மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 403 தவறாகப் பகுப்பாய்வு செய்யப்பட்டதால், இந்த ஆண்டு ஜூன் மாதம் நிதி முறைகேடு குற்றச்சாட்டிலிருந்து சையத் சாதிக் சையத் அப்துல் ரஹ்மான் விடுவிக்கப்பட்டதாக இன்று பெடரல் நீதிமன்றம் விசாரித்தது. "துணை அரசு வழக்கறிஞர் அஹ்மத் அக்ரம் காரிப், இந்தப் பிரிவில் உள்ள…
பதவி விலகு: காலிட்டுக்கு பாஸ் உதவித் தலைவர் காட்டமான கோரிக்கை
ஞாயிற்றுக்கிழமை பாஸ் மத்திய குழுக் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், அப்துல் காலிட் இப்ராகிம் மந்திரி புசார் பதவியைக் காலி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் அதன் உதவித் தலைவர் காட்டமான அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார், “இன்னும் எதற்குக் காத்திருக்கிறீர்?”, என்று வினவிய ஹூசாம் மூசா, மந்திரி புசாராக தொடர்ந்து …
ரிம540 மில்லியன் பற்றி வேதமூர்த்தியிடம் கேளுங்கள்
அரசாங்கம் இந்திய சமூகத்துக்குக் கொடுத்ததாக சொல்லப்படும் ரிம540 மில்லியன் பற்றிக் கேள்வி எழுப்பும் இந்திய என்ஜிஓ-களுக்கு, முன்னாள் அமைச்சர் பி.வேதமூர்த்தியிடம் கேளுங்கள், அவர் அதை நன்கு அறிந்திருப்பார் என மஇகா சூடாக பதிலளித்துள்ளது. “அது பற்றிய விவரம் 13வது பொதுத் தேர்தலுக்கு முன்னும் பின்னும் தமிழ் நாளேடுகளிலும் இணையத்திலும் …
பாஸ் எக்ஸ்கோ-விலிருந்து வெளியேறினால் அம்னோ உள்ளே நுழைந்து விடலாம்
சிலாங்கூர் அம்னோவின் கைக்குச் செல்வதைத் தடுக்கவே மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிமின் ஆட்சிக்குழுவில்(எக்ஸ்கோ) பாஸின் நான்கு எக்ஸ்கோ உறுப்பினர்களும் தொடர்ந்து இருப்பதென முடிவு செய்தார்களாம். பாஸின் நால்வரும் விலகினால், ஆட்சிக்குழுவுக்கு அம்னோ உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு சிறுபான்மை அரசு அமைக்கப்படலாம் என அரண்மனை குறிப்புக் காட்டியதாக பக்கத்தான் ரக்யாட் …
‘இஸ்லாம் ஆண்-பெண் வேறுபாடு பார்ப்பதில்லை’: பாஸுக்கு பிகேஆர் அறிவுறுத்தல்
டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் பெண் என்பதால்தான் அவர் சிலாங்கூர் மந்திரி புசார் ஆவதை பாஸ் எதிர்க்கிறது என்ற வதந்தியை. பாஸ் மறுத்தாலும் அக்கட்சியின் மறுப்பு எடுபடவில்லை. அது பற்றிக் கருத்துரைத்த பிகேஆர் மகளிர் தலைவர் சுரைடா கமருடின், இஸ்லாம் ஆண்-பெண் வேறுபாடு பார்ப்பதில்லை என்று கூறினார்.…
அசிஸ் பாரி: ஆட்டம் முடிந்து விட்டது; வான் அஸிசா மந்திரி…
சிலாங்கூர் சட்டமன்றத்தில் பிகேஆர் தலைவர் வான் அஸிசா வான் இஸ்மாயில் பெரும்பான்மை பெற்றிருப்பதால் சிலாங்கூர் சுல்தான் அவரை மந்திரி புசாராக நியமிக்க வேண்டும் என்று அரசமைப்புச் சட்ட வல்லுனர் அப்துல் அசிஸ் பாரி கூறினார். சட்டமன்றத்தை கலைக்க வேண்டும் என்ற நிலை இப்போது இல்லை. அவ்வாறு செய்வது…
காலிட்டை மாற்ற சட்டமன்றக் கூட்டம் தேவையில்லை
