அசிசாவை சுல்தான் நிராகரித்தால் அடுத்த திட்டம் என்ன? பிகேஆர் தெரிவிக்க…

பிகேஆர்  தலைவர்   டாக்டர்  வான்  அசிசா  வான்  இஸ்மாயில்  சிலாங்கூர்  மந்திரி  புசாராவதை  சிலாங்கூர்  சுல்தான் ஏற்க  மறுக்கும்  சாத்தியம்  இருப்பதால்  அப்படிப்பட்ட  நிலையில் என்ன  செய்யப்படும்  என்று  கேட்டதற்கு பிகேஆர்  பிடிகொடுக்காமல்  பேசுகிறது. வெளிநாடு  சென்றுள்ள சுல்தான்  திரும்பிவரக்  காத்திருப்பதாக  பிகேஆர்  தலைமைச்  செயலாளர்  சைபுடின்  நசுத்தியோன் …

ஜாஹிட்: மகாதிர் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களை மதிக்க வேண்டும்

எல்லாரையும்போல்  முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர் முகமட்டும்  மக்களால்  தேர்ந்தெடுக்கப்பட்ட  தலைவர்களை  மதிக்க  வேண்டும்  என்று   உள்துறை  அமைச்சர்  அஹ்மட் ஜாஹிட்  ஹமிடி  கேட்டுக்கொண்டிருக்கிறார். அவர்  பிரதமர்  நஜிப்புக்கு  விசுவாசம்  காட்டிட  வேண்டும் என்றவர்  குறிப்பிட்டார். “மகாதிர் பிரதமராக  இருந்தபோது  எல்லாரும்  அவருக்கு  விசுவாசமாக  இருக்க  வேண்டும்  என்று …

நஜிப்பைப் பகிரங்கமாக சாடுவதை நிறுத்துவீர்- தெங்கு அட்னான்

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கின்  அரசாங்கத்தைப்  பகிரங்கமாக  சாடுவதை  டாக்டர்  மகாதிர்  முகம்மட்  நிறுத்திக்கொள்ள  வேண்டும். இவ்வாறு கேட்டுக்கொண்ட  அம்னோ  தலைமைச்  செயலாளர்  தெங்கு  அட்னான்  தெங்கு  மன்சூர், முன்னாள்  பிரதமர்  தம்  கருத்துகளைத்  தனிப்பட்ட  முறையில்  தெரிவிக்கலாம்  என்றார். “துன்னின்  கருத்துக்கு  மதிப்பு  கொடுக்கிறோம். அதை  வெளிப்படையாகக் …

அன்வாரின் வழக்குரைஞர்மீது தேச நிந்தனைக் குற்றம் சாட்டப்பட்டது

பிகேஆர் உதவித்  தலைவர்  என்.சுரேந்திரன்மீது  இன்று  செஷன்ஸ்  நீதிமன்றத்தில்  தேச நிந்தனைக்  குற்றம்  சாட்டப்பட்டது. அவர்  குற்றவாளி  எனக் கண்டுபிடிக்கப்பட்டால்  கூடின  பட்சம்  மூன்றாண்டு  சிறைத்தண்டனையும்  ரிம5,000 அபராதமும்  விதிக்கப்படலாம். ஏப்ரல் 14ஆம்  நாள்  வெளியிட்ட  அறிக்கையில், அன்வர்  இப்ராகிம்மீது  சுமத்தப்பட்ட  குதப் புணர்ச்சிக்  குற்றச்சாட்டு  பொய்யானது  எனக் …

அரண்மனை அஸிசாவை நிராகரிப்பது அரமைப்புச் சட்டத்திற்கு சவால் விட்டதாகும்

  சிலாங்கூர் மாநிலத்தின் அடுத்த மந்திரி புசாராக டாக்டர் வான் அஸிசா வான் இஸ்மாயிலின் நியமனத்தை அரண்மனை நிராகரித்தால் அது "தற்போதைய அரசமமைப்புச் சட்டத்தைத் தள்ளி வைப்பதற்கு" ஒப்பாகும் என்று அரசமைப்புச் சட்ட வல்லுனர் அப்துல் அசிஸ் பாரி மலேசியாகினியிடம் கூறினார். அவ்வாறான செயல் மாநிலத்தை சுதந்திரத்திற்கு முற்பட்ட…

