மியான்மார் இராணுவம் இணைய மோசடி நடவடிக்கையை முடிவுக்குக் கொண்டு வந்து 2,000க்கும் மேற்பட்டவர்களைக் கைது செய்துள்ளதாகத் திங்களன்று அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தாய்லாந்து எல்லைக்கு அருகே நடந்த இந்தச் சோதனையின்போது, டஜன் கணக்கான ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய முனையங்களும் கைப்பற்றப்பட்டன. மியான்மார் சைபர்ஸ்கேம் நடவடிக்கைகளை நடத்துவதில் பெயர்…
நஜிப்: அமைச்சரவை விரிவாக்கம் தவிர்க்க இயலாதது
இன்று புதிய அமைச்சர்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டிருப்பதை அடுத்து அமைச்சரவை விரிவடைந்துள்ளது. இது தவிர்க்க இயலாதது எனப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் குறிப்பிட்டார். “மசீச-வின் முடிவுக்கு இடமளிக்க வேண்டி இருந்தது. முதலில் அவர்கள் (அமைச்சரவையில்) சேர விரும்பவில்லை. பிறகு, அரசாங்கத்தில் இருக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து (முடிவை) மாற்றிக் கொண்டார்கள்”,…
லியோவும் மா-வும் அமைச்சர்களானார்கள்
மசீச தலைவர் லியோ தியோங் லாய் புதிய போக்குவரத்து அமைச்சராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். மசீச துணைத் தலைவர் வீ கா சியோங் பிரதமர்துறை அமைச்சராக பொறுப்பேற்கிறார். அண்மையில் தெலோக் இந்தான் இடைத் தேர்தலில் வென்ற கெராக்கான் தலைவர் மா சியு கியோங்கும் பிரதமர்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டார். இவர்கள் …
மசோதாக்கள் ஏற்கப்பட்டால் பெர்காசா தலைமைச் செயலாளர் அம்னோவிலிருந்து விலகுவார்
தேசிய ஒற்றுமை ஆலோசனை மன்றம் (எனயுசிசி) முன்மொழிந்துள்ள மூன்று நல்லிணக்க சட்டவரைவுகளை அரசாங்கம் ஏற்றுக்கொண்டால் அம்னோவிலிருந்து வெளியேறப் போவதாக பெர்காசா தலைமைச் செயலாளர் சைட் ஹசன் சைட் அலி கூறினார். “நான் அம்னோவிலிருந்து விலகுவேன். ஆயிரக்கணக்கானோரும் விலகுவர். “மலாய்க்காரர்களும் முஸ்லிம் என்ஜிஓ-களும் நடப்பு அரசாங்கத்தை நிராகரிக்கவும் தயங்க மாட்டார்கள் …
உயர் போலீஸ் அதிகாரியின் பாலியல் லீலைகள்: ஆதாரம் காண்பிக்க மைவாட்ச்…
போலீஸ் உயர் அதிகாரி ஒருவரின் பாலியல் லீலைகளைக் காண்பிக்கும் நிழற்படங்கள் தன்னிடம் இருப்பதாக மைவாட்ச் அமைப்பு கூறியுள்ளது. அவ்வமைப்பின் தலைவர் ஆர். ஸ்ரீ சஞ்சீவன் அந்த அதிகாரியின் பெயரைத் தெரிவிக்க மறுத்தார். ஆனால், அந்தப் படங்களை அம்பலப்படுத்த அவர் ஆயத்தமாக உள்ளார். அதற்குமுன் பிரதமரிடமிருந்தும் உள்துறை அமைச்சரிடமிருந்தும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற …
‘தலையை துண்டித்தல்’ என்றால் தலையை வெட்டுவது இல்லீங்க- பெர்காசா
இஸ்லாத்தையும் சிலாங்கூர் சுல்தானையும் அவமதிப்போரின் “தலை துண்டிக்கப்படும் ” என்று கூறியதற்காக பல தரப்பினரின் கண்டனத்துக்கு ஆளான பெர்காசா தகவல் தலைவர் ருஸ்லான், இப்போது “ஒரு பேச்சுக்காகவே” அப்படிச் சொல்லியதாக கூறிக்கொள்கிறார். தலை துண்டிக்கப்படும் என்று கூறியது உண்மைதான். ஆனால், எம்பிகளான காலிட் சமத் (ஷா ஆலம்), டாக்டர் …
இன்று, அமைச்சரவை மாற்றம்?
