அல்தான்துயா கொலை: அஸிலா மற்றும் சிருல் விதி நாளை நிர்ணயிக்கப்படும்

  மங்கோலிய பெண் அல்தான்துயா கொலை வழக்கு சம்பந்தமான இறுதி முறையீட்டு தீர்ப்பை பெடரல் உச்சநீதிமன்றம் நாளை வெளியிடும். அல்தான்துயா 2006 ஆம் ஆண்டு அக்டோபர் 19 இரவு மணி 10.00க்கும் அக்டோபர் 20 நள்ளிரவு மணி 1.00க்கும் இடையில் இரண்டு போலீஸ் சிறப்பு நடவடிக்கை அதிகாரிகளால் ஷா…

மேஜர் பதவி நீக்கம்: தீர்ப்புக்கு எதிராக முறையிட மாட்டார்

13வது  பொதுத் தேர்தலில் அழியா  மை  பயன்படுத்தப்பட்டது  பற்றி  ஆயுதப்படைகள்  மன்றத்தின்  ஒப்புதலின்றி  ஊடகங்களிடம்  பேசியதற்காக  மேஜர்  ஜைடி  அஹ்மட்  ஆகாயப்படையிலிருந்து  நீக்கப்பட்டார். பொதுத்  தேர்தலில்  பயன்படுத்தப்பட்ட  மையை  எளிதில் அழிக்க  முடிகிறது  என  போலீசில்  புகார்  செய்ததற்காக அவர்மீது  இராணுவ  நிதிமன்றத்தில் வழக்கு  தொடுக்கப்பட்டது. இன்று  இராணுவ …

எரிக் பால்சன்மீதான விசாரணைக்கும் அம்னோவுக்கும் தொடர்பில்லை

வழக்குரைஞர் எரிக்  பால்சன்  தேச  நிந்தனைச்  சட்டத்தின்கீழ்  விசாரிக்கப்படுவதற்கு அம்னோ  கொடுத்த  அழுத்தம்தான்  காரணம்  என்பது  தவறு  என்கிறார்  அக்கட்சி  உதவித்  தலைவர்  ஹிஷாமுடின்  உசேன். பலரையும்  போலவே  பால்சனும்  கூறுவது  அம்னோவுக்கு  எதிராக  “எதிர்மறையான  கருத்தை”த்  தோற்றுவிக்கிறது  என்று  ஹிஷாமுடின்  கூறினார். “எதிர்மறையான  விவகாரங்களுக்கு  அம்னோமீது  பழி …

சூதாட்ட மன்னருக்கு ஆதரவாக ஜாஹிட் அனுப்பிய கடிதம் பற்றி அமைச்சரவைக்குத்…

உள்துறை  அமைச்சர்  அஹ்மட்  ஜாஹிட்  ஹமிடி,  கடந்த  ஆண்டு  லாஸ்  வெகாஸில்  கைது  செய்யப்பட்ட  சூதாட்ட  மன்னர்  பால்  புவா  குறித்து  அமெரிக்க  அதிகாரிகளுக்கு  கடிதம்  எழுதியது  பற்றி  அமைச்சரவைக்குத்  தெரியாது. அமைச்சரவை  முன்கூட்டியே  “அதை விவாதிக்கவில்லை”  என்று  கூறிய  துணைப்  பிரதமர்  முகைதின்  யாசின், அவ்விவகாரத்தை  நன்கு …

ஆறு மாதங்களில் கார் விலை உயரலாம்

உலகளவில்  கச்சா  எண்ணெய்  விலை  குறைந்து  கொண்டும்  அமெரிக்க  டாலரின்  மதிப்பு  உயர்ந்து  கொண்டுமிருந்தால்  கார்களின்  விலை  உயரும்  என்கிறது  மலேசிய  மோட்டார்  வாகனக் கழகம். “ஆண்டின்  நடுப்பகுதியில்,  கச்சா  எண்ணெய்  விலை   தொடர்ந்து  குறைந்துகொண்டும்  யுஎஸ்  டாலர்  மதிப்புயர்ந்து  கொண்டும்  அதற்கெதிராக  நாம்  எதுவும்  செய்யாதிருந்தால்  (கார்களின்)…

