முகாம்கள் மூடப்பட்டாலும் பணியாளர்களுக்கு சம்பளம் உண்டு

தேசிய  சேவையை  ஒராண்டுக்  காலம்  நிறுத்திவைக்க  பிரதமர் நஜிப்  அப்துல்  ரசாக்  முடிவு  செய்திருந்தாலும்  தேசிய  சேவை  முகாம்  நடத்துனர்கள்,  பயிற்றுனர்கள் ஆகியோரின்  நிலை  பாதிக்கப்படாது  எனத்  தற்காப்பு  அமைச்சர்  ஹிஷாமுடின்  உசேன்  கூறினார். “முகாம்கள்  மூடப்படுவதால்  நடத்துனர்கள்,  பயிற்றுனர்கள்  பாதிக்கப்பட  மாட்டார்கள். அவர்கள்  நிரந்தரப்  பணியாளர்கள்”, என …

தேசிய சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது

தேசிய  சேவை  பயிற்சித்  திட்டம்(பிஎல்கேஎன்)  இவ்வாண்டு தற்காலிகமாக  நிறுத்தி  வைக்கப்படும். நாட்டின்  வருமானம்  வீழ்ச்சி கண்டு  வருவதைச்  சமாளிக்க  அரசாங்கம்   இம்முடிவை  எடுத்துள்ளது. இதன்வழி  சுமார் ரிம400 மில்லியனை மிச்சப்படுத்தலாம்  என்கிறார்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்.

இவ்வாண்டு மின் கட்டணம் உயராது

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்,  திருத்தி  அமைக்கப்படும்  2015- பட்ஜெட்டின்  ஒரு  பகுதியாக  இவ்வாண்டு  மின் கட்டணம்  உயர்த்தப்படாது  என  அறிவித்துள்ளார். இவ்வாண்டுக்கான  உள்நாட்டு  உற்பத்தி  ஐந்திலிருந்து ஆறு  விழுக்காடாக  இருக்கும்  என்று  எதிர்பார்க்கப்பட்டது. இப்போது அது  திருத்தப்பட்டு  4.5-இலிருந்து  5 விழுக்காடாக  இருக்கும்  என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் …

டிவி 3 அன்வாருக்கு இடமளிக்கிறதே என சைபுல் ஆத்திரம்

எதிரணித்  தலைவர் அனவார்  இப்ராகிம்  அடிக்கடி  டிவி3-இல்  வருவதைக்  கண்டு  அவரின்  முன்னாள்  உதவியாளர்  சைபுல்  புகாரி   அஸ்லான்  எரிச்சலடைந்திருக்கிறார். முன்னாள்  நிதி  அமைச்சர்  டயிம்  சைனுடின் மீது  பிகேஆர்  நடத்தும்  தாக்குதல்கள்  பற்றிய  செய்திகளுக்கு  முக்கியத்துவம்  கொடுக்க  வேண்டும்  என்று  டிவி3  “பெரிய  போஸ்”  உத்தரவிட்டிருப்பதாக சைபுல்,…

நிக் அசீஸ் நலமே உள்ளார், ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார்

பாஸ்  கட்சியின்  பெருமதிப்புக்குரிய  ஆன்மிகத்  தலைவர்  நிக்  அப்துல்  அசீஸ்  நிக்  மாட்  கடுமையாக  நோயுற்றிருப்பதாகக்  கூறப்படுவதை  அவரின்  மகன்  மறுக்கிறார். “அவர்  வீட்டில்  நலமாக  ஓய்வெடுத்துக்  கொண்டிருக்கிறார். படிக்கிறார், நடக்கிறார்”, என  நிக்  அப்டு  கூறினார். ஆனால், அவர்  உடல்  சற்றே தளர்ச்சியுற்றிருப்பதையும்  அவர்  ஒப்புக்கொண்டார். தளர்ச்சியின் …

எண்ணெய் விலைவீழ்ச்சியைச் சமாளிக்கும் வழிமுறைகள்: பிரதமர் அற்விப்பார்

அதிர்ச்சிதரும்  வகையில்  வீழ்ச்சி  கண்டிருக்கும்  உலக  எண்ணெய்  விலைகளைச்  சமாளிக்கும்  புதிய  வழிமுறைகளைப்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  நாளை  அறிவிப்பார். கடந்த  சில  மாதங்களில்  எண்ணெய்  விலை  பாதியாகக்  குறைந்துள்ளது.  இதனால்,  எரிபொருள்  விலைகள்  குறைந்திருப்பது  பயனீட்டாளர்களுக்கு  நல்ல  செய்திதான். ஆனால், அது  நாட்டின்  வருமானத்தைப் பாதிப்பதுதான் …

