கேமரன் மலை வெள்ளத்துக்கு அட்னான், பழனிவேல் இருவருமே பொறுப்பு

கேமரன்  மலை வெள்ளப் பெருக்குக்கும்  நிலச்  சரிவுக்கும், கேமரன்   மலை  எம்பி  ஜி.பழனிவேல், பகாங்  மந்திரி  புசார்  அட்னான்  யாக்கூப்  ஆகிய  இருவருமே  பொறுப்பாவர்  என்கிறார்  சிபூத்தே  எம்பி  தெரேசா  கொக். மாநில  அரசு  தேவையான  சட்ட  அமலாக்கத்தைச்  செய்யத்  தவறியதை  அட்னானே  ஒப்புக்கொண்டிருக்கிறார். எனவே, பழனிவேல்  மட்டுமே …

மசீச: பாஸ் ஹுடுட் கொண்டுவந்தால் டிஏபிக்கு சங்குதான்

எதிர்வரும்  அம்னோ  ஆண்டுக்  கூட்டத்தில்  சீனப்  பள்ளிகள்  பற்றிப்  பேசப்பட்டு  அதன் விளைவாக  அவை  மூடப்பட்டால்  மசீச-வின்   “கதையும்  முடிந்துபோகும்”  என்று  டிஏபி  எம்பி  இங் வெய்  ஏய்க்  கூறியதால் ஆத்திரமடைந்த  மசீச, கிளந்தானில்  பாஸ்  ஹுடுட்டைக்  கொண்டு  வந்தால்  சீனச் சமூகத்தினர்  டிஏபி-க்கு  “சங்கு ஊதி விடுவார்கள்” …

மகளின் மரணத்துக்கு மருத்துவமனையே காரணம்: பெற்றோர் குற்றச்சாட்டு

ஜி, தினாஷாவின்  பெற்றோர் சிலாங்கூரில்  தனியார்  மருத்துவமனையில்  அளிக்கப்படும்  சிகிச்சை  குறித்து  செய்தியாளர்  கூட்டமொன்றில்  குறைகூறிய  சில  நிமிடங்களுக்குப்  பின்னர்  அந்த  இரண்டாம் படிவ  மாணவி  இறந்துபோனார். ஞாயிற்றுக்கிழமை  இரவு  தினாஷாவுக்கு ,14,  காய்ச்சல்  அடித்ததால்  தாயார் ஐ. உதயபவானி  அவரை  மருத்துவமனைக்குக்  கொண்டு  சென்றார். இரவு  மணி …

ரிஸால்மன் பாலியல் தாக்குதல் நடத்திய குற்றத்தை மறுக்கிறார்

மலேசிய  தூதரகத்தின்  முன்னாள்  இராணுவ  அதிகாரியான முகம்மட்  ரிஸால்மான்  இஸ்மாயில்,   நியு  சிலாந்து  பெண்  ஒருவர்மீது பாலியல் தாக்குதல்  மேற்கொண்டதாக  சாட்டப்பட்ட  இரண்டு  குற்றச்சாட்டுகளையும்  மறுத்து  விசாரணை  கோரியுள்ளார். பாலியல்  வல்லுறவு கொள்ளும்  நோக்கத்திலும்  கொள்ளையிடும்  நோக்கத்திலும்  அவர்  அத்தாக்குதலில்  ஈடுப்பட்டாராம். இக்குற்றச்சாட்டு  தொடர்பில்  ஏற்கனவே  கைது  செய்யப்பட்டு…

ஜெசிஒய் கலகத்தை அரசாங்கம் மூடிமறைக்கிறதா?

