கோவிட்-19 பெருந்தொற்றைத் தொடர்ந்து தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் மின்சார நுகர்வு கடுமையாகக் குறைந்தது என்ற நிறுவனத்தின் வாதத்தை நீதிபதி தள்ளுபடி செய்தார். "போர்ட் கிள்ளானில் (Port Klang) உள்ள நிறுவனத்தின் வளாகத்தை ஆய்வு செய்தபோது, காணாமல் போன முனைய முத்திரைகள் (terminal seals) மற்றும் கூடுதல் மின்சுற்று (additional circuit)…
மஇகா தலைமையகத்தில் பரபரப்பு: உதவித் தலைவர் வாசலில் தடுக்கப்பட்டார்
மஇகா எதிர்நோக்கும் நெருக்கடி குறித்து செய்தியாளர் கூட்டமொன்றை நடத்துவதற்காகக் கட்சித் தலைமையகம் சென்றார் உதவித் தலைவர் எம்.சரவணன். ஆனால், அவர் உள்ளே செல்ல முடியாதபடி சுமார் 20 “குண்டர்கள்” அவரைத் தடுத்து நிறுத்த முயன்றார்கள். தாங்கள் தலைமையகக் கட்டிடத்தைப் பாதுகாக்க தலைவர் ஜி.பழனிவேல், தலைமைச் செயலாளர் ஜி. குமார்…
QZ8501: தேடும் நடவடிக்கை விரைவில் முடிவுக்கு வரலாம்
ஏர் ஏசியா விமான விபத்தில் பலியானவர்களைத் தேடும் முயற்சி, மேலும் சடலங்கள் கிடைக்கவில்லையானால் அடுத்த சில நாள்களில் முடிவுக்கு வரலாம். டிசம்பர் 28-இல், சுராபாயாவிலிருந்து சிங்கப்பூர் நோக்கிப் பறந்துகொண்டிருந்த ஏர்பஸ் ஏ320 ஜாவா கடலில் விழுந்தது. அதில் இருந்த 162 பேரும் உயிரிழந்தனர். இதுவரை 70 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.…
நேருக்குநேர் சந்திக்கத் தயாரா? குவான் எங்குக்கு பாஸ் சவால்
பினாங்கில் ஊராட்சித் தேர்தல் நடத்துவதுமீது இரு கட்சிகளின் நிலைப்பாடு பற்றி நேருக்குநேர் விவாதிக்க வருமாறு பாஸ் தலைமைச் செயலாளர் முஸ்டபா அலி, டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங்குக்குச் சவால் விடுத்துள்ளார். டிஏபி பினாங்கில் ஊராட்சித் தேர்தல் நடத்துவதற்கு பாஸ் இணக்கம் தெரிவித்ததாக லிம் கூறுவது “பொய்”…
மகாதிர் சொல் கேட்பீர்: மெகா அணைகள் கட்டுவதை நிறுத்துவீர்
சரவாக் மாநில அரசு, முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் கூறும் அறிவுரையைக் கேட்டு மாநிலத்தில் மெகா அணைக்கட்டுகள் கட்டும் திட்டத்தை நிறுத்த வேண்டும். நேற்று மகாதிர் தெரிவித்த கருத்துக்கு எதிர்வினையாற்றிய சரவா ஆறுகள் பாதுகாப்பு இயக்கம்(SAVE Rivers), ராட்சத அணைக்கட்டுகள் சூற்றுச்சூழலுக்கு மட்டுமல்லாமல் மக்கள் வாழ்வுக்கும் கேடு …
குருப்-புக்கு எதிராக பெர்காசா அவதூறு வழக்கு
மலாய் உரிமைகளுக்குப் போராடும் என்ஜிஓ-வான பெர்காசா, தன்னை “இனவாத, குறுகிய நோக்குடைய” அமைப்பு என வருணித்துள்ள பிரதமர்துறை அமைச்சர் ஜோசப் குருப்-புக்கு எதிராக அவதூறு வழக்கு பதிவு செய்துள்ளது. குருப், நேற்று, பெட்டாலிங் ஜெயா, சன்வேயில் குருப் அவ்வாறு கூறினார் என பெர்காசா தலைவர் இப்ராகிம் அலி கூறினார்.…
மேஜர் ஜைடி-இன் கீழ் அதிகாரி பதவி இறக்கம்
