தொடர் மழை மற்றும் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து குவாந்தனின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட துணை மின்நிலையங்களில் SMK ஸ்ரீ டமாய், ஸ்ரீ டமாய் செஜாதேரா 1 மற்றும் 2, லோரோங் ஸ்ரீ டமாய் ஜெயா 9, ஜாலான் ஸ்ரீ டமாய் ஜெயா 1/13, மற்றும் ஜாலான் மாட்…
டிபிகேஎல்: வெள்ளத்துக்குத் தீர்வுகாணும் பொறுப்பை நிபுணர்களிடம் விடுவதற்கில்லை
கோலாலும்பூரில் ஏற்படும் திடீர் வெள்ளத்துக்குத் தீர்வுகாண வல்லுனர்களை அமர்த்த சாத்தியமில்லை என கோலாலும்பூர் மாநகராட்சி (டிபிகேஎல்) தலைமைச் செயலாளர் முகம்மட் அமின் நோர்டின் கூறினார். “திடீர் வெள்ளத்துக்குத் தீர்வு காண்பது எளிதான காரியமல்ல. அது பல தரப்பினர் சம்பந்தப்பட்ட வேலை”, என்றாரவர். டிஏபி செகாம்புட் எம்பி லிம் லிப் …
எம்பிகளுக்கு விரைவில் சம்பள உயர்வு
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சம்பள உயர்வு பெறுவர். அவர்களின் சம்பள உயர்வுக்குக் கொள்கை அளவில் ஒப்புக்கொண்டிருப்பதாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் நேற்று பிஎன் எம்பிகள், செனட்டர்கள் அடங்கிய கூட்டமொன்றில் கூறினார். சம்பள உயர்வு எவ்வளவு என்பது தெரியவில்லை. கேட்டதற்கு அதைத் தெரிவிக்க மறுத்தார் பிரதமர்துறை …
நாடாளுமன்றத்துக்கு வெளியில் எரிபொருள் விலை உயர்வு, ஜிஎஸ்டி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
இன்று காலை சுமார் 100 பேர் சிவப்பு உடை தரித்து நாடாளுமன்ற இல்லத்துக்கு வெளியில், எரிபொருள் விலை உயர்வுக்கும் பொருள், சேவை வரிக்கும் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் பாடல்கள் பாடியும் சுலோகங்களை முழக்கியும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். பின்னர் அவர்களில் பாஸ் இளைஞர் தலைவர் சுஹாய்சான் காயாட்டும் என்ஜிஓ-களின் பிரதிநிதிகளும் …
குதப்புணர்ச்சி-2: அன்வாரின் மேல்முறையீடு விசாரணை நெருங்கி வருகிறது
எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம், அவரது குதப்புணர்ச்சி மீதான மேல்முறையீட்டு விசாரணைகான நாளை எண்ணத் தொடங்கியுள்ளார். அவரது முகநூல் பக்கம் விசாரணைக்கு இன்னும் 21 நாள்கள் இருப்பதாகக் கூறுகிறது. மேல்முறையீட்டு விசாரணைக்கு அக்டோபர்-28 தொடங்கி இரண்டு நாள்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதில், பெர்மாதாங் பாவ் எம்பி-யின் தலைவிதி தீர்மானிக்கப்படும். அவர் …
வல்லினத்தின் விருது
2.11.2014-ல் வல்லினம் இலக்கியக்குழு முதன் முறையாக 'வல்லினம் விருது' வழங்கும் நிகழ்வை நடத்துகிறது. விருது தொகையாக 5000 ரிங்கிட்டுடன் அ.ரெங்கசாமி அவர்களின் ஆவணப்படம் மற்றும் அவரது வாழ்வைச் சொல்லும் நூலும் இந்நிகழ்வில் வல்லினம் குழுவினர் மூலம் வெளியீடு காண்கிறது. இதே நிகழ்வில் இயக்குனர் லீனா மணிமேகலையும் கலந்துகொண்டு தனது…
அஸ்ரி: முஸ்லிம்-அல்லாதவர்கள் இஸ்லாமிய பள்ளிகளில் அனுமதிக்கப்பட வேண்டும்
முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கிடையில் நல்லுறவை பேணுவதற்கு முஸ்லிம் அல்லாதவர்கள் இஸ்லாமிய பள்ளிகளில் சேருவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்று முன்னாள் பெர்லிஸ் முப்தி அஸ்ரி ஸைனோல் அபிடின் பரிந்துரைக்கிறார். தற்போது ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஓர் உறுப்பினராக இருக்கும் அஸ்ரி, பல்லின மற்றும் பல்சமய சமுதாயங்களுக்கான தலைவர்களை உருவாக்குவதற்கு…
ஸைட்: ஐஎஸ் இருக்கட்டும், உங்கள் வீட்டு கொல்லைப்புறத்தில் நடக்கும் வன்முறையைப்…
முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ஸைட் இப்ராகிம் "மலேசிய இஸ்லாமிய நாடு" ஒரு வேளை இஸ்லாமிய நாட்டை விட (ஐஎஸ்) அதிக வன்முறையுடையதாக இருக்கலாம் என்று கூறுகிறார். அவர்களுடைய கொல்லைப்புறத்தில் நடத்தப்படும் வன்முறைகளைப் பார்க்குமாறு ஸைட் இப்ராகிம் பிரதமர் நஜிப்பையும் எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிமையும் கேட்டுக்கொண்டார். இஸ்லாமிய…
அம்னோ தலைவர்: தாய்மொழிப் பள்ளிகள் ஒற்றுமைக்குத் தடையாய் உள்ளன
ஒரே வகைப் பள்ளிகள் மட்டுமே இருப்பதை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும்.இவ்வாறு வலைப்பதிவில் பதிவிட்டிருக்கும் செராஸ் அம்னோ தலைவர் சைட் அலி அல்ஹாப்ஷி. தாய்மொழிப் பள்ளிகள் இன உணர்வுகளைத் தூண்டிவிடுவதாகவும் அவற்றை ஒழித்துக்கட்ட வேண்டிய தருணம் வந்து விட்டதாகவும் கூறினார். “இனங்களைப் பிரித்துவைக்க நினைத்த பிரிட்டிஷ் காலனிய நிர்வாகத்தில் உருவான …
கோபிந் சிங்: ரிஸால்மான் விவகாரத்தில் நஜிப் உண்மையைக் கூற வேண்டும்
பாலியல் வன்முறை குற்றச்சாட்டை எதிர்கொள்வதற்காக முகம்மட் ரிஸால்மான் நியுசீலாந்துக்கு அனுப்பப்படுவதில் காணப்படும் தாமதம் குறித்து பிரதமர் நஜிப் ரசாக் விளக்கம் அளிக்க வேண்டும் என்று டிஎபி பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிந்த் சிங் டியோ கூறினார். விசாரணை மேற்கொள்ளப்படுவதற்கு வசதியாக மலேசியா ரிஸால்மானை நியுசீலாந்துக்கு திருப்பி அனுப்பும்…
உஷ்….அது இரகசியம்
கோடீஸ்வரர்கள் செலுத்தும் வரிப்பணத்தை வெளியிட முடியாது. அது இரகசியமானது என்கிறார் நிதி துணை அமைச்சர் அஹ்மட் மஸ்லான். “வருமான வரி வாரியம் வருமான வரி சட்டம் 1967, செக்சன் 138 க்குக் கட்டுப்பட்டு அதை வெளியிட முடியாதிருக்கிறது”, என்றவர் கூறினார். ஒவ்வொருத்தரும் செலுத்தும் வருமான வரி இரகசியமானது என …
ஏப்ரல் 1-இல் ஜிஎஸ்டி அமலாக்கத்தில் எந்த மாற்றமுமில்லை
பொருள், சேவை வரியால் பொருள் விலைகளில் ஏறபடக்கூடிய தாக்கம் குறித்து மக்கள் கவலை கொண்டிருந்தாலும் அதன் அமலாக்கம் திட்டமிட்டபடியே அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் தேதி நடைபெறும் என்பதை அரசாங்கம் மீண்டும் வலியுறுத்தியது. அரசாங்கமும் வணிகத்துறையும் ஜிஎஸ்டி-யை அமலாக்கத் தயாராக இருப்பதாய் லிம் லிப் எங்(டிஏபி- செகாம்புட்)-குக்கு வழங்கிய …
சிங்கப்பூரிலிருந்து புறப்பட்டுச் சென்ற வியட்நாமிய கப்பலைக் காணோம்
18 பணியாளர்களுடனும் 5,000 டன் எண்ணெயுடனும் மலேசியாவுக்கும் இந்தோனேசியாவுக்குமிடையில் பயணித்துக் கொண்டிருந்த வியட்நாமிய சரக்குக் கப்பலொன்றைக் காணவில்லை. வியாழக்கிழமை சிங்கப்பூரிலிருந்து புறப்பட்டுச் சென்ற அக்கப்பல் ஞாயிற்றுக்கிழமை வியட்நாமிய துறைமுகம் சென்றிருக்க வேண்டும் என வியட்நாம் கடலோர மீட்புப்பணி ஒருங்கிணைப்பு மைய துணை இயக்குனர் லூ டக் தங் தெரிவித்தார்.…
மகாதிர் மகனிடமும் மற்ற கோடீஸ்வரர்களிடமும் எவ்வளவு வரி வசூலிக்கப்பட்டது என்று…
எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம், டாக்டர் மகாதிர் மகன் உள்பட, 20 கோடீஸ்வரர்களிடம் எவ்வளவு வரிப்பணம் வசூலிக்கப்பட்டது என்பதை அரசாங்கம் தெரிவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டிருக்கிறார். மொக்சானி மகாதிர் தவிர்த்து அந்த முன்னாள் பிரதமருடன் நெருக்கமான தொடர்பு கொண்டுள்ள டி.ஆனந்தகிருஷ்ணன், வின்செண்ட் டான் போன்ற கோடீஸ்வரர்கள் செலுத்திய வரித்தொகையும் …
எம்பி: உதவித் தொகை சீரமைப்பா, கஜானா காலியாகிவிட்டதா?
