பாஸ் வான் அசிசாவை ஆதரித்து சத்திய பிரமாணங்களில் கையெழுத்திடாது

சிலாங்கூரின்  13  பாஸ்  சட்டமன்ற  உறுப்பினர்களும், சிலாங்கூர்  மந்திரி  புசார்  பதவிக்கு  டாக்டர்  வான்  அசிசா  வான்  இஸ்மாயிலுக்கு  ஆதரவாக  சத்திய பிரமாணங்களில் (எஸ்டி)  கையெழுத்திட  மாட்டார்கள். இன்று இதை  உறுதிப்படுத்திய  பாஸ்  தலைமைச்  செயலாளர்  முஸ்தபா அலி, சிலாங்கூரின்  புதிய  எம்பியை  முடிவுசெய்யும்  பொறுப்பை  சிலாங்கூர்  அரண்மனையிடமே …

அன்வார்: அனிபா கட்சி தாவத் தயார் என்றார்

2012-இல்  பிஎன்  அரசாங்கத்தைக்  கவிழ்க்க அன்வாரிடம்  போதுமான  எம்பிகள்  இருந்தால் அவருடன்  சேர்ந்துகொள்ள வெளியுறவு  அமைச்சர்  அனிபா  அமான்  தயாராக  இருந்தாராம். எதிரணி  தலைவர்  அன்வார்  இப்ராகிம்  இன்று  கோலாலும்பூர்  உயர்  நீதிமன்றத்தில்  இவ்வாறு  கூறினார். அனிபாவிடம்  தாம்  பேரம்  பேசவில்லை  என்று  கூறிய  அன்வார், அவருக்குத்  துணைப் …

பிகேஆர்: சுல்தான் எம்பியைப் பார்த்த பிறகு வான் அசிசாவைச் சந்திக்கலாம்

சிலாங்கூர்  ஆட்சியாளர்  சுல்தான் ஷராபுடின்  இட்ரிஸ்  ஷா, மந்திரி  புசார்  அப்துல்  காலிட்  இப்ராகிமைச்  சந்தித்த  பின்னர்  பிகேஆர்  தலைவர்   டாக்டர் வான்  அசிசா  வான்  இஸ்மாயிலைச்  சந்திப்பார்  என  எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத்  தெரிவித்த  எதிரணித்  தலைவர்  அன்வார்  இப்ராகிம், சுல்தானை  பேட்டி  காண  அனுமதி  கேட்டு  பிகேஆர் …

அவதூறு குற்றச்சாட்டுக்கு எதிராக விசாரணை கோரினார் முன்னாள் எம்பி நிஸார்

2012-இல் பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கை  அவமதித்த குற்றச்சாட்டை  மறுத்த பேராக்கின்  முன்னாள்  மந்திரி  புசார் முகம்மட்  நிஸார்  ஜமாலுடின்  அதற்கெதிராக  விசாரணை  கோரினார். அரிதாகவே  பயன்படுத்தப்படும்  குற்றவியல்  சட்டம்  பகுதி  500-இன்கீழ்  அவர்மீது  கிறிமினல்  அவதூறு  வழக்கு  தொடுக்கப்பட்டுள்ளது. குற்றவாளி  எனத்  தீர்ப்பளிக்கப்பட்டால்,  சங்காட்  ஜெரிங்  சட்டமன்ற …

காலிட் நாளை சுல்தானைச் சந்திக்கிறார்

சிலாங்கூர்  மந்திரி  புசார்(எம்பி)  அப்துல்  காலிட்  இப்ராகிம், தமது எம்பி  பதவி  பற்றி  முடிவு செய்ய  நாளை  சுல்தான்  ஷராபுடின்  இட்ரிஸ்  ஷாவைச்  சந்திப்பார். சில  வாரங்களுக்குமுன்  பிகேஆரிலிருந்து  நீக்கப்பட்ட  காலிட்  சுயேச்சை  எம்பி-ஆக  செயல்பட  அளித்து வந்த  ஆதரவை  பாஸ்  மீட்டுக்கொண்டதால்  உருவாகியுள்ள  நெருக்கடிக்குத்  தீர்வுகாண  சுல்தான் …

