54 பயணிகளுடன் சென்ற விமானம் பாப்புவா பகுதியில் காணாமல் போய்விட்டது

  ஐந்து விமானப் பணியாளர்கள் உட்பட, 54 பேருடன் பயணம் மேற்கொண்டிருந்த ஓர் இன்தோனேசிய விமானம் காடு நிறைந்த பாப்புவா கிழக்குப் பகுதியில் சென்று கொண்டிருக்கையில் விமானக் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பை இன்று (ஞாயிற்றுக்கிழமை) இழந்து விட்டது என்று பாசார்னாஸ் அறிவித்தது. இருட்டி விட்டதால் விமானத்தை தேடும் பணி…

நஜிப்: அடுத்த ஆண்டில் பிஎன் எம்பிகளுக்கு கூடுதல் பணம்!

  பிஎன் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு புத்ராஜெயாவின் ஆண்டு நிதி ஒதுக்கீடு தற்போதைய ரிம5மில்லியனிலிருந்து அதிகரிக்கப்படும் என்று பிரதமர் நஜிப் கூறுகிறார். கெரிக் அம்னோ தொகுதி பேராளர்கள் கூட்டத்தில் பேசிய நஜிப் அது பற்றிய கூடுதல் விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றார். "முன்பு அது ரிம1 மில்லியனாக இருந்தது. இப்போது…

சரவாக் ரிபோர்ட் கட்டுரைகள் எந்த அளவுக்கு உண்மையானவை என்பது குறித்து…

  1எம்டிபி குறித்து பல குற்றச்சாட்டுகளை இதுவரையில் வெளியிட்டு வந்துள்ளது யுகேயை தளமாகக் கொண்டுள்ள சரவாக் ரிப்போர்ட். அதில் கூறப்பட்டுள்ளவற்றில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்று பிரதமர் நஜிப் கேள்வி எழுப்பியுள்ளார். பிரதமரின் இக்கேள்வி, நஜிப்பின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் போடப்பட்ட அமெரிக்க$681மில்லியனில் அமெரிக்க$650மில்லியன் வெளியூருக்கு மீண்டும்…

கூ லி: அரசாங்கத்தைக் கவிழ்க்க இராணுவம் தேவைப்படும்

"அரசாங்கத்தைக் கவிழ்க்கும் திட்டம்" ஒன்று இருப்பதாகக் கூறப்படுவதை அம்னோவின் மூத்த தலைவர்களில் ஒருவரான தெங்கு ரஸாலி ஹம்ஷா நிராகரிக்கிறார். "அதனைச் செய்வதற்கு இராணுவம் தேவைப்படும். சாதாரணமான மக்கள் அரசாங்கத்தைக் கவிழ்க்க முடியாது", என்று தெங்கு கோலாலம்பூரில் அவரது இல்லத்தில் இன்று நடந்த ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்பின்…

முகைதின் யாசின்: நஜிப் கூறுவது தவறு, 1எம்டிபி மக்கள் பணம்…

  பிரதமர் நஜிப் 1எம்டிபி மக்கள் பணத்தை பயன்படுத்தவில்லை என்று கூறியிருந்த கருத்தை அம்னோ துணைத் தலைவர் முகைதின் யாசின் ஏற்றுக்கொள்ளவில்லை. அது தவறு என்கிறார். தாம் பிரதமர் குறைகூறவில்லை, வெறும் கருத்து மட்டும் தெரிவிப்பதாக முத்தாய்ப்பு வைத்து கவனமாக பேசிய முகைதின், அந்நிறுவனத்திற்கு பில்லியன் கணக்கில் பெறப்பட…

கூ லி: மகாதிருடனான சந்திப்பு தனிப்பட்ட விவகாரம்

  அம்னோவின் மூத்த தலைவர் தெங்கு ரஸாலி ஹம்சாவும் முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட்டும் கடந்த செவ்வாய்க்கிழமை சந்தித்து பேசினர். அவர்கள் என்ன பேசினர் என்பதைத் தெரிவிக்க தெங்கு ரஸாலி மறுத்து விட்டார். அது தனிப்பட்டது என்றார். தெங்குவும் மகாதிரும் ஒரு காலக்கட்டத்தில் பரமவிரோதிகாளாக இருந்தனர். அவர்களுக்கிடையிலான சச்சரவு…

