நஜிப்பின் அதிகாரிகளே பூமிபுத்ராக்களின் பங்குரிமை குறைவாக இருப்பதற்கு பொறுப்பு

பூமிபுத்ராக்கள்  30 விழுக்காடு  பங்குரிமையை  இன்னும்  அடையாமல் இருக்கிறார்கள்  என்றால்  அதற்கு பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கின்  தொலைநோக்கையும் இலட்சியத்தையும்  புரிந்துகொள்ளாமல்  பணிபுரியும்  அதிகாரிகளே  காரணம்  என்கிறார்  ஒரு  துணை  அமைச்சர். “பிரதமரின்  உத்வேகமும்  நோக்கமும்  அவர்களுக்கு  இல்லை. பிரதமரின்  போராட்டத்தை  அவர்கள் மதிப்பதில்லை”,என  விவசாயம்,  விவசாயம்-சார்ந்த  தொழில் …

எம்எச்17 விழுந்து நொறுங்கிய இடத்துக்குச் செல்ல அனுமதி கிடைத்தது

கிழக்கு  உக்ரேனில் எம்எச்17 விழுந்து நொறுங்கிய  இடத்துக்குச்  செல்ல  ஆய்வுக்குழுவினருக்கு அனுமதி  அளிக்கக் கிளர்ச்சிப்  படையினர்  முன்வந்திருக்கிறார்கள். விமானம்  விழுந்து  நொறுங்கிய  இடத்துக்குச்  சென்று அங்கு  சிதறிக்  கிடக்கும்  பயணிகளின்  உடமைகளைச்  சேகரிக்க  மீட்புக்குழு  அனுமதிக்கப்படும்  என  டச்சு  நீதி  அமைச்சின் பேச்சாளர்  ஜீன்  பிரான்ஸ்மேன்   தெரிவித்ததாக  சிஎன்என் …

தொழிற்சாலை திவால்: 500 தொழிலாளர்கள் பரிதவிப்பு

தொழிற்சாலை  ஒன்று  நொடித்துப் போனதால்  அதில்  வேலை  செய்த  500  தொழிலாளர்கள்  கைவிடப்பட்டு பரிதவிக்கிறார்கள். லேடாங்கில்  உள்ள  மரத்தளவாடங்கள்  செய்யும்  அத்தொழிற்சாலை  முன்னறிவிப்பு  ஏதுமின்றி  அக்டோபர்  முதல்  நாள்  மூடுவிழா  கண்டது  என  ஜோகூர்  மலேசிய  தொழிற்சங்கக்  காங்கிரஸ்(எம்டியுசி)  செயலாளர்  மோகனதாஸ்  கிருஷ்ணன்  கூறினார். “தொழிலாளர்களுக்கு  ஆகஸ்ட், செப்டம்பர் …

என்ஜிஓ: போலீஸ் சச்சரவைத் தடுக்கவில்லை

பினாங்கில்,  பேச்சாளர்  மூலையில்  போலீசார்  இருந்தாலும்  அவர்கள்  சமூக  ஆர்வலர்களிடம்  வன்முறையில்  நடந்துகொண்ட  தேச  நிந்தனைச்  சட்ட-ஆதரவுத்  தரப்பினரைத்  தடுத்து  நிறுத்தவில்லை. அந்தக்  கும்பல், சமூக  ஆரவலர்களையும்  பார்வையாளர்களையும் “பிடித்துத்  தள்ளியும், விரட்டவும்,  மிரட்டவும்”  முனைந்து நிலைமை  கட்டுமீறிப்  போனதும்தான்  போலீஸ்  தலையிட்டது  என  Gerakan Hapuskan Akta…

