முக்ரிஸ்: மகாதிருக்குத் தலைவர்கள்மீது அளவில்லா அன்பு அதனால்தான் குறைகூறுகிறார்

முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்  பிரதமர்  நஜிப்பைக்  குறைகூறுகிறார்  என்றால்  அதற்கு  இப்போதுள்ள  தலைவர்களை  அவர்  மிகவும்  நேசிப்பதே  காரணம். மகாதிரின்  குறைகூறல்கள்  நாடு  எதிர்நோக்கும்  பல்வேறு  சவால்களையும்  எதிர்கொள்ள  நஜிப்புக்கு  ஊக்கமளிக்கும்  நோக்கம்  கொண்டவை  என்கிறார்  கெடா  மந்திரி  புசார்  முக்ரிஸ்  மகாதிர். “அன்பினால்தான்  என் …

கெராக்கான்: பெர்காசா பிஎன்னைக் கைவிடுகிறதா? நல்லதாகப் போயிற்று

பெர்காசா  இனி  பின்னை  ஆதரிக்கப்போவதில்லை  என்பதைக்  கேட்டு  மகிழ்ச்சியில்  துள்ளிக்  குதிக்கிறார்  கெராக்கான்  இளைஞர்  தலைவர்  டான்  கெங்  லியாங். பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்,  1948ஆம்  ஆண்டு தேச  நிந்தனைச் சட்டத்தை  அகற்றினால்  பிஎன்னுக்குத்  தம்   ஆதரவை  நிறுத்திக்  கொள்ளப்போவதாக  பெர்காசா  தலைவர்  நேற்று  அறிவித்திருந்ததுதான்  டான்னுக்கு …

எம்பி பெயர்ப்பட்டியலுக்கு எதிராக மலாக்கா பாஸ் போர்க் கொடி

சிலாங்கூர்  மந்திரி  புசாரைத்  தேர்ந்தெடுப்பதில்  கட்சியின்  மத்திய  குழு  செய்த  முடிவு மீறப்பட்டிருப்பதை  மலாக்கா  பாஸ்  ஆணையர்    அட்லி  ஸகாரி வெளிப்படையாகவே  குறைகூறியுள்ளார். “சிலாங்கூர்  மந்திரி  புசார்  விவகாரத்தில்  மத்திய  குழு  செய்த  முடிவு  ஒதுக்கப்பட்டதை  அறிய  வருத்தமாக  உள்ளது”, என்றவர்  ஓர்  அறிக்கையில்  கூறினார். மந்திரி  புசார் …

தேச நிந்தனைச் சட்டம் தொடர்பில் பிரதமரைச் சாடுகிறது பெர்காசா

பெர்காசா,  தேச நிந்தனைச்  சட்டம்  அகற்றப்படும்  என்று  வாக்குறுதி  கொடுத்ததற்காக  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்மீது  தாக்குதல்  தொடுக்க  ஆயத்தமாகி  வருவதுபோல்  தெரிகிறது. எதிரணியினர்  கோரிக்கையை  ஏற்று  நஜிப்  அச்சட்டத்தை  எடுத்தெறிந்தால்  அவர் ஒரு  பக்கத்தான்  பிரதமர்தான்  என்றுகூட  பெர்காசா தலைமைச்  செயலாளர்  சைட்  ஹசன்  சைட் அலி …

சரவாக் பிகேஆர் தேச நிந்தனைச் சட்ட-எதிர்ப்பு இயக்கம் தொடங்கியது

சரவாக்  பிகேஆர் இளைஞர் பகுதியும்  பண்டார்  கூச்சிங்  தொகுதியும்  சேர்ந்து தேச நிந்தனைச்  சட்டத்தை  நீக்க  வேண்டும்  என்று  கோரும்  இயக்கமொன்றைத்  தொடங்கியுள்ளன. இவ்வியக்கம்  ஆண்டு  முழுவதும்  தொடரும். தேசிய  இளம்  வழக்குரைஞர்கள்  குழு  தொடங்கியுள்ள  இயக்கத்துடன்  தொடர்புகொண்ட  இந்த  இயக்கம்  இன்று காலை  9 மணியிலிருந்து  11…