பாஸ்: நாங்களின்றி டிஏபி-யால் வெற்றிபெற முடியாது

ஹுடுட் உள்பட,  பல்வேறு  விவகாரங்களில்  பாஸ்  கட்சியுடன்  கருத்திணக்கம் காண முடியாத  டிஏபி அந்த  இஸ்லாமியக்  கட்சியுடன்  உறவுகளைத்  துண்டித்துக்கொள்ளவும்  தயாராக  இருப்பதுபோல்  தோன்றினாலும்  அக்கட்சியால்  தனித்து  நின்று  கூட்டரசு  அரசாங்கத்தை  அமைக்க  இயலாது. சின்  சியு  டெய்லியின்  நேர்காணலில்  இவ்வாறு  தெரிவித்த  பாஸ்  தலைமைச்  செயலாளர்   முஸ்தபா …

முக்குளிப்பாளர்கள் ஏர் ஏசியாவின் விமானத் தடப் பதிவியைத் தேடி எடுத்தனர்

இரண்டு  வாரங்களுக்குமுன்  162  பேருடன்  இந்தோனேசியக்  கடலில் விழுந்த  ஏர் ஏசியா  விமானத்தின்  விமானத்  தடப்  பதிவியை  இந்தோனேசிய  கடல்படையின்  முக்குளிப்பாளர்கள்  இன்று  மீட்டெடுத்தனர். “இன்று  காலை தேசிய  போக்குவரத்துப்  பாதுகாப்புக்  குழுவிடமிருந்து  ஒரு  அறிக்கை  கிடைக்கப்பெற்றது”  என்று  தேடல், மீட்புக்  குழு  அமைப்பின்  தலைவர்  பிரான்ஸிஸ்கஸ் பம்பாங்…

இறைவனின் நீதிமன்றத்தில் சந்திப்போம்: ஜைடி நீதிபதிகளிடம் கூறினார்

ஆகாயப் படை மேஜர்  ஜைடி  அஹ்மட், நீதிபதிகளை  நோக்கி  அவர்களின்  செயலுக்கு  இறைவனின்  மன்றத்தில்  தீர்ப்பளிக்கப்படும்  என்றார். 13வது  பொதுத்  தேர்தலில் பயன்படுத்தப்பட்ட  அழியா  மை  பற்றி  ஊடகங்களிடம்  பேசியது  குற்றமே  என  இராணுவ  நீதிமன்றம்  தீர்ப்பளித்தை  அடுத்து  ஜைடி  இவ்வாறு  கூறினார். தண்டனையைக்  குறைப்பதற்காக  முறையிடும்  வேளையில்…

மேஜர் ஜைடி குற்றவாளியே: இராணுவ நீதிமன்றம் முடிவு

ஒரு  இராணுவ  நீதிமன்றம், மேஜர்  ஜைடி  அஹமட், ஆயுதப்படை   மன்றத்தின்  ஒப்புதலின்றி  அழியா  மை  பற்றி  ஊடகங்களிடம்  பேசியது  குற்றமே  என்று  தீர்ப்பளித்துள்ளது. ஆனால், அக்குற்றத்துக்கு  ஜைடி-க்கு  என்ன  தண்டனை  கொடுப்பது  என்று  அது இன்னும்  முடிவு  செய்யவில்லை

