கித்தா லவான்: சோகோவில் பேரணி நடத்துவது எங்களின் உரிமை

சனிக்கிழமை  கித்தா  லவான்  ஆர்ப்பாட்டத்துக்கு  ஏற்பாடு  செய்திருப்பவர்கள்  கோலாலும்பூரில்  ஒன்றுகூடுவது  தங்களின்  உரிமை  என்பதை  வலியுறுத்துகின்றனர். அத்தரப்பினர்,  சிறையில் உள்ள  எதிரணித்  தலைவர்  அன்வார்  இப்ராகிம்  விடுவிக்கப்பட  வேண்டும்,  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  பதவி  விலக  வேண்டும்  என்ற  கோரிக்கைகளை  முன்வைத்து  சோகோ விற்பனை  மையத்துக்கு  வெளியில் …

ரபிஸி: 1எம்டிபி கடன் சிக்கலால் எம்பேங்க் சிஇஓ பதவி விலகல்

எம்பேங்க், 1மலேசியா  மேம்பாட்டு  நிறுவன(1எம்டிபி)த்துக்கு   ரிம2 பில்லியன் கடன்  கொடுத்ததில்  முறைகேடுகள்  நிகழ்ந்திருப்பதை பேங்க்  நெகாரா  கண்டுபிடித்ததாகக் கூறப்படுகிறது  என  பிகேஆர் தலைமைச்  செயலாளர்  ரபிஸி  ரம்லி  கூறினார். இவ்விவகாரத்தால்  எம்பேங்  தலைமை  செயல் அதிகாரி  அசோக்   ராமமூர்த்தியும்  மேலும்  இரு  உயர்  அதிகாரிகளும்  அண்மையில் பதவி  விலக …

வழக்குரைஞ்ர்கள்: சட்டப்படி இறுதி முடிவு ஜாஹிட்டின் கைகளில்

அன்வார்  இப்ராகிமின்  வழக்குரைஞர்கள்,  அடுத்த  வாரம்  தொடங்கும்  நாடாளுமன்றக்  கூட்டத்தொடரில்  சிறையில்  உள்ள  எதிரணித்  தலைவர்  கலந்துகொள்வதை  அனுமதிக்கும்  விவகாரத்தில்  இறுதி  முடிவு  செய்யும்  அதிகாரம் உள்துறை  அமைச்சருக்குத்தான்  உண்டு  என்கிறார்கள். “சிறைச்  சட்டம்  1995, பிரிவு  31,  சிறைத்தண்டனை  பெற்ற  ஒருவரைத்  தகுந்த  காரணங்களுடன்  எந்தவோர்  இடத்துக்கும் …

அன்வார் நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்துகொள்ள முடியுமா, முடியாதா?

  அடுத்த வாரம் தொடங்கவிருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டிருக்கும் எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் பங்கேற்க அனுமதிக்கப்படுவாரா என்பதை மன்னிப்பு வாரியம், சட்டத்துறை தலைவர் (ஏஜி) மற்றும் நாடாளுமன்ற மக்களவைத் தலைவர் ஆகியோரே இறுதி முடிவு செய்வர் என்று கூறுகிறார் உள்துறை அமைச்சர் அஹமட் ஸாகிட் ஹமிடி. ஆனால்,…

பாஸ்: தீயவரான மகாதிர் கூட எதிரிகள் மீது வழக்கு தொடுத்ததில்லை

  மலேசிய வரலாற்றிலேயே தனது அரசியல் எதிரிகளுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடரப் போவதாக ஒரு பிரதமர் (மிரட்டி) இருப்பது இதுதான் முதல்தடவை ஹனிபா மைடின் கூறுகிறார். தற்போதைய பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அம்னோவின் பெரும் தலைவர்களை எல்லாம் மிஞ்சி விட்டார் என்றார் ஹனிபா. தீயவரான மகாதிர்,…

தமது மகனை ஆஸ்திரேலியா பாதுகாக்கும் என நம்புகிறார் சிருலின் தாயார்

  தனது நாட்டில் ஆபத்தை எதிர்நோக்கியிருக்கும் தமது மகனுக்கு ஆஸ்திரேலியா "முழு பாதுகாப்பு" அளிக்க வேண்டும் என்று மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் சிருல் அஸார் ஒமாரின் தாயார் ஆஸ்திரேலிய அரசாங்கத்தை வலியுறுத்தி கேட்டுக்கொண்டுள்ளார். "மலேசியாவுக்கு திரும்பிப் போவதை விட ஆஸ்திரேலியாவில் இருப்பது இன்னும் கூடுதலான (பாதுகாப்பு) ஆகும்", என்று…

