வீட்டுவசதி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர், எரிபொருள் மானியங்கள், பள்ளி பராமரிப்பு, சுகாதார வசதிகள், செயற்கை நுண்ணறிவு (AI) பயிற்சி, மின்னணு விலைப்பட்டியல் (e-invoicing), மற்றும் சிறிய வியாபாரிகள் மற்றும் சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கான (SMEs) உதவிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் மூலம் மக்களுக்கு நேரடியாகப் பயனளிப்பதாகக் கூறுகிறார். வீடமைப்பு…
கட்சியில் கிளர்ச்சி செய்பவர்கள் மூழ்கி மறைந்து போவார்கள்: ஹாடி எச்சரிக்கை
புதிய கட்சி அல்லது அமைப்பில் புகலிடம் தேடிச் செல்லும் பாஸ் தலைவர்களும் உறுப்பினர்களும் “மூழ்கி மறைந்தொழிவார்கள்” எனக் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங் எச்சரித்துள்ளார். பாஸ் உறுப்பினர்களுக்கான ஒரு திறந்த மடலில் அவர் இந்த எச்சரிக்கையை விடுத்திருந்தார். “பாஸின் வரலாறு தெரிந்தவர்களுக்கு அடைக்கலம் நாடிச் சென்ற தலைவர்கள்,…
முஸ்லிம்-அல்லாத மாணவர்களை ஒளிந்துகொண்டு நீர் அருந்தச் சொல்வது அபத்தம்
கெடாவில் ஆசிரியர் ஒருவர் முஸ்லிம்- அல்லாத மாணவர்களிடம் ‘ஜோக்’அடித்ததாகச் சொல்லப்படுவதும் வகுப்பறையில் தண்ணீர் அருந்தக்கூடாது என்று பணித்ததும் பொருத்தமற்றவை என தேசிய ஆசிரியர் பணியாளர் சங்க(என்யுடிபி)த் தலைவர் ஹஷிம் அட்னான் கூறினார். ஆசிரியர்கள் அவை அறிந்து நகைச்சுவையாக பேச வேண்டும். முஸ்லிம்- அல்லாத மாணவர்கள் நோன்பிருக்கவில்லை என்பதால் எங்கும் …
பிஏசி 1எம்டிபி தலைவர்களிடம் WSJ செய்தி பற்றி விசாரிக்கும்
பொதுக் கணக்குக் குழு(பிஏசி) அதனிடம் வாக்குமூலம் அளிக்க வரும் 1எம்டிபி நிர்வாகிகளிடம் கடந்த வாரம் வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் வெளிவந்த செய்தி பற்றியும் விசாரிக்கும். ஆனால், அதன் தொடர்பில் சாட்சியமளிக்க இப்போதைக்கு யாயாசான் ரக்யாட் 1மலேசியா அதிகாரிகள் உள்பட புதிய சாட்சிகளை அக்குழு அழைக்காது. இப்போதைக்கு பிஏசி, 1எம்டிபி-இன் …
உங்கள் கருத்து: ‘எவ்வளவு மட்டமான புத்தி. அதுதான் கல்விமுறையே குப்பை…
குற்றவாளி எனத் தெரிந்தால் ஆசிரியர் முழுமையாக தண்டிக்கப்பட வேண்டும் ‘சிறுநீரைக் குடிக்குமாறு முஸ்லிம்-அல்லாத மாணவர்களிடம் கூறினார் ஆசிரியர்’ ரேட்: கல்வி துணை அமைச்சர் பி.கமலநாதன் அவர்களே, ஒரு தடவையாவது சொன்னபடி செய்வீர்களா? மேற்காணும் வார்த்தைகளை ஆசிரியர் சொல்லியது உண்மைதான் என்பது நிரூபணமானால் அவரது …
‘சிறுநீரைக் குடியுங்கள்’ என்று ஆசிரியர் ‘ஜோக்’ அடித்தாராம்: எக்ஸ்கோ, போலீஸ்…
கெடா ஆட்சிக்குழு உறுப்பினர் ஒருவரும் போலீசாரும், மாணவர்களிடம் ‘சிறுநீரைக் குடியுங்கள்’ என்று கூறிய ஆசிரியரைத் தற்காத்துப் பேசியுள்ளனர். அவர் வேடிக்கையாகச் சொன்னதை மாணவர்கள் விபரீதமாகக் கருதி விட்டனராம். அந்த ஆசிரியர் முஸ்லிம் மாணவர்களிடம் நோன்பிருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி முஸ்லிம்- அல்லாத மாணவர்களிடம் முஸ்லிம் மாணவர்களின் முன்னிலையில் தண்ணீர் …