இஸ்மா தலைவர் மீதான தேச நிந்தனை வழக்கு ஒத்திவைப்பு

இன்று  விசாரணை  செய்யப்பட்டவிருந்த  இஸ்மா  தலைவர்  அப்துல்லா  சேய்க்-கின்  தேச  நிந்தனை  வழக்கு  ஒத்திவைக்கப்பட்டது. தேச நிந்தனைச் சட்டம் 1948 இன் சட்டப்பூர்வ தன்மை குறித்து யுனிவர்சிடி  மலாயா  இணைப்  பேராசிரியர்  அஸ்மி  ஷாரோம்  உயர்நீதிமன்றத்தில் தொடுத்துள்ள  வழக்கின்  முடிவு  தெரியும்வரை  விசாரணையைத்  தள்ளிவைக்க வேண்டும்  என வழக்குரைஞர் …

தேச நிந்தனை குற்றச்சாட்டுகள்: ஏஜி அம்னோ கட்டளைப்படி நடக்கிறாரா என்பதை…

  தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் அரசியல்வாதிகளுக்கும் தன்னார்வலர்களுக்கும் எதிராக நடத்தப்படும் வேட்டை அம்னோவுடன் நடத்தப்பட்ட ஒரு தனிப்பட்ட சந்திப்புடன் சம்பந்தமுடையதா என்பதை அட்டெர்னி ஜெனரல் (ஏஜி)) விளக்க வேண்டும் என்று பக்கத்தான் இன்று கேட்டுக்கொண்டது. தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் தேச நிந்தனை குற்றச்சாட்டு நடவடிக்கைகள், அவற்றில் பெரும்பான்மையாவை…

செனட்டர்: மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை மிகவும் குறைவு

மாற்றுத்திறனாளிகளுக்குக்  கொடுக்கப்படும்  உதவித்  தொகையில் ரிம50 உயர்த்தப்பட்டிருப்பது  அவர்களின்  தேவைக்குப்  போதாது  என  செனட்டர்  கே.பத்மாவதி  கூறினார். பத்மாவதி, செனட்டராக  நியமிக்கப்பட்டிருக்கும்  நாட்டின்  முதலாவது  மாற்றுத்திறனாளி  ஆவார். “டிசம்பர், ஏப்ரல், ஜூன்  மாதக்  கூட்டங்களில், ரிம300  அலவன்ஸ்  கூட்டப்பட  வேண்டும்  என்று  கோரினேன். அது ரிம500 ஆக உயர்த்தப்பட்டது.…

பைபிள் கொளுத்தும் மிரட்டலை அரசாங்கம் தற்காப்பது கண்டு சுஹாகாம் அதிர்ச்சி

மலாய்மொழி பைபிள்களை  எரிக்கப்போவதாக பெர்காசா  விடுத்த  மிரட்டலை  புத்ரா  ஜெயா தற்காத்து  பேசியிருப்பது  மலேசிய  மனித  உரிமை  ஆணையத்துக்கு (சுஹாகாம்) அதிர்ச்சி  அளித்துள்ளது. “மலாய்மொழி  பைபிள்களைக்  கொளுத்தச்  சொன்னது  சமுதாயத்துக்கு  விடுக்கப்பட்ட  மருட்டல்  அல்ல, இஸ்லாத்தைத்  தற்காப்பதற்காகவே  அவ்வாறு  சொல்லப்பட்டது  என   அரசாங்கம்  அதை  நியாயப்படுத்துவது  கண்டு  சுஹாகாம் …

மலாக்கா அக்டோபர்பெஸ்ட்டுக்கு பாஸ் உலாமா எதிர்ப்பு

பீர் குடித்து களியாட்டம்  போடும்  விழாக்களுக்கு  பாஸ்  கட்சியின் எதிர்ப்பு  தொடர்கிறது. இப்போது  அதன்  எதிர்ப்புக்கு  இலக்காகியிருப்பது  மலாக்கா  அக்டோபர்பெஸ்ட்  விழா. அவ்விழா அக்டோபர்  18-இல் வரலாற்றுச்  சிறப்புமிக்க  மலாக்கா  நகரில்  சுற்றுப்பயணிகள்  விரும்பிச்  செல்லும்  ஜோங்கர் வாக்-கில் நடத்தத்  திட்டமிடப்பட்டிருக்கிறது. அதைத்  தடுத்து  நிறுத்துமாறு மலாக்கா  பாஸ் …