பக்கத்தான் ரக்யாட், சிலாங்கூர் அரசில் தனக்குப் பெரும்பான்மை இருப்பதைச் சட்டமன்றக் கூட்டம் நடத்தித்தான் காண்பிக்க வேண்டும் என்பதில்லை, தெளிவான ஆதாரங்களைக் காண்பித்தாலே போதுமானது. சட்டமன்ற உறுப்பினர்களின் சத்திய பிரமாணங்களே போதும் என்கிறார் யுனிவர்சிடி மலாயா சட்ட விரிவுரையாளர் குருதயாள் சிங் நிஜார். “கூடவே, தேவையென்றால், சுல்தான் சட்டமன்ற உறுப்பினர்களைச் …
வான் அசிசா-ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களை பாஸ் விசாரிக்கும்
பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் சிலாங்கூர் மந்திரி புசார் ஆவதற்கு ஆதரவு தெரிவித்துள்ள தன் சட்டமன்ற உறுப்பினர்கள் இருவரையும் பாஸ் விசாரிக்கும். இதை, பாஸ் தலைமைச் செயலாளர் முஸ்தபா அலி, முகநூலில் தெரிவித்தார். “கட்சியின் நிலைப்பாடு மீறப்பட்டிருக்கிறது. விசாரணை ,நடத்தப்படும்”,என்றவர் பதிவிட்டிருந்தார்.
என்ஜிஓ: ரிம 540 மில்லியன் என்னவானது?
பினாங்கு இந்திய என்ஜிஓ-களின் கூட்டமைப்பான கோபிங்கோ, இந்திய சமூக மெம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டதாகக் கூறப்படும் ரிம540 மில்லியன் எப்படிச் செலவிடப்பட்டது என்பதை அறிய விரும்புகிறது. அதன் தொடர்பில், கோபிங்கோ தலைவர் என்.கணேசன் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கையும் மஇகா தலைவர் ஜி.பழனிவேலையும் நோக்கி சில கேள்விகளைத் தொடுத்துள்ளார். நஜிப் சிறிது…
இஸ்ரேல்-ஆதரவு பக்கத்தை ‘லைக்’ செய்த மாணவனை என்ன செய்யலாம்: போலீஸ்…
முகநூலில் இஸ்ரேல்- ஆதரவு பக்கத்தை லைக் செய்த பதின்ம வயதினன்மீது நடவடிக்கை எடுக்கும் விசயத்தில் போலீஸ் ஒரு இக்கட்டான நிலையில் சிக்கிக் கொண்டிருப்பதாக தொடர்பு, பல்லூடக அமைச்சர் அஹ்மட் ஷபரி சிக் கூறினார். “போலீஸ் நடவடிக்கை எடுக்காவிட்டால் மக்கள் ஆத்திரப்படுவார்கள். போலீஸ் நடவடிக்கை எடுத்தாலும் ஆத்திரப்படுவார்கள். காவல் துறையினர்…
காலிட், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படும் வரை நகர மறுக்கிறார்
பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில், சிலாங்கூரின் அடுத்த மந்திரி புசாராவதற்குத் தேவையான பெரும்பான்மை இருப்பதாகக் கூறிக் கொண்டிருப்பது மட்டும் போதாது. 56 பேரடங்கிய சட்டமன்றத்தில் 30பேர் ஆதரிக்கிறார்கள் என்றால் அந்த ஆதரவை நம்பிக்கையில்லா தீர்மானம்மீதான வாக்குகளாக மாற்றிக் காண்பிக்க வேண்டும் என சிலாங்கூர் மந்திரி …
பிகேஆர், டிஎபி ஊராட்சிமன்ற உறுப்பினர்கள் பதவியில் தொடர்வார்கள்
சிலாங்கூர் சுயேட்சை மந்திரி புசார் மாநில ஆட்சிக்குழுவிலிருந்து ஆறு பிகேஆர் மற்றும் டிஎபி உறுப்பினர்களை பதவியிலிருந்து அகற்றி இருந்தாலும், மாநிலம் முழுவதிலுமுள்ள பிகேஆர் மற்றும் டிஎபி ஊராட்சிமன்ற உறுப்பினர்கள் அவர்களுடைய பதவியில் தொடர்ந்து இருப்பார்கள் என்று சிலாங்கூர் பொருளாதார நடவடிக்கை மன்றம் தீர்மானித்துள்ளது. சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு…
சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்ஸியா நீக்கப்பட்டார்
