தந்தை, மகன் இருவரையும் பொதுமக்கள் கரைக்கு அழைத்து வந்து, உடனடியாக ஒரு சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்கள் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. முதலுதவி பணியாளர்கள் வந்தபோது, பொதுமக்கள் பாதிக்கப்பட்டவர்களை ஏற்கனவே கரைக்குக் கொண்டு வந்திருந்தனர் ஜொகூர் மாநிலம், பெங்கராங்கில் உள்ள கடற்கரை முகாமிடும் பகுதியில் குடும்பத்துடன் சுற்றுலா…
1எம்டிபி : இப்போதைக்கு பிரதமர், ஜோ லோ விசாரணைக்குத் தேவையில்லை
பொதுக் கணக்குக்குழு(பிஏசி) இப்போதைக்குப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கையோ தொழில் அதிபர் ஜோ லோ-வையோ 1மலேசியா மேம்பாட்டு நிறுவனம் மீதான விசாரணைக்கு அழைக்காது. அதற்கு அவசியமில்லை என்றார் பிஏசி தலைவர் நூர் ஜஸ்லான் முகம்மட். விசாரணை தொடரும்போது தேவைக்கேற்ப சாட்சிகள் விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள் எனச் செய்தியாளர்களிடம் நூர் ஜஸ்லான் …
குவான் எங்: நிழல் அமைச்சரவைக்குப் பெருந் தடையாக இருப்பவர் ஹாடி
பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங் இருக்கும்வரை பக்கத்தான் ரக்யாட்டால் நிழல் அமைச்சரவை அமைக்க முடியாது என்கிறார் டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங். டிஏபி, ஹுடுட் சர்ச்சை உருவானபோது, பாஸ் தலைவர் நம்பத்தக்கவர் அல்லர் என்றும் கொடுத்த வாக்கை மீறிவிட்டார் என்றும் கூறி குற்றம்சாட்டி ஹாடியுடன் …
பண்டிகார் வீட்டில் செய்தியாளர் கூட்டம்; ஊகம் வலுக்கிறது
மக்களவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியா இன்று பிற்பகல் திடீர் செய்தியாளர் கூட்டமொன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளார். முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், பண்டிகார் பதவி விலகி விட்டார் என்று கூறிக் கொண்டிருப்பதைத் தொடர்ந்து இக்கூட்டம் நடைபெறுவதால் இது பல ஆருடங்களுக்கு இடமளித்துள்ளது. பதவி விலகியதாகச் சொல்லப்படுவதை பண்டிகார் …
ஐஎஸ் நடவடிக்கைகளில் குழந்தைகள் உள்பட 154 மலேசியர்கள்
உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி குழந்தைகள் உள்பட 154 மலேசியர்கள் ஐஎஸ் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். “1-இலிருந்து 60வயதுள்ளவர் வரை ஐஎஸ் கிளர்ச்சிக் கும்பலில் இருக்கிறார்கள். “குழந்தைகளும் அதில் இருப்பதுதான் கவலையளிக்கும் விசயமாகும்”, என் ஹமிடி, அம்னோவின் தானா ராத்தா எம்பி இக்மால் ஹிஷாமுக்கு வழங்கிய எழுத்துவடிவிலான …
நான்கு மாதமாயிற்று. கீர் தோயோ வழக்கில் தீர்ப்பு வரவில்லை
பதவியைப் பயன்படுத்தி நிலம் வாங்கியதாக கீழ் நீதிமன்றங்களில் குற்றம் சாட்டப்பட்டு அதற்காக 12 மாதச் சிறை விதிக்கப்பட்ட முன்னாள் சிலாங்கூர் மந்திரி புசார் டாக்டர் முகம்மட் கீர் தோயோ, தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்திருந்தார். ஆனால், மேல்முறையீடு மீதான கூட்டரசு நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்னும் வரவில்லை. கீரின் முறையீடு …
