பேராளர்: டிஏபியை வெட்டி விடுவது பற்றி 30 நிமிடத்தில் முடிவு…

டிஏபி-யுடன்  உறவுகளைத் துண்டித்துக்  கொள்வதில்  அவசரம்  கூடாது  என  சிலாங்கூர் பேராளர்  சாபி  ங்கா  பாஸ்  முக்தாமாரில்  எச்சரித்தார். உலாமா  பிரிவு  கொண்டுவந்த  தீர்மானத்தை  நடப்பு  முக்தாமாரில்  விவாதிப்பது  மட்டும்  போதாது  என்றாரவர். “நல்ல  தீர்மானம்தான். ஆனால், நன்றாக யோசித்துப் பாஅருங்கள், ஒருவரை 'Aku ceraikan kau' என …

சாபா நிலநடுக்கத்தில் ஐவர் பலி?!

இன்று காலை சபா, ரானாவைத் தாக்கிய  ரிக்டர்  கருவியில்  5.9  என்று பதிவான நிலநடுக்கத்தால் கினாபாலு  மலையில் உயிர்சேதங்கள் ஏற்பட்டிருக்கலாம்  என அஞ்சப்படுகிறது. நிலநடுக்கம் ஏற்பட்டபோது கினபாலு மலை 1 நிமிடம் குலுங்கி,  அக்குலுக்கலில்  சரிந்து  விழுந்த  பாறைகளால் குறைந்தது ஐந்து  பேராவது  தாக்கப்பட்டிருக்கலாம் என  த  ஸ்டார் …

கலந்துரையாடலில் கலந்துகொள்ள பிரதமர் தயாராக இருந்தார்

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  இன்று  காலை  நடைபெறவிருந்த  கலந்துரையாடலில்  கலந்துகொள்வதற்காக வீட்டைவிட்டுப்  புறப்படுவதற்கு ஆயத்தமாகிக்  கொண்டிருந்தார். அப்போது  போலீஸ்  அவரிடம்  அதில்  கலந்துகொள்ள  வேண்டாம்  என்று  அவருக்குக்  கூறியது. கலந்துரையாடலின் ஏற்பாட்டாளர்கள்  இதனைத்  தெரிவித்தனர். “பிரதமர்  புறப்பட்டு  வரத்  தயாராகி  விட்டார்...... அப்போதுதான்  போலீஸ்  தலையிட்டது”, என  …

ஐஜிபி: என் முடிவு பிரதமருக்கும் பிடிக்கவில்லைதான்

பிரதமருடனான  கலந்துரையாடலை இரத்துச்  செய்யும்  போலீஸ்  படைத்  தலைவர்  காலிட்  அபு பக்காரின்  முடிவு  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்குக்கும்  பிடிக்கவில்லைதான். மலேசியாகினியிடம்  பேசிய காலிட்  இன்று  காலை   தம்  முடிவைப்  பிரதமரிடம்  தெரிவித்ததாகக்  கூறினார். “என்  முடிவு பிரதமருக்கும்  பிடிக்கவில்லைதான். ஆனால் பாதுகாப்புக்  காரணங்களுக்காகவும்  இணக்கநிலையைக்  காக்கவும்…

பிரதமர் வரவில்லை; நிகழ்வின் நாயகனாக மாறினார் மகாதிர்

இன்று  காலை  புத்ரா உலக  வாணிக  மையத்தில் பிரதமருடனான  கலந்துரையாடலில் சூடான  வாதத்தையும்  எதிர்வாதத்தையும்  எதிர்பார்த்து  பெருங்  கூட்டம்  கூடியிருந்தது. அதற்காகவே  வந்தவர்போல்  முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகமட்டும்  காலை 8.50-இலிருந்து  அங்கு காத்திருந்தார். ஆனால், போலீஸ் பாதுகாப்பு  காரணங்களுக்காக “ஒளிப்பதற்கு  எதுவுமில்லை” என்ற  அந்நிகழ்வை  இரத்துச் …

மகாதிர்: ஆயுதமாக வைத்திருக்கிறேன்? ஏன் இந்தப் பயம்?

தம்மைக் கண்டு யாருமே  பயப்பட  வேண்டிய  அவசியமில்லை என்கிறார் டாக்டர்  மகாதிர்  முகம்மட்.  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  இன்று  காலை  1எம்டிபி  மீதான “ஒளிப்பதற்கு  ஒன்றுமில்லை”  என்ற கலந்துரையாடலுக்கு  வருவதாகச்  சொல்லிவிட்டு  வரத்தவறியதை  அடுத்து  மகாதிர்  இவ்வாறு  கூறினார். “நான்  ஒரு  சாதாரண  மனிதன். என்னிடம்  ஆயுதங்கள் …

பாஸ் கட்சி தேர்தல்: ஹாடி வென்றார், மாட் சாபு தோற்றார்

  பாஸ் கட்சியின் தலைவரான அப்துல் ஹாடி அவாங் கட்சி பேராளர்களின் 80 விழுக்காடு வாக்குகளைப் பெற்று மீண்டும் கட்சியின் தலைவரானார். துணைத் தலைவருக்கான போட்டியில் தற்போதைய துணைத் தலைவர் முகம்மட் சாபுவை துவான் இப்ராகிம் துவான் மான் பெரும்பான்மையான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். கட்சியின் இதர பதவிகளுக்கான…

நாளை மகாதிர்-நஜிப் நேருக்கு நேர் மோதல் நிகழுமா?

