1எம்டிபி-க்கு எதிராக அம்னோ கட்சிக்காரர் போலீசில் புகார்

அம்னோ  தொகுதித்  தலைவர் ஒருவர், கடன்  தொல்லைகளை  எதிர்நோக்கும் பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கின் உருவாக்கமான  1மலேசியா  மேம்பாட்டு  நிறுவன(1எம்டிபி)த்துக்கு  எதிராக  போலீசில்  புகார்  செய்துள்ளார். பினாங்கு   பத்து  கவான்  அம்னோ  தொகுதித்  தலைவர்  கைருடின்  அபு  ஹசான்  இன்று  பிற்பகல் கோலாலும்பூர்  டாங்  வாங்கி  போலீஸ்  நிலையத்தில் …

பகுதிச் சம்பளமே வழங்கப்பட்டதால் பிடிவி பணியாளர்கள் மீண்டும் விடுப்பில் சென்றனர்

சம்பளம்  கொடுபடாதிருந்த  பெர்னாமா  டிவி (பிடிவி) பணியாளர்கள்  சுமார்  30  பேர்,  இரண்டு  நாள்களுக்கு  முன்  நவம்பர்  ,மாதத்துக்கான  பகுதிச்  சம்பளமாக   ரிம500  மட்டுமே  வழங்கப்பட்டதை  அடுத்து  நேற்று   மீண்டும்  விடுப்பில்  சென்றனர். மலேசியாகினிக்குக்  கிடைத்த  கடிதமொன்றில் “பெர்னாமா டிவி சைனர்ஜி முழுச்  சம்பளத்தைக்  கொடுத்தாலொழிய  டிசம்பர்  10-இலிருந்து…

பல்கலைக்கழக தேர்தலில் முறைகேடுகள்: யுயுஎம் மாணவர்கள் குற்றச்சாட்டு

யுனிவர்சிடி  உத்தாரா மலேசியா (யுயுஎம்) மாணவர்  மன்றத்தைச்  சேர்ந்த  மாணவர்  குழு  ஒன்று,  நவம்பர்  27 தேர்தலில்  பல்கலைக்கழக  அதிகாரிகள்  குறுக்கீடு  இருந்ததாகக்  கூறுகின்றது. மாணவர்களுக்குப்  பகலுணவு  வழங்கி  அவர்களைப்  பல்கலைக்கழகத்துக்கு  வேண்டிய  வேட்பாளர்களுக்கு  வாக்களிக்குமாறு  கேட்டுகொண்டது  உள்பட  பல்கலைக்கழக  அதிகாரிகள் பல திருகுதாளங்களில்  ஈடுபட்டார்களாம். ட்ரேன்போர்மாசி  மஹாசிஸ்வா …

அன்வார் சிறை சென்றால் பக்கத்தான் ஆட்டம் முடிந்துவிடும்

அன்வார்  இப்ராகிம்  சிறை  செல்லும் சாத்தியம்  இருப்பதால்தான்  லிம்  கிட்  சியாங்  பக்கத்தான்  எதிர்காலம்  குறித்து  நம்பிக்கை  இழந்து  பேசுகிறாராம்.  அம்னோ  தலைவர்  ஒருவர். கூறுகிறார். “அன்வார்  சிறைக்குச்  சென்றால் யார்  எதிரணித்  தலைவர்  ஆவார்”, என  முகம்மட்  புவாட்  ஸார்காஷி  வினவினார். “லிம், (அப்பதவிக்கு) வருவதை  பாஸ் …

பாலாவின் துணைவியார் நஜிப்புக்கு எதிராகத் தொடுத்திருந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது

  காலஞ்சென்ற தனிப்பட்ட துப்பறிவாளர் பி. பாலசுப்ரமணியத்தின் துணைவியார் எ. செந்தமிழ் செல்வி பிரதமர் நஜிப், அவரது துணைவியார் ரோஸ்மா மற்றும் இதர எழுவருக்கு எதிராகத் தொடுத்திருந்த ரிம1.9 மில்லியன் வழக்கை கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது. பிரதிவாதிகளுக்கு எதிராக வழக்கு தொடர்வதற்கான சட்டப்பூர்வமான தகுதி…

