வீட்டுவசதி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர், எரிபொருள் மானியங்கள், பள்ளி பராமரிப்பு, சுகாதார வசதிகள், செயற்கை நுண்ணறிவு (AI) பயிற்சி, மின்னணு விலைப்பட்டியல் (e-invoicing), மற்றும் சிறிய வியாபாரிகள் மற்றும் சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கான (SMEs) உதவிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் மூலம் மக்களுக்கு நேரடியாகப் பயனளிப்பதாகக் கூறுகிறார். வீடமைப்பு…
பணிக்குழுவின் அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும் என எம்ஏசிசி…
1எம்டிபி மற்றும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்மீது விசாரணை நடத்தும் சிறப்புப் பணிக் குழு அதன் அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படும். மலேசிய ஊழல்-தடுப்பு ஆணையத்தை(எம்ஏசிசி) மேற்பார்வையிடும் ஐந்து குழுக்களில் ஒன்றான ஊழல்மீதான குழு(ஜேகேஎம்ஆர்) இவ்வாறு தெரிவித்தது. சிறப்புப் பணிக்குழுவில் எம்ஏசிசி-யும் இடம்பெற்றுள்ளது. “எம்ஏசிசி 2009-இன்படி ஒவ்வோர் …
சாட்சியங்களை மறைத்தல் குற்றத்துக்கு உடந்தையாக இருப்பதற்கு ஒப்பாகும்
சாட்சியங்களை மூடி மறைப்பவர்கள் குற்றச்செயலுக்கு உடந்தையாக இருக்கிறார்கள் என்றுதான் பொருள்படும் என எச்சரிக்கிறார் டாக்டர் மகாதிர் முகம்மட். “அவர்கள் குற்றவாளிக்கு உதவுகிறார்கள், உடந்தையாக உள்ளார்கள். அவர்களும் குற்றஞ்சாட்டப்பட வேண்டும், விசாரிக்கப்பட வேண்டும், தண்டிக்கப்பட வேண்டும். “வழக்கு முடிந்தவுடன் ஒப்படைக்கலாம் என்று திரட்டப்பட்ட சாட்சியங்களைத் தங்கள் வசமே வைத்துக்கொண்டிருப்பதுகூட உடந்தை …
மாபூஸ்: சிலாங்கூர், பினாங்கு அரசுகளை விட்டு பாஸ் வெளியேற வேண்டும்
பாஸ் கட்சி உடனடியாக முடிவெடுத்து சிலாங்கூர், பினாங்கு அரசுகளிலிருந்து வெளியேற வேண்டும் என அதன் முன்னாள் தகவல் தலைவர் மாபூஸ் ஒமார் கூறினார். பாஸின் ஆண்டுக்கூட்டத்தில் டிஏபியுடன் உறவுகளைத் துண்டித்துக்கொள்ள முன்வைக்கப்பட்ட தீர்மானத்தை ஷுரா மன்றம் ஏற்றுக்கொண்டிருப்பதால் இனியும் அது தாமதிக்கக் கூடாது என்றாரவர். “வெளியேற முடிவு செய்ய …
லவ் யாட் பிளாசா வழக்க நிலைக்குத் திரும்பியது
வார இறுதி சச்சரவுகளால் நேற்று வெரிச்சோடிக் கிடந்த மின்னியல் பொருள் விற்பனைக்குப் பேர்போன லவ் யாட் பிளாசா இன்று வழக்க நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறது. கடைக்காரர்கள் விற்பனைக்காக அவர்களின் பொருள்களை அழகாக அடுக்கி வைப்பதையும் வாடிக்கையாளர்கள் பொருள்களை வாங்குமுன்னர் பேரம் பேசுவதையும் மலேசியாகினி கவனித்தது. ஆனால், சச்சரவுக்கு மையமாக …
லவ் யாட் பிளாசாவில் கைபேசி திருடிய ஆசாமி விசாரணை கோரினான்
கோலாலும்பூர், மெஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று, லவ் யாட் பிளாசாவில் கைபேசி ஒன்றைத் திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஆடவன் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினான். ஷாருல் அன்வார் அப்துல் அஜீஸ், 22, ஜூலை 11இல் மாலை மணி 4.47 அளவில் அக்குற்றத்தைப் புரிந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டது. திருட்டுக் குற்றங்களுக்கான குற்றவியல் …
