உள்துறை அமைச்சு: அன்வாருக்கு வரும் கடிதங்களைத் தடுப்பதில்லை

சிறையில்  உள்ள  எதிரணித்  தலைவர்  அன்வார்  இப்ராகிமுக்கு  வரும்  கடிதங்கள் தடுக்கப்படுவதாகக்  கூறப்படுவதை  உள்துறை  அமைச்சு  மறுத்துள்ளது. அன்வார்,  பிப்ரவரி 10-இல்  அவர்  சிறையிடப்பட்டதிலிருந்து  இதுவரை  சுங்கை  பூலோ  சிறைச்சாலைக்கு  எதிராக  எந்தப்  புகாரும்  செய்ததில்லை  எனவும்  அமைச்சு  இன்று  நாடாளுமன்றத்தில்  தெரிவித்தது. “சிறைக்கு  வெளியில்  உள்ள  சில …

1எம்டிபி இரகசியக் காப்புச் சட்டத்தின் பின்னால் பதுங்கிக் கொள்வதாக மகாதிர்…

முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட், முதலீட்டு  நிறுவனமான  1எம்டிபி  தம்  குறைகூறல்களிலிருந்து  தப்பிக்க  “அரசாங்க இரகசியச் சட்ட”த்தின்  பின்னே  ஒளிந்து  கொள்கிறது  எனச்  சாடியுள்ளார். “என்னுடைய  எல்லாக்  குறைகூறல்களையும்  தவறு  என்கிறது  1எம்டிபி. ஆனால், அதற்குச்  சான்றுகள் எதையும் காண்பிக்கவில்லை. கேட்டால் அது அரசாங்க இரகசியம்  என்று …

நஜிப்புக்கு எதிரான வழக்கை விசாரணைக்குக் கொண்டுவர பாலாவின் துணைவியார் மீண்டும்…

பிரதமர்  நஜிப்  அப்துல் ரசாக், அவரின்  துணைவியார்  ரோஸ்மா  மன்சூர்  ஆகியோர்மீதும்  மேலும்  எழுவர்மீதுமான    ரிம1.9மில்லியன்  இழப்பீட்டு  வழக்கை விசாரணைக்கு  ஏற்க  வேண்டும்  என  பி.பாலசுப்ரமணியத்தின்  விதவை மனைவி  கூட்டரசு  நீதிமன்றத்தில்  மனு  செய்துள்ளார். அந்த  வழக்கை  நிலைநிறுத்த  ஏ.செந்தமிழ்ச்  செல்விக்கும்  அவரின்  இரண்டு  பிள்ளைகளுக்கும்  இதுவே இறுதி…

அருள் ஓர் அசாதாரணமான பொய்யர், புவா கூறுகிறார்

முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட் 1எம்டிபி தலைவரான அருள் கந்தா கந்தசாமியை ஒரு பொய்யர் என்று வர்ணித்திருந்தார். அவரை விட ஒரு படி மேலே சென்று அருளை ஓர் "அசாதாரணமான பொய்யர்" என்று பெட்டாலிங் ஜெயா உத்தாரா நாடாளுமன்ற உறுப்பினர் டோனி புவா இன்று கூறினார். 1எம்டிபி நிதி…

‘செக்ஸி’ பேச்சுக்குக் கண்டனம் தெரிவிக்க பங்கின் வீடு நோக்கி ஆர்ப்பாட்டக்காரர்கள்…

கினாபாத்தாங்கான்  எம்பி  பங்  மொக்தார்  ரசினின் ‘செக்ஸி’  கருத்துகளால்  ஆத்திரமடைந்த  தரப்பினர்  அம்பாங்கில்  உள்ள  அவரின்  வீட்டுக்குமுன் கூடி  ஆர்ப்பாட்டம்  செய்வதற்கு  விரைந்து  கொண்டிருக்கிறார்கள். இன்று  காலை  நாடாளுமன்றத்துக்கு  வெளியில்  கூடி  கண்டனம்  தெரிவித்த  அவர்கள்  அங்கிருந்து  அவரின்  வீட்டை  நோக்கிப்  படையெடுத்தனர். “நேராக  பங்  மொக்தாரின்  வீட்டுக்குத்தான் …

