மசீச: ஹுடுட் சமய ஒதுக்கல் கொள்கைக்கு இட்டுச் செல்லலாம்

கிளந்தானில்  ஹுடுட்  அமலாக்கப்படுவது  1960-களில்  தென்னாப்ரிக்காவில்  நிலவிய  இன ஒதுக்கல் கொள்கை  போன்ற ஒன்றை  உருவாக்கி விடலாம்  என  அம்மாநில  கிளந்தான்  அச்சம்  தெரிவித்துள்ளது. “ஹுடுட்  செயல்படுத்தப்படுவது  வெவ்வேறு  மக்களுக்கு  வெவ்வேறு  சட்டங்கள்  என  முஸ்லிம்களையும்  முஸ்லிம்- அல்லாதாரையும்  மேலும்  பிரித்து வைக்கும். “இதை 1960-களில்  தென்னாப்ரிக்காவில் நிலவிய …

போலீஸ்: கிறிஸ்மஸ் தாக்குதல் வெறும் வதந்தி

கிறிஸ்மஸ் காலத்தில் பயங்கரவாதிகள் மலேசியாவில்  தாக்குதல்  நடத்தத்  திட்டமிட்டிருப்பதாகக்  கூறும்  வதந்தியை  நம்ப  வேண்டாம்  என  போலீஸ்  கூறியது. வாட்ஸெப் சமூக  வலைத்தளத்தில்  அப்படி  ஒரு  வதந்தி  உலா  வருவதாக  இன்ஸ்பெக்டர் ஜெனரல்  அப்  போலீஸ்  செயலக (நிறுவனத்  தொடர்பு) உதவித்  தலைவர்  அஸ்மாவதி  அஹ்மட்  கூறினார். “விரும்பத்தகாத …

அமைச்சர்: எப்ஜிவி பங்கு விலை குறைந்ததற்கு பெல்டா காரணமல்ல

பெல்டா  குளோபல்  வெண்ட்சர்ஸ்   ஹொல்டிங்ஸ்(எப்ஜிவி)-இன்  பங்கு  விலை  குறைந்ததற்கு அந்நிறுவனத்தைக்   குறை  சொல்வது  சரியல்ல  எனப்  பிரதமர்  துறை  துணை  அமைச்சர்  ரசாலி  இப்ராகிம்  கூறினார். பெட்டாலிங்  ஜெயா உத்தாரா  எம்பி  டோனி  புவா  உள்பட  பலரும் பெல்டா  நிர்வாகமே  அதற்குக்  காரணம்  என்று  கருத்துத்  தெரிவித்திருப்பதை  அடுத்து …

ஹுடுட் திட்டம் பற்றி பக்கத்தானுக்கு விளக்க வேண்டும்

1993  ஷியாரியா  குற்றவியல்  சட்டத்தில்  கிளந்தான் மாநில  அரசு  என்ன  திருத்தம்  செய்யப்போகிறது  என்பதை  அறியோம்  என  பக்கத்தான்  ரக்யாட், பாஸ்  உள்பட,  கூறிக்கொண்டிருக்கிறது. எனவே, அது  பற்றி  ஒரு  விளக்கக்  கூட்டம் நடத்துவது  நல்லது  என  பாஸ்  தகவல்  தலைவர்  மாபுஸ்  ஒமார்  கூறினார். “ஏற்கனவே  நடைமுறையில் …

ஹுடுட் பக்கத்தான் கொள்கை அல்ல: அஸ்மின் வலியுறுத்து

ஹுடுட்  பக்கத்தான்  ரக்யாடின்  பொதுவான  கொள்கை  அல்ல  என்பதால் அதைச்  செயல்படுத்துவதற்குமுன் பாஸ்  அவ்விவகாரத்தை  பக்கத்தான் தலைவர்  மன்றத்துக்கு  விவாதிப்பதற்குக்  கொண்டு  வருவதுதான்  முறையாகும்  என்கிறார்  சிலாங்கூர்  மந்திரி  புசார்  அஸ்மின்  அலி. இது  பொருளாதார  நெருக்கடி  நிலவும்  காலம்  என்பதால்  பக்கத்தான்  ”ஷியாரியாவின்  உயர்  இலக்குகளை”  அடைவதற்கு …