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அமைச்சரவை மாற்றம் பற்றி அறிவிப்பதற்குத்தான் இன்று பிற்பகல் செய்தியாளர் கூட்டமொன்றை நடத்துகிறார் என்று பரவலாகப் பேசப்படுகிறது. செய்தியாளர் கூட்டம் பிற்பகல் மணி 12.30க்கு, புத்ரா ஜெயாவில் பிரதமர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. திருத்தி அமைக்கப்படும் அமைச்சரவையில் மசீச தலைவர்களும் கெராக்கான் தலைவர் மா சியு …
கிள்ளான் பள்ளத்தாக்கிலும் புத்ராஜெயாவிலும் காற்றின் தரம் ‘ஆரோக்கியத்துக்கு ஏற்றதல்ல’
கிள்ளான் பள்ளத்தாக்கிலும் புத்ராஜெயாவிலும் பல இடங்களில் காற்றின் தரம் ‘ஆரோக்கியத்துக்குக் கெடுதல்’ செய்யும் அளவில் பதிவாகியுள்ளது. புத்ரா ஜெயாவில், காலை 9 மணிக்கு காற்றின் தரக் குறியீடு 112-ஆக இருந்தது எனச் சுற்றுச்சூழல் துறை வலைத்தளம் கூறிற்று. பந்திங் அதற்கு அடுத்த நிலையில் இருந்தது. அங்குக் காற்றுத் தரக்…
மாநில பிஎன்: பினாங்கில் முதலீடு 82விழுக்காடு குறைந்திருக்கிறது
முதலமைச்சர் லிம் குவான் எங் காலவதியான புள்ளிவிவரங்களைக் காண்பித்து ஏமாற்றப் பார்க்கிறார் என்று குறைகூறிய பினாங்கு பிஎன், ஆகக் கடைசியாகக் கிடைத்த தகவலின்படி மாநிலத்துக்கு வந்த அந்நிய நேரடி முதலீடு(எப்டிஐ) 2010-இலிருந்து 82 விழுக்காடு குறைந்துள்ளது எனக் கூறியது. 2013 ஆகஸ்ட் வரைக்குமான எப்டிஐ புள்ளிவிவரங்களைத்தான் லிம் கொடுத்தார் …
பெர்காசா ஊழல் பக்கம் கவனத்தைத் திருப்புகிறது
மலேசிய ஊழல்-தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி), இயல்புமீறி ஆடம்பர வாழ்க்கை நடத்தும் பணி ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகளைக் கண்காணிக்க வேண்டும் என்று பெர்காசா இன்று கேட்டுக்கொண்டது. சிலர் அரசாங்கப் பணிகளில் ஈட்டிய வருமானத்துக்குச் சற்றும் பொருந்தாத வகையில் ஆடம்பரமாக செலவு செய்துகொண்டும், பெரிய, பெரிய வீடுகளில் வாழ்ந்து கொண்டிருப்பதையும் பார்க்கையில் …
புதிய சட்டப்படி ‘தலை வெட்டப்படும்’ என்று சொல்வது குற்றமாகும்
பெர்காசா தலைவர் ஒருவர் சிலாங்கூர் சுல்தானை அவமதிப்போர் அல்லது இஸ்லாத்தை அவமதிப்போரின் “தலை வெட்டப்படும்” என்று மருட்டி இருந்தார். இப்படிச் சொல்வது தேச நிந்தனைச் சட்டத்துக்குப் பதிலாக கொண்டுவரப்படவுள்ள மூன்று புதிய சட்டவரைவுகளில் ஒன்றின்படி குற்றமாகும். அப்படிப்பட்ட மிரட்டலை விடுத்த மனிதர் இன, சமயத்தின் அடிப்படையில் “இன்னொரு மனிதருக்குத் …
போர்ட் டிக்சன், பந்திங் பகுதிகளில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது
புகைமூட்டம் இரண்டாவது தடவையாக நாட்டைச் சூழ்ந்துகொண்டுள்ள வேளையில் போர்ட் டிக்சனிலும் பந்திங்கிலும் காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு(ஏபிஐ) ‘ஆரோக்கியத்துக்குக் கேடு செய்யும் வகையில்’ இருப்பது பதிவாகியுள்ளது. போர்ட் டிக்சனிலும் பந்திங்கிலும் ஏபிஐ குறியீடு முறையே 101, 118 எனப் பதிவாகியுள்ளன. ஏபிஐ குறியீடு 100-ஐத் தாண்டினாலே ஆரோக்கியத்துக்குக் கெடுதல் எனக் …
