கோவிட்-19 பெருந்தொற்றைத் தொடர்ந்து தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் மின்சார நுகர்வு கடுமையாகக் குறைந்தது என்ற நிறுவனத்தின் வாதத்தை நீதிபதி தள்ளுபடி செய்தார். "போர்ட் கிள்ளானில் (Port Klang) உள்ள நிறுவனத்தின் வளாகத்தை ஆய்வு செய்தபோது, காணாமல் போன முனைய முத்திரைகள் (terminal seals) மற்றும் கூடுதல் மின்சுற்று (additional circuit)…
4அன்வார் குதப்புணர்ச்சி வழக்கு2: அன்வார் குற்றவாளி எனத் தீர்ப்பு
குதப்புணர்ச்சி வழக்கு 2 இல் அன்வாருக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக அவர் செய்திருந்த மேல்முறையீடு வழக்கில் இன்று பெடரல் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கவிருக்கிறது. இன்று காலை மணி 8.00 க்கு முன்பாகவே புத்ராஜெயா உச்சநீதிமன்றத்தின் முன் கூட்டம் கூடத் தொடங்கி விட்டது. அனைத்துலக கண்காணிப்பாளர்களும் வந்துள்ளனர்.…
QZ8501: ஒரே மலேசியரின் உடல் அடையாளம் காணப்பட்டது
டிசம்பர் 28-இல் ஜாவா கடலில் வீழ்ந்த ஏர் ஏசியா QZ8501 விமானத்தில் இருந்த ஒரே மலேசியரான சீ சுங் ஹுவாயின் உடலை நேற்று இந்தோனேசிய அதிகாரிகள் அடையாளம் கண்டனர். சில நாள்களுக்குமுன் அந்த உடல் கண்டெடுக்கப்பட்டது என்றாலும் நேற்றுத்தான் அது சீ-இன் உடல் என்பது டிஎன்ஏ சோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டது.…
தொழுகையுரைமீது கருத்துத் தெரிவித்த எக்ஸ்கோ போலீசுடன் ஒத்துழைப்பார்
பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினர் சொங் எங், பாலியல் வல்லுறவு மீது சிலாங்கூர் இஸ்லாமிய சமயத் துறை(ஜயிஸ்) தெரிவித்த கருத்தைக் குறைகூறியது பற்றி போலீசிடம் விளக்கமளிக்க முன்வந்துள்ளார். “டிவிட்டரில் ஐஜிபி-இன் பதிவைப் பார்த்தேன். போலீசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன். நான் பாலியல் வல்லுறவு தொடர்பில் ஒரு மாற்றுக் கருத்தை வெளியிட்டேன். …
எண்ணெய் விலை யுஎஸ்$65- யுஎஸ்$70 ஆக இருக்கும்
சீனா, இந்தியா, ஆப்ரிக்கா ஆகியவற்றில் தேவை பெருகி வருவதால் எண்ணெய் விலை யுஎஸ்$65க்கும் யுஎஸ்$70-க்குமிடையே உயர்வு காணும் வாய்ப்பு இருக்கிறது. ஜூன் மாதத்தில் உலகப் பொருளாதாரம் உயரத் தொடங்கும்போது இப்போது வீழ்ச்சி கண்டுவரும் கச்சா எண்ணெய் விலையும் உயர்வு காணும் என முன்னாள் நிதி அமைச்சர் டயிம் சைனுடின் …
அமைச்சர் இஸ்மாயில் சப்ரியிடம் போலீஸ் வாக்குமூலம் பதிவு
பொருள்விலையைக் குறைக்காத சீனர்களின் கடைகளை மலாய்க்காரர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று முகநூலில் பதிவிட்ட விவசாயம், விவசாயம் சார்ந்த அமைச்சர் இஸ்மாயில் சப்ரியிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். இன்று பிற்பகல் மணி 3.30க்கு புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தில் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக போலீஸ் படைத் தலைவர் …
அம்பிகாவின் சமாதான யோசனை நடைமுறைக்கு ஒத்துவராது
ஆளும் கூட்டணியும் எதிரணியினரும், என்ஜிஓ-களும் அமைதி உடன்பாடு காண வேண்டும் என்று நெகரா கூ புரவலர் அம்பிகா ஸ்ரீநிவாசன் முன்வைத்த ஆலோசனைக்கு வரவேற்பு இருக்கிறது ஆனால், அது செயல்வடிவம் பெறும் சாத்தியம் இருப்பதுபோலத் தெரியவில்லை. ஆளும் கட்சியிடமும் எதிரணியிடமும் ஒருவர் மற்றொருவருடன் ஒத்துழைக்கும் அரசியல் விருப்பமும் இல்லை, ஆர்வமும் …
