ஆர்ஓஎஸ்: டிஏபியின் சிஇசி-க்கு இன்னும் அங்கீகாரம் இல்லை

டிஏபியின் மத்திய  நிர்வாகக்  குழு(சிஇசி)  அங்கீகரிக்கப்பட்ட  ஒன்று  என  அக்கட்சி  கூறிக்கொண்டாலும்  இன்னும்  அதற்கு  முறைப்படி  அங்கீகாரம்  கொடுக்கப்படவில்லை  எனச்  சங்கப்  பதிவகம்  கூறுகிறது “அவர்கள் எப்படி  அவ்வாறு  கூறிக்கொண்டிருக்கிறார்கள்  என்பது  தெரியவில்லை. எங்களுக்கு நீதிமன்றத்திலிருந்து  அதன் தொடர்பில்  எந்தத்  தகவலும்  இல்லை”, என ஆர்ஓஎஸ்  துணை  இயக்குனர் …

மசீச மலேசியாகினிக்குத் தடைபோடுவது ‘ சிறுபிள்ளைத்தனமானது’

கட்சியின் ஆண்டுக்கூட்டத்தில்  செய்தி  சேகரிக்க   மலேசியாகினியை  அழைப்பதில்லை  என்ற  மசீச  மத்திய  குழுவின்  முடிவு  மசீச முன்னாள்  தலைவர்கள்  இருவருக்குப்  பெரும்  வியப்பைத்  தந்துள்ளது. முன்னாள்  மசீச  தலைவர்  டாக்டர்  சுவா  சொய்  லெக்,  மலேசியாகினி  பலமுறை  தமக்கு  எதிர்ப்பாகவே  செய்திகளை வெளியிட்டிருந்தாலும்  கட்சி  நிகழ்வுகளில்  செய்தி  சேகரிக்க …

புது எம்பி ஜெகோவி பாணியில் செயல்படுகிறார்

குப்பைத்  தொட்டியோ சாக்கடையோ   அரைக்கை வெள்ளைச்  சட்டை  அழுக்காகி  விடுமே  என்று  யோசிப்பதில்லை உடனே  இறங்கி  வேலை செய்யத்  தொடங்கி  விடுகிறார்  சிலாங்கூர்  மந்திரி  புசார்  அஸ்மின்  அலி. நேற்று  ஒரு  குப்பைத்  தொட்டிக்குள்ளேயே  அவர்  இறங்கியதைக்  காண்பிக்கும்  படங்களைச்  சமூக  வலைத்தளங்களில்  நிரப்பி  அசத்தி  விட்டார்கள்  அவரின் …

ரம் தொழிற்சங்க உறுப்பினர்களின் வேலைநீக்கம் திரும்பப் பெறவேண்டும், எம்டியுசி

  வேலைநீக்கம் செய்யப்பட்ட மலாயா ரயில்வே தொழிலாளர் சங்க (ரம்) உறுப்பினர்களை மீண்டும் வேலைக்கு சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைக்கு மலேசிய தொழிற்சங்க காங்கிரஸ் நேற்று அதன் ஆதரவை அறிவித்தது. சுமார் 70 எம்டியுசி உறுப்பினர்களும் 100 ரயில்வே ஊழியர்களும் நேற்று கெரித்தா அப்பி தானா மலாயு…

தமிழ் நாளிதழ்கள் குறித்து இளஞ்செழியன் கூறிய கருத்து தவறுதலாக புரிந்துக்…

இன்று மலேசியாவின் முக்கிய தமிழ் நாளேடுகளில்,  திரு. இளஞ்செழியன் தமிழ் நாளேடுகள் குறித்து வெளியிட்ட கருத்து குறித்த எதிர்வினைகள் வெளிவந்திருந்தன. அவரைக் கருத்துக் குருடர் என்றும் தமிழ்ப்பத்திரிகைகள் குறித்து கருத்துரைப்பதற்கு அவருக்கு என்ன அருகதை இருக்கிறது என்றெல்லாம் எதிர்வினைகள் முன்வைக்கப்பட்டிருந்தன. இது குறித்து கருத்துரைக்கையில், தமிழ் நாளேடுகள் இந்நாட்டில்…

