வெள்ளிக்கிழமை தொழுகையுரை பற்றிக் கருத்துரைத்த பால்சன்மீது தேச நிந்தனைக் குற்றச்சாட்டு

டிவிட்டரில்  முஸ்லிம்களை  அவமதித்து  பதிவிட்டதற்காக  உரிமைகளுக்காக  போராடும்  வழக்குரைஞர் அமைப்பின்  செயல்முறை  இயக்குனர்  எரிக்  பால்சன்,   இன்று  நீதிமன்றத்தில்  நிறுத்தப்பட்டு தேச  நிந்தனைக்  குற்றம் சாட்டப்பட்டார். பால்சன், அக்குற்றச்சாட்டை  மறுத்து  விசாரணை  கோரியுள்ளார். இஸ்லாமிய  மேம்பாட்டுத்  துறை (ஜாக்கிம்), “வெள்ளிக்கிழமை  தோறும்  தீவிரவாதத்தை”  ஊக்குவிக்கிறது  என  ஜனவரி 10-இல் …

விலைவாசி உயர்வுக்கு புத்ரா ஜெயாவே காரணம், சீனர்கள் அல்லர்

விலைகளைக்  கட்டுப்படுத்தும்  அதிகாரம்  கூட்டரசு  அரசாங்கத்திடம்  இருக்கும்போது  மத்திய  அமைச்சர்  இஸ்மாயில்  சப்ரி  யாக்கூப்  சீனர்  கடைகளைப்  புறக்கணிக்குமாறு  மலாய்க்காரர்களை  வலியுறுத்துவது  “அறிவீனம், மடத்தனம்” எனச்  சாடியுள்ளார்  பினாங்கு  ஆட்சிக்குழு  உறுப்பினர்  அரிப்  பஹார்டின். சம்பந்தப்பட்ட  அமைச்சுகள்  விலைகளை  எளிதாகக்  குறைக்க  முடியும்  என்கிறபோது  சீன  வியாபாரிகள்மீது  பழிபோடுவது …

மகாதிர்: 1எம்டிபி-யைக் குறைகூறுவோர்மீது பாயும் வலைப்பதிவர்கள்

1எம்டிபி நிறுவனத்தின்மீது  அடுக்கப்படும்  கேள்விகளுக்கு  அரசாங்கம்  பதிலளிக்க  முடியாமல் இருப்பதைக்  குறைகூறினால்  குறை சொல்பவர்களைத்  தாக்குவதற்கெனவே  புதிதாக  வலைப்பதிவர்கள்  புறப்பட்டிருப்பதாக  நினைக்கிறார் முன்னாள்   பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட். அரசியல்  நோக்கம்  கொண்ட  இப்படிப்பட்ட  வலைப்பதிவர்கள்  தம்மையும்  இன்னும்  பலரையும்  தீயவர்களாகச்  சித்திரித்துக்  காட்ட முனைகிறார்கள்  எனத் தம்முடைய …

பிரதமர் அலுவலகம்: சாப்ரி சீன வணிகர்களை குறிவைக்கவில்லை

  விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில் அமைச்சர் இஸ்மாயில் சாப்ரி அவரது முகநூலில் பதிவு செய்திருந்ததாக கூறப்படுவதற்கு முற்றிலும் எதிர்மாராக அந்த அமைச்சர் சீன வணிகர்களை மட்டும் குறிவைக்கவில்லை என்று பிரதமர் அலுவலகம் கூறுகிறது. இன்றைய அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னர் வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில் அமைச்சர் சாப்ரி…

பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள இருவரை போலீஸ் பாதுகாக்காது

