கோவிட்-19 பெருந்தொற்றைத் தொடர்ந்து தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் மின்சார நுகர்வு கடுமையாகக் குறைந்தது என்ற நிறுவனத்தின் வாதத்தை நீதிபதி தள்ளுபடி செய்தார். "போர்ட் கிள்ளானில் (Port Klang) உள்ள நிறுவனத்தின் வளாகத்தை ஆய்வு செய்தபோது, காணாமல் போன முனைய முத்திரைகள் (terminal seals) மற்றும் கூடுதல் மின்சுற்று (additional circuit)…
சந்திரன் மரணத்தில் போலீசார் சட்டப்படி நடக்கவில்லை: நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு
கோலாலும்பூர் கொரோனர் நீதிமன்றம், போலீசார் தடுப்புக் கைதி பி.சந்திரனுக்கு மருந்துகளைக் கொடுக்காமலும் மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யாமலும் சட்டத்துக்குப் புறம்பாக நடந்து கொண்டிருக்கிறார்கள் எனத் தீர்ப்பு வழங்கியுள்ளது. கொரோனராக அதாவது மரண விசாரணை அதிகாரியாக செயல்பட்ட செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி அஹமட் பாச்சீ, சந்திரன் 2012, செப்டம்பர் 10-இல் …
அல்டான்துன்யாவின் கொலையாளிகளைச் சந்தியுங்கள்
அப்பாடா, ஒரு வழியாக அல்டான்துன்யாவின் கொலையாளிகளின் முகங்களைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. மங்கோலியப் பெண்ணின் மரணம்தான் பெரும் மர்மமாக இருந்தது என்றால் கொலையாளிகள் எனக் குற்றம் சாட்டப்பட்ட இரு போலீஸ்காரர்களும் மர்ம மனிதர்களாக நீதிமன்றத்துக்கு வந்து போய்க் கொண்டிருந்தார்கள். வழக்கு தொடங்கியதிலிருந்து அவர்கள் ஊடகங்களுக்கு முகம் காட்டியதில்லை. இப்போது …
QZ8501: விமானத்தின் உடல்பகுதியில் உடல்கள் தேடப்படுகின்றன
இரண்டு வாரங்களுக்குமுன் 162 பேருடன் கடலில் விழுந்த ஏர் ஏசியா QZ8501 விமானத்தின் உடல் பகுதியில் இறந்தவர்களின் சடலங்கள் உள்ளனவா என இந்தோனேசிய கடல்படை முக்குளிப்பாளர்கள் தேடி வருகின்றனர். நேற்று கடல்படை கலமொன்று, விமானத்தின் வால் பகுதி கண்டெடுக்கப்பட்ட இடத்திலிருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தள்ளி, அதன் உடல் …
முகைதின்: பள்ளிகள் சொந்த சட்டங்களைக் கொண்டிருக்கக் கூடாது
பள்ளிகள் கல்வி அமைச்சின் ஒப்புதலைப் பெற்றிராத சட்டங்களை அமல்படுத்தக் கூடாது எனத் துணைப் பிரதமர் முகைதின் யாசின் கூறினார். செராசில் மூன்றாம் படிவம் பயிலும் முஸ்லிம்-அல்லாத மாணவி ஒருவர், ‘பாஜூ குரோங்’ அணிந்திருந்ததால் பள்ளிக்குள் நுழைய தடைவிதிக்கப்பட்ட சம்பவம் பற்றி வினவியதற்கு அவர் இவ்வாறு பதிலளித்தார். ‘பாஜு குரோங்’கை …
ஐஜிபி ‘பாரபட்சமின்மை’ வேடத்தைக் கலைக்க வேண்டும்
இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீஸ் காலிட் அபு பக்கார், அவர் அணிந்துகொண்டிருக்கும் “பாரபட்சமின்மை” என்ற முகமூடியைக் கழற்ற வேண்டும் என்று இடித்துரைத்த டிஏபி, அம்னோ/பிஎன் தலைவர்கள் சம்பந்தப்பட்ட இரண்டு விவகாரங்களில் அவர் பாரபட்சமாக நடந்து கொண்டிருப்பதாகக் கூறிற்று. முதலாவதாக, உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி, சூதாட்ட மன்னர் …
