கோவிட்-19 பெருந்தொற்றைத் தொடர்ந்து தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் மின்சார நுகர்வு கடுமையாகக் குறைந்தது என்ற நிறுவனத்தின் வாதத்தை நீதிபதி தள்ளுபடி செய்தார். "போர்ட் கிள்ளானில் (Port Klang) உள்ள நிறுவனத்தின் வளாகத்தை ஆய்வு செய்தபோது, காணாமல் போன முனைய முத்திரைகள் (terminal seals) மற்றும் கூடுதல் மின்சுற்று (additional circuit)…
தேவையற்ற இழப்புகளையும் சேதாரத்தையும் குற்றமாக்க வேண்டும்
அரசாங்கச் சேவையில் ஊழலை ஒழிக்க அரசாங்க அதிகாரிகளிடையே நிகழும் ஒழுக்கக்கேடுகளைக் குற்றச்செயல்களாக்க வேண்டும் என்கிறது மலேசிய ஊழல்-தடுப்பு ஆணையம்(எம்ஏசிசி). அப்படிச் செய்வது தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கை சுட்டிக்காட்டுவது போல், அரசாங்கச் செலவுகளில் ஏற்படும் தேவையற்ற இழப்புகளையும் சேதாரத்தையும் தடுக்கும் என எம்ஏசிசி-இன் நடவடிக்கை மீளாய்வு வாரிய(ஓபிஆர்) தலைவர் ஹடினான் …
எம்பி: அன்வார் அரச மன்னிப்பை நாட மாட்டார்
தம்மீது சுமத்தப்பட்டது ஒரு பொய்யான குற்றச்சாட்டு என்று அன்வார் இப்ராகிம் கூறிக்கொண்டிருப்பதால் அவர் அரச மன்னிப்பை நாட மாட்டார் என்கிறார் பாஸ் எம்பி காலிட் சமட். இது தம்முடைய தனிப்பட்ட கருத்து என்றும் அவர் சொன்னார். “அன்வார் அதற்கு மனுச் செய்ய மாட்டார் என்றே நம்புகிறேன் அப்படிச் செய்வது …
பிகேஆர்: அன்வார்-ஆதரவு ஆர்ப்பாட்டம் பற்றி அறியோம்
வார இறுதியில், அன்வார் இப்ராகிமின் ஆதரவாளர்கள் சோகோ, டட்டாரான் மெர்டேகா வட்டாரத்தில் ஒன்றுதிரண்டு அவர் சிறையிடப்பட்டதை எதிர்த்து பேரணி நடத்தப்போவதாக தகவல் கிடைத்திருக்கிறது என போலீசார் கூறுகிறார்கள். எப்படிப்பட்ட பேரணியையும் சமாளிக்க போலீஸ் ஆயத்தமாக உள்ளது என போலீஸ் படை துணைத் தலைவர் நூர் ரஷிட் இப்ராகிம் குறிப்பிட்டதாக …
இஸ்மாயில் சப்ரியுடன் சேர்ந்து கூட்டறிக்கையா? லியோ மறுப்பு
அமைச்சர் இஸ்மாயில் சப்ரி, சீன வர்த்தகர்களைக் குறைகூறியது பற்றி விளக்கமளிக்கும் அறிக்கை ஒன்றை வெளியிட்டு அது, மசீச தலைவருடன் சேர்ந்து வெளியிடப்படும் கூட்டறிக்கை என்றும் கூறியிருந்ததை லியோ தியோங் லாய் உடனடியாக மறுத்தார். முகநூலில் அவ்வறிக்கை பதிவான 30வது நிமிடத்தில் லியோவின் மறுப்பு டிவிட்டரில் வெளியானது. . “இஸ்மாயில் …
சிறையில் அன்வார்
குதப்புணர்ச்சி வழக்கில் ஐந்தாண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட அன்வார் இப்ராகிம் சுங்கை பூலோ சிறைச்சாலையில் தனி அறையில் வைக்கப்பட்டிருக்கிறார். அங்கு மற்ற கைதிகளும் இப்படித் தனி அறைகளில் சிறை வைக்கப்பட்டிருப்பதாக சிறைச்சாலை தலைமை இயக்குனர் சுல்கிப்ளி ஒமார் கூறினார். “ஒரு தனி சிறை அறை அவருக்கு மட்டுமே. உணவு, உடை,…
ஜாஹிட்: கைதி அன்வாருக்கு ‘விஐபி’ சலுகை கிடையாது
அன்வார் இப்ராகிம் அம்னோவில் இருந்தபோது அவரும் அஹ்மட் ஜாஹிட் ஹமிடியும் நெருக்கமான கூட்டாளியாக இருந்திருக்கலாம். அதற்காக அவர் சிறையில் தனிச் சலுகைகளை எதிர்பார்க்க முடியாது என உள்துறை அமைச்சர் ஜாஹிட் கூறினார். “சிறைச்சாலை எல்லாக் கைதிகளையும் சட்டப்படி எப்படி நடத்த வேண்டுமோ அப்படியே நடத்தும்”,என புத்ரா ஜெயாவில் செய்தியாளர்களிடம் …