மகாதிர்: நஜிப்பைத் தேர்ந்தெடுத்தது தப்பாக போய்விட்டது

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  மிகுந்த  ஏமாற்றத்தைத்  தந்து  விட்டதாகக்  கூறி  வருத்தப்படும்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்,  நஜிப்பின்  செயல்பாடு   அப்துல்லா  அஹமட்  படாவியைவிட  மோசமாக    உள்ளது  என்றார். மகாதிர்,  இன்று  தம்  வலைப்பதிவில்  நஜிப்பைக்  கடுமையாகச்   சாடி  இருந்தார். “வேறுவழியின்றி  ஆதரவு  அளிப்பதை  நிறுத்தினேன். அதுவும்  பலனளிக்கவில்லை.…

தம்மைச் சந்திக்க காலிட் வெளிநாடு வர வேண்டியதில்லை என்று சுல்தான்…

மந்திரி  புசார்  அப்துல்  காலிட்  இப்ராகிம்,  வெளிநாடு  சென்று  சிலாங்கூர் சுல்தானைச் சந்தித்து  அவருடன் நடப்பு  அரசியல்  நிலவரம்  குறித்து   விவாதிக்க  விரும்பி  அதற்கு அனுமதி  கேட்டது உண்மைதான்  என்பதை  சிலாங்கூர்  அரண்மனை  உறுதிப்படுத்தியது. தற்போது  ஹங்கேரி, புடாபெஸ்டில்  உள்ள  சுல்தானை  அங்கு  சென்று  சந்திக்க  காலிட்  அனுமதி …

அன்வாரின் வழக்குரைஞர் சுரேந்திரனுக்கு எதிராக தேச நிந்தனை குற்றச்சாட்டு

  அன்வாரின் குதப்புனர்ச்சி II வழக்கு குறித்து தெரிவித்த கருத்துக்காக அவரின் வழக்குரைஞர் என். சுரேந்திரன் மீது நாளை செசன்ஸ் நீதிமன்றத்தில் தேச நிந்தனை குற்றச்சாட்டு சுமத்தப்படும். சுரேந்திரனுக்கு எதிராக கைது ஆணை பிறப்பிக்கப்பட்டிருப்பதாக போலீஸ் புலன்விசாரனை அதிகாரி சுரேந்திரனிடம் தெரிவித்திருப்பதாக பிகேஆரின் சட்டப் பிரிவு தலைவரான லத்தீபா…

சுரேந்திரன்மீது தேச நிந்தனைக் குற்றச்சாட்டு

பிகேஆர் உதவித்  தலைவர்  என்.சுரேந்திரன்மீது  நாளை  செஷன்ஸ்  நீதிமன்றத்தில்  தேச நிந்தனைக்  குற்றம்  சாட்டப்படும். அன்வர்  இப்ராகிம்  குதப் புணர்ச்சி  வழக்கு  பற்றி  அவர்  கருத்துத்  தெரிவித்ததுதான் இதற்குக்  காரணமாகும். சுரேந்திரனுக்கு  எதிராகக்  கைதுஆணை  பிறப்பிக்கப்  பட்டிருப்பதாக  போலீஸ்  அதிகாரி  ஒருவர்  சுரேந்திரனிடம்  தெரிவித்துள்ளார்  என  பிகேஆர்  சட்ட…

சிலாங்கூர் மந்திரி புசார்: வான் அஸிசா பக்கத்தானின் ஒரே வேட்பாளர்

இன்று நடைபெற்ற பல மணி நேர ஆழ்ந்த விவாதங்களுக்குப் பிறகு பக்கத்தான் பங்காளிக் கட்சிகள் சிலாங்கூர் மந்திரி புசார் பதவிக்கு அதன் ஒரே வேட்பாளராக பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அஸிசா வான் இஸ்மாயிலை நியமிக்க ஒப்புக்கொண்டன. இன்று முன்னேரத்தில், பாஸ் அப்பதவிக்கு கூடுதலாக பிகேஆரின் துணத் தலைவர்…

பாஸ் முடிவை ஏற்றார் காலிட்

சிலாங்கூர்  மந்திரி  புசார்  பதவி மற்றும்  மாநில  ஆட்சிக்குழு  தொடர்பில்  பாஸ்  கட்சி  செய்துள்ள  முடிவைத்  திறந்த  மனத்துடன்  ஏற்பதாக  அப்துல்  காலிட்  இப்ராகிம்  கூறியுள்ளார். அடுத்து  மாநில  சுல்தானைச்  சந்தித்து  “தொடர்ந்து  எடுக்க  வேண்டிய  நடவடிக்கைகள்  குறித்து அவருக்கு  ஆலோசனை”  கூறப்போவதாக அவர்  சொன்னார். “சுல்தான்  இறுதி …

