சட்டவிரோத பந்தயம் மற்றும் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுவதற்குப் பெயர்போன ஒரு பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில், 45 கார்களைப் பரிசோதித்த போலீசார் 32 சம்மன்களை வழங்கியுள்ளனர். இன்று அதிகாலை இங்குள்ள லெபு மெதினி உத்தாமா பகுதியில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சட்டவிரோத பந்தயம் மற்றும் ஆபத்தான முறையில் வாகனம்…
பினாங்கில் ‘கொலைகார’வீடு கண்டுபிடிக்கப்பட்டது: இருவர் கைது
அண்மைய மாதங்களாக தொடர் கொலைகளால் பினாங்கே அதிர்ந்து போயிருந்தது. ஆங்காங்கே வெட்டப்பட்ட உடலுறுப்புகளும் தலையில்லா முண்டங்களும் கண்டெடுக்கப்பட்டது பெரும் பீதியை உருவாக்கியிருந்தது.. இப்போது போலீசார் புக்கிட் மெர்தாஜமில் ஒரு கம்பத்தில் கொலை செய்யப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ள ஒரு வீட்டைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். அந்த வீட்டில்தான் மியான்மார் நாட்டைச் சேர்ந்த பலர் …
மலேசியாகினி திங்கள்கிழமை புது இடம் செல்கிறது
மலேசியாகினி, டிசம்பர் 8 திங்கள்கிழமை புதிய இடத்தில் குடியேறுகிறது. அதன் புதிய முகவரி: எண் 9, Jalan 51/205A Off Jalan Tandang Petaling Jaya கூட்டரசு நெடுஞ்சாலையிலிருந்து ஜாலான் டெம்ப்ளரில் திரும்பி, முதலாவது சுற்றுவட்டம் சென்று அங்கு ஜாலான் பெஞ்சாலா வழியே சென்று இடப் பக்கம் திரும்பினால் …
மகாதிர்: இப்போதெல்லாம் பணத்துக்காகத்தான் அரசியலுக்கு வருகிறார்கள்
அரசியல் கட்சிகளில் ஊழல் மலிந்து வருவதாகச் சொல்லி வருத்தப்படும் டாக்டர் மகாதிர் முகம்மட், இப்போது பணம் பண்ணுவதில்தான் குறியாக இருக்கிறார்கள் என்றார். அரசியல் என்றால் நல்ல நோக்கங்களுக்காக போராடுவது என்பதெல்லாம் இப்போதெல்லாம் கிடையாது என்று கூறிய முன்னாள் பிரதமர், குத்தகையைப் பெறுவதிலும் மற்றவற்றிலும்தான் முனைப்புக் காட்டுகிறார்கள் என்றார். “என்னுடைய …
தேச நிந்தனைச் சட்டத்தில் அக்கறை காட்டும் அமெரிக்க அதிபர்
அமெரிக்க துணை அதிபர் ஜோ பிடென், மலேசியாவில் தேச நிந்தனைச் சட்டத்தையும் மற்ற சட்டங்களையும் பயன்படுத்தி எதிரணியினரை ஒடுக்கப் பார்ப்பது கவலையளிக்கிறது என்று டிவிட்டரில் பதிவிட்டிருக்கிறார். குதப்புணர்ச்சி வழக்கில் அன்வார் இப்ராகிமின் மேல்முறையீடு மீது விரைவில் தீர்ப்பளிக்கப்பட விருப்பது பற்றியும் அவர் கருத்துரைத்தார். அன்வாரின் வழக்கில் அரசாங்கம் தவறுகளைச் …
ஆர்சிஐ அறிக்கை: நம்ப முடியவில்லை கோத்தா கினாபாலு மக்களால்
சாபாவில் அடையாள அட்டைகள்(ஐசி) பெருமளவில் வழங்கப்பட்டதற்கு பணம்தான் காரணம் என்றும் அரசியல் அல்லவென்றும் அரச விசாரணை ஆணைய (ஆஎசிஐ) அறிக்கை கூறுவது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதும் பொறியியல் பேராசிரியரான ரோசலாம் சர்பட்லி கேலிச் சிரிப்பு சிரித்தார். “பின்னாளில் பணத்தாசைதான் காரணமாக இருந்தது என்பது உண்மைதான். ஆனால்,…
கள்ளக் குடியேறிகளின் பெயர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்குவீர்
சாபா கள்ளக்குடியேறிகள் மீது அரச விசாரணை ஆணைய (ஆசிஐ) அறிக்கை வெளியாகியிருப்பதை அடுத்து அரசாங்கம் குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மஇகா இளைஞர் பகுதி கேட்டுக்கொண்டிருக்கிறது. “சட்டத்தின் முழு வீச்சையும் அவர்கள் எதிர்நோக்க வேண்டும். எவ்வளவு காலமானாலும் பரவாயில்லை. “வாக்காளர் பட்டியலில் உள்ள சட்டவிரோத பெயர்களையும் …
அன்வார் வழக்கில் தீர்ப்பளிக்கும் நாள் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை
