செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் அயல் நாட்டவர்களுக்கு தங்கள் வாகனங்களை குத்தகைக்கு வழங்கும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் குறித்து சாலைப் போக்குவரத்துத் துறை (ஜேபிஜே) விசாரணை நடத்தும் என தெரிவித்துள்ள்ளது. ஜேபிஜே அமலாக்க இயக்குனர் கிஃப்லி மா ஹாசன் கூறுகையில், நேற்றிரவு ஒரு ஒருங்கிணைந்த நடவடிக்கையின் போது செல்லுபடியாகும்…
ஜகார்த்தாவில் அன்வார், ஆனால் நஜிப்பைச் சந்தித்தாக கூறப்படுவதை மறுக்கிறார்
பக்காத்தான் ராக்யாட் தலைவர் அன்வார் இப்ராஹிம் நேற்றிரவு பாலியில் இந்தோனிசிய அதிபர் பம்பாங் சுசிலோ யூதயோனோவைச் சந்தித்தார். அவர் இன்று ஜகார்த்த்தாவில் இருக்கிறார். பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் இந்தோனிசியத் தலைநகரில் இப்போது இருக்கும் வேளையில் அன்வாரும் அங்கு சென்றுள்ளது பல ஊகங்களை ஏற்படுத்தியுள்ளது. அன்வாரும் நஜிப்பும் சந்திக்கும்…
கர்பால் சிங்: டாக்டர் மகாதீர் தலையீடு பிரதமர் நஜிப்புக்கு அவமானம்
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் அரசாங்கத்தை கட்டுப்படுத்த முயலுவதற்கு பதில் 'ஒய்வு எடுக்க வேண்டும்' என டிஏபி தேசியத் தலைவர் கர்பால் சிங் கேட்டுக் கொண்டிருக்கிறார். 2003ம் ஆண்டு பிரதமர் பதவியைத் துறந்த மகாதீர் அரசாங்கத்தை கட்டுப்படுத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அவர். "நஜிப் நிர்வாகம்…
‘505 கறுப்பு தினம்’ திடீரென ஒன்று கூடிய 17 பேர்…
'505 கறுப்பு தினத்தை' ஒட்டி இன்று திடீரென ஒன்று கூடிய நிகழ்வில் கலந்து கொண்ட 17 பேரைப் போலீசார் தடுத்து வைத்துள்ளனர். அவ்வாறு தடுத்து வைக்கப்பட்டவர்களில் பெண்களும் பிள்ளைகளும் அடங்குவர் . முதலாவது சம்பவத்தில் பிற்பகல் மணி 2.50 வாக்கில் சோஹோ கடைத் தொகுதிக்கு முன்பு ஆர்ப்பாட்டம் செய்த…
ஜோகூர் ஆட்சி மன்ற உறுப்பினர் தீ மசீச பதவிகளைத் துறந்தார்
சுற்றுலா, வர்த்தகம், பயனீட்டாளர் விவகாரம் ஆகியவற்றுக்குப் பொறுப்பான ஜோகூர் ஆட்சி மன்ற உறுப்பினர் தீ சியூ கியோங் தமது ஆயுட்கால உறுப்பியத்தைத் தவிர மற்ற எல்லா மசீச பதவிகளையும் ராஜினாமா செய்துள்ளார். ஜோகூர் ஆட்சி மன்றத்துக்கு தாம் நியமிக்கப்பட்ட விவகாரத்தை சில கட்சி உறுப்பினர்கள் பிரச்னையாக்குவதைத் தடுப்பதற்காக தாம்…
பிஎஸ்எம் கணிப்பு தவறானது, மலேசியர்கள் கட்சிக்கு வாக்களித்தனர் வேட்பாளர்களுக்கு அல்ல
பிஎஸ்எம் என்ற மலேசிய சோஷலிசக் கட்சி, மே 5 பொதுத் தேர்தலில் தான் போட்டியிட்ட நான்கு தொகுதிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றது. காரணம் அது மலேசியர்கள் கட்சி சார்பு நிலைக்குப் பதில் வேட்பாளர்களுக்கு வாக்களிப்பர் என எண்ணியதாகும். "தனிநபர்களுக்கு மக்கள் வாக்களிப்பர் என நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால்…
“505 கறுப்புப் பேரணி: மெர்போக் திடலா அல்லது மெர்தேகா அரங்கமா…
