மூல வாக்குறுதியை நினைவில் கொள்க: மலாய்க்காரர்-அல்லாதாருக்கு அம்னோ அறிவுறுத்தல்

மலாய்க்காரர்-அல்லாதார் சமுதாய  ஒப்பந்தத்தில்  கொடுத்த  “மூல வாக்குறுதி”யை  மறந்து  விடக்கூடாது  என்பதை  அம்னோ  இளைஞர்  தலைவர்  கைரி  ஜமாலுடின்  நினைவுவுறுத்தியுள்ளார். நாடு  சுதந்திரம்  பெற்றபோது  மலாய்க்காரர்- அல்லாதார்  குடியுரிமை  பெற  அனுமதித்து மலாய்க்காரர்கள்  தியாகம்  செய்துள்ளனர் என கைரி  இன்று  அம்னோவின்  ஆண்டுக்கூட்டத்தில்  கூறினார். பதிலுக்கு மலாய்க்காரர்-  அல்லாதார் …

ஷரிசாட்: மலாய்க்காரர்-அல்லாதாரின் குடியுரிமை பற்றிக் கேள்வி எழுப்பாதீர்

மலேசியாவில்  பிறந்த  சீனர், இந்தியர்  குடியுரிமை  பற்றி  அம்னோ  உறுப்பினர்கள்  கேள்வி  கேட்கக்  கூடாது  என  அம்னோ  மகளிர்  பகுதித்  தலைவர் ஷரிசாட்  அப்துல்  ஜலில்  வலியுறுத்தினார். “இந்நாட்டில்  ஆதியில் வந்த  நம்முடைய சிறப்புரிமைகள்  பற்றி  அவர்கள்  கேள்வி  கேட்காதவரை  நாமும் இந்நாட்டின்  குடிமக்களாகிய  அவர்களின்  உரிமையை  மதிக்க …

விவேகனந்தா ஆசிரமம் வாணிப நோக்கத்திற்காக மேம்படுத்தவும் முடியாது, மேம்படுத்தவும் கூடாது,…

  விவேகனந்தா ஆசிரமத்தின் நிலை என்ன என்பது குறித்து சுற்றுலாத்துறை அமைச்சர் நஸ்ரியுடன் விவாதிப்பதற்காக முன்னாள் மஇகா தலைவரும் அமைச்சருமான வி.டி. சம்பந்தனின் மகள் தேவ குஞ்சரி இன்று (நவம்பர் 25) அமைச்சரை நாடாளுமன்றத்தில் சந்தித்தார் என்று குலா கூறுகிறார். விவேகனந்தா ஆசிரமத்தை ஏன் தேசிய பாரம்பரிய சொத்தாத…

‘அவமதிக்கப்பட்ட’ பிஎன் பிரதிநிதிகள் ரிம200,000 ஒதுக்கீட்டை நிராகரித்தனர்

சிலாங்கூரின் பிஎன்  சட்டமன்ற  உறுப்பினர்கள்  12 பேரும்  அவர்களின்  தொகுதி   மேம்பாடுக்காக பக்கத்தான்  ரக்யாட்  அரசு  கொடுத்த  ரிம200,000 ஒதுக்கீட்டை  நிராகரித்தனர். அந்த  ஒதுக்கீட்டை  அவர்கள்   அவமதிப்பாக  கருதுகிறார்கள். பக்கத்தான்  சட்டமன்ற  உறுப்பினர்களுக்கு  ஆளுக்கு  ரிம700,000  கொடுத்த  அரசு  தங்களுக்கு  ரிம200,000  கொடுத்தது  தங்களை  அவமதிப்பதாகும்  என  எதிரணித் …