ஜோகூரில், ஜெசிஒய்  எச்டிடி  டெக்னலோஜி  (ஜெசிஒய்) தொழிற்சாலையில்   அன்னிய தொழிலாளர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளை போலீசார் மூடிமறைக்க  முயல்வது  கண்டு  மலேசிய  தொழிசங்க காங்கிரஸ்(எம்டியுசி)  அதிர்ச்சி  அடைந்துள்ளது. ஜெசிஒய்  தொழிலாளர்களின்  தொழிலியல்  நடவடிக்கை  தொழிலாளர்களுக்கிடையிலான  தப்பெண்ணத்தால்  உண்டானது  என  உள்துறை  துணை  அமைச்சர்  வான்  ஜுனாய்டி  வான் ஜப்பார்  நாடாளுமன்றத்தில் …

போலீசை இழிவுபடுத்தியவருக்கு ரிம10,500 அபராதம்

போலீசாரை  இழிவுபடுத்தி  முகநூலில்  பதிவிட்ட  கார்  விற்பனையாளர்  ஒருவருக்கு மலாக்கா  மெஜிஸ்திரேட்  நீதிமன்றம் ரிம10,500 அபராதம்  விதித்தது. செப்டம்பர் 25-இல்,  கடமைச்  செய்துகொண்டிருந்த  இரு  போலீஸ்  அதிகாரிகளை  இழிவுபடுத்தி  முகநூலில் பதிவிட்டதை  டான்  கெங்  ஹொங்  ஒப்புக்கொண்டார். காலை  மணி  9.30க்கு  அவர்கள்  கடமையில் இருக்கும்  படத்தைப்  போட்டு…

பிஎன் பிரதிநிதிகள் டத்தோ பட்டம் பெற பணம் கொடுத்த சீன…

திரங்கானு, புக்கிட் பிசியில் இயங்கும் ஒரு சீன சுரங்க நிறுவனம் அச்சுரங்க வேலைகளைச் சுலபமாக்குவதற்காக பிஎன் அரசியல்வாதிகள் டத்தோ பட்டங்கள் பெறுவதற்கு பணம் கொடுத்ததை ஒப்புக்கொண்டுள்ளது. சிஎஎ ரிசோர்ஸ்சஸ் என்ற நிறுவனத்தில் தலைமை செயல்முறை அதிகாரி லி யாங் அந்நிறுவனத்துடன் மறைமுகமான தொடர்புடைய அரசியல்வாதிகள் ஒவ்வொருவருக்கும் சுமார் யுஸ்$100,000…

சுல்தான் கடிந்துகொண்டிருப்பதை வைத்து தம்மைக் குற்றம் சொல்வது தவறு என்கிறார்…

மஇகா  தலைவர்  ஜி.பழனிவேல் தம்  நாடாளுமன்றத்  தொகுதியில் ஏற்படும்  வெள்ளப் பெருக்குப்  பிரச்னைகளுக்குத் தீர்வுகாணத்  தாம்  எதுவும்  செய்யவில்லை  என்று  கூறப்படுவதை  மறுக்கிறார். நேற்று பகாங்  ஆட்சியாளர்  சுல்தான்  அஹ்மட்  ஷா  சுமத்திய  குற்றச்சாட்டுகளுக்கு  எதிர்வினையாக  அவர் இவ்வாறு  கூறினார். “அவர் என்ன  செய்தார்?  ஒன்றுமே  இல்லை......இதுபோன்ற  பேரிடர் …

அம்னோ பேராளர்கள் உணர்ச்சிவயப்பட வைக்கும் விவகாரங்களை விலக்கி வைக்க வேண்டும்

அம்னோ  ஆண்டுப்  பேரவையில்  கலந்துகொள்ளும்  பேராளர்கள்  இனம், சமயம்  தொடர்பிலான  எளிதில்  உணர்ச்சிவசப்படவைக்கும்  விவகாரங்களைப்  பெரிதுபடுத்திப்  பேசாதிருப்பது நல்லது  எனத்  தலைமைச்  செயலாளர்  தெங்கு  அட்னான்  தெங்கு  மன்சூர்  அறிவுறுத்தியுள்ளார். உறுப்பினர்களின்  தனிப்பட்ட  பிரச்னைகளையெல்லாம்  பேரவைக்குக்  கொண்டுவரக்  கூடாது. “தனிப்பட்ட  விவகாரங்கள்,  எளிதில்  உணர்ச்சிவசப்பட  வைக்கும்  இன  விவகாரங்கள்,…