முகைதின் யாசின்: ரிங்கிட்டின் வீழ்ச்சிக்கு காரணம் 1எம்டிபி

  அம்னோவின் துணைத் தலைவர் முகைதின் யாசின் ரிங்கிட் மதிப்பின் வீழ்ச்சியடைந்தது 1எம்டிபி விவகாரத்தால்தானே தவிர இதர காரணங்களால் அல்ல என்று கூறுகிறார்.. அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்வு அல்லது நமது பொருட்கள் மற்றும் எண்ணெய் ஆகியவற்றின் விலை வீழ்ச்சி மட்டும் இதற்கு காரணமல்ல. அதனை உண்டுபண்ணியது அரசியல்…

பெர்சே 4: பாதுகாப்பு வழங்க 2,000 தொண்டர்கள்

  எதிர்வரும் ஆகஸ்ட் 29-30 இல் நடைபெற திட்டமிடப்பட்டிருக்கும் பெர்சே 4 பேரணியில் மக்களுக்கு பாதுகாப்பு சேவைகளை வழங்க 2,000 தொண்டர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். பாஸ் கட்சியின் தன்னார்வலர் பாதுகாப்பு பிரிவினர் அமல் இதில் பங்கேற்கவில்லை. கடந்த வாரம் பெர்சே தொடங்கிய நிதி திரட்டல் பரப்புரையின் வழி ரிம120,000 திரட்டப்பட்டுள்ளது.…

நஜிப் ‘பயந்துபோய்’ அம்னோ கூட்டத்தைத் தள்ளிப்போடவில்லை

அம்னோ  உச்சமன்றக்  கூட்டத்துக்கான  நாள்  இன்னும்  முடிவு  செய்யப்படவில்லை. இதன்  தொடர்பில்  பல்வேறு  ஊகங்கள்  தெரிவிக்கப்பட்டாலும்  கட்சித்  தலைவர்  நஜிப்  அப்துல்  ரசாக்கு உச்சமன்றத்தைச்  சந்திப்பதற்குத்  தயக்கம்  ஏதுமில்லை  என்றே  கட்சித்  தலைவர்கள்  கூறுகின்றனர். கட்சித்  தலைவர்கள்  1எம்டிபி  பற்றியும்  அமைச்சரவை  மாற்றம்  பற்றியும்  துருவித்  துருவி  விசாரிப்பார்கள் …

மகாதிர் நஜிப்பைக் குறை சொல்வதை நிறுத்த வேண்டும்

டாக்டர்  மகாதிர்  முகம்மட்  நஜிப்பைக்  குறைசொல்லாமல் ‘வாயைப் பொத்திக்கொண்டிருக்க வேண்டும்’  என்று  அரசியல்  எழுத்தாளரான   சைட்  உசேன்  அலாட்டாஸ்  வலியுறுத்தியுள்ளார். 22 ஆண்டுகள்  பிரதமராக  இருந்த  மகாதிரால்  மலாய்க்காரர்களின்  நிலையை  மேம்படுத்த  முடியவில்லை  என்பதால்  அவர்  பேசுவதை  நிறுத்திக்  கொள்ள  வேண்டும்  என்றாரவர். “அவரிடம்  வாயைப்  பொத்திக்கொண்டிருக்கச்  சொல்லுங்கள்.…

1எம்டிபி பற்றித்தான் நிறைய விசாரிக்கப்பட்டு விட்டதே: புவாவுக்கு அருளின் பதில்

நாட்டில்  மிகுந்த  விசாரணைக்கு  இலக்கான  நிறுவனமாக விளங்குகிறது  1எம்டிபி. அந்த  விசாரணைகளிலிருந்து  நிறைய  தகவல்களைப்  பெறலாமே  என்கிறார்  1எம்டிபி-இன்  தலைமை  செயல்  அதிகாரி  அருள். நிறைய  கடன்களைக்  கொண்டிருக்கும்  அந்நிறுவனம்மீது  பொது  விவாதம்  செய்ய  அழைப்பு  விடுத்த  பெட்டாலிங் ஜெயா  உத்தாரா  எம்பி  டோனி  புவா-வுக்கு  அவர் இவ்வாறு …

‘நஜிப்புக்கு உறுதுணையாக இருப்போம்’: பிஎன் தலைவர்கள் உறுதி

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக், பாரிசான்  நேசனலின்  13 பங்காளிக் கட்சிகளின் ஒருமித்த  ஆதரவைப்  பெற்றிருக்கிறார். இன்று  புத்ரா ஜெயாவில்  பிஎன்  தலைவருமான  நஜிப்புக்கும்  பங்காளிக்  கட்சிகளின்  தலைவர்களுக்குமிடையில்  நடந்த  கூட்டத்தில்  கலந்துகொண்டவர்களில்  ஒருவரான  பார்டி ரக்யாட்  சரவாக்  கட்சித்  தலைவர்  ஜேம்ஸ்  மாசிங்  இவ்வாறு கூறினார். “எல்லாக் …

