தகவல்களைத் திருத்தத் திட்டம் போடப்பட்டிருந்தது- முன்னாள் பெட்ரோசவூதி தலைவர்

பெட்ரோசவூதி இண்டர்நெஷனல் நிறுவனத்திடமிருந்து தாம் திருடிய முக்கிய ஆவணங்களில் “மாற்றம்  செய்வதற்கு” சரவாக்  ரிப்போர்டும்  மலேசிய  தொழில் அதிபர்  ஒருவரும்  திட்டமிட்டிருந்ததாக  அந்நிறுவனத்தின்  முன்னாள்  தலைவர் சேவியர்  எண்ட்ரி  ஜஸ்டோ  தெரிவித்துள்ளார். அந்த  ஆவணங்களை  யுஎஸ்2 மில்லியனுக்கு விற்பதற்கு அவ்விரு  தரப்பினரிடமும்  தாம்  ஒப்புக்கொண்டதாக  ஜஸ்டோ  கூறினார். “அசலான …

தி எட்ஜ்: ஆவணங்களுக்குப் பணம் தருவதாக ஜஸ்டோவை நம்ப வைத்தோம்

1எம்டிபி  தொடர்பான  ஆவணங்களைக்  கொடுத்தால் பணம்  தருவதாக பெட்ரோசவூதி  தலைவர்  சேவியர்  எண்ட்ரி  ஜஸ்டோவிடம்  சொன்னது  உண்மைதான்  என்பதை  தி  எட்ஜ்  ஊடகக்  குழுமத்  தலைவர்  தோங்  கூட்  ஒங்  ஒப்புக்கொண்டார். அந்த  ஆவணங்களைப்  பெறுவதற்காகத்தான்  அப்படிச்  சொன்னதாக  அவர்  கூறினார். “ஆம், அவரிடம்  பொய்யுரைத்தோம். மலேசியர்களும்  வெளிநாட்டவரும் …

மகாதிர்: பயமா? அது என்ன?

  இதர நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊடக உரிமையாளர் ஆகியோருக்கு விதிக்கப்பட்டுள்ள பயணத் தடை போல் முன்னாள் பிரதமர் மகாதிருக்கும் தடை விதிக்கப்படலாம் என்ற சாத்தியம் குறித்து அவர் அலட்டிக்கொள்ளவில்லை. "Gentar apalah(பயப்படுவதற்கு என்ன இருக்கிறது"? என்று அவர் கூறியதாக சின் சியு டெய்லி செய்தி கூறுகிறது. அவரது…

தி எட்ஜ் வெளியீட்டாளர் விசாரணைக்கு அழைக்கப்பட்டார்

தி  எட்ஜ்  பத்திரிகையில்  பிரசுரிக்கப்பட்ட  1எம்டிபி தொடர்பான  செய்திகள்  தொடர்பில்  அதன்  வெளியீட்டாளர்  ஹோ  காய்  டேட்டை  போலீசார் விசாரணைக்கு  வருமாறு  கூப்பிட்டனுப்பினர். ‘நாடாளுமன்ற  ஜனநாயகத்துக்குக்  கெடுதல்  செய்யக்கூடிய  செயல்களில்  ஈடுபட்டதற்காக’  குற்றவியல்  சட்டம்  பிரிவு   124-இன்கீழ்  அவர்மீது  விசாரணை  நடைபெறுவதாக  தெரிகிறது. நேற்று  சில  போலீஸ்  வட்டாரங்கள் …

அமைச்சர்களும் இணையவாசிகளும் பிரதமருக்கு பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்தனர்