மாபிம்: முஸ்லிம்களை தாராண்மைவாதிகள் அல்லது இல்லை என்று முத்திரை குத்தாதீர்

  இஸ்லாத்தை தீவிரமானது அல்லது தாராண்மைவாதமானது என்று முத்திரை குத்தி முஸ்லிம் சமூகத்தை பிளவுபடுத்த முயற்சித்தவர்கள் பதற்றத்தையும் விபரீதமான சம்பங்களையும் தவிர்க்க அவ்வாறு செய்வதை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டனர். மாபிம் என்ற மலேசிய இஸ்லாமிய அமைப்புகளின் ஆலோசனை மன்றத்தின் தலைவர் முகமட் அஸ்மி அப்துல் ஹமிட் மேற்கூறப்பட்டவர்கள்…

ஐஜிபியின் மௌனம் போலீஸ் படையின் நன்பகத்தன்மைக்கு ஊறுவிளைவிக்கிறது

  கள்ளச் சூதாட்ட பெரும்புள்ளி என்று கூறப்படும் பால் புவா குறித்து மலேசிய போலீஸ் படை அமெரிக்காவுக்கு தவறான தகவல் அளித்துள்ளது என்ற கூறப்படுவது பற்றி போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதால் அதன் மீதான நம்பகத்தன்மை பாதிக்கப்படுவதை அனுமதிக்ககூடாது. இதனால் போலீஸ் படையின் மீதான நம்பிக்கை உள்நாட்டில்…

‘எனக்குத் தெரியாமலேயே என் வீடு ஏலம் விடப்பட்டிருக்கிறது’

1மலேசியா  மேம்பாட்டு நிறுவன(1எம்டிபி)த்துக்கு  எதிராக  போலீஸ்  புகார்  செய்ததால் அம்னோ  உறுப்பினர்களின் கோபத்துக்கு ஆளான  கைருடின்  அபு  ஹசான்  அவருக்குச்  சொந்தமான  வீடு  அவருக்குத் தெரியாமலேயே  விற்பனைக்கு  வந்திருப்பது  கண்டு  அதிர்ச்சி  அடைந்துள்ளார். கோலாலும்பூரில்  அவருக்குச்  சொந்தமான  ஒரு  வீடு  ஏலத்தில்  விடப்படுவதாக  வலைப்பதிவர்கள்  சொல்லித்தான்  தெரிய  வந்ததாக …

எப்பிஐ-க்கு ஜாஹிட் எழுதிய கடிதம் குறித்து ஏஜி மவுனம்

உள்துறை  அமைச்சர்  ஜாஹிட்  ஹமிடி  14கே இரகசிய  கும்பல்  உறுப்பினர்  என்று  சந்தேகிக்கபப்டும்  ஒருவருக்கு  நற்சான்று  கடிதம்  ஒன்றை அமெரிக்கப்  புலனாய்வுத்  துறை(எப்பிஐ)க்கு  அனுப்பி  வைத்தது  பற்றிக்  கருத்துரைக்க  சட்டத்துறைத்  தலைவர்  அப்துல்  கனி  பட்டேய்ல்  மறுத்தார். இன்று, புத்ரா  ஜெயாவில். நீதிபதிகள்,  வழக்குரைஞர்கள்,  நீதித்துறை அதிகாரிகள்  கலந்துகொண்ட …

நீதித் துறையை ‘அநியாயமாக’க் குறை சொல்கிறார்கள்: சிஜே-யும் ஏஜி-யும் சாடல்

சில  மூத்த  வழக்குரைஞர்கள்  நியாயமற்ற முறையில்  நீதித்  துறையையும்  சட்டத்துறைத்  தலைவர்  அலுவலகத்தையும்  குறை  கூறி  வருவதாக  தலைமை  நீதிபதி (சிஜே) அரிப்பின்  ஜக்கரியாவும்  ஏஜி அப்துல்  கனி  பட்டேய்லும்  கூறினர். பெயர் குறிப்பிடப்படாத  ஒரு  செய்தித்தளத்தில் ‘சட்ட  ஆளுமையை  மதிக்காத  நீதித்துறைக்குக்  கண்டனம்’  என்ற  தலைப்பில் வெளிவந்த …