1எம்டிபி: எங்களின் பணம் மக்களின் வரிப்பணம் அல்ல

தன்  நிதி  நிலவரத்தைத்  தற்காக்கும்  முயற்சியில்  குதித்துள்ள  நிதி  அமைச்சுக்குச்  சொந்தமான  1மலேசியா  மேம்பாட்டு  நிறுவனம்(1எம்டிபி), தனது  பல-பில்லியன் மதிப்புள்ள  முதலீட்டில்  ரிம1 மில்லியன்  மட்டுமே  அரசாங்கம்  வழங்கிய  தொகையாகும்  என்று  கூறியது. பிரதமர்  நஜிப் அப்துல்  ரசாக்கைத்  தலைவராகக்  கொண்ட  அந்நிறுவனம்  கடன்  தொல்லைகளில்  சிக்கிக்  கொண்டிருப்பதால்  …

அமைச்சரின் வாழ்த்தும் வசவும்

கிறிஸ்மஸ்  பண்டிகையின்போது  முஸ்லிம்கள்  கிறிஸ்வர்களுக்கு  வாழ்த்துச்  சொல்லக்  கூடாது  என்று  கூறியுள்ள  ஈக்காத்தான்  முஸ்லிமின்  மலேசியா(இஸ்மா)வை  வீடமைப்பு, ஊராட்சி, நகர்ப்புற  நல்வாழ்வு  அமைச்சர்  அப்துல் ரஹ்மான்  டஹ்லான்  கடுமையாக  சாடியுள்ளார். இன்று காலை,  டிவிட்டரில்  கிறிஸ்துவர்களை  வாழ்த்திய  அந்த  கோட்டா  பெலுட்  எம்பி, இஸ்மாவை  வசை  பாடினார். “கிறிஸ்துவர்களுக்கு …

சுப்ரா: மஇகாவில் பிரச்னைகள் இல்லை என்று தொடர்ந்து மறுத்துக் கொண்டிருக்க…

மஇகாவில்  பிரச்னைகளே  இல்லை  என்று  தொடர்ந்து  மறுத்துக்  கொண்டிருப்பதில்  அர்த்தமில்லை. பிரச்னைகளுக்கு  இயன்ற  விரைவில்  தீர்வு  காண்பதே  அறிவுடைமையாகும்  என  கட்சித்  துணைத்  தலைவர்  டாக்டர்  எஸ்.சுப்ரமணியம்  கூறினார். “இனியும்  மறுத்துக்  கொண்டிருக்க  முடியாது.   பிரச்னைகள்  இல்லை  என்றால் மக்கள்  எதற்காக  சங்கப்  பதிவதிகாரியிடம் (ஆர்ஓஎஸ்)  செல்ல  வேண்டும்?…

பெர்காசாமீது நடவடிக்கை எடுக்காத ஜாஹிட்டுக்குக் கண்டனம்

பேராக்  டிஏபி  தலைமையகத்தில்  தொங்க  விடப்பட்டிருந்த கிறிஸ்மஸ்,  புத்தாண்டு  வாழ்த்துப்  பதாதையைக்  கிழித்த  பெர்காசா உறுப்பினர்களுக்கு  எதிராக  நடவடிக்கை  எடுக்காமல் உள்துறை  அமைச்சர்  அஹமட்  ஜாஹிட்  ஹமிடி  நொண்டிச்  சாக்கு  சொல்லிக்  கொண்டிருப்பதாகக்  குறைகூறப்பட்டிருக்கிறார். தம்  கைகள்  கட்டப்பட்டுக்  கிடப்பதாகவும்  பேராக்  டிஏபி  அல்லது  சம்பந்தப்பட்ட  வேறு  யாராவது …

