சட்டவிரோத பந்தயம் மற்றும் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுவதற்குப் பெயர்போன ஒரு பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில், 45 கார்களைப் பரிசோதித்த போலீசார் 32 சம்மன்களை வழங்கியுள்ளனர். இன்று அதிகாலை இங்குள்ள லெபு மெதினி உத்தாமா பகுதியில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சட்டவிரோத பந்தயம் மற்றும் ஆபத்தான முறையில் வாகனம்…
கூட்டரசு சாலைகளில் 90 பகுதிகள் மூடப்பட்டுள்ளன
அரசாங்கம் கிழக்குக் கரையில் வழக்கத்துக்கு மாறாக இவ்வளவு மோசமான வெள்ளம் ஏற்பட்டதற்கான காரணத்தை ஆழமாக ஆராயும் எனத் துணைப் பிரதமர் முகைதின் யாசின் கூறுகிறார். வெள்ளம் வடிந்த பின்னர், அந்த ஆய்வு மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்ததாக பெர்னாமா அறிவித்தது. ஆய்வில், பருவ நிலை மாற்றங்கள், காடழிப்பு நடவடிக்கைகள்,…
1967-ஐவிட இவ்வாண்டு வெள்ளம் மோசமானது
“எனக்குத் தெரிந்து இரண்டு பெரிய வெள்ளப்பெருக்குகள் ஏற்பட்டுள்ளன. ஆனால், இதுதான் மிகப் பெரிது”, என்கிறார் கிளந்தானைச் சேர்ந்த முகம்மட் சாலே. முகம்மட் சாலே கூறுவது உண்மையாகத்தான் இருக்க வேண்டும். ஏனென்றால், 80-வயதான அம்மூத்த குடிமகனார் பல வெள்ளங்களைக் கண்டவர். அவரை பாசிர் மாஸ், கம்போங் கோட்டாவில் உள்ள அவரது …
பிரதமரை மட்டுமே சந்திப்போம்: சான்றோர் 25 திட்டவட்டம்
தாங்கள் முன்வைத்த விவகாரங்கள் தொடர்பில் பிரதமரை மட்டுமே சந்திக்க விரும்பும் ‘சான்றோர் 25’ குழுவினர், மலாய் ஆலோசனை மன்றம் பற்றிக் கேள்விப்பட்டதே இல்லை என்றும் சொன்னார்கள். “பிரதமரை மட்டுமே சந்திக்க விரும்புகிறோம். வேறு யாரையும் அல்ல”, என முன்னாள் அரசதந்திரிகளான கமில் ஜாப்பாரும் நூர் பரிடா அரிப்பினும் இன்று …
கர்ப்பவதி பெண்ணும் குழந்தையும் நிலச் சரிவுக்குப் பலி
இன்று காலை கேமரன் மலையில் ஏற்பட்ட நிலச் சரிவில் ஒரு கர்ப்பவதியும் அவரது ஒரு வயது மகனும் கொல்லப்பட்டனர். அவரின் கணவருக்குக் கால் முறிந்தது. காலை மணி 5.30க்கு, எம். நித்யவதி(24)யும் அவரின் மகன் ஆர். ரூபனீஸ்வரனும் அவர்களின் வீட்டுக்குப் பின்புறம் ஏற்பட்ட நிலச் சரிவில் புதையுண்டு போனதாக…
விமானத்தைத் தேடும்பணி தொடர்கிறது
155 பயணிகளையும் ஏழு பணியாளர்களையும் ஏற்றிக்கொண்டு இந்தோனேசியாவின் சுராபாயாவிலிருந்து சிங்கப்பூருக்குப் பறந்து கொண்டிருந்தபோது காணாமல்போன ஏர் ஏசியா விமானம் பற்றி இதுவரை தகவல் ஏதும் இல்லை. அதைத் தேடும்பணி மும்முரமாக நடந்துகொண்டிருக்கிறது. தேடும் பணியில் உதவ அமெரிக்காவும் ஒரு கப்பலை அனுப்பி வைத்துள்ளது. யுஎஸ்எஸ் செம்ப்சன் என்னும் அந்த …
நாடு முழுக்க வெள்ள அகதிகள் எண்ணிக்கை சுமார் 250,000
