தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டமன்ற உறுப்பினருமான பங் மொக்தார் ராடின் இறந்ததைத் தொடர்ந்து, கினாபதாங்கன் நாடாளுமன்றத் தொகுதி மற்றும் லாமாக் மாநில சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல்களுக்கான முக்கிய தேதிகளை தீர்மானிக்க தேர்தல் ஆணையம் (EC) டிசம்பர் 16 அன்று கூடும். மக்களவை சபாநாயகர் ஜோஹாரி அப்துல் மற்றும் சபா…
சுவாராம்: குகனின் சாவுக்காக ஐஜிபியைப் பதவிநீக்கம் செய்ய வேண்டும்
முறையீட்டு நீதிமன்றம், ஏ.குகன் லாக்-அப்பில் இறந்ததற்கு இன்ஸ்பெக்டர்-ஜெனரல் அப் போலீஸ் காலிட் அபு பக்காரும் அவரின் அதிகாரிகளுமே பொறுப்பு என்ற தீர்ப்பை நிலைநிறுத்தி உள்ளதை அடுத்து பல தரப்புகள் போலீஸ் படைத் தலைவரைப் பணிநீக்கம் அல்லது பணி இடைநீக்கம் செய்ய வேண்டும் எனக் கோரியுள்ளன. மனித உரிமை போராட்ட …
காலிட் இப்ராகிம்: கட்சியிலிருந்து நீக்கியது சட்டவிரோதமானது, எம்பியாக தொடர்வேன்
பிகேஆர் கட்சியிலிருந்து தாம் நீக்கப்பட்டதில் குறைபாடுகள் இருப்பதோடு அது சட்டவிரோதமானது என்று கூறிய சிலாங்கூர் மாநில மந்திரி புசார், தாம் தொடர்ந்து மந்திரி புசாராக இருக்கப் போவதாக சூளுரைத்தார். "பிகேஆர் கட்சியின் உறுப்பியத்திலிருந்து என்னை நீக்கியதில் குறைபாடுகள் இருப்பதோடு அது சட்டவிரோதமானது", என்று காலிட் கூறினார். "இப்பிரச்சனை…
காலிட் இப்ராகிம் பிகேஆர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்
சிலாங்கூர் மந்திரி புசார் பதவியிலிருந்து விலக மறுத்ததற்காக பிகேஆர் அப்துல் காலிட் இப்ராகிம்மை கட்சியிலிருந்து நீக்கியுள்ளது. இம்முடிவு பக்கத்தானின் பங்காளி கட்சி பாஸுடனான உறவைப் பாதிக்கும் என்று கூறப்படுகிறது. கட்சியின் ஒழுங்குமுறை வாரியத்தின் தலைவர் டான் கீ குவோங் இந்த முடிவை அறிவித்தார். அவ்வாரியத்தின் கூட்டம் இன்று…
இலவச உணவளிக்கும் அமைப்புகளுக்கு தடை நீக்கப்பட்டது
தலைநகரில் இலவச உணவளிக்கும் அமைப்புகள் தடையின்றி அவற்றின் பணியைத் தொடரலாம். அவை சுத்தப்பத்தமாக செயல்பட வேண்டும். அந்த விசயத்தில் மாநராட்சி மன்றம் கண்டிப்பாக இருக்கும். இதற்குமுன், இலவச உணவளுக்கும் அமைப்புகள் ஆகஸ்ட் 16-வரை செயல்படுவதற்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டிருந்ததாகக் கூட்டரசு பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர் …
பெர்சே விருந்தில் ரிம500,000 திரண்டது
தேர்தல் சீரமைப்பு இயக்கமான பெர்சே 2.0 நேற்றிரவு நடத்திய நிதிதிரட்டும் விருந்தில் சுமார் ஆயிரம் பேர் கலந்துகொண்டனர். ரிம 500,000 நன்கொடையாகக் கிடைத்தது. விருந்துக்கு பெர்சே 2.0-இன் முன்னாள் ஒருங்கிணைப்பாளர்களான அம்பிகா ஸ்ரீநிவாசன், ஏ.சமட் சைட், இஸ்லாமிய மறுமலர்ச்சி முன்னணி இயக்குனர் அஹ்மட் பாரூக் மூசாம், நாடாளுமன்ற உறுப்பினர்கள் …
முகநூல் மூடப்படுமா?
