய வாக்காளர்களுக்கு நில விண்ணப்பங்கள்
பிஎன்னுக்கு நட்பான கட்சி ஒன்று தெலோக் இந்தான் இந்திய வாக்காளர்களுக்கு நிலத்துக்கு விண்ணப்பம் செய்யும் பாரங்களை விநியோகித்ததாம். நாளைய இடைத் தேர்தலில் பிஎன்னுக்கு ஆதரவு தேடுவதற்காக அவ்வாறு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தியர் முன்னேற்ற முன்னணி (ஐபிஎப்)யைச் சேர்ந்தவர்கள் வீடு-வீடாகச் சென்று ஆதரவு திரட்டியபோது அந்த விண்ணப்பப் பாரங்களை வழங்கினார்களாம்.…
மா: வெளியூர் வாக்காளர்களா நகரின் தலைவிதியைத் தீர்மானிப்பது?
தெலோக் இந்தான் இடைத் தேர்தலில் போட்டியிடும் பிஎன் வேட்பாளர், அந்நகரின் தலைவிதியைத் தீர்மானிக்கும் பொறுப்பை வெளியூர் வாக்காளர்களிடம் விட்டுவிடக் கூடாது என்று உள்ளூர் மக்களிடம் வலியுறுத்தினார். வெளியூரிலிருந்து வரும் வாக்காளர்களை “வெளியார்” என்று குறிப்பிட்ட மா, அவர்கள் எதிரணி-ஆதரவாளர்கள் என்றும் உள்ளூர் பிரச்னைகள் பற்றிக் கவலைப்படாதவர்கள் என்றும் கூறினார்.…
தேடும் இடம் தொடர்பில் மலேசியாவின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை
காணாமல்போன எம்எச்370 விமானத்தைத் தேடும் இடத்தை மாற்றிக்கொள்ள மலேசியா எண்ணவில்லை எனப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இன்று பெய்ஜிங்கில் கூறினார். காணாமல்போன விமானத்தைத் தேடும் கூட்டு ஒருங்கிணைப்பு மையம்(ஜேஏசிசி) விடுத்துள்ள அறிக்கை பற்றி வினவப்பட்டதற்கு நஜிப் அவ்வாறு கருத்துரைத்தார். ஆஸ்திரேலியாவில் செயல்படும் ஜேஏசிசி, தேடும் பணியை …
துணைப் பிரதமர்: எதிரணியனர் காலஞ்சென்ற சுல்தானை மதிக்கவில்லை
துணைப்பிரதமர் முகைதின் யாசின், காலஞ்சென்ற பேராக் சுல்தான் சுல்தான் அஸ்லான் முஹிப்பிடின் ஷா-வுக்கு மரியாதை தெரிவிக்காமல் நேற்றிரவு தெலோக் இந்தானில் பரப்புரையைத் தொடர்ந்து நடத்திய எதிரணியினரைக் கண்டித்தார். பிஎன், ஏற்கனவே செய்த முடிவின்படி, காலஞ்சென்ற சுல்தானுக்கு மரியாத தெரிவிக்க இடைத் தேர்தல் நிகழ்வுகளை நிறுத்தி வைத்தது என்றாரவர். “எதிரணியினர் …
பதின்ம வயது பெண்ணிடம் பாலியல் வல்லுறவு: மஇகாவும் டிஏபியும் கண்டனம்
கிளந்தான், கெதேரே-இல் பதின்ம வயது பெண் 38 பேரால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட சம்பவத்தை மஇகா மகளிர் அணியும் டிஏபி மகளிர் அணியும் கண்டித்துள்ளன. இப்படிப்பட்ட கொடூரச் செயல்களை ஒடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவை வலியுறுத்தின. பெண்களுக்கு எதிரான வன்முறை பெண்கள் சம்பந்தப்பட்ட விவகாரம் மட்டுமல்ல …
காலஞ்சென்ற சுல்தானை அவமதித்தோரை எம்சிஎம்சி தேடுகிறது