புவா சம்பந்தப்பட்ட திட்டங்கள் ‘மிக இரகசியமானவை’
உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி, சூதாட்ட மன்னர் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் தேசிய பாதுகாப்புத் திட்டங்கள் பற்றி விவரிக்க மறுத்தார். அவை “மிக இரகசியமானவை”. அதிகாரத்துவ இரகசியச் சட்டத்தின்கீழ் பாதுகாக்கப்பட்டவை என்றாரவர். “பால் புவா தேசியப் பாதுகாப்பில் அரசாங்கத்துக்கு உதவினார் என்று கடிதத்தில் குறிப்பிட்டிருந்தேன். எப்படி என்பதை வெளியிட …
‘சூதாட்ட மன்னரை’ப் பாதுகாத்தேனா? மறுக்கிறார் ஜாஹிட்
உள்துறை அமைச்சர் ஜாஹிட் ஹமிடி, அமெரிக்கப் புலனாய்வுத் துறைக்கு எழுதிய கடிதம் பற்றி இதுவரை கடைப்பிடித்து வந்த மெளனத்தைக் கலைத்திருக்கிறார். அமெரிக்காவில் வழக்கை எதிர்நோக்கியுள்ள பால் புவாவைப் பாதுகாக்கும் நோக்கில் அதைத் தாம் எழுதவில்லை என்பதை அவர் வலியுறுத்தினார். பால் புவாவின் நிலையையும் மலேசியாவில் 14கே இரகசியக் கும்பல் …
சிருல் கடந்த அக்டோபரில் ஆஸ்திரேலியா சென்றாராம்
மங்கோலிய பெண் அல்டான்துன்யா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இருவரில் ஒருவரான போலீஸ் கார்ப்பரல் சிருல் அஸ்ஹார் உமர் கடந்த ஆண்டு அக்டோபரில் ஆஸ்திரேலியா சென்றதாக தெரிய வந்துள்ளது. குடிநுழைவுத் துறையினருடன் விசாரித்துப் பார்த்து அதைத் தெரிந்து கொண்டதாக கோலாலும்பூர் சிஐடி தலைவர் முகம்மட் சாலே கூறினார்.…
எப்பிஐ-க்கு எழுதிய கடிதம் பற்றி ஜாஹிட் அளித்த விளக்கத்தை அமைச்சரவை…
சூதாட்ட மன்னர் என்று அழைக்கப்படும் பால் புவாவுக்கு ஆதரவாக தாம் அமெரிக்கப் புலனாய்வுத் துறைக்கு எழுதிய கடிதம்மீது உள்துறை அமைச்சர் ஜாஹிட் ஹமிடி-இன் விளக்கத்தை அமைச்சரவை ஏற்றுக்கொண்டிருக்கிறது. அவ்விவகாரம் பற்றி ஜாஹிட் அண்மைய அமைச்சரவைக் கூட்டத்தில் விளக்கியதாக வெளியுறவு அமைச்சர் அனிபா அமான் இன்று தெரிவித்தார். ஆனால், என்ன …
தெய்வச் சிலைகளை உடைத்தவருக்கு ‘இவ்வளவு எளிய தண்டனையா?’
பெளத்த, இந்து தெய்வச் சிலைகளை உடைத்த முகம்மட் பிர்டோஸ் சைட்டுக்கு நீதிமன்றம் வழங்கிய ‘எளிய தண்டனை’ பலருக்கு வியப்பளிக்கிறது. இஸ்லாத்துக்கு எதிராகக் குற்றமிழைத்தோருக்கு வழங்கப்பட்ட தண்டனையுடன் ஒப்பிட்டால் பிர்டோஸுக்கு வழங்கப்பட்ட தண்டனை “பொருத்தமற்றதாக” தோன்றுகிறது என ஷம்சேர் சிங் திண்ட் கூறினார். தனியார் கல்லூரில் விரிவுரையாளராக பணியாற்றும் ஷம்சேர்,…
2015-இல் போலீஸ் காவலில் இறந்துபோன முதல் ஆள் ஜோகூரைச் சேர்ந்தவர்
ஜோகூரைச் சேர்ந்த 31-வயது இந்திய ஆடவர் ஒருவர் போலீஸ் காவலில் இறந்து போனார். இவரே, 2015-இல் போலீஸ் காவலில் இருந்தபோது இறந்துபோன முதல் ஆள் என சுவாரா ராக்யாட் மலேசியா (சுவாராம்) கூறியது. ஜனவரி 7-இல், ஆயர் மொலேக் போலீஸ் லாக்-அப்பில் வைக்கப்பட்டிருந்த அவர், வயிறு வலிப்பதாக கூறியதைத் …
