சட்டவிரோத பந்தயம் மற்றும் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுவதற்குப் பெயர்போன ஒரு பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில், 45 கார்களைப் பரிசோதித்த போலீசார் 32 சம்மன்களை வழங்கியுள்ளனர். இன்று அதிகாலை இங்குள்ள லெபு மெதினி உத்தாமா பகுதியில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சட்டவிரோத பந்தயம் மற்றும் ஆபத்தான முறையில் வாகனம்…
மாணவர் இயக்கத்தில் ‘பிஎன்னுக்கு வாக்களிக்க’ச் சொன்ன அமைச்சர்
மாணவர்களும் பெரியவர்களும் கலந்துகொண்ட ‘மீண்டும்-பள்ளிக்கூடம் போகலாம்’ இயக்கத்தில் உரையாற்றிய உள்நாட்டு வாணிக, கூட்டுறவு, பயனீட்டாளர் விவகார அமைச்சர் ஹசன் மாலேக், பாரிசான் நேசனலுக்கு வாக்களிக்கச் சொல்லவும் மறக்கவில்லை. உலகத்திலேயே மக்களின் நல்வாழ்வு பற்றிச் சிந்துக்கும் “ஒரே அரசாங்கம்” பிஎன் மட்டுமே என்று ஹசன் கூறினார். “அதனால், பிஎன்னுக்கு வாக்களிக்க …
சீனப் புதுக்கிராமங்கள் சீனர்கள் காலூன்ற உதவின
1952-இல், சீனர்கள் பல மில்லியன் ரிங்கிட் பெறுமதியுள்ள புதுக்கிராமங்களில் குடி அமர்த்தப்பட்டது அவர்கள் இந்நாட்டில் வலுவாகக் காலூன்ற பெரிதும் உதவியதாக ஈக்காத்தான் முஸ்லிமின் மலேசியா (இஸ்மா) உதவித் தலைவர் அப்துல் ரஹ்மான் மாட் டாலி கூறினார். “மெர்டேகாவுக்கு சில ஆண்டுகளுக்குமுன், சர் ஹெரோல்ட் பிரிக்ஸ் மிகப் பெரிய நடவடிக்கையை …
தேவாலய வழிபாடு ‘இரைச்சலாக இருந்ததால்’போலீஸ் தடுத்து நிறுத்தியதாம்
மிகுந்த இரைச்சலாக இருப்பதாய் அண்டைவீட்டார் புகார் செய்ததை அடுத்து காஜாங் தேவாயம் ஒன்றில் நடைபெற்றுக் கொண்டிருந்த ஞாயிற்றுக்கிழமை வழிபாட்டை போலீசார் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் காஜாங், பெதானி தேவாலயத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்தது. வழிபாடு நடந்துகொண்டிருந்த நேரத்தில் போலீஸ் கடைவீடு ஒன்றில் அமைந்திருந்த தேவாலயத்துக்குள் சென்றார்களாம். “வழிபாட்டை …
‘கிள்ளிங்’என்று சொன்னவருக்கு எதிராக நாடு முழுக்க போலீஸ் புகார்
கடந்த வார அம்னோ பேராளர் கூட்டத்தில் இந்தியர்களை இழிவுபடுத்தும் சொல்லைப் பயன்படுத்திய பெர்மாத்தாங் பாவ் அம்னோ தலைவர் ஜைடி முகம்மட் சைட்-டுக்கு எதிராக நாடு முழுக்க போலீஸ் புகார் செய்யும் இயக்கமொன்று தொடங்குகிறது. முதல் புகார் இன்று கிள்ளானில் தமிழர் செயல்படையால் செய்யப்பட்டது “கிள்ளிங்” என்று சொல்லி ஜைடி…
கெராக்கான்: அம்னோ பேராளர்கள்மீது தேச நிந்தனைக் குற்றம் சாட்டுக
அரசாங்கம் தேச நிந்தனைச் சட்டத்தைச் செயல்படுத்துவதில் நியாயமாக நடந்துகொள்ள வேண்டும் என வலியுறுத்திய கெராக்கானின் பல்ஜிட் சிங், அம்னோ பேராளர்கள் முகம்மட் ஜைடி முகம்மட் சைட், மஷிடா இப்ராகிம் ஆகியோருடன் பெர்காசா தலைவர் இப்ராகிம் அலியையும் கூண்டிலேற்ற வேண்டும் எனக் கூறினார். ஆள் பார்த்துத்தான் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது…
கூட்டத்துக்கு வராத பழனிவேலுக்கு கேமரன் குடியிருப்பாளர்கள் கண்டனம்
அண்மைய நிலச் சரிவுகள் பற்றி விவாதிக்க ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு கருத்தரங்குக்கு இயற்கைவள, சுற்றுச்சூழல் அமைச்சர் ஜி.பழனிவேல் வராததைக் கண்டு கேமரன் மலை குடியிருப்பாளர்கள் ஆத்திரமடைந்துள்ளனர். கேமரன் மலை எம்பியான பழனிவேலுவுடனும் தானா ராத்தா சட்டமன்ற உறுப்பினர் லியோங் இங்கா இங்காவுடனும் கலந்துரையாட ரக்யாட் பிரிஹாதின் கேமரன்…
அம்னோ இருவர்மீது விசாரணை நடத்த ஜாஹுட்-டின் உத்தரவுக்குக் காத்திருக்கிறார்களா, போலீசார்?