ஜி25 குழுவினரின் கடிதத்தை ஏற்பீர்: பிரதமருக்கு வலியுறுத்து

தீவிரவாதத்தை  எதிர்த்து  மிதவாதத்துக்கு  ஆதரவாக   சான்றோர்  25 பேர் (ஜி 25)  எழுதிய திறந்த மடலை  ஏற்பதன்வழி  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  அதற்கு  ஒரு  அங்கீகாரத்தை  வழங்க  வேண்டும்  என டிஏபி  பெருந்  தலைவர்  லிம்  கிட்  சியாங்  கேட்டுக்கொண்டிருக்கிறார். அதை  ஏற்பது  மலேசிய  அரசாங்கம்  மிதவாதத்தை …

எம்ஏஎஸ்-ஸின் இழப்புகளுக்கு பணியாளர்கள் காரணமல்ல

மலேசிய  விமான  நிறுவனமும்(எம்ஏஎஸ்)  அதன்  உரிமையாளரான கஜானா  நேசனல்  பெர்ஹாட்டும் அவ்விமான  நிறுவனத்துக்கு ஏற்பட்ட  இழப்புகளுக்குப்  பணியாளர்கள்மீது  பழி போடக்கூடாது  என  மலேசிய  விமானப்  பணியாளர்  சங்கம் (நுபாம்)  கூறியுள்ளது. இழப்புகளுக்கு  நிர்வாகக்  கோளாறுதான் காரணம்  என்பதை  கஜானா ஒப்புக்கொள்ள  வேண்டும்  என்று  அது  கூறிற்று. “ரிம12 பில்லியன் …

இஸ்மா: மரினா ஹுடுட்-டுக்கு பயப்படுவானேன்?

ஹுடுட்  சட்டம்  எல்லா  மக்களையும், முஸ்லிம்-அல்லாதார் உள்பட,  பாதுகாக்கிறது , அப்படியிருக்க  மரினா  மகாதிர்  ஏன் அதைக்  கண்டு  பயப்பட  வேண்டும்  என்று ஈக்காத்தான்  முஸ்லிமின்  மலேசியாவின்  மகளிர்  பகுதி   (வனிதா  இஸ்மா)  வினவுகிறது. ஹுடுட்  சட்டம்  குற்றவாளிகள்மீது  மட்டும்தான்  அமல்படுத்தப்படும்  என  வனிதா  இஸ்மா  தலைவர் நோர்சலேகா  முகம்மட் …

நஸ்ரி: டாக்டர் மகாதிரின் குறைகூறல் ‘ஆக்கப்பூர்வமான அறிவுரை’

டாக்டர்  மகாதிர் முகம்மட்  பிரதமர் நஜிப்  அப்துல்  ரசாக்கைக் குறைகூறுவதை  “ஆக்கப்பூர்வமான  அறிவுரையாக”த்தான்  எடுத்துக்  கொள்ள  வேண்டும்  என்கிறார்  பண்பாட்டு, சுற்றுலா  அமைச்சர்  நஸ்ரி அசீஸ். மகாதிர்  நீண்ட காலம்  பிரதமராக  இருந்தவர். நாட்டு நடப்புகளில்  அக்கறை  கொண்டவர்  என்றாரவர். “அக்கறை  இருப்பதால்தான்  அவர்  குறைகூறுகிறார். பிடிக்கவில்லை  என்பதால்தான் …

பாஸ்: ஹுடுட்டை கொண்டுவர அம்னோவின் துணை தேவை

பாஸ்  கட்சி,  ஹுடுட்டைக்  கொண்டுவர  அதன்  ஜன்ம  வைரியான  அம்னோவின்  உதவி  கண்டிப்பாக  தேவை  என்கிறது. அம்னோவின்  உதவியின்றி  கிளந்தானில்  ஹுடுட்  சட்டம்  கொண்டுவருவது  இயலாத  ஒன்று என கிளந்தான்  துணை  மந்திரி  புசார்  முகம்மட்  அமார்  நிக்  அப்துல்லா  கூறினார். ஹுடுட் விசயத்தில்  தன்  தோழமைக்  கட்சிகளான …