அரசக் கட்டமைப்பை, அதிலும் குறிப்பாக காலஞ்சென்ற பேராக் சுல்தான் அஸ்லான் முஹிப்புடின் ஷா-வை அவமதிக்கும் வகையில் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டோரை மலேசிய தொடர்பு, பல்லூடக ஆணையம்(எம்சிஎம்சி) தேடி வருகிறது. “அவர்களை அடையாளம் காண முயன்று வருகிறோம். தகவல் அறிந்த பொதுமக்கள் எங்களுக்கு உதவ வேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறோம்”, என ஆணையத் …
மா அமைச்சர் ஆக்கப்படுவார் என்று கூறி வாக்காளர்களைக் கவரப் பார்க்கிறது…
தெலோக் இந்தான் இடைத் தேர்தலில் போட்டி கடுமையாக இருந்தாலும் வெற்றி வாய்ப்பு இருப்பதாகவே பிஎன் கருதுகிறது. பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், பிஎன் வேட்பாளர் மா சியு கியோங் வெற்றி பெற்றால் அமைச்சராக்கப்படுவார் என இன்று மீண்டும் கூறி இருப்பது அதைத்தான் காண்பிக்கிறது. கடந்த தேர்தலில் டிஏபி 7,600 …
டியானாவின் விளம்பரப் பலகைமீது ‘பாபி’ என்று எழுதப்பட்டிருந்தது
தெலோக் இந்தானில் டிஏபி வேட்பாளர் டியானா சோபியா முகம்மட் டாவுட் படத்தைக் கொண்ட ஒரு விளம்பரப் பலகை நாசப்படுத்தப்பட்டிருந்தது. ஹோட்டல் இந்தான் அருகில், ஜாலான் சுல்தான் அப்துல்லாவில் வைக்கப்படிருந்த அதன்மீது ‘பாபி(பன்றி)’ என எழுதப்பட்டிருந்தது. டியானா ஒரு மலாய்-முஸ்லிம் என்பதால் அவரைக் களங்கப்படுத்தவே அவ்வாறு செய்திருக்கிறார்கள்.
இந்தியர்கள் பழி வாங்குவர்: பிஎன்னுக்கு இண்ட்ராப் எச்சரிக்கை
புரிந்துணர்வு ஒப்பந்தம் (எம்ஓயு) நிறைவேற்றப்படும் என்ற வாக்குறுதி அளித்துவிட்டு பின்னர் மீறியதற்காக இந்தியர்கள் தெலோக் இந்தான் இடைத் தேர்தலில் கண்டிப்பாக பிஎன்னைத் தண்டிப்பார்கள் என இண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி கூறினார். தங்களின் சமூக- பொருளாதார மேம்பாட்டை வலுப்படுத்தப்போவதாக சொல்லி ஏமாற்றிய பிஎன்மீது தங்களுக்குள்ள ஆத்திரத்தை இந்தியர்கள் இடைத் தேர்தலில் …
ராஜா நஸ்ரின் பேராக் சுல்தானாக பிரகடனம்
பேராக் அரசப் பேராளர் ராஜா நஸ்ரின் ஷா, பேராக்கின் புதிய சுல்தானாக பிரகடனம் செய்யப்பட்டிருக்கிறார். இன்று கோலா கங்சார், இஸ்தானா இஸ்கண்டரியாவில் உள்ள பாலாய் ரோங்ஸ்ரீயில் (சிங்காசன மண்டபம்) ஓராங் காயா பெண்டஹாரா ஸ்ரீ மகராஜா ஜெனரல் (பணி ஓய்வுபெற்ற) முகம்மட் ஜஹிடி சைனுடின், காலஞ்சென்ற சுல்தானை அடக்கம் …
பிஎன் பரிசுக்கூடைகள் கொடுத்ததைக் கண்டிக்கிறது டிஏபி
தெலோக் இந்தான் இடைத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாள்கள் உள்ள வேளையில் நேற்று ஒரு நிகழ்வில் கலந்துகொண்ட சுமார் 100 பேருக்கு பிஎன் உணவுப்பொருள்கள் அடங்கிய பரிசுக் கூடைகளை வழங்கியது கண்டனத்துக்கு இலக்கானது. தகவல் கிடைத்து அந்நிகழ்வு நடந்த ஜாலான் பொம்பா சென்ற டிஏபி புக்கிட் காசிங் சட்டமன்ற …
முஸ்லிம் வியாபாரிகள் கேட்பரி தயாரிப்பு நிறுவனத்தின் பொருள்களைப் புறக்கணிப்பர்
