சட்டவிரோத பந்தயம் மற்றும் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுவதற்குப் பெயர்போன ஒரு பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில், 45 கார்களைப் பரிசோதித்த போலீசார் 32 சம்மன்களை வழங்கியுள்ளனர். இன்று அதிகாலை இங்குள்ள லெபு மெதினி உத்தாமா பகுதியில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சட்டவிரோத பந்தயம் மற்றும் ஆபத்தான முறையில் வாகனம்…
தாய்மொழிப்பள்ளிகளை மூடக்கூடாது, அம்னோ பேராளர்
அம்னோ பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட சாபா அம்னோ பேராளர் தாய்மொழிப்பள்ளிகள் மூடப்படக்கூடாது என்று வாதிட்டார். த ஸ்டார் ஓன்லைன் செய்திப்படி, தவ்ஃபிக் அபு பாக்கார் திதிங்ஆன் என்ற அந்த பேராளார் சாபாவில் தாய்மொழிப்பள்ளிகளை மூடுவது சாத்தியமல்ல ஏனென்றால் அதிகமான பூமிபுத்ராக்கள் அப்பள்ளிகளில் பயில்கின்றனர் என்றாரவர். சீனமொழிப்பள்ளிகளில் பயிலும்…
சரவாக் மலேசியாவிலிருந்து விலக நினைப்பது தேச நிந்தனைக் குற்றமல்ல
பிரிவினைக்காக குரல் கொடுப்பதைத் தேச நிந்தனைச் சட்டத்தின்கீழ் குற்றமாக்கும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் முடிவுக்கு சரவாக்கில் எதிர்ப்பு வலுத்து வருகிறது. சாபா, சரவாக் மாநிலங்கள் மலேசியாவிலிருந்து பிரிந்துசெல்ல கோரிக்கை விடுப்பதைக் குற்றமாக்கும் வகையில் அச்சட்டம் விரிவுபடுத்தப்படும் என அம்னோ பொதுப் பேரவையில் நஜிப் அறிவித்ததை கெராக்கான் அனாக் …
‘குர்ஆன் எரிக்கப்பட்டதாக’ சொன்னவர்மீது போலீசில் புகார்
சீனர்கள் ஒரு வழிபாட்டின்போது குர்ஆனை எரித்தார்கள் என்று கூறிய பாலிங் அம்னோ மகளிர் தலைவர் மஷிடா இப்ராகிம்மீது டிஏபி போலீசில் புகார் செய்துள்ளது. “என்ன ஒரு பொறுப்பற்ற பேச்சு”, என கூலாய் எம்பி தியோ நை சிங் சாடினார். . கெடாவில் அப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்ததாக அறிவிக்கப்பட்டிருகிறது.…
தப்பித்துக் கொண்டார் நஜிப், ஆனால் அவரின் முடிவு நெருங்கி வருகிறது
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், 1948ஆம் ஆண்டு தேச நிந்தனைச் சட்டம் தொடர்ந்து இருக்கும் என்று அறிவித்ததும் அம்னோ பேராளர்கள் கைதட்டி ஆரவாரத்துடன் அதை வரவேற்றார்கள். நஜிப்பும் நிம்மதி பெருமூச்சு விட்டிருப்பார். ஆனால், அதுவே அவரது கடைசி மூச்சாக இருக்கும் என்கிறார் முன்னாள் தகவல் அமைச்சர் சைனுடின் மைடின்.…
கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவது நஜிப்பின் கடப்பாடு
தேச நிந்தனைச் சட்டம் இரத்துச் செய்யப்படும் என வாக்குறுதி அளித்த பிரதமர் நஜிப் அப்துல் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என மலேசிய வழக்குரைஞர் மன்றம் வலியுறுத்தியுள்ளது. “வாக்கு கொடுப்பது வசதியாக இருக்கும்போது செய்வதற்காக அல்ல, சிரமமான சூழ்நிலையிலும் அதை நிறைவேற்ற வேண்டியது கடப்பாடாகும். “பிரதமர் ஈராண்டுகளுக்குமுன் தேச …
பினாங்கின் வெற்றிக்கு சீனர்களின் சட்டவிரோத தொழில்களே காரணம்