எம்யுவில் கல்விச் சுதந்திரத்துக்கு ‘உத்திரவாதம்’ உண்டு

மலாயாப் பல்கலைக்கழகம்  அதன்  பணியாளர்கள்  அரசியல்  நடவடிக்கைகளை  ஏற்பாடு  செய்வதைத்  தடுக்கும் சுற்றறிக்கை  ஒன்றை  வெளியிட்டிருந்தாலும்  பல்கலைக்கழகத்தில்  கல்விச்  சுதந்திரத்துக்கு  உத்திரவாதமுண்டு  என்று  துணை  வேந்தர்  முகம்மட்  அமின்  ஜலாலுடின்  கூறினார். அரசாங்கப்  பல்கலைக்கழகமான  அது  மலேசிய  அரசமைப்புச் சட்டங்களை  மதிக்கிறது  என  அமின்  கூறினார். அதில் கல்விச் …

ஐஜிபி: பாரிஸ் தாக்குதல் நமக்கு தேச நிந்தனைச் சட்டம் தேவை…

பாரிசில்  நடந்த  பயங்கரவாதத் தாக்குதல்கள்  1948 தேச  நிந்தனைச்  சட்டத்தை  வைத்திருப்பது  அவசியம்  என்பதைக்  கோடிட்டுக்  காட்டுகிறது  என்கிறார்  போலீஸ்  படைத்  தலைவர். “அதிலிருந்து  பாடம்  கற்றுக்கொள்ள  வேண்டும். அதனால்தான்  நமக்கு தேச  நிந்தனைச்  சட்டம்  தேவைப்படுகிறது.   யாரும் சமயத்தை  இழிவுபடுத்த போலீஸ் இடமளிக்காது”, என  டிவிட்டரில்  ஐஜிபி …

ஹிசாம் ராயிஸ் தேச நிந்தனை குற்றவாளி என தீர்ப்பு

சமூக ஆர்வலரும் மலேசியாகினி பத்தியாளருமான ஹிசாமுடின் ராயிஸ் தேச நிந்தனைக் குற்றம் புரிந்துள்ளார் என்று கோலாலம்பூர் செசன்ஸ் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. அக்குற்றத்திற்கு தண்டனையாக அவருக்கு ரிம5,000 அபராதம் விதிக்கப்பட்டது. அதனை 6 மாததிற்குள் செலுத்தாவிட்டால் அவர் சிறையில் அடைக்கப்படுவார் என்று செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி அஸ்மான் முஸ்தாபா…

QZ8501:கருப்புப் பெட்டி வால்பகுதியில் இல்லை

கடலில்  விழுந்த  ஏர்  ஏசியா  விமானத்தின்  கருப்புப்  பெட்டியைத்  தேடும்  முயற்சியில்  ஈடுபட்டுள்ள  இந்தோனேசிய  தேடல், மீட்புக்  குழு  இன்று சில துடிப்புகளை  அடையாளம்  கண்டிருப்பதாக தெரிவித்தது. விமானி அறை உரையாடலைப் பதிவுசெய்யும்  பதிவியும்  விமானத்தின் பயணத்  தடம்  பற்றிய  விவரங்கள்  அடங்கிய  பதிவியும்  கருப்புப் பெட்டியில்தான்  இருக்கும்.…

கோபால்: பரஸ்பர உடன்பாட்டுடன்தான் பிரிந்தோம்

முன்னாள்  கூட்டரசு நீதிமன்ற  நீதிபதியும் மூத்த  வழக்குரைஞருமான  கோபால்  ஸ்ரீராம், பரஸ்பரம் இணக்கத்துடனேயே மிங் அண்ட் நிஷ்ரா  வழக்குரைஞர்  நிறுவனத்தின்  ஆலோசகர்  பொறுப்பிலிருந்து விலகிக்  கொண்டதாகக்  கூறினார். அன்வார்  இப்ராகிமின்  குதப்புணர்ச்சி  வழக்கில்  அவருக்காக  கூட்டரசு  நீதிமன்றத்தில் வழக்காட  முடிவு  செய்ததால்  அந்நிறுவனத்திலிருந்து  வெளியேற  வேண்டிய  நெருக்குதலுக்கு  ஆளானார் …

