பிரதமர் தொடர்ந்து மெளனம் சாதித்தால் ஆர்ப்பாட்டம் செய்யப்போவதாக மாணவர்கள் மிரட்டல்

வால் ஸ்திரிட்  ஜர்னலின்  குற்றச்சாட்டுகளுக்கு  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  தெளிவான விளக்கம்  கொடுக்காவிட்டால்  ஆர்ப்பாட்டம்  நடத்தப்போவதாக  மாணவர்  தலைவர்கள்  எச்சரித்துள்ளனர். நஜிப்  மூன்று  முக்கிய  கேள்விகளுக்குப்  பதில்  அளிக்க  வேண்டும்  என கெராக்கான்  மஹாசிஸ்வா  செலாமாட்கான்  மலேசியா-வின்  தலைவர்  முகம்மட்  லுக்மான்  நூல்  ஹகிம் சுல்  ரசாலி …

நாட்டைப் பீடிக்கும் நோய்களைக் குணப்படுத்த வேண்டும்: டாக்டர் மகாதிரின் பிறந்த…

இன்று  90வது  பிறந்த நாளைக்  கொண்டாடும்  டாக்டர் மகாதிர்  முகம்மட் இவ்வளவு  காலம்  வாழ்வதை  நினைத்துக்கூட பார்த்ததில்லை  என்றார். “90வது  பிறந்த  நாளைக் கொண்டாட  முடிந்ததற்கு  நன்றி தெரிவிக்கிறேன்”, எனப்  புன்னகைத்தார். “இது  நான்  எதிர்பார்க்காத  ஒன்று”, என  மகாதிர் தேசிய பள்ளிவாசலில்   சந்தித்த  மலேசியாகினியிடம்  தெரிவித்தார். அவரது …

பாஸின் ‘முற்போக்கு’ உலாமாக்கள் புதிய நம்பிக்கையில் சேரக்கூடும்

பாஸ்  கட்சித்  தேர்தலில்  தோற்றுப்போன  18 பேரடங்கிய ‘ஹராபான்  பாரு’(புதிய நம்பிக்கை)  அணி கட்சித் தலைவர்களிடம் அதிருப்தி  அடைந்துள்ள  உலாமாக்களை  இன்று  சந்திக்கிறது. இந்த  உலாமாக்கள், புதிய  நம்பிக்கை  புதுக் கட்சி  அமைப்பதையும்  டிஏபி-யுடனும்  பிகேஆருடனும் சேர்ந்து  புதிய  கூட்டணியை  உருவாக்குவதையும்  ஆதரிக்கிறார்கள்  என  பாஸ்  பாரிட்  புந்தார் …

கணவரின் போராட்டம் முடிவுக்கு வர வேண்டும்: அதுவே சித்தி ஹஸ்மாவின்…

முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர் முகம்மட்  இன்று 90வது  பிறந்த  நாளைக்  கொண்டாடுகிறார். பிறந்த  நாள்  கொண்டாட்டத்தில்  யார்  உடன்  இருப்பார்களோ  இல்லையோ 59ஆண்டுகளாக  அவரது  வாழ்வின்  ஒளியாக  இருந்துவரும்  சித்தி  ஹஸ்மா  அலி மட்டும்  கண்டிப்பாகக் கூட  இருப்பார். பிறந்த நாளுக்காக கணவருக்குச்  சிறப்புப்  பரிசு  கொடுத்து …

1எம்டிபி விசாரணைக் குழுவிலிருந்து ஐஜிபி விலக வேண்டும்

விசாரணை  பாரபட்சமின்றி  நடக்க  வேண்டும். அதற்கு 1எம்டிபி  ஊழலைப்  புலனாய்வு  செய்யும்  சிறப்புப் பணிக்குழுவிலிருந்து  தேசிய  போலீஸ்  படைத்  தலைவர்  காலிட்  அபு  பக்கார்  விலக  வேண்டும்  என்று  வலியுறுத்தப்பட்டிருக்கிறது. அனுமதியில்லாமல்  தகவலைப் பெற்றதற்காக  வால்  ஸ்திரிட்  ஜர்னலுக்கு (WSJ) எதிராக  விசாரணை  நடத்த  வேண்டும்  என  ஐஜிபி …