நஜிப் சர்வாதிகாரியல்ல, முகைதின் யாசின்

  கடந்த வாரம் பிரதமர் நஜிப் ரசாக்கை முன்னாள் பிரதமர் மகாதீர் முகமட் கடுமையாகச் சாடியிருந்தார். இச்சாடல் அவரை பதவியிலிருந்து அகற்றும் முயற்சியாக இருக்கக்கூடும் என்ற கருத்து பலரால் தெரிவிக்கப்பட்டது. நஜிப்பை பல தலைவர்கள் தற்காத்து பேசினர். ஆனால், துணைப் பிரதமர் முகைதின் யாசின் மட்டும் மௌனம் காத்தார்.…

30 சத்தியப் பிரமாணங்கள் இருக்கையில் அஸிசா பாஸ்சுக்காக காத்திருக்க வேண்டியதில்லை

  பிகேஆர் தலைவர் வான் அஸிசா சிலாங்கூர் மாநில மந்திரி புசாரக நியமிப்பதற்கு ஆதரவாக பாஸ் கட்சியின் சிலாங்கூர் சட்டமன்ற உறுப்பினர்களின் சத்தியப் பிரமாணத்தை வழங்குவதில் அக்கட்சி கடைபிடிக்கும் தாமதம் முக்கியத்துவமற்றதாகும். "(வான் அஸிசா தற்போது கைவசம் வைத்திருக்கும்) 30 சத்தியப் பிரமாணங்கள் தேவைக்கும் கூடுதலானது என்று நான்…

வாருங்கள், பக்கத்தானில் இணையுங்கள், மகாதீருக்கு குலா அழைப்பு

-மு. குலசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர், ஆகஸ்ட் 23, 2014. முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது, பிரதமர் நஜிப்பை கடுமையாக விமர்சித்து வருவதாலும் அம்னோவின் நடவடிக்கைகள் மீதும் அவருக்கு மிகுந்த ஏமாற்றமும் அதிருப்தியும் ஏற்பட்டுள்ளதாலும் அவர் தாரளமாக உண்மை பேச விரும்பும் பாக்காத்தான் ராக்யாட் கட்சிக்குள் இணைவதற்கு விண்ணப்பிக்கலாம். அவர்…

எம்ஏஎஸ் விமானம் ‘பாதுகாப்புக் காரணங்களுக்காக’ திரும்பி வந்தது

தோக்கியோவை  நோக்கிச்  சென்று  கொண்டிருந்த மலேசிய  விமான  நிறுவன(எம்ஏஎஸ்)த்துக்குச்  சொந்தமான  எம்எச்70   விமானத்தின் “பாதுகாப்பு”  பற்றி  சந்தேகம்  எழுந்ததால்  அது கோலாலும்பூருக்கே  திரும்பி  வந்தது. அவ்விமானம், காலை  மணி  10.50க்கு  கேஎல்ஐஏ-இலிருந்து  புறப்பட்டது.  புறப்பட்ட  50வது  நிமிடத்தில் விமானி, விமானம்  திரும்புவது  பற்றி  அறிவித்தார்  எனப்  பயணி  ஒருவர் …

மகாதிர் செய்த தவறுகளுக்கு வருந்த வேண்டும்-இந்திய வர்த்தக சங்கம்

டாக்டர்  மகாதிர் முகம்மட்டின்  காரசாரமான  தாக்குதலுக்கு  எதிராக  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்குக்குப்  பரிந்து  பேசிவரும்  அம்னோ  தலைவர்களுடன்  இந்திய  வணிகர்களும்  கைகோத்துக்  கொண்டிருக்கிறார்கள். மகாதிர்,  நஜிப்பைத்  தாக்குவதை  நிறுத்திக்கொண்டு “சொந்த  பலவீனங்களை  எண்ணிப்பார்க்க  வேண்டும்”  என மலேசிய  இந்தியர்  வர்த்தகச்  சங்கங்களின்  கூட்டமைப்பு (மைக்கி) இன்று  ஓர் …