பணி நீக்கம் செய்யப்பட்ட 97 தொழிலாளர்களை கேடிஎம்பி மீண்டும் வேலைக்கு…

  வேலைநிறுத்த மறியலில் ஈடுபட்டதற்காக பணி நீக்கம் செய்யப்பட்ட 97 தொழிலாளர்களை கேடிஎம்பி மீண்டும் வேலைக்கு எடுத்துக் கொண்டது. ஆனால், அவர்களுடமைய சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. இதில் காரணம் கோரும் கடிதம் பெற்றவர்களும் அடங்குவர் என்று கேடிஎம்பியின் தலைவர் நாவாவி அஹ்மட் கூறினார். ஆனால், அவர்கள் மீண்டும் தங்களுடைய…

வழக்குரைஞர் மன்றம் அரசுக்காக வழக்கு தொடுக்கும் அமைப்பல்ல

வழக்குரைஞர்  மன்றம்,  அது  அரசு  சார்பாக  குற்றவியல்  வழக்குகளை  நடத்தும்  அமைப்பல்ல  என்பதைத்  தெளிவுபடுத்தியுள்ளது. அந்த  அமைப்பு   பெர்காசா  தலைவர்  இப்ராகிம்  அலிக்கு  எதிராக  குற்றவழக்கு  தொடுக்கும்  அதிகாரத்தை  சட்டத்துறை தலைவர்(ஏஜி)  அப்துல்  கனி  பட்டேய்லிடம்  கேட்டுப்பெற  வேண்டும்  என  பிகேஆர்  எம்பி  கூய்  ஹிசியாவ்  லியாங்  கூறியிருப்பது…

சிபு எம்பி: மருந்துகளுக்கு ஜிஎஸ்டி வேண்டாமே

குறிப்பிட்ட  மருந்துகளுக்கு  மட்டுமல்லாமல்  எல்லா வகை  மருந்துகளுக்கும்   பொருள்,  சேவை  வரியிலிருந்து  விலக்களிக்கப்பட  வேண்டும்  என  டிஏபி-இன் சிபு  எம்பி  கேட்டுக்கொண்டிருக்கிறார். இப்போதுள்ள  முறைப்படி  வரி விதிக்கப்பட்ட  மருந்துகளையும் வரியற்ற மருந்துகளையும்  பிரித்துப் பார்ப்பது  மருந்தகங்களுக்கு  சிரமமாக  இருக்கும். “அரசாங்கம்  4வது  பதிப்பாக வெளிவந்துள்ள  தேசிய  அத்தியாவசியப்  பட்டியலில் …

மலேசிய இந்துக்கள் எதிர்நோக்கும் சவால்கள் பற்றி புதுடில்லி, உலக இந்து…

  அனைத்துலக இந்து மாநாடு இம்மாதம் நவம்பர் 21 இருந்து 23 வரை 3 நாட்களுக்கு புதுடில்லியில் நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் பல இந்து அமைச்சர்கள், மாநில ஆளுநர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளவிருக்கின்றனர். இந்த மநாட்டில் கலந்து கொள்ள மலேசியாவில் இருந்து முன்னாள் அமைச்சர் ச.…

வேள்பாரி: மஇகா தலைவர் இனியும் பதவியில் இருக்க தகுதி இல்லை

பகாங்  சுல்தானின்  கடுங்கோபத்துக்கு  ஆளான  மஇகா  தலைவர் ஜி.பழனிவேல் பதவி  விலகுவதே  நல்லது. இவ்வாறு  வலியுறுத்திய அக்கட்சியின்  வியூக  இயக்குனர்  வேள்பாரி, சுற்றுப்புற  அமைச்சராக  இருக்கும்  தகுதி  பழனிவேலுக்கு  இல்லை  என்றும்  கட்சித்  தலைவர்  என்ற  முறையிலும்  தவறுக்குமேல்  தவறு  செய்து  வந்திருக்கிறார்  என்றும்  குற்றச்சாட்டுகளை  அடுக்கினார். “பழனிவேல் …

