பெர்னாண்டஸ்: இணையத்தை விட்டுவிட்டு ரிங்கிட்டில் கவனம் செலுத்துங்கள்

புத்ரா  ஜெயா,  இணையத்தில்  தகவல்  பரிமாற்றத்தைக் கட்டுப்படுத்தும்  முயற்சிகளைக்  கைவிட்டு  ரிங்கிட்டின்  மதிப்பு  சரிந்து  வருவதைத்  தடுத்து  நிறுத்துவதில்  கவனம்  செலுத்த  வேண்டும்  என  ஏர்  ஏசியா  தலைவர்  டோனி  பெர்னாண்டஸ்  கேட்டுக்கொண்டிருக்கிறார். “அரசாங்கம்  இணையத்தைக்  கட்டுப்படுத்துவதை  விடுத்து  ரிங்கிட்டின் மதிப்பை  நிலைநிறுத்துவதில்  கூடுதல்  நேரத்தைச்  செலவிட  வேண்டும்.…

எம்டியுசி: முதலீடு செய்ய வேண்டியது மலேசியர்கள்மீது, வங்காளதேசிகள் மீது அல்ல

அரசாங்கம்,  வங்காள  தேசத்திலிருந்து  1.5 மில்லியன்  தொழிலாளர்களை  அழைத்து  வரவும்  அவர்களுக்குப்  பயிற்சியளிக்கவும்  செலவிடும்  பணத்தை  மலேசியர்கள்மீது  முதலீடு  செய்ய  வேண்டும்  என  மலேசிய  தொழிற்சங்கக்  காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. “உள்ளூர்  மக்களுக்குப்  போதுமான  பயிற்சியும்  நல்ல  சம்பளமும் கொடுத்து  3டி - ஆபத்தான, கடுமையான,  அழுக்குமிகுந்த-  வேலைத்  துறையில்…

‘மகாதிருக்குக் கொடுக்கப்பட்ட துபோல் நஜிப்புக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும்’

1998-இல்  அன்வார்  இப்ராகிம்  விவகாரத்துக்குத்  தீர்வுகாணும்  பொறுப்பு  அப்போதைய  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகமட்டிடம்  ஒப்படைக்கப்பட்டதுபோல்  1எம்டிபி-க்குத்  தீர்வுகாணும் பொறுப்பைப் பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கிடம்  ஒப்படைப்பதே  முறையாகும்  என்கிறார்  திரெங்கானு  மந்திரி  புசார்  அஹமட்  ரஸிப்  அப்ட்  ரஹ்மான். “இன்ஷாஅல்லா, நஜிப்புக்கு  அவகாசம்  கொடுப்போம், அன்வார்  விவகாரத்தில் …

சாலே: பொருளாதாரத்தை மேம்படுத்துவதே அரசாங்கத்தின் முக்கிய நோக்கம்

பொருளாதாரத்தை  மேம்படுத்துவதற்குத்தான்  அரசாங்கம்    இப்போது  முக்கிய  கவனம்  செலுத்துகிறது  எனத்  தொடர்பு, பல்லூடக  அமைச்சர்  முகம்மட்  சாலே சைட்  கெருவாக்  கூறினார். “பல  சிக்கல்களை  எதிர்நோக்குகிறோம். ஆனால், நாம்  அதற்குக்  காரணமில்லை.  எண்ணெய்  விலைகள்  குறைந்ததுதான்  காரணம். அதனால்  மலேசிய ரிங்கிட்  பாதிக்கப்பட்டது; வேறு  பல  நாடுகளும்  இதேபோல் …

ரிங்கிட் டாலருக்கு ரிம4 என்ற எல்லையைத் தாண்டிச் சென்றது

அமெரிக்க  டாலருக்கு  எதிராக  ரிங்கிட்  மேலும்  வீழ்ச்சி  கண்டது. இன்று  காலை  9.35க்கு, டாலருக்கு  ரிம4.0035  என்ற  அளவுக்கு  ரிங்கிட்  வீழ்ச்சி  கண்டிருந்ததாக  புலூம்பெர்க்  கூறியது. ஆனால், சற்று  நேரம்  கழித்து  9.50க்கு டாலருக்கு  ரிம3.99  என்று  அது  ஏற்றம்  கண்டது. இது, 1997 ஆசிய  நிதி  நெருக்கடிக்குப் …

ரிம2.6பில்லியன் விசாரணைக்கு அரச விசாரணை ஆணையம் அமைக்க அகோங்கிடம் ஜிஎச்பி…

  கெராக்கான் ஹரப்பான் பாரு (ஜிஎச்பி) பிரதமர் நஜிப் அவரது தனிப்பட்ட வங்கிக் கணக்கில் ரிம2.6பில்லியன் போட்டிருப்பது குறித்து விசாரிக்க ஓர் அரச விசாரணை ஆணையம் அமைக்கக் கோரும் மனுவை இன்று பேரரசரிடம் தாக்கல் செய்தது. ஜிஎச்பியின் இளைஞர் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் முகமட் சானி ஹம்சான் தலைமையில் ஒரு…