தடையை நிறுத்திவைக்கும் எட்ஜின் முயற்சி தோல்வி

தி  எட்ஜ்  நிதியியல்  நாளேட்டையும்  தி  எட்ஜ்  வார  இதழையும்  ஜூலை  27 தொடங்கி  மூன்று  மாதங்களுக்கு  இடைநீக்கம்  செய்யும்  அரசாங்கத்தின்  முடிவு  நிலைநிறுத்தப்பட்டுள்ளது. அந்தச்  செய்திதாள்கள், தங்களின் நீதிமுறை மேலாய்வின்  முடிவு  தெரியும்வரை  இடைநீக்க  உத்தரவை நிறுத்திவைக்க  வேண்டும்  என்று செய்திருந்த மனுவை கோலாலும்பூர்  உயர்  நீதிமன்றம்…

நஜிப்பை வெளியேற்ற மகாதிர், ரஸாலி கூட்டா?

  இவ்வார தொடக்கத்தில் மகாதிர் முகமட்டும் தெங்கு ரஸாலி ஹம்ஸாவும் சந்தித்துள்ளனர். இச்சந்திப்பு பிரதமர் நஜிப்பை வெளியேற்றுவது பற்றியதாகும் என்ற ஊகம் வலுவடைந்து வருகிறது. முன்னாள் பிரதமர் மகாதிருக்கு நெருங்கிய வட்டாரம் இவர்கள் இருவரும் கடந்த செவ்வாய்க்கிழமை சந்தித்ததை உறுதிப்படுத்தியது. ஆனால், வேறு எந்த விபரமும் கிடைக்கவில்லை. நஜிப்பை…

எம்டியுசி: ரிம2.6 பில்லியன் ஊழலுக்கிடையில் வேலை இழப்போர் எண்ணிக்கையும் உயர்ந்து…

நாட்டை  உலுக்கும்  பல  ஊழல்களால் நம்பிக்கை இழந்த  முதலீட்டாளர்கள்  நாட்டைவிட்டோடுவதால்  வேலையில்லாதோர்  எண்ணிக்கை  பெருகி  வருவதை  எண்ணி  மலேசிய  தொழிற்சங்கக்  காங்கிரஸ்  கவலை  அடைந்துள்ளது. “மலேசிய  நிலவரங்களையும்  அவை  தொழிலாளர்கள்மீது  ஏற்படுத்தும்  தாக்கத்தையும்  கண்டு  எம்டியுசி  ஆழ்ந்த  கவலை  கொள்கிறது,”, என  அதன்  தலைமைச்  செயலாளர்  என். கோபாலகிருஷ்ணன் …

பேங்க் நெகாரா 1எம்டிபிமீதான விசாரணையை முடித்துக் கொண்டிருக்கிறது

அரசுக்குச்  சொந்தமான  1எம்டிபி  மீது  பேங்க்  நெகாரா  நடத்திய  விசாரணை  பூர்த்தி  அடைந்து விட்டதாக  பேங்க்  நெகாரா  கவர்னர்  ஸெட்டி  அக்தார்  அசீஸ்  அறிவித்துள்ளார். விசாரணை  ஆவணங்கள்  இவ்வாரம்  சட்டத்துறைத்  தலைவர்  முகம்மட்  அபாண்டி  அலியிடம்  ஓப்படைக்கப்படும்  என்றாரவர். ஸெட்டி பல  வாரங்களுக்குப்  பிறகு   இப்போதுதான் வெளியில்  தோன்றியிருக்கிறார்.…

ஸெட்டி பதவி விலகவில்லை

பேங்க்  நெகாரா  கவர்னர் ஸெட்டி  அக்தார்  அசீஸ்மீது விசாரணை  நடப்பதாக  வதந்திகள் கூறினாலும்  அவர்  பதவி  விலக  மாட்டார். இன்று  செய்தியாளர்களிடம்  பேசிய  ஸெட்டி, தம்  ஐந்தாண்டு  பதவிக்காலத்தை  முடித்து  விட்டுத்தான்  பதவி  விலகப்  போவதாகக்  கூறினார். அது 2016-இல் முடிவடையும். “பதவிக்காலம்  முடியும்வரை  பதவியில்  இருப்பேன்”, என …

