டிசம்பர் 6 ஆம் தேதி நிலவரப்படி நாடு முழுவதும் டெங்கியால் ஏற்பட்ட இறப்புகள் கடந்த ஆண்டு பதிவான 111 உடன் ஒப்பிடும்போது 61.3 சதவீதம் குறைந்து 43 ஆக உள்ளது என்று சுகாதார அமைச்சர் சுல்கிப்லி அகமது கூறுகிறார். 2024 ஆம் ஆண்டு முழுவதும் பதிவான 118,291 உடன்…
‘ஆணவம் பிடித்த’ அட்னான் பதவி விலக வேண்டும்: உத்துசான் கோரிக்கை
அம்னோவுக்குச் சொந்தமான உத்துசான் மலேசியா பகாங் மந்திரி புசார் அட்னான் யாக்கூப்மீது பாய்ந்துள்ளது. அவர் ஆணவம் பிடித்தவர் என்றும் அவர் பதவியில் தொடர்வது நல்லதல்ல என்றும் அது எச்சரித்தது. கேமரன் மலையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு அதில் மூவர் பலியானதை அடுத்து அச்செய்தித்தாள் இவ்வாறு காட்டமாகக் கருத்துத் தெரிவித்துள்ளது.…
மாணவர்கள் கூடுவதைத் தடுக்க இருளை நாடும் இன்னொரு பல்கலைக்கழகம்
இன்றிரவு தங்களுடைய பல்கலைக்கழக வளாகத்தில் கூடுவதற்கு மாணவர்கள் தயாராகிக் கொண்டிருக்கும் வேளையில் அதனைத் தடுப்பதற்கு இன்னொரு பல்கலைக்கழகம், இத்தடவை மலேசியா சாபா பல்கலைக்கழகம் (யுஎம்எஸ்), இருளை அரவணைத்துள்ளது. அப்பல்கலைக்கழகத்தில் மின்சார விநியோகம் நிறுத்தப்படவுள்ளது. மலாயா பல்கலைக்கழ மாணவர் மன்றத்தின் தலைவர் ஃபஹாமி ஸைநோல் இன்றிரவு கோத்தா கின்னாபாலுவில்…
ஆக்ஸ்பர்ட் யூனியன் மாதிரியான அமைப்பை யும் ஏற்படுத்த வேண்டும்
"சர்ச்சைக்குரிய நபர்கள்" உரையாற்றுவதற்காக அதன் வளாகத்திற்கு அழைக்கப்படுவதில் அதற்கு எவ்விதத் தொடர்பும் இல்லை என்பதை நிலைநிறுத்திக் கொள்வதற்கு மலாயா பல்கலைக்கழகம் உலகப் புகழ் பெற்றதும் சுயேட்சையானதுமான ஆக்ஸ்பர்ட் யூனியன் போன்ற ஓர் அமைப்பை உருவாக்க வேண்டும் என்று ஆலோசனை கூறப்பட்டுள்ளது. ஆக்ஸ்பர்ட் யூனியன் மாதிரியை பயன்படுத்துவதன் மூலம்…
பிஏஎம்: இரண்டாவது சோதனையிலும் ‘உறுதியானது’; பூப்பந்தாட்டக்காரருக்குத் தற்காலிகத் தடை
தேசிய பூ பந்து விளையாட்டு வீரர் ஒருவர்மீது இரண்டாவது தடவையாக நடத்தப்பட்ட சிறுநீர் சோதனையிலும் ஊக்க மருந்து கலந்திருப்பது உறுதியாகி இருப்பதால், விசாரணை முடியும்வரை அவர் விளையாட்டுகளில் கலந்துகொள்ளத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சோதனை முடிவுகளை மலேசிய பூ பந்து சங்க (பிஏஎம்) துணைத் தலைவர் நோர்சா ஜக்கரியா உறுதிப்படுத்தினார். ஆனால்,…
சிறப்புக் குழு கேமரன் வெள்ளத்தை ஆராயும்
சிறப்புப் பேரிடர் குழு, திங்கள்கிழமை கூடி கேமரன் மலையில் நிகழும் வெள்ளப் பெருக்குகள், நிலச்சரிவுகள் பற்றி விவாதிக்கும் எனப் பிரதமர்துறை அமைச்சர் ஷஹிடான் காசிம் கூறினார். அக்கூட்டத்துக்குப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தலைமை தாங்குவார். “அக்கூட்டம், வருங்காலத்தில் அப்படிப்பட்ட சம்பவங்கள் நடப்பதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் பற்றி விவாதிக்கும்”,…
பிடிபிடிஎன் புதியவர்களைத் தண்டிப்பது நியாயமல்ல
