அல்தான்துயா கொலை வழக்கில் இன்னும் தீர்ப்பு வழங்கப்படவில்லை

  மங்கோலிய பெண் அல்தான்துயா கொலை வழக்கில் அவரை கொலை செய்த குற்றச்சாட்டிலிருந்து தலைமை இன்ஸ்பெக்டர் அஸிலா ஹாட்ரி மற்றும் கோப்ரல் சிருல் அஸார் உமார் ஆகியோரை மேல்முறையீட்டு நீதிமன்றம் குற்றச்சாட்டிலிருந்து விடுவித்ததற்கு எதிராக அரசாங்கம் பெடரல் உச்சநீதிமன்றத்தில் தொடுத்திருந்த மேல்முறையீட்டை அந்நீதிமன்றம் செவிமடுத்து நேற்றுடன் ஆறு மாதங்களாகி…

புவாட் ஸார்காஷி: அன்வார் மந்திரி புசார் பதவி கொடுக்க முன்வந்தார்

  தாம் 2008 இல் பக்கத்தான் ரக்யாட்டில் சேர்ந்துகொள்வதற்கு ஒப்புக்கொண்டிருந்தால் தமக்கு ஜொகூர் மாநில மந்திரி புசார் பதவியைத் தருவதற்கு அன்வார் முன்வந்ததாக அம்னோ உச்சமன்ற உறுப்பினர் புவாட் ஸார்காஷி இன்று கூறினார். எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம்மிற்கு எதிராக வெளிவிவகார அமைச்சர் அனிப்பா அமான் தொடர்ந்துள்ள ரிம100…

சிலாங்கூரில் பன்றி பண்ணை அமைக்க எதிர்ப்பு

  கோலலங்காட், கம்போங் செப்பாட்டில் ஒரு நவீன பன்றி பண்னை அமைக்கும் திட்டத்திற்கு எதிராக சுமார் 100 கிராம மக்களும், மலாய் உரிமை போராட்ட அரசு சார்பற்ற அமைப்பு பெர்காசாவும் இன்று சிலாங்கூர் மாநில மந்திரி புசாரிடம் ஒரு மகஜரை கொடுத்தனர். தாங்கள் மற்ற இனத்தினர் பன்றி இறைச்சி…

புத்தாண்டு முன்னிரவு எண்ணெய் பேரணி ஒத்திப்போடப்பட்டுள்ளது

  வெள்ளப் பேரிடரால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு ஆதரவாக எண்ணெய் விலையைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து புத்தாண்டு முன்னிரவில் நடத்தப்படவிருந்த பேரணி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இப்பேரணியின் ஏற்பாட்டாளர்களான 15 அரசு சார்பற்ற அமைப்புகள் சார்ந்த துருன் என்ற கெராக்கான் துருன் கோஸ் கசாரா ஹிடுப் அமைப்பு இம்முடிவை…

ஆறு மாநிலங்களில் வெள்ளம் இங்கே, அங்கே அமெரிக்க அதிபருடன் கோல்ப்…

  கிறிஸ்துமஸுக்கு முன்தினம் பிரதமர் நஜிப் ரசாக் ஹவாயில் அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் கோல்ப் விளையாடினார். பிரதமர் நஜிப் தற்போது ஹாவாயில் விடுமுறையைக் கழிக்கிறார் என்று வெள்ளைமாளிகையை மேற்கோள் காட்டி த வாஷிங்டன் போஸ்ட் நேற்று செய்தி வெளியிட்டது. பிரதமர் நஜிப்பின் அதிகாரப்பூர்வமான ஜெட் விமானம், பதிவு எண்…

வெள்ளம் ஹுடுட்டைக் கொண்டுவரும் முயற்சியை பாஸ் தொடர வேண்டும் என்பதற்கு…

பாஸ்  ஹுடுட் திட்டத்தைக்  கைவிடாமல்  தொடர  வேண்டும்  என்று  இறைவன்  செய்தி  அனுப்பிவைத்த  செய்திதான்  நாட்டில்  ஏற்பட்டுள்ள  மிக  மோசமான வெள்ளப்  பெருக்காம்.   பாஸ்  பாசிர்  மாஸ் எம்பி,  நிக்  அடோ  நிக்  அப்துல்  அசீஸ்  கூறியுள்ளார். “வெள்ளப்  பெருக்கு, இறைவனின் கோபத்துக்கு  ஆளாகாதீர்கள்,  அவனிடம்  திரும்பிச்  செல்லுங்கள் …