குறைபாட்டைச் சரிக்கட்ட கடன் வாங்கக் கூடாது: நஜிப்புக்கு எச்சரிக்கை

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்,  2015 பட்ஜெட்டில்  மிகப் பெரிய  தொகை  துண்டு  விழுவதைச்  சரிக்கட்ட   கடன் வாங்கக்,   கூடாது  என்றும்  கடன்சுமையை  நாடு  தாங்காது  என்றும்  எச்சரிக்கப்பட்டுள்ளது. உலக  எண்ணெய்  விலை  வீழ்ச்சி, ரிங்கிட்  மதிப்பு  குறைந்தது, வெள்ளப்  பேரிடர்  செலவு   ஆகியவற்றால்  பட்ஜெட்டில்  ரிம25 பில்லியன் …

‘பீதியைப் பரப்பிய’ வலைப்பதிவருக்கு ஈராண்டுச் சிறை

ஈராண்டுகளுக்குமுன்  லாஹாட்  டத்துவில்  ஊடுருவல்  நிகழப்போவதாக  மக்களிடையே  அச்சத்தைப்  பரப்பியதற்காக  பக்கத்தான்  ரக்யாட்  ஆதரவாளரும்  ‘மிலோசுவாம்’ என்ற  பெயரில்  பிரபலமாக  விளங்கும்  பதிவாளருமான  யூசுப்  அல்-சித்திக்குக்கு  ஈராண்டுச்  சிறைத்  தண்டனை  விதிக்கப்பட்டது. இரகசிய  ஆவணம்  என்று  கூறி,  போலீசார்  சாபா  ஊடுவருலை  எதிர்கொள்ள  ஆயத்தமாகி  வருகிறார்கள்  என்று  கூறும் …

மகாதிர்: பெர்காசாவுடன் கருத்துவேறுபாடு இல்லை

டாக்டர்  மகாதிர்  முகம்மட்,  வலச் சாரி  இயக்கமான  பெர்காசாவுடன்  உறவுகளைத்  துண்டித்துக்  கொண்டிருப்பதாக  வெளிவந்துள்ள  செய்தியை  மறுத்துள்ளார். “நான்  பெர்காசாவைவிட்டு  விலகியிருக்க  வேண்டிய  அவசியமே  இல்லை.  ஏனென்றால்,  நான்  முறைப்படி  அதில்  இணைந்திருக்கவில்லை. “ஆனாலும்,  அவர்களின்  கருத்துகளை,  குறிப்பாக,  மலாய்க்காரர்-அல்லாதாரின் தீவிரவாத  கருத்துகளுக்கு  அவர்களின்  எதிர்வினைகளை  ஆதரிக்கிறேன்  என்பதை…

எப்பிஐ கடிதம் தொடர்பில் ஜாஹிட்டுக்கு முன்னாள் ஐஜிபி கண்டனம்

சூதாட்ட  மன்னர்  எனக் கூறப்படும்  பால்  புவாவுக்குப் பரிந்து உள்துறை  அமைச்சர்  அமெரிக்கப்  புலனாய்வுத்  துறை(எப்பிஐ)க்கு  எழுதிய  கடிதத்துக்கு மேலும்  கண்டனம்  தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்கடிதம்  எழுதியது  ஒரு தவறான  செயல்  அல்லவென்று  கடந்த வாரம்   கூறிய   அஹ்மட் ஜாஹிட்  ஹமிடி, அதிகாரத்துவ  இரகசியச்  சட்டத்தைச்  சுட்டிக்காட்டி  அது பற்றி …

‘மலேசியாவுக்காக உயிர் கொடுப்பேன். ஆனால் அம்னோவுக்காக பொய் சொல்ல மாட்டேன்’

மலேசியாவுக்காக  உயிரைக் கொடுப்பதற்கும்  தயாராக  இருக்கிறார்  மேஜர்  ஜைடி.  ஆனால், ஆளும்  கட்சியின்  நன்மையைக்  கருதி  மோசடி  நடைமுறைகளைப்  பார்த்துக்கொண்டு  அவரால்  சும்மா  இருக்க  முடியாது. நாட்டுக்கு  விசுவாசமாக  இருக்க  உறுதிமொழி  எடுத்துக்கொண்டது  உண்டு  என்று  கூறும்  அரச  மலேசிய  ஆகாயப்படை  விமானியான   மேஜர், அம்னோவுக்கு  விசுவாசமாக  இருத்தல் …

