ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு காய்கறி வழங்குபவர்களிடமிருந்து லஞ்சம் கேட்டு வாங்கியதற்காக ஜொகூர் பாரு அமர்வு நீதிமன்றத்தால் ஒரு மூத்த குடியேற்ற அதிகாரிக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 20,000 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டது. மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (MACC) சட்டத்தின் பிரிவு 16(a)(B) இன் கீழ் சுல்கிப்லி…
ஏஜி: அஸ்மிக்கு எதிராக தேச நிந்தனை குற்றச்சாட்டு மறுபரிசீலனை செய்யப்படும்
மலாயா பல்கலைக்கழக சட்ட இணைப் பேராசிரியர் அஸ்மி ஷரோம் மீது சுமத்தப்பட்டுள்ள தேச நிந்தனை குற்றச்சாட்டிற்கு எதிராக மக்கள் தெரிவித்த கடும் விமர்சனத்தைத் தொடர்ந்து அக்குற்றச்சாட்டு மறுபரிசீலனை செய்யப்படும் சட்டத்துறை தலைவர் அலுவலகம் இன்று கூறியது. இதர தேச நிந்தனை குற்றச்சாட்டுகளும் மறுபரிசீலனை செய்யப்படும் என்றும் சட்டத்துறை…
நியு சிலாந்து கேட்டுக்கொண்டதும் ரிஸால்மன் அங்கு அனுப்பப்படுவார்
நியுசிலாந்தில் மலேசிய தூதரகத்தில் இராணுவ விவகார அதிகாரியாக பணிபுரிந்த முகம்மட் ரிஸால்மனை வழக்கு விசாரணைக்காக அந்நாட்டுக்கு அனுப்பிவைக்க அரசாங்கம் தயாராக உள்ளது என வெளியுறவு அமைச்சு கூறியது. “நியுசிலாந்து அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ கோரிக்கைக்காகக் காத்திருக்கிறோம்”,என அமைச்சின் பேச்சாளர் ஒருவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார். ரிஸால்மன் நியுசிலாந்தில் திருட்டு, தாக்குதல் குற்றச்சாட்டையும் …
ஹாடி கட்சியின் சட்ட விதிகளை மீறிவிட்டார், லுஹாம் கூறுகிறது
சிலாங்கூர் மாநில மந்திரி புசார் விவகாரத்தில் பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங் பாஸ் கட்சியின் சட்ட விதிகளை மீறி விட்டார் என்று அக்கட்சியின் சட்ட மற்றும் மனித உரிமைகள் பிரிவு (லுஹாம்) கூறுகிறது. மத்திய குழுவின் முடிவை தள்ளி வைத்து தாமே முடிவெடுக்கும் "வீட்டோ"…
பிகேஆர் பெங்காலான் குபோர் தொகுதியை பாஸிடம் ஒப்படைத்தது
பிகேஆர், செப்டம்பர் 25-இல் நடைபெறும் பெங்காலான் குபோர் இடைத் தேர்தலில் பாஸ் போட்டியிட இடமளித்து ஒதுங்கிக் கொள்வதென முடிவு செய்துள்ளது. “அம்னோவையும் பாரிசான் நேசனலையும் வெற்றிகரமாக எதிர்த்து நிற்க பக்கத்தான் ரக்யாட்டில் உள்ள நாம் ஒன்றுபட்டிருப்பது முக்கியம்”, என பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் …
சுல்தானிடம் அன்வார் மன்னிப்பு கேட்டார்
மரியாதைக்குறைவாக நடந்து கொண்டிருந்தால் மன்னிக்க வேண்டும் என பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் தம் கட்சி சார்பில் சிலாங்கூர் சுல்தானிடம் இன்று மன்னிப்பு கேட்டார். சிலாங்கூர் அரசமைப்பையும் சுதந்திரத்திலிருந்து கடைப்பிடிக்கப்படும் நடைமுறையையும்தான் பிகேஆர் பின்பற்றியது என்றாரவர். “சிலாங்கூர் அரசமைப்பையும் 1957-இலிருந்து கடைப்பிடிக்கப்படும் நடைமுறையையும் பின்பற்றும் எங்கள் முடிவு …