அதிகாரக் கோட்டையைக் கதிகலங்க வைத்த பதின்ம வயது மலேசியாகினி

 மக்கள்  கருத்து:எங்களுக்காகக் குரல்கொடுக்க  இருக்கவே இருக்கிறது 15-வயது  மலேசியாகினி எக்ஸோலோட்: @Kini-யை வடிவமைத்த அம்போஸ்  போ-வுக்கும்  மலேசியாகினி  நிறுவனர்களுக்கும் பாராட்டுகள். மலேசியாகினி  15ஆம்  ஆண்டு விழா  நிகழ்வுகள்  அற்புதமாக  இருந்தன. . உணவு  அப்படித்தான்  சுவையாக  இருந்தது, மகிழ்ச்சியும்  நட்புறவுறவும்  நிறைந்த  சூழல். பலத்த  மழையால்கூட  எங்கள்  உற்சாகத்தைக் …

மகாதிர்: அம்னோ பேராளர்கள் தலைவர்களைக் கண்டிக்க வேண்டும்

உடல்நலம்  குன்றியிருந்தாலும்  மனத்தில்  பட்ட  கருத்துகளைப்  பகிர்ந்துகொள்ள தயக்கம்  காட்டுவதில்லை முன்னாள்  பிரதமர்  டாகடர் மகாதிர்  முகம்மட். அந்த  வகையில்  அம்னோவைச்  சீரழிக்கும்  பிரச்னைகளை விவரித்த   மகாதிர், தலைவர்கள்  தவறாக  நடந்துகொள்ளும்போது  அவர்களைக்  கண்டிப்பது  அவசியமாகும்  என்பதையும்  வலியுறுத்தினார். பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கைத்  தொடர்ந்து  குறைசொல்லிவரும்  மகாதிர், …

தடுப்புக்கைதியின் சாவில் சந்தேகம் கொள்ள எதுவுமில்லை

அண்மையில் ஜோகூர், பெங்கேராங்கில்  தடுப்புக்காவலில்  இருந்தபோது  இறந்த  25-வயது   ஆடவரின் மரணத்தில்  சந்தேகம் கொள்ள  எதுவுமில்லை  என  போலீஸ்  தெரிவித்துள்ளது. அது  ஒரு  திடீர்  மரணம்  என  ஜோகூர்  சிஐடி  தலைவர் ஹஸ்னான்  ஹசான்  கூறினார். சைட் முகம்மட்  அஸ்லான்  சைட்  முகம்மட்  நூர்,  சுங்கை  ரெங்கிட்  போலீஸ் …

ரபிஸி: எண்ணெய் நிறுவனங்களின் ஆதாயம் பாதுகாக்கப்படுவதை நிறுத்துவீர்

எரிபொருள்  விலைகளை  மிதக்கவிடும் அரசாங்கத்தின் புதிய  நடைமுறையைத்  தற்காத்துப்  பேசும்  இளைஞர், விளையாட்டு  அமைச்சர்  கைரி  ஜமாலுடினைச்  சாடிய  பிகேஆர்  உதவித்  தலைவர்  ரபிஸி  ரம்லி,  விலைகள்  மிதக்க  விடப்பட்டாலும்  எண்ணெய்  நிறுவனங்களின்  ஆதாயத்துக்கு மட்டும்  ஆபத்தில்லை  என உத்தரவாதம்  அளிக்கப்பட்டிருப்பதைச்  சுட்டிக்காட்டினார். நேற்று  கைரி, தம்  வலைப்பதிவில் …

நஸ்ரி: கிழக்கு சாபா செல்ல பயமாக இருக்கிறது

கிழக்கு  சாபா ஒரு  பாதுகாப்பான  இடமல்ல  என்பதைத்  தொடர்ந்து  வலியுறுத்தும்  சுற்றுலா, பண்பாட்டு  அமைச்சர்  முகம்மட்  நஸ்ரி  அப்துல்  அசீஸ்,  காவலர்  துணையின்றி  அங்கு  செல்ல  மாட்டாராம். “பாதுகாவலர்கள்  துணைக்கு  இல்லாமல் கிழக்கு  சாபா  போக  மாட்டேன்”, என  அவர்  கூறியதாக  சின்சியு  நாளேட்டின்  இணையப்  பதிப்பு  தெரிவித்தது.…