கல்லூரி  மாணவி  ஒருவரைப்  பாலியல்  வல்லுறவுக்கு  உட்படுத்தியதாகவும்  மிரட்டிப்  பணம்  பறித்ததாகவும்  குற்றம்  சாட்டப்பட்டுள்ள  இரு  போலீஸ்காரர்களை  போலீஸ்  பாதுகாக்க  முனையாது  எனப்  போலீஸ்  படைத்  தலைவர்  காலிட்  அபு  பக்கார்  கூறினார். “அவர்களுக்கு  எதிராக  ஆதாரங்களைத்  திரட்டுவோம். திரட்டியதும்  வழக்கு  தொடுப்பது  பற்றிச்   சட்டத்துறை  தலைவரைக்  கலந்து …

பக்கத்தான் கூட்டத்துக்கு ஹாடி, குவான் எங் ஆகியோரும் செல்வர்

நான்கு  மாதங்களுக்குப்  பிறகு  வரும்  ஞாயிற்றுக்கிழமை நடைபெறும்  பக்கத்தான்  ரக்யாட்  தலைமைத்துவ  மன்றத்தின்  முதலாவது  கூட்டத்தில் பாஸ்  தலைவர்  அப்துல்  ஹாடி  ஆவாங், டிஏபி  தலைமைச்  செயலாளர்  லிம்  குவான்  எங்  ஆகியோரும்  கலந்து  கொள்வார்கள். நேற்றிரவு,  திரெங்கானு, கெமாமானில்  ஒரு  செராமாவில்  கல்ந்துகொண்ட  பிகேஆர்  நடப்பில்  தலைவர் …

இஸ்மாயிலைப் பலர் ஆதரிக்கலாம், மகாதிர் ஆதரிக்கவில்லை

சீனர்களின்  கடைகளைப்  புறக்கணிக்க  அமைச்சர் இஸ்மாயில்  சப்ரி  விடுத்த  அறைகூவலை  அம்னோவைச்  சேர்ந்தவர்கள்  ஆதரிக்கலாம். ஆனால்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்டுக்கு  அதில்  உடன்பாடு இல்லை. கெப்போங்கில்  செய்தியாளர்களிடம்  பேசிய  மகாதிர், விலைவாசி  உயர்வுக்கும்  இனத்துக்கும்  தொடர்பில்லை  என்று  குறிப்பிட்டு,  இஸ்மாயில்  சப்ரி  உண்மையான  காரணத்தைக்  கண்டறிய  வேண்டும் என்றார்.…

‘இனவாத’ அமைச்சரை விலக்குவீர்: பிரதமருக்குக் கோரிக்கை

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்,  விவசாயம், விவசாயம்  சார்ந்த தொழில்  அமைச்சரைப்   அமைச்சரவையிலிருந்து  வெளியேற்ற  வேண்டும். “நாட்டிலிருந்து  இனவாதத்தை  விரட்ட  நினைத்தால்  இஸ்மாயில் சப்ரியை  அமைச்சரவையிலிருந்து  நீக்க  வேண்டும்”, என  டிஏபி  இடைக்காலத்  தலைவர்  டான்  கொக்  வாய்  கூறினார். இஸ்மாயில்  சப்ரி  யாக்கூப்,   விலைகளைக்  குறைக்க  மறுக்கும் …

மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை என்கிறார் சப்ரி

விலைகளைக்  குறைக்க  மறுக்கும்  சீனர்களின்  கடைகளைப்  புறக்கணிக்க  வேண்டும்  என்ற  முகநூல்  பதிவுக்காக  தாம்  மன்னிப்பு  கேட்க  வேண்டிய “அவசியமில்லை”  என்று விவசாயம், விவசாயம்  சார்ந்த  தொழில்  அமைச்சர்  இஸ்மாயில்  சப்ரி  யாக்கூப்  இன்று  கூறினார். இதேபோன்ற  நடவடிக்கையைப்  பொருள்களின்  விலைகளைக்  குறைக்காத  மலாய்,  இந்திய   வர்த்தகர்களுக்கு  எதிராகவும் …