நாளை பிரதமர்  நஜிப்  அப்துல் ரசாக்  அவரின்   குருவாக  இருந்து  எதிரியாக  மாறியுள்ள  டாக்டர்  மகாதிர்  முகமட்டை நேருக்கு  நேர்  சந்திப்பாரா? கடந்த  செவ்வாய்க்கிழமை, வழக்குரைஞர்களைக்  கொண்ட  என்ஜிஓ-வான  சுகாகுவாம் சமூக  அமைப்புகள்  நஜிப்பைச்  சந்தித்துப்  பேச  2-மணி  நேர  கலந்துரையாடலுக்கு  ஏற்பாடு  செய்திருப்பதாகக்  கூறியிருந்தது. அதில் கேள்வி-பதில் …

மகாதிர்: நஜிப் பதவி இழக்கும்போது சட்டம் சும்மா விடாது

இப்போதுள்ள  அதிகாரிகளுக்கு  1எம்டிபி  விவகாரத்தை  விசாரிக்கும்  துணிச்சல் இருக்குமா  என்றால்  இருக்காது. ஆனால், பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  பதவி  இழந்தாரானால்  சட்டம்  அதன்  வேலையைச்  செய்யத்  தொடங்கிவிடும்  என்கிறார்  டாக்டர்  மகாதிர்  முகம்மட். “அரசியல்வாதிகளும்  அரசு  அதிகாரிகளும்  ஆதாரங்களை  மூடி  மறைத்ததற்கான  ஆதாரங்கள்  கொட்டிக்  கிடக்கின்றன. “அடுத்த …

மலேசிய எல்லைக்குள் சீனக் கப்பல் ஊடுருவல்;ஈராண்டுகளாக அதே இடத்தில் நங்கூரமிட்டுள்ளது

மலேசிய  எல்லைக்குள்  அத்துமீறி  நுழைந்த  சீனக்  கடலோரக்  காவல்படை  கலமொன்று  மலேசியாவின்  தனிப்பட்ட பொருளாதாரப்  பகுதிக்குள்  நங்கூரமிட்டு  நின்று  கொண்டிருப்பதாக  பிரதமர்துறை  அமைச்சர்  ஷாஹிடான்  காசிம்  கூறினார். ஷஹிடான்,  சரவாக்கிலிருந்து  84 கடல்மைல் (156கி.மீ)  தொலைவில்  தென்சீனக் கடலில்  உள்ள  பாதிங்கி  அலி  மணல் திட்டுப்  பகுதிக்கு  அதிகாரப்பூர்வ …

சரவாக்கில் நஜிப்புக்கு பிரமாதமான வரவேற்பு

டாக்டர் மகாதிர்  முகமட்டைவிட  சரவாக்கின்  வளர்ச்சிக்கு  அதிகம்  செய்துள்ளவர்  என மாநில  முதலமைச்சர்  அடினான்  சதேமால்  புகழப்பட்டவரான  பிரதமர்  நஜிப்  அப்துல் ரசாக்கை  வரவேற்க  இன்று  காலை  கூச்சிங்  ஸ்டேடியம்  பெர்பாடுவானில்  ஆயிரக்கணக்கான  ஆதரவாளர்கள்  திரண்டிருந்தனர். “12 ஆயிரத்துக்கும்  அதிகமானோர்” கூடியிருந்ததாக  பெர்னாமா  கூறியது. நஜிப்பும்  அவரின்  துணைவியார் …

ஜாஹிட்: ஒத்துப்போகாதவர்கள் விலகுவதே மேல்

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்குடன்  ஒத்துப்போகாத  அமைச்சர்கள் “சொல்லாமல்  கொள்ளாமல்” பதவி விலகுவது   நல்லது  என்கிறார்  உள்துறை  அமைச்சர்  அஹ்மட்  ஜாஹிட்  ஹமிடி. அமைச்சர்களை  நியமிக்கவும்  நீக்கவும்  அதிகாரம்  படைத்தவர்  பிரதமர். எனவே, அமைச்சரவை  உறுப்பினர்களுக்கு   பிரதமர்   எடுக்கும்  முடிவுகளுடன்  ஒத்துப்போகும்  கடப்பாடு உண்டு  என்றாரவர். “எந்தவொரு  அமைச்சருக்கும்…