மகாதிர்: கிட் சியாங்கோ, டிஏபியோ கம்முனிஸ்டுகள் அல்ல
லிம் கிட் சியாங்கும் டாக்டர் மகாதிர் முகம்மட்டும் அரசியலில் என்றும் எலியும் பூனையுமாக இருப்பவர்கள். வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் ஒருவரை மற்றவர் குறைசொல்லத் தயங்கவே மாட்டார்கள். முன்னாள் பிரதமரைப் பொருத்தவரை அவர், டிஏபி பெருந் தலைவரை என்ன வேண்டுமானாலும் சொல்வார். அவரை ஒரு கம்முனிஸ்டு என்று மட்டும் சொல்ல மாட்டார்.…
ஆர்ஓஎஸ்-ஸை நீதிமன்றத்துக்கு இழுக்காதீர்கள்: மஇகா-வுக்கு ஜாஹிட் வலியுறுத்து
மறுதேர்தல் நடத்த வேண்டுமென்ற உத்தரவால் அதிருப்தி அடைந்துள்ள மஇகா உறுப்பினர்கள் சங்கப் பதிவதிகாரி(ஆர்ஓஎஸ்)யை நீதிமன்றத்துக்கு இழுக்க வேண்டாம் என உள்துறை அமைச்சர் ஜாஹிட் ஹமிடி கேட்டுக்கொண்டிருக்கிறார். “ஆர்ஓஎஸ் கலந்துரையாடுவதற்கு எப்போதுமே வாயிலைத் திறந்து வைத்துள்ளது. எந்த விவகாரத்தையும் அவர்களுடன் பேசித் தீர்வு காணலாம்”,என ஜாஹிட் இன்று புத்ரா ஜெயாவில் …
மே மாதம் தலைவர் தேர்தலை நடத்த மஇகாவுக்கு உத்தரவு
மஇகா அதன் தலைவர் பதவிக்கான தேர்தலை மே மாதம் நடத்த வேண்டும் எனச் சங்கப் பதிவதிகாரி(ஆர்ஓஎஸ்) உத்தரவிட்டிருப்பதாக உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி இன்று தெரிவித்தார். மஇகா அதன் கிளைகள், பிரிவுகள், தொகுதிகள், மத்திய தலைமைத்துவம் என எல்லாப் பதவிகளுக்குமே தேர்தல்களை நடத்த வேண்டும். இதைத் திட்டவட்டமாக …
மஇகா இளைஞர்கள்: அஸ்மின் முற்போக்குவாதியாக தெரியவில்லை
முஸ்லிமாக மதம் மாற நினைப்போருக்கு “முதலில் மணமுறிவு, பிறகுதான் மதமாற்றம்” என்ற நிபந்தனையை விதிக்க நெகிரி செம்பிலான் உத்தேசித்திருப்பதுபோல் எதிரணியினரால் வழிநடத்தப்படும் சிலாங்கூர் அரசு உத்தேசிக்கவில்லை என்பது மஇகா இளைஞர் பகுதிக்கு “அதிர்ச்சி” அளிக்கிறது. நெகிரி செம்பிலான் மந்திரி புசார் முகம்மட் ஹசான் அவ்வாறு முன்மொழிந்தது ஒரு பொன்னான …
மகாதிர்: இஸ்மாயில் கூறியதைத் துல்லியமாக ஆராய்வீர்
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட். மலாய்க்கார்கள் சீனர்களின் கடைகளைப் புறக்கணிக்க வேண்டும் என்று அமைச்சர் இஸ்மாயில் சப்ரி கூறியதை பொதுமக்கள் நுட்பமாக ஆராய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டிருக்கிறார். “குற்றம்குறை சொல்வதற்குமுன் அவர் சொன்னதைச் சரியாக மதிப்பிட வேண்டும். செய்தித்தாள்களில் படிப்பது மட்டும் போதாது”, என்றார். இஸ்மாயில் எந்தவொரு …
இஸ்மாயில் விவகாரத்தை மீண்டும் அமைச்சரவையில் எழுப்புவோம்: மசீச சூளுரை
விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில் அமைச்சர் இஸ்மாயில் சப்ரி விவகாரத்தில் மசீச கடுமையாகக் கண்டனம் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுவதை அதன் தலைவர் லியோ தியோங் லாய் மறுத்தார். முகநூலில் சர்ச்சைக்குரிய பதிவிட்டதற்குப் பொறுப்பேற்க சப்ரி தொடர்ந்து மறுப்பாரானால் அவ்விவகாரத்தை அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் மீண்டும் எழுப்பப்போவதாக லியோ உறுதி …
டிஏபி: ஜோகூரில் காடழிப்புப் பற்றி வாய் திறவாவது ஏன்?