இஸ்மாயிலிடம் இன்று வாக்குமூலம் பதிவு செய்யப்படும்

சீனர்களின்  கடைகளை  மலாய்க்காரர்கள்  புறக்கணிக்க  வேண்டும்  என்று  வலியுறுத்திய  விவசாயம், விவசாயம்  சார்ந்த  தொழில்  அமைச்சர்  இஸ்மாயில்  சப்ரி-இடம்  போலீசார்  இன்று  வாக்குமூலம்  பதிவு  செய்வர். குற்றவியல்  சட்டம் பகுதி 505-இன்கீழ் இஸ்மாயில்மீது  விசாரணை  மேற்கொள்ளப்படும்  என  போலீஸ்  படைத்  தலைவர்  காலிட்  அபு  பக்கார் கூறினார். “இன்று …

தொழிற்சங்கவாதிகளை மிரட்டுகிறது கேடிஎம்பி: எம்டியுசி கண்டனம்

கெரேத்தாஅப்பி தானா  மலாயு பெர்ஹாட்(கேடிஎம்பி) அதன்  தொழிற்சங்க  ஊழியர்களை  மிரட்டுவதாகவும்  மீண்டும்  மீண்டும்  சிறுமைப்படுத்த  முயல்வதாகவும்  மலேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ் (எம்டியுசி) கூறுகிறது. ஆகக்  கடைசியாக  நடந்த  சம்பவத்தில், மலாயா  ரயில்வே  தொழிற்சங்கத்  தலைவர்  அப்துல்  ரசாக்  முகம்மட்  ஹசன்   90 நாள்களுக்குத்  தொடர்ச்சியாக மன்னிப்பு  கேட்டால்தான்  அவருக்கு …

முன்னாள் நீதிபதி: அரசாங்கம் பல்கலைக்கழகங்களின் உரிமைகளைப் பறித்து விட்டது

மலாயாப்  பல்கலைக்கழகத்தில் 1960-களில்  இருந்த  நிலை  இன்றில்லையே  என்று  வருத்தப்படுகிறார்  முறையீட்டு  நீதிமன்ற  முன்னாள்  நீதிபதி  முகம்மட்  அரிப்  முகம்மட்  யூசுப். அவர் மலாயாப்  பல்கலைக்கழகத்தில்    10 ஆண்டுகள்  சட்ட  விரிவுரையாளராக  பணியாற்றியவர்  என்பது  குறிப்பிடத்தக்கது. அரசாங்கம்  பல்கலைக்கழகங்களின்  கல்விச்  சுதந்திரத்தை  வெகுவாகக்  கட்டுப்படுத்தி வைத்துள்ளது. இதனால்  பல்கலைக்கழகங்களின் …

பத்து மலை தைப்பூசத் திருவிழாவில் நஜிப்

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  பத்து  மலை தைப்பூசத்  திருவிழாவுக்கு  வருகை  புரிந்தார். காலை  மணி  10.30க்கு  கோயில்  வளாகம்  வந்தடைந்த  பிரதமரையும்  அவரின்  துணைவியார்  ரோஸ்மா  மன்சூரையும்  மஇகா தலைவர்  ஜி.பழனிவேலும்  ஆலயத் தலைவர்களும் வரவேற்றனர். பத்து  மலையில்  சுமார்  1.6மில்லியன் பக்தர்கள்  பக்திப்  பரவசத்துடன்  தைப்பூசத்தைக்…

விமானி இருக்கையைவிட்டு அப்பால் சென்றார் என்பதற்கு ஆதாரமில்லை

QZ8501 ஏர்  ஏசியா  விமான  விபத்து  பற்றி  விசாரணை  நடத்தும்  இந்தோனேசிய   அதிகாரிகள்,   விமானி  தம்  இருக்கையைவிட்டு  அப்பால்  சென்றார்  என்பதற்கோ தானியக்கக்  கட்டுப்பாட்டு  முறைக்கான  மின் தொடர்பு  துண்டிக்கப்பட்டது என்பதற்கோ  எந்த  ஆதாரமும்  இதுவரை  இல்லை  என்கிறார்கள். விசாரணையாளர்களுக்கு  அணுக்கமான  இரு  வட்டாரங்கள்  கேப்டன்  இரியாந்தோ தம் …

