சட்டவிரோத பந்தயம் மற்றும் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுவதற்குப் பெயர்போன ஒரு பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில், 45 கார்களைப் பரிசோதித்த போலீசார் 32 சம்மன்களை வழங்கியுள்ளனர். இன்று அதிகாலை இங்குள்ள லெபு மெதினி உத்தாமா பகுதியில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சட்டவிரோத பந்தயம் மற்றும் ஆபத்தான முறையில் வாகனம்…
கைரி வாயை மூடிக்கொண்டிருப்பது நல்லது
சட்டம் செயல்படும் விதம் தெரியாவிட்டால் அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுடின் வாயை மூடிக் கொண்டிருப்பதே நல்லது என்கிறார் பத்து கவான் அம்னோ தொகுதித் துணைத் தலைவர் கைருடின் அபு ஹசன். 1மலேசியா மேம்பாட்டு நிறுவன(1எம்டி)த்துக்கு எதிரான புகார் தொடர்பான “உண்மைகளை” போலீசிடம் மட்டுமே தெரிவிக்க முடியும் என …
பெர்காசா: சிஎம் ‘புனித பன்றி’அல்ல, அவரைக் கைது செய்
பெர்காசா, பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் அம்மாநிலத்தில் முஸ்லிம்-அல்லாதார் அல்லாஹ் என்ற சொல்லைத் தாராளமாகப் பயன்படுத்தலாம் என்று கூறியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று பல கண்டனக் கூட்டங்களை நடத்தியது. பேராக்கில், ஈப்போ டிஏபி அலுவலகத்துக்கு வெளியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பெர்காசா உறுப்பினர்கள் டிஏபி சட்டமன்ற உறுப்பினர் ஒருவரிடம் …
ஜாஹிட் டின் கருத்துகளை அவருக்கு எதிராக திருப்பி விடுகிறது பெர்காசா
முன்னாள் உயர் அரசாங்க அதிகாரிகள், பெருந் திட்டங்களுக்கும் குத்தகைகளுக்கும் அலைபவர்கள் என்பதை உள்துறை அமைச்சர் ஜாஹிட் ஹமிடி ஒப்புக்கொள்கிறாராம். பெர்காசா கூறுகிறது. அந்த அமைப்பின் உதவித் தலைவர் அப்துல் ரஷிட் அப்துல் ரஹ்மான், பெர்காசாவின் ஆண்டுக் கூட்டத்தில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைக் கடுமையாகக் குறைகூறியது குறித்து ஜாஹிட் …
நோயுற்றிருக்கும் பிகேஆர் பிரதிநிதியின் நிலை கிறிஸ்மசுக்குப் பின்னர் தெரியவரும்
சாபா பிகேஆர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ரொலண்ட் சியா கிறிஸ்மசுக்குப் பின்னர் தம் நிலை பற்றி முறையான அறிவிப்புச் செய்வார். “என்மீது அக்கறை காட்டும் ஊடகங்களுக்கும் நண்பர்களுக்கும் நன்றி. கிறிஸ்மசுக்குப் பிறகு முறையாக அறிவிப்பேன்”, என ரொலண்ட் டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். இனானாம் சட்டமன்ற உறுப்பினரான அவர் சட்டமன்ற உறுப்பினர் …
‘ஒன்றும் செய்யாத’ டிபிகேஎல்-லுக்கு ரிம2.44பில்லியன் பட்ஜெட் ஏன்?
பெரும்பாலான முக்கிய வேலைகளை வெளியாருக்குக் கொடுத்து விடும் கோலாலும்பூர் மாநகராட்சி மன்ற (டிபிகேஎல்)த்துக்கு சிலாங்கூரைவிட பெரிய பட்ஜெட் எதற்கு எனக் கேட்கிறார் செகாம்புட் எம்பி லிம் லிப் எங். “டிபிகேஎல் 2015-க்கு ரிம2.44பில்லியன் பட்ஜெட்டைக் கொண்டிருப்பது ஏன் என்பது புரியவில்லை. கோலாலும்பூரை விட 3.2 மடங்கு மக்கள்தொகையைக் கொண்ட …
வீராப்பு பேசும் பெர்காசாவுக்கும் இஸ்மாவுக்கும் தேர்தலில் போட்டியிடும் துணிச்சல் உண்டா?