முகநூலைத் தவறாகப் பயன்படுத்துவதாக புகார்கள் வந்திருப்பதை அடுத்து அச் சமூக வலைத்தளத்தை மூடுவது பற்றி அரசாங்கம் ஆராயும் என்கிறார் தொடர்பு, பல்லூடக அமைச்சர் அஹ்மட் சப்ரி சிக். அதன்மீது அமைச்சு பொதுமக்களின் கருத்தை அறிய விரும்புவதாக அவர் கூறினார். “மக்கள் முகநூலை மூட வேண்டும் என்று நினைத்தால் அதைப்…
பக்கத்தான் சிலாங்கூர் சட்டமன்ற உறுப்பினர்கள் உறுதிமொழியில் கையொப்பமிட வேண்டும்
சிலாங்கூர் சட்டமன்றத்தில் பக்கத்தான் கூட்டணிக்கு 43 சட்டமன்ற உறுப்பினர்கள் (மந்திரி புசார் காலிட் இப்ராகிம்மை சேர்க்காமல்) இருக்கின்றனர். மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம் மீது நம்பிக்கை இழந்து விட்டனர் என்ற உறுதிமொழி பத்திரத்தில் கையொப்பமிட வேண்டும் என்று பிகேஆர் அவர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. சிலாங்கூர் பிகேஆர்…
அன்வார்: இது ’98 அல்ல; காலிட் எனக்கு எதிரியும் அல்ல
பிகேஆர், சிலாங்கூர் மந்திரி புசாரை அநியாயமாக பதவிநீக்கம் செய்து ஒரு எதிரியை உருவாக்கிக் கொள்ளாது என அன்வார் இப்ராகிம் இன்று கூறினார். ஜனவரி 15-இலிருந்து தாம் மாற்றப்படலாம் என்பதை காலிட் அறிவார் என்று தெரிவித்த பிகேஆர் நடப்பில் தலைவர், பக்கத்தானின் ஒருமித்த கருத்துடன்தான் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றார்.…
மெக்டோனல்ட் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் மூன்றே ஆர்ப்பாட்டக்காரர்கள்
இஸ்ரேல்-காசா சண்டை தொடர்பில் கோலாலும்பூரில் இரண்டு மெக்டோனல்ட் கடைகளுக்கு வெளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்தில் மூன்றே மூன்று ஆர்ப்பாட்டக்காரர்கள்தான் கலந்து கொண்டனர். பங்சாருக்கு வந்திருந்த இருவர், “நூற்றுக்கணக்கானவர்” காசாவுக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்வதாக இருந்தது என்றும் ஆனால், போலீஸ் வந்ததால் அவர்கள் வரவில்லை என்றும் தெரிவித்தனர். “குறைந்தது …
முன்னாள் அம்னோ இளைஞர் தலைவர் ஓராங் அஸ்லிகளிடம் மன்னிப்பு கேட்டார்
ஸ்டர்ஜன் மீன் வளர்ப்புத் திட்டத்தை எதிர்க்கும் ஓராங் அஸ்லி சமூகத்தினரை ‘சகாய்’ என்று குறிப்பிட்டதற்காக முன்னாள் ஜெராண்டுட் அம்னோ இளைஞர் தலைவர் வான் ஸம்சுரி வான் ஹசினான் மன்னிப்பு கேட்டார். தெம்பெலிங் வட்டாரத்தில் விசயம் தெரியாதவர்களை அல்லது ஆணவக்காரர்களை சகாய் என்று குறிப்பிடுவதுண்டு என்றும் மற்றபடி ஒராங் அஸ்லிகளை …
உடல் பிடிப்பு நிலையங்களைத் தொடாதீர்: ஜயிஸுக்கு சுல்தான் உத்தரவு
சிலாங்கூர் இஸ்லாமிய விவகாரத் துறை(ஜயிஸ்)க்கு உடல்பிடிப்பு நிலையங்களில் அதிரடிச் சோதனை நடத்தும் எண்ணம் இருந்தால் அதைக் கைவிட வேண்டும் என சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா கூறினார். இன்று ஜயிஸ் பணியாளர்களிடையே உரையாற்றிய சுல்தான், ஜயிஸ் அதன் வேலை என்னவோ அதைத்தான் செய்ய வேண்டுமே தவிர ஊராட்சி …