பணிக்குழு அதன் கடமையைச் செவ்வனே செய்வதை அமைச்சர்கள் உறுதிப்படுத்துவர்

1எம்டிபிக்கு  எதிரான  குற்றச்சாட்டுகளைப்  புலனாய்வு  செய்யும்  சிறப்புப்  பணிக்குழு அச்சமோ  பாரபட்சமோ  இன்றி  அதன்  பணியைச்  செய்து  முடிப்பதை  அமைச்சரவை  உறுதிப்படுத்தும்  என்கிறார்  இளைஞர், விளையாட்டுத் துறை  அமைச்சர்  கைரி  ஜமாலுடின். “விசாரணை  பிரதமர்மீது  என்பதால்  அவர்கள்  சமரசம்  செய்துகொள்வார்கள்  என்ற  தோற்றப்பாடு   இருந்தாலும்கூட  பணிக்குழு  யாருக்கு  ஆதரவாகவும் …

பிஏசி ஜோ லாவை விசாரணைக்கு அழைக்கும்

பொதுக் கணக்குக் குழு (பிஏசி), வணிகர்  ஜோ லாவை  விசாரணைக்கு  அழைக்கவுள்ளது.  1எம்டிபி-க்கு  முன்பிருந்த  திரெங்கானு  முதலீட்டு  நிறுவன(டிஐஏ)த்தின்  ஆலோசகர்  என்ற  முறையில்  அவர் விசாரணைக்கு  அழைக்கப்படுவார். 1எம்டிபி-இன்  விளக்கக்த்தைக்  கேட்ட  பின்னர்  பிஏசி  இம்முடிவுக்கு  வந்ததாக  அதன்  தலைவர்  நூர்  ஜஸ்லான்  முகம்மட்  கூறினார். “டிஐஏ-க்குட்  சிறப்பு …

சரவாக் ரிப்போர்ட்: ரோஸ்மா வங்கிக் கணக்கில் ரிம2மில்லியன் வைக்கப்பட்டுள்ளது

  ஒரு புதிய திடுக்குறச் செய்யும் குற்றச்சாட்டில் பிரதமர் நஜிப்பின் துணைவியார் ரோஸ்மா மன்சூருடையது என்று கூறப்படும் ஒரு வங்கிக் கணக்கில் ரிம2மில்லியன் வைக்கப்பட்டுள்ளதாக சரவாக் ரிப்போர்ட் கூறிக்கொண்டுள்ளது. இத்தகவல் அஃப்பின் பேங்க் பெர்ஹாட்டிலுள்ள ஒரு வங்கிக் கணக்கை அடிப்படையாகக் கொண்டது என்று அந்த வலைத்தளம் கூறிற்று. இந்த…

உள்ளூர் டிஎபி பாஸ் மாற்றுக் கட்சிக்கு ஆதரவு

  நிபோங் திபாலிருந்து ஐந்து டிஎபி கிளைத் தலைவர்கள் மரியாதை நிமித்தமாக பாஸ் பாரிட் புந்தார் நாடாளுமன்ற உறுப்பினர் முஜாஹிட் யுசுப் ராவாவை அவரது அலுவலகத்தில் சந்தித்தனர். நிபோங் திபால் துணைத் தலைவர் தியோ சியாங் ஹூய் தலைமையில் சென்ற டிஎபி பிரதிநிதிகள் பரிசுப் பொருள்களை பரிமாறிக் கொண்டனர்.…

பணிப்படை: பிரதமரின் வங்கிக் கணக்குகள் மூடப்பட்டு விட்டதால் அவை முடக்கப்படவில்லை

  பிரதமர் நஜிப் ரசாக் அம்பேங் இஸ்லாமிக்கில் வைத்திருந்த அவரது சொந்த கணக்குகள் முறையே ஆகஸ்ட் 30, 2013 லும், மார்ச் 9, 2015 லும் மூடப்பட்டு விட்டன என்று பணிப்படை இன்று வெளிப்படுத்தியது. இருப்பினும், அந்த கணக்குகள் சம்பந்தப்பட்ட ஆவணங்ககளை வங்கியிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டது. இத்தகவலை பணிப்படையின் உறுப்பினர்களாகிய…

உயர்மட்ட இலஞ்ச எதிர்ப்பு மாநாட்டில் நஜிப் உரையாற்றப் போகிறார்

  அரசு நிதியிலிருந்து யுஎஸ்$700 மில்லியன் (ரிம2.6 பில்லியன்) கையாடல் மோசடி குற்றச்சாட்டுகள் அவருக்கு எதிராக எழுந்துள்ள வேளையில், பிரதமர் நஜிப் ரசாக் ஓர் உயர்மட்ட இலஞ்ச எதிர்ப்பு மாநாட்டில் உரையாற்றுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் செப்டெம்பர் 2 லிருந்து 4 வரையில் புத்ரா ஜெயாவில் நடைபெறவிருக்கும் 16…

ரோஸ்மாவிடமிருந்து சிருல் கட்டளை பெறுகிறாரா?