உங்கள் கருத்து : மெர்போக் திடலை மறுப்பதின் மூலம் கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம் (டிபிகேஎல்)அரசியல் முடிவைச் செய்கின்றது. மெர்போக் திடலையோ அல்லது மெர்தேக்கா சதுக்கத்தையோ பக்காத்தான் பயன்படுத்த அது அனுமதிக்கும் சாத்தியம் இல்லை 505 கறுப்புப் பேரணிக்கான இடம் மீதான பேச்சுக்கள் தேக்க நிலையில் அடையாளம் இல்லாதவன் #85701391:…
KLIA2ன் கட்டுமானச் செலவுகள் : ஏர் ஏசியா விடுத்த அறைகூவலை…
KLIA2 முனையத்தைக் கட்டுவதற்கான செலவுகள் கூடிக் கொண்டே போவது பற்றியும் அதன் கட்டுமானத்தில் பல முறை தாமதங்கள் ஏற்பட்டுள்ளது பற்றியும் புலனாய்வு செய்ய சுயேச்சைக் குழு ஒன்றை அமைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்ட யோசனையை டிஏபி ஆதரித்துள்ளது. அந்த முழு விவகாரம் மீது இடைக்காலப் போக்குவரத்து அமைச்சர் ஹிஷாமுடின்…
‘குற்றவாளி என நிரூபிக்கப்படும் வரையில் கைதிகள் நிரபராதிகள்’ என்பது போல…
போலீஸ் அதிகாரிகள் எல்லா கைதிகளையும் குற்றவாளி என நிரூபிக்கப்படும் வரையில் நிரபராதிகள் என்பது போல நடத்துவதை உறுதி செய்வதற்கு புக்கிட் அமான் எல்லா முயற்சிகளையும் செய்யும். "எங்கள் காவலில் உள்ள கைதிகள் உட்பட அனைவருடைய நலன்களிலும் நாங்கள் அக்கறை கொண்டுள்ளோம்," எனத் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் (NKRA) இயக்குநர்…
‘பிஎன் தேர்தல் மனுக்கள் இசி விலக வேண்டும் என்பதற்கு கூடுதல்…
21 தேர்தல் மனுக்களை பிஎன் தாக்கல் செய்துள்ளது தேர்தல் ஆணையம் (இசி) ஏன் விலக வேண்டும் என்பதற்குக் கூடுதல் காரணங்களை வழங்குவதாக பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா சொல்கிறார். "தேர்தல் முடிவுகளை பக்காத்தான் ராக்யாட்டும் ஆயிரக்கணக்கான மக்கள் கடந்த ஒரு மாதமாக ஆட்சேபித்து வருகின்றனர்." "அண்மைய காலமாக…
பிஎஸ்எம்: ‘பக்காத்தானில் சேர்த்துக்கொள்ளும்படி நாங்கள் கெஞ்சவில்லை’
மலேசிய சோசலிஸ்ட் கட்சி (பிஎஸ்எம்), பொதுத் தேர்தலுக்கு முன் பக்காத்தான் ரக்யாட்டில் சேர விண்ணப்பித்துக் கொண்டது உண்மைதான். ஆனால், அதற்காக அக்கூட்டணியில் சேர்த்துக் கொள்ளும்படி அக்கட்சி ஒன்றும் “மண்டியிட்டு” கெஞ்சவில்லை என்கிறார் அதன் தலைமைச் செயலாளர் எஸ்.அருட்செல்வன். அதில் சேர பிஎஸ்எம் ஆர்வம் காட்டினாலும் அதைச் சேர்த்துக்கொள்ள பக்காதான்…
கல்வி பெருந்திட்டத்தை நிறுத்து: முஸ்லிம் தரப்புகள் வலியுறுத்து
முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்பு ஒன்று, 2013-2025 கல்வி பெருந்திட்டம் அரசமைப்புக்கு விரோதமானது என்று குறிப்பிட்டு அதை நிறுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளது. “தாய்மொழிப்பள்ளி விவகாரத்துக்கு கூட்டரசு அரசமைப்புப்படி தீர்வுக்காணப்படும்வரை 2013-2025 கல்வி பெருந்திட்டத்தை இரத்துச் செய்ய வேண்டுமாய் இஸ்லாம்-மலாயு என்ஜிஓகளின் கூட்டமைப்பு வலியுறுத்துகிறது. “அப்பெருந்திட்டம் அரசமைப்புக்கு முரணானது…
‘505 கறுப்புப் பேரணி’க்கு முன்னதாக திடீர்கூட்டங்கள்