அரச ஆகாயப்படை விமானி மேஜர் ஜைடி அஹ்மட், இராணுவ நீதிமன்றத்தால் பணிநீக்கம் செய்யப்பட்ட ஒரு வாரத்தில் அவருக்குக் கீழ்ப் பணியாற்றிய அதிகாரி ஒருவர் பதவி இறக்கப்பட்டிருக்கிறார். 13வது பொதுத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட அழியா மை பற்றி ஊடகங்களிடம் பேசியதற்காக ஜைடி பணிநீக்கம் செய்யப்பட்டார். அதை அடுத்து அவருக்குக் கீழ்ப் …
பிகேஆர்: ஜாஹிட் மவுனம் காக்க விரும்பினால் பதவி விலகுவது நல்லது
உள்துறை அமைச்சர் ஜாஹிட் ஹமிடி, அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட சூதாட்ட மன்னன் என்று கூறப்படும் பால் புவாவுக்கு ஆதரவுக் கடிதம் எழுதியது பற்றித் தொடர்ந்து மவுனம் காக்க விரும்பினால் அவர் பதவி விலகுவதே நல்லது என்று பிகேஆர் கூறியது. கடந்த ஆண்டு லாஸ் வேகாஸில் கைது செய்யப்பட்ட புவாவுடன் …
அன்வார் இல்லையென்றால் பாஸ்- டிஏபி பிளவு மேலும் மோசமடையும்
பிப்ரவரி 10-இல், பக்கத்தான் ரக்யாட் தலைவர் அன்வார் இப்ராகிம் குற்றவாளி எனத் தீர்ப்பாகி உள்ளே போய்விட்டால் பாஸ், டிஏபி உறவுகள் படுமோசமாகி விடும். அம்னோவும் பாஸும் சேர்ந்து ஒற்றுமை அரசாங்கம் அமைக்கும் சாத்தியம் பற்றிக் கருத்துரைத்தபோது மசீச இளைஞர் தலைவர் சோங் சின் வூன் இவ்வாறு கூறினார். “முன்பு …
சிருல் ‘காட்டிக்கொடுக்கப்பட்டாராம்’
போலீஸ் அதிகாரியாக தன் கடமையைச் செய்ததற்காக சிருல் அஸ்ஹார் உமர் “காட்டிக்கொடுக்கப்பட்டார்” என அவரின் தாயார் பியா சமட் கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அல்டான்துன்யா கொலையில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தாலும் சிருல் விடுவிக்கப்படுவார் என்று அவரது குடும்பம் நம்புகிறது. பியா,74, இதைத் தெரிவித்ததாக பாஸ் கட்சி செய்தித்தாளான ஹராகா டெய்லி …
பிபிஎஸ் சட்டவிரோதமானது என்ற குற்றச்சாட்டை எதிர்த்து பினாங்கு வழக்கு தொடுக்கிறது
பினாங்கு அரசு, அதன் தன்னார்வ காவல் படை(பிபிஎஸ்) சட்டவிரோதமானது என்ற குற்றச்சாட்டை நீதிமுறை மேலாய்வு செய்ய வேண்டும் என்று மனுச் செய்து கொண்டிருக்கிறது. 10-அம்ச- அடிப்படையில் மேலாய்வு செய்யக் கேட்டுக்கொள்ளும் அம்மனு இன்று பினாங்கு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அம்மனு உள்துறை அமைச்சு, போலீஸ் படைத் தலைவர், …
ஏர் ஏசியா X சிஇஓ: நான் பதவி விலகவில்லை
ஏர் ஏசியா X-இன் தலைமை செயல் அதிகாரி(சிஇஓ) அஸ்ரான் ஒஸ்மான் ரனி, பதவிவிலகல் கடிதம் கொடுத்திருப்பதாகக் கூறும் செய்திகளை மறுக்கிறார். “நான் பதவி விலகவில்லை. அந்த விமான நிறுவனத்தை நான்தான் நடத்திக் கொண்டிருக்கிறேன். இச்செய்திகள் எங்கிருந்து வருகின்றன என்பது எனக்குத் தெரியவில்லை”, என்றாரவர். கினிபிஸ்- உக்கு அனுப்பிய மின்னஞ்சலில்,…
தீவிரவாதிகளே நாட்டின் நெம்.1 எதிரிகள்