நேற்றிரவு கிளந்தானிலும் திரெங்கானுவிலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை குறைந்த வேளையில் பகாங்கில் அவர்களின் எண்ணிக்கை உயர்ந்தது. தேசிய பாதுகாப்பு மன்றம் வெளியிட்ட தகவலின்படி இப்போது வெள்ள அகதிகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 250,000. கிளந்தானில்- 158,476 பகாங்கில்- 49,369 திரெங்கானுவில்- 31,477 பேராக்கில் - 7,611 ஜோகூரில் -…
பாஸ்: பட்ஜெட்டில் வெள்ள நிர்வாகத்துக்கு ரிம9.3மில்லியன் மட்டுமே
2015 பட்ஜெட்டில் இயற்கைப் பேரிடர்களுக்கு ரிம9.3 மில்லியன் மட்டுமே ஒதுக்கப்பட்டிருப்பது பேரிடர் நிவாரணத்துக்கு முன்னுரிமை கொடுக்கப்படவில்லை என்பதற்குத் தக்க சான்று என்று பாஸ் தலைவர் ஒருவர் கூறியுள்ளார். பெர்மாத்தா திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட தொகையுடன் ஒப்பிட்டால் இது அற்பத் தொகை என்று பாஸ் உதவித் தலைவர் சலாஹுடின் ஆயுப் கூறினார்.…
புதன்கிழமைவரை பருவ மழை தொடரும்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவுவதில் 5,000 ஆயுதப்படையினர் ஈடுபட்டிருப்பதாக தற்காப்பு அமைச்சர் ஹிஷாமுடின் உசேன் கூறினார். அமைச்சர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரைச் சந்திக்கவும் அவர்களுக்கு உதவிப் பொருள்களை வழங்கவும் இன்று கிளந்தானுக்கு வருகை புரிந்தார் என பெர்னாமா கூறியது. கிளந்தானில் உள்ள மலேசியாகினி குழு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு முறையான உணவு கிடைப்பதுதான் …
‘சான்றோர் 25’ பேருடன் எம்பிஎம் இரகசியக் கூட்டம்
மலாய் ஆலோசனை மன்றம் (எம்பிஎம்) ‘மலாய்ச் சான்றோர்’ 25 பேருடன் இரகசியக் கூட்டம் நடத்தும் என அதன் தலைமைச் செயலாளர் ஹசன் மாட் அறிவித்துள்ளார் கூட்டம் எப்போது என்பதை அவரால் தெரிவிக்க இயலவில்லை. ‘சான்றோர் 25’ பேரிடமிருந்து பொருத்தமான தேதி கிடைக்கவில்லை என்றாரவர். அவர்களைச் சந்திக்கும்படி பிரதமர் …
ஏர் ஏசியா பங்குகள் மூன்றாண்டுகளில் பெரும் வீழ்ச்சி
இன்று, திங்கள்கிழமை, ஏர் ஏசியா பங்குகள் 7.8 விழுக்காடு வீழ்ச்சி கண்டன. நேற்று, ஏர் ஏசியா விமானம் ஒன்று ஜாவா, சுராபாயாவிலிருந்து சிங்கப்பூருக்குச் செல்லும் வழியில் காணாமல்போனதை அடுத்து ஏற்பட்ட இவ்வீழ்ச்சியானது கடந்த மூன்றாண்டுகளில் அப்பங்குகளில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய ஒருநாள் வீழ்ச்சியாகும். அச்சம்பவத்தால் பயணிகள் அந்நிறுவனத்தின் விமானங்களில் …
‘அரிசிப் பைகளில் என் முகத்தை அச்சிட வேண்டியிருந்ததால் உதவி தாமதமானதாக…
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கொடுக்கப்பட்ட தம் முகம் பதிக்கப்பட்ட அரிசிப் பைகள், 13வது பொதுத் தேர்தல் பரப்புரைகளில் கொடுக்கப்பட்டவை போக மீதமிருந்தவை என மாச்சாங எம்பி ஜஸ்லான் யாக்கூப் கூறுகிறார். அப்பைகளில் தம் முகத்தையும் பிஎன் என்பதையும் அச்சடிக்க முனைந்ததால்தான் வெள்ள உதவிப் பொருள்கள் கொடுப்பது தாமதமானது என்று குற்றம்…
எஸ்ஏஆர் தலைவர்: விமானம் கடலில் விழுந்திருக்கலாம்