சிலாங்கூர் சுயேட்சை மந்திரி புசார் காலிட் இப்ராகிம் இன்னொரு சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்ஸியா இஸ்மாயிலை பதவியிலிருந்து அகற்றி விட்டார். இன்று காலையில் நடந்த சிலாங்கூர் பொருளாதார நடவடிக்கை குழு கூட்டத்தைத் தொடர்ந்து இம்முடிவு எடுக்கப்பட்டது என்பதை பாஸ் ஆட்சிக்குழு உறுப்பினரான டாக்டர் ஹலிமா அலி வெளியிட்டார். "(பதவி…
வான் அஸிசாவுக்கு 30 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு
சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தின் இரு பாஸ் கட்சி உறுப்பினர்கள் பிகேஆர் தலைவர் வான் அஸிசாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக இன்று பின்னேரத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறினார். பாஸ் கட்சியின் மோரிப் பிரதிநிதி ஹான்சுல் பஹாருடின் மற்றும் உலுகிளாங் பிரதிநிதி ஷாஆரி சுங்கிப் ஆகிய அவ்விருவரும் இன்று சுபாங் ஜெயாவில்…
வான் அசிசாவை சுல்தான் நிராகரித்தார் என்பதை பாஸ் ‘கேள்விப்பட்டதாம்’
பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அசிசா மாநில மந்திரி புசார் ஆவதை சிலாங்கூர் அரண்மனை நிராகரித்ததாக “சொல்லக் கேள்வி” என பாஸ் கூறியுள்ளது. அப்படியானால், மந்திரி புசார் பதவிக்கு புதிய வேட்பாளரின் பெயரை பிகேஆர் குறிப்பிட வேண்டும் என பாஸ் தலைமைச் செயலாளர் முஸ்தபா அலி கூறினார். சின் …
அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் டோனி புவாவிடம் மன்னிப்பு கேட்டார்
உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி, 2011-இல் பெட்டாலிங் ஜெயா உத்தாரா நாடாளுமன்ற உறுப்பினர் டோனி புவா-வை ஒரு குற்றவாளி எனப் பொருள்படும் வகையில் பேசியதைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாக இன்று கோலாலும்பூர் உயர் நீதிமன்றத்தில் கூறினார். அவமதிக்கும் வகையில் பேசியதற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டு ஜாஹிட் அறிக்கை ஒன்றை வாசித்தார்.…
காலிட்: ரோட்சியா நீக்கப்படவில்லை; அவர் என்னை ஆதரிக்கக் கூடும்
ஆட்சிக்குழுவில் உள்ள பிகேஆர் உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் பதவி நீக்கப்படவில்லை என்று சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம் கூறினார். அவர் ஒரு வேளை தம்மை ஆதரிக்கலாம் என்றும் அவர் நம்புகிறார். பத்து தீகா சட்டமன்ற உறுப்பினரான ரோட்சியா இப்போது வெளிநாட்டில் இருக்கிறார். “அவர் வரட்டும், அதன்பின்னர் …
எம்பி: பதவி உறுதிமொழியை மீறினார்கள் அதனால் ஐவரும் நீக்கப்பட்டனர்
பிகேஆர், டிஏபி ஆட்சிக்குழு உறுப்பினர் ஐவரும் 10-அம்ச அக்கு ஜஞ்ஜி (உறுதிமொழி)-யை மீறினார்கள் என்பதால்தான் நீக்கப்பட்டதாக சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம் கூறினார். “எக்ஸ்கோ உறுப்பினர்களின் பதவிநீக்கம் சட்டப்படி செய்யப்பட்டது. அதற்கு சுல்தானின் ஒப்புதலும் உண்டு”, என்றவர் வலியுறுத்தினார். “அவர்கள் எக்ஸ்கோ கூட்டங்களில் மட்டும் கலந்துகொண்டு …