தீவிரவாதிகள், அதுவும் சமுதாயத்துக்கு அச்சத்தை ஊட்டுபவர்களே நாட்டின் முதல் எதிரிகள் என்று பிரதமர்துறை அமைச்சர் ஜோசப் குருப் கூறினார். “தீவிரவாத தரப்பினரைத் தடுத்து நிறுத்தாவிட்டால் தேசிய ஒற்றுமைக்குத் தடையாக விளங்குவார்கள்”. ஆசிய வியூக, தலைமைத்துவ கழகம் (அஸ்லி) ஏற்பாடு செய்திருந்த ஒரு மாநாட்டில் உரையாற்றியபோது குருப் இவ்வாறு கூறினார்.…
இஸ்மா அரண்மனை பெயரைச் சொல்லி சிறுபான்மையினரை மிரட்டுகிறது
ஈக்காத்தான் முஸ்லிமின் மலேசியா (இஸ்மா) 117-ஆண்டுகள் பழமைவாய்ந்த ஸ்ரீசுந்தரராஜப் பெருமாள் கோயில் புதுப்பிக்கப்பட்டதற்கு அரண்மனை பெயரைச் சொல்லி எதிர்ப்புத் தெரிவிப்பதன்வழி “நாட்டில் இனங்களுக்கிடையில் பதற்றத்தை உண்டுபண்ண முயல்கிறது” என சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் வி.கணபதி ராவ் சாடினார். இஸ்மா, இனவாதப் பேச்சுகளின் மூலமாக மலேசியர்களின் ஒற்றுமையை உடைத்தெறிய முயல்கிறது …
இஸ்மா, ஆலய-எதிர்ப்பை மீண்டும் கிளப்பிவிட்டு ஆத்திரமூட்டியுள்ளது
ஈக்காத்தான் முஸ்லிமின் மலேசியா (இஸ்மா), சமூக வலைத்தளத்தில் கிள்ளான் ஆலய-எதிர்ப்பு விவகாரத்தை மீண்டும் கிளறிவிட்டிருப்பது இந்து சமூகத்தை ஆத்திரமடைய வைத்துள்ளது. அந்த வலச்சாரி அமைப்பைத் தேச நிந்தனைச் சட்டத்தின்கீழ் விசாரிக்க வேண்டும் என மலேசிய இந்தியர் முற்போக்குச் சங்கத் தலைமைச் செயலாளர் எஸ்.பாரதிதாசன் கேட்டுக்கொண்டிருக்கிறார். “எதற்காக இஸ்மா வேண்டுமென்றே …
புதிய சட்டம் ஐஎஸ்ஏ போன்றிருக்கிறது எனக் கண்டனம்
இரத்துச் செய்யப்பட்ட உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தில் இருந்த விசாரணையின்றித் தடுப்புக்காவலில் வைக்கும் வசதி புதிதாக கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாதத்துக்கு எதிரான சட்டத்தில் இடம்பெறுவதைப் பல தரப்பினர் குறைகூறியுள்ளனர். புதிய சட்டம் அதற்கு வகை செய்யும் என உள்துறை துணை அமைச்சர் வான் ஜுனாய்டி துவாங்கு ஜப்பார் கூறியதாக மலேசியன் இன்சைடர் …
அஸ்மின்: பாஸ்- டிஏபி சில்லறை சண்டை ஓய வேண்டும்
பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி, ஊராட்சித் தேர்தல்மீது டிஏபியும் பாஸும் சர்ச்சையிடுவதற்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என விரும்புகிறார். “இதற்கு பக்கத்தானுக்குள்ளேயே தீர்வு காண வேண்டும். பக்கத்தான் ரக்யாட் தலைமைத்துவ மன்றக் கூட்டம் கூட்டப்படும்போது இவ்விவகாரமும் விவாதிக்கப்படுவது நிச்சயம். “பக்கத்தான் ரக்யாட்டின் பலமே ஒரு கருத்துடனும் …
அன்வாரின் குதப்புணர்ச்சி வழக்கு தீர்ப்பு பிப். 10-இல்
அன்வார் இப்ராகிம் மீதான குதப்புணர்ச்சி குற்றச்சாட்டில் கூட்டரசு நீதிமன்றம் அதன் இறுதித் தீர்ப்பை இன்னும் இரண்டு வாரங்களில் வழங்கும். உச்ச நீதிமன்றம், பிப்ரவரி 10ஆம் நாள் தீர்ப்பு வழங்கும் என மலேசிய நீதித்துறை டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு அன்வார், "Que sera sera (என்ன நடக்க வேண்டுமோ, …
