கோவிட்-19 பெருந்தொற்றைத் தொடர்ந்து தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் மின்சார நுகர்வு கடுமையாகக் குறைந்தது என்ற நிறுவனத்தின் வாதத்தை நீதிபதி தள்ளுபடி செய்தார். "போர்ட் கிள்ளானில் (Port Klang) உள்ள நிறுவனத்தின் வளாகத்தை ஆய்வு செய்தபோது, காணாமல் போன முனைய முத்திரைகள் (terminal seals) மற்றும் கூடுதல் மின்சுற்று (additional circuit)…
மஇகா தலைமைச் செயலாளர் குமார் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்
தமது இறுதி மூச்சு இருக்கும் வரையில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்து உண்ணாவிரதத்தை நேற்று பிற்பகல் மணி 2.00 க்கு தொடங்கிய தமது உண்ணாவிரத்தை குமார் அம்மன் இன்றிரவு முடித்துக் கொண்டார். புத்ராஜெயாவில் சங்கங்கள் பதிவக தலைமையகத்திற்கு வெளியில் தொடங்கிய குமாரின் உண்ணாவிரதத்தை நிறுத்தும்படி மஇகா தலைவர்…
ஊராட்சித் தேர்தல்கள் இன்னொரு மே13-க்கு வழிகோலும்: ஹாடி எச்சரிக்கை
ஊராட்சித் தேர்தல்களைத் திரும்பவும் கொண்டுவரும் டிஏபி-இன் ஆசை இன்னொரு மே 13 இனக் கலவரத்துக்குத்தான் இட்டுச் செல்லும் என்று பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங் எச்சரிக்கிறார். “நிலைத்தன்மையைக் கெடுக்ககூடிய, கிராமங்களுக்கும் நகரங்களுக்குமிடையில் இடைவெளியை விரிவடையச் செய்யக்கூடிய எதையும் செய்ய எண்ணக்கூடாது. அது பதற்றத்தைப் பெருக்கி அதன் விளைவாக…
டயிம்: பூமிபுத்ரா-அல்லாதார் ஓரங்கட்டப்படவில்லை
முன்னாள் நிதி அமைச்சர் டயிம் சைனுடின், பூமிபுத்ரா-அல்லாதார் ஓரங்கட்டப்படுகிறார்கள் என்று கூறப்படுவதை மறுக்கிறார். அரசியல்வாதிகள்தான் அப்படிக் கதை கட்டி விடுகிறார்கள் என்கிறார் அவர். இந்த அரசியல்வாதிகள் நாட்டில் இனங்களுக்கிடையில் நிலவும் நல்லுறவுகளைச் சீரழித்து விடுவார்கள் என்றவர் எச்சரித்தார். சைனா பிரஸ் செய்தித்தாளுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் டயிம், கல்வி …
சிருல் இன்னமும் தடுப்புக் காவலில்தான் உள்ளார்
சிருல் அஸ்ஹார் உமர் விடுவிக்கப்படவில்லை, இன்னமும் தடுப்புக் காவலில்தான் வைக்கப்பட்டிருக்கிறார் என்பதை ஆஸ்திரேலிய குடிநுழைவு, எல்லைப் பாதுகாப்புத் துறை உறுதிப்படுத்தியது. “அந்த ஆள் இன்னமும் குடிநுழைவுத் துறை காவலில்தான் உள்ளார். மேல் விவரம் எதையும் அளிப்பதற்கில்லை”, என அத்துறை பேச்சாளர் ஒருவர் மலேசியாகினிக்கு அனுப்பிய மின்னஞ்சலில் கூறினார். மலேசிய …
குமார் அம்மான் உயிருக்கு மருட்டலா?