கிறிஸ்துவர்களைக் குற்றம்சாட்டிய கல்வி அமைச்சருக்குக் கண்டனம்

மாட்ஸிர்  காலிட்  கல்வி  அமைச்சராக  நியமிக்கப்பட்டு  ஒரு  மாதம்கூட  ஆகவில்லை  அதற்குள்  வாயைக்  கொடுத்து  வாங்கிக்  கட்டிக் கொண்டிருக்கிறார். சரவாக்  ரிப்போர்ட்  செய்திகள்  முஸ்லிம்களைப்  பிளவுபடுத்த  கிறிஸ்துவர்களும்  யூதர்களும்  மேற்கொண்டிருக்கும்  முயற்சி  என்று  சொல்லி  வம்பில்  மாட்டிக்  கொண்டிருக்கிறார். அது ஒரு  அநியாயமான  கூற்று  எனத்  திருச்சபைகள்  மன்றம்…

லங்காவி அம்னோ மகளிர் உறுப்பினரின் பேச்சு அதிக பிரசங்கித்தனமானது

கெடா  அம்னோ  இளைஞர்  தலைவர்  சைபுல்  ஹஸிஸி  சைனல்  அபிடின், லங்காவி அம்னோ மகளிர்  கூட்டத்தில் உறுப்பினர்  ஒருவர்   கட்சித்  தலைவர்  நஜிப்  அப்துல்  ரசாக்கைக்  குறைகூறியது  அதிக  பிரசங்கித்தனமானது  என்றார். தொகுதித்  தலைவர்  கூட்டத்தைக்  கட்டுப்பாட்டுக்குள்  கொண்டு  வந்திருக்க  வேண்டும். அவ்வாறு  செய்யாததால்  பேராளர்கள்  விருப்பம்போல்  நடந்துகொள்ளும் …

பெர்சே பேரணி 4: டட்டாரான் மெர்டேகாவில் இரவுமுழுக்க தங்கி இருக்கும்…

பெர்சே 4  கண்டனப்  பேரணியின்  ஒரு  பகுதியாக  ஆகஸ்ட்  29-இல்  இரவுமுழுக்க  டட்டாரான்  மெர்டேகாவில் தங்கி  இருக்கத்  திட்டமிடப்பட்டுள்ளது. பேரணியில்  கலந்துகொள்வோர்  இரவில்  தங்குவதற்கு  வசதியாக  தூங்கும்  பைகள், துணி  விரிப்புகள், கூடாரங்கள்  போன்றவற்றைக்  கொண்டுவருமாறு  பெர்சே  இயக்கக் குழு  ஒர்  அறிக்கையில்  கேட்டுக்கொண்டது. “பேரணியில்  கலந்துகொள்வோருக்காக  குடிமைக்…

பொறாமை கொண்டவர் மகாதிர்: தெங்கு அட்னான் சாடல்

மலேசியா  இன்று அடைந்துள்ள  வெற்றியைக்  காண  டாக்டர்  மகாதிருக்குப்  பொறுக்கவில்லை  என்கிறார்  கூட்டரசுப்  பிரதேச  அமைச்சர்  தெங்கு  அட்னான்  தெங்கு  மன்சூர். கோலாலும்பூரில்  ஒரு  நிகழ்வில்  பேசிய  தெங்கு  அட்னான்  ஒரு  சிறு  கூட்டத்தினர்  நாட்டுக்குக்  குழிபறிக்கிறார்கள்  என்றார். “அவர்கள்  பிரதமரைக்  குறை கூறுகிறார்கள். நாட்டைப்  பலவீனப்படுத்த  பலவற்றைக் …

செம்பூர்ணா அம்னோ அதன் ஆண்டுக்கூட்டத்துக்கு முகைதினை அழைத்துள்ளது

வார  இறுதியில்  நடைபெறவுள்ள  அதன் ஆண்டுக்  கூட்டத்துக்கு அம்னோ  தலைவர்  நஜிப்புக்கு  விடுத்திருந்த  அழைப்பைத்  திரும்பப்  பெற்றுக்கொண்ட  அம்னோ  செம்பூர்ணா,  கூட்டத்தை  முகைதின்  யாசின் தொடக்கி  வைப்பதை  விரும்புகிறதாம். அம்னோ  செம்பூர்ணா  அடிநிலை  உறுப்பினர்கள், அம்னோவை  எதிர்நோக்கும்  பிரச்னைகள்  பற்றி  கட்சித்  துணைத்  தலைவர்  முகைதினும்  உதவித்  தலைவர் …