‘அக்கறையற்ற’ கிளந்தான் அரசாங்கம், பிஎஸ்எம் சாடல்
கிளந்தான் அரசு இயற்கைச் சுற்றுச்சூழல் குறித்து “கவலை கொள்வதில்லை, அக்கறை காட்டுவதில்லை” என பார்டி சோசலிஸ் மலேசியா (பிஎஸ்எம்) சாடியுள்ளது. அதுதான் அம்மாநிலத்தில் வெள்ள நிலைமை மோசமானதற்குக் காரணம். “அந்த அரசால் மலைச்சாரல்களில் பொறுப்பற்ற முறையில் மேற்கொள்ளப்பட்ட மேம்பாட்டுப் பணிகளின் கடும் விளைவுகளை 2014 வெள்ளத்தின்போதே கிளந்தான் மக்கள் …
மலேசியாகினி பிரதமர் அலுவலகத்திற்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது
மலேசிய பிரதமர் அலுவலகம் மற்றும் அதன் வளாகத்திற்குள் செல்வதற்கு மலேசியாகினிக்கு மீண்டும் இன்று தடை விதிக்கப்பட்டது. துணைப் பிரதமர் முகைதின் யாசின் பங்கேற்கும் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்ற போது அங்கிருந்த பாதுகாவலர்கள் மலேசியாகினியை உள்ளே விட உடனடியாக மறுத்து விட்டனர். "மலேசியாகினி உள்ளே செல்லவே முடியாது",…
அன்வார்: மே 13 எச்சரிக்கை ஹாடியின் தனிப்பட்ட கருத்து
உள்ளூர் மன்றங்களுக்கான தேர்தல் இன்னொரு மே 13 இனக் கலவரத்திற்கு வழிவகுக்கும் என்று பாஸ் கட்சி தலைவர் அப்துல் ஹாடி அவாங் விடுத்துள்ள எச்சரிக்கை அவரது "தனிப்பட்ட கருத்து" ஆகும் என்று எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறுகிறார். உள்ளூர் மன்ற தேர்தலுக்கான அதன் நிலைப்பாடு என்ன…
குழந்தைகளை பிரம்பால் அடிப்பது குற்றமாக்கப்படலாம்
தற்போதைய குழந்தை சட்டம் 2001க்கு மாற்றாக விரைவில் இயற்றப்படவிருக்கும் புதிய சட்டத்தின் கீழ் குழந்தைகளை பிரம்பால் அடிப்பது கிரிமினல் குற்றமாக்கப்படலாம் என்று மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் ரோஹாணி அப்துல் கரிம் கூறினார். மலேசியாவில் குழந்தைகளை நல்வழிப்படுத்துவதற்கு பிரம்படி கொடுப்பது வழக்கமானது என்றாலும், நாடு…
சிருல் வழக்கில் ஆஸ்திரேலியாவைக் குற்றம் சொல்வது நியாயமல்ல
சிருல் அஸ்ஹார் உமர் விவகாரத்தில் ஆஸ்திரேலியாவைக் குறை சொல்வது நியாயமாகாது என்கிறார் ஆஸ்திரேலிய அரச வழக்குரைஞர் மார்க் ட்ரோவல். சிருல் நாட்டைவிட்டு வெளியேற முடியாதபடி கடுமையான பிணை நிபந்தனைகளை மலேசிய அரசுத்தரப்பு வழக்குரைஞர்கள் போட்டிருக்க வேண்டும். மேற்கு ஆஸ்திரேலியாவில் வழக்குரைஞர் தொழில் செய்யும் ட்ரோவல், அல்டான்துன்யா ஷரீபு கொலை …
ஊழல் பேயை ஒழிப்பதில் பிஎன்னுக்கு அக்கறை இல்லை
ஊழலை அம்பலப்படுத்துவதில் தீவிரம் காட்டுவதில்லை என பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் பிஎன் வழிநடத்தும் கூட்டரசு அரசாங்கத்தைச் சாடினார். “அது மேலும் ஊழல் செய்யவே பசி கொண்டு அலைவதுபோல் தோன்றுகிறது”. நேற்றிரவு பினாங்கு கழகமும் சி4 ஊழல்- தடுப்பு கண்காணிப்பு அமைப்பும் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் லிம் …


