ஹரி ராயா ஐடில்பித்ரி கொண்டாட்டத்துடன் இணைந்து, நெடுஞ்சாலைகளில் வகுப்பு 1 தனியார் வாகனங்களைப் பயன்படுத்துபவர்களுக்கு ஏப்ரல் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு நாள் கட்டணமில்லா காலத்தை அரசாங்கம் அங்கீகரித்துள்ளது. தேசிய எல்லைகளில் உள்ள சுல்தான் இஸ்கந்தர் கட்டிடம் சுங்கச்சாவடி (Sultan Iskandar Building Toll) மற்றும்…
‘தடுப்புக் காவலில் உள்ள இந்தியர்களை அடிப்பதுதான் போலீஸ் நடைமுறையா?’
உங்கள் கருத்து : "தங்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இந்திய கைதிகளை அவர்கள் அடிக்க முடியும் என்பது வழக்கமாகி விட்டதாகத் தெரிகின்றது." தடுப்புக் காவலில் மரணமடைந்த கருணா உடலில் 49 காயங்கள் காணப்பட்டன கலா: போலீஸ் தடுப்புக் காவலில் இன்னொரு இந்தியர் ரணமடைந்தார். வழக்கம் போல தாங்கள்…
நஜிப் டாக்டர் மகாதீரிடம் கடுமையாக நடந்து கொள்ள வேண்டும்
'பிஎன் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை இழந்ததற்கும் சிலாங்கூரை மீண்டும் கைப்பற்ற முடியாமல் போனதற்கும் மகாதீரே காரணம் என்று அவரிடம் சொல்ல வேண்டும்' எதிர்க்கட்சிகளிடம் அரசாங்கம் கடுமையான போக்கை பின்பற்ற வேண்டும் என டாக்டர் மகாதீர் விரும்புகிறார் 2 டிம் 1:7: மலேசிய சமுதாயத்தை இன அடிப்படையில் பிரிக்கும்…
செம்பருத்தியில் செய்திச்சுருக்கம்!
செம்பருத்தியின் வாசகர்களுக்கு, மலேசியாவின் முதன்மையான தமிழ் இணையத் தளமாக செம்பருத்தி.காம் உருவாக வாசகர்களாகிய நீங்கள்தான் காரணம். தற்போது 39,320 வாசகர்கள் 104,429 முறை எங்களின் இணையத்தளத்தை வலம் வருகிறார்கள். அவர்கள் 362,188 பக்கங்களைப் பார்வையிடுகிறார்கள். பிப்ரவரி 25, 2008 -இல் தொடங்கப்பட்ட எங்களின் இந்த இணையத்தளம் ஐந்தாண்டுகளைக் கடந்துள்ளது. இதன் வழி…
சிலாங்கூர் மந்திரி புசார்: தர்மேந்திரன் குடும்பத்துக்கு உதவி தேவை
போலீஸ் தடுப்புக் காவலிலிருந்த போது மரணமடைந்த என் தர்மேந்திரன் குடும்பத்துக்கு நிலையான உதவி தேவை என சிலாங்கூர் மந்திரி புசார் காலித் இப்ராஹிம் கூறுகிறார். அந்தக் குடும்பத்தில் வேலை செய்த ஒரே நபரான தர்மேந்திரன் மரணமடைந்து விட்டதே அதற்குக் காரணம் என்றார் அவர். பண்டார் துன் ரசாக் எம்பியுமான…
‘கிளந்தான் தேர்தல் மனுக்கள் ‘வினோதமானவை’
கிளந்தான் பிஎன் தான் அந்த மாநிலத்தில் தோல்வி கண்டதற்கு கொடுத்துள்ள காரணங்களில் ஒன்றாக தம்மை பெயர் குறிப்பிட்டுள்ளது 'வினோதமாக' உள்ளது என பிரபல சமய அறிஞர் அஸ்ஹார் இட்ருஸ் வருணித்துள்ளார். இஸ்லாமிய அரசாங்கத்தை வீழ்த்துவது ஹராம் (தடுக்கப்பட்டுள்ளது) எனத் தாம் தேர்தலின் போது சொன்னதை பாஸ் கிளந்தானில் நடத்திய…