அண்மையில் எரிபொருள் விலை உயர்த்தப்பட்டது உதவித் தொகையைச் சீரமைக்கும் முயற்சியா அல்லது கஜானாவை நிரப்பும் முயற்சியா என்பதை அரசாங்கம் விளக்க வேண்டும் என கோலா திரெங்கானு எம்பி ராஜா கமருல் பஹ்ரேன் ஷா ராஜா அஹமட் கேட்டுக்கொண்டிருக்கிறார். உலக அளவில் எண்ணெய் விலைகள் குறைந்து வருவதைத் தொடர்ந்து மற்ற …
வெளிநாட்டவர் ஒருவர் எம்ஏஎஸ் தலைவராகலாம்
மலேசிய விமான நிறுவனம் (எம்ஏஎஸ்) வெளிநாட்டவர் ஒருவரைத் தலைமை செயல் அதிகாரியாக (சிஇஓ) அமர்த்திக்கொண்டு அந்நிறுவனத்தைச் சீரமைக்கும் பொறுப்பை அவரிடம் ஒப்படைக்கலாம். அவர் விமானப் போக்குவரத்துத் தொழிலில் அனுபவம் வாய்ந்தவர் என ஒரு வட்டாரம் தெரிவித்ததாக த ஸ்டார் அறிவித்துள்ளது. அவரைத் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்க, எம்ஏஎஸ்ஸில்…
பங்: தேச நிந்தனைச் சட்டத்தை எதிர்ப்போரை அதே சட்டத்தைப் பயன்படுத்தி…
தேச நிந்தனைச் சட்டத்தை இரத்துச் செய்ய வேண்டும் என்று கோருவோருக்கு எதிராக அதே தேச நிந்தனைச் சட்டத்தைப் பயன்படுத்த வேண்டும் என கினாபாத்தாங்கான் எம்பி பங் மொக்தார் ராடின் வலியுறுத்தினார். “அச் சட்டத்தை இரத்துச் செய்ய வேண்டும் என்கிறார்கள். அப்படியென்றால் அவர்கள் தீய நோக்கம் கொண்டவர்கள் என்று தெரிகிறது.…
பாஸ் எம்பி: பீர் குடிக்கும் கொண்டாட்டங்களுக்கு அனுமதி கொடுக்காதீர்
ஒவ்வொரு ஆண்டும் செப்டெம்பரிலிருந்து அக்டோபர் வரையில் நடைபெறும் ஒரு பீர் கொண்டாட்டத்தில் ஒரு பிரபல்யமான பீரை விளம்பரப்படுத்தும் விளம்பரத்தட்டிகளை அரசாங்கமும் சம்பந்தப்பட்ட இலாகாகளும் அனுமதிக்கக்கூடாது என்று பாஸ் தெமெர்லோ நாடாளுமன்ற உறுப்பினர் நஸ்ருடின் ஹாசன் தமது முகநூலில் குறிப்பிட்டுள்ளார். ஐரோப்பாவில் நடைபெறும் ஜெர்மன் பீர் கொண்டாட்டத்தைப் பின்பற்றி…
டிஎபி எம்பி: எரிபொருள் வரி போடுங்கள்
அதிக வருமானம் ஈட்டுவதற்கு ஏதுவாக எரிபொருளுக்கான மானியத்தை குறைப்பதற்கு மாற்றாக பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றுக்கு வரி விதிக்கும் முறை குறித்து அரசாங்கம் சிந்திக்க வேண்டும் என்று டிஎபி ரவுப் நாடாளுமன்ற உறுப்பினர் அரிப் சாபிரி அப்துல் அசிஸ் கூறுகிறார். 1,600சிசிக்கு மேற்பட்ட கார்களுக்கு அவற்றின் வேறுபட்ட…
எரிபொருள் விலை-உயர்வு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பாஸ் இளைஞர்களும் கலந்துகொள்வர்