பட்டியலில் இல்லாத ஒருவரை சுல்தான் எம்பி ஆக நியமிக்கலாம்
சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா, மாநில எம்பி பதவிக்கு பக்கத்தான் ரக்யாட் சமர்பித்துள்ள பெயர்ப் பட்டியலில் இல்லாத ஒருவரை எம்பி-ஆக நியமிக்க முடியும். சட்டம் அதற்கு இடமளிக்கிறது என வழக்குரைஞர் சலேஹுடின் சைடின் கூறினார். அவர் கூறியதை இன்னொரு மூத்த வழக்குரைஞரும் ஐநா சிறப்புத் தூதருமான பரம் …
சுல்தானிடம் மன்னிப்பு கேட்டது டிஏபி
சிலாங்கூர் மந்திரி புசார் பதவிக்கு ஒரே ஒரு பெயரை மட்டுமே பரிந்துரை செய்ததற்காக டிஏபி, சிலாங்கூர் சுல்தானிடம் மன்னிப்பு கேட்டுகொண்ட டிஏபி அரசமைப்புப்படியான ஆட்சியாளருக்கு தன் விசுவாசத்தையும் தெரிவித்துக் கொண்டது. “சிலாங்கூர் மந்திரி புசார் பதவிக்கு டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயிலின் பெயரை மட்டுமே சமர்ப்பிக்க முடிவெடுத்து…
தேச நிந்தனைச் சட்டம் குறித்து கருத்துரைத்த சைபுடின்மீது அமைச்சர் பாய்ச்சல்
தேச நிந்தனைச் சட்டத்தை எடுத்துவிட்டு அதனிடத்தில் தேசிய ஒற்றுமை ஆலோசனை மன்றம்(என்யுசிசி) பரிந்துரைத்திருக்கும் தேசிய நல்லிணக்கச் சட்டவரைவைக் கொண்டுவரலாம் என்ற கருத்தை முன்வைத்ததற்காக முன்னாள் உயர்கல்வி துணை அமைச்சர் சைபுடின் அப்துல்லா நன்றாக ‘வாங்கிக் கட்டிக்கொண்டிருக்கிறார்’. அச்சட்டவரைவு பற்றி வெளிப்படையாகக் கருத்துரைத்தன்வழி சைபுடினும் என்யுசிசி--யும் வரம்பு மீறி விட்டதாக …
டயானா: பிரதமர் என் தாயாரிடம் கற்றுக்கொள்ள வேண்டும்
சுயமாக தெரிவுசெய்யும் உரிமையைத் தம் தாயார், தனக்குக் கொடுத்திருப்பதாகக் கூறிய பேராக் டிஎபி சோசலிச இளைஞர் பிரிவு செயல்குழு உறுப்பினர் டயானா சோப்யா முகம்மட் டாவுட், அவரிடம் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் பாடம் படிக்க வேண்டும் என்றார். “பிள்ளைகள் சுயமாக சிந்திக்கவும், தீர்மானிக்கவும், குறைகூறவும் சுதந்திரம் கொடுத்த…
அம்னோ ஆபத்தானது: பாஸ் உறுப்பினர்களுக்கு முஜாஹிட் எச்சரிக்கை
புதிதாக தோற்றுவிக்கப்பட்டுள்ள என்ஜிஓ-வான பாஸ்மா நேற்று ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கம் ஒன்றில் பேசிய பாஸ் மத்திய குழு உறுப்பினர் முஜாஹிட் யுசுப் ராவா, பாஸுக்கு அம்னோவுடன் ஒத்துழைக்கும் எண்ணம் கொஞ்சமும் இல்லை என்றார். “அம்னோவில் உள்ள சில தரப்புகள் பாஸைப் பிளவுபடுத்த முயல்வதை மறுப்பதற்கில்லை. அதே வேளை அம்னோவுடன்…
2015 முதல் பள்ளி மாணவர்களுக்கான யாழ் காலாண்டிதழ்…
யூ.பி.எஸ்.ஆர், PT3, மற்றும் எஸ்.பி.எம் மாணவர்களே... உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி... மெதுநிலை மாணவர்களையும் கவனத்தில் கொண்டு வருடத்திற்கு நான்கு முறையென காலாண்டிதழாக அடுத்த ஆண்டு முதல் மலர்கிறது 'யாழ்' இதழ். முற்றிலும் தேர்வினை மையமாகக் கொண்டு , தமிழ் மொழி பாடங்களுக்கென பிரத்தியேகமாக மலரும் இந்த இதழை…