பினாங்கில் சீனர்களின் பொருளாதாரம் வளமாக இருப்பதற்கு சட்டவிரோத தொழில்களே காரணமாம்.அம்னோ பேராளர் கூட்டத்தில் பெர்மாத்தாங் பாவ் பேராளர் ஸைடி முகம்மட் சைட் இவ்வாறு கூறினார். சீனர்களின் முறைகேடான செயல்கள் “பட்டப் பகலில்” நடக்கின்றன. கண்டிக்கும் துணிச்சல்தான் அம்னோ தலைவர்களுக்கு இல்லை என்றவர் சாடினார். “சீனர்களின் பொருளாதாரத்துக்கு அடிப்படையாக இருப்பவை …
அம்னோ இன்றி மலாய்க்காரர்களால் வாழ முடியும்
மலாய்க்காரர்கள்தான் இந்நாட்டின் பெரும்பான்மை மக்கள். அதனால் அம்னோ தோற்றுப் போனால்கூட அவர்களால் வாழ முடியும் என்கிறார் எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம். அம்னோ தோல்வியுற்றால் மலாய்க்காரர்கள் அழிந்து விடுவார்கள் என பிரதமர் நஜிப் அம்னோ பேராளர் கூட்டத்தில் குறிப்பிட்டதற்கு எதிர்வினையாக அன்வார் இவ்வாறு கூறினார். இளைஞர்கள் அவர்களின் எதிர்காலத்தைத் …
அம்னோ பேராளர்: சீனர் வாக்குகளை மறந்து விடுங்கள்
சீனர்கள் பிஎன்னுக்கு வாக்களிப்பார்கள் என நினைத்து அவர்களின் வாக்குகளைப் பெற முயல்வது வீண் வேலை. அது நடவாது என பேராக் பேராளர் முகமட் ரட்ஸி மனான் இன்று அம்னோ பேராளர் கூட்டத்தில் கூறினார். “அவர்களின் வாக்குகளை நம்பியிருப்பது மணலில் நீரை ஊற்றுவதற்கு ஒப்பாகும். பயனற்ற வேலை. “அம்னோ அதன் …
பெர்காசா: விசாரணையின்றி காவலும் பிரம்படியும் தொடர்ந்து இருக்க வேண்டும்
உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் இரத்துச் செய்யப்பட்டாலும் அதன் சாரம் தேச நிந்தனைச் சட்டத்தில் தொடர்ந்து வாழ வேண்டும் என பெர்காசா விரும்புகிறது. அந்த வகையில், தேச நிந்தனைச் சட்டம் வலுப்படுத்தப்படும்போது விசாரணையின்றி காவலில் வைப்பதும் அதில் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என அதன் தலைவர் இப்ராகிம் அலி விரும்புகிறார். இது,…
அன்வார் பிஎன்னைக் கவிழ்க்க ரிம100 மில்லியன் கொடுக்க முன்வந்தார்
வெளியுறவு அமைச்சர் அனிபா அமான், 2008-இல், பக்கத்தான் ரக்யாட் புதிய அரசாங்கம் அமைக்க சாபாவின் 10 எம்பிகளுடன் கட்சிமாறினால் ரிம100 மில்லியனும் துணைப் பிரதமர் பதவியும் கொடுக்க அன்வார் இப்ராகிம் தரப்பு முன்வந்தது என கோலாலும்பூர் உயர் நீதிமன்றத்தில் இன்று கூறினார். தம் வழக்குரைஞர் முகம்மட் ஷாபி அப்துல்லாவின் …
ரிம 200 கொள்ளையடித்த இளைஞருக்கு14 ஆண்டு சிறை, 12 பிரம்படி:…
பேனா கத்தி பயன்படுத்தி ஓர் ஆடவரிடமிருந்து 200 ரிங்கிட் கொள்ளையடித்த 28 வயது நிரம்பிய என். சரவணகுமாருக்கு 14 ஆண்டு சிறை மற்றும் 12 பிரம்படிகள் என பினாங்கு உச்சநீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்பளித்தது. இத்தீர்ப்பு மிகவும் அதிர்ச்சியாகவும் வேதனையாகவும் உள்ளதாக மலேசியா நாம் தமிழர் இயக்க…
பல்டி அடித்த நஜிப்மீது பாய்கிறார் அன்வார்
தேச நிந்தனைச் சட்டம் தொடர்பில் அளித்திருந்த வாக்குறுதியை மீறிவிட்டார் எனப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் சாடியுள்ளார், “தேச நிந்தனைச் சட்டத்தைத் திருத்தப்போவதாக சொன்ன நஜிப் வாக்குறுதியை மீறியிருப்பது ஏமாற்றமளிக்கிறது. “அச்சட்டத்தைப் பயன்படுத்தி சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தவும் எதிர்ப்புகளை ஒடுக்கவும் விரும்பும் வலச் சாரிகளாகவும் …