இன்று 62-வது  பிறந்த  நாளைக்  கொண்டாடுகிறார்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக். . நஜிப்  1953, ஜூலை  23-இல் பகாங்,  கோலா  லிப்பிசில்  பிறந்தவராவார்.  அவருக்கு  அமைச்சர்களும்  நாடாளுமன்ற  உறுப்பினர்களும்  இணையமக்களும்  டிவிட்டர்வழி  வாழ்த்துகள்  தெரிவித்துக்  கொண்டனர். பிரதமரின்  அலுவலகம், பிரதமர்துறை  அலுவலகப்  பணியாளர்கள்  நஜிப்புடனும் இரண்டு  கேக்குகளுடனும் …

பெர்சே: தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்குப் பயணத் தடை போடுவது கொடூரமானது, வழக்கத்தில்…

கொலைகாரர்கள்  என்று  தீர்ப்பளிக்கப்பட்டவர்கள்  நாட்டைவிட்டுத்  தப்பியோட  முடிகிறதுபோது  ஜனநாயக  முறைப்படி  தேர்ந்தெடுக்கப்பட்ட  அரசியல்வாதிகளுக்குப் பயணம்  செய்வதற்குக்  கட்டுப்பாடு  விதிக்கப்படுவது  ஏன்  எனத்  தேர்தல்  கண்காணிப்பு  அமைப்பான  பெர்சே  கேள்வி  எழுப்பியுள்ளது. கூட்டரசு  அரசியலமைப்பு  பயணம்  செய்வதற்கு  உரிமை  வழங்கும்போது, ‘மேலிட  உத்தரவு’  எனக் கூறி அதைத் தடுத்து  நிறுத்துவது …

பணிக்குழு நஜிப்பிடம் விசாரணை நடத்தியதா?

1எம்டிபி  பற்றிக்  கூறப்படும் குற்றம்குறைகளை  விசாரித்து  வரும்  சிறப்புப்  பணிக்குழு  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கிடம்  வாக்குமூலம்  பதிவு  செய்துள்ளதா  என்று பிகேஆர்  எம்பி  ரபிஸி  ரம்லி  வினவினார். இந்த  விசாரணையில்  முக்கியமான  ஆள்  நஜிப்தான்  என்றாரவர். “நஜிப்பை  விசாரிக்கவில்லை  என்றால்  அது  பணிக்குழு  சுதந்திரமாகத்தான்  இயங்குகிறதா  என்ற …

‘காணாமல்போன’ எஸ்ஆர்சி நிர்வாக இயக்குனருக்குப் பயணத் தடை

நாட்டைவிட்டு  வெளியேறத்  தடை  விதிக்கப்பட்டிருப்பவர்களில் எஸ்ஆர்சி  நிர்வாக  இயக்குனர்  நிக்  பைசல்  அரிப்  நிக்  ஒஸ்மான்  கமிலும்  ஒருவராவார். .பிரதமர்  நஜிப்  அப்துல் ரசாக்கின்  சொந்த  கணக்குக்கு  ரிம2.6 பில்லியன்  மாற்றிவிடப்பட்டதாகக்  கூறப்படும்  விவகாரத்தில் நிக்  பைசலுக்கும்  தொடர்புள்ளதாகக்  கூறப்பட்டுள்ளது. 1எம்டிபிமீது விசாரணை  நடத்திவரும்  சிறப்புப்  பணிக்குழு  அவரையும் …

எம்சிஎம்சி: ஆதாரங்களில்லை; சரவாக் ரிப்போர்ட் முடக்கம் ஒரு தடுப்பு நடவடிக்கையே

1எம்டிபி தொடர்பில்  சரவாக்  ரிப்போர்ட்  வெளியிட்ட  தகவல்கள்  பொய்யானவை  என்பதற்கு  இதுவரை  ஆதாரம்  எதுவும்  இல்லை  என  மலேசிய  தொடர்பு  மற்றும்  பல்லூடக  ஆணையம்  கூறியது. இன்று  புத்ரா  ஜெயாவில்,  மலேசியாகினி  உள்பட, இணைய  செய்தித்தளங்களின்  தலைமை  செய்தியாசிரியர்களைச்  சந்தித்த  எம்சிஎம்சி  கண்காணிப்பு மற்றும்  அமலாக்கத்  தலைவர்  சுல்கர்னைன் …