பிஎன் பிரதிநிதிதான் பொதுக்கணக்கு குழுவின் தலைவராக இருக்க வேண்டும், சிலாங்கூர்…

  நாடாளுமன்ற ஜனநாய நடைமுறையில் பொதுக்கணக்கு குழு (பிஎசி) அரசாங்க வரவு செலவு கணக்குகளையும் நிருவாகத்தையும் ஆய்வு செய்வதற்கான அதிகாரமும் பொறுப்பும் கொண்ட ஒரு மிக முக்கியமான குழுவாகும். சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தின் எதிரணியைச் சேர்ந்த பாரிசான் கூட்டணியின் உறுப்பினர் ஒருவர் பிஎசி குழுவின் தலைவராக இருக்க வேண்டும்…

பழனிவேல்: மஇகா தலைமையகத்தில் திரண்டிருந்தவர்களில் பெரும்பாலோர் என் ஆதரவாளர்கள்

கடந்த  வியாழக்கிழமை  மஇகா  தலைமையகத்தில்  திரண்டிருந்தவர்களில் “ஆயிரத்துக்கும்  மேற்பட்டோர்” தமக்கு  ஆதரவு  தெரிவிக்க  வந்தவர்கள்  என்கிறார்  மஇகா  தலைவர்  ஜி.பழனிவேல். அன்று அங்கு  பல  இடங்களிலும்  அவரைப்  பதவி  விலகச்  சொல்லும்  பதாதைகளைத்தான்  பார்க்க  முடிந்தது.  நூற்றுக்கணக்கானவரின் ‘பதவி விலகு’ முழக்கத்தைத்தான்  கேட்க  முடிந்தது. ஆனால், பழனிவேல்,  கட்சி …

அம்னோ இளைஞர் தலைவர்மீது வழக்கு தொடுக்கப் போவதாக மிரட்டுகிறார் கைருடின்

பத்து  கவான்  அம்னோ  தொகுதி  துணைத்  தலைவர்  கைருடின்  அபு  ஹசன், பினாங்கு  அம்னோ  தலைவர்  ரபிஸால்  அப்துல்  ரகிம்மீது  வழக்கு  தொடுக்கப்போவதாக  எச்சரித்துள்ளார். பினாங்கு  அம்னோவைக்  குறை  சொன்னதிலிருந்து  முன்னவருக்கும்  அம்னோவுக்குமிடையில்  விரிசல்  விரிவடைந்து  வருகிறது. பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  உருவாக்கிய  1மலேசியா  மேம்பாட்டு  நிறுவன(1எம்டிபி)த்துக்கு …

‘பெர்காசா உறுப்பினர் கிறிஸ்மஸ் பதாதையைக் கிழித்தது தவறு’

பெர்காசா  பேராக்  டிஏபி  தலைமையகத்துக்கு  வெளியில்  ஆர்ப்பாட்டம்  நடத்தியபோது   ஆர்ப்பாட்டக்காரர்களில்  ஒருவர்  அங்கு  தொங்க  விடப்பட்டிருந்த  கிறிஸ்மஸ், புத்தாண்டு  வாழ்த்து  பதாதை   ஒன்றைக்  கிழித்தெறிந்ததை  உள்துறை  அமைச்சர்  அஹ்மட்  ஜாஹிட்  ஹமிடி  கண்டித்தார். “மற்றவர்களின்  சமய நம்பிக்கையை  மதிக்க  வேண்டும். நம்  சமயம்  மதிக்கப்பட  வேண்டும்  என்று  விரும்பும் …