ஜூன் 22 ‘505 கறுப்புப் பேரணி’ ஏற்பாட்டாளர்கள் பேரணிக்கு முன்னதாக அதற்கு விறுவிறுப்புச் சேர்ப்பதற்காக இரண்டு திடீர்கூட்டங்களை நடத்தத் திட்டமிடுவதாக சொலிடேரிடி அனாக் மூடா மலேசியா (எஸ்ஏஎம்எம்) தலைவர் பட்ருல் ஹிஷாம் ஷாஹாரின் கூறினார். நாளை பிற்பகல் 2 மணிக்கு ஒரு திடீர்கூட்டம் ஜாலான் துவாங்கு அப்துல் ரஹ்மானில்…
புரோட்டோன் கார் விலைகளை 10 விழுக்காடு குறைக்கும்
புரோட்டோன் கார்களுக்கான புதிய விலப் பட்டியல் நாளை வெளியிடப்படும் என நியு ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸ் செய்தி கூறுகிறது. விலைகள் இப்போதுள்ளதைவிட 10 விழுக்காடு குறையும் எனத் தெரிகிறது. புரோட்டோன் நிர்வாகத் தலைவர் முகம்மட் கமில் ஜமிலை மேற்கோள் காட்டி அச்செய்தி வெளியிடப்பட்டிருந்தது. விலை குறைக்கப்பட்டாலும் தரம் குறையாது என்றவர்…
மகாதிர்: எதிர்தரப்பிடம் அரசாங்கம் கடுமையாக நடந்துகொள்ள வேண்டும்
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், நாட்டின் ஜனநாயக முறையை இழிவுபடுத்தி வரும் மாற்றரசுக் கட்சியினரிடம் அரசாங்கம் அனுசரணையாக நடந்துகொள்ளக்கூடாது என்று வலியுறுத்துகிறார். “கடுமையாக நடந்துகொள்ள வேண்டும். விட்டுக் கொடுக்கக்கூடாது”. நேற்று கோலாலும்பூரில் லங்காவி அனைத்துலகக் கலந்துரையாடல் (எல்ஐடி) தொடர்பில் நடைபெற்ற விருந்தில் கலந்துகொண்ட பின்னர் மகாதிர் செய்தியாளர்களிடம்…
கேஎல் 505 கறுப்புப் பேரணி: இடவிவகாரம் தீரவில்லை
505 கறுப்புப் பேரணி ஏற்பாட்டாளர்களுக்கும் கோலாலும்பூர் மாநகராட்சி மன்ற(டிபிகேஎல்)த்துக்குமிடையில் பேரணி நடத்தும் இடம் தொடர்பில் இன்னும் இணக்கம் காணப்படவில்லை. இதை பிகேஆர் வியூகத் தலைவர் ரபிஸி ரம்லி தெரிவித்தார். இன்று காலை மாநகர் மேயர் அஹ்மட் பீசல் தாலிப்பைச் சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரபிஸி, எதுவானாலும் பக்காத்தான்…
முன்னாள் தோட்டத் தொழிலாளர்கள் கூட்டரசு அரசாங்கத்திடமிருந்து வீடுகளைக் கோருகின்றனர்
புத்ராஜெயாவில் முன்பு இருந்த தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்களுடைய 100 பேராளர்கள் இன்று பிரதமர் அலுவலகத்திற்கு முன்பு கூடி, குறைந்த விலை வரிசை வீடுகளை கட்டித் தருவதாக தங்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுமாறு ஆர்ப்பாட்டம் செய்தனர். நாட்டின் நிர்வாகத் தலைநகரமான புத்ராஜெயாவை நிர்மாணிப்பதற்கான திட்டத்தின் ஒரு பகுதியாக அந்தத் தோட்டங்களிலிருந்து வெளியேறுமாறு…
EAIC ‘முன்னாள் எம்ஏசிசி அதிகாரி’ குறித்து எழுந்துள்ள சந்தேகத்தை விவாதிக்கும்
போலீஸ் தடுப்புக் காவல் மரணங்கள் மீதான EAIC என்ற நேர்மை ஆணைய அமலாக்க நிறுவனத்தின் பணிக் குழு தனது உறுப்பியம் பற்றி இரண்டு எதிர்க்கட்சி எம்பி-க்கள் கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து அதனை விவாதிக்க எண்ணியுள்ளது. விரைவில் அதற்கான கூட்டம் நடைபெறும் என EAICயின் சட்ட, நிறுவனத் தொடர்புத் துறை…