ஊடகங்களிடம் சென்றதால் மருத்துவ அறிக்கை கொடுப்பது இழுத்தடிக்கப்படுகிறதாம்

கடந்த  வெள்ளிக்கிழமை  காலமான  ஜி.தினேஷாவின் பெற்றோர், தங்களுக்கு  மகளின்  மருத்துவ  அறிக்கை  கொடுக்கப்படவில்லை  என  அசுந்தா  மருத்துவ  மனைக்கு  எதிராக  இரண்டாவது  முறையாக போலீசில்   புகார்  செய்துள்ளனர். “எங்களுக்கு  உதவி  செய்ய  ஒரு  வழக்குரைஞரையும்  ஏற்பாடு  செய்யப்போகிறோம்”, என தினேஷாவின்  உறவினர்  ரமேஷ்  மலேசியாகினியிடம்  தெரிவித்தார். விவகாரத்தை  ஊடகங்களுக்கு …

சிலாங்கூரின் ரிம2.4பில்லியன் பட்ஜெட்

2015-க்கான  சிலாங்கூரின்  பட்ஜெட்டை  மந்திரி  புசார்  அஸ்மின்  அலி  இன்று  சட்டமன்றத்தில்  தாக்கல்  செய்தார்.. பக்கத்தான்  இதுவரை  கொண்டுவந்த  வரவு-செலவுத்  திட்டங்களிலேயே  மிகப்  பெரியது  இதுதான்.  ஆனால்,  இது  ஒரு  பற்றாக்குறை  பட்ஜெட்டாக  அமைந்துள்ளது. 2015-க்கான  செலவுகள்  ரிம2.42 பில்லியனாக  இருக்கும்  எனவும்  வருமானம்  ரிம1.97 பில்லியனாகவும் இருக்கும் …

அகதிகள் நடத்தப்படும் முறைமீது அவசரத் தீர்மானம்

டிஏபி  எம்பிகள்  இருவர்,  மலேசியாவில்  உள்ள  அகதிகளின்  நிலையை  வெளிச்சம்போட்டுக்  காண்பிக்கும்  அல்-ஜசீராவின்  ஆவணப்  படம்  பற்றி  விவாதிக்க  அனுமதி  கோரும்  அவசரத்  தீர்மானம்  ஒன்றை இன்று  நாடாளுமன்றத்தில்  தாக்கல்  செய்தனர். நான்கு நாள்களுக்குமுன்  ‘மலேசியாவின்  வேண்டப்படாதவர்கள்’ என்ற தலைப்பில் ஒளியேறிய அவ்வாணவப்  படம்  தொடர்பில்  அரசாங்கம்  இதுவரை …

பாஸ் பிரதிநிதி சிலாங்கூர் சட்டமன்றத் துணைத் தலைவர்

சிலாங்கூர்  சட்டமன்றத்தின்  துணைத்  தலைவராக  பாஸ் கட்சியின்  பாங்கி  சட்டமன்ற  உறுப்பினர்  டாக்டர்  முகம்மட்  ஷாபி இங்கா தேர்ந்தெடுக்கப்பட்டார். ஷாபி, 28  வாக்குகள்  பெற்று  அப்பதவிக்குத்  தேர்ந்தெடுக்கப்பட்டதாக  மன்றத்  தலைவர்  ஹன்னா  இயோ  அறிவித்தார். சட்டமன்றத்  துணைத்  தலைவருக்கான  தேர்தலில்  பிஎன்  பிரதிநிதிகள் எவரும்  கலந்துகொள்ளவில்லை. செகிஞ்சான்  சட்டமன்ற …

பிரிவினை கோரிக்கை வலுப்பதாகக் கூறுவது ஒரு ‘தோற்றப்பாடுதான்’