தெரேசா கொக்கும் ரபிஸியும் போர்னியோ செல்ல மட்டுமே தடை

உள்துறை  துணை  அமைச்சர்  வான்  ஜுனாய்டி துவாங்கு  ஜாபார்  குடிநுழைவுத்  துறையின்  பயணக்  கருப்புப் பட்டியலில் இடம்பெற்றுள்ள  டிஏபி  சீபூத்தே  எம்பி  தெரேசா  கோக்கும்  பிகேஆர்  பாண்டான்  எம்பி  ரபிஸி  ரம்லியும்  வெளிநாடுகள்  செல்ல  தடையில்லை என  தெளிவுபடுத்தியுள்ளார். வான்  ஜுனாய்டி  தம்மிடம் இதைத்  தெரிவித்ததாக  கொக்  மலேசியாகினியிடம் …

“சூத்திரதாரி” மகாதிருக்கு இன்னும் பயணக் கட்டுப்பாடு ஏதும் இல்லை

  பிரதமர் நஜிப் ரசாக்கை பதவியிலிருந்து அகற்றுவதில் தீவிரமாக செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கும் முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட்டுக்கு எவ்வித பயணக் கட்டுப்பாடும் இதுவரையில் விதிக்கப்படவில்லை. இமிகிரேசன் இலாகா வலைத்தளம் அவரது பயணத் தகுதிக்கு எவ்விதத் தடையும் இல்லை என்பதைக் காட்டுகிறது. 1எம்டிபி விவகாரம் காரணமாக மகாதிர்…

புவா மற்றும் ரபிஸி நாட்டை விட்டு வெளியேற தடை

1எம்டிபி விவகாரத்தைக் கடுமையாக விமர்சித்து வரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் டோனி புவாவும் ரபிஸி ரமலியும் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளனர். நாடாளுமன்ற பொதுக்கணக்கு குழு உறுப்பினருமான டோனி புவா இன்று கேஎல் எ2 இல் இமிகிரேசன் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார். இந்தோனேசியா, ஜோக்ஜாக்கர்த்தாவுக்கு செல்வதற்காக அவர் விமானநிலையத்திற்கு…

மாரா வெளிநாடுகளில் சொத்துகள் வாங்குவதை நிறுத்தும்

ஆஸ்திரேலியாவில்  சொத்து  வாங்கியதில்  முறைகேடுகள்  நிகழ்ந்திருப்பதாகக்  கூறப்படுவதால்  மாரா  வெளிநாடுகளில்  சொத்து வாங்குவதை  நிறுத்திக்கொள்ள  முடிவு  செய்திருப்பதாக  அதன்  முன்னாள்  தலைவர்  அனுவார்  மூசா  கூறினார். மாரா  அதன்  கடன்களை  அடைப்பதற்காக  சொத்துகள்  சிலவற்றை  விற்கப்  போவதாகவும்  அவர்  தெரிவித்தார். “வெளிநாடுகளில்  சொத்து  வாங்குவதைத்  தொடர  வேண்டாம்  என்ற …

ஆயிரக்கணக்கானவர் திரண்டு சரவாக் சுதந்திர நாளைக் கொண்டாடினர்

போலீஸ்  படைத்  தலைவரின் எச்சரிக்கையைப்  புறக்கணித்து  ஆயிரக்கணக்கான  மக்கள்  இன்று  கூச்சிங்  தெருக்களில்  ஒன்றுதிரண்டு  சரவாக்கின்  52-வது  சுதந்திர  நாளைக்  கொண்டாடினர். 2013-இல்  இக்கொண்டாட்டம்  தொடங்கியதிலிருந்து  இன்று  திரண்டதுதான்  மிகப்  பெரிய  கூட்டமாகும். கூட்டத்தினர்  ஜூபிளி  விளையாட்டுத்  திடலில்  திரண்டு  அங்கிருந்து   சொங்  கெங்  ஹாய்  ரக்பி  திடலுக்கு …