சுரேந்திரன்: பாஸ் உடனடியாக அதன் முடிவை அறிவிக்க வேண்டும்
சிலாங்கூர் மந்திரி புசார் நெருக்கடியில் ஒரு முடிவெடுக்க ஞாயிற்றுக்கிழமை பாஸ் ஞாயிற்றுக்கிழமை அதன் மத்திய குழுக் கூட்டம்வரை காத்திருக்காமல் “உடனே” அதைச் செய்தாக வேண்டும் என்று பிகேஆர் உதவித் தலைவர் என்.சுரேந்திரன் கூறினார். இந்த நெருக்கடியான நேரத்தில் பாஸ் தன் பங்காளிக் கட்சிகளின் பக்கம்தான் நிற்கும் என டிஏபி-யும்…
நீக்கப்பட்ட எக்ஸ்கோ-கள் அலுவலகத்தைக் காலி செய்ய உத்தரவு
சிலாங்கூர் ஆட்சிக்குழுவிலிருந்து நீக்கப்பட்ட டிஏபி, பிகேஆர் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் (எக்ஸ்கோ) அறுவரும் அவர்களின் அலுவலகத்தை உடனடியாக காலி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. டிஏபி-இன் இயன் யோங் ஹியான் வா, வி,கணபதி ராவ், தெங் சாங் கிம், பிகேஆரின் ரோட்சியா இஸ்மாயில், தரோயா அல்வி, எலிசபெத் வொங் ஆகியோரே …
தாய்மொழிப்பள்ளிகள் மற்ற இனங்களுக்கு மதிப்பளிக்க இயலாதவை என்று கூறிய அமைச்சர்…
தாய்மொழிப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மற்ற இனங்களுக்கு மதிப்பளிக்க இயலாதவர்கள் என்று கூறிய அமைச்சர் இஸ்மாயில் சாப்ரி மசீசவால் கடுமையாகச் சாடப்பட்டார். நேற்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் மசீச இளைஞர் பிரிவு தேசிய தலைவர் சோங் சின் வூன் அனைத்து தரப்பினரும் சுய-கட்டுப்பாட்டை அனுசரிக்க வேண்டும் என்றும் தாய்மொழிப்பள்ளிகள் தேசிய…
நீக்கப்பட்ட 6 ஆட்சிக்குழு உறுப்பினர்களும் பணிய மறுக்கின்றனர்
நேற்று சிலாங்கூர் மந்திரி புசார் காலிட் இப்ராகிமால் ஆட்சிக்குழுவிலிருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட ஆறு ஆட்சிக்குழு உறுப்பினர்களும் தங்களுடைய அரசாங்கப் பணிகளை தொடர்வார்கள். காலிட்டால் நீக்கப்பட்ட அனைத்து ஆட்சிக்குழு உறுப்பினர்களும் தங்களுடைய பதவி நீக்கம் செல்லத்தக்கதல்ல என்று கருதுகின்றனர் என்று ஆட்சிக்குழு மூத்த உறுப்பினர் தெங் சாங் கிம்…
குலா: புதிய தமிழ், சீனமொழிப்பள்ளிகள் கட்டக் கூடாது என்ற துணை…
பிரதமர்துறையில் இருக்கும் துணை அமைச்சர் ரஸாலி இப்ராகிம் சீனமொழி தொடக்கப்பள்ளிகள் இருப்பது நாட்டின் ஒற்றுமைக்கு பங்களிப்பு எதனையும் செய்யாததால் அரசாங்கம் இனிமேல் புதிய சீனமொழிப்பள்ளிகளைக் கட்டக் கூடாது என்று ஆகஸ்ட் 4 இல் கூறியுள்ளார். அவ்வாறே தமிழ்ப்பள்ளிகளும் தொடக்கப்பள்ளி நிலையில் இன ஒற்றுமையை வளர்க்கும் தேசிய திட்டத்திற்கு…
டிஎபி, பிகேஆர் ஆட்சிக்குழு உறுப்பினர்களை காலிட் அகற்றினார்
சிலாங்கூர் மந்திரி புசார் காலிட் இப்ராகிம் சிலாங்கூர் ஆட்சிக்குழுவின் டிஎபி மற்றும் பிகேஆர் உறுப்பினர்களை பதவியிலிருந்து அகற்றியுள்ளார். இது பிரச்சனையை விரிவுபடுத்தியுள்ளது. காலிட்டின் இச்செயல் சிலாங்கூரில் பக்கத்தான் ஆட்சியை முடிவிற்கு கொண்டு வந்துள்ளது. இப்போது ஆட்சிக்குழுவில் காலிட், ஒரு சுயேட்சை உறுப்பினர் மற்றும் நான்கு பாஸ் உறுப்பினர்களே…