முகைதின்: நான் கவனித்துக் கொள்வேன், கவலை விடுக

நாட்டில்  வெள்ள  நெருக்கடி  ஏற்பட்டுள்ள  வேளையில் பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  ஆண்டு-இறுதி விடுப்பில்  வெளிநாடு  சென்றிருக்காரே  என்ற  கவலை  வேண்டாம்,  நெருக்கடியைத்  தம்மால்  சமாளிக்க  முடியும் “நம்புங்கள்”  என்கிறார்  துணைப்  பிரதமர்  முகைதின் யாசின். இன்று  சுபாங்  ஜெயாவில்,  Full Gospel Tebernacle தேவாலயத்தில்  கிறிஸ்மஸ்  வாழ்த்துத் …

போலீஸ்: தேவாலயம் தாக்கப்பட்ட செய்தி பொய்யானது

கோலாலும்பூரில், ஜாலான் ராஜா  லாவுட்-இல் ஒரு தேவாலயம்   தாக்கப்பட்டதாக ஒரு  பொய்யான  செய்தி   முகநூலில் வலம்  வந்து கொண்டிருப்பதாக  போலீஸ் கூறியது. அச்செய்தியைப்  பரப்பியவர்மீது  போலீஸ்  நடவடிக்கை  எடுக்கும்  என   போலீஸ்  படைத்  தலைவர்  காலிட்  அபு  பக்கார்  கூறினார். “அது  உண்மை அல்ல. அம்முகநூல்  உரிமையாளர்மீது  நடவடிக்கை …

எம்பி-இன் புகார்மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்: எம்ஏசிசி விளக்கம்

மலேசிய  ஊழல்தடுப்பு  ஆணையம்(எம்ஏசிசி), சரவாக்கில்  ரிம119 மில்லியன் மதிப்புள்ள  சாலை  அமைக்கும்  குத்தகை  வழங்கப்பட்டதில்  ஊழல்  நிகழ்ந்திருப்பதாக   டிஏபி  எம்பி  சோங்  சியாங்  ஜென்  கூறுவதை  வைத்து  நடவடிக்கை  எடுக்க  இயலாது  என  நேற்று  தெரிவித்தது. பண்டார்  கூச்சிங்  எம்பியான  சோங்  வழங்கிய  தகவல்  நடவடிக்கை  எடுப்பதற்குப்  போதுமானதல்ல …

வெள்ள உதவிக்கு ரிம50 மில்லியனை அமைச்சு ஒதுக்கியது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட  மாநிலங்களில்  துயர்துடைப்புப்  பணிகளுக்காக  ரிம50 மில்லியனை  ஒதுக்கியிருப்பதாக  நிதி  அமைச்சர்  ஹுஸ்னி  ஹனாட்ஸ்லா  அறிவித்துள்ளார். பெர்னாமா  செய்தியின்படி, கிளந்தான், திரெங்கானு, பகாங், பேராக், பெர்லிஸ்  ஆகிய  மாநிலங்களில்  90,250 பேர் வெள்ளத்தால்  பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.   வெள்ள  உதவி  நிதி  மாநில  மேம்பாட்டு அலுவலகங்களிடம்  கொடுக்கப்படும்  என …

பாஸ், வெள்ள நிவாரணப் பணிகளுக்கு சிலாங்கூர் மற்றும் பினாங்கிடம் உதவி…

ஹுடுட்  தொடர்பான  கருத்துவேறுபாடுகள்  இருந்தாலும்,  பாஸ்,  கிளந்தானில்  வெள்ளத் துயர்துடைப்புப்  பணிகளுக்கு  பினாங்கிலும்  சிலாங்கூரிலுமுள்ள  பக்கத்தான்  பங்காளிகளிடம்  உதவி  கேட்டுள்ளது. “சிலாங்கூர்  மந்திரி புசார்  அஸ்மின்  அலியைத்  தொடர்புகொண்டு  ஒற்றுமையின்  அடையாளமாக  உதவி  அளிக்குமாறு  கேட்டேன். “சிலாங்கூர்  அரசும்  ஒத்துக்கொண்டது. எப்படிப்பட்ட  உதவி என்பது  அடுத்த  சில நாள்களில்…

பாஸ் கவனம் செலுத்த வேண்டியது வெள்ளத்தில்; ஹுடுட்டில் அல்ல

கிளந்தானின்  பாஸ் அரசு,   ஹுடுட்  சட்டம் கொண்டுவருவதற்காக  அவசர  சட்டமன்றக்  கூட்டத்தைக்  கூட்டுவதில்  கவனம்  செலுத்துவதை விடுத்து  அம்மாநிலத்தில்  மோசமடைந்து  வரும்  வெள்ளத்தின்மீது  கவனம்  செலுத்துவது  நல்லது  என  டிஏபி  இளைஞர்  பகுதி  அறிவுறுத்தியுள்ளது. “கிளந்தானையும்  கிழக்குக் கரை  மாநிலங்களையும்  இயற்கைப்  பேரிடர்  தாக்கியுள்ள  வேளையில் கிளந்தான்  துணை …

கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்

செம்பருத்தி.கோம் அதன் வாசகர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும், மலேசிய மக்கள் அனைவருக்கும் அதன் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறது Semparuthi.com wishes All its Readers, Supporters and All the Malaysians Merry X'mas

மேரி அடையாள அட்டையைப் பெற்றார்

  நான்கு பிள்ளைகளுடன் பத்து காஜாவில்   தனித்து வாழும் தாய்மாரான மேரிக்கு மலேசியா நாம் தமிழர் இயக்கம் அடையாள அட்டையை  பெற்றுக்கொடுத்தது என்று  மலேசியா நாம் தமிழர் இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் மு.அ. கலைமுகிலன்  தெரிவித்தார் .   பிறப்பு பத்திரம் இருந்தும் 12 வயதில் அடையாள அட்டையை…

கட்சியின் தலைமைச் செயலாளருக்கு எதிராக மஇகா தலைவர்கள் போலீஸ் புகார்

கடந்த வாரம் மஇகா தலைமையகத்தில் நிகழ்ந்த குழப்பத்திற்கு காரணமானவர்கள் என்று மஇகா உறுப்பினர்களுக்கு எதிராக மஇகாவின் தலைமைச் செயலாளர் எ. பிரகாஷ் ராவ் போலீஸ் புகார் ஒன்று செய்திருந்தார். அப்புகாருக்கு எதிராக சில மஇகா தலைவர்கள் இன்று ஒரு போலீஸ் புகார் செய்தனர். பிரகாஷ் சில மஇகா தலைவர்களுக்கு…

ஹுடுட் விளக்கக் கூட்டத்துக்கு பிகேஆரும் டிஏபி-யும் செல்ல மாட்டா

ஞாயிற்றுக்கிழமை, கிளந்தானில்  ஹுடுட்  சட்டம்  கொண்டுவருவது  பற்றி மாநில  அரசு  பாஸ்  தலைவர்களுக்கு   விளக்கமளிக்கும்  கூட்டத்தில்  பிகேஆரும்  டிஏபியும் கலந்துகொள்ள  மாட்டா. மலேசியாகினி  டோனி  புவாவைத்  தொடர்புகொண்டு  வினவியதற்கு, “அதில்  கலந்துகொள்ள  ஆர்வமில்லை; அது  எங்கள்  திட்டத்தில்  இல்லாத  ஒன்று. நாங்கள்  ஏன்  அதில்  கலந்துகொள்ள  வேண்டும்?”, என்று…

ஹுடுட் சட்டத் திருத்தம் பக்கத்தானுக்கு எதிரானதல்ல

ஹுடுட்  சட்டத்தில்  திருத்தம்  கொண்டுவர  கிளந்தான்  அரசு  பரிந்துரைத்திருப்பது பக்கத்தான்  ரக்யாட்டில்  செய்துகொள்ளப்பட்ட  உடன்பாடுகளுக்கு  எதிரானது  அல்ல  என்று  பாஸ்  தலைமைச்  செயலாளர்  முஸ்தபா  அலி  கூறினார். “கொள்கை  அளவில், இவ்விவகாரம் (ஹுடுட்மீது கருத்துவேறுபாடு  நிலவும் என்பது) ஒப்புக்கொள்ளப்பட்டதுதான்”, என்றாரவர். “சிறப்புச்  சட்டமன்றக்  கூட்டம்  பற்றி  கிளந்தான்  டிசம்பர் …

பக்கத்தானில் விரிசல் விரிவடைகிறது: கூட்டங்களைப் புறக்கணிக்க நினைக்கிறார் கிட் சியாங்

பக்கத்தான்  ரக்யாட்டில்  நாளுக்கு  நாள் நிலைமை  மோசமடைந்து  வருகிறது.  டிஏபி  பெருந்  தலைவர்  லிம்  கிட்  சியாங் அக்கூட்டணியின் தலைவர்  மன்றக்  கூட்டங்களுக்குச்  செல்ல  வேண்டாம்  என்றுகூட  நினைக்கத்  தொடங்கி  விட்டார். “பாஸின்  மத்திய  செயல்குழுவுக்குக்குக்கூட  தெரியாமல்  ஹுடுட்டைக்  கொண்டுவர  கிளந்தானில்  சிறப்புச்   சட்டமன்றக்  கூட்டம்  கூட்டப்படுகிறது  என்றால் …