இரகசியங்களை வெளியிடாதீர்: அரசு அதிகாரிகளுக்குப் பிரதமர் அறிவுறுத்து

அரசாங்க  இரகசியங்களை  வெளியிடக் கூடாது  எனப்  பிரதமர்  நஜிப் அப்துல்  ரசாக்  அரசாங்க  அதிகாரிகளைக்  கேட்டுக்கொண்டார். இன்று  புத்ரா  ஜெயா  மாநாட்டு  மையத்தில்  உரையாற்றிய  பிரதமர், அண்மையில்  சில  இரகசியங்கள் “கசிந்திருப்பதாக”க்  கூறினார். “கடந்த  சில  நாள்களாக  பல  இரகசியங்கள்  வெளியாகியுள்ளன. அதனால்  அரசாங்க  இரகசியங்களைத்  தயவு  செய்து …

அமைச்சரும் இளவரசரும் சர்ச்சையை நிறுத்த வேண்டும்

ஜோகூர்  பட்டத்திளவரசர்  துங்கு  இஸ்மாயில்  சுல்தான்  இப்ராகிமும்  அமைச்சர்  நஸ்ரி  அப்துல்  அசீசும்  சர்ச்சையிடுவதை  நிறுத்த  வேண்டும்  என  அம்னோ  உச்சமன்ற உறுப்பினர்  ஒருவர்  கோரிக்கை விடுத்துள்ளார். “இருவரும் இதற்கு  ஒரு  முடிவுகட்டும்  தருணம்  வந்து விட்டது”, என  ரிஸால்  மரைக்கான்  நைனா  மரைக்கான்  கூறினார். “ஒருவரை  மற்றவர் …

பிரதமரின் சகோதரர் புதிய கட்சி தொடங்கப் போகிறாராம்

பிரதமர்  நஜிப்  அப்துல் ரசாக்கின்  இளவல், நாசிர்  அப்துல்  ரசாக்  எல்லா  இனங்களையும்  உள்ளடக்கி  ஒரு  புதிய  கட்சியைத் தொடங்க  விருப்பதாக  ஏசியா  செண்டினல்  அறிவித்துள்ளது. அப்புதிய  கட்சி,  நாட்டைப்  பிளவுபடுத்தும்  இன  அரசியலை முடிவுக்குக்  கொண்டுவரும்  நோக்கத்தைக்  கொண்டது  என   அச்  செய்தி  கூறியது. கட்சியை  வழிநடத்த …

பிகேஆரில் பக்கத்தான் ‘சாவு’ பற்றிப் பேசத் தடை

பிகேஆரின்  அரசியல்  பிரிவு  பக்கத்தான் ரக்யாட்டிலிருந்து  வெளியேறும்  டிஏபி  முடிவு  பற்றி இன்றிரவு  விவாதிக்கும்வரை  கட்சியில்  வேறு  யாரும் அது  பற்றிப்  பேசக்கூடாது  என்று  பிகேஆர்   தடை  விதித்துள்ளது. அம்முடிவின்மீது கட்சித்  தலைமை  நாளைக்குள் தனது  நிலைப்பாட்டை  அறிவிக்கும்  என  அதன்  தலைமைச்  செயலாளர்  ரபிஸி  ரம்லி  தெரிவித்தார்.…

‘பக்கத்தான் சாகவில்லை, உயிருடன்தான் இருக்கிறது’