‘1எம்டிபி பணம் காணாமல் போகவில்லை; WSJ செய்தியே சான்று’-நஸ்ரி
அமைச்சர் ஒருவர் 1எம்டிபி பணம் 13வது பொதுத் தேர்தல் பரப்புரைக்குப் பயன்படுத்திக் கொள்ளப்பட்டதாகக் கூறும் வால்ஸ்ட்ரிட் ஜர்னல்(WSJ) செய்தியை “நல்ல” செய்தியாகப் பார்க்கிறார். அச்செய்தியின்படி பார்த்தால், அந்த நிறுவனத்தின் பணம் காணாமல் போகவில்லை; மக்களுக்குத்தான் பயன்பட்டிருக்கிறது என்றாகிறது எனச் சுற்றுலா, பண்பாட்டு அமைச்சர் நஸ்ரி அப்துல் அசீஸ் கூறினார்.…
மந்திரி புசார் அஸ்மின் அலி சுல்தானைச் சந்தித்துப் பேசினார்
சிலாங்கூர் மந்திரி புசார் அஸ்மின் அலி, இன்று சிலாங்கூர் சுல்தானைச் சந்தித்திருக்கிறார். அச்சந்திப்பில் பக்கத்தான் ரக்யாட்டுக்குப் பிந்திய சிலாங்கூர் மாநில அரசு பற்றிப் பேசப்பட்டதா என்ற விவரம் தெரியவில்லை. இன்று காலை ஷா ஆலம் இஸ்தானா காயாங்கானில் சிலாங்கூர் ஷியாரியா நீதிமன்றத்துக்கு நீதிபதிகள் நியமனம் செய்யும் சடங்கில் கலந்துகொண்ட…
மகாதிர் சொல்வது தவறு, வழக்கைக் கண்டு அஞ்சுபவர் அல்லர் நஜிப்
பதவி இறங்கினால் வழக்கு தொடரப்படும் என்று அஞ்சியே பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் பதவியைப் பிடித்துக் கொண்டிருக்கிறார் என்று டாக்டர் மகாதிர் முகம்மட் சுமத்தும் குற்றச்சாட்டை அம்னோ தலைவர் ஒருவர் வன்மையாக மறுக்கிறார். மாறாக, நஜிப், நாட்டின் பிரச்னைகளைத் தீர்ப்பதற்காக பதவியில் இருக்க நினைக்கும் “ஓர் ஆண்மகன்” என்று…
மாணவர்களிடம் சிறுநீரை அருந்தச் சொன்னாராம் ஆசிரியர்
கெடா, சுங்கைப் பட்டாணி தொடக்கநிலைப் பள்ளி ஒன்றின் ஆசிரியர், முஸ்லிம்-அல்லாத மாணவர்களிடம் தண்ணீர் அருந்துவதாக இருந்தால் வகுப்பில் அருந்தக் கூடாது என்றும், கழிப்பறைக்குச் சென்று அருந்தலாம் என்றும் கூறியுள்ளார். மேலும், தண்ணீர் இல்லாவிட்டால் அவர்கள் “குழாய் நீரையோ சொந்த சிறுநீரையோ” அருந்தலாம் என்றும் சொன்னாராம். இவ்வளவுக்கும் அவர் மாணவர்…
பாஸின் போக்கில் மாற்றம் இல்லையேல் புதிய கட்சி அமையும்
பாஸ் தலைமையின் போக்கில் 100 நாள்களில் மாற்றம் காணப்படாவிட்டால் கட்சியில் உள்ள முற்போக்குவாதிகள் பக்கத்தான் ரக்யாட்டுக்கு ஆதரவாக செயல்படும் புதிய கட்சி ஒன்றை அமைக்கக்கூடும் என்று ஷா ஆலம் எம்பி காலிட் சமட் இன்று எச்சரித்தார். பாஸ் சிலாங்கூரின் முன்னாள் துணை ஆணையரான காலிட், பாஸ் தலைமைக்கு 100-நாள் …
கஸ்தூரி பட்டு: பிடிஎன் விவகாரத்தில் நஜிப் ஒரு கபட வேடதாரி
இனவாத படடைப்புகளை தயாரித்து வழங்கும் தேசிய குடியியல் பிரிவு (BTN)விவகாரத்தில் பிரதமர் நஜிப் ரசாக் கபட வேடம் போடுகிறார் என்று டிஎபி பத்து கவான் நாடாளுமன்ற உறுப்பினர் கஸ்தூரி பட்டு சாடியுள்ளார். 1மலேசியா தத்துவத்தை விடாமல் ஓதிக்கொண்டு, மிதவாதத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்திக்கொண்டு இருக்கும் பிரதமர் நஜிப்…