நாங்கள் குண்டர்கள் அல்லர்: பழனிவேலுக்கு மஇகா உறுப்பினர்கள் அறிவுறுத்து

மஇகா இளைஞர்  பகுதி  முன்னாள்  தலைவர்  டி.மோகன்,  டிசம்பர்  18-இல்  கட்சித் தலைமையகத்துக்கு  வெளியில்  கூடி  நின்றவர்களைக் குண்டர்கள்  என்று  கட்சித்  தலைவர்  ஜி.பழனிவேல்  கூறியிருப்பதை  மறுக்கிறார். பழனிவேலின்  கூற்று பொறுப்பற்றது  என்றுரைத்த  மோகன்,  அங்கு  கூடியவர்கள்  அனைவருமே  கட்சி  உறுப்பினர்கள்  என்றார். அவர்கள்  மஇகா கிளைகளையும்  இளைஞர், …

1946-இல் அம்னோ நடத்திய ஆர்ப்பாட்டங்களை என்னவென்பது?

ஆர்ப்பாட்டம்  செய்ததற்காக  யுனிவர்சிடி  மலாயா  மாணவர் தலைவர்களை(யுஎம்8) முன்னாள்  பிரதமர்  டாக்டர் மகாதிர்  முகம்மட்   குறைகூறக்கூடாது,   ஏனென்றால்  கடந்த  காலங்களில்  அம்னோவும்  ஆர்ப்பாட்டங்களில்  ஈடுபட்டது  உண்டு. குர்ஆன்  மாணவர்களை  ஆர்ப்பாட்டம்  செய்யச் சொல்லவில்லை  என  மகாதிர்  நேற்று  கினிடிவி-இல்  கூறியிருந்ததற்கு  எதிர்வினையாக   யுனிவர்சிடி  மலாயா   மாணவர்  சங்க  முன்னாள் …

மகாதிர்: சான்றோர் 25 பேரின் கடிதத்தை நான் இன்னும் படிக்கவில்லை

முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்,  ‘மலாய்  சான்றோர் 25  பேர்’ எழுதிய  கடிதத்தைத்  தாம் இன்னும்  படிக்கவில்லை  என  இன்று  கூறினார். “அதை  நான்  படிக்கவில்லை. அது  செய்தித்தாள்களில்  இல்லை. “அவர்களுக்குப்  பின்னணியில்  இருப்பது  யார்  என்பதும்  தெரியாது”, என்றவர்  செய்தியாளர்களிடம்  தெரிவித்தார். சில தரப்புகள்  அவர்தான் …

பிகேஆர்: ஹுடுட் பற்றி பேசுவதை பாஸ் தடுக்கக் கூடாது

பாஸ்  தலைவர்கள்,  அக்கட்சி ஹுடுட்  சட்டம்  கொண்டு வருவது  பற்றிக்  கேள்வி  கேட்கும்  முஸ்லிம்களின்  சமய  நம்பிக்கையைக்  கேள்விக்குரியதாக்குவதை முதலில்  நிறுத்த  வேண்டும்  எனக்  கூறும்  பிகேஆர்  அப்படிக்  கேள்வி  எழுப்புவதை  ஷியாரியா  தடுக்கவில்லை  என்கிறது. “பாஸ்  கட்சி ஹுடுட்  கொண்டுவருவது  பற்றி  முஸ்லிம்கள்  கேள்வி  கேட்டாலோ  சந்தேகம் …

முன்னாள் டிஎன்பி தலைவர் அனி அரோப் காலமானார்

அனி அரோப்,82, இன்று  காலை  மணி  5.20க்குக்  காலமானார். டிஎன்பி  முன்னாள்  தலைவரான  அனி,  இரண்டாண்டுக்  காலமாக  புரோஸ்டேட்  புற்று  நோய்க்காக  சிகிச்சை  பெற்று  வந்தார். அவரது  உடல்  ஜாலான்  பங்சார், டிஎன்பி  பாலாய்  இஸ்லாமில்  பொதுமக்கள்  இறுதி  மரியாதை  செய்வதற்காக  வைக்கப்பட்டு  பிற்பகல் ஒரு மணிக்குப்  பிறகு …