எதிரணித்  தலைவர்களில் பலர்  பக்கத்தான்  ரக்யாட்  ஓர்  அரசியல்  சக்தியாக  தொடர்ந்து  நிலைபெற்றிருப்பதைக்  காணவே  விரும்புகின்றனர். பக்கத்தான்  கதை  முடிந்ததாக  லிம்  குவான்  எங்  அறிவித்த  சில  நிமிடங்களிலேயே  பாஸ், பிகேஆர்  தலைவர்கள் பக்கத்தான்  என்று  சொல்லவே  பெருமையாக  இருக்கிறது  என்றும்  தாங்கள்  இன்னமும்  அக்கூட்டணியில்தான்  இருப்பதாகவும்  கூறிக்கொண்டனர்.…

பிஎன் ‘பரப்புரை’ பிரிவுகளை ஒழித்துக்கட்டுவீர்: டிஏபி வலியுறுத்து

டிஏபி எம்பிகள்  பலர், தேசிய  குடிமையியல்  பிரிவையும் (பிடிஎன்) சிறப்பு  விவகாரப்  பிரிவையும்(ஜாசா)  ஒழித்துக்கட்ட  வேண்டும்  எனக்  கோரிக்கை  விடுத்துள்ளனர். “அரசியல் நோக்கத்திற்காகவே  அவை  உருவாக்கப்பட்டன  என்பது  தெளிவு, ஜாசாவுக்கு  ஆண்டுக்கு  ரிம21.7 மில்லியன்  ஒதுக்கீடு  செய்யப்படுகிறது. அவ்விரண்டு  பரப்புரை  பிரிவுகளுக்காகவும் ஆண்டுக்கு  ரிம80 மில்லியன்  செலவிடப்படுகிறது. “இனவாதம் …

‘மகாதிர்தான் என் தந்தையைப் பயன்படுத்திக் கொண்டார்’-காலஞ்சென்ற சுல்தானின் புதல்வர்

முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட், காலஞ்சென்ற  ஜோகூர்  ஆட்சியாளர் சுல்தான்  இஸ்கண்டார்  சுல்தான்  இஸ்மாயிலைப் பயன்படுத்தி  உச்ச  நீதிமன்றத் தலைவராக  இருந்த  நீதிபதி  சேலே  அப்பாஸை, 1988-இல்  பதவியிலிருந்து  வெளியேற்றினாராம். காலஞ்சென்ற  ஜோகூர்  சுல்தானின்  மகன்  துங்கு  அப்துல்  மஜிட்  இட்ரிஸ் இஸ்கண்டார்  முகநூலில்  இவ்வாறு  கூறினார்.…

ஜோகூரில் இன்று இளவரசர்- ஆதரவு பேரணி

ஜோகூர்  பட்டத்திளவரசருக்கும்  அமைச்சர்  நஸ்ரி  அப்துல்  அசீசுக்குமிடையில்  சர்ச்சை  வலுத்துவரும்  வேளையில் இளவசரருக்கு  ஆதரவு  தெரிவிக்கும்  பேரணி  ஒன்றுக்கு இன்று  ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளது. அப்பேரணி  மாலை  மணி  4-க்கு  புக்கிட்  செரேன்  அரண்மனையில்  நடைபெறும். சுல்தான்  இப்ராகிம்  சுல்தான்  இஸ்கண்டாருக்கும்  சுல்தான்  குடும்பத்துக்கும்  அன்பையும்  ஆதரவையும்  தெரிவிக்கத்  திரண்டு…

பக்கத்தான் ரக்யாட் கதை முடிந்தது

பினாங்கு  முதலமைச்சரும்  டிஏபி  தலைமைச்  செயலாளருமான  லிம்  குவான்  எங்.  பக்கத்தான்  ரக்யாட்  கதை  முடிவுக்கு  வந்து  விட்டதாக  அறிவித்துள்ளார். “டிஏபி-யுடன்  உறவுகளைத்  துண்டித்துக்கொள்ளக்  கோரி  பாஸ்  முக்தாமாரில்   கொண்டுவரப்பட்ட  தீர்மானத்தை  டிஏபி  மத்திய  நிர்வாகக்  குழு  ஏற்றுக்கொள்கிறது. இதுவரை இருந்த  பக்கத்தான்  இனி  இருக்காது. “மூன்று  கட்சிகள் …