நேப்பாளி பெண் தண்டிக்கப்பட்டதைத் தற்காக்கும் ஏஜி-இன் செயல் ஏமாற்றமளிக்கிறது

நேப்பாள் நாட்டவரான  நிர்மலா  தாப்பாவின்  வழக்குரைஞர், நிர்மலா குற்றஞ்சாட்டப்பட்டு  தண்டிக்கப்பட்டது  சரிதான்  என்று  வாதாடும்  சட்டத்துறைத்  தலைவரின் (ஏஜி)  செயல்  “ஏமாற்றமும்  வியப்பும்” அளிப்பதாகக்  கூறினார். நிர்மலாவுக்குக்  கருக்கலைப்பு  செய்துகொண்டதற்காக  ஓராண்டுச்  சிறைத்  தண்டனை  விதிக்கப்பட்டதாக  அறிவிக்கப்பட்டுள்ளது. குற்றப்  பத்திரிகையைக்  கூர்ந்து ஆராய்ந்தால், அவர்  புக்கிட்  மெர்தாஜாம்  மருத்துவ …

‘யுஎம் ஆக்கிரமிப்பாளர்கள்’ கலைந்துசெல்ல உத்தரவு

யுனிவர்சிடி  மலாயா  நுழைவாயிலில்  கூடாரமிட்டு  ‘யுஎம்  ஆக்கிரமிப்பு’ இயக்கத்தை  நடத்தும்  மாணவர்களைக்  கலைந்து  செல்லும்படி  போலீசும்  கோலாலும்பூர்  மாநகராட்சி  மன்றமும் (டிபிகேஎல்)  உத்தரவிட்டுள்ளன. நேற்று  முதல் அந்த  இயக்கத்தை நடத்திவரும்  மாணவர்களைக் கலைப்பதற்கு  போலீசாரும்  டிபிகேஎல்  அமலாக்க  அதிகாரிகளுமாக  சுமார்  30  பேர்  பிற்பகல் 3 மணிக்கு  அங்கு …

ரோன்95 விலையை ரிம1.90க்குக் குறைக்க புத்தாண்டுக்கு இரவில் ஆர்ப்பாட்டம்

கடந்த  ஆண்டு  புத்தாண்டுக்கு  முந்திய  நாள் இரவுக்  கொண்டாட்டங்களில்  நிகழ்ந்தது  போலவே  இவ்வாண்டும்  டட்டாரான்  மெர்டேகாவில் பேரணி  ஒன்று  நடைபெறும். இம்முறை ரோன்95  விலையை  லிட்டருக்கு  ரிம1.90  என்று  குறைக்கக்  கோரிக்கை  விடுக்கப்படும். கிராக்கான்  துருன்  கோஸ்  சாரா  ஹிடுப்(துருன்), சொலிடேரிடி   அனாக்  மூடா  மலேசியா (எஸ்ஏஎம்எம்)  ஆகிய …

ஐந்து முன்னாள் ஐஎஸ்ஏ கைதிகளுக்கு ரிம4.5 மில்லியன் இழப்பீடு

பத்து  எம்பி  தியான்  சுவா,  ஹுலு  கிளாங்  சட்டமன்ற  உறுப்பினர்  சாஆரி  சுங்கிப்  உள்பட   முன்னாள்  உள்நாட்டுப்  பாதுகாப்புச்  சட்ட(ஐஎஸ்ஏ)  கைதிகள் ஐவருக்கு  ரிம4.5 மில்லியன் இழப்பீடு கொடுக்க  முறையீட்டு  நீதிமன்றம்  இன்று  உத்தரவிட்டது. மற்ற  மூன்று  சமூக  ஆர்வலர்கள்  ஹிஷாமுடின்  ரயிஸ்,  முன்னால்  பிகேஆர்  உச்சமன்ற  உறுப்பினர் …