ஆயர்: இப்ராகிம் எல்லை மீறி விட்டார்

மலாய்மொழி  பைபிள்களை எரிக்கப்போவதாக  மிரட்டியதன்வழி  இப்ராகிம்  அலி  எல்லை   மீறி  விட்டார்  என  கத்தோலிக்க  ஆயர்  பால்  டான்  ச்சீ  இங்  கூறினார். “சமயங்கள்  புனிதமாகக்  கருதும்  நூல்களைக்  கொளுத்தப்போவதாகக்  கூறுவது  பல  சமயத்தவரும் வாழும்  நாட்டில்  சினமூட்டும்  பேச்சாகும். “அதற்கு  அரசாங்கம்,  இஸ்லாத்தைத்  தற்காக்கும்  நோக்கில்தான்  இப்ராகிம் …

நஜிப்பின் படத்திடம் செருப்பைக் காட்டுவதா?, அம்னோ இளைஞர் சீற்றம்

கடந்த புதன்கிழமை, நாடாளுமன்ற கட்டடத்திற்கு வெளியில் நடந்த ஓர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது ஓர் ஆர்ப்பாட்டக்காரர் அவர் வைத்திருந்த ஒரு போஸ்டரில் காணப்பட்ட நஜிப்பின் படத்திற்கு பக்கத்தில் ஒரு செருப்பை பிடித்துக் கொண்டிருந்தார். அம்னோ இளைஞர் பிரிவின் செயற்குழு உறுப்பினர் அர்மாண்ட் அட்ஹா அபு ஹனிபா அச்செயலைத் துடுக்குத்தனமானது…

பெர்காசா தலைவர்மீது தேச நிந்தனைக் குற்றம் சாட்டுக

மலாய்மொழி  பைபிளைத் தீயிட்டுக்  கொளுத்தப்போவதாக  மிரட்டிய  பெர்காசா  தலைவர்  இப்ராகிம்  அலி  மீதான  வழக்கை  மறு-ஆய்வு  செய்து  அவர்மீது  தேச  நிந்தனை  குற்றம்  சுமத்த  வேண்டும்  என்று  பூலாய்  எம்பி  நூர்  ஜஸ்லான்  முகம்மட்  வலியுறுத்தியுள்ளார். “தேச  நிந்தனைச்  சட்டத்தின்கீழ்  இப்ராகிம்மீது  குற்றம்  சுமத்தத்  தவறினால்  அது  அரசாங்கத்தின் …

எரிபொருள் விலை உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் நிகழ்வு

நாளை  எரிபொருள்  விலை உயர்வை  நையாண்டி  செய்யும்  நிகழ்வு  ஒன்றுக்கு  ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளது. "Satira 20 Sen: Protes Kenaikan Harga Minyak" என்ற  தலைப்பில் எரிபொருள்  விலை  உயர்வுக்கு  எதிர்ப்புத்  தெரிவிக்கும்  அந்நிகழ்வு  சோகோ  விற்பனை வளாகத்தில்  பிற்பகல்  மணி  2.30க்கு  நடைபெறும். அது  ஓர்  ஒத்திகைதான் …

மிதவாத’புத்ரா ஜெயா வட்டமேசை பேச்சுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும்

‘மிதவாதம்  பேசும்  புத்ரா  ஜெயா, அதைச்  செயல்முறையிலும்  காண்பிக்க  வேண்டும்  என்று  கூறும்  இஸ்லாமிய  மறுமலர்ச்சி  முன்னணி (ஐஆர்எப்), இஸ்லாமிய அடிப்படைவாதம்  மீதான  வட்டமேசை  பேச்சுக்கு  அது  ஆதரவு  கொடுக்க  வேண்டும்  என  விரும்புகிறது. அப்பேச்சுகளில்  பிரபலமான  முற்போக்கு  முஸ்லிம்  தலைவர்  ஒருவர்  கலந்து  கொள்வதால்  அதைத்   தடுத்து …