  மங்கோலிய பெண் அல்தான்துயா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு தற்போது ஆஸ்திரேலியா குடிநுழைவுத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருக்கும் முன்னாள் போலீஸ் கமாண்டோ சிருல் அஸ்ஹார் ஒமார் தான் அல்தான்துயாவை கொலை செய்தது பிரதமர் நஜிப்பின் துணைவியார் ரோஸ்மா மன்சூரின் உத்தரவுப்படிதான் என்று ஒப்புக்கொள்ளப் போவதாக சமூக…

ஸைட்: பேங்க் நெகாரா கவர்னர் ஸெட்டி விபரீதத்துடன் விளையாடுகிறார்

  1எம்டிபியின் நிதியிலிருந்து யுஎஸ்$700 மில்லியன் பிரதமர் நஜிப்பின் சொந்த வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளது என்று வால் ஸ்திரிட் ஜெர்னல் அம்பலப்படுத்தியுள்ள விவகாரத்தில் பேங்க் நெகாராவின் கவர்னர் ஸெட்டி அக்தார் அஸிஸ் அவரிடமிருந்து எதிர்பார்க்கப்படுவதை அவர் செய்ய வேண்டும் என்று முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ஸைட் இப்ராகிம் கூறினார்.…

பிரதமர்: சொந்த நலனுக்கு 1எம்டிபி பணத்தைப் பயன்படுத்தியதில்லை

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்,  1எம்டிபி  பணத்தை  எடுத்து  சொந்தத்துக்கு  என்றும்  பயன்படுத்தியது  இல்லை  என்பதை  வலியுறுத்தியுள்ளார். “மீண்டும்  வலியுறுத்த  விரும்புகிறேன். 1எம்டிபி பணத்தைச்  சொந்த  நலனுக்குப்  பயன்படுத்தியதில்லை. “வால் ஸ்திரிட் ஜர்னலின்  கூற்று தீய  நோக்கம்  கொண்டது.அதற்கு  நாட்டில்  உள்ள  சில  தரப்பினர்,  பிரதமர்  பதவியிலிருந்தும்  அம்னோ …

புதிய பக்கத்தானுக்கு முன்னோட்டமாக பெர்லிசில் பேரணி

பாஸின்  புதிய நம்பிக்கை(ஹராபான் பாரு)ஹரி ராயா-வின்  மூன்றாவது  நாளில் பாரு) டிஏபி, பிகேஆர்  ஆகியவற்றுடன் சேர்ந்து  புதிய  எதிரணி  ஒன்றை உருவாக்குவதற்கு  ஆதரவு  திரட்டும்  நோக்கில் பெர்லிசில்  மக்கள்  பேரணி  ஒன்றுக்கு  ஏற்பாடு  செய்யும். அக்கூட்டத்தில் பாஸ்  தலைவர் முகம்மட்  சாபுவும்  ஜூன்  மாதம்  பாஸ்  கட்சித் தேர்தலில் …

1எம்டிபி தலைமையகத்தில் போலீஸ் அதிரடிச் சோதனை

போலீஸ் கோலாலும்பூரில்  ஜாலான்  சுல்தான்  இஸ்மாயிலில்  உள்ள  1எம்டிபி  தலைமையகத்தில்  அதிரடிச்  சோதனை  நடத்தியுள்ளது. காலை  மணி  11.30க்கு மெனாரா ஐஎம்சி-இல்  உள்ள   அலுவலகத்தில்  அந்த அதிரடிச்  சோதனை நிகழ்ந்ததாக த  ஸ்டார்  ஆன்லைன்  கூறிற்று. அக்கட்டிடத்துக்கு  வெளியில்  மூன்று  போலீஸ்  வாகனங்கள்  நிறுத்தி  வைக்கப்பட்டிருந்தன.  செய்தியாளர்கள்  அக்கட்டிடத்துக்குள் …

ஐஜிபி: எம்பேங் நிறுவனர் கொலைக்கும் 1எம்டிபி-க்கும் தொடர்பு இல்லை

எம்பேங்க் நிறுவனர் ஹுசேன் அஹ்மாட் நஜாடி  1எம்டிபி  ஊழலை  அம்பலப்படுத்த  விரும்பினார்  அதானல்தான கொல்லப்பட்டார்  என்ற  வதந்திகளைப்  போலீசார்  நிராகரித்தனர். அக்கொலைக்கும் 1எம்டிபி நிறுவனத்தின் பணம் பிரதமர் நஜிப்பின் கணக்கிற்கு மாற்றப்பட்டதாக கூறப்படுவதற்கும்  சம்பந்தம் இல்லை என தேசிய  போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பாக்கார் தெரிவித்தார்.…