மேன்மேலும் சங்கடத்துக்கு ஆளாக்க வேண்டாம்: எம்பி அரசாங்கத்துக்கு அறிவுறுத்து

அரசாங்கம்  அமெரிக்கத்  தூதர்  ஜோசப்  யுன்னைக்  கூப்பிட்டு  அனுப்பியது  ஏன்  என்று  வினவும்  பாடாங்  செறாய்  எம்பி  என். சுரேந்திரன்  இப்படிப்பட்ட  செயல்களால்  நாடு  மேலும்  சங்கடமான  நிலைக்குத் தள்ளப்படும்  என்கிறார். தேச நிந்தனைச்  சட்ட  விவகாரத்தில்  நஜிப்  அடித்த  பல்டி  குறித்து  யுன்  தெரிவித்த  அதே கவலை …

அன்வார், இனவாதத்தைத் தற்காக்க இஸ்லாத்தைப் பயன்படுத்தும் எம்சிசி-க்குக் கண்டனம்

எதிரணித்  தலைவர்  அன்வார்  இப்ராகிம்,  சில  தரப்பினர்  இஸ்லாத்தைப்  பயன்படுத்தி “இனவாதத்தையும்  அப்பட்டமான  அநீதியையும்” தற்காக்க  முனைவது அச்சமயத்தையும்  முஸ்லிம்  சமூகத்தையும்  அவமதிப்பதாகும்  எனச்  சாடியுள்ளார். பேச்சுரிமையையும்  மனித  உரிமையையும் மதிப்பது  மலாய்க்காரர்  வாழ்வுக்கும்  இஸ்லாத்துக்கும்  ஆபத்து  என்ற  கருத்தை  அவர்  நிராகரித்தார். ஆனால், அதைத்தான்  வலச் சாரி …

யுஎம் மாணவர்கள் பல்கலைக்கழகத்தை ஆக்கிரமிப்பார்கள்

மலாயாப்  பல்கலைக்கழக  மாணவர்  குழு  ஒன்று,  ஏழு  யுஎம்  மாணவர்களுக்குக்  கொடுக்கப்பட்ட  தண்டனை இரத்துச்  செய்யப்படும்வரை எதிர்ப்பைக்  காண்பிக்கும்  நோக்கில்  பல்கலைக்கழகத்தில்  முகாமிட்டுத்  தங்கும். அந்த  முகாமிடும் இயக்கம்  பல்கலைக்கழக  நுழைவாயிலுக்கு  வெளியில்  இன்றிரவே  தொடங்கும்  என  அதன்  தலைவர்  வான்  நூர் ஸியாமிமி  வான் சாஜிரி  கூறினார்.…

வான் அசிசா: பக்கத்தான் உறவுகளை மேம்படுத்திக்கொள்ள முடியும்

பக்காத்தான்  ரக்யாட்  கட்சிகளுக்கிடையில் தொடர்புகளை மேம்படுத்திக்கொள்ள  முடியும்  என பிகேஆர்  தலைவர்  டாக்டர்  வான்  அசிசா  கூறியுள்ளார். கடந்த  ஆறு  மாதங்களில்  பக்கத்தான்  தலைவர்கள்  சந்திக்கவே  இல்லை  என்பதால்  அடுத்தடுத்த  ஆண்டுகளில் அக்கூட்டணி  நிலைத்திருப்பதே  சந்தேகம்  என  டிஏபி  நாடாளுமன்றத்  தலைவர்  லிம்  கிட்  சியாங் குறிப்பிட்டிருப்பது  பற்றிக்…

அறிவிப்புப் பலகையில் ஜாவி இருப்பது ‘கட்டாயமல்ல’

மலாக்கா  சீனப்  பள்ளிகள்  அவற்றின்  அறிவிப்புப்  பலகையில்  ஜாவி எழுத்துகளைச்  சேர்த்துக்கொள்வது  கட்டாயமல்ல என மலாக்கா  மலேசிய  கலைக்கழகம்(இஸ்மா) விளக்கமளித்துள்ளது.  . “ஊக்கமளிக்கிறோம். அது  ஒன்றும்  கட்டாயமல்ல”, என இஸ்மா  மேலாளர்  முகம்மட்  நஸ்ருடின்  அப்ட்   ரஹ்மான்  மலேசியாகினி  தொடர்புகொண்டு  கேட்டதற்குத்  தெரிவித்தார்.

