ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு காய்கறி வழங்குபவர்களிடமிருந்து லஞ்சம் கேட்டு வாங்கியதற்காக ஜொகூர் பாரு அமர்வு நீதிமன்றத்தால் ஒரு மூத்த குடியேற்ற அதிகாரிக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 20,000 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டது. மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (MACC) சட்டத்தின் பிரிவு 16(a)(B) இன் கீழ் சுல்கிப்லி…
அன்வாரை விடுவிக்க தற்காப்புக்குழுவின் கடும் போராட்டம்
அன்வாருக்கு எதிரான குதப்புணர்ச்சி வழக்கு II இல் அன்வாரின் மேல்முறையீட்டு வழக்கில் அவரது தற்காப்பு வழக்குரைஞர் குழுவினர் பெடரல் உச்சநீதிமன்றத்தில் கடந்த இரண்டரை நாட்களாக கடுமையாக விவாதம் நடத்தினர். அன்வார் அவருக்கு எதிரான குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்பது அவர்களது வாதமாகும். கேமிரா பொய் சொல்லாது அன்வாரின்…
தொல்லைகளை எதிர்நோக்கும் பல்கலைக்கழகம் தொடர்ந்து செயல்பட அனுமதி வழங்கப்படுவது ஏன்?
Allianze University College of Medical Sciences (ஏயுசிஎம்எஸ்) நிதிப்பற்றாக்குறை உள்பட பல பிரச்னைகளை எதிர்நோக்கினாலும் அது தொடர்ந்து செயல்பட உரிமம் வழங்கப்பட்டிருப்பது எப்படி எனக் கல்வி அமைச்சு விளக்க வேண்டும். இவ்வாறு கேட்டுக்கொண்ட பினாங்கு துணை முதலமைச்சர் பி.இராமசாமி, அப்பல்கலைக்கழகம் எதிர்நோக்கும் குறைகளுக்கு அதன் நிறுவனர் சைனுடின் …
குறுகிய காலம் உயர்ந்திருந்த நஜிப்மீதான தரமதிப்பீடு மீண்டும் சரிந்தது
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் செயல்திறன் மீதான தரமதிப்பீடு ஆறு விழுக்காடு சரிந்து ஜூன் மாத அளவான 48 விழுக்காட்டுக்கே திரும்பியுள்ளது. ஜூனுக்கும் ஆகஸ்டுக்குமிடையில் அவரின் செயல்திறன் மீதான மதிப்பீடு உயர்ந்திருந்தது என சுயேச்சை கருத்துக்கணிப்பு அமைப்பான மெர்டேகா மையம் கூறிற்று. ஆகஸ்டில் 38 விழுக்காடாக இருந்த நஜிப்மீது …
கேஎல்ஐஏ2 வெள்ளப் பெருக்கு ‘அனைத்துலக ஜோக்’ஆக மாறியுள்ளது
கேஎல்ஐஏ2-இல், சில இடங்கள் அமிழ்ந்து போயிருப்பது “அனைத்துலக ஜோக்” ஆக மாறி உள்ளது. ஆனால், அதிகாரிகள் அது ஒரு மோசமான பிரச்னை என்பதைத் தொடர்ந்து மறுத்து வருகிறார்கள் என டிஏபி எம்பி ஒருவர் கூறினார். அவ்விமான நிலையத்தின் தகுதி பற்றி முழு அறிக்கையை நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுவிடம் …
தண்ணீர் குழாய்களைப் பழுதுபார்க்க ரிம11 பில்லியன் தேவை
பழையதாகிப்போன அத்தனை தண்ணீர் குழாய்களையும் பழுதுபார்க்க ரிம11 பில்லியன் தேவைப்படும்.இவ்வளவு பெரிய தொகையைச் செலவிட வளரும் நாடுகளால் இயலாது. நாடாளுமன்றத்தில் எரிபொருள், பசுமைத் தொழில்நுட்பம், தண்ணீர் அமைச்சு ங்கா கொர் மிங்(டிஏபி- தைப்பிங்)-க்கு வழங்கிய எழுத்துப்பூர்வமான பதிலில் இவ்வாறு கூறியது. அடுத்த ஆண்டு முடிவுக்கு வரும் 10வது மலேசியத் …
விடு என்கிறது டிஏபி, விடாதே என்கிறது அம்னோ