எம்ஏஎஸ்-ஸுக்குக் கண்டனம் தெரிவிக்க வருகிறார்கள் எம்எச்370 பயணிகளின் உறவினர்கள்
காணாமல்போன் எம்எச்370 பயணிகளின் உறவினர்கள் ஒரு குழுவாக சீனாவிலிருந்து மலேசியா வந்துள்ளனர். எம்எச்370 “விபத்து” காரணமாகக் காணாமல்போனதாக மலேசிய அரசாங்கம் அறிவித்ததற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவே அவர்கள் வந்திருக்கிறார்கள். 15-பேரடங்கிய அக்குழுவினர், எம்ஏஎஸ் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து (டிசிஏ) அதிகாரிகளைச் சந்திக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் எம்ஏஎஸ் தலைமையகத்தின்முன் …
மகாதிர்: நான் பிரதமராக இருந்தால் பதவி விலகுவேன்
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் இன்று பிரதமராக இருந்தால் பதவியைவிட்டு விலகிச் சென்று விடுவாராம். ஒரு கேள்விக்குப் பதிலளித்த அவர், பிரதமராக இருப்பவரால் திறமையாக செயல்பட முடியாதபோது பதவி விலகுவதே நல்லது என்றார். பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைக் குறி வைத்துத்தான் அவர் இவ்வாறு கூறினார் என்பது …
சிறைச்சாலைக்குமுன் திரண்ட அன்வார் ஆதரவாளர்கள்
எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் சிறைக்கு அனுப்பப்பட்டாலும் அவரின் ஆதரவாளர்கள் அவரைக் கைவிடவில்லை. நேற்றிரவு அவரின் ஆதரவாளர்கள் தங்களின் ஆதரவைத் தெரிவிக்க சுங்கை பூலோ சிறைச்சாலைக்குமுன் ஒன்று திரண்டனர். பதாதைகளையும் மெழுகுதிரிகளையும் கையில் ஏந்தியிருந்த அவர்கள், உரத்த குரலில் “ரீபோர்மாசி”, “பேபாஸ் அன்வார்(அன்வாரை விடுவிப்பீர்)” என உற்சாகமாக முழக்கமிட்டனர்.…
நாளை நடைபெறவிருக்கும் மலேசியாகினி கருத்தரங்கு: “அன்வார் இல்லாத அரசியல்”
நேற்று பெடரல் உச்சநீதிமன்றம் எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் குற்றவாளிதான் என்று தீர்ப்பளித்து அவருக்கு முன்னதாக மேல்முறையீட்டு நீதிமன்றம் விதித்திருந்த ஐந்தாண்டு சிறை தண்டனையை நிலைநிறுத்தியது. இது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, பக்கத்தானின் எதிர்காலம் பற்றிய ஊகங்களோடு, பொதுவாக நாட்டின் அரசியல் போக்கு எப்படி இருக்கப்…
அன்வாரின் இடத்தை அஸ்மின் ஏற்பாரா? அஸ்மின் பதிலளிக்க மறுப்பு
சிலாங்கூர் மந்திரி புசார் அஸ்மின் அலியிடம் அவர் நாடாளுமன்றத்தில் அன்வார் இப்ராகிமுக்குப் பதிலாக எதிரணித் தலைவர் பொறுப்பை ஏற்கும் வாய்ப்பு உள்ளது பற்றி வினவியதற்கு அவர் பதிலளிக்கத் தயங்கினார். செய்தியாளர்கள் வற்புறுத்திக் கேட்டதற்கு அவ்விவகாரத்தில் தம் விருப்பு வெறுப்புக்கு இடமில்லை என்று கோம்பாக் எம்பியும் பிகேஆர் துணைத் தலைவருமான …
மின் கட்டணம் குறைகிறது
மார்ச் முதல் தேதி தொடங்கி ஜுன் 30-வரை மின்கட்டணத்தைக் குறைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக எரிசக்தி, பசுமை தொழில்நுட்பம் மற்றும் நீர்வள அமைச்சர் மெக்சிமஸ் ஓங்கிலி தெரிவித்தார் புதிய மின்கட்டணத்தின்வழி பயனீட்டாளர்கள் மாதம் ரிம13.50 முதல் ரிம45.00 வரை மிச்சப்படுத்தலாம் என அமைச்சர் தெரிவித்தார்.