தேசிய உயர்க்கல்விக் கடன் நிதி (பிடிபிடிஎன்)-இலிருந்து ஆகக் கடைசியாகக் கடன் பெற்றவர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுக் கொண்டிருப்பார்கள். ஆனால், அந்நிதியிலிருந்து இனிமேல் கடன் பெறப்போகின்றவர்களை நினைக்கும்போதுதான் வருத்தமாக இருக்கிறது. அவர்களுக்கான கடன் தொகைகள் இம்மாதத்திலிருந்து குறைக்கப்படுவதுதான் இதற்குக் காரணமாகும். கடன் வாங்கியவர்கள் திருப்பிச் செலுத்தாததால் பிடிபிடிஎன் கல்விக் கடன் …
மகாதிர் கட்சியை இழிவுபடுத்துவதாக சிலாங்கூர் அம்னோ புலம்பல்
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், சிலாங்கூர் அம்னோ ‘ஊழல்’ தோற்றத்தைக் கொண்டிருப்பதாகக் கூறி கட்சியை இழிவுபடுத்தியிருக்கிறார் என அதன் செயலாளர் ஜொஹான் அப்துல் அசீஸ் கூறினார். தகுந்த ஆதாரமின்றி மகாதிர் அவ்வாறு கருத்துரைப்பது முறையாகாது என்றாரவர். “என்னைப் பொருத்தவரை துன் ஊழல் பற்றிக் குறிப்பிட்டிருப்பது தவறு. அதற்கான …
மாணவர் பேரணி நடப்பதைத் தடுக்க யுஐஏ இழுத்து மூடப்பட்டது
மலாயாப் பல்கலைக்கழகத்தைப் பின்பற்றி யுனிவர்சிடி இஸ்லாம் அந்தாராபங்சா(யுஐஏ)-வும் மாணவர் பேரணி நடப்பதைத் தடுக்கும் நடவடிக்கையில் இறங்கி நுழைவாயில்களை இழுத்து மூடி மின்சாரத்தையும் துண்டித்துவிட்டது. அதன் விளைவாக நேற்றிரவு நூற்றுக்கணக்கான மாணவர்கள், பல்கலைக்கழகத்துக்கு வெளியில் கூடினர்.. பேரணியில் யுஎம் மாணவர் மன்றத் தலைவர் பாஹ்மி சைனலும் சட்டப் பேராசிரியர் அசீஸ் …
பாக் சமட்-டுக்கு அரசாங்க-ஆதரவு தொழுகையுரைகளைக் கேட்டு அலுத்துப் போய்விட்டதாம்
தேசிய இலக்கியவாதி ஏ.சமட் சையிட் வெள்ளிக்கிழமை தொழுகைக்குத் தேசிய பள்ளிவாசலுக்குச் செல்வதை நிறுத்தி விட்டார். அங்கு அரசாங்க-ஆதரவு தொழுகையுரைகளைக் கேட்டுக் கேட்டு எரிச்சலடைந்து விட்டாராம் அவர். பாக் சமட் என்ற பெயரில் பிரபலமாக விளங்கும் அந்த இலக்கியவாதி இப்போதெல்லாம் அங்கிருந்து இரண்டு கிலோமீட்டர் தள்ளியிருக்கும் மஸ்ஜித் இந்தியா-வுக்குத்தான் செல்கிறார்.…
அன்வாருக்குக் கூடுதல் தண்டனை பெற்றுத் தருவதில் குறியாக இருக்கிறார் ஷாபி
கூட்டரசு நீதிமன்றம், அன்வார் இப்ராகிம் குற்றவாளிதான் என்ற தீர்ப்பை நிலைநிறுத்தும் என்று நம்பிக்கைக் கொண்டிருக்கும் அரசுத்தரப்பு வழக்குரைஞர் முகம்மட் ஷாபி அப்துல்லா, அவருக்கு மேலும் கடுமையான தண்டனையைப் பெற்றுத்தருவதில் பிடிவாதமாக இருக்கிறார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டால் அவருக்குக் கொடுக்கப்பட்ட ஐந்தாண்டுச் சிறைத் தண்டனையைக் கூட்டுமாறு …
தொகுதிகள் கூட்டப்படுவதை பக்கத்தான் ஒப்புக்கொள்ளக்கூடாது
தேர்தல் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதற்கு பக்கத்தான் உடன்படக்கூடாது எனத் தேர்தல் சீரமைப்புக்காகப் போராடும் அமைப்புகளான பெர்சேயும் திண்டாக் மலேசியாவும் கேட்டுக்கொண்டுள்ளன. “சமூக அமைப்புகள் திட்டவட்டமாகக் கூறியுள்ளோம்: இட எண்ணிக்கை அதிகரிப்பு வேண்டாம். “எதிரணிகள் இடங்கள் கூட்டப்படுவதற்கு ஒப்புக்கொண்டால் அதைப் பொதுமக்களுக்கு இழைத்த துரோகமாகத்தான் கருதுவோம்”, என திண்டாக் மலேசியா …
அன்வார் மேல்முறையீட்டு வழக்கு: தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது
அன்வார் மேல்முறையீட்டு வழக்கில் வாதங்கள் முன்வைக்கப்படுவதில் நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டதால், நீதிமன்றம் அதன் தீர்ப்பை பின்னொரு நாளில் அறிவிக்கும் என்று நீதிபதி அரிப்பின் தெரிவித்தார். நீதிமன்றம் அன்வாரின் பிணையையும் நீட்டித்தது. தமது வாதத்தைத் தொடங்கிய ஸ்ரீராம், புஸ்ராவி மருத்துவமனை டாக்டர் ஓஸ்மான் ஒரு நேர்மையான, நம்பிக்கைக்குரிய சாட்சி…
யுஎம்மில் எண்மருக்கு ஆதரவு தெரிவிக்க 100 மாணவர்கள் திரண்டனர்
பல்கலைக்கழகம் சட்டவிரோதமானது என அறிவித்த சொற்பொழிவை ஏற்பாடு செய்ததற்காக ஒழுங்கு நடவடிக்கையை எதிர்நோக்கியுள்ள எட்டு மாணவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க சுமார் 100 மாணவர்கள் இன்று காலை மலாயாப் பல்கலைக்கழக(யுஎம்)த்தில் ஒன்று திரண்டனர். அக்டோபர் 27-இல், எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் கலந்துகொண்ட ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்த யுஎம் …
பெர்சே: ஆர்ப்பாட்டத்தைவிட ஆட்சேபணை தெரிவிப்பதே மேல்
தேர்தல் தொகுதிகளை திருத்தி அமைக்கும் நடவடிக்கை நியாயமாக நடைபெறுவதை வலியுறுத்த தெரு ஆர்ப்பாட்டங்களைவிட பரப்புரைகளே மேலானவை என்று பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லா நினைக்கிறார். அரசாங்கமும் இப்போது “கெட்டிக்காரத்தனமாக” ஆர்ப்பாட்டங்கள் நடத்த இடமளிக்கிறது ஆனால், எழுப்பப்படும் கோரிக்கைகளைப் புறக்கணித்து விடுகிறது. எனவே, தேவை “புதிய வழிமுறைகள்” என்றாரவர்.…
யுஎம் கிளர்ச்சிக்கார மாணவர்களை வெளியேற்றினால் சிலாங்கூர் சேர்த்துகொள்ளும்
கடந்த மாதம் எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் கலந்துகொண்ட மாணவர் பேரணிக்கு ஏற்பாடு செய்த எட்டு மாணவர்களை மலாயாப் பல்கலைக்கழகம்(யுஎம்) வெளியேற்றினால் அவர்கள் சிலாங்கூர் கல்விக் கழகங்களில் சேர்த்துக்கொள்ளப்படுவர். “யுஎம் அம்மாணவர்களை நீக்க முடிவு செய்தால், அவர்கள் யுனிவர்சிடி சிலாங்கூர்(யுனிசெல்) அல்லது கோலேஜ் யுனிவர்சிடி இஸ்லாம் சிலாங்கூர் போன்ற …
திருநங்கைகளின் உரிமையை மதிக்க வேண்டும்: நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு
திருநங்கைகளுக்குப் பெண்கள்போல் உடை அணியவும் பாவனை செய்யவும் உரிமை உண்டு என மேல்முறையீட்டு நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. பெண்களைப் போல் நடந்துகொள்ளும் முஸ்லிம் ஆண்களைத் தண்டிக்கும் ஷியாரியா குற்றவியல் (நெகிரி செம்பிலான்) இணைப்புச் சட்டம் பகுதி 66, கூட்டரசு அரசமைப்புக்கு முரணானது என நீதிபதி ஹிஷாமுடின் …
பொதுத் தேர்தல் முடிவுகளைச் செல்லாதாக்கும் பக்கத்தான் முயற்சி தோல்வி
அழியா மை குளறுபடிகளால் 13வது பொதுத் தேர்தல் முடிவுகளைச் செல்லாதென அறிவிக்கக் கோரி பக்கத்தான் செய்திருந்த மனுவை மேல்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அந்நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகளில் இருவர், அக்கோரிக்கை ஒரு தேர்தல் மனுவாக தேர்தல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட வேண்டியது எனக் கூறினர். எனவே, தேர்தல் வழக்கான அதை …