என்யுஜே: மலேசியாகினி செய்தியாளரிடம் போலீஸ் மன்னிப்புக் கோர வேண்டும்

  நேற்று பினாங்கில் மலேசியாகினி செய்தியாளர் சூசன் லூன் தேசிய நிந்தனைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கு போலீஸ் அவரிடம் மன்னிப்பு கோர வேண்டும் இன்று மாலை தேசிய செய்தியாளர் சங்கம் கேட்டுக் கொண்டது. "சில குறிப்பிட்ட அரசு சார்பற்ற அமைப்புகள் செய்த புகாரின் அடிப்படையில் எவரையும் விசாரிக்கும்…

மூன்று நாளில் நடவடிக்கை எடுப்பீர்: பெங் ஹொக் சகோதரி வலியுறுத்து

காலஞ்சென்ற  தியோ  பெங் ஹொக்கின்  குடும்பத்தார்,  அந்த  டிஏபி  அரசியல்  உதவியாளரின்  மரணத்துக்குக்  காரணமானவர்கள்மீது  நடவடிக்கை எடுக்க  வேண்டும்  என  வலியுறுத்தி  அதற்கு  மூன்று  நாள்  அவகாசமும்  அளித்துள்ளனர். நடவடிக்கை எடுக்கப்படும்  என பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  ஏற்கனவே   வாக்குறுதி  அளித்துள்ளார்  என்றும் இன்று  முறையீட்டு  நீதிமன்றம் …

பெங் ஹொக் மரணம் தற்கொலை அல்ல: முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு

டிஏபி  அரசியல்  உதவியாளர் தியோ பெங்  ஹொக்  மரணத்தை விசாரணை  செய்த  நீதிபதி  அதன்மீது  வழங்கியிருந்த திடமில்  தீர்ப்பை  மேல்முறையீட்டு  நீதிமன்றம்  ஒருமுகமாக தள்ளுபடி  செய்தது. நீதிபதி  முகம்மட்  அரிப்,  நீதிபதி மா  வெங் குவை, நீதிபதி  ஹமிட்  சுல்தான்  அபு பக்கார்  ஆகியோரடங்கிய  நீதிபதிகள்  குழு  அந்த …

அம்னோ: தனி இராணுவம் உருவாக்குகிறாரா குவான் எங்?

முதலமைச்சர்   லிம்  குவான்  எங் மாநில தன்னார்வக்  காவல்  படை(பிபிஎஸ்)  என்ற  பெயரில்  இராணுவப்  படையொன்றை  உருவாக்கி  வருகிறாரா  என  பினாங்கு  அம்னோ  கேட்கிறது. அதன்  தலைவர்  சைனல்  அபிடின்  ஒஸ்மான், அப்படையில்  மாநில  அரசு  கிட்டதட்ட  ரிம1.5 பில்லியன்  முதலீடு  செய்திருப்பதாகக்  கூறினார். “பிபிஎஸ்  அரசியல்  நோக்கம் …

பிரதமரே, தேச நிந்தனைச் சட்டத்தைத் தள்ளிவையுங்கள்

தேச  நிந்தனைச்  சட்டத்தை  அகற்றப்போவதாகக்  கூறியது  உண்மை  என்றால் அரசாங்கம்  அச்சட்டத்தைத் தற்காலிகமாக  தள்ளிவைக்க  வேண்டுமென  வழக்குரைஞர்  மன்ற  முன்னாள்  தலைவர்  அம்பிகா  ஸ்ரீநிவாசன்  கேட்டுக்கொண்டிருக்கிறார். “தற்காலிக  தடை  விதித்த  பிறகு  அதை  அகற்ற  20  ஆண்டுகள் வேண்டுமானாலும்  எடுத்துக்கொள்ளுங்கள். யார்மீதும்  தேச நிந்தனைக்  குற்றம் சாட்டாதீர்கள், அவ்வளவுதான்”,…

சமூக ஆர்வலர் சாஃபானுக்கு தேச நிந்தனை வழக்கில் 10-மாத சிறை

கோலாலும்பூர்  செஷன்ஸ் நீதிமன்றம்,  தேச  நிந்தனைக்  குற்றம்  சாட்டப்பட்டிருந்த  சொலிடேரிடி  மஹாசிஸ்வா  மலேசியா   முன்னாள்  தலைவர்  முகம்மட்  சாஃஃபானுக்கு  10-மாதச்  சிறைத்  தண்டனை  விதித்துத்  தீர்ப்பளித்துள்ளது. கடந்த  ஆண்டு  மே 13-இல், ஆற்றிய  உரையில்  அவர்  தேச நிந்தனைச்  சட்டம் பகுதி  4(1)-இன்கீழ்  குற்றம்  புரிந்திருக்கிறார்  என  நீதிபதி …