அன்வார்: சீரமைப்புகள் இன்றி நஜிப்பை வெளியேற்றுவதில் அர்த்தமில்லை
சீரமைப்புகள் ஏதுமின்றி நஜிப் அப்துல் ரசாக்கை ஆட்சியிலிருந்து அகற்றுவது ஒரு சிலருக்கே நன்மையாக அமையும் அதனால் பயனான மாற்றங்கள் நிகழப்போவதில்லை என்கிறார் அன்வார் இப்ராகிம். அதனால் நன்மை அடைவோரின் பெயர்களை அவர் சொல்லாவிட்டாலும் டாக்டர் மகாதிர் முகம்மட்டுக்கு நெருக்கமானவர்களைத்தான் அவர் குறிப்பிடுகிறார் என்பது வெள்ளிடைமலை. “மகாதிர் தலைமையில் நஜிப்,…
எம்டிபி விவகாரத்தை விசாரிக்க மகாதிர் தலைமையில் அரச ஆணையம் அமைக்க…
தமது பரம வைரியான முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட் தலைமையில் 1எம்டிபி விவகாரத்தை விசாரிக்க ஓர் அரச ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார் டிஎபியின் மூத்த தலைவரான லிம் கிட் சியாங். நான்கு டான் சிறீகள் அடங்கிய சிறப்பு பணிக்குழுவுக்கு அரச ஆணையத்திற்குரிய அதிகாரங்கள்…
மீண்டும் நடக்கக்கூடாது: ஐஜிபி-க்கு பிரதமர் உத்தரவு
நேற்று லவ் யாட் பிளாசாவில் நிகழ்ந்ததைப் போன்ற வன்செயல்கள் மீண்டும் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் எனப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்காருக்கு உத்தரவிட்டுள்ளார். அச்சம்பவத்தை ஒரு குற்ற விவகாரமாகத்தான் பார்க்க வேண்டுமே தவிர இன விவகாரமாகப் பார்க்கக் கூடாது …
லவ் யாட் கடைக்காரர் ஏமாற்றினார் என்பதற்கு ஆதாரமில்லை
லவ் யாட் பிளாசாவில் கைபேசி திருடியதற்காகக் கைது செய்யப்பட்ட ஆடவனைக் கடைக்காரர் ஏமாற்றினார் என்பதற்கு எந்த ஆதாரமுமில்லை என்பதைப் போலீஸ் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. “எங்கள் விசாரணையில் அப்படி நடந்ததாகத் தெரியவில்லை. அதற்கான ஆதாரம் கிடைத்தால் அதையும் ஆராய்வோம். “இப்போதைக்கு இது ஒரு திருட்டு வழக்குத்தான்”, என கோலாலும்பூர் போலீஸ் …
குற்றவாளிக்கு உடந்தையாக இருந்தவரை விடுவித்த போலீஸ் அதிகாரிமீது நடவடிக்கை
லவ் யாட் பிளாசாவில் கைபேசியைத் திருடிய இளைஞனுக்கு உடந்தையாக இருந்தவனைப் போலீஸ் பொறுப்பு-அதிகாரி விடுவித்தார் என்பதை போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கார் ஒப்புக்கொண்டார். மேலதிகாரிகளிடம் ஆலோசனை கலக்காமல் அவ் வதிகாரி அந்த இளைஞனை விடுவித்து விட்டார் என காலிட் கூறினார். அதற்காக அவர்மீது நடவடிக்கை எடுக்கப்படும்.…
ரபிஸி: இனப் பதற்றத்தைத் தணிப்பது 1எம்டிபி-யை விட முக்கியமானது
1எம்டிபி சர்ச்சையைவிட லவ் யாட் பிளாசா வன்செயலுக்குத் தீர்வுகாண்பது முக்கியமானது என நினைக்கிறார் பிகேஆர் உதவித் தலைவர் ரபிஸி ரம்லி. இந்த விவகாரத்துக்குச் சரியான தீர்வு காணவில்லையென்றால் அது இன உறவுகளை மேலும் மோசமாக பாதிக்கும் என்றவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். “அந்த வகையில் இவ்விவகாரம் இப்போதைக்கு 1எம்டிபி-யைவிடவும் பெரிது.…