பெர்காசாவும் ஈக்காத்தான் முஸ்லிமின் மலேசியா(இஸ்மா)வும் கூறிக்கொள்வதுபோல் அவற்றுக்கு மலாய்க்காரர்களிடையே மகத்தான ஆதரவு இருப்பது உண்மையானால் தேர்தலில் போட்டியிடத் தயாரா என பிகேஆர் சவால் விடுத்துள்ளது. “பெர்காசாவும் இஸ்மாவும் அவற்றின் அதி தீவிர வலச்சாரி, இனவாதக் கருத்துகளுக்கு சமுதாயத்தில் வரவேற்பு உள்ளதாக நம்பினால் ஜனநாயக முறையில் அதைச் சோதித்துப் பார்க்கலாமே”,…
மஇகா அடுத்த வாரம் ஆர்ஓஎஸ்-ஸைச் சந்திக்கும்
மஇகாவில் புதிய தேர்தல்கள் நடத்த வேண்டும் என்ற உத்தரவு பற்றி விளக்கம் பெறக் கட்சித் தலைவர் ஜி.பழனிவேலும் துணைத் தலைவர் டாக்டர் எஸ்.சுப்ரமணியமும் அடுத்த வாரம் சங்கப் பதிவதிகாரி(ஆர்ஓஎஸ்)யைச் சந்திப்பர். “சுப்ராவும் நானும் அடுத்த வாரம் ஆர்ஓஎஸ்ஸைச் சந்தித்து அதன் உத்தரவு பற்றி விளக்கம் பெறுவோம். உள்துறை அமைச்சர் …
சாபா பிகேஆர் சட்டமன்ற உறுப்பினர் பதவி விலகலைக் கட்சிக்கு தெரிவித்து…
பிகேஆரின் இனானாம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ரொலண்ட் சியா பதவி விலகும் எண்ணத்தைக் கட்சியிடம் ஏற்கனவே தெரிவித்து விட்டார் என்பதைத் தலைமைச் செயலாளர் ரபிஸி ரம்லி மலேசியாகினியிடம் இன்று உறுதிப்படுத்தினார். தம் உடல்நிலை “மோசமடைந்திருப்பதாகவும்” அதனால் பதவி விலகுவதாகவும் சியா கடிதம் வழியாகவும் தெரியப்படுத்தியுள்ளார் என ரபிஸி கூறினார்.…
மஇகா செயற்குழு கூட்டத்திற்குப் பின்னர் தலைவரின் கார் தாக்கப்பட்டது
இன்று மாலை மஇகாவின் மத்திய செயற்குழு உறுப்பினர்கள் ஓர் அவரசக் கூட்டத்திற்குப் பின்னர் கட்சியின் தலைமையகத்தை விட்டு வெளியேறிய போது பெருங்குழப்பம் வெடித்தது. மத்திய செயற்குழு உறுப்பினர் ஜி. குமாரின் கார் என்று நம்பப்படும் ஒரு பிஎம்டபுள்யு காரை ஒரு கூட்டத்தினர் சூழ்ந்து கொண்டு அதனைத் தாக்கினர். போலீசார்…
பேரனைத் திருப்பிக் கொடுங்கள்: மன்றாடுகிறார் தீபாவின் முஸ்லிம் தாயார்
எஸ்.தீபாவின் தாயார் சித்தி அய்ஷா அப்துல்லா, தம் ஆறு-வயது பேரனை அவனின் தாயாரிடமே ஒப்படைக்க வேண்டும் என்று இஸ்லாத்துக்கு மதம் மாறிய தம் முன்னாள் மருமகன் இஸ்வான் அப்துல்லாவைக் கேட்டுக்கொண்டிருக்கிறார். இஸ்வான் மகனைத் தன் வசமே வைத்திருக்க செய்திருந்த மேல்முறையீட்டில் தோல்வி கண்டதை அடுத்து சித்தி அய்ஷா இந்த …
ஹுடுட் விவகாரத்தில் கிட் சியாங் பக்கத்தானிலிருந்து விலகத் தயாரா? கெராக்கான்…
பாஸ் கிளந்தான் சட்டமன்றத்தில் ஹுடுட் சட்டவரைவைத் தாக்கல் செய்வதைத் தடுத்து நிறுத்த முடியாது போனால் பக்கத்தான் ரக்யாட்டிலிருந்து வெளியேறத் தயாரா என கெராக்கான் லிம் கிட் சியாங்-கும் டிஏபி- க்கும் சவால் விடுத்துள்ளது. டிசம்பர் 29-இல், கிளந்தான் சிறப்புச் சட்டமன்றக் கூட்டம் ஹுடுட் பற்றி விவாதிக்கவிருக்கும் வேளையில் டிஏபி …
கைருடினைச் சாடுகிறது பத்து கவான் அம்னோ