ஆறு மாதமாகிறது எம்எச் 370 காணாமல்போய்
மலேசிய விமான நிறுவனத்தின் எம்எச்370, அதில் பயணித்த 239 பேருடன் காணாமல்போய் ஆறு மாதங்கள் ஆகின்றன. . அதைத் தேடிக் கண்டுபிடிப்பதற்காக பெரும் பொருட்செலவில் மிகப் பெரிய தேடும் தேடும் பணி மேற்கொள்ளப்பட்டது விமானப் போக்குவரத்து வரலாற்றிலேயே செலவுமிக்க தேடலாக அது அமைந்தது. ஆனால், விமானத்தைப் பற்றியும் அதன்…
சுல்தானுடன் சண்டையிட்டு வெற்றிபெற முடியாது: தோழமைக் கட்சிகளுக்கு பாஸ் அறிவுறுத்து
பிகேஆரும் டிஏபியும் சுல்தானின் உத்தரவுப்படி நடப்பதே நல்லது. அப்போதுதான் பக்கத்தான் ரக்யாட் மக்களின் நலனில் கவனம் செலுத்த முடியும் என்று பாஸ் இன்று கூறியது. மந்திரி புசார் பதவிக்கு சிலாங்கூர் சுல்தான் உத்தரவுப்படி இரண்டுக்கும் மேற்பட்ட பெயர்களைப் பரிந்துரைக்க மறுத்திருப்பது சுல்தானை அவமதிக்கும் செயல் என்பதுடன் எதிர்ப்பைக் காட்டும் …
அஸ்மின்: எம்பி சர்ச்சையிலிருந்து மீண்டு வருவோம்
அரண்மனையின் கடிந்துரைக்கு இலக்கானாலும், பிகேஆர் சிலாங்கூர் மந்திரி புசார் சர்ச்சையிலிருந்து மீண்டு வரும் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் அதன் துணைத் தலைவர் அஸ்மின் அலி. எல்லாத் தலைவர்களும் உறுப்பினர்களும் அமைதியுடன் இருக்க வெண்டும் என்றும் நிலைமையை மேலும் மோசமாக்கும் செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றும் அவர் கேட்டுகொண்டார். “இப்போதைக்கு …
தேச நிந்தனைக் குற்றச்சாட்டின்கீழ் மேலும் ஒரு சமூக ஆர்வலர்மீது குற்றச்சாட்டு
ஆட்சியாளர்களை அவமதித்தார் என்பதற்காக ஏனிதிங் பட் அம்னோ (ஏபியு) இயக்கத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர்மீது தேச நிந்தனைக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அலி அப்ட் ஜலில், முகநூலில் 'Regimen Anarki' என்ற தலைப்பில் பதிவிட்டிருந்ததற்காக சுமத்தப்பட்ட அக்குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார். செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி அஹ்மட் பைருஸ் முகம்மட்…
எம்பி விவகாரம்; வேட்பாளர் பட்டியலில் இல்லாதவரையும் சுல்தான் தேர்ந்தெடுக்கலாம்
மந்திரி புசராக நியமனம் செய்யப்படுவதற்கு ஒரு சட்டமன்ற உறுப்பினர் பெரும்பான்மை ஆதரவு பெற்றவரா என்பதை மட்டுமே பரிசீலனை செய்ய வேண்டும் என்பதில்லை என சிலாங்கூர் அரண்மனை கூறுகிறது. அந்த வகையில், அரண்மனைக்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பெயர்ப்பட்டியல்களில் இல்லாத ஒரு சட்டமன்ற உறுப்பினரைக்கூட மந்திரி புசாராக சுல்தான் தெரிவு செய்யலாம். “மந்திரி …
சுல்தானின் உத்தரவுக்கு பிகேஆரும் டிஎபியும் பணிய மறுத்தது துரோகச் செயலாகும்
சிலாங்கூர் மந்திரி புசார் பதவிக்கு ஒவ்வொரு கட்சியும் இரண்டுக்கு மேற்பட்ட பெயர்களை தாக்கல் செய்ய வேண்டும் என்ற சுல்தானின் கட்டளைக்கு பிகேஆரும் டிஎபியும் பணிய மறுத்திருப்பது துரோகச் செயலாகும் என்று அரண்மனை குற்றச்சாட்டியுள்ளது. இன்று காலையில் வெளியிடப்பட்ட அறிக்கையில் சுல்தானின் தனிப்பட்ட செயலாளர் முகமட் முனிர் பாணி…