முனைவர்: நஜிப்பை தோற்கடிக்க முடியாது
மக்களவையில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் மேற்கொள்ளப்படும் எந்த முயற்சியும் தோல்வி காணும் என Universiti Kebangsaan Malaysia (UKM) அரசியல் அறிவியல் விரிவுரையாளர் பேராசிரியர் டாக்டர் சம்சுல் அடாபி மாமாட் சொல்கிறார். பிஎன் எம்பி-க்களிடம் நஜிப்புக்கு பெரும் செல்வாக்கு இருப்பதே…
பக்காத்தான் அதிக வாக்குகளை வென்றிருக்கலாம் ஆனால் ‘ தலைவிதி’பிஎன் பக்கம்
பக்காத்தான் ராக்யாட் அதிகமான வாக்குகளை பெற்றிருப்பதை ஒப்புக் கொண்ட நகர்ப்புற நல்வாழ்வு, வீடமைப்பு, ஊராட்சி அமைச்சர் அப்துல் ரஹ்மான் டஹ்லான் 'தலைவிதி' பிஎன் -னுக்கு சாதகமாக இருந்ததாக கூறுகிறார். சுருக்கமான சொன்னால் இறைவன் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறான். அதனால் பிஎன் கடந்த தேர்தலில் வெற்றி பெற்றது," என அவர் சொன்னார்.…
சுல்கிப்லி: இசி நாடாளுமன்ற அதிகாரத்துக்குள் வரக் கூடாது
இசி என்ற தேர்தல் ஆணைய ஆணையர்கள் நியமனம் நாடாளுமன்ற அதிகாரத்துக்குள் கொண்டு வரப்பட்டால் அது 'தேசத் துரோகமாகும்' என பெர்க்காசா உதவித் தலைவர் சுல்கிப்லி நூர்டின் கூறுகிறார். இசி-யின் அமைப்பு அகோங்கின் தனிப்பட்ட உரிமை என்பதே அதற்குக் காரணம் என அவர் சொன்னார். கூட்டரசு அரசமைப்பின் 114வது பிரிவைச் சுட்டிக்…
புகை மூட்டம் சிறிது காலத்துக்கு நீடிக்கும்
மீண்டும் புகை மூட்டம் கிள்ளான் பள்ளத்தாக்கைச் சூழ்ந்து கொண்டிருக்கிறது. இன்று காலை கிள்ளானிலிருந்து ஜோகூரின் மூவார்வரை காற்றின் தரம் “ஆரோக்கியமற்றதாக” இருந்தது என சுற்றுப்புறத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. துணைக் கோளப் படங்களிலிருந்து சுமத்ராவில் 46 இடங்கள் “பற்றிக்கொண்டு எரிவதாக”த் தெரிகிறது. அதனால் எழும் புகைமூட்டம் காற்றில் தீவகற்ப…
கெடா நீருக்குக் கட்டணம் விதிப்பது நியாயமல்ல: பினாங்கு
கெடா, அதன் ஆறுகளிலிருந்து நீர் சேகரிப்பதற்காக பினாங்குக்குக் கட்டணம் விதிக்கப்போவதாகக் கூறுவதை பினாங்கு முதலைமைச்சர் லிம் குவான் எங் நிராகரித்துள்ளார். “கெடா ஒன்றும் நீர் வழங்கவில்லை. மூடா ஆறு பினாங்கு வழியே ஓடுகிறது. பினாங்கு பக்கத்திலிருந்துதான் நீரை எடுத்துக்கொள்கிறோம். “மேலும், மூடா ஆறு இயற்கையான ஒரு நீர் ஆதாரம்.…
போர்க் குற்ற நடுவர் மன்ற வழக்குரைஞர் பெர்சேயின் நடுவர் மன்றத்தை…