மலேசியாகினிக்கு வழங்கிய நேர்காணலில் பினாங்கு அம்னோவைக் குறைகூறிய பத்து கவான் அம்னோ துணைத் தலைவர் கைருடின் அபு ஹசானை அத்தொகுதி தலைவர் முகம்மட் நூர் அஹ்மட் கடுமையாகச் சாடி அறிக்கை வெளியிட்டுள்ளார். . கைருடின் (இடம்) பினாங்கில் இருப்பதுகூட இல்லை, மாநில நடப்புகளைத் தெரிந்து வைத்திருப்பதுமில்லை என்றாரவர். “குறைகளை எடுத்துரைக்க …
பிபிபி: வெறுப்பை உண்டாக்க முனையும் அம்பிகாமீது நடவடிக்கை எடுப்பீர்
அரசாங்கம் கிறிஸ்துவர்களுக்குத் தொல்லை கொடுப்பதை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தும் வழக்குரைஞர் மன்ற முன்னாள் தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசன்மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார் பிபிபி தலைவர் ஒருவர். கிறிஸ்மஸ் நெருங்கிவரும் வேளையில் அவர் அரசாங்கத்துக்கு எதிராக வெறுப்பை உருவாக்க முனைகிறார் என ஏ. சந்திரகுமணன் குற்றம் …
ஜனவரியில் எண்ணெய் விலை குறையலாம் என எதிர்பார்க்கிறார் துணை அமைச்சர்
2015 ஜனவரியில் ரோன் 95, ரோன் 97, டீசல் ஆகியவற்றின் விலை குறையலாம் என நிதி துணை அமைச்சர் அஹமட் மஸ்லான் எதிர்பார்க்கிறார். ஆனால், எரிபொருள் விலை குறைந்தாலும் பொருள்களின் விலைகள் குறைவதில்லை, அதுதான் பிரச்னை என்றவர் குறைப்பட்டுக் கொண்டார். “எனவே, இவ்விவகாரத்தில் வணிகர்களும் வியாபாரிகளும் பொறுப்புடன் நடந்து …
எஸ்ஐஎஸ்: ரிதுவானின் சிந்தனை பயங்கரவாதத்தைத் தோற்றுவிக்கும்
சர்ச்சைக்குரிய ரிதுவான் டீ அப்துல்லா போன்ற கல்வியாளர்கள் முன்வைக்கும் வாதங்களை எதிர்க்காவிட்டால் மலேசியாவிலும் இஸ்லாமிய அரசு(ஐஎஸ்) போன்ற தீவிரவாதக் குழுக்கள் தலையெடுக்கலாம் என ஒரு என்ஜிஓ எச்சரிக்கிறது. “இஸ்லாத்தில் ‘மிதவாதம்’ என்றால் ‘அல் வசத்தியா. அது மார்க்கத்தின் முக்கியமான அங்கம். அதிலிருந்து விலகிச் செல்லும்போதுதான் ‘பயங்கரவாத எண்ணங்கள்’ உருவாகின்றன”, என …
ஹுடுட்டால் கவனம் திசைமாறக் கூடாது: ரபிஸி அறிவுறுத்து
ஹுடுட் சர்ச்சையால் பக்கத்தான் ரக்யாட் தலைவர்களின் கவனம் திசைதிரும்பி விடக்கூடாது என பிகேஆர் தலைமைச் செயலாளர் ரபிஸி ரம்லி கேட்டுக்கொண்டிருக்கிறார். “இந்தக் கருத்து வேறுபாடு 1999இல் பாரிசான் அல்டர்னேடிப் (மாற்று பாரிசான்) தோன்றிய காலம் தொட்டே இருந்து வருகிறது. “மக்களின் நலனுக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும் என நான் …
அம்னோ பேராளர்கள் தப்பு செய்திருந்தால் தேச நிந்தனை வழக்கை எதிர்நோக்குவர்
அண்மைய அம்னோ பேரவையில், அம்னோ பேராளர்கள் தேச நிந்தனைக்குரிய கருத்துகளை மொழிந்ததாகக் கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள்மீது தேச நிந்தனைச் சட்டம் பயன்படுத்தப்படும் என்று உள்துறை துணை அமைச்சர் வான் ஜுனாய்டி வான் ஜப்பார் கூறினார். “அவர்கள் தவறு செய்திருந்தால், போலீஸ் நடவடிக்கை எடுக்கும். மற்றவர்களிடம் நடந்துகொள்வதைப்போலவே அவர்களிடமும் நடந்துகொள்வார்கள்”, என்றாரவர்.…
சாபா பிகேஆர் சட்டமன்ற உறுப்பினர் பதவி விலகுகிறார்?