ஃபாஹ்மி: யுஎம்-மிடம் இரக்க உணர்வே இல்லை

இன்னும்  மூன்று  வாரங்களில்  தேர்வுகள் என்ற  நிலையில் தம்மையும்  ஸவ்ஆன் ஷம்சுடினையும்  உடனடியாக  நீக்குவதற்கு மலாயாப்  பல்கலைக்கழகம்  செய்துள்ள  முடிவு  அதனிடம்  கொஞ்சமும்  ஈவிரக்கம்  இல்லை  என்பதைத்தான்  காண்பிக்கிறது  என  முன்னாள்  மாணவர்  தலைவர் ஃபாஹ்மி  சைனல்  கூறினார். ஃபாஹ்மிக்கு இது இறுதி  ஆண்டு. இந்தத்  தண்டனை  எதிர்பார்க்கப்பட்டதுதான் …

அமெரிக்க அறிஞர்: முஸ்லிம்கள் பாதுகாப்பற்ற உணர்வுடன் வாழ்வது ஏன்?

முஸ்லிம்கள்  தங்களுக்குப்  பாதுகாப்பில்லை  என  நினைப்பது ஏன்  என்பது  அமெரிக்க  இஸ்லாமிய  கல்விமான்  இப்ராகிம்  மூசாவுக்குப்  புரியவில்லை. “உலக  மக்கள்தொகையில்  1.2 பில்லியன்  பேர்  முஸ்லிம்கள். அவர்களில்  பலர்  பெரும்  பணக்காரர்கள், உலகின்  எண்ணெய்  தொழிலே  அவர்களின்  கைகளில்தான். “பிறகு  ஏன் பாதுகாப்பில்லை  என்று  நினைக்க  வேண்டும்?”, என்றவர்…

கடந்த ஆண்டில் ஊழல் அதிகரித்தது என்பதே மலேசியர்களின் கருத்து

மலேசியர்களில்  கிட்டத்தட்ட  பாதிப்பேர்,  அதாவது  49 விழுக்காட்டினர் கடந்த  ஆண்டில்  ஊழல்  அதிகரித்திருந்தது  என  நம்புகின்றனர்.  மெர்டேகா  ஆய்வு  மையம்  மேற்கொண்ட  கருத்துக்கணிப்பு  ஒன்று   இதைக்  காண்பிக்கிறது. அதே  வேளை  ஊழல் நாட்டின்  கடுமையான  பிரச்னைதான்  என்ற  எண்ணம்  77  விழுக்காட்டினரிடம் இன்னமும்  இருக்கவே  செய்கிறது  என்பதும்  அந்தக்…

ஜாவி-க்கு இடமளிக்க சீனப் பள்ளிகள் மறுப்பு

மலாக்கா  சீனர்  கல்வி  முற்போக்குச்  சங்கம்,  சீன மொழிப் பள்ளிகளின்  அறிவிப்புப் பலகைகளில் ஜாவி  எழுத்துகளிலும்  எழுதப்பட  வேண்டும்  என மாநில கல்வித்  துறை  கேட்டுக்கொண்டிருப்பதாகக்  கூறியுள்ளது. அத்துறையின் இஸ்லாமியக் கல்விப் பிரிவுத்  தலைவர்  அஹமட்  ஹமிஸி  அபு  ஹசான்,  மலாக்கா  தலைமையாசிரியர்களுக்கு  அனுப்பி வைத்துள்ள  அறிவிக்கை  ஒன்று …