போலீசின் தோற்றத்தைப் பாதுகாக்க குற்றவியல் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தக் கூடாது

போலீஸ் அதைக்  குறைகூறுவோருக்கு  எதிராக  குற்றவியல்  சட்டத்தைத் “தவறாகப்  பயன்படுத்துவதாக”  சுதந்திரத்துக்கான  வழக்குரைஞர்கள்  அமைப்பு(எல்எப்எல்)  சாடியுள்ளது. அண்மையில்  அச்சட்டத்தைப்  பயன்படுத்தி  பல  கைது  நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்பட்டிருப்பது  குறித்து  கருத்துரைத்த  அவ்வமைப்பின்  செயல்முறை  இயக்குனர்  எரிக்  பால்சன்,  அச்சட்டம்  தவறாகப்  பயன்படுத்தப்பட்டுள்ளது  என்றும்  அச்சட்டத்தின்   நோக்கம்  குறைகூறலிலிருந்து  போலீசைப்  பாதுகாப்பதல்ல …

மசீச ஏஜிஎம்-முக்கு மலேசியாகினிக்கு அழைப்பில்லை

மசீச அடுத்த  வாரம்  நடைபெறும்  அதன்  ஆண்டுக் கூட்டத்தில் (ஏஜிஎம்) செய்திகள்  சேகரிக்க  மலேசியாகினியை  “அழைப்பதில்லை”  என   முடிவு  செய்துள்ளது. இன்று  அதன்  மத்திய  செயல்குழுக்  கூட்டத்தில்  அம்முடிவு  எடுக்கப்பட்டதைத்  தலைமைச்  செயலாளர்  ஒங்  கா  சுவான்  உறுதிப்படுத்தினார். “சில  செய்தியாளர்  கூட்டங்களில்  தலைவர்கள்   கூறியதை  நீங்கள்  திரித்து …

எரிபொருள் விலை உயர்ந்தாலும் சந்தை விலையைவிட அது குறைவுதான்

எரிபொருள் விலை  அண்மையில் உயர்த்தப்பட்டிருந்தாலும்  உலகச்  சந்தை  விலைப்பருவத்துடன்  ஒப்பிட்டால்  ரோன்95,  டீசல் ஆகியவற்றின் விலை  குறைவுதான். “ரோன் 95-க்கு  பிஎன்  அரசாங்கம்  இன்னமும்  உதவித் தொகை  வழங்கிக்  கொண்டுதான்   இருக்கிறது. ஒவ்வொரு  லிட்டருக்கும்  ரிம0.28  வழங்கப்படுகிறது.  டீசலுக்கு  ரிம0.32”, என நிதி  துணை  அமைச்சர்  அஹ்மட்  மஸ்லான் …

எரிபொருளுக்கு ஜிஎஸ்டி உண்டா? டிஏபி கேட்கிறது

எரிபொருளுக்கு  பொருள், சேவை  வரி  விதிக்கப்பட்டால், மலேசியர்கள்  சந்தை  விலையைவிட  அதிக  விலை  கொடுக்க  நேரிடும்  என்கிறார்  பேராக்  டிஏபி பொருளாதார  மேம்பாட்டுப்  பிரிவு  தலைவர்  சோங்  ஸெமின். உலகச்  சந்தையில்  கச்சா  எண்ணெய்  விலை  தொடர்ந்து  வீழ்ச்சி  காணூம்  என  ராய்ட்டர்ஸ்  செய்தி  கூறுவதை  அவர்  சுட்டிக்காட்டினார்.…