அஸ்மின்: நல்லதே நடக்க வேண்டிக்கொள்வோம்

பிகேஆர்,  சிலாங்கூர்  மந்திரி  புசாராக  அப்துல்  காலிட்  இப்ராகிமுக்குப்  பதிலாக  அதன்  தலைவர்  டாக்டர்  வான்  அசிசா  நியமிக்கப்பட  வேண்டும்  என்பதையே  தொடர்ந்து  வலியுறுத்தி  வந்தது. பாஸ், இப்போது  இன்னொரு  பெயரையும்  சேர்த்துக்  கொண்டிருக்கிறது. இன்று  இரண்டு  மணி  நேரம்  கூடிப்  பேசிய  பாஸ்  மத்திய  குழு மந்திரி …

பாஸ், மந்திரி புசார் பதவிக்கு அசிசா, அஸ்மின் இருவரையும் ஆதரிக்கிறது

சிலாங்கூர்  மந்திரி  புசார்  பதவிக்கு  பிகேஆர்  தலைவர்  வான்  அசிசா  வான்  இஸ்மாயில்,  அதன்  துணைத்  தலைவர்  அஸ்மின்  அலி  ஆகிய  இருவரையும் ஆதரிப்பதாக  பாஸ்  அறிவித்துள்ளது. இது சிலாங்கூரில்  நிலவும்  அரசியல்  இக்கட்டை  முடிவுக்குக்  கொண்டுவரும்  என  எதிர்பார்க்கப்படுகிறது. இன்று  பாஸ்  தலைமையகத்தில் அதன்  துணைத்  தலைவர் …

பெர்காசா தேர்தலில் போட்டியிடும் என்பதை மறுக்கிறார் இப்ராகிம்

பெர்காசா  தலைவர்  இப்ராகிம் அலி, அந்த  அமைப்பு  14வது  பொதுத்  தேர்தலில்  போட்டியிட  திட்டமிடுவதாகக்  கூறும்  செய்தியை  மறுத்துள்ளார். மலேசியாகினி  அவரைத்  தொடர்புகொண்டு  வினவியதற்கு, “அது  உண்மை அல்ல”, என்றார். சினார்  ஹரியான்  செய்தி  ஒன்று,  பெர்காசா  தேர்தலில்  போட்டியிட  முடிவு  செய்திருப்பதை  அறிந்து  அதன்  பகாங்  தலைமைத்துவம்…

பொதுத் தேர்தலில் போட்டியிடுவது பிடிக்காமல் பெர்காசா பகாங் தலைவர்கள் விலகல்

பெர்காசா  தலைமை  அமைப்பு 14வது  பொதுத்  தேர்தலில்  போட்டியிடும்  “சாத்தியக் கூறுகளள்”  ஆராயப்படும்  என்று  கூறியிருப்பதை  அடுத்து  பகாங்  பெர்காசாவின்  தலைவர்கள்  அனைவரும்  ஒட்டுமொத்தமாக  வெளியேறியுள்ளனர். அவசரக் கூட்டம்  நடத்தி  19 செயலவை  உறுப்பினர்களும்  பதவி  விலக  முடிவெடுத்தனர்  என  மலாய்  நாளேடான  சினார்  ஹரியான்  கூறிற்று. பகாங் …

மகாதிர்: இனவாதமற்ற மலேசியாவா?

  இனவாதத்தால் பிளவுபடாத மலேசியா உருவாகும் நாளை எதிர்பார்த்து பலர் கனவு கண்டு வருகின்றனர். ஆனால், முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட் அதற்கான வாய்ப்புகள் "மிகக் குறைவே" என்று கூறுகிறார். "நாம் தொடர்ந்து இன அடிப்படையில்தான் அடையாளம் காணப்படுவோம் ஏனென்றால் சமுதாயத்தில் இருக்கும் தீவிரவாதிகளால் கூறப்படுவதை சமுதாயத்திலுள்ள மிதவாதிகள்…

கருத்தரங்கு: இந்திய சமூகத்தில் குற்றச் செயல் மற்றும் வன்முறை

  மலேசிய தமிழர் சங்கம் இந்திய சமூகத்தில் குற்றச் செயல் மற்றும் வன்முறை பற்றிய கருத்தரங்கம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளது. அக்கருத்தரங்கு நாளை (ஞாயிற்றுக்கிழமை) பெட்டாலிங் ஜெயா சிவிக் செண்டரில் நடைபெறும் என்று  அச்சங்கத்தின் துணைத் தலைவர் முன்னாள் செனட்டர் டாக்டர் எஸ். இராமகிருஷ்ணன் கூறினார். கருத்தரங்கில் கீழ்க்கண்டவர்கள்…