ஸ்ரீராம்: அன்வாருக்கு ஆதரவாக இருக்க டாக்டர் ஓஸ்மானுக்கு காரணம் ஏதும்…
பெடரல் உச்சநீதிமன்றத்தில் நடந்து வரும் அன்வார் மேல்முறையீட்டு விசாரணை நாளை பிற்பகல் மணி 3.00 மீண்டும் தொடங்கும். அன்வார் தற்காப்புக் குழுவின் தலைவர் ஸ்ரீராம் அவரது வாதத்தை தொடர்வார். சைபுல்லை முதலில் சோதணை செய்த புஸ்ராவி மருத்துவமனையின் டாக்டர் ஓஸ்மான் தம்மைத் தற்காத்துக் கொள்ள இங்கு இல்லாததால்…
பாஸின் அலட்சியம் டிஏபிக்கு ஏமாற்றமளிக்கிறது
பக்கத்தான் ரக்யாட் கூட்டங்களில் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங் கலந்துகொள்ளாதிருப்பதும் அதை அற்ப விவகாரம் எனக் கூறும் அக்கட்சியின் தலைமைச் செயலாளர் முஸ்தபா அலியின் அலட்சியப்போக்கும் ஏமாற்றமளிப்பதாக டிஏபி கூறுகிறது. பக்கத்தானின் தொடர்ச்சிக்கும் தொடர்ந்து இருப்பதற்கும் அவசியமான விவகாரங்களை அற்பமானவை என்று கூறித் தட்டிக்கழிப்பது எரிச்சலூட்டுகிறது என …
அரசாங்கம் பெட்ரோல் விலையைக் குறைக்கக் காரணம் ஏதுமில்லை
உலகளவில் எண்ணெய் விலைகள் வீழ்ச்சியடைந்து வருவதையொட்டி மலேசியாவில் எண்ணெய் விலையைக் குறைக்க வேண்டியதில்லை என்று கூறும் அரசாங்கம், ரோன் 95 பெட்ரோலுக்கு இன்னமும் உதவித் தொகை கொடுக்கப்பட்டு வருவதைச் சுட்டிக்காட்டுகிறது. எதிரணித் எம்பிகள் பலரது கோரிக்கைகளுக்குப் பதிலளித்த நிதி துணை அமைச்சர் அஹ்மட் மஸ்லான், ஒவ்வொரு லிட்டர் எண்ணெய்க்கும் …
உதவித்தொகை அகற்றப்படுவதை 72விழுக்காட்டினர் ஆதரிக்கவில்லை
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று எரிபொருளுக்கும் மின்சாரத்துக்கும் கொடுக்கப்படும் உதவித் தொகை அகற்றப்படுவதை விரும்பவில்லை எனக் காண்பிக்கிறது. மலேசிய தண்ணீர், எரிபொருள் ஆராய்ச்சி சங்கம்(ஏவர்), தேசிய நடத்திய ஆய்வில், ஆய்வில் கலந்துகொண்டோரில் 27 விழுக்காட்டினர் மட்டுமே எரிபொருள், மின்சார உதவித் தொகைகளைக் குறைக்கவும் சீரமைக்கவும் அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு …
நஸ்ரி: கனிமநீர் போத்தலுக்காக தேச நிந்தனை வழக்கு போட முடியாது
கனிமநீர் போத்தலில் இந்து தெய்வ உருவம் பொறிக்கப்பட்டிருக்கும் விவகாரத்தைத் தேசிய நிந்தனைச் சட்டத்தின்கீழ் விசாரிக்க வேண்டும் என மலேசிய இஸ்லாமிய பயனீட்டாளர் சங்கம் சொல்லியிருப்பது அறிவுடைமையாகாது. இவ்வாறு குறிப்பிட்ட சுற்றுலா அமைச்சர் நஸ்ரி அசீஸ்,“நிறுவனத்தின் நிர்வாகியைத் தூக்கில் போட வேண்டும் என்கிறீர்களா? எனக்குப் புரியவில்லை”, எனச் சிரித்தார். “நிதானமாக …
சில மாணவர்களுக்காக பில்லியன் ரிங்கிட் திட்டமா?
மூன்றாண்டுகள் ஆகிவிட்டன. பில்லியன் ரிங்கிட் செலவிடப்படுள்ளது. ஆனால், 1BestariNet-டை மூன்று விழுக்காட்டுக்கும் குறைவான மாணவர்களே பயன்படுத்துகிறார்கள் என்கிறார் டிஏபி-இன் சைருல் கீர் ஜொகாரி. “இதனால். இதற்கும் பிபிஎஸ்எம்ஐ- திட்டத்துக்கு ஏற்பட்ட நிலைதானா என்ற கேள்வி எழுகிறது. அத்திட்டத்தில் கணிதம், அறிவியல் பாடங்களை ஆங்கிலத்தில் கற்பிப்பதற்கு உதவும் ஐடி வன்பொருள்கள்…