1எம்டிபி மீட்புத் திட்டம் பலனளிக்கும்: நஜிப் நம்பிக்கை
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், 1மலேசியா மேம்பாட்டு நிறுவனத்தின் கடன்களைக் குறைக்கும் திட்டம் பலனளிக்கும் என்று நம்புகிறார். “நடவடிக்கை எடுத்து 1எம்டிபி-இன் மொத்த கடனைக் குறைக்க முடியும். அதைத்தான் அரசாங்கம் செய்து வருகிறது. “விரைவிலோ அல்லது சற்று காலம் தாழ்த்தியோ 1எம்டிபி மீட்பு நடவடிக்கைகளின் நோக்கத்தை அடைய முடியும் …
தேவாலய ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏன் விலங்கிடப்படவில்லை: அரசாங்கம் விளக்கம்
அரசியல்வாதிகளும் சமூக ஆர்வலர்களும் போலீஸ் விசாரணைக்காக தடுத்து வைக்கப்படும்போது தாமான் மேடான் தேவாலயத்தில் ஆர்ப்பாட்டம் செய்தவர்களிடம் அதேபோன்று நடந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை என போலீஸ் நினைத்தது. ஏனென்றால் போலீஸ் நிலையத்துக்கு அழைத்ததும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வந்தனர். முழுமையாக வாக்குமூலம் தந்தனர் என உள்துறை அமைச்சு கூறியது. “அதனால் விசாரணைக்காக…
மகாதிர்: பண்டிகர் என்னை ஒரு பொய்யராக்கி விட்டார்
நாடாளுமன்ற மக்களவையின் தலைவர் பண்டிகர் அமின் முலியா முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட்டை தர்மசங்கடமான நிலைக்கு ஆளாக்கி விட்டார். நாடாளுமன்ற அவைத் தலைவர் பதவியை அவர் ராஜினாமா செய்து விட்டதாக கூறப்படுவதை பண்டிகர் மறுத்திருப்பது தா ம் ஒரு பொய்யை கூறியிருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்று…
கேஜெ: பிரதமர் மகாதிருடன் விவாதம் செய்ய வேண்டியதில்லை
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டுடன் விவாதமிட வேண்டிய அவசியமில்லை என்று கைரி ஜமாலுடின் கூறினார். 1மலேசியா மேம்பாட்டு நிறுவன(1எம்டிபி) விவகாரம் பற்றிப் பிரதமர் பதில் அளித்துவிட்டதால் விவாதத்துக்கு அவசியமில்லை என்று இளைஞர், விளையாட்டு அமைச்சர் கூறினார். “இனி, அது தேவையில்லை. பிரதமர் …
அஹ்மட் மஸ்லான்: வியாபாரிகளைக் குறை சொல்லுங்கள், ஜிஎஸ்டி-யை அல்ல
பொருள் விலைகள் உயர்வாக இருந்தால் அதற்குக் காரணம் வணிகர்களே, பொருள், சேவை வரி அல்ல என்று நிதி துணை அமைச்சர் அஹ்மட் மஸ்லான் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். பெரும்பாலான பொருள்களுக்கு, முன்பு 10 விழுக்காடு விற்பனை, சேவை வரி விதிக்கப்பட்ட இடத்தில் இப்போது ஜிஎஸ்டி 6 விழுக்காடுதான் விதிக்கப்படுகிறது என்றாரவர்.…
மகாதிரிடமிருந்து நஜிப்பைக் காப்பாற்றுங்கள்: அம்னோ தலைவர்களுக்கு அறைகூவல்
அம்னோ தொகுதித் தலைவர்கள், பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைக் குறைகூறும் டாக்டர் மகாதிர் முகம்மட்டுக்குப் பதிலடி கொடுக்க வேண்டும். அவர்கள் பிரதமருக்குத் தனிப்பட்ட முறையில் ஆதரவு தெரிவிப்பதைவிட இதைச் செய்வதே முக்கியமாகும் என்கிறார் செராஸ் அம்னோ தொகுதித் தலைவர் சைட் அலி அல்ஹாப்ஷி. தொகுதித் தலைவர்கள் சிலர் நஜிப்பை …