ஜிஎஸ்டி-இல் விலக்குகள் நிறைய இல்லை: பாஸ் எச்சரிக்கை

அரசாங்கம்  பொருள், சேவை  வரியிலிருந்து  பல  பொருள்களுக்கு  விலக்களிக்க  இயலாது. அப்படிச்  செய்தால்  அதற்குக்  கூடுதல்  வருமானம்  கிடைக்காமல்  போகும். இதுதான்  உண்மை.  ஆனாலும் ஜிஎஸ்டி-விலக்குப்  பட்டியலில்  மேலும்  பல  பொருள்களைச்  சேர்த்துக் கொண்டால்  அது  மக்களுக்கு  நன்மையாக  இருக்கும்  என்கிறார்  பாஸ்  ஆய்வு  மைய  செயல்முறை  இயக்குனர் …

காலிட் போகும்போது தண்ணீர் உடன்பாட்டையும் எடுத்துச் சென்றுவிட்டாரா?

செப்டம்பர்  12-இல்  செய்துகொள்ளப்பட்ட  நீர்  சீரமைப்பு  உடன்பாட்டின்  பிரதி  எதுவும்  சிலாங்கூர்  அரசிடம்  இல்லை  என்பதை  அறிந்து  டிஏபி “அதிர்ச்சி” அடைந்துள்ளது. “மாநிலச்  செயலாளரிடம்கூட  ஒரு  பிரதி  இல்லை  என்பது  ஆச்சரியமாக  உள்ளது. முன்னாள்   மந்திரி  புசார் (அப்துல்  காலிட்  இப்ராகிம்) அலுவலகத்தைக்  காலி   செய்து  மூட்டை  முடிச்சுகளுடன் …

அஸ்மினின் முதல் பட்ஜெட்டில் வளர்ச்சிக்கு முன்னுரிமை

புதிதாக  பொறுப்பேற்றுள்ள  சிலாங்கூர்  மந்திரி  புசார்  முகம்மட்  அஸ்மின்  அலி,  விரைவில்  தாக்கல்  செய்யவுள்ள  மாநில பட்ஜெட்டில்  மேம்பாட்டுப் பணிகளுக்குக்  கூடுதல்  நிதி  ஒதுக்க  நினைக்கிறார். நடைமுறைச்  செலவினத்தைக்  குறைத்து மேம்பாட்டுச்  செலவினத்தைக்  கூட்டுவது  அவரின்  திட்டமாகும். மேம்பாட்டுச்  செலவுகளைக்  குறைத்துக்கொள்ள  இயலாது  என்கிறார்  அவர். மாநில பட்ஜெட்டை …

ரிஸால்மானை அனுப்பி வைக்குமாறு நியு சிலாந்து கோரிக்கை

பாலியல்  குற்றச்சாட்டை  எதிர்நோக்க  மலேசிய  தூதரக  அதிகாரியான  முகம்மட்  ரிஸால்மான்  இஸ்மாயிலைத்  திருப்பி  அனுப்பி  வைக்குமாறு  நியு  சிலாந்து  அரசாங்கம்  அதிகாரப்பூர்வமாகக்  கேட்டுக்கொண்டிருக்கிறது. ஐந்து  மாதங்களுக்கு  முன்னர்,  முகம்மட்  ரிஸால்மான்,  நியு  சிலாந்தில்  ஒரு  பெண்ணிடம்  கொள்ளையிட்டதற்காகவும்  அவருடன்  பாலியல் வல்லுறவு  கொள்ள  முயன்றதற்காகவும்  கைது  செய்யப்பட்டார்  என்ற …

அக்டோபர் 16: தேச நிந்தனைச் சட்டத்திற்கு எதிராக வழக்குரைஞர்கள் பேரணி

  தேச நிந்தனைச் சட்டம் 1948 க்கு எதிராக மலேசிய வழக்குரைஞர் மன்ற உறுப்பினர்களின் பேரணி அக்டோபர் 16 நடைபெறும் என்று அம்மன்றம் இன்று அறிவித்தது. கடந்த மாதம் நடைபெற்ற மன்றத்தின் சிறப்புக் கூட்டத்தில் இப்பேரணி நடத்தப்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டது. இப்பேரணிக்கு "அமைதிக்கும் சுதந்திரத்திற்குமான நடை 2014" என்று பெயர்கொடுக்கப்பட்டுள்ளது.…