மலேசியாவிலிருந்து  சாபா, சரவாக்  ஆகிய  இரண்டும்  பிரிந்து  செல்ல  வேண்டும்  என்ற  கோரிக்கைகள்  பெருகிவருவதாகக்  கூறப்படுவது “வெறும்  தோற்றப்பாடுதான்”  என்கிறார்  உள்துறை  துணை அமைச்சர்  வான்  ஜுனாய்டி  வான்  ஜப்பார். “சிலர்  அப்படிச்  சொல்லி  வருகிறார்கள். அவர்கள்  எண்ணிக்கை  அதிகமில்லை. அது (பெரும்பாலோர் என்பது) உண்மையும்  அல்ல”, என …

PKFZ மீதான வழக்கைக் கைவிட்டது ஏன்? பிகேஏ மீது டிஏபி…

புதிதாக  நியமிக்கப்பட்ட  கிள்ளான்  துறைமுக நிறுவன(பிகேஏ)த்  தலைவர்  கொங்  சோ ஹா, பிகேஎப்ஜெட்  மீதான  ரிம720மில்லியன்  வழக்கைக் கைவிட்டது  ஏன்  என  விளக்க வேண்டும்  எனக்  கோரிக்கை  விடப்பட்டுள்ளது. கோலா  டிமென்சி (கேடிஎஸ்பி) மீதான  அவ்வழக்கைக்  கைவிடும்  முடிவு  “அதிர்ச்சியளிப்பதாக”  டிஏபி  செர்டாங்  எம்பி  ஒங்  கியான்  மிங்(வலம்) …

நஜிப்: மிதவாதம் என்றால் தாராண்மைத்துவம் மற்றும் பன்மைத்துவம் ஆகாது

மிதமான போக்கை கடைபிடிப்பது என்றால் தாராண்மைத்துவத்திற்கு அல்லது பன்மைத்துவத்திற்கு ஒப்புதல் அளிப்பது என்றாகாது என்பதை பிரதமர் வலியுறுத்தினார். தமது மிதமான நிலைப்பாட்டை சில தரப்பினர் "புரிந்துகொள்ளவில்லை" அல்லது "வேண்டுமென்றே புரிந்துகொள்ளவில்லை" என்று நஜிப் அவருடனான நேர்காணலில் கூறியிருந்ததை இன்று (நவம்பர் 23) மிங்குவான் மலேசியா வெளியிட்டது. "மிதமாக இருப்பது…

முன்னாள் நீதிபதி ஹமிட்: மலாய்க்காரர்கள் சிவப்பு இந்தியர்களாகி விடுவர்

  டிஎபி மத்திய ஆட்சியைக் கைப்பற்றுவதிலிருந்து தடுப்பதற்கு பாஸ்சும் அம்னோவும் ஒன்றுபட வேண்டும் என்று முன்னாள் தலைமை நீதிபதி அப்துல் ஹமிட் முகம்மட் வலியுறுத்தினார். டிஎபி ஆட்சியைக் கைப்பற்றினால் அமெரிக்காவில் "சிவப்பு இந்தியர்களுக்கு" ஏற்பட்ட கதி மலாய்க்காரர்களுக்கும் ஏற்படும் என்றாரவர். மலாய்க்காரர்களின் பிரச்சனைகள் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டம் (ஐஎஸ்எ)…

தாக்குதல்களால் மலேசியாகினி மனஉறுதி தளரவில்லை, ஸ்டீபன் கான்

  சுயேட்சை செய்திதளமான மலேசியாகினிக்கு எதிராகக் கடந்த 15 ஆண்டுகளாக மேகொள்ளப்பட்ட தாக்குதல்கள் அதன் மனஉறுதியைத் தகர்ப்பதில் தோல்வி கண்டன என்று அத்தளத்தின் கூட்டு நிறுவனரான ஸ்டீபன் கான் இன்று கூறினார். மலேசியாகினியின் 15 ஆம் ஆண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அதன் 1,000க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களிடம்…