கோலாலும்பூர் போர்க்குற்ற நடுவர் மன்றத்தில் தலைமை வழக்குத் தொடருனராக பணியாற்றிய சிறந்த வழக்குரைஞர் ஒருவர் மக்கள் நடுவர் மன்றத்தை வழி நடத்த உதவுவார் என்று பெர்சே அறிவித்துள்ளது. “நன்கு மதிக்கப்படும் வழக்குரைஞரும் சட்டத்துறை பேராசிரியருமான குருதயாள் சிங் நிஜார் சாது சிங், நடுவர் மன்றத்தில் மக்கள் சார்பில் வழக்குகளை…
சமய அறிஞர்: கிளந்தான் பிஎன் முறையீடு ‘வேடிக்கையாக’ இருக்கிறது
பிரபல சமய அறிஞரான அஸ்ஹார் இட்ருஸ், கிளந்தான் பிஎன் அதன் தேர்தல் முறையீட்டு மனுவில் அதன் தேர்தல் தோல்விக்கான காரணங்களில் தம் பெயரையும் சேர்த்துக் கொண்டிருப்பதைப் பார்க்க “வேடிக்கையாக” இருக்கிறது என்கிறார். தேர்தலின்போது அவர் ஓர் இஸ்லாமிய அரசை வீழ்த்துவது ஹராம் (தவிர்க்கப்பட்ட செயல்) என்று கூறினாராம். அதை…
தேர்தல்: நஜிப் தாம் விதைத்தை இப்போது அறுவடை செய்கிறார்
"13வது பொதுத் தேர்தல் பிரச்சாரத்தில் இனம், சமயம் ஆகியவை கூடின பட்சம் பயன்படுத்தப்பட்டன. இப்போது நஜிப் அதனை கட்டுப்படுத்த விரும்புகிறார். அம்னோ அரவணைப்பு போக்கை அதிகம் பின்பற்ற வேண்டும் என யோசனை சொல்கிறார்." நஜிப் தலைமைத்துவ சவாலை எதிர்நோக்கக் கூடும் பெர்ட் தான்: எதிர்வரும் அம்னோ கட்சித் தேர்தல்…
‘நாகரீகமானதைச் செய்யுங்கள்’ என அம்பிகா இசி உயர் அதிகாரிகளைக் கேட்டுக்…
தேர்தல் ஆணைய (இசி) உயர் அதிகாரிகள் 13வது பொதுத் தேர்தல் நடத்தப்பட்ட முறையில் தாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை என நம்புவதால் பதவி விலகுமாறு விடுக்கப்படும் வேண்டுகோட்களுக்கு செவிசாய்க்க மறுத்து வருகின்றனர். அவர்கள் தொடர்ந்து பிடிவாதமாக இருப்பதைத் தொடர்ந்து பெர்சே இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன், இசி உயர்…
‘505கறுப்புப் பேரணி’க்கு எதிராக நடவடிக்கை எடுப்போம்: போலீஸ் எச்சரிக்கை
‘முறையான அனுமதிகள்’ இன்றி ஜூன் 22-இல் ‘505கறுப்புப் பேரணி’ நடத்தப்பட்டால் போலீஸ் நடவடிக்கை எடுக்கும் என துணை இன்ஸ்பெக்டர்-ஜெனரல் அப் போலீஸ் முகம்மட் பக்ரி ஸினின் எச்சரித்துள்ளார். செய்தியாளர் கூட்டமொன்றில் போலீஸ் படை துணைத் தலைவர் இவ்வாறு கூறியதாக த ஸ்டார் இணைய செய்தித் தளம் கூறுகிறது. பேரணி…
‘பக்காத்தான் நாடாளுமன்ற பதவி உறுதிமொழி எடுத்துக் கொள்ளும் சடங்கைப் புறக்கணிக்காது’
பக்காத்தான் ராக்யாட் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (எம்பி) 13வது நாடாளுமன்றக் கூட்டத் தொடரைப் புறக்கணிக்க மாட்டார்கள். ஜுன் 24 நாடாளுமன்றத்தில் டிஏபி, பிகேஆர், பாஸ் ஆகியவற்றைச் சேர்ந்த எதிரணி எம்பி-க்கள் பதவி உறுதிமொழி எடுத்துக் கொள்வர் என எதிர்பார்க்கப்படுவதாக கர்பால் சொன்னார். "எனக்குத் தெரிந்த வரையில் பிகேஆர் ஆலோசகர்…
இயக்குநர்- நடிகர்- எழுத்தாளர் மணிவண்ணன் மரணம்!