ரோஸ்மா நல்லெண்ணத்துடன் சொன்னதை அவருக்கு எதிராக திரித்துக் கூறிவிட்டார்கள்

ரோஸ்மா  மன்சூர்  சிகை  அலங்காரக் கட்டணம்  உயர்ந்து   விட்டது  என்று    நல்லெண்ணத்துடன்  சொன்னார்  என  நிதி துணை  அமைச்சர்  அஹ்மட்  மஸ்லான்  கூறினார். “அவர்  சொன்னபோது  நானும்  அங்கிருந்தேன். வீட்டுக்கே  நேரில்  வந்து  சிகை  அலங்கரிப்பவர்களுக்கான சேவைக்கட்டணம்  ரிம1,200  என்று  சொன்னார். “அது உயர்வான  கட்டணம்  என்றுதான்  சொன்னார்.…

ஜனவரியிலிருந்து போலீஸ் காவலில் நான்கு இறப்புகள் நிகழ்ந்துள்ளன

பினாங்கில்  ஜனவரியிலிருந்து  போலீஸ்  காவலில் நான்கு இறப்புகள்  நிகழ்ந்துள்ளதைக்  கண்டு  மாநில  போலீஸ்  காவலில் நிகழும்  இறப்புமீதான  பணிக்குழு அதிர்ச்சி  அடைந்துள்ளது. இதன்படி  சராசரி  மாதம்  இரண்டு  இறப்புகள்  நிகழ்ந்துள்ளன. கடந்த  ஆண்டு  முழுவதும்  நிகழ்ந்துள்ள  இறப்புகளுடன்- ஏழு இறப்புகள்- ஒப்பிட்டால்  இந்த  எண்ணிக்கை  அதிகம்தான்  என பினாங்கு …

பழனிவேலும் மேலும் மூவரும் நீதிமன்ற மேலாய்வுக்கு மனுச் செய்தனர்

ம.இ.கா தேசியத் தலைவர் ஜி.பழனிவேல், உதவித்  தலைவர் எஸ்.சோதிநாதன்  ஆகியோரும்  இன்னும்  இருவரும்  சங்கங்களின் பதிவகம் (ஆர்ஒஎஸ்)  கட்சிக்கு  எதிராக  எடுத்துள்ள முடிவை  மேலாய்வு  செய்ய  வேண்டும்  என  நீதிமன்றத்தில்  மனுச்  செய்துள்ளனர். அம்மனுவில்  உள்துறை  அமைச்சர்  எதிர்வாதியாகக்  குறிப்பிடப்பட்டுள்ளார். உள்துறை  அமைச்சின்கீழ்தான் ஆர்ஓஎஸ்  செயல்படுகிறது. அவர்களின்  மனு …

ஆஸ்திரேலியா எம்எச்370 விமானத்தைத் தேடும் பணியை விரைவில் முடித்துக் கொள்ளலாம்

இந்தியப் பெருங்கடலில் காணாமல் போன MH370 விமானத்தைத் தேடும்  பணி விரைவில் முடிவு  வரலாம் எனத்  தெரிகிறது. தேடும்  பணியை  நிறுத்துவது பற்றி  ஆஸ்திரேலியா, சீனா,  மலேசியா  ஆகியவை விவாதித்து  வருவதாக  ஆஸ்திரேலிய  துணைப்  பிரதமர்  கூறினார். கடந்த ஆண்டு மார்ச் 8-ஆம் தேதி,  239 பயணிகளுடனும்  பணியாளர்களுடனும் …

பாஸ் தலைவரை பதவி விலகச் சொல்வது பெரிய பாவம் அல்ல

  கிளந்தான் பாஸ்சின் அடித்தள தலைவர்களில் ஒருவர் பாஸ் கட்சியின் தலைவரை பதவி விலகச் சொல்வது ஒரு பெரிய பாவம் அல்ல, ஏனென்றால் அது இந்த இஸ்மாலியக் கட்சியின் வரலாற்றில் புதிதான ஒன்றல்ல என்றார். இதனைக் கூறியவர் கோத்தாபாரு இளைஞர் பிரிவுத் தலைவர் ரோஸ்லி அல்லானி அப்துல் காதர்.…

சிருலின் தாயார் இன்றிரவு ஆஸ்திரேலியா புறப்படுகிறார்

  ஆஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அந்தான்துயா கொலையாளிகளில் ஒருவரான சிருல் அஸார் ஒமாரை சந்திக்க அவரின் தாயார் பியா அஹமட் இன்றிரவு ஆஸ்திரேலியாவுக்கு புறப்படுகிறார். 74 வயதான அவருடன் அவரது பிள்ளைகளில் ஒருவர், பாஸ் போகோக் சேனா நாடாளுமன்ற உறுப்பினர் மாபுஸ் ஒமார் மற்றும் ஒரு வழக்குரைஞர் ஆகியோர்…