இப்ராகிம் அலி வழக்கு தள்ளுபடி: ரிம50,000 செலவுத்தொகை கொடுக்க உத்தரவு
பெர்காசா தலைவர் இப்ராகிம் அலி, த சன் நாளேட்டுக்கு எதிராக தொடுத்திருந்த அவதூறு வழக்கை ஷா ஆலம் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நீதித்துறை ஆணையர் எம். குணாளன், அச்செய்தித்தாளில் வந்திருந்த கட்டுரை இப்ராகிம் பற்றியது அல்ல என்றும் மலாய்க்காரர் உரிமைக்குப் போராடும் பெர்காசா பற்றியது என்றும் தீர்ப்பளித்தார்.…
7 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நாடாளுமன்றத்தில் அசிசா
நாடாளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடர் இன்று தொடங்கியபோது புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிகள் வான் அசிசா வான் இஸ்மாயில் (பிகேஆர்- பெர்மாத்தாங் பாவ்), ஹசான் அரிப்பின் (பிஎன் -ரொம்பின்) ஆகிய இருவரும் எம்பிகளாகப் பதவி ஏற்றனர். அவர்களின் பதவியேற்புச் சடங்கு மக்களவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியா முன்னிலையில் நடந்தது. அசிசா …
நஜிப்: எட்டு ஆண்டுகளுக்கு மேலாகிவிட்ட அல்தான்துயா விவகாரத்தை ஏன் மகாதிர்…
மங்கோலிய பெண் அல்தான்துயா கொலை நடந்து எட்டு ஆண்டுகளாகி விட்டன. முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட் ஏன் அது குறித்து கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கிறார் என்று பிரதமர் நஜிப் திருப்பிக் கேட்கிறார். ஏன் செல்வாக்குமிக்க சில தனிப்பட்டவர்கள் தம்மை சிக்கவைப்பதற்காக இந்த வழக்கிற்கு புத்துயிர் அளிக்கின்றனர் என்று…
முகைதின்: மியான்மார் ரோஹின்யா பிரச்னையை நம்மீது சுமத்தக் கூடாது
மியான்மார் ரோஹின்யாக்களின் பிரச்சனைக்கு உள்ளுக்குள்ளேயே தீர்வு காண வேண்டுமே தவிர ஆசியான் அண்டைநாடுகளிடம் அதைத் தள்ளிவிடக் கூடாது என்று துணைப் பிரதமர் முகைதின் யாசின் கூறினார். சிலாங்கூர், கிளன்மேரியில் செய்தியாளர்களிடம் பேசிய முகைதின் இவ்விவகாரம் சிக்கலானது என்றார். “வருகின்றவர்கள் இங்கு வரவேற்கப்படுகிறார்கள் என்ற தப்பான சமிக்ஞையை நாம் காட்டிவிடக்கூடாது.…
TRX-BM நிலங்கள் ரிம42 பில்லியன் பெறுமா? கதை விடுகிறார் நஜிப்
நேற்று கிள்ளானில் அம்னோ சிலாங்கூர் உறுப்பினர்களிடம் பேசிய பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், “1எம்டிபி-இன் ரிம42 பில்லியன் எங்கும் காணாமல் போகவில்லை. அது துன் அப்துல் ரசாக் இணைப்பு மையத்தில்(TRX) 70 ஏக்கர் நிலமாகவும் பண்டார் மலேசியாவில் 500 ஏக்கர் நிலமாகவும் இருக்கிறது” என்றார். முதலில், TRX, பண்டார் …
ரொஹின்யா விவகாரத்தில் நஜிப்பின் பேச்சில் உள்ள வேகம் செயலில் இல்லை
ரோஹின்யா அகதிகள் விவகாரத்தில் தாய்லாந்து ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்துள்ளது. பார்க்கப்போனால் ஆசியான் தலைவரான மலேசியாதான் அப்படிப்பட்ட நடவடிக்கை முன்னின்று எடுத்திருக்க வேண்டும். ஆனால், எடுக்கத் தவறிவிட்டது என பாஸ் கட்சி சாடியுள்ளது. “மனிதநேயத்துக்கு ஒரு மோசமான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மலேசியா இதற்கு உருப்படியான தீர்வு காண வேண்டும்.…