புதன்கிழமை நாடாளுமன்றத்துக்கு வெளியில் நடைபெறும் எரிபொருள் விலை-உயர்வை எதிர்க்கும் ஆர்ப்பாட்டத்தில் பாஸ் இளைஞர் பகுதியும் கலந்துகொள்ளும். அதன் தலைவர் சுஹாய்சான் காயாட், உலக முழுவதும் எண்ணெய் விலை குறைந்துவரும்போது அரசாங்கம் எரிபொருள் விலையை உயர்த்துவதற்குக் காரணம் ஏதுமில்லை என்றார். “பொதுமக்கள் கிளர்ந்தெழுந்து எரிபொருள் விலை-உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க இதுவே …
எம்பி: டிபிகேஎல் வெள்ளத்துக்குத் தீர்வு காண்பதை நிபுணர்களிடம் விட்டுவிட வேண்டும்
கோலாலும்பூர் மாநகராட்சி மன்றம்(டிபிகேஎல்) அடிக்கடி ஏற்படும் திடீர் வெள்ளப்பெருக்குக்குத் தீர்வுகாணும் பொறுப்பை நிபுணர்களிடம் ஒப்படைப்பதே நல்லது என டிஏபி எம்பி ஒருவர் கூறுகிறார். “தீர்வு காண்பது எப்படி என்பது டிபிகேஎல்லுக்குத் தெரியவில்லை. எனவே, பொறுப்பை நிபுணர்களிடம் ஒப்படைக்கப் பரிந்துரைக்கிறேன்” என லிம் லிப் எங் அறிக்கை ஒன்றில் கூறினார்.…
எம்பி: கைப்பற்றப்பட்ட பைபிள் விவகாரம் பற்றி இனிமேல்தான் யோசிக்க வேண்டும்
சிலாங்கூர் மந்திரி புசார் முகம்மட் அஸ்மின் அலி, மாநில அரசால் பறிமுதல் செய்யப்பட்ட பைபிள்கள் பற்றிக் கருத்துரைக்குமுன்னர் சம்பந்தப்பட்ட துறைகளின் விளக்கமளிப்புக்காகக் காத்திருக்கிறார். “சிலாங்கூர் இஸ்லாமிய சமயத் துறை(ஜாயிஸ்),, சிலாங்கூர் இஸ்லாமிய சமய மன்றம் (மாயிஸ்) ஆகியவற்றிடமிருந்து இன்னும் விளக்கம் பெறவில்லை. “அது பற்றி நிச்சயம் விவாதிப்போம். கடந்த …
இசி தேர்தல் தொகுதிகளைத் திருத்தி அமைப்பதற்கு பக்கத்தான் எம்பிகள் எதிர்ப்பு
தேர்தல் தொகுதி எல்லைகளைத் திருத்தி அமைக்கத் தேவையில்லை என பிகேஆர் தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். அப்படியே தேர்தல் தொகுதிகளைத் திருத்தி அமைக்கும் முயற்சி எதுவும் நடந்தாலும் அது நியாயமான முறையில் நடத்தப்பட வேண்டும் என்று பந்தாய் லெம்பா எம்பி நுருல் இஸ்ஸா அன்வார் கூறினார். அதுவே, மற்ற எம்பிகளின் …
மலேசியக் கடல்படை கலமொன்றைக் காணவில்லை
ஏழு பணியாளர்களுடன் அரச மலேசிய கடல்படையின் பீரங்கிப் படகு ஒன்று நேற்றிரவு சாபா கடல்கரைக்கு அப்பால் காணாமல்போனதைக் கடல்படைத் தலைவர் அப்துல் அசீஸ் ஜாபார் டிவிட்டரில் உறுதிப்படுத்தியுள்ளார். அதைத் தேடும் பணியில் நேற்றிரவிலிருந்து ஐந்து கப்பல்கள் ஈடுபட்டிருப்பதாகவும் அவற்றுடன் இன்று காலை அரச மலேசிய ஆகாயப்படை விமானங்கள் இரண்டும் …


