வீட்டுவசதி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர், எரிபொருள் மானியங்கள், பள்ளி பராமரிப்பு, சுகாதார வசதிகள், செயற்கை நுண்ணறிவு (AI) பயிற்சி, மின்னணு விலைப்பட்டியல் (e-invoicing), மற்றும் சிறிய வியாபாரிகள் மற்றும் சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கான (SMEs) உதவிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் மூலம் மக்களுக்கு நேரடியாகப் பயனளிப்பதாகக் கூறுகிறார். வீடமைப்பு…
டாக்டரின் புலம்பலைக் கண்டுகொள்ள வேண்டாம்: நஜிப்புக்கு நஸ்ரி அறிவுறுத்து
டாக்டர் மகாதிர் முகம்மட் என்ன வேண்டுமானாலும் புலம்பிக்கொள்ளட்டும். அதைக் கண்டுகொள்ளாதிருப்பதுதான் புத்திசாலித்தனம் என்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கு ஆலோசனை கூறியுள்ளார் நஸ்ரி அப்துல் அசீஸ். அதற்குப் பதில் கூறுவதை விடுத்து நஜிப் பிரதமருக்குரிய பொறுப்புகளில் கவனம் செலுத்த வேண்டும் எனப் பண்பாட்டு, சுற்றுலா அமைச்சர் அறிவுறுத்தினார். அவரின் …
போரின் அறிகுறியாக, துணைப் பிரதமரை வரவேற்க கேஎல்ஐஏ-இல் பெருங் கூட்டம்…
1எம்டிபி விவகாரத்தில் தம்முடன் ஒத்துப்போகாத அமைச்சர்கள் பதவி விலகலாம் என்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறியதை அடுத்து இப்போது கவனம் துணைப் பிரதமர் முகைதின் யாசின் பக்கம் திரும்பியுள்ளது. முகைதின் கடன் தொல்லைகள் நிரம்பிய 1எம்டிபி பற்றி நஜிப்புடன் மாறுபட்ட கருத்தைக் கொண்டவர். ஆகக் கடைசியாக அம்னோ …
நஜிப் அவரது தரப்பை எடுத்துரைக்க ஏற்பாடு செய்கிறது என்ஜிஓ
வரும் வெள்ளிக்கிழமை, சமூக அமைப்புகளும் குடிமக்களும் ஒரு கலந்துரையால் நிகழ்வில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைக் கேள்விகளால் துருவித் துருவி விசாரிக்க வாய்ப்பைப் பெறுவார்கள். அந்நிகழ்வை ஏற்பாடு செய்திருக்கும் வழக்குரைஞர்களைக் கொண்ட அமைப்பான சுகாகுவாம், நஜிப்பைப் பற்றியும் அவரது ஆட்சி பற்றியும் கேள்வி கேட்க நிறைய வாய்ப்பளிக்கப்படும் என்று…
அமெரிக்காவில் குற்றச்சாட்டிலிருந்து விடுபட்டார் பால் புவா
உலகக் கிண்ணக் கால்பந்தாட்டப் போட்டியின்போது லாஸ் வேகாஸில் சட்டவிரோதமாக பந்தயம் கட்டும் கட்டமைப்பை நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்த மலேசியரான பால் புவா குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டார். அவ்வழக்கில் அரசாங்கத் தரப்பு ஆதாரங்களை நீதிபதி ஏற்க மறுத்து வழக்கைத் தள்ளுபடி செய்தார். அதே குற்றம் சுமத்தப்பட்டிருந்த புவாவின் மகனும் மற்றவர்களும் சிறுகுற்றம் …
கைதி தூக்கில் தொங்கிய சம்பவத்தில் தப்பு நடந்திருப்பதற்கு வாய்ப்பில்லை
மே 22-இல், குளுவாங் சிறையில் கைதி ஒருவர் தூக்கிலிடப்பட்ட நிலையில் காணப்பட்ட சம்பவத்தில் சூது எதுவும் நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை என்பதைச் சிறைத்துறை உறுதிப்படுத்தியுள்ளது. தூக்கில் தொங்கியவரின் கழுத்தில் மட்டுமே சிராய்ப்புகள் காணப்படுவதாக கொரோனரும் சிறைத்துறை தலைமையகமும் மேற்கொண்ட சோதனைகள் காட்டுவதாக சிறைத்துறை துணை இயக்குனர் சுப்ரி ஹஷிம் கூறினார்.…