ஆறு ஆண்டுகளுக்குமுன் குதப்புணர்ச்சி வழக்கில் ஐந்தாண்டுச் சிறைத்தண்டனை அளிக்கப்பட்ட தீர்ப்பைத் தள்ளுபடி செய்ய பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் செய்துகொண்ட மேல்முறையீடு மீதான தீர்ப்பு கூட்டரசு நீதிமன்றத்தில் தயாராகிக் கொண்டிருக்கிறது. அதற்குமேல் முறையீடு செய்ய இடமில்லை என்பதால் இந்த இறுதி மேல்முறையீடு மீதான தீர்ப்பை நாடே ஆவலுடன் எதிர்பார்த்துக் …
குடியுரிமையை வாரிக் கொடுப்பதாக இருந்தால் பிஎன் எப்போதோ கிளந்தானைப் பிடித்திருக்குமே
குடியேறிகளுக்குக் குடியுரிமையை அள்ளிக்கொடுப்பது உண்மை என்றால் பிஎன் நீண்ட காலத்துக்கு முன்பே கிளந்தானை வென்றிருக்கும் என்கிறார் கிராம, வட்டார மேம்பாட்டு அமைச்சர் முகம்மட் ஷாபி அப்டால். சாபாவில் குடியேறிகளுக்குப் பெருமளவில் குடியுரிமை வழங்கியதில் பிஎன்னும் சம்பந்தப்பட்டிருந்ததாகக் கூறப்படுவதை மறுத்த அமைச்சர், பிஎன் அப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுவதில்லை என்றார். “அது …
அன்வார் இப்ராகிம் இன்னமும் ‘டத்தோஸ்ரீ’தான்
சிலாங்கூர் சுல்தான் அவருக்குக் கொடுத்த பட்டத்தைப் பறித்துக் கொண்டிருந்தாலும் எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிமை இன்னமும் ‘டத்தோஸ்ரீ’ என்றே அழைக்கலாம். ஏனென்றால் அவருக்கு மேலும் ஏழு டத்தோஸ்ரீ பட்டங்கள் உண்டு. பெர்லிஸ்(1995), பேராக்(1995), பகாங் (1990), பினாங்கு (1994), சாபா (1994) ஆகியவையும் மற்ற மாநிலங்களும் அவருக்கு அப்பட்டத்தைக் …
அட்னான்: நடப்புப் பெயர்கள் அர்த்தமற்றவை
கோலாலும்பூர் சாலைகளுக்கு இப்போதுள்ள பெயர்கள் பொருளற்றவை என்பதால் அவற்றை நீக்கிப் பேரரசர்களின் பெயர்கள் வைக்கப்படுவதாகக் கூட்டரசு பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர் கூறினார். இதற்குமுன் கோலாலும்பூரில் இரண்டு சாலைகள் மட்டுமே சுல்தான்களின் பெயர்களைக் கொண்டிருந்ததாக அவர் சொன்னார். “ஜாலான் மஹாமேரு. ‘மஹாமேரு’ என்றால் என்ன? மாமெரி …
உணர்ச்சிவசப்பட வைக்கும் விவகாரங்களை எழுப்பியவர்களை அம்னோ ‘விசாரிக்கும்’
உணர்ச்சிவசப்பட வைக்கும் விவகாரங்களை எழுப்ப வேண்டாம் என எச்சரிக்கப்பட்ட பின்னரும் அம்னோ பேரவையில் அவற்றை எழுப்பியவர்களை அம்னோ விசாரிக்கலாம் விசாரிக்காமலும் போகலாம். அது பற்றி கட்சித் தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூரிடம் வினவியதற்கு அவரால் திட்டவட்டமாக பதில் அளிக்க முடியவில்லை. “பார்ப்போம்”, என்று மட்டுமே அவரால் …
பினாங்கு மேம்பாட்டாளர்களின் உரிமங்கள் புதுப்பிக்கப்படுவதில் தாமதம்
பினாங்கு மேம்பாட்டாளர்கள் ஆகஸ்ட் மாதம் தொடங்கி சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக முறையிடுகிறார்கள். புத்ரா ஜெயா அவர்களின் உரிமங்கள் அங்கீகரிக்கப்படுவதையும் மேம்பாட்டுத் திட்டங்களை விளம்பரப்படுத்துவதற்கான அனுமதிகளையும் தாமதப்படுத்துவதுதான் இதற்குக் காரணமாம். நகர்ப்புற நல்வாழ்வு, வீடமைப்பு, ஊராட்சி அமைச்சு தாமதப்படுத்துவதால் 30-க்கு மேற்பட்ட மேம்பாட்டாளர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என பினாங்கு சொத்து, வீடமைப்பு …
அன்வாரின் டத்தோ பட்டம் பறிக்கப்பட்டது
பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிமின் டத்தோஸ்ரீ பட்டத்தை சிலாங்கூர் சுல்தான் இரத்துச் செய்திருக்கிறார். அரண்மனை அறிக்கை ஒன்று அண்மைய மந்திரி புசார் நெருக்கடியின்போது சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா-வின் நேர்மை குறித்தும் ஆட்சியாளர் அமைப்பு பற்றியும் அன்வார் கேள்வி எழுப்பியிருந்ததாகவும் அதன் விளைவுதான் இம்முடிவு என்றும் தெரிவித்தது.