கைதியின் மரணம் குறித்து மெளனம் சாதிக்கும் சிஜே-க்கு இண்ட்ராப் கண்டனம்
இண்ட்ராப் சிறைக் கைதி ஒருவர் காலமாகி இரண்டு மாதங்கள் ஆகியும் “வாயைப் பொத்திக்கொண்டிருக்கும்” தலைமை நீதிபதி(சிஜே)க்குக் கண்டனம் தெரிவித்துள்ளது. கைதியின் மரணம்மீது விசாரணை நடத்த வேண்டும் என சிஜே-க்குக் கடந்த மாதம் கடிதம் அனுப்பப்பட்டதாகக் கூறிய இண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி கடிதத்துக்கு இன்னும் பதில் இல்லை என்றார். “எஸ்.…
பாஸில் தோல்வியுற்றோர் உருவாக்கிய புதிய அமைப்பு- ஹராபான் பாரு
கடந்த மாதம் பாஸ் கட்சித் தேர்தலில் தோற்றுப்போன நிபுணர் அணி ‘கெராக்கான் ஹராபான் பாரு’ என்ற பெயரில் ஒரு புதிய அமைப்பைத் தோற்றுவித்துள்ளது. பாஸின் முன்னாள் துணைத் தலைவர் முகம்மட் சாபு முன்னின்று உருவாக்கியுள்ள அவ்வமைப்பு, ஒரு புதிய இஸ்லாமிய கட்சியை உருவாக்கவும் இரண்டாவது பக்கத்தான் ரக்யாட் கூட்டணியை …
ஹரி ராயா உபசரிப்புக்கு அன்வாருக்கு அழைப்பு விடுத்துள்ளார் பிரதமர்
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், சிறையில் உள்ள அன்வார் இப்ராகிமுக்கு வெள்ளிக்கிழமை ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்பில் கலந்துகொள்ள அழைப்பு அனுப்பி வைத்துள்ளார். அன்வாரின் முகநூல் பக்கத்தில் அந்த அழைப்பு பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. அன்வாரின் மனைவி டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் பிகேஆர் தலைவர், நாடாளுமன்றத்தில் …
WSJ-க்கு அனுப்பப்பட்ட கடிதத்தைத் தற்காத்துப் பேசுகிறார் அம்னோ வழக்குரைஞர்
கடந்த வாரம், வால் ஸ்திரிட் ஜர்னலுக்கு விளக்கம் கேட்டுக் கடிதம் அனுப்பப்பட்டது சரியான நடவடிக்கைதான் என்று வாதாடுகிறார் அம்னோ வழக்குரைஞர் முகம்மட் ஹவாரிசாம். மற்ற வழக்குரைஞர்களும் இப்படிச் செய்ததுண்டு என்று குறிப்பிட்ட ஹவாஇசாம், அன்வார் இப்ராகிமின் வழக்குரைஞர் சங்கரா நாயர் அப்படிச் செய்திருக்கிறார் என்றார். “முதலாவது செய்தி அறிக்கையில் …
கசிந்த 1எம்டிபி ஆவணங்கள் உண்மையானவையா? போலீஸ் ஆராய்கிறது
வெளியில் கசிய விடப்பட்டுள்ள 1எம்டிபி ஆவணங்கள் உண்மையானவையா, ஜோடிக்கப்பட்டவையா என்பதை போலீஸ் ஆராய்ந்து உறுதிப்படுத்தும். ஜனநாயக நடைமுறைகளைக் கீழறுப்புச் செய்து பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைக் கவிழ்ப்பதற்கு ஒரு சதித் திட்டம் இருக்கும் சாத்தியத்தை மறுக்க போலீஸ் தயாராக இல்லை எனப் போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு …
‘பாஸ் தலைவர்கள் மைய நீரோட்ட ஊடகங்களுக்குப் பிரியமானவர்களாகி விட்டார்கள்’
பாஸின் உயர்த் தலைவர்கள் இருவர் வரிந்து கட்டிக்கொண்டு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைத் தற்காப்பதைப் பார்க்கும்போது டிஏபி-யுடன் உறவுகளைத் துண்டித்துக் கொண்ட பாஸ் ஷுரா மன்றத்தின் முடிவு ஒரு சாதாரண நிகழ்வுதான் என்கிறார் டிஏபி பெருந் தலைவர் லிம் கிட் சியாங். அவ்விரு தலைவர்களும் இப்போது மைய நீரோட்ட …