30 விழுக்காடு சம்பள உயர்வு: அரசு ஊழியர்கள் கோரிக்கை

அடுத்த  ஆண்டு  பொருள், சேவை  வரி  நடைமுறைக்கு  வருவதையொட்டி அரசாங்கம்,  அரசு  ஊழியர்களின்  சம்பளத்தை  உயர்த்த  வேண்டும். அரசு  ஊழியர்  சங்கங்களின்  கூட்டமைப்பான  கியுபெக்ஸ், அரசு  ஊழியர்களுக்கு  30  விழுக்காடு  சம்பள  உயர்வு  கொடுக்கப்பட  வேண்டும்  எனக்  கோரிக்கை  விடுத்துள்ளது. அப்படிக்  கொடுக்கப்பட்டால்  ரிம900  சம்பளம்  பெறும்  அரசு …

கேலிச் சித்திரங்களைப் பார்த்து சிரித்து விட்டுப்போக வேண்டியதுதான்; ‘சீரியஸாக’ எடுத்துக்கொள்ளக்…

 உரைநடை  எழுத்துகளைப்  பார்ப்பதுபோல் கேலிச்  சித்திரங்கள், நையாண்டி, அங்கதம்  முதலியவற்றைப் பார்க்கக்  கூடாது  என்கிறார்  மேல்முறையீட்டு  நீதிமன்ற  நீதிபதி  ஒருவர். நேற்று, ஸுனாரின் கேலிச்  சித்திர  நூல்களுக்கு  விதிக்கப்பட்டிருந்த  தடையை  நீக்கித்  தீர்ப்பளித்த  நீதிபதி  முகம்மட்  அரிப்  முகம்மட்  யூசுப்,  கேலிச்  சித்திரங்களின்  நோக்கமே   “மிகைப்படுத்துதல், வாழ்க்கையைக்  கேலி …

அரசாங்க ஜெட் எதற்குப் பயன்படுத்தப்பட்டது என்பதற்கு புத்ரா ஜெயாவிடம் விளக்கமில்லை

நெதர்லாந்துக்கு  அதிகாரத்துவ  அலுவல்  மேற்கொண்டிருந்த  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  அதன்பின்னர்  ஐரோப்பாவில்  விடுமுறையைக்  கழிக்க  அரசாங்க  ஜெட்  விமானத்தைப்  பயன்படுத்தினாரா  என்று  நாடாளுமன்றத்தில்  கேட்கப்பட்ட  கேள்விக்கு  புத்ரா  ஜெயா  இன்னும்  விளக்கம்  அளிக்கவில்லை. டிஏபி  சிரம்பான்  எம்பி  அந்தோனி  லோக், 9M-NAA  என்ற பதிவு  எண்ணைக்  கொண்ட …

அம்பிகா: என்மீது தேச நிந்தனை விசாரணையா? வரவேற்கிறேன்

மலேசிய  வழக்குரைஞர்  மன்ற  முன்னாள்  தலைவர்  அம்பிகா  ஸ்ரீநிவாசன்   அவர்மீது  தேச  நிந்தனை விசாரணை  நடக்கலாம் என்பது  பற்றிக்  கொஞ்சம்கூட  கவலைப்பட்டவராக  தெரியவில்லை. இன்னும்  சொல்லப்போனால்  அவர்  அதை  வரவேற்கிறார். விசாரணை  நடப்பது  நல்லதுதான்  என்று  கூறும்  அவர்  அப்போதுதான்  உண்மை  தெரிய  வரும்  என்கிறார். ஆனால், இப்போது …

குண்டு வெடிப்புக்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்படுவர்: நஜிப் சூளுரை