1எம்டிபி விசாரணை: சிங்கப்பூரில் வங்கிக் கணக்குகள் முடக்கம்

1எம்டிபி-இல்  நிதிமுறைகேடு  மீதான  விசாரணைக்கு  உதவியாக  சிங்கப்பூர் போலீஸ்  இரண்டு வங்கிக் கணக்குகளை முடக்கியுள்ளது. “ஜூலை 15, 2015-இல்  விசாரணை  தொடர்பான அந்த இரண்டு வங்கிக் கணக்குகளில் பண பட்டுவாடா நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குக்  குற்றவியல் சட்டத்தின் கீழ் நாங்கள்  தடை  விதித்தோம்”, என சிங்கப்பூர்  போலீஸ்  இன்று  ஓர் …

அரசாங்கத்தைக் கவிழ்க்கும் முயற்சிமீது போலீஸ் விசாரணை

அரசாங்கத்தை  ஜனநாயகத்துக்குப்  புறமான  வழியில்  கவிழ்க்கும்  முயற்சி  மேற்கொள்ளப்பட்டதா  என்பதை  போலீஸ்  ஆராயும். இதனைத்  தெரிவித்த  இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப்  போலீஸ்  காலிட்  அபு  பக்கார்,  பெட்ரோசவூதி   முன்னாள்  தலைவர்  சேவியர்  ஜஸ்டோ  பற்றி  தாய்லாந்து  போலீசார்  வெளியிட்டுள்ள  தகவல்களையும்  சரவாக்  ரிப்போர்டுக்கு  எதிரான  முன்னாள்  செய்தியாளர்  லெஸ்டர் …

1எம்டிபி புலனாய்வு: மேலும் ஒரு நிறுவன இயக்குனர் கைது

1எம்டிபிமீதான  விசாரணைக்கு  உதவியாக  நிர்வாக  இயக்குனர்  ஒருவர்  ஐந்து  நாள்களுக்குத்  தடுத்து  வைக்கப்பட்டுள்ளார். அவர்  ஒரு ‘டத்தோ’என்று  கூறப்படுகிறது. அவர்,  1எம்டிபி பணக்கையாடலை விசாரணை  செய்துவரும்  சிறப்புப்  பணிக்குழு  கைது  செய்துள்ள இரண்டாவது  நபராவார். 1எம்டிபி  விவகாரம்  தொடர்பில்  நேற்று  ஒருவர்  கைது  செய்யப்பட்டார்.  ஒரு  நிறுவனத்தின்  இயக்குனரான …

மக்கள் சிரிக்கப் போகிறார்கள், அம்னோ தலைவர் அழுகிறார்!

  குற்றச்சாட்டுகளால் துளைக்கப்பட்டிருக்கும் 1எம்டிபி நிறுவனம் மற்றும் பிரதமர் நஜிப் ரசாக் பற்றிய விசாரணையை சிறப்புப் பணிக்குழு விரைவுபடுத்த வேண்டும் என்று அம்னோ உச்சமன்ற உறுப்பினர் கேட்டுக்கொண்டுள்ளார். என்ன ஆனாலும் சரி, விசாரணை விரைவுபடுத்தப்பட வேண்டும் என்பது தமது கருத்து என்று மலேசியகினியிடம் கூறிய ரீஸால் மரைக்கான் நைனா…