அன்வார் இப்ராகிமின் சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்த மலாயாப் பல்கலைக்கழக மாணவர்கள் விசயத்தில் அம்னோவும் டிஏபியும் முட்டிமோதிக் கொண்டிருக்கின்றன. மாணர்கள்மீது போலீஸ் புகாரைக் கைவிடச் சொல்கிறது டிஏபி. ஆனால், புத்ரி அம்னோ பல்கலைக்கழக நுழைவாயில் கதவுகளை உடைத்துக்கொண்டு உள்ளே சென்ற மாணவர்கள்மீது நடவடிக்கை எடுக்கத்தான் வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருக்கிறது.…
‘மகாதிரைக் கண்டு பிரமிக்கிறேன்’- யுஎம் கிளர்ச்சிக்காரர் பாஹ்மி
பல்கலைக்கழக அதிகாரிகளின் எச்சரிக்கையையும் மீறி எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிமின் சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்ததால் துணிச்சல்காரர் எனப் பெயர் பெற்றிருக்கிறார் மலாயாப் பல்கலைக்கழக மாணவத் தலைவர் பாஹ்மி சைனல். அன்வாரின் பேச்சை ஏற்பாடு செய்ததால் சிலர் அவரை எதிரணி கையாள் என்றும் முத்திரை குத்தியுள்ளனர். ஆனால், அது உண்மை …
வழக்குரைஞர் மன்றத் தீர்மானம் ‘சட்டமல்ல’
முன்னாள் நீதிபதிகள் வழக்குரைஞர்களாக மாறி வாதாடுவதைத் தடுக்கும் வழக்குரைஞர் மன்றத் தீர்மானம் ஒன்றும் சட்டமல்ல. அது, கூட்டரசு நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி கோபால் ஸ்ரீராம், எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிமுக்காக வாதாடுவதை எவ்வகையிலும் கட்டுப்படுத்தாது. இவ்வாறு குறிப்பிட்ட சட்டப் பேராசிரியர் அப்துல் அசீஸ் பாரி, வழக்குரைஞரைத் தேர்ந்தெடுப்பது ஒருவரின் …
எம்பி: சமூக ஊடகக் குற்றவாளிகளுக்குப் பிரம்படி கொடுக்க வேண்டும்
சமூக ஊடகக் குற்றவாளிகளுக்கு சிறைத்தண்டனை கொடுப்பதும் அபராதம் விதிப்பதும் போதாது. தண்டனையைக் கடுமையாக்கி பிரம்படியும் கொடுக்க வேண்டும் என பிஎன் எம்பி ஒருவர் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார். அஹ்மட் லாய் பூஜாங்(பிஎன் -சிபுட்டி) முன்வைத்த இப்பரிந்துரையை அவரின் சகா தியோங் கிங் சிங் (பிஎன் -பிந்துலு) ஆதரித்தார். “இதையும் சட்டத்தில்…
அன்வார் மேல்முறையீடு வழக்கு: “புதிதாக ஒன்றும் இல்லை”
அன்வார் இப்ராகிம்மின் மேல்முறையீடு விசாரணையின் 3 ஆவது நாளான இன்று அன்வாரின் வழக்குரைஞர் ராம் கர்ப்பால் அவரது வாதத்தை இன்று தொடர்கிறார். பெடரல் உச்சநீதிமன்றத்தில் விசாரணை மீண்டும் காலை மணி 9.30 க்கு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராம் கர்ப்பால் அவரது வாதத்தை முடித்துக் கொண்ட பின்னர் அரசு…
அன்வார் மேல்முறையீடு வழக்கு: விசாரணையில் ஐயத்திற்கிடமற்ற சந்தேகம் இருப்பதால், அன்வார்…
அன்வார் மேல்முறையீடு வழக்கு விசாரணையின் இரண்டாவது நாளான இன்று அன்வார் தற்காப்புக் குழுவின் வழக்குரைஞர்களான என். சுரேந்திரன், சங்கீதா கௌவுர் டியோ மற்றும் ராம் கர்ப்பால் ஆகியோர் பெடரல் உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வின் முன் தங்களுடை வாதங்களை சமர்ப்பித்தனர். மாலை மணி 5.10 வரையில்…