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக், இன்று  அதிகாலை  புக்கிட்  பிந்தாங்கில்  நிகழ்ந்த  குண்டுவெடிப்புச்  சம்பவத்தைக்  கண்டித்துள்ளார். அச்சம்பவத்தில்  ஒருவர்  கொல்லப்பட்டு  13 பேர்  காயமடைந்தனர். “இன்று  காலை  நிகழ்ந்த  வன்செயலைக்  கடுமையாகக்  கண்டிக்கிறேன். “இப்படிப்பட்ட  சட்டவிரோதச்  செயல்களைப்  பொறுப்பதற்கில்லை. “இதற்குக்  காரணமானவர்கள்  கண்டுபிடிக்கப்பட்டு  தண்டிக்கப்படுவர்”, என்றாரவர். குண்டர்  கும்பல்களின் …

அரசியலுக்காக சீனப் பள்ளிகளைப் பலியிடாதீர்

அம்னோ அரசியல்  ஆதாயத்துகாக  சீனத்  தாய்மொழிப்  பள்ளிகளைப் “பலிகடா”  ஆக்கக்  கூடாது  என  கெராக்கான் வலியுறுத்தியுள்ளது. அம்னோ  செராஸ்  தொகுதித்  தலைவர்  சைட்  அலி  அல்ஹாப்ஷி  சீன  மொழிப் பள்ளிகளை  மூட  வேண்டும்  என்று  மொழிந்திருப்பது குறித்து  எதிர்வினையாற்றிய  கெராக்கான்  தலைமைச்  செயலாளர்  லியாங்  டெக்  மெங், பள்ளிகளை …

ஸுனாரின் இரண்டு கேலிச் சித்திர நூல்களுக்கான தடை அகற்றப்பட்டது

மேல்முறையீட்டு  நீதிமன்றம், ஸுனாரின்  இரண்டு  நூல்களுக்கு விதிக்கப்பட்டிருந்த  தடையை  ஏகமனதாக  அகற்றியது. பறிமுதல்  செய்யப்பட்ட ‘1 Funny Malaysia’  ‘Perak Darul Kartun’ ஆகிய  இரண்டு  நூல்களையும் அவரிடமே திருப்பிக்  கொடுக்குமாறு  நீதிபதி  முகம்மட்  அரிப் முகம்மட்  யூசுப்  உத்தரவிட்டார்.. அவரது  முடிவை  நீதிபதி  தெங்கு மய்முன்  துவான்…

பைபிளைக் கொளுத்தப்போவதாக மிரட்டுவது இஸ்லாத்தைப் பாதுகாப்பதாகாது

இஸ்லாத்தைப்  பாதுகாக்கும்  நோக்கில்தான்  பைபிளைத்  தீயிட்டுக்  கொளுத்தப்போவதாக  மிரட்டினார்  என   பெர்காசா  தலைவர்  இப்ராகிமை  அதிகாரிகள்  தற்காத்திருப்பதை  எதிரணித்  தலைவர்  அன்வார்  இப்ராகிம்  சாடினார். “இது  அம்னோவின்  நிலைப்பாடு  அல்லது  அமைச்சரின்  நிலைப்பாடு. (இஸ்லாம்) அதை (பைபிள்  கொளுத்தப்படுவதை)  என்றும்  ஆதரித்ததில்லை. “நான்  அறிந்தவரை  இஸ்லாம் சமய  நம்பிக்கைகளை,…

அதிகாலை குண்டு வெடிப்பில் புக்கிட் பிந்தாங் அதிர்ந்தது

இன்று  அதிகாலை கோலாலும்பூர்  புக்கிட்  பிந்தாங்கில்  ஓர்  இரவு  விடுதிக்கு  வெளியில் நிகழ்ந்த  ஒரு  வெடிப்பில்  குறைந்தது  14 பேர்  காயமடைந்தனர். சன் கொம்ளெக்ஸுக்கு  வெளியில்  ஒரு  காருக்கு  அடியில்  குண்டு வெடித்ததுதான்  இதற்குக் காரணம்  என  ஊடகத்  தகவல்கள்  கூறின. குண்டு  வைத்தவர்கள்  குண்டர்  கும்பலைச்  சேர்ந்தவர்கள் …