நஜிப்பை சொற்போருக்கு அழைக்கிறார் மகாதிர்
நாட்டின் மிக முக்கிய விவகாரங்கள் குறித்து பிரதமர் நஜிப் ரசாக்குடன் விவாதம் நடத்தத் தயாராக இருப்பதாக முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட் கூறுகிறார். முகத்தில் புன்னகை தழுவ, தாமும் ஒரு சிறந்த சொற்போர் வீரர் என்றார். "என்னிடமும் விவாதம் செய்வதற்கான திறமை கொஞ்சம் இருக்கிறது. நீர் விவாதம்…
‘எம்ஏசிசி, நெத்திலி கிடக்கட்டும் சுறாமீன்களைத் தேடிப் போங்க’
உங்கள் கருத்து ‘அரசியல் செயலாளர்கள்மீது. ஏன் நடவடிக்கை? எஜமானர்கள் சொல்வதைத்தானே அவர்கள் செய்கிறார்கள்’ அமைச்சர்களின் உதவியாளர்கள் பணத்தில் புரள்கிறார்கள் ஆர்சிஎஸ்: மலேசியாவில் கேட்பார் மேய்ப்பாரின்றி ஊழல் ஆட்சி செய்கிறதாம். நமக்கு எப்பவோ தெரிந்த ஒரு விசயத்தை அந்த அம்னோ உறுப்பினர் இப்போ சொல்கிறார். மிகப் பெரிய கொள்ளை நடப்பது …
நஜிப்: அது பேங்க் நெகாராவின் யோசனை; அரசியல் நோக்கம் அதற்கில்லை
1மலேசியா மக்கள் உதவித் திட்டம்(ப்ரிம்) வாக்காளர்களைக் கவரும் ஒர் அரசியல் தந்திரம் என்று கூறப்படுவதை மறுத்த பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், அது தம்முடைய யோசனை அல்லவென்றும் அது பேங்க் நெகாராவின் யோசனையாகும் என்றும் தெரிவித்தார். “நான் அதற்குப் பரிந்துரைக்கவில்லை. பரிந்துரைத்தது நிதிக் குழுவும் பேங்க் நெகராவும் ஆகும்.…
தேர்தல் தொகுதி தீர்ப்புக்கு எதிராக இசி மேல்முறையீடு செய்யலாம்
சரவாக்கில் தேர்தல் தொகுதி எல்லைகளைத் திருத்தும் பணியைத் திரும்பவும் செய்ய வேண்டுமென்ற நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக தேர்தல் ஆணையம் (இசி) மேல்முறையீடு செய்யுமெனத் தெரிகிறது. இதன் தொடர்பில் இசி-யிலும் சட்டத்துறைத் துறை அலுவலகத்திலும் இதுவரை முடிவெடுக்கப்படவில்லை. அவர்கள் சட்டத்துறைத் தலைவர் அப்துல் கனி பட்டேய்லின் உத்தரவுக்காகக் காத்திருக்கிறார்கள். “அனேகமாக,…
@KINIயில் “உலக ஊடக விழா”, கலந்து கொள்ள வாரீர்
உலக ஊடக சுதந்திர தினம் சமீபத்தில் கொண்டாடப்பட்டதை அடுத்து நாளை ( மே 16) "உலக ஊடக விழா" கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கெராக்கான் மீடியா மாரா (கெராம்) மலேசியாகினியுடன் இணைந்து செய்கிறது. இவ்விழாவில் ஊடக சுதந்திரம் பற்றிய பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று…
இராமசாமி: இந்தியர்களுக்கான ரிம3 பில்லியன் எங்கே போயிற்று?
இந்தியர்களின் மேம்பாட்டிற்காக நிதி அமைச்சு கிட்டத்தட்ட ரிம3 மில்லியன் ஒதுக்கீடு செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அந்த ஒதுக்கீட்டால் இந்திய சமூகம் பயனடைந்ததா என்று பினாங்கு மாநில அரசு அறிய விரும்புகிறது. 2012 ஆண்டிலிருந்து 2015 வரையில் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக கூறப்படும் அந்நிதி என்னவாயிற்று என்று பிரதமர் நஜிப் விளக்கம்…