இஸ்மாயில் சப்ரியின் கருத்துகள் நிந்தனைக்குரியவை

விவசாயம், விவசாயம்  சார்ந்த  அமைச்சர்  இஸ்மாயில்  சப்ரி, தாம்  கூறியதை  மீட்டுக்கொண்டு சீன  வர்த்தகர்களுக்கு எதிராக எதிராக சுமத்திய  ஆதாரமற்ற  குற்றச்சாட்டுகளுக்காக  மன்னிப்பும்  கேட்க  வேண்டும்  எனப்  பிரதமர்   உத்தரவிட  வேண்டும். பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்   அவ்வாறு செய்யவில்லையென்றால்  அவர்  அவரது  1மலேசியா  சுலோகத்தைத்  தூக்கிக்  குப்பைத் …

நேற்றிரவு பத்துமலை இருளில் மூழ்கியது

  நேற்றிரவு மணி 8.53 லிருந்து நள்ளிரவு தாண்டியும் பத்துமலை இருளில் மூழ்கடிக்கப்பட்டிருந்தது. தைப்பூச திருவிழாவைக் கொண்ட பத்துமலையில் குழுமியிருந்த பக்தர்களுக்கு இது பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியது. இது அவர்கள் சற்றும் எதிர்பாராததாகும். தெனகா நேசனல் பெர்ஹாட் (டிஎன்பி) இப்பிரச்சனையைத் தீர்ப்பதில் தீவிரமாக இருப்பதாக பத்துமலை கோயில் குழு…

மந்திரி சாப்ரி: நான் குறிப்பிட்டது எதற்கும் மசியாத சீனர்களைத்தான்

  பொருள்களின் விலையைக் குறைப்பதற்கு மலாய் பயனீட்டாளர்கள் சீன வணிகர்களைப் புறக்கணிக்க வேண்டும் என்று விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த துறை அமைச்சர் இஸ்மாயில் சாப்ரி யாக்கோப் விடுத்திருந்த கோரிக்கைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து வழக்கம் போல் அவர் தாம் அனைத்து சீனர் வணிகர்களையும் குறிப்பிடவில்லை என்று…

சீனர் கடைகளைப் புறக்கணிக்க மலாய்க்காரர்களிடம் வலியுறுத்து

விவசாயம், விவசாயம்  சார்ந்த  தொழில்  அமைச்சர்  இஸ்மாயில்  சப்ரி  யாக்கூப், மலாய்க்காரர்கள்  சீனர்களின்  கடைகளைப்  புறக்கணிக்க  வேண்டும்  என  வலியுறுத்தியுள்ளார். அப்போதுதான்  அவர்கள்  விலைகளைக்  குறைப்பார்கள். இஸ்மாயில்  சப்ரி  முகநூலில்  இவ்வாறு  கூறினார். ஆனால், அந்த  முகநூல் பக்கத்தை  எல்லாராலும் பார்க்க  இயலாது. ஆனால், அது  அப்படியே  பிரதியெடுக்கப்பட்டு …

தொழிற்சங்க தலைவர் ஒவ்வொருநாளும் 90 நாள்களுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும்

  இந்நாட்டு முதலாளிகள் தொழிலாளர்களின் உரிமைகளை மதிக்கும் கடமையை மறந்து விட்டனர் என்பதைகெரித்தாப்பி தானா மலாயு பெர்ஹாட்டின் (கேடிஎம்பி) தலைவர் எலியாஸ் காடிர் அந்நிறுவனத்தின் தொழிலாளர்கள் சங்கத்தின் (ஆர்யுஎம்) தலைவர் அப்துல் ரசாக் முகமட் ஹசான் அவரிடம் ஒவ்வொரு நாளும் 90 நாள்களுக்கு மன்னிப்பு கோர வேண்டும் என்று…

வலைப்பதிவர்: என்னைப் பிடித்த போலீசார் உத்துசானைப் பிடிக்காதது ஏன்?

