சட்டவிரோத பந்தயம் மற்றும் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுவதற்குப் பெயர்போன ஒரு பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில், 45 கார்களைப் பரிசோதித்த போலீசார் 32 சம்மன்களை வழங்கியுள்ளனர். இன்று அதிகாலை இங்குள்ள லெபு மெதினி உத்தாமா பகுதியில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சட்டவிரோத பந்தயம் மற்றும் ஆபத்தான முறையில் வாகனம்…
கைருடின்: அல்லாவுக்குத்தான் பயம் வழக்குகளுக்கல்ல
1மலேசியா மேம்பாட்டு நிறுவனம் (1எம்டிபி) தொடர்பில் போலீஸ் புகார் செய்தது அம்னோ உயர்மட்ட தலைவர்களுக்கு ஆத்திரத்தை உண்டு பண்ணியிருக்கலாம் என்பது பற்றி பத்து கவான் அம்னோ துணைத் தலைவர் கைருடின் அபு ஹசான் கவலைப்படவில்லை. “அதைப் பற்றிய கவலையே இல்லை. ஏனென்றால், உண்மைக்காக போராடுவதில் நம்பிக்கை கொண்டவன் நான்”,…
ஹுடுட் சட்டம் கொண்டுவருவதில் பாஸ் பின்வாங்காது
கிளந்தானில் ஹுடுட் சட்டத்தைக் கொண்டுவருவதில் உறுதியாக இருப்பதாக பாஸ் இன்று மீண்டும் வலியுறுத்தியது. அதேவேளை, புத்ரா ஜெயாவைக் கைப்பற்ற விரும்பினால் பக்கத்தான் ரக்யாட் ஹுடுட்டைக் கொண்டுவரும் பாஸின் முயற்சியை நிராகரிக்க வேண்டும் என்று டிஏபி ஆண்டுக்கூட்டத்தில் கூறியதற்காக டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங்-கையும் அது சாடியது.…
அல்லாஹ்’விவகாரம் பற்றிய நேர்காணலுக்காக பிஎப்எம்-க்கு அபராதம்
‘மலேசிய தொடர்பு, பல்லூடக ஆணையம் பிசினஸ் ரேடியோ நிலையத்துக்கு ரிம10,000 அபராதம் விதித்துள்ளது. 2013, அக்டோபர் 21-இல் இஸ்லாமிய கல்விமான் ரேஸா அஸ்லானின் நேர்காணலை ஒலியேற்றியதற்காக இந்த அபராதம். அந்நேர்காணலில் ரேஸா, மலேசியாவில் முஸ்லிம்-அல்லாதார் ‘அல்லாஹ்’ என்ற சொல்லைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டிருப்பதைக் குறை கூறியிருந்தார்.
புவாட்: சைபுடின் கட்சி மாறும்படி என்னைக் கேட்டுக்கொண்டார்
அம்னோ உச்சமன்ற உறுப்பினர் முகம்மட் புவாட் ஜர்காஷி, பிகேஆர் முன்னாள் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தம்மை அணுகி, கட்சிமாறி எதிரணியை ஆதரிக்குமாறு கேட்டுக்கொண்டார் என கோலாலும்பூர் உயர் நீதிமன்றத்தில் இன்று கூறினார். அப்போது தைவானில் 30 பிஎன் எம்பிகளுடன் ஒரு தங்குவிடுதியில் இருந்ததாகவும் பின்னிரவு மணி…
சட்டத்தில் இல்லாத சட்டத்தின் கீழ் பாதிரியாரிடம் விசாரணை நடத்திய ஜொகூர்…
"அல்லா" என்ற சொல் அடங்கிய துதிப் பாடல் புத்தகங்களை வைத்திருந்த ஒரு பாதிரியாரை சட்டத்திலிருந்து அகற்றப்பட்ட ஒரு சட்டத்தின் கீழ் விசாரித்த போலீசார் ஒரு பெரும் தவறை புரிந்துள்ளனர். பாதிரியார் சிரில் மன்னயாகம் தண்டனைச் சட்டத் தொகுப்பு செக்சன் 298A கீழ் விசாரிக்கப்பட்டார் என்று ஜொகூர் மாநில…
பிஎன் எம்பி: கட்சித்தாவலைத் தடுக்கவே தைவான் பயணம்