ஜோகூர் மாநில வெட்டுமரத் தொழில் பற்றிக் கேள்வி கேட்டால் மந்திரி புசார் முகம்மட் காலிட் நோர்டினும் மாநில அரசும் பதிலளிக்காமல் வாயை மூடிக் கொள்வதாக டிஏபி சட்டமன்ற உறுப்பினர் கூறினார். “வெட்டுமரத் தொழில் பற்றிய எந்த விவரத்தை மூடிமறைக்க அவர்கள் முயல்கிறார்கள்?”, என பெந்தாயான் சட்டமன்ற உறுப்பினர் சுவா …
ஹட்டா, மாட் சாபு ஆகியோருக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய ஹாடி…
பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங்கின் ஆதரவாளர்கள் கட்சியின் மத்திய குழு(சிசி)க் கூட்டத்துக்கு முன்னதாக பாஸ் தலைமையகக் கட்டிடத்துக்குமுன் ஒன்று திரண்டனர். சுமார் 80 பேரடங்கிய அக்கூட்டம், தலைவருக்கு ஆதரவு தெரிவிக்கவும் தலைவரைக் கவிழ்க்க முனைவோருக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவும் கூடியிருப்பதாகக் கூறிக்கொண்டது. ஹாடிக்கு எதிராகக் காய் நகர்த்துவோரில் …
நெகிரியின்‘மணமுறிவுக்குப் பின்னரே மதமாற்றம்’ திட்டத்துக்கு அபிம் எதிர்ப்பு
முஸ்லிமாக மாதம் மாற விரும்பும் ஒருவர் முதலில் முஸ்லிம்-அல்லாத வாழ்க்கைத் துணையை விவாக ரத்து செய்வதைச் சட்டவிதியாக்கும் நெகிரி செம்பிலான் திட்டத்துக்கு அங்காத்தான் பீலீயா இஸ்லாம் மலேசியா எதிர்ப்புத் தெரிவிக்கிறது. “அபிம் அப்பரிந்துரையை எதிர்க்கிறது. அதற்குப் பதிலாக, முஸ்லிம்-அல்லாத தம்பதிகளின் வழக்கு விசாரணைக்கு ஷியாரியா நீதிமன்றங்கள் கதவுகளைத் திறக்க …
ஹாடி: நான் ஒன்றும் பள்ளி மாணவன் அல்ல, கட்டாயப்படுத்த
நான்கு மாதங்களாக நடக்காத பக்கத்தான் ரக்யாட் தலைமைத்துவ மன்றக் கூட்டத்தை நாளை நடத்தத் திட்டமிடப்பட்டுளது. ஆனால் கூட்டத்துக்கு வருவாரா, மாட்டாரா என்பதை. பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங் இன்னமும் உறுதிப்படுத்தவில்லை. தாம் பள்ளி மாணவன் அல்ல என்றும் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு யாரும் தம்மைக் கட்டாயப்படுத்த முடியாது என்றும் …
இஸ்மாயில்: புறக்கணிப்புச் செய்தியைத் திரித்துக் கூறிவிட்டார்கள்
பொருள்களின் விலை உயர்வு தொடர்பில் சீனர்களின் கடைகளைப் புறக்கணிக்க வேண்டும் என்று கூறிச் சர்ச்சையை உண்டுபண்ணிய விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில் அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கூப் இன்னமும் தாம் அப்படிச் சொல்லவில்லை என்றுதான் சாதிக்கிறார். அவர் சொன்னதைத் திரித்துக் கூறிவிட்டார்களாம். நேற்று ஒரு கருத்தரங்கில் பேசிய இஸ்மாயில், …
நெகிரி செம்பிலான் செய்வதை மற்ற மாநிலங்களும் செய்யுமா?