டாலருக்கு எதிராக ரிங்கிட் சற்று ஏற்றம் கண்டது

அண்மைக்  காலமாக  இறங்குமுகம்  காட்டிவந்த  ரிங்கிட்  இன்று  காலை  டாலருக்கு  எதிராக  சற்று  ஏற்றம்  கண்டிருந்தது. காலை  மணி  9.30க்கு  டாலருக்கு 3.9900/9970  என்று  பரிவர்த்தனை  நடந்தது. நேற்று  மாலை  5 மணிக்கு  அது 4.0375/0415  என்றிருந்தது. இன்று  வெளியிடப்படவுள்ள மொத்த  உள்நாட்டு  உற்பத்திமீதான (ஜிடிபி) இரண்டாம்  காலாண்டு…

புவா: பிரதமர்மீது செக்‌ஷன் 124-இன்கீழ் விசாரணை நடத்த வேண்டும்

வெளிநாட்டிலிருந்து  ரிம2.6 பில்லியன்  நிதி  பெற்றதற்காக  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்மீது  குற்றவியல்  சட்டம்  பிரிவு 124-இன்கீழ்  விசாரணை  நடத்த  வேண்டும்  என  டிஏபி  பிரச்சாரப்  பகுதிச்  செயலாளர்  டோனி  புவா  கூறினார். அதை  நாடாளுமன்ற  மக்களாட்சிமுறைக்குக்  கெடுதல் செய்யும்  செயலாகக்  கருதலாம்  என்றாரவர். “ஜனநாயகத்துக்குக்  கெடுதல் செய்யும் …

புதிய பிஎசி உறுப்பினர்களை நியமிக்க நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் இல்லை

  நாடாளுமன்ற பொதுக்கணக்குக் குழுவில் காலியாக இருக்கும் நான்கு இடங்களை நிரப்புவதற்கு ஒரு சிறப்பு நாடாளுமன்ற கூட்டம் நடத்தப்படாது என்று அமைச்சரவை தீர்மானித்துள்ளது. மாறாக, அந்நடவடிக்கை எதிர்வரும் அக்டோபர் 19 இல் தொடங்கும் வழக்கமான நாடாளுமன்ற கூட்டத் தொடரில் மேற்கொள்ளப்படும் என்று நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் அஸாலினா ஓத்மான்…

அரசாங்க ஜெட் விமானம் விற்பனைக்கு, ரிம80மில்லியன் திரட்டப்படும்

  அரசாங்கம் அதன் 16 வயதான போயிங் பிஸ்னஸ் ஜெட் (பிபிஜெ) விற்று அதன் மூலம் ரிம80.5மில்லியனை திரட்டும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் அரசாங்கம் ஒரு புதிய ஏர்பஸ் கோர்பரேட் ஜெட் (எசிஜே320) விமானத்தை ரிம465மில்லியனுக்கும்  கூடுதலான விலையில் வாங்கியதைத் தற்காத்த பின்னர், இந்த விற்பனை…

நூர் ஜாஸ்லான்: பெர்சே 4 பேரணி ஒரு பிரச்சனையல்ல

  ஆகஸ்ட் 29-30 இல் நடைபெற திட்டமிடப்பட்டிருக்கும் பெர்சே 4 பேரணி அரசாங்கத்திற்கு ஒரு பிரச்சனையல்ல. அசம்பாவிதங்கள் ஏதும் இல்லாமல் இருக்க வேண்டும் என்று புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் துணை உள்துறை அமைச்சர் நூர் ஜாஸ்லான் முகமட் கூறினார். அமைதியான முறையில் நடத்தபடும் பேரணிகள் பற்றி தமக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை…

பேரணியில் அரசாங்கத்தைக் கவிழ்க்கும் முயற்சி கூடாது: பெர்சே-க்கு போலீஸ் எச்சரிக்கை

பெர்சே 4  பேரணியின்போது  சட்டவிரோதமான  வழிகளில்  அரசாங்கத்தைக்  கவிழ்க்க  முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால்  போலீஸ்  நடவடிக்கை  எடுக்கும். போலீஸ் படைத் துணைத்  தலைவர்  நூர்  ரஷிட்  இப்ராகிம்  இவ்வாறு  எச்சரித்தார். கூட்டரசு  அரசமைப்பின்படி  ஒன்றுகூடும்  உரிமை  மக்களுக்கு  உண்டு  என்றாலும்   சட்டமீறல்களும்  நிகழத்தான்  செய்கின்றன  என்பதை அவர்  தேர்தல்  கண்காணிப்பு …