பாஸ், டிஏபி: லவ் யாட் விவகாரத்தை இன விவகாரம் ஆக்காதீர்
நேற்றிரவு கோலாலும்பூர், புக்கிட் பிந்தாங்கில் நடந்த சம்பவங்களை அடுத்து அனைவரும் அமைதி காக்க வேண்டும் என பாஸ் கேட்டுக்கொண்டிருக்கிறது. இனங்களுக்கிடையில் அமைதி காப்பது அவசியம் எனக் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங் குறிப்பிட்டார். “அனைவரையும், குறிப்பாக புக்கிட் பிந்தாங்கில் உள்ளவர்களை அமைதி காக்கும்படியும் புதிதாக சீண்டிவிடும் நடவடிக்கைகளில் …
லவ் யாட் பிளாஷா அருகில் கும்பல் வன்செயல்
நேற்றிரவு லவ் யாட் பிளாஷா அருகில் நடந்த கும்பல் வன்செயலில் பல செய்தியாளர்களும் பார் ஊழியர்களும் காயமுற்றனர். நள்ளிரவு மணி 1.00 அளவில், போலீசார் பலரை கைது செய்தனர். அந்த வன்செயலில் ஈடுபட்டிட்ருந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் பல்வேறு திசைகளில் பரவியுள்ளனர். தாங்கள் மலாய் அரசு சார்பற்ற அமைப்புகளைச் சார்ந்தவர்கள்…
கோபிந் சிங்: ஹுஸ்ஸேய்ன் நஜாடி கொலை வழக்கு மீண்டும் திறக்கப்பட…
சட்டத்துறை தலைவர் கனி பட்டேயில் 2013 ஆம் ஆண்டில் கொலை செய்யப்பட்ட அம்பேங் நிறுவனர் ஹுஸ்ஸேய்ன் நஜாடியின் வழக்கை மீண்டும் விசாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்குரைஞரும் டிஎபி பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினருமான கோபிந்த் சிங் டியோ கூறினார். இக்கொலை சம்பந்தமான விசாரணை இன்னும் முற்றுப்பெறாமல்…
பெர்காசா: ஹாடி பிரதமர் வேட்பாளராக வேண்டும், அன்வார் அல்ல
டிஎபியுடனான உறவை முறித்துக் கொண்ட பின்னர் பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம்மையும் பாஸ் கட்சி நிராகரிக்க வேண்டும். எதிரணியின் பிரதமர் வேட்பாளராக பாஸ் அதன் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கை முன்வைக்க வேண்டும் என்று பெர்காசா தலைவர் இப்ராகிம் அலி கூறுகிறார். கடந்த வெள்ளிக்கிழமை, பாஸ்…
பாக்கத்தான் அழிந்து விட்டதற்காக கிட் சியாங் வருத்தம்
கூட்டணியை ஒன்றாக வைத்திருக்க பாக்கத்தான் ரக்யாட் தவறி விட்டதற்காக டிஎபியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங் பொதுமக்களிடம் மன்னிப்பு கோரினார். பாக்கத்தான் "காலமாகிவிட்ட" போதிலும் டிஎபி அக்கூட்டணியின் பொதுக் கொள்கை திட்டத்தை தொடர்ந்து பின்பற்றும் என்று நேற்றிரவு ஷா அலாமில் நோன்பு துறக்கும் நிகழ்ச்சி ஒன்றில்…
1எம்டிபி த ஸ்டாரை எச்சரிக்கிறதா?
விசாரணை அதிகாரிகள் 1எம்டிபி-யைக் குறைகூறியதை மேற்கோள்காட்டி இரண்டு செய்தி அறிக்கைகளை வெளியிட்டிருந்த த ஸ்டார் நாளேட்டை 1எம்டிபி நிறுவனம் சாடியுள்ளது. த ஸ்டார் “அலட்சியமாக” செய்திகளை வெளியிடுவதாக ஓர் அறிக்கையில் சாடிய 1எம்டிபி, அது “உரிமம் பெற்று ஒழுங்குமுறையுடன் நடத்தப்படும்” நாளேடு என்பதை நினைவுறுத்தியது. “த ஸ்டார் போன்று …