பிகேஆரும் டிஏபியும் எதிர்ப்பு காட்டுகின்றன: அரண்மனை குற்றச்சாட்டு
மந்திரி புசார் பதவிக்கு சிலாங்கூர் சுல்தான் உத்தரவுப்படி இரண்டுக்கும் மேற்பட்ட பெயர்களைப் பரிந்துரைக்க மறுத்திருப்பது அவமதிக்கும் செயல் என்பதுடன் எதிர்ப்பைக் காட்டும் செயலுமாகும் என சிலாங்கூர் அரண்மனை கூறியுள்ளது. பாஸ் மட்டுமே ஆட்சியாளரின் உத்தரவுக்கேற்ப நடந்து கொண்டிருக்கிறது என சிலாங்கூர் சுல்தானின் தனிச் செயலாளர் முகம்மட் முனிர் பானி ஒர் …
தேச நிந்தனைச் சட்டம் நீக்கப்படுமா, இல்லையா? நஜிப்புக்கே தெரியவில்லை
தேச நிந்தனைச் சட்டத்தை அகற்றப்போவதாக 2012-இல் வாக்குறுதி அளித்த பிரதமர் இப்போது தயங்குவதாக தெரிகிறது. “தேச நிந்தனைச் சட்டம் தொடர்பில் அரசாங்கம் பல தரப்பினருடனும் கலந்துரையாடும். “மக்களுக்கு வருத்தம்தரும் எந்த முடிவையும் அரசாங்கம் செய்யாது”, என்று நஜிப் அப்துல் ரசாக் கூறியுள்ளார். அந்தக் காலனிகால- சட்டம் தொடர்ந்து பயன்படுத்தப்படுவதை…
சுல்தான் கொடுத்தாலும் நிராகரிப்போம்!
இன்று நடந்த பாஸ் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் சிலாங்கூர் மாநில மந்திரி புசார் வேட்பாளர் நியமன விவகாரத்தில் அதன் தடுமாற்ற நிலைப்பாடு தெளிவாகத் தென்பட்டது. பாஸ் கட்சியின் துணைத் தலைவர் முகமட் சாபு மந்திரி புசார் பதவியை சுல்தான் பாஸ் சட்டமன்ற உறுப்பினருக்கு கொடுத்தாலும் கட்சி…
கெராக்கான் முன்னாள் தலைமை நீதிபதியை வன்மையாகக் கண்டிக்கிறது
நாட்டின் சுதந்திரத்திற்கு மலாயக்காரர்-அல்லாதவர்களின் பங்களிப்பை சிறுமைப்படுத்துவதன் வழி மலேசியர்களுக்கிடையில் வெறுப்புணர்வை தூண்டி விடும் முன்னாள் தலைமை நீதிபதியின் செயலை கேராக்கான் வன்மையாகக் கண்டிக்கிறது. "இது அனைத்து மலேசியர்களுக்கும் எதிரான ஓர் அப்பட்டமான குற்றம். இது மலேசிய சமுதாயத்தில் வெறுப்புணர்வுக்கு வித்திடுகிறது", என்று கெராக்கான் கட்சியின் உதவித் தலைவர்…
டிஏபி: ஹாடியின் சாதனைதான் என்ன?
பிகேஆர் தலைவர் அசிசாவைக் குறைகூறும் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங்-கை டிஏபி தலைவர்கள் சாடியுள்ளனர். இரண்டு மாநிலங்களை பிஎன்னிடம் பறிகொடுத்த அவருக்கு வான் அசிசாவைக் குறைசொல்லும் தகுதி இல்லை என்றவர்கள் கூறினார். “இவர் ஒரு தவணைக்கு மட்டும் மந்திரி புசாராக இருந்துவிட்டு திரெங்கானுவைப் பறிகொடுத்தார். கெடா மந்திரி …
ஹாடி அவரே சொன்ன ஆலோசனையைப் பின்பற்றி பாஸிலிருந்து விலகுவது நல்லது
பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங், பக்கத்தான் உணர்வுடன் பாஸுக்குத் தலைமைதாங்க இயலாவிட்டால் அக்கட்சியிலிருந்து விலகுவதே நல்லது என பிகேஆர் மகளிர் பகுதி கூறியுள்ளது. பாஸ் மத்திய குழு சிலாங்கூர் மந்திரி புசார் பதவிக்கு பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயிலை நியமனம் செய்வதை ஏற்றுக்கொண்ட …