தினேஷா குடும்பத்தினர் சுகாதார அமைச்சரைச் சந்தித்தனர்
ஜி.தினேஷாவின் சாவுக்கு மருத்துவமனையின் அலட்சியம்தான் காரணம் என்று கூறிவரும் அவரின் குடும்பத்தார் இன்று சுகாதார அமைச்சர் டாக்டர் எஸ்.சுப்ரமணியத்தை புத்ரா ஜெயாவில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தனர். அவர்களிடம் அமைச்சர் தம் அமைச்சில் இயங்கும் தனியார் மருத்துவ சிகிச்சை கட்டுப்பாட்டுப் பிரிவிடம் (யுகேஏபிஎஸ்) புகார் செய்யுமாறு கூறினார். அவர்களும் …
அம்னோ கூட்டத்தில் மகாதிர்
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், அம்னோ ஆண்டுக் கூட்டத்துக்கு வருவாரா. மாட்டாரா என்ற கேள்வி இருந்துகொண்டே இருந்தது. உடல்நலன் குன்றியிருந்ததால் கூட்டத்துக்கு வரும் வாய்ப்பு இல்லை என்றே மகாதிரும் கூறியிருந்தார். பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைத் தொடர்ந்து குறைகூறி வந்திருப்பதால் தம் அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் மகாதிர்…
சாலைப் பெயர் மாற்றத்தில் குற்றம் காண்பது ஆட்சியாளர்களைக் குறை சொல்வதாகாது
சாலைகளின் பெயர்களை மாற்றி அவற்றுக்கு சுல்தான்களின் பெயர்களை இடும் அரசாங்கத்தின் போக்கைக் குறை கூறுவது ஆட்சியாளர்களை எதிர்ப்பதாகாது. “கோலாலும்பூரில் சில சாலைகளின் பெயரை நீக்கும் அரசாங்கத்தின் உத்தேசம் குறைகூறப்படுவதை ஆட்சியாளர்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்படுவதன் அடையாளமாகக் கருத வேண்டிய அவசியமில்லை”, என அரசமைப்பு சட்ட வல்லுனர் அப்துல் அசீஸ் பாரி …
நஜிப்: தேச நிந்தனைச் சட்டம் அகற்றப்படாது; அது மேலும் வலுப்படுத்தப்படும்
பிரதமர் நஜிப் அப்ல் ரசாக், தேச நிந்தனைச் சட்டம் தொடர்ந்து இருக்கும் எனக் கூறியதும் அம்னோ பேராளர்கள் எழுந்து நின்று கரவொலி எழுப்பி அவரைப் பாராட்டினார்கள். ஆக, கட்சிக்குள் கொடுக்கப்பட்ட அழுத்தத்துக்குப் பணிந்து அச்சட்டம் இரத்துச் செய்யப்படாது என்ற முடிவுக்குப் பிரதமர் வந்திருப்பதுபோல் தெரிகிறது. “அச்சட்டம் வைத்துக்கொள்ளப்படும், அத்துடன் …
அம்னோதான் மலாய் நிலங்களை விட்டுக் கொடுத்தது; பாஸ் குற்றச்சாட்டு
மலாய்க் காப்பு நிலங்கள் பறிபோயிருப்பதாக அம்னோ இளைஞர் தலைவர் ஓலமிடும் வேளையில் அதற்கு யார் காரணம் என்று அம்னோ தன்னைத் தானே கேட்டுக்கொள்ள வேண்டும் என பாஸ் இளைஞர் தகவல் பிரிவுத் தலைவர் முகம்மட் நாசாயி இஸ்மாயில் கூறினார். மலாய்க்காரர் நிலங்களைப் பாதுகாக்க அறங்காவல் மன்றம் அமைக்க வேண்டும் …
யூபிஎஸ்ஆர் அறிவியல் பாட மறு தேர்வு: இது குறித்து கல்வி…
இவ்வாண்டு தமிழ்ப்பள்ளிகளின் யூ.பி.எஸ்.ஆர் தேர்வு முடிவுகள் மிகுந்த ஐயத்துடன் எதிர்பார்த்த ஒன்று. குறிப்பாக, சிலாங்கூர் மாநிலத் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் பெற்றோர்களிடமிருந்து கிடைத்துள்ள தகவல்படி, இவ்வாண்டு தேர்ச்சி முடிவுகள் அறிவியல் பாடத்தில் ''ஏ '' பெறாத மாணவர்களின் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டது ஏமாற்றம் அளிப்பதாக இருக்கிறது. அதே…
காஜாங்கில் வெள்ளம், அசிசா எங்கே?