அம்னோ பேராளர்கள் முகம்மட் ஜைடி முகம்மட் சைட், மஷிடா இப்ராகிம் ஆகியோருக்கு எதிராக பல புகார்கள் செய்யப்பட்டும் போலீசார் நடவடிக்கை எடுக்கத் தயங்குவது ஏன்? உள்துறை அமைச்சர் பச்சை விளக்குக் காண்பிக்கக் காத்திருக்கிறார்களா என டிஏபி பெருந் தலைவர் லிம் கிட் சியாங் வினவுகிறார். அவ்விருவரும் பிரதமர், துணைப் …
கிட்டிங்கான்: முதலில் தீவிரவாதிகளைக் கைது செய்யுங்கள்
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடியும், சாபா விவகாரம் தொடர்பில் யாரையும் கைது செய்யுமுன்னர் கள்ளக்குடியேறிகளுக்கு போலி அடையாள அட்டைகளையும் மைகார்டுகளையும் கொடுத்து அவர்களை வாக்காளர் பட்டியலிலும் இடம்பெறவைத்த ‘துரோகிகளையும் கயவர்களையும்’ கைது செய்ய வேண்டும் என சாபா சீர்திருத்தக் கட்சி (ஸ்டார்) …
‘கம்முனிஸ்ட் கட்சி விருந்து’ ஏற்பாட்டாளர்கள்மீது போலீஸ் விசாரணை
மலாயா கம்முனிஸ்டுக் கட்சி தொடர்பில் ஒரு விருந்து நிகழ்வுக்கு ஏற்பாடு செய்தவர்களை போலீஸ் விசாரணைக்கு அழைக்கும் என பினாங்கு துணை போலீஸ் தலைவர் ஏ,தெய்வீகன் கூறினார். சனிக்கிழமை பட்டர்வொர்த் பல்நோக்கு மண்டபத்தில் நடைபெற்ற அவ்விருந்து பற்றி இதுவரை 24 புகார்கள் செய்யப்பட்டிருப்பதாக அவர் கூறினார். “அவர்களை நேரடியாக தொடர்புகொள்வோம்.…
சட்டமன்றத் துணைத் தலைவர் பதவிமீது டிஏபி-க்கு ஏன் இத்தனை மோகம்?…
சட்டமன்றத் தலைவர் பதவி வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கும் டிஏபி- யை சிலாங்கூர் கெராக்கான் சாடியுள்ளது. சிலாங்கூர் சட்டமன்றத்தில் இரண்டாவது துணைத் தலைவர் பதவி உருவாக்கப்பட்டு அது டிஏபி-க்குக் கொடுக்கப்பட வேண்டும் என்று சிலாங்கூர் டிஏபி தலைவர் டோனி புவா கோரிக்கை விடுத்திருப்பதை சிலாங்கூர் கெராக்கான் செயலாளர் எண்டி …
கிறிஸ்துவர்களை மரத்தடியில் வழிபாடு செய்ய வைப்பது மலேசியக் கலாச்சாரமல்ல
கிறிஸ்துவ மாணவர்களை மரத்தடியில் வழிபாடு செய்யச் சொல்வதும் மலாய், முஸ்லிம் ஆடைகளை அணியுமாறு கூறுவதும் மலேசியக் கலாச்சாரத்துக்கு எதிரானது என்கிறார் இரண்டாவது கல்வி அமைச்சர் இட்ரிஸ் ஜோஸோ. சாபா நாளேடான டெய்லி எக்ஸ்பிரஸில், அந்தக் கிழக்கு மலேசிய மாநிலத்தில் ஒரு கல்லூரியின் கிறிஸ்துவ மாணவர்கள் திறந்த வெளியில் வழிபாட்டை …