ஆர்ஓஎஸ் மீதான கேலிச்சித்திரத்துக்காக ஸுனாரைக் கைது செய்ய போலீஸ் முயன்றது

கேலிச்சித்திர  ஓவியரான  ஸூனார்  மீண்டும்  போலீசில்  சிக்கிக்கொள்ளப்  பார்த்தார்.  ‘Ros in Kangkung Land’  என்ற  கேலிச்சித்திரத்துக்காக  போலீசார்  அவரைக்  கைது  செய்ய  முயன்றனர். இன்று  காலை,  பிரிக்பீல்ட்சில்  ஸுனாரின்  நூல்  வெளியீடு  நடைபெற்றுக்  கொண்டிருந்தபோது சுமார் 20 போலீசார்  அங்கு  வந்தனர். நூல் வெளியீட்டுக்கு  அனுமதி  பெறவில்லை …

‘மறைமுகக் கரங்கள்’ பாஸ் கட்சியின் முற்போக்குவாதிகளை ஒழித்துக்கட்ட முயல்கின்றன

ஜூன்  மாத  பாஸ்  கட்சித்  தேர்தல்  பழமைவாதிகளுக்கும்  சீர்திருத்தவாதிகளுக்குமிடையிலான  போட்டியாக  இருக்கும்  எனப்  பரவலாகக் கருதப்பட்டு வரும்  வேளையில்,  “மூன்றாவது  சக்தி”  ஒன்று  அம்னோவின்  ஆதரவுடன்  இடையில்  புகுந்து  குட்டையைக்  குழப்புவதாக  பாஸ்  தலைவர் ஒருவர்  கூறினார். பாஸில் துணைத்  தலைவர்  முகம்மட்  சாபு, மத்திய  செயல்குழு  உறுப்பினர் …

1எம்டிபி-மீது போலீசில் புகார் செய்த அம்னோ தலைவரின் பதவி பறிபோனது

1மலேசியா  மேம்பாட்டு நிறுவன(எம்டிபி)த்துக்கு  எதிராக  போலீசில்  புகார் செய்து  பரபரப்பூட்டிய  பினாங்கு  அம்னோ  தலைவர்  கைருடின்  அபு  ஹசான்  கட்சியிலிருந்து  நீக்கப்பட்டிருப்பதாகக்  கூறப்படுகிறது. “எனக்கு  நேரடியாக தெரிவிக்கப்படவில்லை. டிவி3-இல்  அச்செய்தி  அறிவிக்கப்பட்டதாக  நண்பர்கள் கூறினார்கள்”, என பத்து கவான்  அம்னோ  தொகுதித்  துணைத்  தலைவரான  கைருடின்  சொன்னார். டிசம்பரில்…

பிரதமர் நஜிப்புக்கு சீனர்களின் ஆதரவு 18 விழுக்காடுதான்

எதிர்பார்த்தவாறு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் சீனர் சமூகத்தின் அன்புக்குரியவராக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. மெர்தேக்கா மையம் நடத்திய ஒரு கருத்துக் கணிப்பில் வாக்களித்த சீன சமூகத்தினரில் 18 விழுக்காட்டினர் மட்டுமே அவரின் சேவையில் திருப்தி அடைந்திருப்பதாகத் தெரிவித்தனர். மொத்தத்தில், அனைத்து இனத்தவர்களில் 39 விழுக்காட்டினர் நாடு நஜிப்பின் தலைமைத்துவத்தில் நாடு…

பேரரசருடன் தே நீர் அருந்த அன்வாரை அனுமதியுங்கள், நூருல் இஸ்ஸா

  அடுத்த மாதம் நாடாளுமன்ற கூட்டத் தொடரை பேரரசர் திறந்து வைக்கையில் அவருடன் தே நீர் அருந்துவதற்கு எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் அனுமதிக்கப்பட வேண்டும் என்று அவரது மகளும் லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினருமான நூருல் இஸ்ஸா அதிகாரிகளை கேட்டுக் கொண்டார். தம்முடன் சேர்ந்து தே நீர்…