2008-இல், பிஎன் எம்பிகள் பக்கத்தான் ரக்யாட்டுக்குக் கட்சிமாறி விடுவார்களோ என்ற பயத்தினால்தான் சுமார் 40 பேர் செப்டம்பர் 16-க்கு முன்னதாக தைவானுக்கு அனுப்பப்பட்டார்கள் என்பதை பிஎன் எம்பி ஒருவர் ஒப்புக்கொண்டார். பிரதமர் நஜிப் உள்பட, பிஎன் தலைவர்கள் நெடுகிலும் அதை மறுத்து வந்துள்ளனர். இன்று கோலாலும்பூர் உயர் நீதிமன்றத்தில், …
யுஎம் துணை வேந்தரின் கொடும்பாவி எரிப்பு
“யுஎம் எண்மர்” மீதான குற்றச்சாட்டுகளைக் கைவிட வேண்டுமென்ற கோரிக்கைக்குப் பல்கலைக்கழகம் மறுமொழி தெரிவிக்காததால் ஆத்திரமடைந்த மலாயாப் பல்கலைக்கழக மாணவர்கள் துணை வேந்தர் ரொஹானா யூசுப்பின் கொடும்பாவியை இன்று எரித்தனர். வேந்தர் கட்டிடத்துக்கு வெளியில் கொடும்பாவியை எரித்த மாணவர்கள் சில அறிவிப்பு அட்டைகளையும் ஏந்தியிருந்ததாக இஸ்லாமிய மாணவர் சங்கத் தலைவர் …
1எம்டிபி-க்குப் பச்சை விளக்கு காண்பித்தது ஏன்? முகைதினிடம் வினவுகிறது பாஸ்
1மலேசியா மேம்பாட்டு நிறுவன(1எம்டிபி) விவகாரத்தில் தம் நிலப்பாட்டைத் துணைப் பிரதமர் முகைதின் யாசின் எடுத்துரைக்க வேண்டுமென பாஸ் கோரிக்கை விடுத்துள்ளது. நஜிப்பைத் தூக்கவும் பிரதமர் பதவியைக் கைப்பற்றவும் அவ்விவகாரத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தும் நோக்கத்தில் முகைதின் மவுனமாக இருக்கக் கூடாது என பாஸ் தகவல் பிரிவுத் தலைவர் மாபுஸ் …
‘இன வெறுப்பைத் தூண்டுவது’ முன்னாள் சிஜே-க்கு அழகல்ல: மசீச சாடல்
சீனர்கள் அதிகாரத்தைக் கைப்பற்ற தருணம் பார்த்திருப்பதாகக் கூறிய முன்னாள் தலைமை நீதிபதி(சிஜே) அப்துல் ஹமிட் முகமட்டை மசீச கடிந்து கொண்டிருக்கிறது. “இதை, மலேசியரிடையே, குறிப்பாக, மலாய்க்காரர்களுக்கும்- மலாய்க்காரர்- அல்லாதாருக்குமிடையில் வெறுப்பைத் தூண்டிவிடும் ஒரு பொறுப்பற்ற முயற்சியாகப் பார்க்கிறோம்”, என மசீச விளம்பரப் பிரிவுத் தலைவர் சாய் கிம் சென் கூறினார்.…
கைதியின் மரணம் தொடர்பில் போலீஸ் மவுனம் காப்பது வெட்கக்கேடான விசயம்
அண்மையில் போலீஸ் காவலில் இருந்த தடுப்புக்கைதி ஒருவர் இறந்துபோனது பற்றிப் போலீசாரிடமிருந்து சரியான விளக்கம் கிடைக்கவில்லை என வழக்குரைஞர் கோபிந்த் சிங் ஆத்திரமடைந்துள்ளார். சைட் முகம்மட் அஸ்லான் சைட் முகம்மட் நவம்பர் 4-இல் போலீஸ் காவலில் இருந்தபோது இறந்தது பற்றி விளக்கம் கேட்டு போலீசுக்குக் கடிதம் எழுதியதாகவும் ஆனால்,…
அன்வார்: கிளந்தான் ஹுடுட்மீது சட்டமன்றக்கூட்டம் நடத்துவதை அறியேன்
ஹுடுட் சட்டத்தைக் கொண்டுவருவது பற்றி விவாதிக்க கிளந்தான் பாஸ் அரசு சிறப்புச் சட்டமன்றக் கூட்டம் நடத்தத் திட்டமிட்டிருப்பது பற்றித் தமக்குத் தெரியாது என்கிறார் எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம். “என்ன நடக்கிறது என்பதை அறியேன். “ஆனால், எது செய்தாலும் தகவல் சொல்வதாக வாக்களித்திருக்கிறார்கள். பக்கத்தான் ரக்யாட் செயலகத்திடம் அது …
மறுப்பதில் பயனில்லை: போலீசாருக்கு அறிவுறுத்து