காரணம்கோரும் கடிதத்துக்குப் பதிலைத் தாக்கல் செய்தார் காலிட்
சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம், பிகேஆர் ஒழுங்கு வாரியத்தின் காரணம்கோரும் கடிதத்துக்கு எழுத்துப்பூர்வமான பதிலை இன்று சமர்பித்தார். அதை காலிட்டின் அரசியல் செயலாளர் முஸ்தபா முகமட் தாலிப் நேரில் வந்து ஓப்படைத்ததாக ஒழுங்கு வாரியத் தலைவர் டான் கீ குவோங் கூறினார். டான் இன்னொன்றையும் தெரிவித்தார். இன்று …
நீதிமன்றம்: போலீஸ் காவலில் நிகழும் மரணங்களைப் பொறுத்துக்கொள்வதற்கில்லை
போலீஸ் காவலில் நிகழும் மரணங்கள்மீது நடவடிக்கை எடுக்காமல் விட்டுவிடக் கூடாது என்று முறையீட்டு நீதிமன்றம் கூறியுள்ளது. அந்த மரணங்கள்மீது சுயேச்சையான பொது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அது பரிந்துரைத்தது. ஐந்தாண்டுகளுக்குமுன் நிகழ்ந்த குகனின் இறப்புக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற உயர் நீதிமன்றத் தீர்ப்பை முறையீட்டு நீதிமன்றம் …
விசாரணைக்கு அழைக்கப்பட்டார் காலிட்
பல்வேறு விவகாரங்களுக்கு நேரில் வந்து பதிலளிக்க பிகேஆர் ஒழுங்கு வாரியம் சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிமைக் கூப்பிட்டுள்ளது. காலிட் நாளை பிற்பகல் 3 மணிக்கு பிகேஆர் தலைமையகத்துக்கு வர வேண்டும் என வாரியத் தலைவர் டான் கீ குவோங் கூறினார். வாரியத்தின் காரணம்-கோரும் கடிதத்துக்கு காலிட் …
யார் இந்த‘கெல்வின் இப்’? போலீசுக்கே தெரியவில்லை
‘கெல்வின் இப்’ பற்றித் தெரிந்தவர்கள் தகவல் தெரிவிக்க முன்வரவேஎண்டும் என போலீஸ் கேட்டுக்கொண்டிருக்கிறது. பள்ளிவாசலின் பாங்கொலி மிகுந்த சத்தமாக ஒலிக்கிறது என முகநூலில் பதிவிட்டதற்காக அம்னோ இளைஞர் பகுதி, மலாய் உரிமைக்காக போராடும் என்ஜிஓ-கள் ஆகியோரின் கண்டனங்களுக்கு இலக்காகி இருக்கும் ஓர் இளைஞர் அவர். இப் மீது விசாரணை …
ஆகஸ்ட் 10, காலிட்டின் தலைவிதியை அல்ல, பக்கத்தானின் தலைவிதியைத் தீர்மானிக்கும்…
மலேசியாகினியில் குறிப்பிடப்பட்டிருப்பதுபோல் ஆகஸ்ட் 10 சிலாங்கூர் மந்திரி புசார் காலிட் இப்ராகிமின் தலைவிதியைத் தீர்மானிக்கும் நாள் அல்ல என்று கூறும் லிம் கிட் சியாங், அது பக்கத்தானின் தலைவிதியைத் தீர்மானத்தை நாளாகும் என்கிறார். “அது, அரசியல் மாற்றத்துக்கான மலேசியர்களின் ஏக்கத்தை பக்கத்தானால் தொடர்ந்து கொண்டு செல்ல முடியுமா என்பதைத் …
பாஸின் ஸூரா மன்றம் காலிட்டை ஆதரிக்கிறது
பாஸ் கட்சியின் வலிமைவாய்ந்த ஸூரா மன்றம் சிலாங்கூர் மந்திரி புசாரை ஆதரிப்பதாக அறிவித்துள்ளது. அம்மன்றத்தின் தலைவர் நிக் அப்துல் அசீஸ் மாட்-டும் அதன் துணைத் தலைவர் ஹருன் டின்னும் விடுத்த கூட்டறிக்கையில், தனிப்பட்டவர்களின் நலனையோ கட்சி நலனையோ கருத்தில் கொள்ளாமல் பொது நலனை அடிப்படையாகக் கொண்டு அவரை ஆதரிக்கும் …