சியா விமானம் கேஎல்ஐஎஇல் அவசரமாக தரையிறங்கியது
ஒரு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் பயண எண் SQ425 தொழில் நுட்ப கோளாறு காரணமாக கேல் அனைத்துலக விமானதளத்தில் அவசரமாக தரையிறங்கியது. அந்த போயிங் 777-200 ரக விமானம் இந்தியா, மும்பாயிலிருந்து புறப்பட்டு மாலை மணி 4.44 க்கு சிங்கப்பூர் விமான நிலையத்தில் இறங்குவதாக இருந்தது. ஆனாம்,…
பழனிவேல் மற்றவர்கள் மீது பழிபோடக் கூடாது, நஜிப் காட்டம்
மஇகாவில் ஏற்பட்டுள்ள சச்சரவுக்கான உண்மையைத் திரித்து மற்றவர்களை அதில் உட்படுத்துவதற்காக அக்கட்சியின் தலைவர் ஜி. பழனிவேலை பிரதமர் நஜிப் கடிந்து கொண்டார். நேற்று புத்ரா உலக வாணிப மையத்தில் மஇகா உறுப்பினர்களின் கூட்டத்தில் உரையாற்றிய போது பழனிவேல் தெரிவித்த கருத்துகளுக்காக தாம் அவரை அழைத்து விளக்கம் கோரப்…
சிலாங்கூர் அரசிலிருந்து டிஏபி விலகாது
டிஏபி சிலாங்கூர் அரசிலிருந்து விலகப்போவதாக சின் சியு நாளேட்டில் வெளிவந்த செய்தியை சிலாங்கூர் டிஏபி தலைவர் டோனி புவா மறுத்தார்.மந்திரி புசார் அஸ்மின் அலி ஆட்சிக்குழுவிலிருந்து பாஸ் உறுப்பினர்களை வெளியேற்றவில்லை என்றால் டிஏபி மாநில அரசைவிட்டு விலகும் என அச்செய்தி கூறிற்று. அசெய்தியில் “உண்மையில்லை” என்றும் அது “குழப்பம் …
தலைவர் கருத்தை மறுத்து பக்கத்தான் செத்துவிட்டதாகக் கூறுகிறார் மாட் சாபு
பக்கத்தான் ரக்யாட் கூட்டணி இன்னும் உண்டு என்று பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங் கூறுவதை அக்கட்சியின் பாஸ் கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் முகம்மட் சாபு ஏற்கவில்லை. பாஸ், டிஏபி, பிகேஆர் மூன்றும் உருவாக்கி 12வது பொதுத் தேர்தலில் பெருமைப்படத்தக்க வெற்றியைப் பதிவு செய்த கூட்டணி …
WSJ செய்திக்கு பிரதமர் பதிலளித்தே ஆக வேண்டும்
1எம்டிபி பணம் 13வது பொதுத் தேர்தல் பரப்புரைக்குப் பயன்படுத்திகொள்ளப்பட்டதாகக் கூறும் வால் ஸ்திரிட் ஜர்னல் (WSJ) செய்தி குறித்து பிரதமர் மெளனமாக இருக்க முடியாது என்கிறார் டிஏபி பெருந் தலைவர் லிம் கிட் சியாங். “அச்செய்திக்குப் பிரதமரும் பிரதமர் அலுவலகமும் பதிலளிக்காமல் இருப்பது பிரதமரின் நம்பகத்தன்மைக்கு மட்டுமல்ல அனைத்துலக …
அசிஸ் பாரி: இளவரசர்களும் தேச நிந்தனைச் சட்டத்திற்கு உட்பட்டவர்களே
ஜொகூர் மாநிலம் மலேசியாவிலிருந்து பிரிந்து செல்ல வேண்டும் என்று கோருபவர்களுக்கு தேச நிந்தனைச் சட்டம் 1948 லிருந்து விலக்கு ஏதும் அளிக்கப்படவில்லை என்று அரசமைப்புச் சட்ட நிபுணர் அப்துல் அசிஸ் பாரி கூறினார். சாபாவும் சரவாக்கும் பிரிந்து செல்ல வேண்டும் என்று கூறியவர்களுக்கு எதிராக போலீஸ் மேற்கொண்ட…
1எம்டிபி பணத்தை நஜிப் தேர்தலுக்குப் பயன்படுத்திக் கொண்டாரா?