1எம்டிபி: கைதான இயக்குனர் எங்களைச் சேர்ந்தவர் அல்லர்

1எம்டிபி  மீதான  சிறப்பு  விசாரணைக்  குழுவால்  தடுத்து  வைக்கப்பட்டிருக்கும்  நிறுவன  இயக்குனர்   அந்த  நிறுவனத்தைச்  சேர்ந்தவர்  அல்லர்  என்று  நிதி  அமைச்சுக்குச்  சொந்தமான அந்த  நிறுவனம்  தெரிவித்துள்ளது. “நிறுவன இயக்குனர்  ஒருவர்  புலனாய்வுக்  குழுவின்  விசாரணைக்காக  தடுத்து  வைக்கப்பட்டிருக்கும்  ஊடகச்  செய்திகளை  1எம்டிபி-யும்  கவனித்தது. “1எம்டிபி  ஊழியர் எவரும் …

பெர்னாண்டஸ்: அப்போதே சொன்னேன், யாரும் கேட்கவில்லை

கேஎல்ஐஏ2  கட்டி  முடிக்கப்பட்டதும்  தொடக்கத்தில்  அங்கு  செல்ல  ஏர் ஏசியா  மறுத்தது. அதற்காக  அது  குறைகூறப்பட்டது. அது  மறுத்ததற்கான காரணம்  இப்போதுதான்  தெரிய  வந்துள்ளது. அந்த  விமான  நிலையத்தில்  பிரச்னைகள்  இன்னும்  தீரவில்லை. இதை  ஏர்  ஏசியா  தலைமை  செயல்  அதிகாரி  டோனி  பெர்னாண்டஸ்  டிவிட்டரில் குறிப்பிட்டு  வருத்தப்பட்டிருக்கிறார்.…

நஜிப்பின் ஆலோசகர் பதவியிலிருந்து விலகினார் லிம் கொக் விங்

லிம்  கொக்  விங்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கின்  பொது  விளம்பர  ஒருங்கிணைப்பாளர்  பதவியிலிருந்து  விலகிக்  கொண்டிருப்பதாகக்  கூறப்படுகிறது. லிம்  இம்மாதத்  தொடக்கத்தில்  அப்பதவியிலிருந்து  விலகிக்  கொண்டதாக  த   மலேசியன்  இன்சைடர்,  சில  வட்டாரங்களை  மேற்கோள்காட்டிக்  கூறியிருந்தது. நஜிப்புக்கான ஆதரவு  சரிந்து  வந்ததைத்  தடுத்து  நிறுத்தவும்  ஆதரவைப்  பெருக்கவும்…

போலீசார் லெஸ்டரிடம் வாக்குமூலம் பதிவு

சரவாக்  ரிப்போர்ட்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கைக்  குற்றவாளியாகக்  காண்பிப்பதற்காக  பொய்ச்சாட்சியங்களை  உருவாக்கியது  என்று  கூறிய  லெஸ்டர்  மெலான்யியிடம்  பொலீசார்  வாக்குமூலம்  பதிவு  செய்தனர். லெஸ்டரிடம்  வாக்குமூலம்  பதிவுசெய்ய  புக்கிட்  அமான்  போலீசார்  ஜூலை  17, 18-இல்  கூச்சிங்  வந்தார்கள்  என சரவாக்  போலீஸ்  ஆணையர்  முகம்மட்  சப்து…

மகாதிரின் வலைப்பதிவை முடக்கம் செய்யும் துணிச்சல் நஜிப்புக்கு உண்டா?

சரவாக்  ரிப்போர்ட்  இணையத்தளத்தை  முடக்கிவைத்துள்ளதுபோல்  மகாதிரின்  அகப்பக்கமான  chedet.cc-ஐ  முடக்கி  வைக்கும்  துணிச்சல்  பிரதமர்  நஜிப் அபதுல்  ரசாக்குக்கு  உண்டா  என  எதிரணி  எம்பி  ஒருவர்  சவால்  விடுத்துள்ளார். மலேசிய  தொடர்பு  மற்றும்  பல்லூடக  ஆணையம் (எம்சிஎம்சி),   1எம்டிபி  பற்றி  சரவாக்  ரிப்போர்ட்  தொடர்ந்து  தகவல்கள்  வெளியிட்டு  வருவது …