அன்வார் குடும்பத்தாரின்‘விடுதலை நோக்கி நெடும்பயணம்’
‘விடுதலை நோக்கி நெடும்பயணம்’ என்னும் இயக்கத்தை ஏற்பாடு செய்யப்போவதாக அன்வார் இப்ராகிம் குடும்பத்தார் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் தெரிவித்தனர். அவ்வியக்கத்துக்கு அன்வார் இப்ராகிமின் இரண்டாவது மகளான நுருல் நுகா தலைமைவகிப்பார். . “நாங்கள் அவ்வியக்கத்தை வழிநடத்த ஒரு செயலகத்தை அமைத்து அன்வாரின் விடுதலைக்காகவும் அநீதிக்கு எதிராகவும் போராடுவோம்”, என …
நீதிபதிகளை நையாண்டி செய்த கேலிச்சித்திரக்காரர் கைது
ஒரு டிவிட்டர் பதிவுக்காக கேலிச்சித்திரக்காரர் ஸுனார் நேற்றிரவு கைது செய்யப்பட்டு விசாரணைக்காக மூன்று நாள் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார். கூட்டரசு நீதிமன்றம் அன்வார் இப்ராகிமின் ஐந்தாண்டுச் சிறைத்தண்டனையை நிலைநிறுத்தித் தீர்ப்பளித்ததை அடுத்து ஸுனார் டிவிட்டரில் இட்டிருந்த பதிவுக்காக அவர் கைது செய்யப்பட்டார். தேச நிந்தனைச் சட்டம் பகுதி 4(1) (சி)-இன்கீழ் …
பெர்மாத்தாங் பாவில் அன்வாரின் மகள் போட்டியிடுவாரா?
அன்வார் இப்ராகிமின் மகள் நுருல் நுகா, பெர்மாத்தாங் பாவில் போட்டியிடுவார் என்று ஊகங்கள் அடிபடுகின்றன. செய்தியாளர் கூட்டமொன்றில் அவரின் அக்காள் நுருல் இஸ்ஸாவிடம் அதைக் கேட்டதற்கு அவர் அதைப் பற்றிப் பேசுவதைத் தவிர்த்தார். அச்செய்தியாளர் கூட்டம் ‘விடுதலை நோக்கி நெடும்பயணம்’ பற்றி விளக்குவதற்காகக் கூட்டப்பட்டது என்பதால் இடைத் தேர்தல் வேட்பாளர் …
அன்வார் செவ்வாய்க்கிழமை ‘வெளியில் வருவார்’
குதப்புணர்ச்சி வழக்கில் ஐந்தாண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் அடுத்த செவ்வாய்க்கிழமை கோலாலும்பூர் உயர் நீதிமன்றத்துக்கு வருவார். அவர் வெளியுறவு அமைச்சர் அனிபா அமானுக்கு எதிராக தொடுத்துள்ள ரிம100 மில்லியன் அவதூறு வழக்கில் சாட்சியமளிக்க நீதிமன்றம் வருவார் என்பதை அவரின் வழக்குரைஞர் ஜே.லீலா மலேசியாகினியிடம் …
சிஐஜே: ஐஜிபி அவர்களே, கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்க முனயாதீர்
கருத்துச் சொல்லும் உரிமையைக் கட்டுப்படுத்த முனைவது கூடுதல் அமைதியின்மைக்கு இட்டுச் செல்லும் என ஊடகக் கண்காணிப்பு அமைப்பான சுயேச்சை இதழியல் மையம் (சிஐஜே) எச்சரித்துள்ளது. தேச நிந்தனைச் சட்டத்தையும் கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் மற்ற சட்டங்களையும் மீறுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் படைத் தலைவர் காலிட் …
பிடிவி பணியாளர்கள் சம்பளம் கேட்டு ஆர்ப்பாட்டம்