பினாங்கு எக்ஸ்கோமீது நிந்தனைச் சட்டம் பாய்கிறது

அன்வார்  இப்ராகிமின்  குதப்புணர்ச்சி  வழக்கில் கூட்டரசு  நீதிமன்றம் வழங்கிய  தீர்ப்புமீது  கருத்துரைத்த   பினாங்கு  ஆட்சிக்குழு  உறுப்பினர்  டாக்டர்  அரிப்  பஹார்டின் தேச  நிந்தனைச்  சட்டத்தின்கீழ்  விசாரிக்கப்பட்டிருக்கிறார். பிகேஆர் இளைஞர்  துணைத்  தலைவரான  அவரை  போலீசார் இன்று  புக்கிட்  அமான்  போலீஸ்  தலைமையகத்துக்கு  அழைத்து  வாக்குமூலம்  பதிவு  செய்தனர். அன்வா ருக்கு …

பிரதமர் ஆதரவுக் கூட்டத்துக்கும் அம்னோ உள்பூசலுக்கும் தொடர்பில்லை

அம்னோ  தொகுதித்  தலைவர்கள்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கைச் சந்தித்து  தங்களின்  ஆதரவைத்  தெரிவித்துக்  கொள்வார்கள்.  ஆனால், அச்சந்திப்புக்  கூட்டத்துக்கும்  அம்னோவில்  உள்பூசல்  என்று கூறப்படுவதற்கும்  தொடர்பில்லை. “அம்னோவில்  பிளவு  எதுவும்  இல்லை”, என  செராஸ்  அம்னோ  தொகுதித்  தலைவர்  சைட்  அலி  அல்ஹாப்ஷி  கூறினார். அம்னோவில்  நஜிப்புக்குச் …

சூதாட்ட மன்னன் புவா மொண்டிநெக்ரோ குடிமகனாம்

எவருக்கு  உள்துறை  அமைச்சர்  அஹ்மட்  ஜாஹிட்  ஹமிடி  உத்தரவாதச்  சான்று  அளித்தாரோ  அந்தச்  சூதாட்ட  மன்னன்  பால்  புவா,  இப்போது  மலேசிய  குடிமகனாக  இருக்க  மாட்டர் போலும். மொண்டிநெக்ரோவில்  தொழில்களைக்  கொண்டுள்ள  புவா  பற்றிக்  கிடைத்துள்ள  புதிய  சான்றுகள்  அவர்  அந்நாட்டுக்  குடியுரிமையையும்  பெற்றிருப்பதைக்  காண்பிக்கின்றன. மலேசிய  அரசமைப்பு …

பாஸ்: எந்தத் தேர்தலிலும் அம்னோ போட்டியிடக் கூடாது, அதுதான் மிகவும்…

செம்பாகா  இடைத்  தேர்தலில்  போட்டியிடுவதில்லை  என்ற  அம்னோவின்  முடிவை  வரவேற்ற  பாஸ்  தகவல்  தலைவர்  மாபுஸ்  ஒமார், அம்னோ  தேசிய  தேர்தல்  உள்பட  எல்லாத்  தேர்தல்களிலுமே  போட்டியிடாதிருந்தால்   இன்னும்  நல்லது  எனக்  கேலி  செய்தார். அம்னோ, முஸ்லிம்  சமூகம்  பிளவுபடுவதை விரும்பவில்லை  என்று கூறியதிலிருந்து  பிளவுக்கு  அது  காரணமாக …

குற்றச்செயல்கள் மீது போலீஸ் புகார்கள் செய்து மக்கள் சலித்து விட்டனர்,…

  போலீசார் மக்களின் நண்பர்கள், பாதுகாவலர்கள் என்பதை நிரூபிக்க வேண்டும் என்று பிகேஆர் உதவித் தலைவரும் ஸ்ரீ அண்டலாஸ் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் போலீசாரை கேட்டுக்கொண்டார். மக்கள் தாங்கள் எதிர்கொள்ளும் தொல்லைகள் பற்றி போலீஸ் புகார்கள் செய்து சலித்துப் போய்விட்டனர்…

வேள்பாரி: ‘மஇகா-வை ஒழித்துக்கட்டப் பார்க்கிறார் பழனிவேல்’

மஇகா  தலைவர்  ஜி.ப்ழனிவேல்,  பதவிக்காக  கட்சியையே உடைக்க  நினைக்கும்  ஒரு  சுயநலமி  என  எஸ்.வேள்பாரி  சாடியுள்ளார். புதிய தேர்தல்  நடத்த  வேண்டும்  என்ற சங்கப்  பதிவக (ஆர்ஓஎஸ்) உத்தரவுக்கு  எதிராக பழனிவேல்  முறையீடு  செய்ய  முடிவெடுத்ததற்கு  அவரது  பதவி  ஆசையே காரணம்  என  கெப்போங்  மஇகா  தொகுதித்  தலைவரான …