155 பயணிகளையும் ஏழு பணியாளர்களையும் ஏற்றிக்கொண்டு இந்தோனேசியாவின் சுராபாயாவிலிருந்து சிங்கப்பூருக்குப் பறந்து கொண்டிருந்த ஏர் ஏசியா விமானம் நேற்று காணாமல் போனது. அந்த ஏர்பஸ் விமானம், உள்ளூர் நேரப்படி காலை 5.20-க்கு (மலேசிய நேரம் 6.20), ஜாவாவின் சுராபாயாவிலிருந்து புறப்பட்டு இரண்டு மணி நேரத்தில் சிங்கப்பூர் சென்றிருக்க வேண்டும்.…
ஏர்ஆசியா தலைவர்: இது எனது கடுந்துயரம்
இந்தோனேசியா, சுரபாயாவிலிருந்து இன்று காலையில் சிங்கப்பூருக்கு புறப்பட்ட ஏர்ஆசியா விமானம் காணாமல் போய்விட்ட சம்பவத்தை தமக்கு ஏற்பட்ட மிக மோசமான கடுந்துயரம் என்று அவ்விமான நிறுவன குழுமத்தின் செயல்முறை தலைவர் டோனி பெர்னேண்டஸ் கூறினார். இக்குழுமத்தின் தலைவர் என்ற முறையில் இச்சோதனையான நேரத்தில் தாம் அங்கே இருக்கப்போவதாக அவர்…
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 170 ஆயிரமாக உயர்ந்தது
வெள்ள நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. பெர்னாமா செய்திப்படி இன்று பிற்பகல்வரை ஆறு மாநிலங்களில் மொத்தம் 168,660 பேர் துயர்த்துடைப்பு மையங்களில் தங்கியிருந்தனர். கிளந்தான், பகாங், ஜோகூர், பேராக் ஆகிய மாநிலங்களில் நிலைமை மேலும் மோசமாகி வருகிறது. திரெங்கானுவிலும் பெர்லிசிலும் நேற்றிரவு இருந்ததைவிட இன்று நிலைமை ஓரளவு மேம்பட்டிருந்தது.…
வெளிநாடு சென்றுள்ள அமைச்சர்கள் உடனே நாடு திரும்ப உத்தரவு
நாட்டில் வெள்ளப் பெருக்கு மோசமான வேளையில் அமெரிக்காவில் விடுமுறையைக் கழித்துக் கொண்டிருந்ததற்காகக் கடுமையான குறைகூறலுக்கு ஆளான பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், விடுமுறையைக் கழிப்பதற்கு வெளிநாடு சென்றுள்ள எல்லா அமைச்சர்களையும் உடனே நாடு திரும்புமாறு பணித்துள்ளார். நஜிப், இன்று காலை அவ்வுத்தரவைப் பிறப்பித்ததாக பெர்னாமா கூறியது. உத்தரவு கிடைக்கப்பெற்ற …
ஏர் ஏசியா விமானத்தைக் காணவில்லை
155 பயணிகளையும் ஏழு பணியாளர்களையும் ஏற்றிக்கொண்டு இந்தோனேசியாவின் சுராபாயாவிலிருந்து சிங்கப்பூருக்குப் பறந்து கொண்டிருந்த ஏர் ஏசியா ஏர்பஸ் விமானம் உள்ளூர் நேரம் காலை 5.20-க்கு (மலேசிய நேரம் காலை 6.20) காணாமல் போனது. காணாமல் போவதற்குமுன் அவ்விமானம், பறக்கும் பாதையில் அடர்த்தியா, மேகங்கள் எதிர்ப்படுவதாகவும் மேகங்களைத் தவிர்க்க சற்றே…
கிளந்தானில் ஹுடுட் மீதான சட்டமன்றக் கூட்டம் ஒத்திவைப்பு
வெள்ள நிலவரம் மோசமடைந்து வருவதால் ஹுடுட் சட்டவரைவு மீதான சிறப்புச் சட்டமன்றக்கூட்டத்தை கிளந்தான் அரசு ஒத்திவைத்துள்ளது. அதை கிளந்தான் மந்திரி புசார் அறிவித்ததாக பெரித்தா ஹரியான் தெரிவித்தது. நாளை அக்கூட்டம் நடப்பதாக இருந்தது. அதில், 1993 ஷியாரியா குற்றவியல் சட்டத்தில் சில திருத்தங்களைக் கொண்டுவர பாஸ் தலைமையிலான மாநில …
வெள்ள நிலவரம்: டிஏபி வெள்ள நிவாரண நிதி தொடங்கியது