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் 1எம்டிபி நிதிகளை 13வது பொதுத் தேர்தல் பரப்புரைக்குப் பயன்படுத்திக் கொண்டதாக வால் ஸ்திரிட் ஜர்னல் (WSJ) செய்தி வெளியிட்டிருக்கிறது. 2012-இல் கெந்திங் குழுமத்திடமிருந்து மின் உற்பத்தி நிலையம் ஒன்று அதிக விலைக்கு வாங்கப்பட்டதாம். அதன்பின்னர் கெந்திங், நஜிப்பின் கட்டுப்பாட்டில் இருந்த ஒரு அற…
சிருலை மலேசியாவுக்குக் கொண்டுவர இன்னும் மனுச் செய்யவில்லை
போலீஸ் அதிரடிப் படையின் முன்னாள் உறுப்பினர்களான சிருல் அஸ்ஹார் உமருக்கும் அஸிலா ஹட்ரிக்கும் தூக்குத் தண்டனை விதித்து ஆறு மாதங்கள் ஆகின்றன. ஆனால், ஆஸ்திரேலியாவுக்குத் தப்பியோடிய சிருலை அங்கிருந்து அழைத்துவர மலேசிய அரசாங்கம் இதுவரை விண்ணப்பம் எதுவும் செய்து கொள்ளவில்லையாம். கொல்லப்பட்ட அல்டான்துன்யா ஷரிபூ-வின் தந்தையாரின் வழக்குரைஞர் ராம் …
‘அன்வார் வெளிநாட்டு ஊடகங்களை நாடியபோது ஆத்திரப்பட்டாரே டாக்டர் மகாதிர்’
துணைப் பிரதமர் பதவியிலிருந்து தூக்கப்பட்டபோது அன்வார் இப்ராகிம் தம் மனக்குறைகளை வெளிநாட்டு ஊடகங்களிடம் வெளியிட்டார் என்பதற்காக அப்போதைய பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் அவர்மீது மிகவும் ஆத்திரமடைந்ததாக அம்னோ உச்சமன்ற உறுப்பினர் அனுவார் மூசா கூறினார். ஆனால், அதே மகாதிர் இப்போது பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்மீது கொண்ட …
‘சீர்திருத்தம் பேசும்’ பண்டிகார் ஏன் பங்கை அடக்கி வைக்கவில்லை?
புதன்கிழமை நாடாளுமன்றத்தில் “கொலை மிரட்டல்” விடுத்த கினாபாத்தாங்கான் எம்பி பங் மொக்தார் ரடின்மீது மக்களவைத் தலைவர் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். பங் மொக்தார் தம் வீட்டுக்கு முன்புறத்தில் நடந்த ஆர்ப்பாட்டம் பற்றி நாடாளுமன்றத்தில் பேசியபோது விடுத்த அம்மிரட்டல் குறித்துக் கருத்துரைத்த பல வழக்குரைஞர்கள் இவ்வாறு தெரிவித்தனர். ஆர்ப்பாட்டக்காரரகள் தம் குடும்பத்தாருக்குத் …
மூன்றாவது திருமணம் நீண்ட காலம் நிலைத்திருக்கலாம்
2001-இல், டிஏபி தீர்க்க முடியாத கருத்து வேறுபாடுகள் நிலவுவதாகக் கூறி பாஸ் கட்சியுடன் உறவுகளைத் துண்டித்துக் கொண்டது. பதினான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் இரண்டாவது திருமணமும் அதே காரணங்களால் முறிந்து போனது. பாஸும் டிஏபி-யும் ஒன்று மற்றொன்றின் கொள்கைகளுடன் ஒத்துப்போக முடியாது. ஆனாலும், அவற்றுக்கிடையே விரும்பவும் முடியாத வெறுக்கவும் முடியாத …
எம்டி ஒர்கிம் ஹார்மனி-இன் 22 பணியாளர்களும் விடுவிக்கப்பட்டனர்
எண்ணெய்த் தாங்கிக் கப்பலான எம்டி ஒர்கிம் ஹார்மனி-இன் 22 பணியாளர்களும் இன்று அதிகாலை மணி 2.30க்கு விடுவிக்கப்பட்டனர். மலேசிய கடற்படை கடத்தல்காரர்களுடன் பேச்சு நடத்தியதை அடுத்து பணியாளர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டதாக மலேசிய கடலோர அமலாக்க நிறுவனத் துணைத் தலைவர் அஹ்மட் பூசி கூறினார். இதனிடையே, கடத்தல்காரர்கள் கப்பலில் இருந்த …