எரிபொருள் உதவித் தொகை இரத்துச் செய்யப்பட்டதைச் சாடுகிறது பிகேஆர்

பொருள், சேவை  வரி  அமலுக்கு  வரும்  வேளையில்  எரிபொருள்  உதவித்  தொகை  கொடுப்பதை  நிறுத்திக்கொள்வது  பொறுப்பற்ற  செயலாகும்  என  பிகேஆர்  இளைஞர்  பகுதி  அரசாங்கத்தைச்  சாடியுள்ளது. உதவித் தொகை  இரத்துச் செய்யப்படுவதாக  அறிவித்த  அரசாங்கம்  எதற்குத்தான்  முன்னுரிமை  கொடுக்கிறது  என்று  மக்கள்  கேள்வி  கேட்க  வேண்டும்  என அதன் …

அம்னோ தலைவர்: சரியாகத்தான் சொன்னார் தெங்கு அட்னான்

அம்னோ  பேரவையில்  பேராளர்கள் மற்ற  இனத்தவரின்  மனத்தைப்  புண்படுத்தும்  பிரச்னைகளைத்  தொடாமலிருப்பது  நல்லது;  ஆனால்,  மலாய்க்காரர்  தொடர்பிலான  விவகாரங்களைத்  தாராளமாக விவாதிக்கலாம். இவ்வாறு  அறிவுறுத்திய  செராஸ்  அம்னோ  தொகுதித் தலைவர்   சைட்  அலி  அல்ஹப்ஷி,  நேற்று  கட்சித்  தலைமைச்  செயலாளர் தெங்கு  அட்னான்  தெங்கு  மன்சூர்  வலியுறுத்திய  ஒன்றைத்தான் …

அரசுப் பள்ளிகளில் இஸ்லாமிய சமய ஊடுருவல்: அதனால் அவை தவிர்க்கப்படுகின்றன

மலாய்க்காரர்- அல்லாத  பெற்றோர்  தங்கள்  பிள்ளைகளை   அரசாங்கப்  பள்ளிகளுக்கு  அனுப்ப  விரும்புவதில்லை. அப்பள்ளிகள் சமய  நோக்கத்துடன்  செயல்படுவதும்  இஸ்லாமிய  சமயம்  படிப்படியே  ஊடுருவி  வருவதும்தான்  இதற்குக்  காரணம்  என்கிறார்  டிஏபி  எம்பி  சைரில்  கீர்  ஜொஹாரி. முன்பு  அரசாங்கப்  பள்ளிகளில்  70  விழுக்காடு  மலாய்க்கார  மாணவர்களும்  30 விழுக்காடு …

பெட்ரோலுக்குப் புதிய விலை நிர்ணய முறை

ரோன் 95-க்கான  விலை  இனி, managed float system  என்ற  முறையின்  அடிப்படையில்  சந்தை  நிலவரத்துக்கு  ஏற்ப  முடிவு  செய்யப்படும். இதன்படி  அனைத்துலகச்  சந்தையில் 10-நாள்  எண்ணெய் விலைகளிலிருந்து   ஒரு  சராசரி  கணக்கிடப்பட்டு  கூடவே  சுத்திகரிப்பு  ஆலைகள், சில்லறை வணீகர்கள்  ஆகியோரின்  ஆதாயமும்  நிர்ணயிக்கப்பட்டு  எண்ணெய்க்கான  விலை முடிவு …

1எம்டிபி விவகாரத்தில் டோனி புவாவை நஜிப் மிரட்டுகிறார்

  அரசுக்குச் சொந்தமான 1மலேசியா டிவெலப்மெண்ட் பெர்ஹாட் பற்றி டிஎபி நாடாளுமன்ற உறுப்பினர் டோனி புவா தெரிவித்திருந்த கருத்துகளுக்காக அவர் மீது வழக்குத் தொடரப் போவதாக பிரதமர் நஜிப் மிரட்டியுள்ளார். ஒரு யுடியூப் வீடியோ பதிவில் டோனி நஜிப்பின் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக டோனியிடம் சார்வு செய்யப்பட்ட ஒரு…