சட்ட நிபுணர்: சுல்தான் சட்டமன்றத்தைக் கலைக்கத் தேவையில்லை

சிலாங்கூர்  சுல்தான்  நினைத்தால்  சட்டமன்றத்தைக்  கலைக்கலாம். அது வெஸ்ட்மின்ஸ்டர்  பாரம்பரியத்துக்கு  ஏற்புடையதல்ல  என்றாலும்  சுல்தானுக்கு  அந்த  அதிகாரம்  உண்டு. “சுல்தான்  திங்கள்கிழமை  சட்டமன்றத்தைக்  கலைக்க   முடிவு  செய்தால்  அதைத்  தடுக்கவியலாது”, என  அரசமைப்புச்   சட்ட  நிபுணர்  அப்துல்  அசீஸ்  பாரி, நேற்றிரவு  ஒரு  கருத்தரங்கில்  கூறினார். அதேவேளை,  காமன்வெல்த் …

பாஸ் அசிசாவுக்கு எழுத்துப்பூர்வமான ஆதரவை நிறுத்தி வைத்துள்ளது

பாஸ்,  பிகேஆர்  தலைவர்  வான்  அசிசா  வான்  இஸ்மாயில்  மந்திரி  புசாராவதற்கு  ஆதரவு  கொடுத்தாலும்  அதை  எழுத்தில் தெரிவிப்பதற்கு  அது  மறுத்து  வருகிறது. வான்  அசிசாவுக்கு  ஆதரவு  தெரிவிக்கும்  சத்திய  பிரமாணத்தில்  கையெழுத்திட  அதன்  சட்டமன்ற  உறுப்பினர்கள் 13 பேரையும்  பாஸ்  அனுமதிக்கவில்லை  என  சில  வட்டாரங்கள்  மலேசியாகினியிடம் …

கருத்துக்கணிப்பு: வான் அசிசா எம்பி ஆவதே பெரும்பாலோர் விருப்பம்

சிலாங்கூரின்  அடுத்த  மந்திரி  புசாராவதற்கான  தகுதியான  வேட்பாளர்  பிகேஆர்  தலைவர் டாக்டர்  வான்  அசிசா  வான்  இஸ்மாயில்தான்  என்பது  பெரும்பாலோர்  விருப்பமாக  இருப்பது  மெர்டேகா  மையம்  மேற்கொண்ட  கருத்துக் கணிப்பு  ஒன்றில்  தெரிய  வந்துள்ளது. மாற்று  வேட்பாளராகக்  குறிப்பிடப்பட்டிருக்கும்  அஸ்மின்  அலிக்கு  அவ்வளவாக  வரவேற்பு  இல்லை. ஆறு  விழுக்காட்டினரே …

வான் அசிசா எம்பி ஆவதற்கு சுல்தானின் விருப்பம் தடையாகுமா?

பிகேஆர்  தலைவர்  டாக்டர்  வான்  அசிசா  வான்  இஸ்மாயில்  சிலாங்கூர்  எம்பி  ஆவதற்கு  எஞ்சியுள்ள ஒரே  தடை  அரண்மனைதான். சுல்தான் ஷராபுடின்  இட்ரிஸ்  ஷா-வின் அங்கீகாரம்  கிடைத்தால்  அவர்  எம்பி  ஆகி  விடலாம். சுல்தானின்  அனுமதி  கிடைக்குமா? இதை மலேசியாகினி  வான்  அசிசாவிடம்  கேட்டதற்கு,  சுல்தானுக்கென  சொந்த  “விருப்பங்கள்” …