அன்வாரின் வழக்குரைஞர் விவகாரத்தால் வழக்குரைஞர் மன்றத்துக்கு நெருக்குதல் அதிகரிக்கிறது
கூட்டரசு நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஒருவர் எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிமுக்காக வாதாடுவது தொடர்பில் மலேசிய வழக்குரைஞர் மன்றம் தன் நிலைப்பாட்டைத் தெளிவாக தெரிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. 21 வழக்குரைஞர்களும் சமூக ஆர்வலர்களும் சேர்ந்து அக்கோரிக்கையை முன்வைத்துள்ளனர், அவர்களில், பெர்காசா முன்னாள் உதவித் தலைவர் …
முன்னாள் நீதிபதி வழக்குரைஞராக மாறி வாதாடக்கூடாது
கூட்டரசு நீதிமன்ற முன்னாள் நீதிபதி கோபால் ஸ்ரீராம், அன்வார் இப்ராகிமின் வழக்குரைஞராக நீதிமன்றத்தில் வாதாடுவது குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அது வழக்குரைஞர் மன்றத்தின் தீர்மானத்தை மீறுவதாகும் என்றவர்கள் தெரிவித்தனர். கெராக்கான் இளைஞர் தலைவர் டான் கெங் லியாங், வழக்குரைஞர் மன்றம் இவ்வாண்டு மார்ச் 15-இல், …
ஜிஎல்சி-கள் பல பில்லியன் ரிங்கிட் கடன் பட்டுள்ளன ஆனால் புத்ரா…
தனியார் நிறுவனங்கள் அரசாங்கத்துக்கு செலுத்த வேண்டிய பெரும் தொகைகளை உள்ளடக்கிய கடன்கள் இன்னும் செலுத்தப்படாமல் இருப்பதை வெளிச்சம் போட்டுக்காட்டிய செர்டாங் எம்பி ஒங் கியான் மிங், அரசு-தொடர்புடைய நிறுவனங்களின்(ஜிஎல்சி) நிலவரமும் அதேதான் என்கிறார். அவை அரசாங்கத்திடம் பட்டுள்ள பல பில்லியன் ரிங்கிட் கடன்களை இன்னும் திருப்பிக் கொடுக்கவில்லை. புத்ரா …
சைபூல் ஆதரவாளர்கள்: காசுக்காக வரவில்லை, நீதி வேண்டி வந்தோம்
புத்ரா ஜெயாவில், நீதி மாளிகைக்கு வெளியில் சைபூலுக்கு ஆதரவு தெரிவிக்கும் கூட்டம் நேற்றைவிட இன்று அதிகமாக இருந்தது. நேற்று சுமார் 100 பேர் காணப்பட்ட இடத்தில் இன்று சுமார் 200 பேர் திரண்டு, “அன்வாரைக் கைது செய்! குதப்புணர்ச்சி செய்தவரைக் கைது செய்!”, என்று கூச்சலிட்டனர். பணத்துக்காக மாரடிக்கும் …
இப்ராகிமைத் தற்காத்துப் பேசுகிறார் மகாதிர்
பெர்காசா தலைவர் இப்ராகிம் அலி “பைபிள்களை எரிக்கச் சொன்னது” தேச நிந்தனைக் குற்றம் அல்ல என்கிறார் டாக்டர் மகாதிர் முகம்மட். “முஸ்லிம்களும் முஸ்லிம்-அல்லாதாருக்குமிடையில் சண்டை மூட்டுவது அவரின் நோக்கமல்ல”, என்று முன்னாள் பிரதமர் செய்தியாளர்களிடம் கூறினார். திருக்குர்ஆன் நூல்கள்கூட மிகவும் பழையதாக விட்டால் எரிப்பது உண்டு என்று கூறிய …
எம்எச்17: காரணமானவர்கள் நீதிமுன் நிறுத்தப்படுவர்; பிரதமர் உறுதி
மலேசிய விமான நிறுவனமான எம்எச்17-ஐ சுட்டு வீழ்த்தியவர்களை நீதிமுன் நிறுத்தாமல் விடப்போவதில்லை என்பதில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் உறுதியாக இருக்கிறார். ஆனால், உக்ரேனில் தொடர்ந்து சண்டை நடப்பதால் விமானம் விழுந்த இடத்துக்குச் செல்வது தடைப்பட்டிருப்பதாக அவர் சொன்னார். காணாமல்போன எம்எச் 370 பற்றியும் அடுத்த சில மாதங்களில் …