இந்திய முஸ்லிம்களை இழித்துரைத்ததாக என்ஜிஓ தலைவர்மீது குற்றச்சாட்டு

மலேசிய  இந்திய  முற்போக்குச்  சங்க(மிபாஸ்) தலைவர்  ஏ.இராஜரத்தினம்  இந்திய  முஸ்லிம்களையும்  இந்திய  முஸ்லிம்  காங்கிரஸையும் (கிம்மா)  நிந்தனை  செய்து  கருத்து  உரைத்ததாக  குற்றம்  சாட்டப்பட்டார். இராஜரத்தினம்,  ஆகஸ்ட்  மாதம்  முகநூலில்  அந்தத்  தேச  நிந்தனை  கருத்துகளைப்  பதிவிட்டிருந்ததாக  கிம்மா,  உள்துறை  அமைச்சில்  புகார்  செய்தது. அந்த  62-வயது  ஹோட்டல்…

உலகின் தலைசிறந்த 200 பல்கலைக்கழகங்களில் மலேசியப் பல்கலைக்கழகம் எதுவும் இல்லை

டைம்ஸின்  200  தலைசிறந்த உலகப்  பல்கலைக்கழகங்களின்  ஆண்டுப்  பட்டியலில்  இவ்வாண்டும்  மலேசியப்  பல்கலக்கழகம்  எதுவும்  இடம்பெறவில்லை. சிங்கப்பூர்  தேசிய  பல்கலைக்கழகம் (என்யுஎஸ்), உலகின்  தலைசிறந்த  25  பல்கலைக்கழகங்களின் வரிசையில்  இடம்பெற்றிருப்பது  குறிப்பிடத்தக்கது. அந்த  வரிசையில்  இரண்டே  இரண்டு  ஆசியப் பல்கலைக்கழகங்கள்தாம்  இடம்  பிடித்துள்ளன. ஒன்று  என்யுஎஸ்  மற்றது  தோக்கியோ …

கேவியெஸ்: டிஏபிதான் இனவாதக் கட்சி, அம்னோ அல்ல

ஈராண்டுகளுக்கு  முன்னர் பிபிபி ஆண்டுக்கூட்டத்தில் பேசிய  அதன்  தலைவர்  எம்.கேவியெஸ்,  பாரிசான் நேசனலில் இனப் பாகுபாடு  காட்டப்படுவதாகவும்  அதனால்  அக்கூட்டணிக்கு  ஆதரவு  சரிந்து  வருவதாகவும்  கூறினார். ஆனால், இப்போது  அந்த  முன்னாள்  துணை  அமைச்சர்   பாட்டை  மாற்றிப்  பாடுகிறார்.  அம்னோ  இனவாதக்  கட்சி  என்று  டிஏபி  கூறியதை  மறுத்து …

அஸ்மி ஷரோமுக்கு யுகேஎம்-இல் நுழைய அனுமதியில்லை

தேச  நிந்தனைக்  குற்றம்  சாட்டப்பட்டுள்ள  மலாயாப்  பல்கலைக்கழக  சட்டப்  பேராசியர்  அஸ்மி,  நேற்றிரவு யுனிவர்சிடி  கெபாங்சான்  மலேசியா(யுகேஎம்)வுக்குள்  செல்ல  அனுமதிக்கப்படவில்லை. அஸ்மி  தேச  நிந்தனைச்  சட்டம்  பற்றி   மாணவர்களிடையே  உரையாற்ற  அங்கு  சென்றார்  என்றும்  ஆனால்  அவர் பல்கலைக்கழக  வளாகத்துக்குள்  செல்ல  அனுமதி  மறுக்கப்பட்டது  என்றும்  காபோங்கான்  மஹாசிஸ்வா …