யுஎம்: அரசியலுக்குத் தடை ‘நட்புமுறை நினைவூட்டல்’ மட்டுமே

பணியாளர்கள் உள்நாட்டிலோ வெளிநாட்டிலோ  அரசியல்  சம்பந்தப்பட்ட  நடவடிக்கைகளை  ஏற்பாடு  செய்வதற்குத்  தடை  விதிக்கும்  சுற்றறிக்கை  ஒரு “நட்புமுறை  நினைவூட்டல்” மட்டுமே  என்று  மலாயாப்  பல்கலைக்கழகம்  விளக்கமளித்துள்ளது. இது  ஒன்றும்  புதிய  விதிமுறை  அல்ல  என்றும்  ஏற்கனவே  எல்லா  அரசாங்கம்  அமைப்புகளிலும்  அமலில்  உள்ள  ஒன்றுதான்  என்றும்  யுஎம்  அனைத்துலக …

பாரிஸ் தாக்குதல் மலேசியாவிலும் நடக்கலாம்: எச்சரிக்கிறார் ஹிஷாம்

பாரிசில்  நடந்ததுபோன்றதொரு  பயங்கரவாதத்  தாக்குதல்  மலேசியாவிலும்  நடக்கலாம்  என்று  எச்சரிக்கிறார் தற்காப்பு  அமைச்சர்  ஹிஷாமுடின்   உஅசேன். அத்தாக்குதலில் 12பேர் கொல்லப்பட்டனர். “கடந்த  மாதம் பாரிஸ், லண்டன்  சென்று  திரும்பினேன். அங்கு  உளவுத்  துறைகளுடன் பேசினேன். அங்கு  நடந்த  சம்பவம்  எதிர்பாராமல்  நடந்த  ஒன்று  அல்ல. “அதை  மிதமாக  நினைத்து…

ராணுவ வீரர் உலோகத்துக்கு ஆசைப்பட்டு வெடிகுண்டு திருடியிருக்கலாம்

கெடாவில்  ஒரு  இராணூவ  முகாமிலிருந்து  வெடிகுண்டுகளைத்  திருடிய  படைவீரர்  அவற்றில்  உள்ள  செம்பை  விற்று  பணம் பண்ணும்  நோக்கத்தில்  அவற்றைத்  திருடியிருக்கலாம். யாரையும்  கொல்லும்  நோக்கம்  அவருக்கு  இருந்திருக்காது. “அவற்றில்(கவச வாகன- எதிர்ப்பு ராக்கெட்டுகள்) செம்பு  இருக்கும். அதை  எடுத்து விற்பதற்காக  அவர்  அவ்வாறு  செய்திருக்கலாம்”, எனத்  துணை…

ஜாஹிட் எப்பிஐ-க்கு அனுப்பிய கடிதம் பற்றி கருத்துச்சொல்ல ஹிஷாம் மறுப்பு

மலேசிய  சூதாட்டக் கும்பல்  தலைவர்  என்று  கூறப்படும்  பால்  புவா-வுக்கு  ஆதரவாக  உள்துறை  அமைச்சர் ஜாஹிட் ஹமிடி அமெரிக்கப்  புலனாய்வுத்  துறை(எப்பிஐ)க்கு  கடிதம்  எழுதி  அது  சர்ச்சைக்குரிய  விவகாரமாக  மாறியிருப்பது  பற்றிக் கருத்துரைப்பதைத்  தற்காப்பு  அமைச்சர்  ஹிஷாமுடின்  உசேன்  தவிர்த்தார். “அதை ஜாஹிட்டிடம்தான்  நீங்கள்  கேட்க  வேண்டும்”, என்றார்.…