கிறிஸ்துவ அமைப்பின் தொடக்கவிழாவுக்கு பெர்காசாவுக்கு அழைப்பு
மலாய் உரிமைக்காகப் போராடும் பெர்காசா ஒரு முறை பைபிளை எரிக்கப்போவதாக மிரட்டியிருக்கலாம். ஆனாலும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அமைதிக்கும் இணக்கத்துக்குமான கிறிஸ்துவ அமைப்பு(சிபிஎச்எம்) அதன் தொடக்க விழாவுக்கு பெர்காசாவை அழைத்துள்ளது. இன்றிரவு கோலாலும்பூர் மெஜெஸ்டிக் ஹோட்டலில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தலைமையில் நடைபெறும் சிபிஎச்எம் தொடக்க விழாவுக்கு அழைப்பு …
மகாதிர்: மலேசியா 2020 இலட்சியத்தை அடைவது சாத்தியமில்லை
மலேசியா அதன் 2020 இலட்சியத்தின் நோக்கத்தை குறித்த காலத்தில் அடையும் என்று மகாதிர் முகமட் எதிர்பார்க்கவில்லை. இன்று வெளிநாட்டு செய்தியாளர்கள் கிளப்பின் விருந்து நிகழ்ச்சியில் பேசிய மகாதிர் தனிமனிதர் ஒருவரின் வருமானத்தை மட்டும் இலாக்காக வைத்து செயல்படுவது போதுமானதல்ல என்பதோடு அது முற்றிலும் செயற்கையானதாகும் என்று கூறினார்.…
நஜிப்: என் வழிக்கு வராத அமைச்சர்கள் வெளியேறலாம்
1மலேசியா மேம்பாட்டு நிறுவனக் குளறுபடிகள் பற்றி சில அமைச்சர்கள் கேள்வி எழுப்பியதை அடுத்து அவ்விவகாரத்தில் தம்மை ஆதரிக்காதவர்கள் பதவி துறக்கலாம் என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறியுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை இரண்டாவது நிதி அமைச்சர் அஹ்மட் ஹுஸ்னி ஹனாட்ஸ்லா 1எம்டிபி சீரமைப்புத் திட்டத்தை அமைச்சரவையில் தாக்கல் செய்த …
பிரதமர் புதிய அரசியலை நிராகரிப்பது பல குழப்பங்களுக்கு இட்டுச் செல்லலாம்
‘பொடா(பயங்கரவாதத் தடுப்புச் சட்டம்), தேச நிந்தனைச் சட்டங்கள்: நாடு எங்கே போகிறது’ என்ற கருத்தரங்கில் பேசிய அலிரான் தலைவர் பிரான்சிஸ் லோ மலேசியர்கள் மேலும் பல கொந்தளிப்புகளைச் சந்திக்க நேரும் என எச்சரித்தார். நாட்டில் உருவாகியுள்ள ‘புதிய அரசியலு’டன் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் தலைமையில் இயங்கும் பிஎன்…
குறைகூறல்களால் 11வது திட்டத்தின் செயலாக்கத்தைக் தடுக்க முடியாது
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், தம் தலைமைத்துவம் பற்றி என்னதான் குறை சொன்னாலும் 11வது மலேசிய திட்டத்தைச் செயல்படுத்தும் அரசாங்கத்தின் கவனம் அதனால் மாறப்போவதில்லை என்கிறார். இன்று அரசு அதிகாரிகளிடையே பேசிய நஜிப், அவர்கள் நாட்டுக்கு மேலும் முதலீடுகளைக் கொண்டுவரவும் மலேசியாவில் ஆக்கத்தைப் பெருக்கி அதை உயர்- வருமானம் …
சைபுல் அன்வாருக்கு எதிரான அவதூறு வழக்கைக் கைவிட்டார்
முகம்மட் சைபுல் புகாரி அஸ்லான், எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு எதிராக தொடுத்திருந்த ரிம50மில்லியன் அவதூறு வழக்கை மீட்டுக்கொண்டார். அன்வாரின் வழக்குரைஞர் லத்தீபா கோயா இன்று இதனைத் தெரிவித்தார். அவ்வழக்குமீது இன்று காலை விசாரணை நடப்பதாக இருந்தது. சைபுல் கடந்த ஆகஸ்ட் மாதம் அவ்வழக்கைத் தொடுத்திருந்தார். அன்வார், சைபுலுடன்…
பினாங்கு அரசு பத்துகாவான் இந்தியர்கள் பிரச்சனையை தீர்க்க வேண்டும்!