சைத்தான்கள் பக்கத்தானை உடைக்க சதி செய்வதாக ஷம்சுல் எச்சரிக்கை

பிகேஆர்  இளைஞர்  தலைவர்  பதவியிலிருந்து  வெளியேறும்  ஷம்சுல்  இஸ்கண்டர்  முகம்மட்  அகின், பக்கத்தான்  ரக்யாட்டை  உடைப்பதற்கு  கட்சிக்குள்  சதி  நடப்பதாக  எச்சரித்துள்ளார். கட்சியில்  உள்ள  “சண்டியர்கள்”  சிலாங்கூர்  மந்திரி  புசார்  நெருக்கடியின்போது  கட்சியைப்  பிளவுபடுத்தப்  பார்த்தார்கள்  என்றாரவர். யாரையும்  அவர் பெயர்  குறிப்பிடவில்லை.  ஆனால், இதை  பக்கத்தானை  உடைக்கும் …

துக்கத்தைப் பகிர்ந்துகொள்ள பல்லாயிரக்கணக்கானோர் ஒன்று திரண்டனர்

தேசிய  துக்க  தினமான  இன்று,  கோலாலும்பூரில் பல்லாயிரக்கணக்கான  மாநகர்  மக்கள்  சுல்தான்  அப்துல்  சமட்  கட்டிடத்துக்கு  முன்புறமுள்ள  டாட்டாரான்  மெர்டேகாவில்  ஒன்று  திரண்டு எம்எச்17  விபத்தில்  கொல்லப்பட்டவர்களுக்காக  நாடு  அனுசரிக்கும்  துக்கத்தைப்  பகிர்ந்து  கொண்டனர். காலை மணி  10.54-க்கு  நாட்டின்  மற்ற  பகுதிகளுடன்  சேர்ந்து  அவர்களும்  ஒரு  நிமிடம் …

விமான விபத்தில் உயிரிழந்த குடிமக்களுக்கு மலேசியா மவுன அஞ்சலி

ஜூலை  மாதம் கிழக்கு உக்ரேய்னில் நிகழ்ந்த எம்எச்17 விமான விபத்தில் பலியான 43 மலேசியர்களில்  20 பேரின் சடலங்கள்  மலேசியாவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ள  வேளையில்  அவர்களுக்கு  நாடே ஒன்றுதிரண்டு  அஞ்சலி  செலுத்தியது. மலேசியா  வந்துசேர்ந்த  சடலங்களுக்கு  கேஎல்ஐஏ  பூங்கா  ராயா  வளாகத்தில்  ராணுவ  முறைப்படி  வரவேற்பளிக்கப்பட்டது. அந்நிகழ்வில்  பேரரசர்  துவாங்கு …

சமயத்தைக் காட்டி பெண்கள் தலைவராவதைத் தடுக்காதீர்

பிகேஆர்  உதவித்  தலைவராக  மீண்டும்  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள  நுருல்  இஸ்ஸா  அன்வார், அரசியலில்  மகளிர்  மறுமலர்ச்சி  தேவை  என்று  கூறியுள்ளார். “பெண்கள்  தலைவர்கள்  ஆவது  அந்நியமானது, கூடாத  செயல் என்று நினைப்போர்  இருக்கத்தான்  செய்கிறார்கள். “அதைவிட  மோசமாக  சிலர்,  சமய  வாதங்களை  முன்னிறுத்தி  பெண்கள்  தலைவர்களாவதைத்  தடுக்க முனைகிறார்கள்”  என…