தேச நிந்தனைச் சட்டத்தால் ஊழலை எதிர்ப்பது கடினமாகலாம்
தேச நிந்தனைச் சட்டத்தை தொடர்ந்து வைத்திருக்கும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் முடிவினால் ஊழல், மோசடி, அதிகாரமீறல் ஆகியவற்றை எதிர்த்துப் போராடுவது சிரமமாகலாம். “அச்சட்டம் மேலும் வலுப்படுத்தப்படும் என்றவர் கூறியிருப்பது பேச்சுரிமையை மட்டுமல்லாமல் ஊழல், அதிகாரமீறல்கள் பற்றிய தகவல் பரப்பலையும் கட்டுப்படுத்தும்”, என ஊழல்- தடுப்புக்காகப் போராடும் National…
டிஎன்பி ஊழியரை திட்டியதை ஒப்பினார் நாம்வீ
சர்ச்சைக்குரிய ரேப் இசைக்கலைஞரும் படத்தயாரிப்பாளரும், நாம்வீ என்ற பெயரில் பிரபலமாக விளங்குபவருமான வீ மிங் சீ, 2009-இல் தெனாகா நேசனல் பெர்ஹாட் ஊழியர் ஒருவரை இழிவுபடுத்திய குற்றத்தை ஒப்புக்கொண்டிருக்கிறார். அக்குற்றத்துக்காக மூவார் செசன்ஸ் நீதிமன்றம் மூன்று மாதச் சிறை அல்லது மூன்று மாத சமூகச் சேவைகள் எனத் தீர்ப்பளித்தது.…
சாபா கள்ளக்குடியேறிகள் மீதான ஆர்சிஐ அறிக்கையை வெளியிடுவதில் தாமதம் ஏன்?
சாபா கள்ளக்குடியேறிகள் மீதான அரச விசாரணை ஆணைய(ஆர்சிஐ) அறிக்கையில் “தெரிவிக்கப்பட்டுள்ள சில பரிந்துரைகள் அரசாங்கத்துக்குப் பிடிக்கவில்லைபோலும்” அதனால்தான் அந்த அறிக்கையை நாடாளுமன்றத்தில் இன்னும் தாக்கல் செய்யாமல் பிடித்து வைத்துக் கொண்டிருக்கிறது என்கிறார் ஆணையத்திடம் சாட்சியமளித்துள்ள முக்கிய சாட்சிகளில் ஒருவர். “கடந்த டிசம்பரில் அது தயாராகி விட்டது. மே 21-இல் …
வணிகர்: அனிபாவுக்கு ரிம100 மில்லியன் கொடுப்பதாக சொல்லவில்லை
தொழில் அதிபரான ஈஷாக் இஸ்மாயில், 2008-இல் வெளியுறவு அமைச்சர் அனிபா அமான், பிஎன்னைவிட்டு வெளியேறி அன்வார் இப்ராகிம் புதிய அரசாங்கம் அமைக்க உதவினால் அவருக்கு ரிம100 மில்லியன் கொடுப்பதாக சொன்னதே இல்லை என்கிறார். தாம் ரிம100 மில்லியன் கொடுக்க முன்வந்ததாகக் கூறப்படுவதை “ஒட்டுமொத்தமாக மறுப்பதாக” ஒர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள …
எம்பி: எண்ணெய் விலை உயரும்போது உதவித் தொகை திரும்பி வருமா?