மாட் சாபு: எம்பி பதவிக்கு மற்ற வேட்பாளர்கள் நியமனம் பற்றி…

பாஸ்  துணைத்  தலைவர்  முகம்மட்  சாபு,  சிலாங்கூர் மந்திரி  புசார்  பதவிக்கு  கட்சியின்  ஆகஸ்ட் 17  கூட்டத்தில்  முடிவு  செய்யப்பட்ட  இரண்டு  பெயர்கள்  தவிர்த்து வேறு  பெயர்கள்  பரிந்துரைக்கப்பட்டிருப்பது  பற்றித்  தமக்குத்  தெரியாது  என்கிறார். அவ்விரண்டு பெயர்களுடன் பாஸ்  அதன்  கட்சியைச்  சேர்ந்த  ஒருவரின்  பெயரையும்  பரிந்துரைத்திருப்பதாக  ஊடகங்களில் …

பாஸ் அஸிசாவையும் அஸ்மின் அலியையும் நியமிக்கவில்லை!

  சிலாங்கூர் மாநில மந்திரி புசார் பதவிக்கு வேட்பாளராக பாஸ் கட்சி பிகேஆரின் தலைவர் வான் அஸிசாவையோ, துணைத் தலைவர் அஸ்மின் அலியையோ நியமிக்கவில்லை என்ற தகவல் பிகேஆர் வட்டாரத்திலிருந்து வெளியாகியுள்ளது. பிகேஆரின் பல மூத்த தலைவர்கள் இதனை மலேசியாகினியிடம் உறுதிப்படுத்தினர். பெயரை வெளியிடக்கூடாது என்ற நிபந்தனையுடன் பேசிய…

பெல்டா வழக்கில் பிகேஆர் எம்பிக்கு சாதகமான தீர்ப்பு

  பெல்டா வங்சா மாஜு நாடாளுமன்ற உறுப்பினர் டான் கீ குவோங்கிற்கு எதிராகத் தொடுத்திருந்திருந்த ரிம200 மில்லியன் வழக்கில் தோல்வி கண்டது. பெடரல் உச்சநீதிமன்றம் பெல்டாவின் வழக்கை தள்ளுபடி செய்தது. பிகேஆர் ஒழுங்கு நடவடிக்கை குழுவின் தலைவருமான டான் தமக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி கூறினார். "ஆண்டவனுக்கு…

மலேசியாகினி செய்தியாளர் சூசன் தேச நிந்தனைக்காக கைது செய்யப்பட்டார்

  மலேசியாகினியின் செய்தியாளர் சூசன் பினாங்கு மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் பீ பூன் போவுடன் நடத்திய நேர்காணல் சம்பந்தமாக தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் இன்று கைது செய்யப்பட்டார். போலீஸ் பினையில் அவர் இன்று இரவு மணி 8.00 அளவில் விடுவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. விசாரணை தொடர்வதால் அவர்…

எம்பி பதவிக்கு சொந்த வேட்பாளர், பாஸ் ஒப்புக்கொள்கிறது

  சிலாங்கூர் மந்திரி புசார் பதவிக்கு பிகேஆர் தலைவர் வான் அஸிசாவை நியமித்த பக்கத்தான் தலைமைத்துவ மன்றத்தின் முடிவை ஏற்றுக்கொள்வதாக பாஸ் முதலில் அறிவித்திருந்தது. பின்னார், வான் அஸிசாவுடன் பிகேஆரின் துணைத் தலைவர் அஸ்மின் அலியின் பெயரையும் சேர்த்து இரு பெயர்களை அரண்மனைக்கு அனுப்பி வைத்தது. இதனிடையே, பாஸ்…

தொடரும் பிபிஎஸுக்கு எதிரான வேட்டையில் டிஎபி எம்பி கைது செய்யப்பட்டார்

  பினாங்கு மாநில தன்னார்வ காவல்படையினருக்கு எதிரான கடும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில், டிஎபி தஞ்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் இங் வெய் அய்க் போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டார். இங் பிபிஎஸ்சின் துனைக் கமாண்டராவார். வாக்குமூலம் அளிக்க வந்த அவரை இன்று பிற்பகல் மணி 1.00…