மஇகா துணைத் தலைவர், மூத்த தலைவர்கள் தற்காலிக பதவி நீக்கம்

மஇகா துணைத் தலைவர் டாக்டர் எச். சுப்ரமணியம், உதவித் தலைவர் எம். சரவணன் ஆகியோரை உடனடியாக தற்காலிக பதவி நீக்கம் செய்வதாக மஇகா தலைவர் ஜி. பழனிவேலு இன்று அறிவித்தார். இடைக்கால மத்திய செயற்குழு கூட்டத்தை நடத்த வேண்டாம் என்று தாம் விதித்திருந்த கட்டளையை மீறி அக்கூட்டத்தை நடத்தியதற்காக…

பட்டத்திளவரசர்:கவனம் செலுத்த வேண்டியது 1எம்டிபிமீது, என் மீது அல்ல

புத்ரா  ஜெயா, துணிச்சலாகக்  கருத்துத்  தெரிவிக்கும்  அரச குடும்பத்தாரைக்  கவனித்துக்  கொண்டிராமல் 1எம்டிபி  மீதும்  மற்ற  தேசிய  விவகாரங்கள்மீதும்  கவனம்  செலுத்துவது  நல்லது  என ஜொகூர் பட்டத்திளவரசர்  துங்கு  இஸ்மாயில்  சுல்தான்  இப்ராகிம்  வலியுறுத்தினார். “என்னைப்  பயன்படுத்தி 1எம்டிபி-இலிருந்தும்  மற்ற  தேசிய  விவகாரங்களிலிருந்தும்  கவனத்தைத்  திசைதிருப்ப  முயலாதீர். “நாட்டுக்கு …

பெகிரின் சொத்து மதிப்பு ரிம1.185 பில்லியன்

சரவாக்  ஆளுனர்  அப்துல்  ரஹ்மான்  தயிப்  மஹ்மூட்டின் மகன்  மஹ்முட்  அபு  பெகிர்,  தம்  முன்னாள்  மனைவி  ஷானாஸ்  ஏ.மஜித்தின்  கணக்காய்வாளர்  கூறுவதுபோல்  தம்  சொத்தின்  மதிப்பு  ரிம1.185 பில்லியன்தான்  என்பதை  ஒப்புக்கொண்டார். இன்று ஷானாஸின்  வழக்குரைஞர்  ரஃபி  ஷாபி  அவரது  சொத்தின்  மொத்த  மதிப்பு  என்னவென்று  வினவியதற்கு …

டிஏபி எம்பி மகாதிரைச் சாட்சியாக அழைப்பார்

தைப்பிங்  எம்பி  இங்கா  கொர்  மிங், தமக்கெதிராக  பிரதமர்  நஜிப்  அப்துல் ரசாக்கும்  அவரின்  துணைவியார்  ரோஸ்மா  மன்சூரும்  தொடுத்துள்ள  வழக்கில்  சாட்சியம்  அளிக்க  முன்னாள்  பிரதமர் டாக்டர்  மகாதிர்  முகமட்டை  அழைக்கப்போவதாகக்  கூறினார். மகாதிரும்  அவரின்  வலைப்பதிவில்  ரோஸ்மா  பிரதமர்  போன்று  நடந்துகொள்வதாக பலர்  தம்மிடம்  முறையிட்டிருப்பதாக …

