ஜாலான் பெர்டாம் பெர்டானா, கேபாலா படாஸில் உள்ள தனது கடையின் முன் ஜாலூர் ஜெமிலாங்கைத் தலைகீழாகத் தொங்கவிட்ட வன்பொருள் கடை உரிமையாளரைப் பற்றிய விசாரணை அறிக்கையைப் பினாங்கு துணை அரசு வழக்கறிஞர் (Penang deputy public prosecutor) மதிப்பாய்வு செய்கிறார். இந்த வழக்கு தொடர்பான விசாரணையைப் போலீசார் முடித்தபின்னர்,…
நீதிபதி: ஏஜிக்கு சட்ட விலக்கு உரிமை கிடையாது
சட்டத்துறை தலைவர் (ஏஜி) சட்ட நடவடிக்கைகளில் இருந்து விலக்கு உரிமை பெற்றவர் அல்லர் என்று கோலாலும்பூர் உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. குற்றப் புலன் விசாரணைத் துறை முன்னாள் இயக்குனர் ரம்லி யூசுப்பும் அவரின் வழக்குரைஞர் ரோஸ்லி டஹ்லானும் தொடுத்துள்ள வழக்குகளை இரத்துச் செய்ய வேண்டும் எனச் சட்டத்துறைத் …
சிறையில் கொல்லப்பட்ட கைதியின் தந்தைக்கு ரிம4 இலட்சம் இழப்பீடு வழங்க…
ஆறு ஆண்டுகளுக்கு முன்பு சுங்கை பூலோ சிறைச்சாலையில் சக கைதிகளால் கொல்லப்பட்ட 23 வயதான ஒரு கைதியின் தந்தை எம். கவுர் சந்தரத்திற்கு ரிம4 இலட்சத்திற்கு மேல் வழங்கும்படி உள்துறை அமைச்சு, சிறைசாலை இலாகா மற்றும் அரசாங்கம் ஆகியவற்றுக்கு கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. இவ்வாண்டு பெப்ரவரி…
ஷாபியை மீண்டும் வழக்காட அமர்த்தியிருப்பது பொதுப் பணத்தை விரயமாகும் செயல்
சங்கப் பதிவதிகாரிக்கு(ஆர்ஓஎஸ்) எதிராக டிஏபி தொடுத்துள்ள சிவில் வழக்கில் அரசுதரப்பில் வாதாட முகம்மட் ஷாபி அப்துல்லாவை நியமித்திருப்பதன் மூலமாக சட்டத்துறைத் தலைவர் (ஏஜி), பொதுப் பணத்தை விரயமாக்குகிறார். தனித் திறன்கள் தேவை என்ற நிலை இருக்குமானால் இப்படிப்பட்ட நியமனத்தைச் செய்வது நியாயமாக இருக்கலாம் என மூத்த வழக்குரைஞரும் …
துணைப் பிரதமர் அலுவலகம்: அது அதிகாரப்பூர்வப் பயணம், ‘கோல்ப்’ பயணமல்ல
துணைப் பிரதமர் முகைதின் யாசின் ஐந்து-நாள் ‘கோல்ப் விடுமுறை” மேற்கொண்டு டூபாய் சென்றார் என்று கூறப்படுவதை அவரது அலுவலகம் மறுத்துள்ளது. அவரது பயண நிரலில் அதிகாரத்துவப் பணிகள் நிறையவே உள்ளன என்று அது கூறிற்று. துணைப் பிரதமரின் முகநூல் பக்கத்தில் நீண்ட விளக்கம் அளித்துள்ள அது, டிஏபி எம்பிகள் …
சாபா கடத்தல்காரர்கள் ரிம36.4 மில்லியன் பிணைப்பணம் கோரினர்
கடந்த வாரம், சாபாவில் இரண்டு பெண்களைக் கடத்தியவர்கள் 500 மில்லியன் பெசோ (ரிம36.4 மில்லியன்) பிணைப்பணம் கேட்டிருப்பதாக உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி கூறினார். ஏப்ரல் 2-இல், சிங்காமாத்தா ஓய்வுத்தளத்தில் சீன நாட்டுச் சுற்றுலா பயணியான காவ் ஹுவா யானுடன் பிலிப்பினோ பணிப்பெண்ணான மார்சி தரவானும் கடத்தப்பட்டார். …
பிகேஆர் துணைத் தலைவர் பதவி: தியன் சுவா விலகிக் கொண்டார்
பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் பதவிக்கான போட்டியிலிருந்து தாம் விலகிக் கொள்வதாகவும், ஆனால் தமது உதவித் தலைவர் பதவியைத் தற்காத்துக் கொள்ளப் போவதாகவும் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தியன் சுவா அறிவித்துள்ளார். ஆனால், அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் கட்சியின் தேர்தலில் தாம் எந்த ஒரு தரப்பினருடனும் சார்ந்து…
நீரின் அளவு குறைவதால் நெருங்கும் நெருக்கடி
சிலாங்கூர் நீர் மேலாண்மை நிறுவனம் (லுவாஸ்), அணைக்கட்டுகளில், 1998-இல் இருந்ததைவிட நீரின் அளவு குறைந்து வருவதால் “நீர் நெருக்கடி உருவாகும் சாத்திய நிலையை” எதிர்கொள்ளத் தயாராகி வருவதாக த ஸ்டார் அறிவித்துள்ளது. அதன் தொடர்பில் தேசிய நீர்சேவை ஆணைய(ஸ்பான்)த்துடன் பேச்சு நடத்தி வருவதாகக் கூறிய லூவாஸ் இயக்குனர் முகம்மட் …
அஸ்மின் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்
பிகேஆர் துணைத் தலைவரும் கோம்பாக் எம்பியுமான அஸ்மின் அலி இன்று நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். நீதிபதிகளைக் கண்டிக்கக் கோரி தாம் கொண்டுவந்த தீர்மானம் மீது விவாதம் நடத்துவதைத் துரிதப்படுத்தாதது ஏன் என்பதற்கு விளக்கம் தேவை என்று விடாமல் கோரிக்கை எழுப்பிய அவரை அவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியா வெளியேற்றினார்.…
அமெரிக்கா: டியாகோ கார்சியா சதித் திட்டம் என்பதில் உண்மையில்லை
காணாமல்போன மலேசிய விமானம் இந்தியப் பெருங்கடல் கடற்படைத் தளமான டியாகோ கார்சியாவில் உள்ளதாகக் கூறப்படுவதை அமெரிக்கா மறுத்துள்ளது. “பிலிப் வூட்ஸ் என்னும் பயணி டியாகோ கார்சியாவிலிருந்து ஒரு குறுஞ்செய்தி அனுப்பினார் என்ற வதந்தியில் உண்மையில்லை.... “எம்எச்370 மாலைத் தீவு அல்லது டியாகோ கார்சியா-வுக்கு அருகில் பறந்ததற்கான அறிகுறிகள் எதுவும் …
ரபிஸிக்கும் மலேசியாகினிக்கும் எதிரான என்எப்சி வழக்கு விசாரணைக்குச் செல்கிறது
நேசனல் ஃபீட்லோட் கார்பரேஷன் சென். பெர்ஹாட்(என்எப்சி), பாண்டான் எம்பி ரபிஸி ரம்லிக்கு எதிராகவும் மலேசியாகினிக்கு எதிராகவும் கொண்டுவந்துள்ள அவதூறு வழக்கு கோலாலலும்பூர் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்குச் செல்லும். இன்று சம்பந்தப்பட்ட தரப்புகள் ஒரு சமரச உடன்பாட்டுக்கு வரத் தவறியதை அடுத்து இந்நிலை ஏற்பட்டுள்ளது. இனி, அவ்வழக்கு விசாரணைக்கான நாளை …
துணைப் பிரதமரின் 5-நாள் டூபாய் சுற்றுப்பயணம் தேவைதானா? எம்பிகள் கேட்கின்றனர்
டிஏபி எம்பிகள் இருவர், துணைப் பிரதமர் முகைதின் யாசின் பெரும் பொருள் செலவில் 5-நாள் டூபாய் சுற்றுலா மேற்கொண்டிருப்பது தேவைதானா என்று கேள்வி எழுப்பியுள்ளனர். முகைதின், பயணத்தில் வேலை செய்வதைவிடவும் பெரும்பகுதி நேரத்தை கோல்ப் திடலில் செலவிடுவதுபோலத் தெரிகிறது என்றவர்கள் குறிப்பிட்டனர். புக்கிட் மெர்தாஜாம் எம்பி ஸ்டீபன் சிம்மும், …