பிகேஆர் இனானாம் சட்டமன்ற உறுப்பினர் ரொலண்ட் சியா, சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகப்போவதாக ஒரு பேச்சு அடிபடுகிறது. அவருடைய முகநூல் பக்கத்தில் பதவி விலகுவதாக ஒரு குறிப்பு இடம்பெற்றுள்ளது. “உடல்நலக் காரணங்களுக்காக இனானாம் சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகப் போகிறேன். கடந்த 17 மாதங்களாக வாக்காளர்களும் கட்சித் தலைமைத்துவமும் …
‘தூங்க மூஞ்சி’ தலைவர்களையா தேர்ந்தெடுப்பது? நஜிப்புக்குக் கண்டனம்
பினாங்கில் பிஎன் கடந்த தேர்தலில் சந்தித்ததைவிட பெரிய தோல்வியை சந்திக்கலாம் என எச்சரிக்கிறார் அம்னோ தலைவர் ஒருவர். பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், கடந்த பொதுத் தேர்தலில் தோற்றவர்களையே பினாங்கில் மீண்டும் தலைவர்களாக நியமித்திருப்பதுதான் இதற்குக் காரணம் என்றாரவர். “அம்னோ தலைவரின் போக்கைப் புரிந்துகொள்ள முடியவில்லை. தோற்றுப்போனவர்கள் திரும்ப …
ஐஜிபி-க்கு உயர் நீதிமன்றம் இட்ட உத்தரவு முறையீட்டு நீதிமன்றத்தில் தள்ளுபடி
எம். இந்திரா காந்தியின் பிள்ளையைக் கண்டுபிடித்து அவரிடமே ஒப்படைக்க வேண்டும் அத்துடன் பிள்ளையைத் தூக்கிச் சென்ற அவரின் மதம் மாறிய முன்னாள் கணவரைக் கைது செய்ய வேண்டும் என்ற ஈப்போ உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக இன்ஸ்பெக்டர்-ஜெனரல் அப் போலீஸ்(ஐஜிபி) காலிட் அபு பக்கார் செய்திருந்த முறையீட்டை ஏற்றுக்கொண்ட …
மஇகா மத்திய செயற்குழு கூட்டம் நடத்தப்படக்கூடாது
மஇகா அதன் தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகிய இரு பதவிகளைத் தவிர்த்து கட்சியின் இதர தலைமைத்துவ பதவிகளுக்கு மறு தேர்தல் நடத்த வேண்டும் என்று சங்கங்களின் பதிவகம் (ரோஸ்) விடுத்திருந்த உத்தரவு குறித்து விவாதிக்க எதிர்வரும் வியாழக்கிழமை கூடவிருக்கும் கட்சியின் மத்திய செயற்குழுவின் கூட்டம் நிறுத்தப்பட…
ஜிஎஸ்டி-யால் தனியார் துறை மருத்துவக் கட்டணம் கூடுவதைத் தடுப்பீர்
ஏப்ரல் 1-இல், பொருள், சேவை வரி (ஜிஎஸ்டி) நடைமுறைக்கு வருவதால் தனியார் மருத்துவக் கட்டணம் உயர்வதை ஆராய வேண்டுமாய் மலேசிய சோசலிசக் கட்சியின் செயல்குழு உறுப்பினரும் சுங்கை சிப்புட் எம்பியுமான டாக்டர் மைக்கல் ஜெயகுமார் பயனீட்டாளர் சங்கங்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறார். ஜிஎஸ்டி-யால் தனியார் மருத்துவச் சேவைக் கட்டணங்கள் உயரும் என …
அஸ்மின் இன்னும் அன்வாரின் கூட்டை விட்டு வெளிவரவில்லை
சிலாங்கூர் மந்திரி புசார் இன்னமும் அன்வாரின் செல்வாக்குக்கு உட்பட்டவராகத்தான் இருக்கிறார் என்கிறார் அரசியல் விமர்சகரான பேராசிரியர் முஸ்தபா இஷாக். மந்திரி புசார் அஸ்மினின் 100வது நாள் நெருங்கி வரும் வேளையில் அவர் சிலாங்கூரை எந்தத் திசையில் செலுத்திக் கொண்டிருக்கிறார் என்பதற்குத் தெளிவான அறிகுறியே இல்லை என அப்பேராசிரியர் கூறினார்.…