ஜெப்ரி, மகாதிரைப் பழிவாங்கும் உணர்வை இன்னும் வைத்துக் கொண்டிருக்கிறார்
சாபா கள்ளக்குடியேறிகள் விவகாரத்துக்கு டாக்டர் மகாதிர்மீது பழிபோடும் ஜெப்ரி கிட்டிங்கானை அம்னோ- ஆதரவு வலைத்தளம் ஒன்று சரமாரியாக சாடியுள்ளது. “(ஆர்சிஐ) ஆணையத்தின் அறிக்கை மகாதிரைப் பாதுகாக்கும் ஒரு ‘கண்துடைப்பு’ என்றவர் கூறியிருப்பது மகாதிரை அரசியல் ரீதியில் பழிவாங்கும் உணர்வு இன்னும் அவரிடம் இருப்பதைத்தான் காண்பிக்கிறது”, என்று MyKmu.Net கூறிற்று.…
அன்வாரின் டத்தோ பட்டம் பறிக்கப்பட்டது
பிகேஆரின் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிமின் டத்தோ பட்டத்தை சிலாங்கூர் சுல்தான் பறித்து விட்டார். இது நவம்பர் 3 லிருந்து அமலுக்கு வந்துள்ளது. சமீபத்தில் நிகழ்ந்த சிலாங்கூர் மாநில மந்திரி புசார் நெருக்கடியின் போது அன்வார் சிலாங்கூர் சுல்தானின் நேர்மை குறித்து கேள்வி எழுப்பியிருந்ததால் இம்முடிவு எடுக்கப்பட்டதாக…
ஆர்சிஐ வெறும் சிஐயாக ஆக்கப்பட்ட குழப்பம்
சாபா மாநில குடியேறிகள் மீதான விசாரணை நடத்தப்படுவதற்காக கடந்த ஆண்டு ஜனவரியில் அமைக்கப்பட்ட ஆணையம் "அரச விசாரணை ஆணையம்" (RCI) என்றே தொடக்கத்திலிருந்து அழைக்கப்பட்டு வந்தது. ஆனால், இப்போது வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் எல்லாமே மாறியுள்ளது. முதலில், அந்த ஆணையம் "Royal Commission Inquiry" என்று அறிவிக்கப்பட்டது. இப்போது அந்த…
பெல்டா குளோபல் அடுத்த எம்ஏஎஸ் ஆகலாம்
பங்குச் சந்தையில் பல இழப்புகளைக் கண்டுள்ள பெல்டா குளோபல் வெண்ட்சர்ஸ் ஹொல்டிங் (எப்ஜிவி) மற்றொரு மலேசிய விமான நிறுவனம் ஆகும் சாத்தியம் உள்ளது. “எப்ஜிவி-க்கு ஆகக் கடைசியாக ஏற்பட்டுள்ள இழப்பு மலேசிய விமான நிறுவனத்தைப்போல் அதுவும் நிதித்தொல்லைகளால் வீழ்ச்சி காணலாம் என்பதற்கான அறிகுறி”, என்று பெட்டாலிங் ஜெயா உத்தாரா …
ஜெப்ரி: ஆர்சிஐ அறிக்கை ஒரு ‘கண்துடைப்பு’
சாபா குடியேறிகள் மீதான அரச விசாரணை ஆணைய (ஆர்சிஐ) அறிக்கை முன்னாள் பிரதமர் மகாதிர் முகம்மட்மீது பழி வராமல் பாதுகாக்கும் ஒரு கண்துடைப்பு என சாபாவின் மூத்த அரசியல்வாதி ஜெப்ரி கிட்டிங்கான் கூறினார். “சாபா மக்களுக்கு அதில் திருப்தி இல்லை”, என சாபா சீர்திருத்தக் கட்சித் தலைவருமான ஜெப்ரி…
ஒரு புள்ளிகூட மாற்றப்படவில்லை- ஆர்சிஐ செயலாளர் கூறுகிறார்