எம்ஏசிசி டயிமுக்கு எதிராக அன்வாரிடம் வாக்குமுலம் பெறும்

முன்னாள்  நிதி  அமைச்சர்  டயிம்  சைனுடின், அதிகாரத்தைத்  தவறாகப்  பயன்படுத்தியதாகக்   கூறப்படுவதன்  தொடர்பில்  எதிரணித்  தலைவர் அன்வார் இப்ராகிமிடமிருந்து வாக்குமூலம்  பதிவு  செய்யப்படும்  என  மலேசிய  ஊழல்  தடுப்பு ஆணையம்(எம்ஏசிசி)  கூறியது. டயிமுக்கு எதிராக “வலுவான  ஆதாரம்”  வைத்திருப்பதாக  அன்வார்  இப்ராகிம்  கூறியிருப்பதை  அடுத்து எம்ஏச்சி  இம்முடிவுக்கு  வந்துள்ளது.…

நஜிப்: ஜிகாட் என்றால் என்ன என்று ஜாக்கிம் சொல்லிக் கொடுக்க…

மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டு இலாகா (ஜாகிம்) போன்ற அரசாங்க அமைப்புகள் ஜிகாட் என்றால் என்ன என்பதையும் ஷரியா சட்டங்களையும் முஸ்லிம்கள் கற்றுக்கொள்வதற்கு அவர்களுக்கு விளக்க வேண்டும் என்று பிரதமர் நஜிப் இன்று கூறினார். இன்று டாதாரான் பிரதானாவில் அரசாங்க ஊழியர்களின் மாதாந்தர சந்திப்பில் பேசிய நஜிப் முஸ்லிம்கள் "எதைச்…

கிட் சியாங்: அந்தப் “பெரிய ரகசியம்” என்ன என்பதை அமைச்சரவை…

  அனைத்துலகக் கள்ளச் சூதாட்ட குண்டர் கும்பலின் பெரும்புள்ளியான பால் புவாவுடன் மலேசியா மேற்கொண்டிருக்கும் தேசிய பாதுகாப்பு திட்டங்கள் என்ன என்பதை உள்துறை அமைச்சர் அஹமட் ஸாகிட் ஹமிடியின் சார்பில் அமைச்சரவை விளக்க அளிக்க வேண்டும் என்று டிஎபியின் லிம் கிட் சியாங் வலியுறுத்தினார். இந்த விவகாரம் குறித்து…

அன்வார்: டாயம் பற்றிய ஆதாரங்களை எம்சிசியிடம் கொடுப்பேன்

முன்னாள் நிதி அமைச்சர் டாயம் ஸைனுடின் தமது பதவியைத் தவறாகப் பயன்படுத்தி சொத்து சேர்த்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் பற்றி தம்மிடம் இருக்கும் அனைத்து ஆதாரங்களையும் மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையம் (எம்எசிசி) கேட்டுக் கொண்டால் அதனிடம் தெரிவிப்பேன் என்று இன்று பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறினார்.…

ஜாஹிட் ஓஎஸ்ஏ பின்னால் ஓடி ஓளிய வேண்டாம்: ஜாஹிட்டுக்கு பாஸ்…

உள்துறை  அமைச்சர்  அஹ்மட்  ஜாஹிட்  ஹமிடி, 1972, அதிகாரத்துவ  இரகசிய  சட்டத்தின்   பின்னால்  ஒளிந்துகொள்வதை  நிறுத்தி, அரசாங்கத்துக்கும்  சூதாட்ட  மன்னர் பால்  புவாவுக்குமிடையில்  உள்ள  தொடர்புகளில்  அடங்கியுள்ள  “மிகப்  பெரிய  இரகசியம்”  என்னவென்பதை  வெளிப்படையாக தெரிவிக்க  வேண்டும்  என  பாஸ்  கூறியுள்ளது. “இந்த  விவகாரத்தில் அரசாங்கம்,  குறிப்பாக  உள்துறை …

1எம்டிபி பிஏசி-யுடன் கலந்துரையாடுவதே மேல்

1மலேசியா  மேம்பாட்டு  நிறுவன (1எம்டிபி)த்  தலைவர்  அருள்  கந்தா கந்தசாமி, தம்முடன்   கலந்துரையாட  முன்வந்ததை  வரவேற்ற பெட்டாலிங் ஜெயா  எம்பி  டோனி  புவா,  அவர்  பொதுக்  கணக்குக்  குழு(பிஏசி)வுடன்  உரையாடுவதே  மேலானது  என்றார். “1எம்டிபி-யுடனான  கலந்துரையாடலை ‘அரசியல்  நோக்கில்’ திசை  திருப்பினேன்,  சாதகமாகப்  பயன்படுத்திக்  கொண்டேன்  என்ற  குற்றச்சாட்டுகள் …