கிளந்தானில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொள்கலன் வீடுகள்
கிளந்தானில் வெள்ளத்தில் வீடுகளை இழந்தோருக்கு தற்காலிகமாக கொள்கலன் வீடுகளை உருவாக்கிக் கொடுக்க பெர்துபோஹான் பெலிண்டோங் கஜானா (பெக்கா) என்னும் அமைப்பு தீர்மானித்துள்ளது. 500 சதுர அடி கொண்ட ஒரு கொள்கலன் வீடு இரண்டு குடும்பங்கள் தங்குவதற்கு ஏற்ப ஒரு கழிப்பறை, இரு அறைகள், ஒரு கூடம் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.…
புத்ரா ஜெயா கோயிலின் நுழைவாயில் பந்திங்கை நோக்கி இருப்பதே நல்லது
மலாய்க்காரர்கள் அதிகம் வாழும் இடத்தில் இந்து ஆலயம் கட்டப்படுவது ஏன் எனக் கேள்வி எழுப்புகிறது பெர்காசா இளைஞர் பிரிவு. அதன் தலைவர் இர்வான் பாஹ்மி, புத்ரா ஜெயா பிரிசிண்ட் 20-இல், கட்டி-முடிக்கப்படும்- தருவாயில் உள்ள ஸ்ரீலலிதாம்பிகை ஆலயம் “பொருத்தமற்ற இடத்தில் அமைந்துள்ள”தாகக் கூறினார். “புத்ரா ஜெயாவில் இந்துக்கள் அதிகமில்லை.…
இஸ்லாத்திற்கு மாறிய வீரன் தடைஉத்தரவு பெற்றார்
இஸ்லாத்திற்கு மாறிய என். வீரன் என்ற இஸ்வான் அப்துல்லாவுக்கும் அவரது முன்னாள் மனைவி எஸ். தீபாவுக்கும் இடையிலான குழந்தைகள் பராமரிப்பு வழக்கில் தீபாவுக்கு சாதகமாக சிரம்பான் உயர்நீதிமன்றம் வழங்கியிருந்த தீர்ப்புக்கு எதிராக தடைஉத்தரவு கோரி இஸ்வான் பெடரல் உச்சநீதிமன்றத்திடம் செய்திருந்த மனுவை பெடரல் நீதிமன்றம் இன்று ஏற்றுக்கொண்டு தடைஉத்தரவு…
பொங்கல் நல்வாழ்த்துகள்
செம்பருத்தி.கோம் அதன் வாசகர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும், அனைத்து தமிழர்களுக்கும் மலேசியர்களுக்கும் அதன் பொங்கல் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது
மரினா பேச்சுக்கு பொதுப் பல்கலைக்கழகம் தடைபோட்டது
ஒரு பொதுப் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் சமூக ஆர்வலர் மரினா மகாதிரைச் சொற்பொழிவாற்றுவதற்காக அழைத்திருந்தார்கள். ஆனால், மரினாவுக்கு பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைய அனுமதி இல்லை என்று பல்கலைக்கழக மாணவர் விவகாரத் துறை அவர்களிடம் கூறிவிட்டது. “அரசாங்கப் பல்கலைக்கழகம் ஒன்று எனக்குத் தடைபோடுவது இது ஐந்தாவது தடவையாகும். நான் மிகவும் சக்தி …
சிருலிடம் மலேசியா திரும்புவதற்குப் பணமில்லையாம்
அல்டான்துயா ஷரீபு கொலையில் இரண்டாவது குற்றவாளியாகக் குறிப்பிடப்பட்டிருந்த சிருல் அஸ்ஹார் உமர் வெளிநாட்டில் இருப்பதாக பெர்னாமா செய்தி கூறுகிறது. அவரிடம் மலேசியா திரும்புவதற்குப் பணமில்லை. அதனால்தான் இன்று காலை அவர் நீதிமன்றத்துக்கு வரவில்லை. சில வட்டாரங்களை மேற்கோள்காட்டி அச்செய்தியை வெளியிட்டிருந்த தேசிய செய்தி நிறுவனம், கடந்த இரண்டு மாதங்களாக …
தந்தை: ஏன் கொல்லப்பட்டார்? இக்கேள்விக்கு விடையில்லையே!