நேற்று பிற்பகல், சுமார் 20 பெர்னாமா டிவி பணியாளர்கள் தங்களுக்குக் கொடுபடாமல் இருக்கும் சம்பளத்துக்குக் கோரிக்கை விடுத்து வங்சா மாஜுவில் அமைதியான முறையில் கண்டனக் கூட்டமொன்றை நடத்தினர். அவர்கள் கைகளில் பதாகைகளையும் ஏந்தியிருந்தனர். அதில் ஒன்று 'Mana Shabery'- தொடர்பு, பல்லூடக அமைச்சர் அஹ்மட் ஷபரி சிக் எங்கே…
அன்வாரின் காரோட்டுனர்: சைபூலைவிட நான் அழகானவன்
அன்வார் இப்ராகிம் தண்டிக்கப்பட்டது அவரின் பணியாளர்களையும் பாதித்துள்ளது. அவரின் காரோட்டுனராக பணியாற்றிய அப்துல்லா சானி,55, “32 ஆண்டுகளாக அவரிடம் பணியாற்றி இருக்கிறேன்”, என்றார். “இருவரும் ஒரே அறையில் படுத்துறங்கியது உண்டு. எதுவும் நடந்ததில்லை. “அத்துடன் நான் சைபூலைவிடவும் அழகானவன்”, என்றார் அப்துல்லா. மேலும், அன்வார்மீது குதப்புணர்ச்சி குற்றஞ்சாட்டிய முகம்மட் …
அன்வார் மீதான குதப்புணர்ச்சி வழக்கு 2 இன் தீர்ப்பு அரசியல்…
-டாக்டர் சேவியர் ஜெயக்குமார், பிகேஆர் உதவித் தலைவர், பெப்ரவரி 11, 2015. மலேசிய எதிர்க்கட்சி தலைவர் அன்வார் இப்ராகிம் மீது சுமத்தப்பட்ட குதப்புணர்ச்சி வழக்கில் அவருக்கு மேல் முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, நீதித்துறையின் மீது ஏற்பட்டுள்ள அவநம்பிக்கையை மேலும் வலுப்படுத்திவிட்டது. இவ்வழக்கு நாட்டுக்குப் பெரும் அவமானமாக அமைந்து விட்டது. அரசியல்…
கூண்டில் இருந்தவாறு நீதிபதிகளைச் சரமாரியாக தாக்கினார் அன்வார்
ஐந்தாண்டுச் சிறைத்தண்டனையைக் கூட்ட வேண்டுமென்ற அரசுத்தரப்பின் முறையீட்டின்மீது வாதம் நடந்தபோது அன்வார் இப்ராகிம் ஐவரடங்கிய நீதிபதிகள் குழுவைக் காரசாரமாக தாக்கினார். தலைமை நீதிபதி நிறுத்தச் சொல்லியும் அவர் நிறுத்தாததால் நீதிபதிகள் நீதிமன்றத்திலிருந்து வெளியேறினர். நீதிமன்றத்தில் பேச அனுமதிக்கப்பட்டதும் எதிரணித் தலைவர், அரசியல் சதித்திட்டம் தீட்டிய தம் அரசியல் எதிரிகளுடன் …
அன்வார் தண்டிக்கப்பட்டது உலக ஊடகங்களில் தலைப்புச் செய்தியானது
எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் குதப்புணர்ச்சி வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டது உலக நாளேடுகளிலும் செய்தித் தளங்களிலும் முக்கிய செய்தியாக இடம்பெற்றது. டிவிட்டரில் அதிகம் தேடப்படும் 10 தலைப்புகளில் அன்வார் என்பதும் ஒன்றாக இருந்தது. பிரிட்டனின் பிபிசி, அல்-ஜசீரா, புளும்பெர்க் செய்தி நிறுவனம், சிங்கப்பூரின் சேனல் நியுஸ் ஏசியா …
ஷாபி: தண்டனையில் மகிழ்ச்சி காணவில்லை
குதப்புணர்ச்சி வழக்கு 2-இல் அரசுத் தரப்புத் தலைமை வழக்குரைஞராக செயல்பட்ட முகம்மட் ஷாபி அப்துல்லா, “ஓர் இளைஞனின் வாழ்க்கையே சிதைந்து போனது” என்பதால் அன்வார் இப்ராகிமுக்குக் கூட்டரசு நீதிமன்றம் தண்டனை வழங்கியதை எண்ணி மகிழ்ச்சி அடையவில்லை என்றார். “இறுதியில் நீதி கிடைத்திருப்பது எனக்குத் தெரியும். அதனால் முடிவை எண்ணி …