டாக்டர் மகாதிர்- நஜிப் சர்ச்சையில் குதிக்க கேஜே மறுப்பு

இளைஞர், விளையாட்டுத்துறை  அமைச்சர்  கைரி  ஜமாலுடின்,  முன்னாள் பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்  தொடங்கியுள்ள  அரசாங்கத்தைக்  குறைகூறும்  படலம்  குறித்து  கருத்துரைக்க  விரும்பவில்லை. “நான்  எதுவும்  சொல்லாதிருப்பதே  நல்லது. நான்  சொல்வதை  மகாதிர் தப்பாக  புரிந்துகொள்ளக் கூடும். “ஏனென்றால்,   முன்னாளிலிருந்தே  நான்தான்  மகாதிரின்  முதல் ‘நம்பர்’ பொது  எதிரியாக …

எம்எச்17 விமான விபத்தில் பலியானவர்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படுகிறது

  கிழக்கு உக்ரேய்னில் நிகழந்த எம்எச்17 விமான விபத்தில் பலியான 20 மலேசியர்களின் சடலங்கள் இன்று நாட்டிற்கு கொண்டுவரப்படுகிறது. இத்துயரச் சம்பவத்திற்கு இன்று நாடு தழுவிய அளவில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. தனிப்பட்ட விமானத்தில் பலியான 20 மலேசியர்களின் சடலங்கள் இன்று காலை மணி 9.45 மணி அளவில் அம்ஸ்டர்டமிலிருந்து…

எம்பி-இன் உதவியாளர் கூறியதை எம்பி-இன் வழக்குரைஞர் மறுக்கிறார்

சிலாங்கூர்  மந்திரி  புசார்  அப்துல்  காலிட்  இப்ராகிமுக்கு  பேங்க்  இஸ்லாத்தில்  இருந்த  கடனை  மத்திய  கிழக்கு  வங்கி  ஒன்று தீர்த்து  வைத்ததாக  காலிட்டின்  சிறப்பு  அதிகாரி  அஸ்ருல்  அஸ்வார்  அஹமட்  தாஜுடின்  கூறியிருப்பதை  அவரின் வழக்குரைஞர் மறுக்கிறார். “எந்த  மத்திய  கிழக்கு  வங்கியும் காலிட்டின்  கடனைச் செலுத்தவில்லை  என …

குலா: நாங்கள் குரைக்கும் நாய்களா?

-மு.குலசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர், ஆகஸ்ட் 21, 2014. எதிர்க்கட்சிக்கும் ஆளும் கட்சிக்கும் வித்தியாசம் தெரியாமல் உளருகிறார் டாக்டர் எஸ். சுப்ரமணிய்ம்! மஇகாதான் இந்தியர்களின் பிரதிநிதி என்று எதிர்க்கட்சிகள்  ஏற்றுக்கொள்கிறார்கள் என்று டாக்டர்  எஸ்.சுப்ரமணியம் 68 ஆவது  மஇகா கூட்டரசு பிரதேச மாநாட்டில் தலைமையுரை ஆற்றும்போது கூறியிருந்தார். இப்பொழுது எதிர்க்கட்சியில்…

போலீஸ்:கார்ல்ஸ்பெர்க் ஆலையை வெடிவைத்து தகர்க்கத் தீவிரவாதிகள் திட்டம்

தீவிரவாதிகள்  என்று  சந்தேகிக்கப்படும்  ஒரு  கூட்டத்தினர் கோலாலும்பூருக்கு  அருகில்  உள்ள  கார்ல்ஸ்பெர்க்  பீர்  ஆலையைத் தகர்க்கும்  நோக்கத்துடன்   குண்டு  தயாரிப்புக்குத்  தேவையான  பொருள்களை  வாங்கி  வைத்திருந்ததாக போலீஸ்  பயங்கரவாத-எதிர்ப்புப்  பிரிவு  அதிகாரி  ஒருவர்  தெரிவித்தார். சீரியாவிலும்  ஈராக்கிலும்  இஸ்லாமிய  அரசின்  எழுச்சியால்  ஊக்கம்பெற்ற தென்கிழக்காசிய  தீவிரவாதிகள்,  உள்நாட்டில்  ஒரு …