மதமாறிய தந்தை முன்னாள் மனைவியிடமிருந்து மகனைப் பறித்துச் சென்றார்
தம் இரு பிள்ளைகளைப் பராமரிக்கும் உரிமையை இழந்ததால் ஆத்திரமுற்ற இஸ்வான் அப்துல்லா, தம் ஆறு-வயது-மகனை முன்னாள் மனைவி தீபிகாவிடமிருந்து வலுக்கட்டாயமாகப் பறித்துச் சென்றார். ஜெலுபுவில் உள்ள தீபாவின் வீட்டிலிருந்து ஒரு காரில் தம் மகனை இஸ்வான் கவர்ந்து சென்றதாக மகளிர் உதவி அமைப்பின்(WAO) அதிகாரி சேலி வங்சாவிஜயா கூறினார். …
நாடாளுமன்றத்தில் குழந்தைகள் கூட்டம்
அரசாங்க அலுவலகங்களில் குழந்தைகள் பராமரிப்பு மையங்கள் இல்லாமலிருப்பதை வலியுறுத்த பக்காத்தான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐவர், தங்கள் குழந்தைகளை இன்று நாடாளுமன்றத்துக்குக் கொண்டு வந்தார்கள். இப்போது நாடாளுமன்றத்தில்கூட குழந்தை பராமரிப்பு மையம் இல்லை என டிஏபி-இன் கூலாய் எம்பி தியோ நை சிங் கூறினார். அவர் தம் இரண்டுமாத குழந்தையுடன் …
எம்எச்370: மேலும் மின் துடிப்பொலிகள் கிடைத்துள்ளன
வார இறுதியில் பதிவுசெய்து பின் காணாமல்போன மின் துடிப்பொலிகள் நேற்று மீண்டும் கிடைத்ததாக ஆஸ்திரேலிய ஒருங்கிணைப்பு மையம் கூறியுள்ளது. சனிக்கிழமை (ஏப்ரல் 5) கிடைத்த அந்தத் துடிப்பொலிகள் திங்கள்கிழமை கிடைக்கவில்லை. ஆனால், நேற்று அதே பகுதியில் மீண்டும் இரண்டு துடிப்பொலிகள் கிடைக்கப்பெற்றன. இவை, கடலுக்கடியில் கிடக்கும் விமானத்தின் கருப்புப் …
அரசாங்கத்தைக் குறைகூறுவதும் நாட்டைக் குறைகூறுவதும் ஒன்றல்ல
உங்கள் கருத்து ‘மலேசியாவைப் பற்றிக் கவலைப்படுகிறோம், அதனால்தான் அரசாங்கத்தைக் குறை கூறுகிறோம்’ ஷஹிடான்: மலேசியாவைப் பற்றி வெளிநாடுகளில் பொல்லாங்கு பேசுதல் ஒழுக்கக்கேடான செயலாகும் டான் கிம் கியோங்: நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கும் பிரதமர்துறை அமைச்சர் ஷஹிடான் காசிமின் பதிலுக்கும் என்ன தொடர்பு? வெளிநாடுகளில் தகவல்களைக் கசியவிடுவது உளவுசொல்லுதல் ஆகுமா …
தனிநபர்- கச்சேரியாக இருக்கக் கூடாது: சிலாங்கூர் எம்பி-க்கு அறிவுறுத்தல்
சிலாங்கூர் மந்திரி புசார், அப்துல் காலிட் இப்ராகிம், ‘அளவுக்கதிகமான அதிகாரத்தைத் தன்வசமே வைத்துக்கொண்டிருக்கிறாராம்’. சிலாங்கூர் சட்டமன்றத்தில் இவ்வாறு கூறிய இங் சுவி லிம்(டிஏபி- செகிஞ்சான்), இதைப் பார்க்கையில் காலிட் அவரது ஆட்சிக்குழுவை நம்புவதில்லை என்பதுபோல் தெரிகிறது என்றார். “அதிகாரம் ஒரே இடத்தில் குவிந்து கிடக்கிறது. அதிகமான அதிகாரம் மந்திரி …
அரசியல் காரணங்களுக்காக ஆசிரியர்கள் மாற்றப்படுகிறார்கள்?