ரபிஸி: மன்னிப்பு கேட்க முடியாது, வாருங்கள் நீதிமன்றம் செல்வோம்

  பிகேஆர் உதவித் தலைவரும் பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினருமான ரபிஸி ரமலி தாம் மன்னிப்பு கேட்கப் போவதில்லை என்று பிரதமர் நஜிப்பிடமும் அவரது துணைவியார் ரோஸ்மாவிடமும் கூறியுள்ளார். தாம் தமது அறிக்கையை நீதிமன்றத்தில் தற்காத்துக்கொள்ளப் போவதாக ரபிஸி தெரிவித்தார். கடந்த வாரம், பிரதமர் நஜிப்பின் வழக்குரைஞர்கள் 14 நாட்களுக்குள்…

அன்வார்- கிட் சியாங் கூட்டம் ஆட்சிக்கு வந்தால் யாரையும் விட்டு…

அன்வார்  இப்ராகிமும்  கிட்  சியாங்கும்  கூட்டரசு  அரசாங்கத்தைக்  கைப்பற்றி  ஆட்சி நடத்தினால் மனம்போன  போக்கில் கைது  செய்வார்கள்  என  எச்சரிக்கிறார்  டாக்டர்  மகாதிர்  முகம்மட். இந்த  அச்சம்தான்  பிஎன்னை   ஆட்சியில்  வைத்துள்ளது. மற்றபடி  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கின்  செல்வாக்கு   எல்லாம்  காரணமில்லை  என  முன்னாள்  பிரதமர்  கூறினார்.…

ஜாஹிட்: ஓடிப்போனவர்கள் திரும்பி வருவார்கள்

இப்போது  வெளிநாட்டில்  உள்ள  சர்ச்சைக்குரிய  வலைப்பதிவர்  அல்வின்  டானும்  சமூக  ஆர்வலர்  அலி  அப்துல்  ஜலிலும்  இறுதியில்  மலேசியாவுக்குத்  திரும்பி  வருவார்கள்  என்று  உள்துறை  அமைச்சர்  அஹமட் ஜாஹிட்  ஹமிடி  நம்புகிறார். “எனக்குத்  தெரிந்த  நண்பர். 1974-இல்  மாணவர்  தலைவராக  இருந்தவர். வெளிநாட்டுக்குத்  தப்பி  ஓடினார். 20  ஆண்டுகள்…

‘ஆங்கிலத்தில் ஏதோ ஒன்று சரியில்லை’

பட்டதாரிகள் பல  ஆண்டுகள்  ஆங்கிலம்  கற்ற  பின்னரும்  அம்மொழியில்  சரளமாக  உரையாட  முடியாமலிருப்பது  ஏன்  என்பது  கல்வி  அமைச்சர்  முகைதின்  யாசினுக்குப்  புரியாத  புதிராக  இருக்கிறது. துணைப்  பிரதமருமான  முகைதின், மலேசிய  உயர்க் கலவி செயல்திட்டம்  மீதான  கலந்துரையாடலைத்  தொடக்கிவைத்துப்  பேசினார். “ஒரு  மொழியில்  தொடர்புகொள்ள  முடியவில்லை  என்றால் …

சிலாங்கூர் எதிரணித் தலைவர் பதவியில் பிஎன்னுக்கு ஆர்வமில்லை

மாநில  எதிரணித்  தலைவர்  பதவிக்கு இன்னொருவரை  நியமிப்பதில்  பிஎன்  ஆர்வம்  கொண்டிருக்கவில்லை  என  சிலாங்கூர்  அம்னோ  துணைத்  தலைவர்  அப்துல்  ஷுக்கூர்  இட்ருஸ்  கூறினார். ஏற்கனவே  எதிரணித்  தலைவராக  இருந்த  சுங்கை பூரோங்  சட்டமன்ற  உறுப்பினர்  ஷம்சுடின்  லியாஸ்  நேற்று  அப்பதவியிலிருந்து  விலகினார். எதிரணித்  தலைவர்  பதவி  ஏற்பவர்  …