பத்து காவான் முன்னாள் தோட்ட மக்கள் அங்கு தொடர்ந்து கால்நடை வளர்ப்புத் தொழில் புரிந்து வருகின்றனர். தேசிய முன்னணி ஆட்சியில் இவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காணப்படவில்லை. ஒதுக்கப்பட்ட இவர்கள் பினாங்கின் மக்கள் கூட்டணி ஆட்சியில் ஒரு தீர்வு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் பினாங்கு முதல் அமைச்சருக்கு இரண்டு மனுக்களை…
உத்துசான் இப்போது ஹுடுட் விவகாரத்தில் மரினா மகாதிரை தாக்குகிறது
இப்போது வெளிப்படையாக நடைபெற்றுவரும் முன்னாள் பிரதமர் மகாதிருக்கும் தற்போதைய பிரதமர் நஜிப்புக்கும் இடையிலான போரில் அம்னோவுக்கு சொந்தமான உத்துசான் மலேசியா மகாதிரின் மகள் மரினா மீது பாயத் தொடங்கியுள்ளது. அதன் வாராந்திர மிங்குவான் மலேசியாவில் அவாங் செலாமாட் என்ற புனைப்பெயரில் எழுதுபவர் ஹூடுட் பற்றி பேசும் போது மரினா…
நிஸார்: நமக்கு வேண்டியது டிஎபி அனுதாபிகளா அல்லது அம்னோ கைப்பாவைகளா?
பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங் கட்சியின் உறுப்பினர்களுக்கு "டிஎபி அனுதாபிகள்" வேண்டுமா அல்லது கட்சி விசுவாசிகள் வேண்டுமா என்று கேட்டிருந்ததைச் சாடிய முன்னாள் பேராக் மாநில மந்திரி புசார் நிஸார் ஜமாலுடின், அக்கேள்வி கட்சி உறுப்பினர்கள் "அம்னோ கைப்பாவைகளை" தேர்வு செய்யுங்கள் என்று கேட்டுக்கொள்வதாகும்…
எல்லையில் 10 ஆண்டுகளாக ஆள்கடத்தல் நடந்து வருகிறது
மலேசிய-தாய்லாந்து எல்லையில் ஆறு குறுக்குப் பாதைகள் மனிதர்களையும் பொருள்களையும் கடத்துவதற்குப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. “மலேசிய-தாய்லாந்து எல்லையில் உள்ள பாதைகளை இரு பக்கங்களில் வசிக்கும் மக்கள் பயன்படுத்திக்கொண்டு தங்களுக்கிடையில் உறவுகளை வலுப்படுத்திக் கொண்டிருந்தார்கள். “சில இரகசிய குழுமங்கள் அவற்றை அவர்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டார்கள்”, என்று கம்போங் சைட் ஒமார் …
அன்வார் மருத்துவ மனைக்கு அனுப்பப்படுவார்
சிறையில் உள்ள அன்வார் இப்ராகிமுக்கு முறையான மருத்துவ சிகிச்சை தேவை என்ற அவரின் குடும்பத்தாரின் கோரிக்கைகளைக் கவனிக்காமல் தாமதப்படுத்தி வந்த சிறைத்துறை முடிவில் அவரை மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளது. “அவர் பரிசோதனைக்காகவும் கவனிக்கப்படுவதற்காகவும் சிகிச்சைக்காகவும் ஜூன் 2 செவ்வாய்க்கிழமை கோலாலும்பூர் மருத்துவமனையில் சேர்க்கப்படுவார் என …
தெங்கு ரசாலி: வாக்காளர்களே பிரதமரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்
மலேசியாவில் ஒரு கட்சி பிரதமரை நியமிப்பதைவிட வாக்காளர்களே பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் நிலை உருவாக வேண்டும் என்கிறார் அம்னோ எம்பி தெங்கு ரசாலி ஹம்சா. “மற்ற வகை அரசாங்க முறைகளையும் ஆராய்ந்து அவற்றில் எது சிறந்தது என்பதைக் கண்டறிய வேண்டும். “தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரைப் பெற்றிருப்பதுகூட நல்லதுதான். கட்சியால் ஒருவர் முன்னிறுத்தப்படுவதைவிட…