பிஎன் தேர்தல் வெற்றிக்கு எதிராக பிகேஆர் வழக்கு தொடுக்கும்

பிஎன்  கடந்த பொதுத்  தேர்தலில்  வென்றது  செல்லாது  என்று  அறிவிக்கக் கோரி  பிகேஆர்  சிவில்  வழக்கு  ஒன்றைத்  தொடுக்கவுள்ளது.  1எம்டிபி  பணம்  பொதுத்  தேர்தல்  பரப்புரைகளுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக்  கூறும்  வால்  ஸ்திரிட்  ஜர்னல் செய்தியை  அடிப்படையாகக்  கொண்டு  அது  அவ்வழக்கைத் தொடுக்கும். “இயன்ற விரைவில்” வழக்கு  தொடுக்கப்படும்  என …

‘வங்கிக் கணக்கைக் காட்டுங்கள், போதும்’- நஜிப்புக்கு மகாதிர் அறிவுறுத்து

பிரதமர் நஜிப்  அப்துல் ரசாக், அரசாங்கப்  பணத்தில்  யுஎஸ்$700 மில்லியனை(ரிம2.6 பில்லியன்)  எடுத்துக்  கொண்டார்  என்ற  குற்றச்சாட்டுக்கு  முடிவுகட்ட  அவரது  வங்கிக்  கணக்குகளைக்  காட்டினாலே  போதுமானது  என்கிறார்  முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட். “மக்கள்  அவர்மீது  குற்றம்  சுமத்தினால்  அதை  ஒரு  சதி  என்கிறார். அப்படிச்  சொல்வது…

வங்கி ஆவணக் கசிவு தொடர்பில் WSJ-இடம் போலீஸ் விசாரணை

பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு ரிம2.6 பில்லியன் மாற்றம் செய்யப்பட்டதாகக்  கூறப்படும்  செய்தியுடன்  தொடர்புள்ள ஆவணங்களை  வெளியிடப்பட்டிருப்பது  குறித்து  போலீசார் வால் ஸ்ட்ரீட் ஜார்னலிடம் விசாரணை  நடத்துவர். கணினிச்  சட்டத்தின்கீழ்   WSJ-இடம்  விசாரணை  நடத்தப்படும்  எனப்  போலீஸ்  படைத்  தலைவர்  காலிட்  அபு  பக்கார் …

மகாதிர்: நாட்டை அசிங்கப்படுத்தியவர் நஜிப், நானல்ல

1எம்டிபி  குழப்படி  மூலம்  நாட்டை  அசிங்கப்படுத்தியவர்   பிரதமர் நஜிப்  அப்துல்  ரசாக்  என டாக்டர்  மகாதிர்  முகம்மட்  கூறினார். “மற்ற  நாடுகள்  என்றால்  இப்படிப்பட்ட  ஊழலில்  சம்பந்தப்பட்ட  தலைவர்  பதவி  விலகுவார், மன்னிப்பு  கேட்பார். “ஆனால், மலேசியாவில்  தக்கக்  காரணமின்றி  தங்கள்  தலைவரை  விழுந்து  விழுந்து  பாதுகாப்பார்கள், தங்கள் …

நஜிப் பற்றி விவாதிக்க சிறப்பு நாடாளுமன்றக் கூட்டம் தேவை

அரசாங்கத்துக்குச்  சொந்தமான  1எம்டிபி  நிதி  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கின்  தனிப்பட்ட  கணக்குக்கு மாற்றிவிடப்பட்டதாகக்  கூறப்படுவது  பற்றி   விவாதிக்க  சிறப்பு  நாடாளுமன்றக்  கூட்டத்துக்கு  ஏற்பாடு  செய்யப்பட   வேண்டும். வால்  ஸ்திரிட்  ஜர்னலின்  கூற்று கடுமையானது  என்பதால்  அதை  விவாதிக்க  சிறப்பு  நாடாளுமன்றக்  கூட்டம்  அவசியம்  என  எதிரணித்  தலைவர் …

முடக்கப்பட்ட 6 கணக்குகளில் மூன்று நஜிப்பினுடையவை

1எம்டிபி-இன்  ரிம2.6 பில்லியன்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கின்  சொந்த கணக்குக்கு  மாற்றிவிடப்பட்டதாகக்  கூறப்படுவது  பற்றி  விசாரணை  நடத்திவரும்  சிறப்புப்  பணிக்குழு  அவ்விவகாரத்தின்  தொடர்பில்  ஆறு  வங்கிக்  கணக்குகளை  முடக்கி  வைத்திருப்பதாக  தெரிவித்தது. ஆனால், அவ்வங்கிக்  கணக்குகள்  யாருடையவை  என்பதை  அது  தெரிவிக்கவில்லை. அந்த  ஆறில்  மூன்று  பிரதமருக்குச் …