புத்ரா ஜெயா ஆலயத்தை விவகாரமாக்கும் பெர்காசாவைச் சாடினார் தெங்கு அட்னான்

 புத்ரா ஜெயாவில்  இந்து  ஆலயம்  கட்டப்படுவது  பற்றிக்  “கேள்வி எழுப்பி”  அதை  ஒரு “விவகாரமாக்க  முனையும்”  பெர்காசாவைக்  கூட்டரசு  பிரதேச  அமைச்சர்  தெங்கு  அட்னான்  தெங்கு  மன்சூர் சாடினார். “அவர்கள்  எதற்காக  சத்தம்  போடுகிறார்கள்  என்று  தெரியவில்லை. ஆலயங்கள்  கட்டப்படுவதால்  புத்ரா  ஜெயா  மொத்தமும்  இந்து  நகரமாகி  விடாது”,…

பிகேஆர்: நஜிப், பல்டி அடித்தும்கூட வலச்சாரிகளைத் திருப்திப்படுத்த முடியவில்லை

அம்னோ  தலைவர்  நஜிப்  ரசாக்  தேச  நிந்தனைச்  சட்டத்தில்  திடீர்-பல்டி  அடித்து அம்னோவில்  தம்மைக்  குறைகூறுவோரின் வாயை  அடைக்கலாம்  என்று  நினைத்தார். ஆனால் முடியவில்லை. அதனால்  என்ன, அச்சட்டத்தை  ஒட்டுமொத்தமாக  அகற்றுவாரானல்  அவர்  தம்  செல்வாக்கை  நிலைநிறுத்திக்  கொள்ளலாம்  என்கிறது  பிகேஆர். “நஜிப், தேச  நிந்தனைச்  சட்டத்தை  இரத்துச்…

தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிற்காக இராஜேந்திரன் வரைவுத் திட்டம் பிரதமரிடம் இருக்கையில், கமலநாதன்…

-மு. குலசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர், ஜனவரி 16, 2015.   கல்வித் துணை அமைச்சர் கமலநாதன் 11 வது தேசியத் திட்டத்தின் கீழ் கல்வி மேம்பாட்டிற்காக  5 முக்கிய  அம்சங்களை  முன் வைக்க விருப்பதாக அறிவித்திருக்கிறார். அவை 1) பாலர் பள்ளி,  2) தொடக்கப்பள்ளி, 3) இடைநிலைப்பள்ளி,  4) பாலிடெக்னிக் / மெட்ரிக்குலேசன் மற்றும் 5) உயர்க் கல்விக் கூடங்கள். அவர்…

ஹிஷாம் ரயிஸ் சிறை செல்லும் சாத்தியம் இருக்கவே செய்கிறது

தேச  நிந்தனைக்  குற்றம்  சாட்டப்பட்டிருந்த  சமூக  ஆர்வலர்  ஹிஷாமுடின்  ரயிஸ்,  தாம்  சிறைக்கு  அனுப்பப்படுவதைத்தான்  பெரிதும்  எதிர்பார்த்தார். அதற்கு மாறாக, நீதிமன்றம்  அபராதம் மட்டுமே  விதித்து அவரை  விடுவித்தது. ஆனால், அந்த  விடுதலை  நீண்ட  காலம்  நிலைக்காதுபோல்  தெரிகிறது. அரசு  தரப்பு  கடுமையான  தண்டனை  தேவை  என்று  மேல்முறையீடு …

அருள் மக்களுடன் கலந்துரையாடுவதே முக்கியமாகும்-புவா

1மலேசியா  மேம்பாட்டு  நிறுவனத்தைக்  குறைகூறுவோர்  பலர் உண்டு. அவர்களில் கடுமையாகக்  குறைகூறுவது யார்  என்று  பார்த்தால்  அது  டிஏபி  எம்பி  டோனி  புவா-வாகத்தான்  இருக்கும். இதை அந்த  நிறுவனமும்  அறியும். அதனால்தான்  அந்த  பெட்டாலிங்  ஜெயா   உத்தாரா  எம்பியை  ஒரு   கலந்துரையாடலுக்கு  அழைத்திருக்கிறார்  1எம்டிபி-இன்  புதிய  தலைவர்  அருள் …

சிருலால் ஒரு தர்மசங்கடமான நிலை

சிருல்  அஸ்ஹார்  உமர்  விவகாரம்  மலேசியாவுக்கும்  ஆஸ்திரேலியாவுக்குமிடையில்  ஒரு  தர்மசங்கடமான  நிலையை  உருவாக்கியிருப்பதாகக்  கூறுகிறார்  அரச  வழக்குரைஞர்  மார்க் ட்ரோவல். இரு  நாடுகளும்  நல்லுறவைக்  கொண்டிருந்தாலும் ஆஸ்திரேலிய  சட்டம்  மரண  தண்டனை  விதிக்கப்பட்ட  ஒருவரை அவரது  தாய்நாட்டுக்குத்  திருப்பி  அனுப்புவதைத்  தடுக்கிறது. “மலேசியா  அவரைத்  தூக்கில்  போடுவதில்லை  என்று …