அரசாங்கத்தின் ‘ஹரி ராயா பரிசு’:ரோன்95 விலையேற்றம்

ஹஜ்ஜுப் பெருநாள்  கொண்டாடப்படவுள்ள  வேளையில்  திடீரென  எண்ணெய் விலையை  உயர்த்திய  அரசாங்கத்தை பாஸ்  தலைவர்கள்  சாடியுள்ளனர். பிஎன்   13வது  பொதுத்  தேர்தலில்  வென்ற  பின்னர்  ஏற்பட்டுள்ள  இரண்டாவது  விலையேற்றம்  இதுவென  சரவாக்  பாஸ்  துணை  ஆணையர்  ஜொப்ரி  ஜராயீ  இன்று  ஓர்  அறிக்கையில்  கூறினார். “முஸ்லிம்கள்  தியாகத்  திருநாளைக் …

மலேசியாகினி: நீதிமன்றத்தில் இரு முறை வென்றும், அச்சிட்டு வெளியிட அனுமதி…

  சுயேட்சை செய்தி இணையதளமான மலேசியாகினி ஒரு நாளிதழை அச்சிட்டு வெளியிட உரிமை உண்டு என்று நீதிமன்றம் இருமுறை தீர்ப்பளித்திருந்தும் அரசாங்கம் மலேசியாகினி செய்திருந்த மனுவை நிராகரித்திருக்கிறது. உள்துறை அமைச்சிடமிருந்து மலேசியாகினியின் தலைமை செயல்முறை அதிகாரி பிரமேஷ் சந்திரன் பெற்றுள்ள கடித்தில் மலேசியாகினியின் மனு நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் அந்த…

மலேசியாகினிக்கு இரண்டு தடவை வழக்கில் வெற்றி கிடைத்தது; பிரசுர உரிமம்…

மலேசியாகினிக்கு  நாளிதழ்  வெளியிடும்  உரிமை  உண்டு  என்று  நீதிமன்றங்கள்  தீர்ப்பளித்துள்ள  போதிலும்  அரசாங்கம்  பிரசுர  உரிமம்  கொடுக்க  தொடர்ந்து  மறுத்து  வருகிறது. கடந்த வாரம்,  உள்துறை  அமைச்சு  தலைமை  செயல்  அதிகாரி  பிரமேஷ்  சந்திரனுக்கு  அனுப்பிய  கடிதத்தில்,  “மலேசியாகினி  சர்ச்சையை உண்டுபண்னும்  செய்திகளை  வெளியிடுவதை  வழக்கமாகக்  கொண்டிருப்பதாலும்  நடுநிலைமை …

ரோன் 95, டீசல் ஆகியவை 20 சென் உயர்கின்றன

எரிபொருள்  விலை  மீண்டும்  உயர்கிறது.  நள்ளிரவு  தொடங்கி  ரோன் 95, டீசல்  ஆகியவை  ஒரு  லிட்டருக்கு 20 சென் உயரும்  என  உள்நாட்டு  வாணிக, பயனீட்டாளர்  விவகார  அமைச்சு   அறிவித்துள்ளது. இப்போது  ரோன் 95-இன்  விலை  லிட்டருக்கு ரிம2.10 சென்னாகும். டீசல்  ஒரு  லிட்டருக்கு  ரிம2-ஆக  விற்கப்படுகிறது.

அன்வார், சிலாங்கூர் பொருளாதார ஆலோசகராக தொடர்ந்து இருப்பார்

சிலாங்கூர்  மந்திரி  புசார்  அஸ்மின்  அலி, பிகேஆர்  நடப்பில்  தலைவர்  அன்வார்  இப்ராகிமை  மாநிலப்  பொருளாதார  ஆலோசகராக  தொடர்ந்து  வைத்திருப்பார். அதற்கு  சம்பளமாக  அன்வாருக்கு  மாதம் ரிம1 வழங்கப்படும். மாநிலப்  பொருளாதார  ஆலோசகரின்  அலுவலகத்தை  மூடியதுதான்  முன்னாள்  மந்திரி  புசார் அப்துல்  காலிட்  இப்ராகிம்  பதவியிலிருந்து  விலகுவதற்குமுன்  செய்த …