புத்ரா ஜெயாவில், சங்கப் பதிவகத்துக்கு வெளியில் உண்ணாவிரதம் இருக்கும் மஇகா தலைமைச் செயலாளர் ஜி.குமார் அம்மான், ஒரு டெக்சியில் வந்த நால்வரால் தம் உயிருக்கு ஆபத்து ஏற்படவிருந்ததாகக் கூறுகிறார். அதிகாலை, மணி 4.30-க்கு அச்சம்பவம் நிகழ்ந்ததாம். “நான் கழிப்பறைக்குச் செல்லும்போது ஒரு டெக்சியில் ஒருசிலர் இருப்பதைப் பார்த்தேன். என்னைப் …
பிஎல்கேஎஸ் முகப்புகள் மீண்டும் திறக்கப்பட்டன
குடிநுழைவுத் துறை விசிட் பாஸ்( தற்காலிக வேலை அல்லது பிஎல்கேஎஸ்) நீட்டிப்புக்கு விண்ணப்பிக்கும் முகப்புகளை மீண்டும் திறக்க முடிவு செய்துள்ளது. அவை இன்று தொடங்கி பிப்ரவரி 28-வரை திறந்திருக்கும். அன்னிய தொழிலாளர்களின் வேலை அனுமதிகளை இணையவழி நிர்வகிக்கும் பொறுப்பை வெளி நிறுவனமான MyEG சர்வீசஸ் பெர்ஹாட்டிடம் ஒப்படைத்ததைப் பொதுமக்கள் …
ஆஸ்திரேலியாவில் சிருல் விடுதலை ஆனால், கண்காணிக்கப்படுகிறார்
மங்கோலிய பெண் அல்டான்துன்யா ஷரீபூ-வைக் கொலை செய்ததற்காக மரண தண்டனை விதிக்கப்பெற்ற சிருல் அஸ்ஹார் உமர், ஆஸ்திரேலியாவில் குடிநுழைவுத் துறையால் கைது செய்யப்பட்ட பின்னர் நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டார். “இப்போதைக்கு அவர் விடுவிக்கப்பட்டிருக்கிறார். ஆனால், அவரது கடப்பிதழை ஆஸ்திரேலிய அதிகாரிகள் பிடுங்கி வைத்திருக்கிறார்கள். சுதந்திரமாக நடமாடுவதற்கு அனுமதிக்கும் நிபந்தனை அட்டை …
ஐஎஸ்ஐஎஸ்-க்கு எதிராக ஆதரவு திரட்ட இந்தியா சென்றுள்ள யாசிதி குழு…
இந்தியாவில் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ள யாசிதி இன குழுவினர் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் படும் துன்பங்களை எடுத்துக்கூறி ஆதரவு திரட்டி வருகின்றனர். ஈராக்கில் கணிசமாக வசிக்கும் யாசிதி இன மக்கள் ஈராக்கில் எழுச்சி பெற்ற ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் படும் துன்பங்களில் இருந்து மீள இந்தியாவிடம் ஆதரவு திரட்ட வந்துள்ளனர். இந்தியாவிடம் ஆதரவு…
ஜாஹிட்: சிருலை மலேசியாவிடம் ஒப்படைக்க முறைப்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
சிருல் அஸ்ஹார் உமரை ஒப்படைக்கும்படி ஆஸ்திரேலியாவுக்கு முறைப்படி கோரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாக உள்துறை அமைச்சர் அஹமட் ஜாஹிட் ஹமிடி கூறினார். “அரச மலேசிய போலீசார் விஸ்மா புத்ராவழி அக்கோரிக்கையை விடுத்துள்ளனர்”, என ஜாஹிட் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். “இதற்கு, ஆஸ்திரேலிய அரசாங்கத்துடன் கலந்து பேசுதல் போன்று சில நடைமுறைகள் உண்டு. “ஆஸ்திரேலிய …
மஇகா தலைமைச் செயலாளர் இறுதி மூச்சு வரையில் உண்ணாவிரதம்
"நான் இறுதி மூச்சு வரையில் இங்கே இருப்பேன். நான் இந்திய சமூகத்திற்காக இறப்பேன்", என்ற உறுதிமொழியுடன் மஇகாவின் தலைமைச் செயலாளர் ஜி. குமார் அமன் அவரது உண்ணா விரதத்தை புத்ராஜெயாவில் சங்கங்கள் பதிவகத்திற்கு (ரோஸ்) வெளியில் தொடங்கினார். குமாரை மஇகாவின் தலைமைச் செயலாளராக ஜி.பழனிவேல் நியமித்தார். ஆனால்,…
QZ8501:விமானத்தின் நடுப்பகுதியிலிருந்து மேலும் மூன்று சடலங்கள் மீட்பு