பொய்களை மீட்டுக்கொள்ளாவிட்டால் சட்ட நடவடிக்கை: பாஸ் எம்பிக்கு குவான் எங்…
பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங், தம் நிர்வாகத்துக்கு எதிராகக் கூறிய பொய்களை மீட்டுக்கொள்ள பாஸ் கட்சியின் தெமர்லோ எம்பி நஸ்ருடின் தந்தாவி-க்கு 24 மணி நேர அவகாசம் வழங்கி இருக்கிறார். தவறினால் நஸ்ருடினுக்கு எதிராக வழக்கு தொடுக்கப்படும் என்றவர் எச்சரித்தார். கின்ராரா- டமன்சாரா விரைவுச்சாலை(கிடெக்ஸ்) தொடர்பில் சிலாங்கூர் …
’98-இல் அன்வார் செய்ததை காலிட் இப்போது செய்கிறார்
1998-இல், டாக்டர் மகாதிர் முகம்மட் அப்போது துணைப் பிரதமராக இருந்த அன்வாரிடம் பதவி விலகுமாறு கூறினார். அவர் மறுத்தார். பிறகு அன்வார் பதவி நீக்கப்பட்டார். அதனால் ரிபோர்மாசி இயக்கம் மூண்டது, இப்போதைய எதிரணி பிறந்தது. அதே அரசியல் பாதையைதான் சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிமும் பின்பற்றுகிறார் …
மூத்த தலைவர்களால் தீர்வு காண முடியும்: பக்கத்தான் இளைஞர்கள் நம்பிக்கை
பக்கத்தான் ரக்யாட்டின் மூத்த தலைவர்கள் சிலாங்கூர் மந்திரி புசார் விவகாரத்தால் கட்சிக்குள் உருவாகியுள்ள நெருக்கடிக்குத் தீர்வுகாணும் ஆற்றல் தங்களுக்கு உண்டு என்பதைக் காண்பிக்க வேண்டும். அதற்கு அவர்கள் ஒன்றாக அமர்ந்து கூடிப் பேசுவது அவசியம் என அதன் இளைஞர் தலைவர்கள் இன்று ஓர் அறிக்கையில் கூறினர். அதன் பொருட்டு …
ஞாயிற்றுக்கிழமை காலிட்டின் தலைவிதி தீர்மானிக்கப்படும்
பாஸ், டிஏபி இரண்டுமே, அப்துல் காலிட் இப்ராகிம் சிலாங்கூர் மந்திரி புசராக தொடர்வதை ஆதரிப்பதா, வேண்டாமா என்பதை முடிவு செய்ய உயர்தலைமைத்துவக் கூட்டங்களை ஆகஸ்ட் 10-இல் நடத்துகின்றன. இவற்றில் பாஸ் மத்திய குழு என்ன முடிவெடிக்கப் போகிறது என்பதுதான் முக்கியம். டிஏபி, காலிட்டுக்குப் பதில் ஒரு பெண்மணி மந்திரி …
சண்டையிட்டுக்கொள்வதை நிறுத்தி ஒன்றுபடுங்கள், வான் அசிஸா
மாற்றத்தை விரும்பும் மக்களை நாம் பிரதிநிதிக்கிறோம் என்பதை மனதில் நிலைநிறுத்தி உறுதியாக இருங்கள் என்று பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அசிஸா வான் இஸ்மாயில் இன்று பக்கத்தான் ரக்யாட் உறுப்பினர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். சண்டையிட்டுக்கொள்வதை நிறுத்தி விட்டு மலேசிய மக்களின் விருப்பங்கள் பற்றி சிந்திப்பதற்காக ஒன்றுபடுங்கள் என்று…
அம்மண விழாவில் கலந்துகொண்ட 15 பேரை போலீஸ் அடையாளம் கண்டுள்ளது
பினாங்கு தெலோக் பாகாங் தேசிய வனப் பாதுகாபுப் பகுதியில் நிர்வாணக் கேளிக்கைகளில் கலந்துகொண்டதற்காக பிடிபட்ட 15பேரில் எழுவர் மலேசியர்கள் என பினாங்கு போலீஸ் தலைவர் அப்துல் ரஹிம் ஹனாபி கூறினார். அந்நிகழ்வு தொடர்பில் போலீசார் 10 வாக்குமூலங்களைப் பதிவு செய்திருப்பதாக ரஹிம் தெரிவித்தார் “பிடிபட்ட 15 பேரில் எழுவர்…