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவ டிஏபி சொந்த வெள்ள நிவாரண நிதி ஒன்றைத் தொடக்கியுள்ளது. அதில் திரட்டப்படும் நிதி வெள்ளத்தில் மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அவற்றின் தேவைக்கு ஏற்பப் பகிந்தளிக்கப்படும் என்று டிஏபி ஏற்பாட்டுக் குழுச் செயலாளர் அந்தோனி லோக் கூறினார். “டிஏபி மத்திய செயல்குழு ரிம10,000 கொடுத்து நிதியைத் …
வெள்ளத்தில் அகப்பட்டுக்கொண்ட கிளந்தான் மந்திரி புசார்
நாட்டின் மிக மோசமான வெள்ளப் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள கிளந்தான் மாநிலத்தின் மந்திரி புசாரும் வெள்ளத்தில் அகப்பட்டுக்கொண்டார். அதனால் தமது தொகுதி மக்களுக்குக்கூட உதவி வழங்க முடியாத நிலையில் இருக்கிறார். அதற்காக அவர் மக்களிடம் மன்னிப்பு கோருகிறார். தமது வீட்டிற்குள்ளும் தண்ணீர் புகுந்து விட்டதால் தம்மால் வீட்டை விட்டு…
சீனா பெட்ரோல் மற்றும் டீசல் விலையைக் குறைக்கிறது
உலக அளவில் எண்ணெய்யின் விலை வீழ்ச்சியுற்று வரும் வேளையில் எதிர்வரும் சனிக்கிழமையிலிருந்து சீனா அதன் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் டன் ஒன்றுக்கு 520 யுஆனைக் (ரிம292.39) குறைக்கவிருக்கிறது. இந்த மாற்றத்துடன், இந்த ஆண்டு ஜூலையிலிருந்து இது 10 ஆவது மாற்றமாகும், எண்ணெய் நிலையங்களில் ஒரு லீட்டர்…
கிளந்தானுக்குக் கூடுதல் ஹெலிகாப்டர்களும் படகுகளும் தேவை
வெள்ளக்காடாக மாறியுள்ள கிளந்தானுக்கு இன்று பறந்து சென்ற துணைப் பிரதமர் முகைதின் யாசின், அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ கூடுதல் ஹெலிகாப்டர்களையும் படகுகளையும் தரை வாகனங்களும் பயன்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார். வெள்ளம் எதிர்பார்க்கப்பட்டதைவிட மோசமாக இருப்பதாகக் கூறிய அவர் இப்போது பயன்படுத்தப்படும் ஹெலிகாப்டர்களும் படகுகளும் வாகனங்களும் போதுமானவை …
பிரதமர் திரும்பி வருகிறார்: வெள்ளப் பாதிப்புகளைப் பார்வையிடுவார்
வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள வேளையில் விடுப்பெடுத்துக் கொண்டு அமெரிக்கா சென்றுவிட்டார் எனக் கடுமையாகக் குறைகூறப்பட்ட பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் நாடு திரும்புகிறார். இதனைத் தெரிவித்த பிரதமர் அலுவலக அறிக்கை, நாடு திரும்பியதும் பிரதமர் கிளந்தான் செல்வார் என்றது. “கிளந்தானில் பிரதமர் தலைமையில் கூட்டம் நடக்கும். அதில் தேசியப்…
சுனாமி பத்தாமாண்டு வழிபாடுகள் நடத்தி நினைவுகூரப்பட்டது
ஊழித் தாண்டவம் ஆடிய ஆழிப் பேரலை நிகழ்ந்து 10 ஆண்டுகள் ஆகின்றன. 230,000 பேரைக் காவு கொண்டு பேரழிவை ஏற்படுத்திய அப்பேரலையை நினைவுக்கூரும் வகையில் இந்தியப் பெருங்கடலைச் சுற்றியுள்ள நாடுகளில் இன்று சிறப்பு வழிபாடுகள் நடந்தன. இந்தோனேசியாவில் ஆச்சே மாநிலத்தில்- அதுவே சுனாமியால் மோசமாக பாதிக்கப்பட்ட பகுதி- அரசாங்கத்தின் …