டிஏபி: கார் விலைகள் குறைந்துள்ளதாக பொய் சொன்ன உத்துசான் மீது…
பிஎன் அரசின் 'Janji Ditepati' (வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுகின்றன) என்ற 13வது பொதுத் தேர்தல் சுலோகத்திற்கு இணங்க கார் விலைகள் குறைக்கபட்டுள்ளன என 'பொய்' சொன்ன அம்னோவுக்குச் சொந்தமான உத்துசான் மலேசியாவை பினாங்கு அரசாங்கம் சாடியுள்ளது. அந்த நாளேடு 'இனவாதத்தையும் அவதூறுகளையும்' பரப்புவதாக குற்றம் சாட்டிய அதன் முதலமைச்சர் லிம்…
டோனால்ட் லிம் மீது சீறிப் பாய்ந்தார் சொய் லெக்
மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக், அரசாங்கப் பதவிகளை ஏற்பதில்லை என்ற கட்சியின் முடிவை ஆதரித்ததை மறந்து பேசுகிறார் கட்சி உதவித் தலைவர் டோனால்ட் லிம் என்று சாடியுள்ளார். இரண்டு ஆண்டுக் கூட்டங்களிலும் மத்திய செயலவை கூட்டமொன்றிலும் அம்முடிவு ஏற்றுக்கொள்ளப்பட்டபோது லிம்மும் அக்கூட்டங்களில் கலந்துகொண்டார் என்று சுவா…
கேஎல் சிஐடி தலைவரை விசாரிக்க வேண்டும் என்கிறது தர்மேந்திரன் குடும்பம்
தடுப்புக் காவலில் இறந்துபோன என்.தர்மேந்திரனின் குடும்பத்தார், அவரது மரணம் தொடர்பில் முதலில் அறிக்கை வெளியிட்ட கோலாலும்பூர் சிஐடி தலைவர் கூ சின் வாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என விரும்புகின்றனர். கூவின் அறிக்கை, மே 22-இல் கோலாலும்பூர் மருத்துவமனை மரண விசாரணைக்குப் பின்னர் வெளியிட்ட அறிக்கையுடன் முரண்படுகிறது…
தேர்தல் வழக்குகளில் பேராக் பக்காத்தானுக்காக ஸ்ரீராம் ஆஜராகிறார்
பேராக் பக்காத்தான் தேர்தல் மோசடி தொடர்பில் தொடுக்கும் வழக்குகளில் முன்னாள் கூட்டரசு நீதிபதி கோபால் ஸ்ரீராம் பக்காத்தான் ராக்யாடுக்காக வாதாடுவார் என்ற செய்தி வழக்குரைஞர் வட்டாரத்தில் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. நீதிபதி ஸ்ரீராம், 69, 2010 பிப்ரவரியில் கூட்டரசு நீதிமன்ற நீதிபதி பதவியிலிருந்து பணி ஓய்வுபெற்றார். நீதிபதியாவதற்குமுன் அவர்…
‘முக்கியமான கடமைக்கு கூடுதல் போலீஸ்காரர்கள் அனுப்பப்பட வேண்டும் என்ற ஆர்சிஐ…
ஜைடின் போலீஸ் அரச விசாரணை ஆணையம் பரிந்துரைகளை வழங்கி எட்டு ஆண்டுகள் முடிந்து விட்டன. ஆனால் போலீஸ்காரர்களில் அதிகமானோர் காவல் பணிகளில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்ற அந்த ஆணையத்தின் முக்கியமாக பரிந்துரை இன்னும் நிறைவேற்றப்படவில்லை என டிஏபி கூறுகிறது. போலீஸ்காரர்களில் 22 விழுக்காட்டினர் குற்றப் புலனாய்வுத் துறையில் பணியாற்ற…
‘பழனிவேலும் ஜாம்ரியும் தனிப்பட்ட முறையில் பேசி பிரச்னையை தீர்த்துக் கொள்ள…
பேராக் மாநிலச் சட்டமன்ற சபாநாயகர் பதவி மீது மஇகா தலைவர் ஜி பழனிவேலுக்கும் மாநில மந்திரி புசார் ஜாம்ரி அப்துல் காதிருக்கும் இடையில் பகிரங்கமாக நிகழும் வாக்குவாதம் பிஎன் -னுக்கு எந்த நன்மையையும் தரவில்லை என அம்னோ தலைவர் ஒருவர் கூறியிருக்கிறார். "பகிரங்கமாக குறை கூறுவது போதும். பிரச்னை…