சிலாங்கூர் எதிரணித் தலைவர் ஷம்சுடின் லியாஸ், இரண்டு நாளாக சட்டமன்றத்துக்கு வராத காஜாங் சட்டமன்ற உறுப்பினர் வான் அசீசா வான் இஸ்மாயிலைச் சாடினார். அது பொறுப்பற்ற நடத்தை என அந்த சுங்கை பூரோங் அம்னோ உறுப்பினர் வருணித்தார். “அச்சட்டமன்ற உறுப்பினர் (அசிசா) வெளிநாட்டில் இருப்பதாக அறிகிறேன். “அவரது தொகுதியில் …
மலாய்காரர்களின் நம்பிக்கையை அழித்த பின்னர் அவர்களைக் கைதூக்கிவிடுவது எப்படி?
மலாய்க்காரர்களுக்கு தான் ஒரு வரமா, சாபமா? என ஈக்காத்தான் முஸ்லிமின் மலேசியா மலேசியா (இஸ்மா) தன்னைத் தானே கேட்டுக்கொள்ள வேண்டும் என நெகாரா கூ அமைப்பின் புரவலரான அம்பிகா ஸ்ரீநிவாசன் கூறியுள்ளார். அந்த அமைப்பு மலாய்க்காரர்கள் முற்றுகைக்கு ஆளாகியிருப்பதுபோன்ற சிந்தனையைத் தொடர்ந்து பரப்பிவருவது அவர்களின் முன்னேற்றத்துக்கு உதவுகிறதா அல்லது அவர்களை…
அஸ்மின்: ‘அவமதிக்கப்பட்ட’ பிஎன் பிரதிநிதிகள் நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிறார்கள்
ரிம2.4மில்லியன் ஒதுக்கீட்டை நிராகரித்த சிலாங்கூரின் பிஎன் சட்டமன்ற உறுப்பினர்கள், உண்மையில் பக்கத்தான் ரக்யாட் அரசுக்கு நன்றி கூற வேண்டும் என்கிறார் சிலாங்கூர் மந்திரி புசார் அஸ்மின் அலி. அவர்கள் ஒதுக்கீட்டைப் புறந்தள்ளியிருந்தாலும் மாநில அரசு ஆளுக்கு ரிம200,000 கொடுப்பதைத் தொடரும் என்றாரவர். பிஎன் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ரிம200,,000 கொடுப்பதுபோக …
எம்பிகளின் சம்பளம் 69விழுக்காடு உயர்கிறது
அடுத்த ஆண்டிலிருந்து எம்பிகளின் சம்பளம் 69 விழுக்காடு உயர்வதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன்படி எம்பிகளின் அலவன்ஸ் தொகை ரிம6,508-இலிருந்து ரிம11,000 ஆக உயரும். செனட்டர்களின் சம்பளம் ரிம4,112 இலிருந்து ரிம7,000 ஆக கூட்டப்படுகிறது. அனைத்துக் கட்சிகளும் கூடிப் பேசி எம்பிகளின் சம்பளத்தை உயர்த்த முடிவு செய்ததாகக் குறிப்பிட்ட பிரதமர்துரை …
கடுமையான பாதுகாப்புச் சட்டங்களுக்கு ஆதரவு தாரீர்: எம்பிகளுக்கு நஜிப் வேண்டுகோள்
இன்று நாடாளுமன்றத்தில், அனைத்துலக இஸ்லாமிய தீவிரவாத கூட்டமைப்பான இஸ்லாமிய அரசின் (ஐஎஸ்) மிரட்டல்மீது வெள்ளை அறிக்கை தாக்கல் செய்த பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், கடுமையான பாதுகாப்புச் சட்டங்கள் தேவை என்றும் அவற்றுக்கு நாடாளுமன்றம் ஆதரவளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். ‘ இஸ்லாமிய அரசின் மிரட்டலை எதிர்கொள்ளல்’ என்ற …