ஜோகூர் சுல்தான் நஜிப்புக்குத் தடைபோட்டார் என்பதை மறுக்கிறார் உதவியாளர்

பிரதமர்துறை  உதவியாளர் ரிஸால்  மன்சூர்,  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கின்  விமானம்  ஜோகூரில்  தரையிறங்க மாநில  சுல்தான்  தடைபோட்டார்  என்று  கூறப்படுவதை  மறுத்தார். அதை  அவதூறு  என்று  குறிப்ப்ட்ட  ரிஸால்,  நஜிப்பின்  பெயரைக்  கெடுப்பதற்காக  அப்படி ஒரு  கதை  கட்டிவிடப்பட்டிருக்கிறது என்றார். பாசிர்  கூடாங்  அம்னோ  தொகுதிக்  கூட்டத்துக்கு …

மகாதிர்: நஜிப்பை வெளியேற்ற தெருப் போராட்டம் கடைசி நடவடிக்கையாக இருக்க…

  பிரதமர் நஜிப் ரசாக்கை வெளியேற்ற தெருப் போராட்டைத்தை நடத்தலாம். ஆனால், அது கடைசி நடவடிக்கையாக மட்டுமே இருக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட் கூறினார். நஜிப்பின் ராஜினாமாவை கோரிய ஆகஸ்ட் 1 பேரணி மற்றும் ஆகஸ்ட் 29 மற்றும் 30 நடைபெற திட்டமிடப்பட்டிருக்கும் பெர்சே…

ரிம2.6 பில்லியன் நன்கொடை என்பதை ‘bulls**t’ என்கிறார் மகாதிர்

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  ரிம2.6 பில்லியன்  நன்கொடையாகக்  கிடைத்தது  என்று  கூறிக்கொள்வதைக்  கேலி  செய்யும்  கூட்டத்தினருடன்  டாக்டர்  மகாதிரும்  சேர்ந்து  கொண்டிருக்கிறார். “மலேசியப்  பிரதமருக்கு  ரிம2.6 பில்லியன்  நன்கொடை  கொடுப்பவர்  யார்,  ஐயா? “ஒபாமாவால்  அவரது  அதிபர்  தேர்தலுக்குக்கூட  இவ்வளவு  பெரிய  தொகையைத்  திரட்ட  முடிந்ததில்லை. அரபுக்காரர் …

இளைஞர்கள்: அரசாங்கத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்க காரின் முன்விளக்குகளை எரிய விடுங்கள்

இளைஞர்  அணி  ஒன்று  அரசாங்கத்துக்கு  எதிர்ப்பைத்  தெரிவிக்க  ஒர்  எளிய  வழியைக்  கண்டுபிடித்திருகிறது: பட்டப்பகலில்  காரின்   முன்விளக்கைப்  பளிச்சென  எரியவிடுவதுதான்  அது. மலேசியாவைக்  காப்போம்  இளைஞர்  அணியினர்  ஞாயிற்றுக்கிழமை  நடத்திய  கூட்டத்தில்  கொண்டுவரப்பட்ட  ஐந்து  தீர்மானங்களில்  இதுவும்  ஒன்று. அதன்  இதர  நான்கு  தீர்மானங்கள்: -பெர்சே 4.0 பேரணிக்கு …

இடமாற்றம் செய்யப்பட்ட எம்ஏசிசி அதிகாரிகள் பழைய பணிக்கே திரும்பிச் சென்றனர்

வெள்ளிக்கிழமை பிரதமர் துறை அலுவலகத்திற்கு மாற்றப்பட்ட  மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின்  மூத்த  அதிகாரிகள்  இருவர்  அவர்களின்  பழைய  பணியிலேயே  இன்று  திரும்பவும்  அமர்த்தப்பட்டனர். அவ்விருவரும்  அரசாங்கத் தலைமைச் செயலாளர் அலி ஹம்சாவையும்  பொதுச்சேவைத்துறை தலைமை இயக்குனர்  முகம்மட் ஸபிடி சைனாலையும் சந்தித்த  பின்னர்  இது  நடந்தது. எம்ஏசிசி …

‘ஜனநாயகம் செத்து விட்டது, நஜிப்பை விசாரிப்பீர்’