காலிட் குறும்பாட்டம் ஆடுவதை நிறுத்தும் கடப்பாடு சுல்தானுக்கு உண்டு

சிலாங்கூர் சட்டமன்றத்தில் பிகேஆர் தலைவர் வான் அஸிசா வான் இஸ்மாயிலுக்கு பெரும்பான்மை இருக்கிறது என்பதை அவர் உறுதிப்படுத்தியப் பின்னரும் மந்திரி புசார் காலிட் இப்ராகிம் பதவி விலக மறுக்கும் விவகாரத்தில் சிலாங்கூர் சுல்தான் தலையிடுவதற்கான சட்டக் கடப்பாடு அவருக்கு இருக்கிறது என்று அரசமைப்புச் சட்ட வல்லுனர் அப்துல் அசிஸ்…

பிகேஆருக்கு எதிராக ரோஸ்சிடம் காலிட் புகார்

  தம்மை கட்சியிலிருந்து வெளியேற்றியதற்கு எதிராக பதவியை தற்காத்துக் கொள்ள போராடி வரும் சுயேட்சை சிலாங்கூர் மந்திரி புசார் காலிட் இப்ராகிம் சங்கங்கள் பதிவாளரிடம் (ரோஸ்) புகார் செய்துள்ளார். இப்புகார் போன் வழக்குரைஞர்கள் மூலம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பிகேஆரின் ஒழுங்கு நடவடிக்கை குழு மற்றும் மத்திய தலைமைத்துவ மன்றம்…

அநியாயம்: 12Aக்கள் பெற்ற மாணவி விரும்பிய துறையில் படிக்க இடமில்லை

  எஸ்டிபிஎம் மற்றும் எஸ்பிஎம் ஆகிய இரு தேர்வுகளிலும் 12Aக்கள் பெற்ற மாணவி இங் யி லிங் அவர் விரும்பிய மூன்று துறைகளில் ஏதாவது ஒன்றை படிப்பதற்கு ஒன்பது அரசு பல்கலைக்கழகங்களுக்கு மனு செய்திருந்தார். கிள்ளானை சேர்ந்த அம்மாணவி மருத்துவம், பல்மருத்துவம் அல்லது பார்மஸி படிக்க விரும்பினார். ஆனால்,…

பதவி விலகு: காலிட்டுக்கு பாஸ் உதவித் தலைவர் காட்டமான கோரிக்கை

ஞாயிற்றுக்கிழமை  பாஸ்  மத்திய  குழுக்  கூட்டம்  நடைபெறவுள்ள  நிலையில்,  அப்துல்  காலிட்  இப்ராகிம்  மந்திரி  புசார்  பதவியைக்  காலி  செய்ய  வேண்டும்  என்ற  கோரிக்கையுடன் அதன்  உதவித்  தலைவர் காட்டமான  அறிக்கை  ஒன்றை  விடுத்துள்ளார், “இன்னும்  எதற்குக்  காத்திருக்கிறீர்?”, என்று  வினவிய  ஹூசாம்  மூசா,  மந்திரி  புசாராக  தொடர்ந்து …

ரிம540 மில்லியன் பற்றி வேதமூர்த்தியிடம் கேளுங்கள்

அரசாங்கம்  இந்திய  சமூகத்துக்குக்  கொடுத்ததாக  சொல்லப்படும்  ரிம540 மில்லியன்  பற்றிக்  கேள்வி  எழுப்பும்    இந்திய  என்ஜிஓ-களுக்கு,  முன்னாள்  அமைச்சர்  பி.வேதமூர்த்தியிடம்  கேளுங்கள்,  அவர்  அதை  நன்கு  அறிந்திருப்பார்  என  மஇகா  சூடாக  பதிலளித்துள்ளது. “அது  பற்றிய  விவரம் 13வது  பொதுத்  தேர்தலுக்கு  முன்னும்  பின்னும்  தமிழ்   நாளேடுகளிலும்  இணையத்திலும் …

பாஸ் எக்ஸ்கோ-விலிருந்து வெளியேறினால் அம்னோ உள்ளே நுழைந்து விடலாம்

சிலாங்கூர் அம்னோவின் கைக்குச்  செல்வதைத்  தடுக்கவே  மந்திரி  புசார்  அப்துல்  காலிட்  இப்ராகிமின் ஆட்சிக்குழுவில்(எக்ஸ்கோ)  பாஸின்  நான்கு  எக்ஸ்கோ  உறுப்பினர்களும்  தொடர்ந்து  இருப்பதென  முடிவு  செய்தார்களாம். பாஸின்  நால்வரும் விலகினால்,  ஆட்சிக்குழுவுக்கு  அம்னோ  உறுப்பினர்கள்  நியமிக்கப்பட்டு  சிறுபான்மை  அரசு  அமைக்கப்படலாம்  என  அரண்மனை  குறிப்புக் காட்டியதாக   பக்கத்தான்  ரக்யாட் …