“என் மகள் எதற்காகக் கொல்லப்பட்டாள்?” அக்கொலைக்காக கூட்டரசு நீதிமன்றம் இரு போலீஸ்காரர்களுக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்புக் கூறியிருந்தாலும் இந்தக் கேள்விக்கு விடைதெரியாமல் தவிக்கிறார் ஸ்டீவ் ஷரீபு. கொலையாளிகள் இருவரும் செய்த குற்றத்துக்காக தூக்கில் தொங்கப் போகிறார்கள் என்பதை அறிந்து தம் துணைவியாரும் அல்டான்துன்யாவின் மகன்கள் இருவரும் ஒரளவு …
சிருலைத் தேடிப் பிடிப்போம்: ஐஜிபி சூளுரை
தப்பியோடிய கொலையாளியும் போலீஸ் அதிரடிப் படைப்பிரிவின் முன்னாள் உறுப்பினருமான சிருல் அஸ்ஹார் உமர் எங்கிருந்தாலும் போலீஸ் அவரைத் தேடிப் பிடிக்கும் என்று போலீஸ் படைத் தலைவர் (ஐஜிபி) காலிட் அபு பக்கார் கூறினார். சிருல், இதற்குமுன் விடுவிக்கப்பட்டபோது அதை வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு நாட்டை விட்டுத் தப்பியோடி விட்டாரா என்பதையும் …
சிருல் எங்கே? வெளிநாட்டுக்கு ஓடிவிட்டாரா?
மங்கோலிய பெண் அல்டான்துயா ஷாரிபு கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அஸிலா ஹட்ரி, சிருல் அஸ்ஹார் உமர் இருவருமே குற்றவாளிகள் எனக் கூட்டரசு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆனால், போலீஸ் சிறப்பு அதிரடிப் பிரிவைச் (யுடிகே) சேர்ந்த சிருல்,43, இன்று நீதிமன்றம் வரவில்லை. அவரின் வழக்குரைஞரான அஹ்மட் ஸைடி சைனலுக்கும் அவரது …
1எம்டிபி கேய்மன் தீவிலிருந்து ரிம8.2பில்லியனையும் மீட்டுக்கொண்டது
அரசாங்க முதலீட்டு நிறுவனமான 1மலேசியா மேம்பாட்டு நிறுவனம் (1எம்டிபி), கேய்மன் தீவில் செய்திருந்த மொத்த முதலீட்டையும், ரிம8.24பில்லியன் ரிங்கிட்டையும், மீட்டுக்கொண்டிருப்பதாக ஒர் அறிக்கையில் கூறியது. கடந்த மாதம் எதிரணி எம்பிகள், கேய்மன் தீவில் அந்நிறுவனத்தின் நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மை இல்லை எனக் குறைகூறியபோது அதை மறுத்த 1எம்டிபி அதன் முதலீடுகளில் …
ஜாஹிட்டின் கடிதத்துக்கு மறுப்பு தெரிவித்தது மலேசியா அல்ல, அமெரிக்கா
சூதாட்ட மன்னர் என அழைக்கப்படும் பால் புவாவுக்கு ஆதரவாக அமெரிக்க புலனாய்வுத் துறை)எப்பிஐ)க்கு உள்துறை அமைச்சர் அனுப்பிய கடிதம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு மறுப்புத் தெரிவித்தவர்கள் அமெரிக்க அரசுத்தரப்பு வழக்குரைஞர்கள். மற்றபடி அஹமட் ஜாஹிட் ஹமிடி எழுதிய கடிதத்துக்கு ஆட்சேபம் தெரிவித்ததில் புத்ரா ஜெயாவுக்கு எந்தத் தொடர்புமில்லை என …
ஐஜிபி: பால்சன் கைது செய்யப்பட்டதை அரசியல் ஆக்காதீர்
சமூக ஆர்வலர் ஏரிக் பால்சன் நேற்றிரவு கைது செய்யப்பட்டதை “அரசியலாக்க வேண்டாம்” என போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கார் எல்லாத் தரப்பினரையும் எச்சரித்துள்ளார். கடந்த வாரம் டிவிட்டரில் செய்திருந்த ஒரு பதிவுக்காக அவர் தேச நிந்தனைச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டிருப்பதாக அவர் சொன்னார். “பல்லினச் சமுதாயத்தில் …