கிளந்தான். பாச்சோக் மாவட்டத்தில் 80-க்கு மேற்பட்ட ஆசிரியர்கள் அரசியல் காரணத்துக்காக இடம் மாற்றப்பட்டிருக்கிறார்கள் அல்லது மாற்றப்படுவார்கள் என பக்காத்தான் ரக்யாட் எம்பிகள் கூறுகின்றனர். பிகேஆர் தொடர்புடைய என்ஜிஓ-வான அனாக் மூடா மலேசியா(எஸ்ஏஎம்எம்)-வுக்குக் கிடைத்த ஒரு ஆவணத்தைக் காண்பித்த அவர்கள், பக்காத்தான் ஆதரவாளர்கள் என்பதுதான் இடமாற்றதுக்கான காரணம் என்று கூறினர்.…
குறைந்த-விலை வீடுகளை வாடகைக்கு விடுவது குற்றம்
குறைந்த-விலை வீடுகளின் உரிமையாளர்கள் அவர்களின் வீடுகளை, வெளிநாட்டவர் உள்பட, மற்றவர்களுக்கு வாடகைக்கு விடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். தவறினால் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும். குறைந்த-விலை வீடுகளை வாடகைக்கு விட்டிருப்போருக்கு விரைவில் அறிவிக்கைகள் அனுப்பப்படும் என பினாங்கு அரசு அறிவித்துள்ளது. குறைந்த- விலை வீடுகளின் உரிமையாளர்கள் அவற்றில் குடியிருக்க வேண்டும், …
அதிர்ச்சிதரும் நிலையில் சிறுவர் விளையாட்டுப் பூங்காக்கள்
மக்கள்தொகை மிகுந்த மாநிலங்களில் ஒன்றான ஜோகூர், இப்போது சிறுவர்களுக்குப் பயன்படாத சிறுவர் விளையாட்டுப் பூங்காக்கள் நிரம்பிய மாநிலமாகவும் விளங்குகிறது. தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கை அவ்வாறு கூறுகிறது. ஜோகூர் பாரு தெங்காவிலும் மூவாரிலும் 39 சிறுவர் விளையாட்டுப் பூங்காக்களைப் பார்வையிட்டதாகவும் அவற்றில் 34 மோசமான நிலையில் இருப்பதைக் …
ஊழல்-தடுப்பு அதிகாரி இல்லாத ஒரு துறை போலீஸ் மட்டுமே
எதிர்ப்பு ஏற்பட்டதால்தான் போலீஸ் படையில் ஊழல்-தடுப்பு அதிகாரி நியமனம் செய்யப்படவில்லையா என்பதை பிரதமர்துறை அமைச்சர் பால் லவ் விளக்க வேண்டும் டிஏபி எம்பிகள் வலியுறுத்தியுள்ளனர். நாடாளுமன்றத்தில் எழுத்து வடிவில் வழங்கிய பதில் ஒன்றில், மலேசிய ஊழல்-தடுப்பு ஆணைய அதிகாரிகள், போலீஸ் படை தவிர்த்து, பல்வேறு அரசுதுறைகளுக்கும் அனுப்பப்பட்டிருப்பதாக லவ் …
வெளிநாடுகளில் மலேசியாவைப் பற்றிப் பொல்லாங்கு பேசுதல் ஒழுக்கக்கேடான செயலாகும்
ஒருவர் தன் நாட்டையும் அரசாங்கத்தையும் மதிக்க வேண்டும் என்பதால் மலேசியாவை வெளிநாடுகளில் குறைகூறுவது “ஒழுக்கக்கேடான” செயலாகும். நாடாளுமன்றத்தில், கோத்தா திங்கி பிஎன் எம்பி நூர் எஷானுடின் முகம்மட் ஹருனின் கேள்விக்குப் பதிலளித்தபோது பிரதமர் துறை அமைச்சர் ஷகிடான் காசிம் இவ்வாறு கூறினார். வெளிநாடுகளில் மலேசியாவை இழிவுபடுத்துவது “ஆகாயத்தை நோக்கி …
பெர்காசா: பாலிங் ஆர்ப்பாட்டத்துக்கு அன்வார் தலைமை தாங்கவில்லை
1974-இல், அன்வார் இப்ராகிம்தான் கோலாலும்பூரில் பாலிங் ஆர்ப்பாட்டத்தை முன்னின்று நடத்தியவர் என்று கூறப்படுவதை பெர்காசா தலைவர் இப்ராகிம் அலி மறுத்துள்ளார். பாலிங் இரப்பர் தோட்டக்காரர்களுக்காக பல்கலைக்கழக மாணவர்கள் சிலாங்கூர் கிளப் திடலில் (இப்போது டாட்டாரான் மெர்டேகா) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது இரண்டாவது நாளில்தான் அன்வார் அங்கு தலை காட்டினார் என்றாரவர். “மணிலாவிலிருந்து …
எம்எச்370: அடுத்த கட்டமாக கடலடியில் தேடும்பணி தொடரும்
காணாமல்போன மலேசிய விமானத்தைக் கண்டுபிடிக்க கடல்பரப்பில் தடயம் எதுவும் கிடைக்கவில்லை என்பதால் அடுத்து ரோபோட் வாகனமொன்றைக் கடலுக்கடியில் அனுப்பிக் கடலடியில் தேடும்பணி தொடரும் எனத் தெரிகிறது. தேடும்பணியை ஒருங்கிணைக்கும் ஆஸ்திரேலிய நிறுவனத்தின் தலைவரான அங்குஸ் ஹுஸ்டன், ஆஸ்திரேலிய கப்பலான ஓஷன் ஷீல்ட் புளுஃவின் -21 என்னும் தானியங்கி வாகனம் …