சுல்தானின் ஆணையை மீறியதற்காக பிகேஆர் கடுமையாக கண்டிக்கப்பட்டது

  மந்திரி புசார் பதவிக்கு சுல்தானின் ஆணைக்கு மாறாக ஒரே ஒரு பெயரை மட்டும் அரண்மனையிடம் தாக்கல் செய்ததற்காக அரண்மனை பிகேஆரை கடுமையாக கண்டித்துள்ளது என்று கட்சிக்குள்ளிருப்பவர்கள் கூறினர். அரண்மனையிலிருந்து நேற்று பிகேஆர் தலைமையகத்திற்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் அக்கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. "மந்திரி புசார் பதவிக்கு சாத்தியமான வேட்பாளராக (பிகேஆர்…

ஹாடி எம்பி பதவிக்கு 3 பாஸ் ஆட்சிக்குழு உறுப்பினர்களை நியமித்துள்ளார்

சிலாங்கூர் மந்திரி புசார் பதவிக்கான போராட்டத்தில் தோன்றியுள்ள ஒரு புதிய திருப்பம் சிக்கலை மேலும் சிக்கலாக்கியுள்ளது. பாஸ் அதன் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் மூவரின் பெயரை தாக்கல் செய்துள்ளது. பக்கத்தான் ரக்யாட் கட்சிகள் செப்டெம்பர் 3 க்குள் அவற்றின் மந்திரி புசார் பதவிக்கான வேட்பாளர்களின் பெயரை அரண்மனையிடம் தாக்கல்…

நாடாளுமன்ற உறுப்பியம் பெறாதவர்கள் அமைச்சர்கள், துணை அமைச்சர்கள்களாக நியமனம் பெற்ற…

  நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்படாத மற்றும்/அல்லது நியமிக்கப்பட்டாத நபர்கள் அமைச்சர்களாகவும் துணை அமைச்சர்களாகவும் நியமிக்கப்பட்டது மலேசிய அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்று ஈப்போ பாரட் நாடாளுமன்ற உறுப்பினர் மு. குலசேகரன் தொடுத்திருந்த வழக்கு இன்று மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. இவ்விவகாரத்தை தாம் பெடரல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்…

மலேசியாகினி செய்தியாளர் சூசன் போலீசாரால் இன்று விசாரிக்கப்படுகிறார்

  பினாங்கு மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் பீ பூன் போவுடன் நடத்திய நேர்காணல் பற்றி விசாரணை நடத்துவதற்காக மலேசியாகினியின் செய்தியாளர்/துணை ஆசிரியர் சூசன் லூன் நோர்த்ஈஸ்ட் மாவட்ட போலீஸ் நிலையத்திற்கு இன்று நண்பகலில் வருமாறு கூறப்பட்டுள்ளார். சூசனும் ஓன்லைன் செய்தி தளமும் தேச நிந்தனைச் சட்டம் 1948, செக்சன்…

இரண்டுக்கும் கூடுதலான பெயர்கள் வேண்டும், அரண்மனைக் கடிதம் மீண்டும் கோருகிறது

  நேற்று மாலை பிகேஆர் அரண்மனையிலிருந்து ஒரு கடிதத்தைப் பெற்றது. அக்கடிதம் மந்திரி புசார் நியமனம் பற்றியதாக இருக்க வேண்டும் என்று நம்பப்பட்டது. பிகேஆர் தலைமையக அதிகாரி இரவு 8.00 மணி அளவில் அரண்மனையிலிருந்து கடிதம் கிடைத்ததை மலேசியாகினியிடம் உறுதிப்படுத்தினார். அக்கடிதத்தின் உள்ளடக்கம் குறித்து பிகேஆரின் தலைமைச் செயலாளர்…

அரண்மனையிலிருந்து பிகேஆருக்கு கடிதம்

  சிலாங்கூர் அரண்மனையிலிருந்து இன்று பிகேஆர் ஒரு கடிதத்தை பெற்றுள்ளது. அது அதன் மந்திரி புசார் நியமனம் பற்றியதாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. "ஆம், இன்று ஒரு கடிதத்தைப் பெற்றோம்", என்று பிகேஆரின் தொடர்பு இயக்குனர் பஹாமி பாட்ஸில் மலேசியாகினியிடம் தொடர்பு கொண்டபோது கூறினார். ஆனால், அது குறித்த…