ஜிஎஸ்டியால் மக்கள் கூடுதலாகச் செலவிடுவதை நிதி அமைச்சு ஒப்பியது

ரிம2,000-த்துக்குக்  குறைவான  மாத  வருமானத்தைக்  கொண்டவர்கள் வருமானத்தில் ரிம51.89 அல்லது 2.59 விழுக்காட்டைப்  பொருள்,  சேவை வரிக்காகச்  செலவிடுவதை  நிதி  அமைச்சின்  ஆய்வு  ஒன்று  காண்பிக்கிறது. இது, விற்பனை, சேவை  வரி(எஸ்எஸ்டி)  இருந்த  காலத்தில்  அவர்கள் செலவிட்டதைவிடவும்  அதிகமாகும். அப்போது  அவர்கள் வருமானத்தில்  ரிம36.83 அல்லது  1.84 விழுக்காட்டை …

பாஸ் சிசி-இலிருந்த ஒரே முற்போக்காளரும் விலகினார்

பாஸ் கட்சித்  தேர்தலில் வெற்றிபெற்ற  ஒரே  ஒரு  முற்போக்காளரான  மஸ்லான்  அலிமானும் இன்று  மத்திய  செயல்குழுவிலிருந்து  விலகினார். பாஸ்  தலைமையகத்தில், செய்தியாளர்களிடம்  பேசிய மஸ்லான்,  பெல்டாவைக்  கண்காணிக்கும்  என்ஜிஓ-வான  அனாக்-கில்  கவனம்  செலுத்துவதற்காக பதவி  துறந்ததாகக்  கூறினார். ஆனால், அவர்  இன்னமும்  பாஸ்  உறுப்பினர்தான்.  

பணத்தைக் காண்பியுங்கள்: 1எம்டிபி-க்கு மகாதிர் கோரிக்கை

முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்,  1எம்டிபி  அதன்  முதலீடுகளுக்கும்  செலவுகளுக்கும்  ஆவணச்  சான்றுகளைக் காண்பிக்க  வேண்டும்  எனக்  கோரிக்கை  விடுத்துள்ளார். ஆவணச்  சான்றுகளின்றி  அறிக்கைகள்  விடுவது  மட்டும்  போதாது  என்றாரவர். “1எம்டிபி  செய்த  எல்லா  முதலீடுகளுக்கும், செலவுகளுக்கும்  ஆதாரம்  தேவை. “ஆனால், மின்  ஆலைகள்  வாங்கியது,  கோலாலும்பூரில்…

நஸ்ரி: ஹுடுட் சட்டவரைவுக்கு பேரரசர் அனுமதி தேவை

பேரரசரின்  அனுமதியின்றி பாஸ்  தலைவர் அப்துல் ஹாடி ஆவாங்கின்  ஹுடுட்  சட்டவரைவை மக்களவையில்  விவாதிக்க  முடியாது. சமயம்  தொடர்பான  எந்தவொரு  சட்டவரைவையும்  நாடாளுமன்றத்தில்  கொண்டுவர  ஆட்சியாளர்கள்  மன்றத்தின் ஒப்புதல்  தேவை  எனப் பண்பாட்டு, சுற்றுலா  அமைச்சர்  நஸ்ரி  அப்துல்  அசீஸ்  கூறினார். “கூட்டரசு  நிலையில்  ஆகோங்-தான்  இஸ்லாத்தின்  தலைவர்.…

தோற்றுப்போன பாஸ் தலைவர்கள் அம்னோவின் வீழ்ச்சியைக் காண விரும்புகிறார்கள்

பாஸ் கட்சித்  தேர்தலில்  தோற்றுப்போன  முற்போக்காளர்களும்  அவர்களின்  ஆதரவாளர்களும் நேற்றிரவு  ஒரு நிகழ்வில்  கலந்துகொண்டபோது  அனைவருமே  அம்னோவை  வீழ்த்த  வேண்டுமென  முழக்கமிட்டனர். கோலாலும்பூரில்  நடைபெற்ற  அந்நிகழ்வில்  பேசிய பாஸ்  முன்னாள்  துணைத் தலைவர்  முகம்மட்  சாபுவும்  மற்றவர்களும்  அடுத்த  பொதுத்  தேர்தலில்  அம்னோ  வெற்றி பெறுவதை  எவ்வகையிலும்  தடுக்க …