இயக்குநர் - நடிகர் - எழுத்தாளர் - தமிழ் உணர்வாளர் மணிவண்ணன் இன்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 58. கல்லுக்குள் ஈரம் படத்திலிருந்து பாரதிராஜாவின் உதவி இயக்குநராகப் பணியாற்றிய மணிவண்ணன், பின்னர் அவரது படங்களின் பிரதான எழுத்தாளராகப் பணியாற்றினார். அலைகள் ஓய்வதில்லை, காதல் ஓவியம் என பல…
ஜகார்த்தாவில் அன்வார், ஆனால் நஜிப்பைச் சந்தித்தாக கூறப்படுவதை மறுக்கிறார்
பக்காத்தான் ராக்யாட் தலைவர் அன்வார் இப்ராஹிம் நேற்றிரவு பாலியில் இந்தோனிசிய அதிபர் பம்பாங் சுசிலோ யூதயோனோவைச் சந்தித்தார். அவர் இன்று ஜகார்த்த்தாவில் இருக்கிறார். பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் இந்தோனிசியத் தலைநகரில் இப்போது இருக்கும் வேளையில் அன்வாரும் அங்கு சென்றுள்ளது பல ஊகங்களை ஏற்படுத்தியுள்ளது. அன்வாரும் நஜிப்பும் சந்திக்கும்…
கர்பால் சிங்: டாக்டர் மகாதீர் தலையீடு பிரதமர் நஜிப்புக்கு அவமானம்
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் அரசாங்கத்தை கட்டுப்படுத்த முயலுவதற்கு பதில் 'ஒய்வு எடுக்க வேண்டும்' என டிஏபி தேசியத் தலைவர் கர்பால் சிங் கேட்டுக் கொண்டிருக்கிறார். 2003ம் ஆண்டு பிரதமர் பதவியைத் துறந்த மகாதீர் அரசாங்கத்தை கட்டுப்படுத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அவர். "நஜிப் நிர்வாகம்…
‘505 கறுப்பு தினம்’ திடீரென ஒன்று கூடிய 17 பேர்…
'505 கறுப்பு தினத்தை' ஒட்டி இன்று திடீரென ஒன்று கூடிய நிகழ்வில் கலந்து கொண்ட 17 பேரைப் போலீசார் தடுத்து வைத்துள்ளனர். அவ்வாறு தடுத்து வைக்கப்பட்டவர்களில் பெண்களும் பிள்ளைகளும் அடங்குவர் . முதலாவது சம்பவத்தில் பிற்பகல் மணி 2.50 வாக்கில் சோஹோ கடைத் தொகுதிக்கு முன்பு ஆர்ப்பாட்டம் செய்த…
ஜோகூர் ஆட்சி மன்ற உறுப்பினர் தீ மசீச பதவிகளைத் துறந்தார்
சுற்றுலா, வர்த்தகம், பயனீட்டாளர் விவகாரம் ஆகியவற்றுக்குப் பொறுப்பான ஜோகூர் ஆட்சி மன்ற உறுப்பினர் தீ சியூ கியோங் தமது ஆயுட்கால உறுப்பியத்தைத் தவிர மற்ற எல்லா மசீச பதவிகளையும் ராஜினாமா செய்துள்ளார். ஜோகூர் ஆட்சி மன்றத்துக்கு தாம் நியமிக்கப்பட்ட விவகாரத்தை சில கட்சி உறுப்பினர்கள் பிரச்னையாக்குவதைத் தடுப்பதற்காக தாம்…
பிஎஸ்எம் கணிப்பு தவறானது, மலேசியர்கள் கட்சிக்கு வாக்களித்தனர் வேட்பாளர்களுக்கு அல்ல
பிஎஸ்எம் என்ற மலேசிய சோஷலிசக் கட்சி, மே 5 பொதுத் தேர்தலில் தான் போட்டியிட்ட நான்கு தொகுதிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றது. காரணம் அது மலேசியர்கள் கட்சி சார்பு நிலைக்குப் பதில் வேட்பாளர்களுக்கு வாக்களிப்பர் என எண்ணியதாகும். "தனிநபர்களுக்கு மக்கள் வாக்களிப்பர் என நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால்…
“505 கறுப்புப் பேரணி: மெர்போக் திடலா அல்லது மெர்தேகா அரங்கமா…
உங்கள் கருத்து : மெர்போக் திடலை மறுப்பதின் மூலம் கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம் (டிபிகேஎல்)அரசியல் முடிவைச் செய்கின்றது. மெர்போக் திடலையோ அல்லது மெர்தேக்கா சதுக்கத்தையோ பக்காத்தான் பயன்படுத்த அது அனுமதிக்கும் சாத்தியம் இல்லை 505 கறுப்புப் பேரணிக்கான இடம் மீதான பேச்சுக்கள் தேக்க நிலையில் அடையாளம் இல்லாதவன் #85701391:…