பக்கத்தான் கூட்டணியில் இருக்க ஹாடி ஒப்புக்கொள்கிறார்-நிபந்தனைகளுடன்

பாஸ்  தலைவர்  அப்துல்  ஹாடி  ஆவாங், பக்கத்தான்  ரக்யாட்டுடன்  அரசியல்  ரீதியில் பாஸ்  ஒத்துழைக்கும்  என்று  கூறினார். ஆனால்,  அந்த ஒத்துழைப்பு “பரஸ்பரம் ஒப்புக்கொள்ளப்பட்ட”  இடங்களில் மட்டுமே. அடக்குமுறை, ஊழல், வீண்  பணச்  செலவு  போன்றவற்றுக்கு  எதிராகவும்  நிர்வாகத்தில்  வெளிப்படைத்தன்மைக்காகவும்  பாஸ்  பக்கத்தானுடன்  சேர்ந்து  போராடும். ஆனால், மற்ற …

இந்திய என்ஜிஒ-களுக்கு சிறப்பு நிதி திட்டம் தயார்

குறைந்த வருமான வட்டத்தில் வாடும் இந்தியர்களை மேம்பாடு அடையச் செய்வதற்காக இந்திய அரசு சார்பற்ற அமைப்புகளுக்கும், திறன் பயிற்சி கழகங்களுக்கும் சிறப்பு நிதி அளிப்பதற்கான திட்டத்தை பிரதமர்துறையின் இந்திய சமூகத்தின் சமூக-பொருளாதார மேம்பாடு பிரிவு (செடிக்) முன்மொழிந்துள்ளது. நாளை பிரதமர் நஜிப் ரசாக்குடன் நடைபெறவிருக்கும் சந்திப்பில் இத்திட்டத்திற்கான அவருடைய…

அமைச்சரவை கூட்டத்திலிருந்து மூவர் வெளியேறினர்

  1எம்டிபி விவகாரம் கையாளப்படுவது சம்பந்தமாக அமைச்சர்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள பிளவு குறித்த ஊகங்கள் அதிகரித்து வரும் வேளையில், மூன்று அமைச்சரவை உறுப்பினர்கள் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திலிருந்து வெளியேறினர் என்று கூறப்படுகிறது. வட்டாரங்களை மேற்கோள் காட்டி சைனா பிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கிராமப்புற மற்றும் வட்டார மேம்பாடு அமைச்சர்…

கடத்தல்காரர்கள் உடல் உறுப்புகளை எடுத்துப் பணத்துக்கு விற்றிருக்கிறார்கள்

ரொஹின்யாக்களையும்  வங்காள  தேசிகளையும்  கடத்திவரும்  கடத்தல்காரர்கள்  அவர்களைப் பயன்படுத்தி  மில்லியன்  கணக்கில்  பணம்  பண்ணியிருக்கிறார்கள். முதலில், மியான்மாரிலிருந்து  தப்பியோட  ஒவ்வொரு  அகதியிடமிருந்தும்  ரிம5,000  வாங்குவார்கள்.  அதன்  பிறகு  தாய்லாந்து-மலேசிய  எல்லையிலுள்ள  காட்டு  முகாம்களுக்குக்  கொண்டுவரப்படும்  அவர்கள்  மேலும்  ரிம3000-இலிருந்து ரிம5,000வரை  கொடுத்தால்தான்  அங்கிருந்து  வெளியேற  முடியும். பணம்  கொடுக்காதவர்கள் …

பாஸ் கட்சித் தேர்தலில் டிஏபி தலையிடுவதாகக் கூறப்படுவதை நிரூபிக்க வேண்டும்

டிஏபி  அது  பாஸ்   தலைவர்  அப்துல்  ஹாடி  ஆவாங்கைக்  குறைகூறுவதன்வழி  அக்கட்சியின்  தேர்தலில்   தலையிடுவதாகக் கூறினால்  மட்டும்  போதாது  அதை  நிரூபிக்கவும்  வேண்டும். இவ்வாறு  கோரிக்கை விடுத்த  டிஏபி  தலைமைச்  செயலாளர் லிம்  குவான்  எங்  ஹாடி-க்கு  எதிராக  அறிக்கைகள் விடுப்பது  “தலையீடு”  என்று  அர்த்தமாகுமா  என்றும் வினவினார்.…