இந்தோனேசிய கடல்படை முக்குளிப்பாளர்கள் QZ8501 விமானத்தின் நடுப்பகுதிக்குச் சென்று மூன்று சடலங்களை எடுத்து வந்தனர். கடலில் நீரோட்டம் வலுவாக இருந்ததாலும் வானிலை மோசமாக இருந்ததாலும் விமானத்தின் நடுப்பகுதியை அடைவது சிரமமாக இருந்தது. இன்று ஒரு வழியாக அவர்கள் அப்பகுதியைச் சென்றடைந்தார்கள். “அங்கு மேலும் பல சடலங்கள் கிடைக்கலாம்”, என…
ஐஎஸ் எனச் சந்தேகிக்கப்படுவோருக்குத் தனிச் சிறை
இஸ்மாமிய அரசு (ஐஎஸ்) பயங்கரவாத அமைப்புடன் தொடர்புள்ளவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்படுவோர் மற்ற கைதிகளுடன் அல்லாமல் தனியே சிறை வைக்கப்படுவார்கள் என உள்துறை அமைச்சர் அஹமட் ஜாஹிட் ஹமிடி கூறினார். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புள்ளவர்கள் மற்ற கைதிகளிடம் தங்கள் கருத்துகளைப் பரப்புவதைத் தடுப்பதற்காக இவ்வாறு செய்யப்படுகிறது. “அவர்கள்…
ஜிஎஸ்டி-யைத் தள்ளிப்போடுவதே மக்களுக்கு உகந்தது
அரசாங்கம் மக்கள் நலனுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக இருந்தால் பொருள், சேவை வரி(ஜிஎஸ்டி) அமலாக்கத்தை ஒத்திப்போட வேண்டும். இக்கருத்தை முன்வைத்த செலாயாங் எம்பி வில்லியம் லியோங், வாழ்க்கைச் செலவின உயர்வினால். சாதாரண மலேசியர்கள் கடும் தொல்லைகளை எதிர்நோக்குவதாகக் கூறினார். “அவசரத் தேவைகளைச் சமாளிக்க சாதாரண மலேசியரிடம் போதுமான சேமிப்பு இல்லை.…
அரசியல்வாதிகள் திரெங்கானு பள்ளிவாசல்களில் பரப்புரை செய்யத் தடை
திரெங்கானு பள்ளிவாசல்களில், முஸ்லிம் அரசியல்வாதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்பட, சமய உரை நிகழ்த்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்தடை விதிப்பு அடுத்த மாதத்திலிருந்து அமலுக்கு வருவதாக பெரித்தா ஹரியான் அறிவித்துள்ளது. திரெங்கானு சுல்தான் சுல்தான் மிஸான் சைனல் அபிடின் பள்ளிவாசல்கள் கட்சி அரசியலிலிருந்து விடுபட்டிருப்பதை விரும்புகிறார் என மாநில சமய …
மகாதிரிடம் பாடம் கற்பீர்: நஜிப்புக்கு டயிம் அறிவுறுத்து
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், நெருக்கடி நிலையைச் சமாளிக்கும் விதத்தை டாக்டர் மகாதிர் முகமட்டிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்கிறார் முன்னாள் நிதி அமைச்சர் டயிம் சைனுடின். சைனா பிரஸ் செய்தித்தாளுக்கு வழங்கிய நேர்காணலில் இவ்வாறு கூறிய டயிம், அண்மையில் நஜிப்பைச் சந்தித்ததாகவும் அப்போது வெள்ளப் பேரிடரைச் சமாளிப்பதில் இன்னும் …
பால் புவாமீது இன்று பூர்வாங்க விசாரணை
யாருக்கு ஆதரவாக உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி அமெரிக்க புலனாய்வுத் துறைக்குக் கடிதம் எழுதினார் எனக் கூறப்படுகிறதோ அந்த பால் புவாமீது இன்று பூர்வாங்க விசாரணை தொடங்குகிறது. இந்தப் பூர்வாங்க விசாரணையில் அரசுத்தரப்பும் எதிர்த்தரப்பும் நீதிபதியைச் சந்திப்பார்கள். நீதிபதி வழக்கின் தன்மையை ஆராய்வார். வழக்குக்கு அடிப்படையான ஆதாரங்களும் …
பிரதமர்: ஜிஎஸ்டி அமலாக்கத்துக்கு இதுவே சரியான தருணம்