பாஸ் தேர்தலின்போது மிதவாதக் கட்சியாக மாறலாம்
பொதுத் தேர்தலின்போது பாஸ் அதன் தீவிரவாதப் போக்கை மாற்றிக் கொள்ள முயற்சி செய்யும் என்பதால் அந்த இஸ்லாமியக் கட்சியும் டிஏபியும் கருத்துவேறுபாடுகளை மறந்து ஒத்துழைக்கும் சாத்தியம் உண்டு என்கிறார் அரசியல் ஆய்வாளர் லோ சீ சோங். “அடுத்த வாரம் கட்சித் தேர்தல்கள் என்பதால் பாஸ் பழமைப் போக்கை விடாமல் …
ஹாங்காங்கைச் சேர்ந்த இன்னொருவரும் நாடு கடத்தப்படுகிறார்
மலேசிய குடிநுழைவுத் துறை, ஹாங்காங்கைச் சேர்ந்த இன்னொரு ஜனநாயக-ஆதரவு ஆர்வலர் ஒருவரையும் நாடு கடத்த ஏற்பாடு செய்து வருகிறது. ஹாங்காங் சட்டமன்ற உறுப்பினரான லியோங் குவொக்-ஹங் இன்று பிற்பகல் கோலாலும்பூர் அனைத்துலக விமான நிலையம் வந்து இறங்கியதுமே தடுத்து வைக்கப்பட்டார். பெட்டாலிங் ஜெயாவில் ஒரு கருத்தரங்கில் கலந்துகொள்ள வந்த …
ஹுடுட் சட்டவரைவை பரிசீலனைக்கு ஏற்றுக்கொண்ட பண்டிகாரை கெராக்கான் சாடியது
கிளந்தானில் ஹுடுட் சட்டத்தை அமலாக்குவது மீது பாஸ் கட்சியின் தனி உறுப்பினர் சட்டவரைவை பரிசீலனைக்கு ஏற்றுக்கொண்டிருக்கும் மக்களவைத் தலைவருக்கு கெராக்கான் இளைஞர் பிரிவு கண்டனம் தெரிவித்துக் கொண்டிருக்கிறது. “நாடாளுமன்றத்தில் எதிரணி உறுப்பினர்கள் கொண்டுவந்த தனி உறுப்பினர் சட்டவரைவு எதுவும் ஏற்றுக்கொள்ளப்பட்டு விவாதிக்கப்பட்டதாக வரலாறு இல்லை. “இப்போது அதை அனுமதிப்பார்களானால் …
மகாதிர்: பணத்தைக் காணாதவரை 1எம்டிபி குற்றவாளியே
1மலேசியா மேம்பாட்டு நிறுவன(1எம்டிபி)த்தின் பணத்துக்குச் சரியான கணக்குக் காட்டப்படாதவரை அந்நிறுவனத்தின் நிர்வாகத்தைக் குற்றவாளி என்றே கருதப்படும் என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் கூறினார். கேய்மன் தீவில் முதலீடு செய்யப்பட்ட யுஎஸ்1.03(ரிம 4பில்லியன்) பற்றித்தான் மகாதிர் குறிப்பிடுகிறார். அப்பணம் என்னவானது என்பது புரியாத புதிராக உள்ளது. “கேய்மன் …
நஜிப் பதவியில் தொடர்ந்து இருக்க அவர் ஆறு நடவடிக்களை மேற்கொள்ள…
பிரதமர் நஜிப் தமது தவணைக் காலம் வரையில் பிரதமர் பதவியிலிருந்து விலகப் போவதில்லை என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார். அதனை உறுதிப்படுத்திக் கொள்ள அவர் நடவடிக்கைகளை தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என்று மூத்த ஊடகவியலாளரான காடிர் ஜாஸின் கூறுகிறார். அந்த ஆறு நடவடிக்கைகள்: 1. துணைப் பிரதமர் முகைதின்…
இன்று உலக பட்டினி தினம்
இன்று மே 28-ம் தேதி உலக பட்டினி தினம். உலகில் 81 கோடி மக்கள் இன்னும் பட்டினியுடன் வாழ்கின்றனர். 79.1 கோடி மக்கள் அதாவது 98 சதவீதம் வளர்ந்துவரும் நாடுகளில் உள்ளனர். உலகில் 8 பேரில் ஒருவர் பசியோடு ஓருவேளை உணவுக்கு கையேந்தி வாழ்கிறார்.ஆசியபசிபிக் பிராந்தியத்தில் 52 கோடி…