நெகிரி செம்பிலான் இஸ்லாமிய விவகார மன்றம் மதமாற்றத்தால் ஏற்படும் பிரச்னைகளைத் தீர்ப்பதற்குப் புதிய சட்டம் கொண்டுவருவதை அனைத்துக் கட்சிகளும் வரவேற்றிருக்கின்றன. டிஏபியும் கெராக்கானும், மதம் மாற நினைக்கும் முஸ்லிம்-அல்லாத தம்பதிகள் முதலில் மணமுறிவு செய்துகொள்ள வேண்டும் என்னும் அச் சட்டத்தை மற்ற மாநிலங்களிலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் …
நெகிரி செம்பிலானில் இனி, முதலில் மணமுறிவு பிறகுதான் மத மாற்றம்
இனி வரும் காலங்களில் நெகிரி செம்பிலானில் மதம் மாற நினைக்கும் முஸ்லிம்-அல்லாத தம்பதிகள் முதலில் மணமுறிவு செய்துகொள்ள வேண்டும். அதை அடுத்து, எதிர்காலத்தில் சட்ட பிரச்னைகளைத் தவிர்க்க, மதம் மாறியவர் தம் மதமாற்றத்தின்மீது சத்திய பிரமாணம் ஒன்றையும் செய்திட வேண்டும். இப்புதிய சட்டம் 2003 (நெகிரி செம்பிலான்) இஸ்லாமிய …
ஜொகோவி நிகழ்வில் செய்தி சேகரிக்க மலேசியாகினிக்குத் தடை
மலேசியாகினி அதிகாரப்பூர்வமான நுழைவு அனுமதியை வைத்திருந்தபோதிலும், புத்ரா ஜெயா, பிரதமர் அலுவலகத்தில்(பிஎம்ஓ) இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைச் சந்திக்கும் நிகழ்வுக்குச் சென்று செய்தி சேகரிக்க அனுமதி மறுக்கப்பட்டது. மலேசியாகினிக்கு அதிகாரப்பூர்வ அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும் பிஎம்ஓ செல்ல அனுமதிக்க முடியாது என்று பாதுகாப்பு அதிகாரிகள்…
அஸ்மின் ஹுடுட் சட்டவரைவு மீது கருத்துரைக்க மறுப்பு
பிகேஆர் துணைத் தலைவர் முகம்மட் அஸ்மின் அலி, ஹுடுட் சட்டவரைவு தாக்கல் செய்யப்படுவரை அதன் உள்ளடக்கம் பற்றித் தகவல் தெரிவிப்பதில்லை என்ற பாஸின் முடிவு குறித்து கருத்துரைக்க மறுத்தார். அச்சட்டவரைவு குறித்து ஞாயிற்றுக்கிழமை பக்கத்தான் ரக்யாட் தலைமைத்துவ மன்றத்தில் பாஸ் விளக்கமளிப்பதற்காக அவர் காத்திருக்கிறார். “இப்போதைக்கு அது பற்றி …
எம்பி: சாபா செல்லத் தடை, அரசியல் நோக்கம் கொண்டது
சாபாவுக்குள் நுழைய தமக்குத் தடை விதிக்கப்பட்டது பற்றிக் குறிப்பிட்ட டிஏபி உதவித் தலைவர் தெரேசா கொக், அது குடிநுழைவுத்துறை அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப்பட்டிருப்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு என்றார். சாபா அரசுக்கு அம்மாநிலத்துக்குள் வருவோரைத் தடுக்கும் அதிகாரம் உண்டு என்றாலும், அதைத் தகுந்த காரணமின்றிப் பயன்படுத்தக் கூடாது என்பது அவருடைய …
அன்வார்: நான் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஆட்டம் தொடரத்தான் வேண்டும்
பக்கத்தான் ரக்யாட் தலைவர் அன்வார் இப்ராகிம், அடுத்த செவ்வாய்க்கிழமை தம் வழக்கில் தீர்ப்பு எப்படி வேண்டுமானாலும் அமையலாம் ஆனாலும், தாம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஆட்டம் தொடர வேண்டும் என்பதைத் தம் ஆதரவாளர்கள் உணர வேண்டும் என அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தியுள்ளார். இன்று செய்தியாளர் கூட்டமொன்றில்( கூட்டரசு நீதிமன்றத் தீர்ப்புக்குமுன் …