மலேசியர்களுக்கு வளமான வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுத்தவர் மகாதிர்

முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  கூறும்  கருத்துகளை  நன்மைக்காகத்தான்  என்று  நினைக்க  வேண்டுமே  தவிர  கிண்டல்  செய்யக்கூடாது  என  மலாய்  வணிகர், தொழில்முனைவர்  சங்கம் (பெர்டாசாமா)  கூறுகிறது. முன்னாள்  பிரதமரின்  முயற்சிகள்  எல்லா  மலேசியர்களுக்கும்  வசதியான  வாழ்க்கையை  ஏற்படுத்திக்  கொடுத்திருக்கிறது  என அதன்  தலைவர்  முகம்மட்  இஸாட் அமிர் …

வெள்ளத்தால் ஹுடுட்மீதான சட்டமன்றக் கூட்டம் தடைப்படாது

கிளந்தானில் கடுமையான  வெள்ளப் பெருக்கு  ஏற்பட்டிருந்தாலும்  ஹுடுட் மீதான  சட்டமன்றக்  கூட்டம்  திட்டமிட்டபடி டிசம்பர்  29-இல்  நடக்கும்  என  மந்திரி  புசார்  அஹ்மட்  யாக்கூப்  கூறினார். “வெள்ளம் திடீரென  ஏற்பட்டது. சட்டமன்றக்  கூட்டம் மாநில நிர்வாகத்தின் ஒரு  பகுதி. “வெள்ளம்தான். ஆனாலும், வேலை  இருக்கிறது”, என்றவர்  கூறியதாக  சின்…

வெள்ள நிலை மோசமடைகிறது, கிட்டத்தட்ட 60,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்

வெள்ள  நிலவரம்  மோசமடைந்துள்ளது. இன்று  காலை  ஆறு  மாநிலங்களில்  58,705 பேர்  துயர்துடைப்பு  மையங்களுக்கு  அனுப்பப்பட்டுள்ளனர். கிளந்தானில்தான்  அதிகமானோர்  பாதிக்கப்பட்டுள்ளனர். 24,765 பேர். அதற்கு அடுத்து  திரெங்கானு (21,606), பகாங் (10,825), பேராக் (1,030), சாபா (336), பெர்லிஸ் (143). கிளந்தானில் வெள்ளத்தால்  பாதிக்கப்பட்டோர்  எண்ணிக்கை  நேற்றிரவு  3,164-இலிருந்து …

மஇகா: இஸ்மா மதவெறியர்கள் தலிபான் போன்றவர்கள்

என்ஜிஓ-வான  ஈக்காத்தான் முஸ்லிமின்  மலேசியா(இஸ்மா) முஸ்லிம்கள்  கிறிஸ்துவர்களுக்கு கிறிஸ்மஸ்  வாழ்த்துச்  சொல்லக்கூடாது  என்று  கூறி  பயங்கரவாத  அமைப்பான  தலிபான்கள்போல்  நடந்துகொள்வதாக  மஇகா கடிந்து  கொண்டிருக்கிறது. “இஸ்மா தலிபான்-பாணியில்  சகியாமையையும்  மதவெறியையும் போதனை  செய்து  வருகிறது. எந்த மிதவாத  சமுதாயத்துக்கும்  இவை  விஷம்  போன்றவை.  இவற்றைப்  பொறுத்துக்கொள்ள  இயலாது. “அவர்கள் …

அமர்: புத்ரா ஜெயாவைக் கைப்பற்றுவதைவிட ஹுடுட்தான் முக்கியம்

புத்ரா  ஜெயாவைக்  கைப்பற்றுவது  இரண்டாம் பட்சம்தான்,  இஸ்லாமிய  குற்றவியல்  சட்டமான  ஹுடுட்டை  நடைமுறைப்படுத்துவதுதான் பாஸ்  கட்சியின்  முதன்மையான  நோக்கமாகும்  என்று  கிளந்தான்  துணை  மந்திரி  புசார்  முகம்மட்  அமர் நிக்  அப்துல்லா  கூறினார். அதற்காக டிஏபி-யும்  பிகேஆர்-ரும்  பக்கத்தான் ரக்யாட்டிலிருந்து  பாஸை  வெளியேற்றினால்கூட  கவலையில்லை, இஸ்லாமியக்  கட்சியின் நோக்கம் …