சாபா குடியேறிகள் மீதான அரச விசாரணை ஆணைய அறிக்கையில் எந்தத் திருத்தமும் செய்யப்படவில்லை என ஆர்சிஐ செயலாளர் சரிபுதின் காசிம் வலியுறுத்தினார். 368-பக்கம் கொண்ட அவ்வறிக்கை அமைச்சரவையிடம் ஒப்படைக்கப்பட்டு ஆறு மாதங்கள் கழித்து வெளியிடப்படுவது ஏன் என்று கேள்விகளும் இடையில் திருத்தங்கள் செய்யப்பட்டிருக்குமோ என்று சந்தேகங்களும் எழுப்பப்பட்டுள்ளன. “ஒரு …
ஆர்சிஐ: ‘புரொஜெக்ட் ஐசி’-இல் அரசாங்கம், அரசியல் கட்சிகளுக்குத் தொடர்பில்லை
சாபாவில் குடியேறிகளுக்கு பெருமளவில் குடியுரிமை வழங்கியதில் அரசாங்கமோ அரசியல் கட்சிகளோ சம்பந்தப்பட்டிருக்கவில்லை என அரச விசாரணை ஆணைய (ஆர்சிஐ) அறிக்கை கூறுகிறது. இதனால் வாக்குகளுக்காகக் குடியேறிகளுக்குக் குடியுரிமை வழங்கியவர்கள் மத்திய அரசுத் துறைகளும் அம்னோ தலைவர்களும்தான் என்று இதுவரை கூறப்பட்டு வந்தது பொய்யென்று ஆகிறது. பதிவுத் துறையின் முன்னாள் …
எம்பி: போலீஸ் காஜாங்கில் தேவாலய வழிபாட்டைத் தடுக்கப் பார்த்தது உண்மையே
காஜாங், பெதானி தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை வழிபாடு நடந்துகொண்டிருந்தபோது இரண்டு போலீஸ்காரர்கள் அதைத் தடுக்க முயன்றது உண்மைதான். ஆனால், கிறிஸ்துவர்களின் தேசிய எவெங்கலிகல் கூட்டமைப்புடன்(என்இசிஎப்) பேசுமாறு கூறப்பட்டதும் அவர்கள் திரும்பிச் சென்று விட்டதாக. டிஏபி-இன் செர்டாங் எம்பி ஒங் கியான் மிங் கூறினார். நேற்று, மலேசியாகினியில் வழிபாட்டை அவர்கள் தடுத்து …
சிலாங்கூர் சட்டமன்றத்திலிருந்து பிஎன் வெளிநடப்பு
இன்று சிலாங்கூர் சட்டமன்றத்தில் தேச நிந்தனைச் சட்டத்தை இரத்துச் செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுக்க அவசரத் தீர்மானம் ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அத்தீர்மானத்தை லாவ் வெங் சான்(டிஏபி- கம்போங் துங்கு) தாக்கல் செய்ய சாஅரி சுங்கிப் (பாஸ்- உலு கிளாங்) வழிமொழிந்தார். ஆனால், அத்தீர்மானம் …
சுஹாகாம்: மலேசியாவில் உடல்குறையுடையோருக்கு அவர்களின் உரிமகள் மறுக்கப்படுகின்றன
மலேசியாவில் உள்ள உடல்குறையுடையோருக்கு அவர்களின் உரிமைகள் மறுக்கப்படுகின்ற நிலைதான் இன்னமும் உள்ளதாம். மலேசிய மனித உரிமை ஆணையம் (சுஹாகாம்), அனைத்துலக உடல்குறையுடையோர் தினத்தையொட்டி வெளியிட்டிருக்கும் அறிக்கை ஒன்றில் இவ்வாறு கூறியுள்ளது. “மலேசியாவில், உடல்குறையுடையோருக்குத் தொடர்ந்து உரிமைகள் மறுக்கப்படுகின்றன. மற்றவற்றோடு பொதுக் கல்விமுறையில், பொது, தனியார் துறைகளில் வேலைக்குச் சேர்த்தல் …