போலீஸ் படையின் நேர்மையின்மீது மக்கள் கொண்டுள்ள எதிர்மறை கருத்தை மறுப்பதில் பயனில்லை என உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜைடி ஹமிடி கூறினார். போலீசில் நேர்மை என்பது உயர் அதிகாரிகளிடம் தொடங்க வேண்டும். அப்போதுதான் கீழ்நிலை அதிகாரிகளும் அதைப் பின்பற்றுவார்கள். “மீன், தலைப்பகுதியில்தான் அழுகத் தொடங்குகிறது. தலைவர்களாக இருக்கும் நாம்தான் …
பேராசிரியர்: சோம்பேறி மலேசியர்களால் குடியேறிகள் ‘தவக்கே’ஆகிவிடுகிறார்கள்
மலேசியர்களின் சோம்பேறித்தனம்தான் அன்னிய தொழிலாளர்கள் “தவக்கேகள்” ஆவதற்கு உதவுகிறது எனத் தேசிய பேராசிரியர் மன்றச் செயலாளர் ராடுவான் சே ரோஸ் வருத்தத்துடன் குறிப்பிட்டார். “சோம்பேறிகளாக இருக்கிறோம். நம் மக்கள் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்வதில்லை. அதேவேளை வாய்ப்புகள் கிடைப்பதில்லை என முறையிடவும் செய்கிறார்கள். அவர்களுக்கு (அன்னிய தொழிலாளர்கள்) மட்டும் வாய்ப்பு எப்படிக் …
மக்களிடம் பொய் சொல்லாதீர், நஜிப்பிடம் கூறுகிறார் முன்னாள் தேர்தல் ஆணையத்…
மக்களிடம் பொய் சொல்வதை நிறுத்தி விட்டு, மாறாக அவர் "தமது வேலையைச் செய்ய வேண்டும்" என்று பெர்காசா உதவித் தலைவர் அப்துல் ரஷிட் அப்துல் ரஹ்மான் பிரதமர் நஜிப் ரசாக்கை கேட்டுக்கொண்டார். தேர்தல் ஆணையத்தின் முன்னாள் தலைவரான அப்துல் ரஷிட் ஓர் அறிக்கையைக் குறிப்பிட்டு அந்த அறிக்கை…
அம்னோ மலாய்க்காரர்-அல்லாதவர்களை நாட்டை விட்டு விரட்டுகிறது
அம்னோ மலாய்க்காரர்-அல்லாதவர்களையும் முஸ்லிம்-அல்லாதவர்களையும் அச்சுறுத்தி அவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற விரும்புகிறது என்று டிஎபி சட்டமன்ற உறுப்பினர் தெங்கு ஸுல்புரி ஷா ராஜா பூஜி கூறினார். இதற்காகத்தான் மலாய்க்காரர்களின் உரிமைகள், இஸ்லாம் மற்றும் ஆட்சியாளர்கள் ஆகியவற்றை பாதுகாக்க வேண்டிய தேவை என்ற பெயரில் அம்னோ தேசிய நிந்தனைச்…
டிஏபி: 14வது பொதுத் தேர்தலுக்குப் போகும்போதே பிரதமரையும் தீர்மானித்து விட…
14வது பொதுத் தேர்தலில் போட்டியிடும்போதே பிரதமர் பதவி ஏற்கப்போகின்றவர் யார் என்பதையும் பக்கத்தான் ரக்யாட் பெயர் குறிப்பிட்டு விட வேண்டும் என டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் கூறியுள்ளார். டிஏபி ஆண்டுக் கூட்டத்தில் உரையாற்றிய லிம், பக்கத்தான் முக்கியமான விவகாரங்களில் தெளிவான கருத்தொற்றுமை இன்றி தேர்தலில் …
எம்எச் 370: தேடும் பணி மே மாதம் முடிவடையலாம்
இந்தியப் பெருங்கடலின் தென் பகுதியில் 60,000 சதுர கிலோமீட்டர் பரப்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் எம்எச் 370-ஐத் தேடும் பணி மே மாதம் முடிவுக்கு வரலாம். மலேசிய விமான நிறுவனத்தின் காணாமல்போன அவ் விமானத்தைக் கடலடியில் தேடும் மாபெரும் பணியில் ஈடுபட்டுள்ள மூன்று கப்பல்களும் மூன்றில்- இரண்டு பங்கு பகுதியில் தேடலை …
பெர்னாமா டிவி மூடப்படலாம்: அதன் பணியாளர்களுக்கு எச்சரிக்கை
