லீ குவான் இயு இன்னமும் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்

சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் இயூ  மருத்துவமனையில் தீவிர  சிகிச்சை  பெற்று  வருவதாக  அந்நாட்டுப்  பிரதமர்  அலுவலகம்  ஓர்  அறிக்கையில்  கூறியது. அவர் இறந்துவிட்டதாக சமூக ஊடகங்களில்  தகவல்கள்  பரவியதை  அடுத்து  இந்த  அறிக்கை  வெளியிடப்பட்டது. லீ,91, நிமோனியா காய்ச்சலால் கடந்த பிப்ரவரி 5 -ஆம் தேதி…

‘ஹாடி-யைக் கவிழ்க்கும் சதி’மீது விசாரணை செய்வீர்: கிள்ளான் பாஸ் கோரிக்கை

குவாந்தான்  பாஸ் இளைஞர்  பகுதி  அனுப்பிவைத்த  ஒரு  மகஜர்மீது  கட்சி  ஒழுங்குக்  குழு  விசாரணை நடத்த  வேண்டும்  என  கிள்ளான்  பாஸ்  அதிகாரப்பூர்வமாகக்  கேட்டுக்கொண்டிருக்கிறது. குவாந்தான்  பாஸ்  இளைஞர்  தலைவர்  நூர்ஸஸிலாவாட்லி  இப்ராகிம்  பிப்ரவரி 8-இல் அனுப்பிவைத்த  மகஜர், கட்சித்  தலைவர்கள்  சிலர்  அதிகாரத்தைத்  தவறாக பயன்படுத்துவதாகக்  குற்றஞ்சாட்டி…

சிபிடி குற்றச்சாட்டை இரத்துச் செய்யும் என்எப்சி தலைவரின் முயற்சிக்கு மீண்டும்…

தேசிய  பீட்லோட் கார்ப்பரேஷன் (என்எப்சி) தலைவர் முகம்மட்  சாலே  இஸ்மாயில் தம்மீது  சுமத்தப்பட்ட  நம்பிக்கை  மோசடிக்  குற்றச்சாட்டைத்  தள்ளுபடி  செய்யக் கோரி  தாக்கல்  செய்த  மனுவைக்  கோலாலும்பூர்  உயர்  நீதிமன்றம்  இன்று  தள்ளுபடி  செய்தது. இது  அவரது  இரண்டாவது  முயற்சியாகும். என்எப்சி  திட்டத்துக்கு  அரசாங்கம்  ஒதுக்கிய  பணத்தைத்  தவறாக …

முஸ்லிம் ஒற்றுமை என்று அம்னோ கூறுவது ஒரு கேலிக்கூத்து

  முஸ்லிம் ஒற்றுமையை பாதுகாப்பதற்காக செம்பாக்கா இடைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்ற அம்னோவின் கூற்று ஒரு கேலிக்கூத்தாகும் என்று பாஸ் உதவித் தலைவர் ஹுசாம் மூசா கூறுகிறார். ஒரே மலேசிய மேம்பாட்டு நிறுவனம் (1எம்டிபி) சார்ந்த பிரச்சனை மற்றும் மங்கோலிய பெண் அல்தான்துயா கொலை ஆகிய விவகாரங்களில்…

மார்ச் 7 ஆர்ப்பாட்டம் பிரதமர் பதவி விலக வேண்டும் என்ற…

அன்வார்  இப்ராகிம்  சிறையிடப்பட்டதைக்  கண்டிக்க  மார்ச்  7ஆம்  தேதி நடத்தப்படும்  ஆர்ப்பாட்டம் பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்-கின்  பதவி விலகலுக்கும்  கோரிக்கை  விடுக்கும். இதனைத்  தெரிவித்த  ஏற்பாட்டாளர்கள், பிரதமர்  பதவி  விலக  வேண்டும்  என்பதற்கு  அல்டான்துன்யா  ஷரிபு-வின்  கொலை,  முன்னாள்  போலீஸ்  அதிரடிப்  பிரிவு  வீரர்  சிருல்  அஸ்கார் …

அடுத்து, வன்புணர்ச்சியில் ஈடுபடுவோர் அரச மன்னிப்பு கோருவார்கள், அப்படித்தானே

குதப்புணர்ச்சி  வழக்கில்  ஐந்தாண்டுச்  சிறைத்தண்டனை  வ்திக்கப்பட்ட அன்வார் இப்ராகிமுக்கு  அரச மன்னிப்பு  நாடுவது   மலேசிய  நீதிமுறையைக் களங்கப்படுத்தியுள்ளதாம். அம்னோ  தலைவர் ஒருவர்  கூறுகிறார். “குதப்புணர்ச்சியில்  ஈடுபட்டவர்  எப்படி அரச  மன்னிப்பு  கோரலாம்?”, எனக் கேள்வி  எழுப்பியுள்ளார்  புவாட் ஜார்காஸி, “அவருக்கு  மன்னிப்பு  வழங்கப்பட்டால்  அது  தவறான  முன்மாதிரி  ஆகிவிடும்.…

தியாக்குருடீன் துன்புறுத்தப்பட்ட விவகாரம்: பிடி கல்வி இலாகா விசாரிக்கிறது

  முஸ்லிம் என்ற அடையாள அட்டையைக் கொண்ட தியாக்குருடீன் என்ற ஓர் இரண்டாம் பார மாணவனை அவனது இந்து தந்தைக்கு எதிராக போலீஸ் புகார் செய்யுமாறு துன்புறுத்தப்பட்ட விவகாரம் குறித்து போர்டிக்சன் மாவட்ட கல்வி இலாகா விசாரனையை மேற்கொண்டுள்ளது. "நாங்கள் பள்ளிக்கூடத்திற்கு சென்று விட்டோம். நாங்கள் இப்போது இவ்விவகாரம்…