மின் ஆலைத் திட்டங்கள் 1எம்டிபி-க்கு வழங்கப்பட்டிருப்பதால் மின்கட்டணம் உயரலாம்

அரசாங்கம்,  மின்  ஆலைத்  திட்டங்களை  1மலேசியா  மேம்பாட்டு  நிறுவனத்துக்குக்  கொடுத்திருப்பதால்  எதிர்காலத்தில்  மின்கட்டணம்  உயரப் போகிறது  என  பெட்டாலிங்  ஜெயா  டிஏபி  எம்பி  டோனி  புவா  எச்சரிக்கிறார். நெகிரி  செம்பிலான், கெடா,  மலாக்கா  ஆகிய  மாநிலங்களில்  மூன்று  மின் ஆலைகள்  அமைக்கும்  குத்தகை  1எம்டிபி-க்குக்  கொடுக்கப்பட்டுள்ளது. சாபாவில்  மேலும் …

காடிர்: அச்ச உணர்வுதான் அம்னோவின் கடைசி ஆயுதம்

அம்னோ,  மலாய்க்காரர்களைத்  தன்  பிடிக்குள் வைத்துக்கொள்ள  விரும்பினால்  அச்ச உணர்வுதான்  அதற்குப்  பயன்படக்கூடிய  கடைசி  ஆயுதமாகும். கடந்த  பொதுத்  தேர்தலில்  மலாய்க்காரர்கள்  அம்னோவுக்குத்  திரும்பி  வந்தார்களென்றால்  அதற்கான  முக்கிய  காரணங்களில்  சீனர்கள்மீது  அவர்களுக்குள்ள  பயமும்  ஒன்று  என்கிறார் ஏ.காடிர்  ஜாசின். “ஜோகூரில்  சீன, இந்திய  ஆதரவாளர்கள்  ஆயிரக்கணக்கில்  தேர்தல் …

இப்ராகிமுக்கு எதிராக வழக்கு தொடுக்கும் அதிகாரத்தை வழக்குரைஞர் மன்றத்துக்குக் கொடுங்கள்

பெர்காசா  தலைவர்  இப்ராகிம்  அலிக்கு  எதிராக  வழக்கு  தொடுக்கும் அதிகாரத்தைச்  சட்டத்துறைத் தலைவர்(ஏஜி) அப்துல்  கனி  பட்டேய்ல்   வழக்குரைஞர்  மன்றத்துக்கு அளிக்க  வேண்டும்  என  வலியுறுத்தப்பட்டுள்ளது. அவ்வழக்கை  நடத்த  எஜி “தயக்கம் காட்டுவது”போல்  தெரிவதாக  பிகேஆர்  எம்பி  கூய்  ஹிசியாவ்  லியோங்  கூறினார். “பொதுநலனைக்  கருத்திக்கொண்டு  இப்ராகிம்மீது  வழக்கு …

சரவாக்கில் மின்கட்டணம் குறைகிறது

சரவாக்கில்,  2015-இல்  வீடுகளுக்கான  மின்சாரக்  கட்டணம்  குறையும்  என  முதலமைச்சர்  அடினான்  சாதேம் கூறினார். இதனால்  குறைந்த  வருமானம்  பெறுவோர்  அதிக  நன்மை  அடைவர் என்றாரவர். ஏற்கனவே  அம்மாநிலத்தில்  70,000  பேர்   கூட்டரசு  அரசாங்கத்திடமிருந்து  மின்கட்டண உதவித்  தொகையாக  ரிம20 பெற்று  வருகிறார்கள்.  புதிய  திட்டம்  அமலுக்கு  வரும்போது …