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கின்  ஆட்சியில்  மக்களாட்சி  செத்து  விட்டது  என்று  அறிவித்திருக்கிறார்  டாக்டர்  மகாதிர்  முகம்மட். “அது  செத்து  விட்டது.  ஏனென்றால்,  தேர்ந்தெடுக்கப்பட்ட  தலைவர்  ஒருவர்  அரசாங்க  அமைப்புகளைத்  தலைகீழாய்ப்  புரட்டிப்போட்டு  அவற்றைத்  தம்  பதவியைக்  காத்துக்கொள்ளும்  கருவிகளாகப்  பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். “இனி  ஜனநாயகத்துக்கு  யாரும்  குழிபறிக்க …

‘அரசியல் குறுக்கீட்டுக்கு இடந்தரக்கூடாது’- போலீசுக்கு சுஹாகாம் வலியுறுத்து

போலீஸ்  எந்தவொரு  அரசியல்  தலையீட்டுக்கும்  இடந்தராமால் செயல்பட  வேண்டும்  என  மனித  உரிமை  ஆணையம்(சுஹாகாம்)  வலியுறுத்துகிறது. “போலீஸ், காவல்  பணிகளைச்  செய்வதில்  அரசியல்  குறுக்கீடு  எதுவுமின்றிச்  சுதந்திரமாகச்  செயல்பட  வேண்டும், மற்ற  குடிமக்களைப்  போலவே  சட்டத்தையும்  மதிக்க  வேண்டும்”, என்று  அது  கூறிற்று. மலேசிய  ஊழல்தடுப்பு  ஆணையம்(எம்ஏசிசி)மீது  போலீஸ் …

மாட் சாபு: அம்னோவை ஆதரிப்போருக்கு ஜிஎச்பி-இல் இடமில்லை

கெராக்கான்  ஹராபான்  பாரு(ஜிஎச்பி)  அதன்  உறுப்பினர்கள்   பகைக் கட்சியான  அம்னோவுடன்  நட்புகொள்வதையோ அதற்கு  ஆதரவு  அளிப்பதையோ  பொறுத்துக்கொள்ளாது. ஜிஎப்பி-இன்  இடைக்கால  நிர்வாகக்  குழுத் தலைவர் மாட்  சாபு  இவ்வாறு  தெரிவித்தார். “அம்னோவுடன்  உறவு  பாராட்டுவோர்  வெளியில்  செல்ல  வேண்டியதுதான்”, என  நேற்றிரவு  செபராங்  பிறையில்  ஹரி  ராயா விருந்து …

எதிரணியுடன் இணைந்து சதியா?, முகைதின் மறுக்கிறார்

  பிரதமர் நஜிப்புக்கு எதிராக எதிர்க்கட்சி தலைவர்களுடன் சேர்ந்து ஒரு நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பை நடத்த முன்னாள் துணைப் பிரதமர் முகைதின் யாசின் சதித்திட்டம் தீட்டியதாக கூறப்படுவதை அவர் மறுத்தார். இதற்கு முன்னதாக நேற்று இரு எதிரணித் தலைவர்கள், டிஎபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் மற்றும்…

அரசியல் கட்சி நிதி: பிரதமரின் சவாலை டிஎபி ஏற்றுக்கொள்கிறது

  அம்னோ அதன் அரசியல் நிதிக் கணக்கை காட்டத் தயார். டிஎபி அதன் அரசியல் நிதிக் கணக்கை காட்டத் தயாரா என்று பிரதமர் நஜிப் ரசாக் டிஎபிக்கு சவால் விட்டிருந்தார். அந்தச் சவாலை ஏற்றுக்கொள்வதாக டிஎபியின் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் இன்று அறிவித்தார். கடந்த 2013…

பிஎசிக்கு புதிய தலைவர் விரைவாக நியமிக்கப்படுவதை ஹிசாமுடின் ஆதரிக்கிறார்

  ஒரு சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தை கூட்டி பொதுக்கணக்குக் குழு (பிஎசி) தலைவரை நியமிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ள ஆலோசனையை அம்னோ துணைத் தலைவர் ஹிசாமுடின் ஆதரிக்கிறார். இவ்வாறு செய்வதன் மூலம் பிஎசி 1எம்டிபி மீதான விசாரணையைத் தொடங்கலாம். இல்லையென்றால் அக்குழுவில் ஏற்பட்டிருக்கும் காலியிடத்தை நிரப்ப அடுத்த வழக்கமான…

நஜிப்: அரசியல் நிதி விவகாரத்தில் நடைமுறையைத்தான் பின்பற்றினேன்

அரசியல் நிதி பெறுவது கட்சியின் வழக்கமான நடைமுறை. அம்னோவின் தலைவர் என்ற முறையில் தாம் அதனைத் தொடர்ந்து பின்பற்றியதாக நஜிப் இன்று கூறினார். கட்சி மற்றும் சமூகத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக நிதி திரட்டுவது கட்சித் தலைவரின் கடமையாகும். இதற்கு முன் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டதே இல்லை…