உலகின் எண்ணெய் விலை சரிந்து வரும்வேளையில் உதவித் தொகையை நிறுத்திக்கொண்டு விலையை மிதக்கவிட்டிருக்கும் அரசாங்கம் விலைகள் உயரும் பட்சத்தில் திரும்பவும் உதவித் தொகையை கொடுக்குமா என ஈப்போ பாராட் எம்பி எம்.குலசேகரன் வினவுகிறார். “எந்த நேரத்திலும் உலக எண்ணெய் விலை உயரலாம். இப்போதைய கட்டுப்படுத்தப்பட்ட மிதவை முறையின்கீழ் அரசாங்கத்தின் …
டாயாக் இனத்தவர் ஓரங்கட்டப்படுது ஏன்? நஜிப் விளக்க வேண்டும்
டாயாக் இனத்தவர், பொதுச் சேவைத் துறையில் தங்களுக்கு எதிராக பாகுபாடு காட்டப்படுவதாகக் கூறிக்கொள்வது தொடர்பில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் நடப்பு செனட் கூட்டத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கேளாங் பாத்தா எம்பி லிம் கிட் சியாங் கேட்டுக்கொண்டிருக்கிறார். “அரசாங்கச் சேவையில் உள்ள பூமிபுத்ராக்களுக்கிடையில் பாரபட்சம்…
விவேகனந்தா ஆசிரமம்: இப்போதெல்லாம் வரலாற்றுக்கான முக்கியத்துவத்தை விட வாணிக நோக்கம்…
கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸ்சில் விவேகனந்தா ஆசிரமம் அமைந்துள்ள இடத்தை மேம்படுத்தி 23 மாடி கொண்டோ கட்டுவதற்கு அதன் அறங்காவலர்கள் வரைந்திருக்கும் திட்டத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இன்றும், அங்கு ஓர் எதிர்ப்பு கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தை விவேகானந்தா ஆசிரமத்தை காப்பற்றுவதற்கான நடவடிக்கை குழு ஏற்பாடு செய்திருந்தது. கடந்த…
டீசல் தரும் அதிர்ச்சி; ரோன்95 விலை குறைகிறது
புதிய எரிபொருள் விலைகள் எப்படிக் கணக்கிடப்படுகின்றன என்பதை அரசாங்கம் விளக்க வேண்டும் என சி பூத்தே எம்பி தெரேசா கொக் கேட்டுக்கொண்டிருக்கிறார். இன்றைய சைனாபிரஸ் டெய்லி-இல், நாளை முதல் அமலுக்கு வரும் எரிபொருள் விலைகள் அறுவிக்கப்பட்டிருந்தன. ரோன்95 - லிட்டருக்கு ரிம2.26 (4 சென் குறைவு) ரோன்97 -…
கேவியெஸ்: நஜிப் எது சொன்னாலும் சரியாகத்தான் இருக்கும்
தேச நிந்தனைச் சட்டம் விஷயத்தில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அடித்த பல்டியை மக்கள் முற்போக்குக் கட்சி(பிபிபி)த் தலைவர் எம்.கேவியெஸ் ஆதரிக்கிறார். “இந்த ஆட்டத்தில் இரண்டு விதிகள்தான். போஸ் எப்போதும் சரியாகத்தான் சொல்வார். போஸ் தவறாக சொல்லியிருந்தால் முதல் விதி குறிப்பிடுவதைப் பின்பற்றுக(அது , போஸ் எது சொன்னாலும் சரியாகத்தான் …
மசீச ‘தேச நிந்தனைச் சட்டத்தை ஆதரிக்கிறது’, அம்னோ செராஸைச் சாடுகிறது.
மசீச ‘தேச நிந்தனைச் சட்டத்தை ஆதரிக்கிறது’, அம்னோ செராஸைச் சாடுகிறது. மசீச, அதன் துணைத் தலைவர் வீ கா சியோங், பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் பிஎன் பங்காளிக் கட்சிகளுடன் கலந்துபேசாமலேயே தேச நிந்தனைச் சட்டத்தைத் தொடர்ந்து வைத்திருக்க முடிவெடுத்து விட்டதாக குறைப்பட்டுக்கொண்டார் எனக் கூறப்படுவதை மறுத்து, வீ …
குவான் எங்: வெளிப்படையாக அவமதிக்கும் அம்னோவுடன் தொடர்ந்து இருக்கத்தான் வேண்டுமா?
பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங், நடந்த முடிந்த அம்னோ ஆண்டுக்கூட்டத்தில் மலேசியாவின் சிறுபான்மை இனங்கள்மீது “வெறுப்பைக் கக்கிய” அம்னோவுடன் கூட்டு வைத்துள்ள பிஎன் பங்காளிக்கட்சிகளைக் கண்டித்துள்ளார். “சீன வாக்குகளை வெற்றிபெற முடியும் என்ற எண்ணத்தை அம்னோ கைவிட்டிருக்கிறது. அதனால் அவர்களை ஏளனப்படுத்துகிறது, அவர்களைப் பற்றிப் பொய்களைக் கூறுகிறது, …