தாமான் துன்னில் துப்பாக்கிக்காரர்களைப் பிடிப்பதில் போலீஸ் தீவிரம்

போலீசார்  தாமான்  துன்  டாக்டர்   இஸ்மாயிலில்  ஒரு  பகுதியில்  பாதுகாப்பு  வளையம்  அமைத்து  லெம்பா  கியாரா பொழுதுபோக்கு  பூங்காவுக்குள்  தப்பியோடிய  அறுவரைத்  தேடி  வருகிறார்கள். அவ்வறுவரும்  ஆயுதங்கள்  வைத்திருப்பதாக  நம்பப்படுகிறது. அவர்கள்  அனைவருமே  வெளிநாட்டவர்  என போலீஸ்  கருதுகிறது. “அந்த  அறுவரும்  காவல்  சுற்றில் ஈடுபட்டிருந்த போலீசைக்  கண்டதும் …

ஹாடியைத் தற்காத்துப் பேசாதவர்கள் கோழைகள்

கட்சித் தலைவர்  அப்துல்  ஹாடி  ஆவாங்கை  டிஏபி  தாக்கிப்பேசியபோது  அவரைத்  தற்காக்கத்  தவறிய  பாஸ்  இளைஞர்  தலைவர்களைக்  கோழைகள் எனப்  பேராளர்  ஒருவர்  சாடினார். “டிஏபி, பாஸ் தலைவர்  பற்றிப்  பொய்களை  அவிழ்த்து  விட்டபோது  பாஸ் இளைஞர்  தலைமைத்துவம்  தலைவரைப்  பாதுகாக்கத்  தவறிவிட்டது. “பாஸ்  இளைஞர்கள் மெளனம்  காத்தார்கள்.…

‘அமைச்சர் பதவியைத் துறந்தேனா?’:மறுக்கிறார் ஹிஷாமுடின்

தற்காப்பமைச்சர்  ஹிஷாமுடின்  உசேன்  பதவிதுறந்ததாகக்  கூறப்படுவதை  இன்று  மறுத்தார். அது “பொறுப்பற்றவர்கள்  கட்டிவிட்ட  கதை”  என்றாரவர். டிவிட்டரில்  இணையப் பயனர்  ஒருவரின் கேள்விக்குப் பதிலளித்த  ஹிஷாமுடின் இவ்வாறு  கூறினார். ஹிஷாமுடின், 1எம்டிபி சர்ச்சை தொடர்பில்  அவர்  பதவி  விலகலாம்  என்று   உலாவரும்  வதந்தி  தொடர்பாகத்தான் இவ்வாறு  கூறியதாக  தெரிகிறது.

பாஸ் கட்சித் தேர்தலில் டிஏபி தலையிடுவதாகக் குற்றச்சாட்டு

டிஏபி-இன் ‘பிரித்தாளும்’ சூழ்ச்சி  பக்கத்தான்  ரக்யாட்டில்  நிலவும்  அரசியல்  ஒத்துழைப்பைக் கெடுக்கும்  என  டேவான்  உலாமா  இடைக்காலத்  தலைவர்  மாபோட்ஸ்  முகம்மட்  கூறினார். பாஸ்  தலைவர்  அப்துல் ஹாடி  ஆவாங்மீது  டிஏபி  தொடுக்கும்  தாக்குதல்கள்  பாஸ்  தலைமைத்துவத்தில்  பிளவை  உண்டுபண்னலாம். சாபா, சரவாக்கில்  பக்கத்தான்  ரக்யாட்  உடைந்ததற்கு இதுதான் …

முகைதின் சிறப்புக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை

துணைப்  பிரதமர்  முகைதின்  யாசின்  நேற்றிரவு  அமைச்சர்களுக்காக கோலாலும்பூர்,  மெஜஸ்டிக்  ஹோட்டலில்  நடைபெற்ற  சிறப்புக்  கூட்டத்தில் கலந்து  கொள்ளவில்லை. வெளிநாடு  சென்றிருந்த  முகைதின்  இரவு  8.45க்குத்தான் திரும்பி  வந்தார்  என்பதால்  கூட்டத்துக்குச்  செல்ல  முடியவில்லை என  அவருக்கு  அணுக்கமான  வட்டாரமொன்று  தெரிவித்தது. “கூட்டம்  நடப்பது  அவருக்குத்  தெரியும்  ஆனால்,…

நேற்றிரவு அமைச்சர்கள் கூடி என்ன பேசினார்கள்?

நேற்றிரவு அமைச்சர்கள்  கூட்டம்  ஒன்று  நடைபெற்றுள்ளது. அதில்  என்ன  விவாதிக்கப்பட்டது  என்பது  மர்மமாக  உள்ளது. கூட்டம்  நடந்த  இடத்தில்  குறைந்தது  16  அமைச்சர்கள்  காணப்பட்டதாக  ஸ்டார்டிவி  கூறியது. கூட்டத்தின்  நிகழ்வு  பற்றித்  தெரிவிக்க  எவரும்  முன்வரவில்லை.  இரண்டாம்  நிதி  அமைச்சர்  ஹுஸ்னி  ஹனாட்சா மட்டும்  சிறிது   பேசினார்.  ஆனால்,…