எரிபொருள் விலை படுவீழ்ச்சி கண்டிருக்கும் இந்த நேரம்தான் பொருள், சேவை வரியைக் கொண்டுவர சரியான நேரமாகும் என்கிறார் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக். “ரோன் 97, ரோன் 95, டீசல் ஆகியவற்றின் விலைகள் குறைந்திருப்பது ஒரு காரணம். விலைக் குறைவினால் மலேசியப் பயனீட்டாளர்களிடம் செலவுசெய்ய கூடுதல் பணம் கைவசம் …
ஆர்ஒஎஸ் மீது சினமடைந்துள்ள மஇகா தலைமைச் செயலாளர் உண்ணாவிரதம் தொடங்குகிறார்
நாளை பிற்பகல் மணி 2.00 க்கு புத்ராஜெயாவில் சங்கங்கள் பதிவகத்தின் தலைமையகத்தில் மஇகாவின் புதிய தலைமைச் செயலாளர் ஜி. குமார் அமன் கட்சியைக் காப்பாற்றுவதற்காக உண்ணாவிரதம் தொடங்கவிருக்கிறார். சங்கங்கள் பதிவாளரை சந்திப்பதற்கு குமாருக்கு வாய்ப்பளிக்க ஆர்ஓஎஸ் மறுத்து விட்டதாக தமிழ் நாளிதழ்கள் நேற்று செய்தி வெளியிட்டிருந்தன. "மத்திய…
“அல்லா” மேல்முறையீடு மனு நிராகரிக்கப்பட்டது
த ஹெரால்ட் வார இதழ் "அல்லா" என்ற சொல்லை பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை மீது பெடரல் நீதிமன்றம் முன்னதாக அளித்திருந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய அனுமதி கோரி அந்நீதிமன்றத்திடம் ரோமன் கத்தோலிக்க தேவாலய பேராயர் செய்திருந்த மனுவை இன்று ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு தள்ளுபடி…
கூடுதல் நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கான தேவாலயத்தின் மனு நிராகரிக்கப்பட்டது
ரோமன் கத்தோலிக்க தேவாலய பேராயரின் மனுவை விசாரிக்கும் பெடரல் உச்சநீதிமன்ற அமர்வில் நீதிபதிகளின் எண்ணிக்கை ஏழு அல்லது ஒன்பதற்கு விரிவாக்கப்பட வேண்டும் என்ற மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. ஏழு நீதிபதிகள் அடங்கிய முன்னைய அமர்வு வழங்கிய தீர்ப்பை ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரிப்பது…
சிருல் ஆஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்
மங்கோலிய பெண் அல்தான்துயாவை கொலை செய்த குற்றத்திற்காக மரண தண்டணை விதிக்கப்பட்டுள்ள இரு குற்றவாளிகளில் ஒருவரான சிருல் அஸ்ஹார் உமார் ஆஸ்திரேலிய குடிநுழைவுத்துறை அதிகாரிகளால் பிரிஸ்பேனில் கைது செய்யப்பட்டார். இண்டர்போல் சிருலின் பெயரை சிவப்பு நோட்டீஸ் பட்டியலில் சேர்க்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டதாக எபிசி செய்தி…
மின்கட்டணத்தைக் குறைப்பீர்: பிகேஆர் கோரிக்கை
பிகேஆர், இவ்வாண்டில் மின்கட்டண உயர்வு இல்லை என்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அறிவித்திருப்பதை ஏளனம் செய்துள்ளது. எண்ணெய் விலை படுவீழ்ச்சி கண்டுள்ள வேளையில் மின்கட்டணத்தைக் குறைக்காமல் கட்டண உயர்வைத் தள்ளி வைப்பதாகச் சொல்வது என்ன நியாயம் என்று அது கேட்கிறது. “பிரதமர் மின்கட்டணத்தை உடனடியாகக் குறைக்க வேண்டும்.…
மஇகா-வின் புதிய நியமனங்களை ஏற்பதற்கில்லை- ஆர்ஓஎஸ்
மஇகா மறுதேர்தல் விவகாரத்துக்குத் தீர்வு காணாதவரை அக்கட்சித் தலைவர் ஜி.பழனிவேல் செய்துள்ள புதிய நியமனங்களை ஏற்பதற்கில்லை எனச் சங்கப் பதிவகம் திட்டவட்டமாக அறிவித்து விட்டது. நேற்று மஇகா-வுக்கு அனுப்பிவைத்த கடிதத்தில், சங்கப் பதிவாளரைச் சந்திக்க மஇகா தலைமைச் செயலாளர் ஜி.குமார் அம்மான் விடுத்திருந்த கோரிக்கையை ஆர்ஓஎஸ் நிராகரித்து விட்டதாக …