ரயிஸ்: நஜிப்போல் ஜோடிக்கப்பட்ட படம் சமுதாயத்துக்கு எதிரான ஒரு குற்றமாகும்

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக் ஒரு  இந்து  குருக்கள்போல்  காட்சியளிக்கும்  படத்தைப்  பதிவிட்டவர்களை  முன்னாள்  அமைச்சர்  ரயிஸ்  யாத்திம்  கண்டித்தார். அச்செயல்,  “சமுதாயத்தின்  சிந்தனை  நோயுற்றிருப்பதைப்  பிரதிபலிக்கிறது”  என்றார். இதற்கெதிராக  பள்ளிகளிலும்  இதர  கல்விக் கழகங்களிலும்  அறநெறிகள்  கற்றுத்தரப்பட  வேண்டும்  என  முன்னாள்  தகவல், தொடர்பு  அமைச்சருமான  அவர் …

ரோன்95 விலை குறைவதாக அம்னோ பேரவையில் அறிவிப்பீர்

அடுத்த  வார  அம்னோ  பேரவையில்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  ரோன்95  மற்றும்  டீசல்  விலைகள்  குறைக்கப்படுவதாக  அறிவிக்க  வேண்டும்.  தவறினால்  டிசம்பர்  31-இல்  மாபெரும்  ஆர்ப்பாட்டத்தை  எதிர்நோக்க  வேண்டியிருக்கும். இவ்வாறு  எச்சரித்த  பாண்டான்  எம்பியும்  பிகேஆர்  தலைமைச்  செயலாளருமான  ரபிஸி  ரம்லி, அம்னோ  தலைவர்  அவ்வாறு  அறிவிப்பது…

எம்ஏசிசி அதிகாரிகளைத் தண்டிக்கச் சொல்லி தியோ குடும்பத்தினர் நஜிப்புக்குக் கோரிக்கை

தியோ  பெங்  ஹொக்-கின்  இறப்புக்குக்  காரணமானவர்களைப்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  தண்டிக்க  வேண்டும்  என்ற  கோரிக்கையுடன் டிஏபி  எம்பிகள்  உள்பட, 40-க்கு  மேற்பட்டவர்கள்  இன்று நாடாளுமன்றத்தின்  நுழைவாயிலில்   ஆர்ப்பாட்டம்  செய்தனர். அவர்கள், தியோவின்  இறப்பில் சம்பந்தப்பட்டவர்கள்  என்று  சொல்லப்படும்  மூன்று  அதிகாரிகளின் -சிலாங்கூர்  எம்ஏசிசி  விசாரணைப் பிரிவுத் …

ஐஜிபி: அமைச்சரின் கூற்றை மறுக்கிறேன்; சாபாவில் எல்லாம் பாதுகாப்பாகவே உள்ளது

சாபாவில்  நிலவரம்  பாதுகாப்பாக  இல்லை  என்று  சுற்றுலா, பண்பாட்டு  அமைச்சர்  முகம்மட்  நஸ்ரி  அசீஸ்  கூறியிருப்பதை  இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீஸ்  காலிட்  அபு  பக்கார்  ஒத்துக்கொள்ளவில்லை. அதற்கு  மாறாக, அடிக்கடி  கடத்தல்  சம்பவங்கள்  நிகழ்ந்த  நிலை  மாறி இப்போது  அம்மாநிலம்  பாதுகாப்பாக  உள்ளது, சுற்றுப்பயணிகளும் தொடர்ந்து  குவிகிறார்கள…

மலேசிய தினம் பற்றி அறியாதிருக்கிறதே: டிஏபி-யைச் சாடுகிறார் ஷப்ரி

டிஏபி-யும்  அதன்  எம்பிகளும்  மலேசிய  தினம்  என்றால்  என்ன,  சுதந்திர  தினம்  என்றால்  என்ன  என்பதை  “அறியாதவர்களாக”  இருக்கிறார்களே  என்று  தொடர்பு, பல்லூடக  அமைச்சர்  ஷப்ரி  சிக்,   அங்கலாய்த்துக்  கொள்கிறார். இன்று  நாடாளுமன்றத்தின்  கேள்வி  நேரத்தின்போது  சுதந்திர  தினத்தைவிட  தேசிய  நாளைச்  சிறப்பாகக்  கொண்டாட  வேண்டும்  என்று  லிம் …