ஆள்பார்த்துத்தான்  வழக்கு  தொடுக்கப்படுகிறது  என்கிறார்  ‘மிலோசுவாம்’ என்ற  பெயரில்  பதிவிடும்  யூசுப் அல்- சித்திக்.  2013  லாஹாட்  டத்து  ஊடுருவல் தொடர்பாக  பதிவிட்டிருந்ததற்காகக்  கைது  செய்யப்பட்டு  ஈராண்டுச்  சிறைத் தண்டனை  விதிக்கப்பட்டது  பற்றி  அவர்  இவ்வாறு  கூறினார். தாம்  பதிவிட்டதற்கு  மூன்று  நாள்களுக்கு  முன்பு உத்துசான்  மலேசியாவும்  அதன் …

அன்வார்: சிறைக்கு அஞ்சித் தப்பியோட மாட்டேன்

எதிரணித்  தலைவர்  அன்வார்  இப்ராகிம்,  குதப்புணர்ச்சி  வழக்கில்  விடுவிக்கப்படலாம்  என்ற  நம்பிக்கையுடன்  இருக்கிறார். அதேவேளை  சிறைக்குச்  செல்லவும்  அவர்  அஞ்சவில்லை. சிறைக்கு  அஞ்சித்  தப்பியோடப்போவதில்லை  என்றும்  அவர்  உறுதி  கூறினார். பிப்ரவரி  10-இல், கூட்டரசு  நீதிமன்றம் குதப்புணர்ச்சிக்  குற்றச்சாட்டுக்கு  எதிரான அவரது  மேல்முறையீடுமீது  தீர்ப்பளிக்கவுள்ளது. பிரபல  இஸ்லாமிய  கல்விமான் …

டத்தோ பட்டத்துக்கு ஜேக்கி சான் பொருத்தமானவரே

ஹாங்காங்  சூப்பர் ஸ்டார்  ஜேக்கி  சான் அவரது  ‘போலீஸ்  ஸ்டோரி’படத்தின்  படப்பிடிப்பைக்  கோலாலும்பூரில்  நடத்தியதுதான்  அவருக்கு  டத்தோ  பட்டத்தைப்  பெற்றுக் கொடுத்திருக்கிறது  என்கிறார்  கூட்டரசு  பிரதேச  அமைச்சர்  தெங்கு  அட்னான்  தெங்கு  மன்சூர். “மலேசியாவில்  நிறைய  ரசிகர்களைக்  கொண்டுள்ள  ஜேக்கி  சான் மலேசியாவுக்கு  அதிலும்  கோலாலும்பூருக்கு  நல்ல  விளம்பரத்தைத் …

ஸுனார் மலேசியாவின் சிறந்த படைப்பாளி: உலகக் கேலிச்சித்திர அமைப்பு புகழாரம்

அரசியல்  கேலிச்சித்திரக்காரர்  ஸுனாரை  மலேசியாவின்  சிறந்த  படைப்பாளி  எனப்  போற்றி  பாராட்ட  வேண்டுமே  தவிர  அவரின்  கருத்துச்சொல்லும்  உரிமையைக்  கட்டுப்படுத்தக்கூடாது. உலகக்  கேலிச்சித்திர  அமைப்பு  ஒன்று,  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்குக்கு  இவ்வாறு  வேண்டுகோள்  விடுத்துள்ளது. ஜனவரி  31-இல்,  நஜிப்புக்கு  எழுதிய  கடிதமொன்றில்  Cartoonists Rights Network International…