அக்டோபர் மாதத்திலிருந்து பாதிச் சம்பளத்தை மட்டுமே பெற்று துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் பெர்னாமா டிவி (பிடிவி) ஊழியர்களிடம் அந்நிறுவனம் மூடவேண்டிய நிலை வரலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை நடந்த சந்திப்பின்போது, நிறுவனம் தொடர்ந்து இழப்பை எதிர்நோக்கினால் அது இழுத்து மூடப்படலாம் என பெர்னாமா மேலாளர் சுல்கிப்ளி சாலே கூறியதாக …
வெளிநாட்டுப் பயணத்தைக் குறைப்பீர்: பிரதமருக்கு பெர்காசா அறிவுறுத்து
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் வெளிநாடு செல்வதைக் குறைத்துக்கொள்ளாவிட்டால் பதவியை இழக்க நேரலாம் என பெர்காசா தலைவர் இப்ராகிம் அலி எச்சரிக்கிறார். “உங்கள் பதவி பறிபோகாதிருக்க வெளிநாடு செல்வதைக் குறைத்துக்கொள்ள வேண்டும்”, என பெர்காசா ஆண்டுக்கூட்டத்தில் பேசிய இப்ராகிம் குறிப்பிட்டார். மற்ற நாட்டுத் தலைவர்கள் இந்த அளவுக்கு வெளிநாட்டுப் …
டிஏபி மாநாட்டில் ஹுடுட்டுக்குக் கண்டனம்: பாஸ் தலைவர்கள் வரவில்லை
இன்று தொடங்கிய டிஏபி ஆண்டுக் கூட்டத்தில் நாட்டில் சமயச் சட்டங்களை அமல்படுத்தும் முயற்சி வெகுவாகக் குறை சொல்லப்பட்டது. சுபாங் ஜெயாவில் நடைபெறும் கூட்டத்தில் தொடக்கவுரை ஆற்றிய டிஏபி இடைக்காலத் தலைவர் டான் கொக் வாய், “அண்மைக்காலமாக பல தரப்புகள் சமய அடிப்படையிலான சட்டங்களைக் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. …
1எம்டிபி கடனை கட்டுவதற்கான கால நீட்டிப்பை பேங் நெகாராவிடமிருந்து பெற்றது
சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் 1மலேசியா மேம்பாட்டு பெர்ஹாட் (1எம்டிபி) அதன் கட்டப்படாமலிருக்கும் கடனைக் கட்டுவதற்வதற்கான கால நீட்டிப்பை பேங்க் நெகாராவிடமிருந்து பெற்றுள்ளது என்று "வட்டாரங்களை" மேற்கோள் காட்டி மூத்த செய்தியாளர் எ. காடிர் ஜாயின் தமது வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். இக்கால நீட்டிப்புக்கான கோரிக்கையை பேங் நெகாராவின் ஆளுனர் ஸெட்டி…
சிடி அப்துல்லா: மலேசிய அரசாங்கம் இன்னும் முன்னாள் கம்யூனிஸ்ட்களுக்கு எதிராகப்…
மலேசியா எவ்வளவுதான் தூற்றினாலும் தாய்லாந்தில் வாழ்ந்து வரும் முன்னாள் கம்யூனிஸ்ட் வீரர்கள் தொடர்ந்து போரை முடிவிற்கு கொண்டு வந்த ஹதாய் ஒப்பந்தத்தை கொண்டாடி மகிழ்வர். 25 ஆண்டுகளை கடந்து விட்ட ஹதாய் ஒப்பந்தம் டிசம்பர் 2, 1989 இல் ஹதாயில் கையெழுத்திடப்பட்டது. மலேசியா மற்றும் தாய்லாந்து அரசாங்களுடன்…
பழனிவேலை வரவேற்க வருவோருக்கு ‘ரொக்கம்’ கொடுக்கப்படும் என்ற செய்திக்கு யார்…
பெரு நாடு சென்று திரும்பும் திரும்பும் மஇகா தலைவர் ஜி.பழனிவேலை வரவேற்க விமான நிலயம் வருவோருக்குப் பணம் கொடுக்கப்படும் என்று கூறும் குறுஞ்செய்தி(எஸ்எம்எஸ்)-க்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என மஇகா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ‘நாளை, பிற்பகல் மணி 2.30க்கு கேஎல்ஐஏ-இல் ஒன்றுகூடி நம் பாசத்துக்குரிய தலைவர் ஜி.பழனிவேலுக்கு நம் ஆதரவைக் …