கேட்பரி சாக்லெட்டில் பன்றி டிஎன்ஏ இருப்பதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், மலேசிய முஸ்லிம் மொத்த சில்லறை வியாபாரிகள் சங்க(மாவார்)த்தில் உள்ள 800 வியாபாரிகள் கிராஃப்ட் நிறுவனம் தயாரிக்கும் பொருள்களை ஒட்டுமொத்தமாக புறக்கணிப்பர். சுகாதார அமைச்சின் சோதனைகளில் இரண்டு வகை கேட்பரி சாக்லெட்டுகளில் பன்றி டிஎன்ஏ கலந்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து …
ச்சேகுபார்ட் பிகேஆரிலிருந்து நீக்கப்பட்டார்
‘ச்சேகுபார்ட்’ என்று பிரபலமாக விளங்கும் பத்ருல் ஹிஷாம் ஷாஹிரின், பிகேஆர் தேர்தல்களில் முறைகேடுகள் நிகழ்ந்திருப்பதாகவும் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியதால் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். “பத்ருல் ஹிஷாம் ஷாஹிரினுக்கு விளக்கம்கேட்டு கடிதம் அனுப்பப்படும். அவர்மீது விசாரணை முடியும்வரை அவர் இடைநீக்கம் செய்யப்படுகிறார்”, என பிகேஆர் ஒழுங்கு வாரியத் …
நுருல் இஸ்ஸா இரு பிள்ளைகளையும் தாமே பராமரிக்க விரும்புகிறார்
லெம்பா பந்தாய் எம்பி நுருல் இஸ்ஸா அன்வார், தம் இரு பிள்ளைகளைப் பராமரிக்கும் பொறுப்பு தம்மிடமே ஒப்படைக்கப்பட வேண்டும் என கோலாலும்பூர் ஷியாரியா உயர் நீதிமன்றத்தில் மனு செய்துகொண்டிருக்கிறார். ஏற்கனவே, அவர் தம் கணவர் ராஜா அஹ்மட் ஷரிரிடமிருந்து மணவிலக்குக் கோரி செய்துகொண்ட மனு சமரசக் குழு ஒன்றால் …
மக்கள் சுல்தான் அஸ்லான் ஷாவுக்கு இறுதி மரியாதை செலுத்தி வருகின்றனர்
காலஞ்சென்ற பேராக் சுல்தான் சுல்தான் அஸ்லான் ஷாவுக்கு இறுதி மரியாதை தெரிவிப்பதற்கு ஆட்சியாளர்கள், நாட்டின் பெருமக்கள், வெளிநாட்டுத் தூதரக அதிகாரிகள், பொதுமக்கள் எனப் பலரும் கோலா கங்சார் இஸ்தானா இஸ்கண்ட்ரியா வளாகத்தில் திரண்டுள்ளனர். காலை மணி 8.30க்கே மக்கள் வரத் தொடங்கி விட்டனர். அரை மணி நேரம் கழித்து …
என்ஜிஓ: உண்மைக்கு நஜிப் அரசாங்கம் ஏகபோக உரிமையாளர் அல்ல
மாறுபடும் கருத்துக்களை முடக்கிப்போடும் முயற்சிகளை பிரதமர் நஜிப்பின் அரசாங்கம் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று நியூ யோர்கைத் தளமாகக் கொண்ட மனித உரிமை அமைப்பு ஒன்று வலியுறுத்தியுள்ளது. பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் அவரின் அதிகாரிகளும் மக்களின் குறைகூறல்களுக்கும் அவற்றை ஊடகங்கள் வெளியிடுவதற்கும் இடமளிக்க வேண்டும் என மனித …
மலேசிய உள்நாட்டு விவகாரங்களில் சிறீலங்கா தூதரகம் தலையீடு!, குலா காட்டம்!
- மு. குலசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர். மே 28, 2014. கடந்த 15 ஆம் தேதி 3 தமிழ் ஈழ அகதிகள் மலேசிய உள்துறை அமைச்சால் கைது செய்யப்பட்டு 14 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். பின்பு அந்த மூவரும் பயங்கரவாதிகள் எனக் கூறப்பட்டு சிறீலங்கா அரசிடம் ஒப்படைக்கப்பட்டனர்.…