இஸ்லாத்துக்கு எதிரானது என்ற தோற்றத்தைக் களையும் முயற்சியில் பிஎஸ்எம்
பார்டி சோசலிஸ் மலேசியா(பிஎஸ்எம்), அது இஸ்லாத்துக்கு எதிரான கட்சி என்ற தோற்றப்பாட்டைத் திருத்தி அமைக்க முயலும். இதன் பொருட்டு அது “இஸ்லாமும் சோசலிசமும்” என்னும் சிறு விளக்கநூலை வெளியிடும் என பிஎஸ்எம் தலைமைச் செயலாளர் எஸ்.அருட்செல்வன் கூறினார். அந்நூல் தொழிலாளர் விடுதலை பற்றி நபிகள் நாயகம் தெரிவித்த கருத்துகளை …
1எம்டிபி கடன்களுக்கு அரசாங்கம் பொறுப்பல்ல
அரசாங்கத்துக்குச் சொந்தமான முதலீட்டு அமைப்பான 1மலேசியா மேம்பாட்டு நிறுவனத்தின்(1எம்டிபி) கடன்களுக்கு அரசாங்கம் பொறுப்பாகாது. ஏனென்றால், பெரும்பாலான 1எம்டிபி-இன் கடன்கள் அரசாங்கத்தின் உத்தரவாதம் பெற்றவை அல்ல. 1எம்டிபி-இன் ரிம37பில்லியன் கடனில் ரிம5.8 பில்லியன் மட்டுமே அரசாங்கம் உத்தரவாதம் பெற்றதென நிதி அமைச்சு இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தது. அந்த முதலீட்டு நிறுவனத்தின் …
அன்வார் மேல்முறையீடு வழக்கு: அன்வாரின் அறிக்கைக்கு மதிப்பளித்திருக்க வேண்டும்
பேரரசரின் நாடாளுமன்ற எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் விதித்திருந்த ஐந்து ஆண்டுகால சிறைத் தண்டனைக்கு எதிராக அவர் செய்திருந்த மேல்முறையீடு மீதான விசாரணை நேற்று பெடரல் உச்சநீதிமன்றத்தில் தொடங்கி இன்று இரண்டாவது நாளாக காலை மணி 9.40 க்கு தொடங்கியது. இன்றைய விசாரணையில் அன்வாரின்…
அன்வாருக்கு எதிரான கூட்டுச் சதி: நீதிமன்றங்கள் கவனிக்கத் தவறிவிட்டன
தம்மை அரசியலிருந்து அகற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்ட கூட்டுச் சதி பற்றி அன்வார் குற்றவாளிக் கூண்டிலிருந்து விடுத்த அறிக்கைக்கு கோலாலம்பூர் உயர்நீதிமன்றமும் மேல்முறையீட்டு நீதிமன்றமும் முறையான மதிப்பளிக்கத் தவறி விட்டன என்று அன்வாரின் தற்காப்பு குழு நீதிமன்றத்தில் கூறியது. இவ்விவகாரம் குறித்து அவ்விரு நீதிமன்றங்களும் தலா ஒரு பத்தி மட்டுமே…
சேவியர்: அன்வாருக்கு வழங்கும் தீர்ப்பு நீதித்துறையின் களங்கத்தை நீக்கும் தீர்ப்பாக…
பேரரசரின் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், மக்கள் கூட்டணித் தலைவருமான அன்வாரின் மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு இந்நாட்டின் நீதித்துறை மீது ஏற்பட்டுள்ள களங்கத்தை நீக்கும் தீர்ப்பாக அமைய வேண்டும் என்பதே மலேசிய மக்களின் ஆசை என்றார் கிள்ளான் ஸ்ரீ அண்டாலாஸ் சட்டமன்ற உறுப்பினரும் பி.கே.ஆர் கட்சியின் தேசிய உதவித் தலைவருமான…
பத்து கவான் வீடுகளில் விரிசல்கள்
செபராங் பிறை செலாத்தான், பத்து கவானில், கம்போங் மஸ்ஜித்தில் உள்ள எட்டு வீடுகளில் விரிசல்கள் தோன்றியிருப்பதற்கு அருகில் நடக்கும் கல்லுடைப்பு வேலைகள்தான் காரணம் என பினாங்கு பயனீட்டாளர் சங்கம் (கேப்) கூறுகிறது. குவாரியில் நடக்கும் கல்லுடைப்பு வேலைகளால் சுமார் 200 குடியிருப்பாளர்கள் ஐந்தாண்டுகளுக்கு மேலாகவே பிரச்னைகளை எதிர்நோக்கி வந்திருப்பதாகவும் …