ஹுஸ்டன்: மலேசிய ரேடார் கருவி நம்பத்தக்கதல்ல
மலேசிய தற்காப்பு ரேடார், உயரத்தைச் சரியாக அளவிடும் திறன்கொண்ட ஒரு கருவியல்ல என்றும் அதன் காரணமாகவே எம்எச்370 காணாமல்போனபோது அது பறந்துகொண்டிருந்த சரியான உயரத்தைக் கணிக்க முடியவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாகத்தான் விமானத்தைத் தேடும் இடம் மாறுகிறது என அடையாளம் கூறப்படாத அதிகாரிகளை மேற்கோள்காட்டி நியு யோர்க்…
நாற்காலிகளை எறியும் கட்சியைப் பின்பற்றாதீர்கள்: அரசு அதிகாரிகளுக்கு நஜிப் அறிவுரை
அரசியலில் கருத்துவேறுபாடுகள் தோன்றும்போது வன்முறையில் இறங்கக்கூடாது என்று மாவட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்திய பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், அதையே வாய்ப்பாகக் கொண்டு பிகேஆரையும் சாடினார். புத்ரா ஜெயாவில் மாவட்ட அதிகாரிகளின் கூட்டமொன்றில் பேசிய நஜிப், “பிரச்னை வந்தால் நன்றாக விவாதியுங்கள். ஆனால், அண்மையில் ஒரு அரசியல் கட்சியின் தேர்தல்களில் …
குழந்தை பராமரிப்பு விவகாரத்தில் தந்தையைக் கைது செய்ய ஐஜிபி உத்தரவு
இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீஸ் (ஐஜிபி) காலிட் அபு பக்கார், ஈப்போ உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கிணங்க கே.பத்மநாதன் @ முகமட் ரித்வான் அப்துல்லாவைக் கைது செய்து ஆறு வயது பிரசன்னா திக்ஷாவை அவரின் தாயாரிடம் ஒப்படைக்கும்படி பேராக் போலீசாருக்கு உத்தரவிட்டிருக்கிறார். பேராக் போலீஸ் தலைவர் அக்ரில் சானி அப்துல்லா…
தேவாலயங்கள் “அல்லா”வை பயன்படுத்தலாம்
அல்லா என்ற சொல்லை பயன்படுத்துவது குறித்த பெடரல் நீதிமன்றத்தின் தீர்ப்பு கத்தோலிக்க வாராந்தர வெளியீடான த ஹெரால்ட்டை மட்டுமே கட்டுப்படுத்துவதால், கிறிஸ்தவர்கள் அல்லா என்ற சொல்லை தொடார்ந்து பயன்படுத்தலாம் என்று அரசாங்கம் கூறுகிறது. அரசாங்கம் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு முன்வைத்த அதன் 10 அம்சத் திட்டத்தை தொடர்ந்து…
சிஎப்எம்: ஹெரால்ட் தவிர்த்து மற்ற இடங்களில் அல்லாஹ் சொல் பயன்படுத்தப்படும்
கிறிஸ்துவர்கள், ஹெரால்ட் வார இதழில் இனி ‘அல்லாஹ்’ என்னும் சொல்லைப் பயன்படுத்த மாட்டார்கள் ஆனால், மற்ற இடங்களில் அதைத் தொடர்ந்து பயன்படுத்துவார்கள் என மலேசிய கிறிஸ்துவக் கூட்டமைப்பு (சிஎப்எம்) இன்று கூறியது. முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பு கத்தோலிக்க வார இதழான ஹெரால்டில் ‘அல்லாஹ்’ சொல்லைப் பயன்படுத்துவதை மட்டுமே கட்டுப்படுத்துகிறது …
ஐஜிபி, நடுவுப் பாதையிலிருந்து இப்போது ‘மெளனப் பாதையில்’
வெவ்வேறு இனங்களுக்கிடையிலான குழந்தை பராமரிப்புச் சர்ச்சைகளில் நடுவுப் பாதையே தம் கொள்கை என்று அறிவித்த இன்ஸ்பெக்டர்-ஜெனரல் அப் போலீஸ் காலிட் அபு பக்கார் இப்போது வாயைத் திறக்காமல் மெளனம் காக்கிறார். போலீஸ், எம். இந்திரா காந்தியின் மகளை மதமாறிய அவரின் தந்தையிடமிருந்து மீட்டு தாயாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற …
தமக்கெதிரான குற்றச்சாட்டுகள் கைவிடப்பட வேண்டும் என்கிறார் என்எப்சி போஸ்
நேசனல் பீட்லோட் கார்ப்பரேசன் தலைவர் முகம்மட் சாலே இஸ்மாயில், தமக்கு எதிரான குற்றச்சாட்டுகள் கைவிடப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளும் மனு ஒன்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருப்பதாக இன்று கோலாலும்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் கூறப்பட்டது இதைத் தெரிவித்த முகம்மட் சாலேயின் வழக்குரைஞர் ஷாபி அப்துல்லா, அம்மனு செப்டம்பர் 30-இல் விசாரணைக்கு …
தேவாலயம்: தீர்ப்பு ‘பெரிதும் ஏமாற்றமளிக்கிறது’
கூட்டரசு நீதிமன்றத்தின் தீர்ப்பைக் கேட்டு “பெரிதும் ஏமாற்றமடைந்ததாக” கத்தோலிக்க வார ஏடான த ஹெரால்ட்-இன் ஆசிரியர் பாதர் லாரன்ஸ் எண்ட்ரு கூறினார். நீதிமன்றத்துக்கு வெளியில் செய்தியாளர்களிடம் பேசிய எண்ட்ரு, மேல்முறையீட்டுக்கு அனுமதிமறுத்த நான்கு நீதிபதிகளும் சிறுபான்மை மக்களின் அடிப்படை உரிமைகள் பற்றி எதுவும் கூறவில்லை என்றார். கூட்டரசு நீதிமன்றத்தில், …
சுல்: நீதிமன்றத் தீர்ப்பு பைபிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது சரிதான் என்பதை…
கூட்டரசு நீதிமன்றத்தின் தீர்ப்பு, சிலாங்கூர் இஸ்லாமிய சமயத் துறை (ஜயிஸ்), மலாய், ஈபான் மொழி பைபிள்களைப் பறிமுதல் செய்தது சரியான நடவடிக்கைதான் என்பதை மெய்ப்பிக்கிறது என முன்னாள் பெர்காசா உதவித் தலைவர் சுல்கிப்ளி நூர்டின் கூறினார். ‘அல்லாஹ்’ வழக்கில் மேல்முறையீட்டுக்கு அனுமதிமறுத்து கூட்டரசு நீதிமன்றம் தீப்பளித்திருப்பது குறித்து கருத்துரைத்தபோது …
அல்லா வழக்கில் மேல்முறையீட்டிற்கு உச்சநீதிமன்றம் அனுமதி மறுப்பு
பெடரல் நீதிமன்ற ஏழு நீதிபதிகள் அடங்கிய அமர்வு 4க்கு 3 பெரும்பான்மையில் மலேசிய கத்தோலிக்க தேவாலாயம் அல்லா என்ற சொல்லை பயன்படுத்துவது மீதான வழக்கில் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக பெடரல் நீதிமன்றத்திற்கு முறையீடு செய்வதற்கு அனுமதி கோரியிருந்த மனுவை இன்று நிராகரித்தது. இன்று அளிக்கப்பட்ட இத்தீர்ப்பை…
வறட்சிக் காலத்தில் ஈயக்குட்டை நீரில் நச்சுத்தன்மை அதிகரிக்கலாம்
சிலாங்கூர் அரசின் இப்போதைய சோதனைகள் ஈயக்குட்டை நீர் குடிப்பதற்குப் பாதுகாப்பானது என்பதைக் காண்பிக்கலாம். ஆனால், வறட்சிக் காலத்தில் நிலைமை மாறும் என்கிறார் கிள்ளான் எம்பி சார்ல்ஸ் சந்தியாகு. நீர் நிறைய இருக்கும்போது நச்சுத்தன்மை வாய்ந்த கனரக உலோகங்கள் அதில் கரைந்து குடிப்பதற்குப் பாதுகாப்பானதாக இருக்கலாம். ஆனால், வறட்சிக் காலத்தில் …
அன்வார்: மலேசியாவில் மதவெறி மனகலக்கத்தை உண்டுபண்ணுகிறது
மலேசியாவில் தலிபான் ஆட்சி அல்லது அல்-கைதா ஆட்சி இல்லாமலிருக்கலாம், ஆனாலும் “தீவிர மதவெறி”யைப் பார்க்கையில் “கிறுக்கு பிடித்துவிட்டதோ” என எண்னத் தோன்றுகிறது என எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறினார். முஸ்லிமாக மாறியவர்கள் என்ற ஐயத்தின்பேரில் சீனரின் சடலமொன்று கவர்ந்து செல்லப்பட்டதையும் இந்து திருமணம் நிறுத்தப்பட்டு மணப்பெண் சமய …