ஐஜிபி-க்கு அராஜகவாதிகள் கொலை மிரட்டல்

“அனாக்  மலேசியா  எண்டி டெமொக்ரசி” என்று  தன்னை  அழைத்துக்கொள்ளும் ஒரு  தரப்பு  போலீஸ்  படைத்  தலைவர் (ஐஜிபி) காலிட்  அபு  பக்காரைக்  கொல்லபோவதாக  மிரட்டியுள்ளது. யு-டியுப்பில்  முகமூடி  அணிந்த  மூவர்  அம்மிரட்டலை  விடுத்தனர். அதில்  பேசிய  ஒருவர், அமெரிக்கா,  ரஷ்யா,  சீனா ஆகியவை  வளர்ந்த  நாடுகளாக  மற்றவர்களால்  மதிக்கப்படும் …

ரோஸ்மாவின் தலை அலங்காரத்தில் அக்கறை காட்டும் அமட் மஸ்லானுக்குக் கண்டனம்

மக்களுக்குக் கவலைதரும்  பிரச்னைகளில்  கவனம்  செலுத்தாமல்  ரோஸ்மாவின் சிகை  அலங்காரத்தில்  அக்கறை  காட்டும்  நிதி துணை  அமைச்சர்  அஹ்மட்  மஸ்லானை பிகேஆர்  எம்பி  நுருல்  இஸ்ஸா  அன்வார்  சாடினார். பிரதமரின்  துணைவியார்  ரோஸ்மா  மன்சூர்,  வீடு  வந்து  தலை அலங்காரம்  செய்து  விடும்  சேவைக்கான கட்டணம் ரிம1,200 ஆகக் …

அரச மன்னிப்பு கோருகிறது அன்வாரின் குடும்பம்

  குதப்புணர்ச்சி வழக்கு 2 இல் ஐந்தாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள அன்வார் இப்ராகிம் அரச மன்னிப்பு கோருவதற்கான கால அவகாசம் காலாவதியாவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக அவரது குடும்பத்தினர் அவருக்கு அரச மன்னிப்பு கோரும் விண்னப்பத்தை அரண்மனையில் சார்வு செய்தனர். "அரச மன்னிப்புக்கான முறையீடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றங்கள் குற்றவாளி என தீர்ப்பளித்திருக்கலாம்,…

அன்வாருக்கு துணைப் பிரதமர் பதவி: தமக்கு எதுவும் தெரியாது என்கிறார்…

  எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு முன்பு துணைப் பிரதமர் பதவி வழங்க நஜிப் முன்வந்ததாக கூறப்படுவது பற்றி தமக்கு எதுவும் தெரியாது என்று துணைப் பிரதமர் முகைதின் யாசின் கூறினார். "அந்த பிரச்சனை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அதைப் பற்றி நாளிதழ்களில் மட்டுமே படித்தேன். "எனினும்,…

அன்வார் அரச மன்னிப்பு கோருவாரா?

குதப்புணர்ச்சி வழக்கு 2 இல் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு ஐந்தாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு சுங்கை பூலோ சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் தண்டனையிலிருந்து விடுபடவும் தமது பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற இருக்கையை வைத்துக்கொள்ளவும் பேரரசரிடம் அரச மன்னிப்பு கோருவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அன்வார்…

ரோஸ்சுக்கு எதிராக மஇகா வழக்கு தொடர்ந்துள்ளது

  மஇகாவுக்கு அனுப்பப்பட்டுள்ள உத்தரவுகளை சங்கங்களின் பதிவகம் (ரோஸ்) திரும்பப்பெற வேண்டும் எனக் கோரும் வழக்கு நேற்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கை மஇகாவின் மத்திய செயற்குழுவின் உறுப்பினரும் அதன் வியூக இயக்குனருமான ராமலிங்கம் சங்கங்களின் பதிவகம் மற்றும் அதன் தலைமை இயக்குனர் முகம்மட் ராஸின் அப்துல்லா ஆகியோருக்கு…

முஸ்லிம் சிறுவன்: தந்தைக்கு எதிராக போலீஸ் புகார் செய்ய கட்டாயப்படுத்தப்…

  ஒரு 14 வயது பள்ளி மாணவனை அவனது தந்தைக்கு எதிராகப் போலீஸ் புகார் செய்யும்படி அவனை பரோயில் ஓர் இஸ்லாமிய சமய மையத்தின் அறை ஒன்றில் மூன்று மணி நேரத்திற்கு மேலாக அடைத்து வைத்திருந்ததாக அச்சிறுவன் கூறினான். அச்சிறுவனின் இரு ஆசிரியர்கள் அவனின் இந்து தந்தை அவனை…

அம்னோ தலைவர்: ஷாபியின் பிரச்சாரம் எதிர்விளைவை ஏற்படுத்தி விட்டது

  அன்வார் இப்ராகிம் குதப்புணர்ச்சி வழக்கு 2 ஐ உச்சநீதிமன்றத்தில் சட்டத்துறை அலுவலகத்தை பிரதிநிதித்து நடத்திய அம்னோ சார்புடைய வழக்குரைஞர் முகமட் ஷாபி அப்துல்லா மேற்கொண்ட பிரச்சாரங்கள் எதிர்விளைவை ஏற்படுத்தியுள்ளது என்று ஒரு மூத்த அம்னோ தலைவர் ஒப்புக்கொண்ட்டுள்ளார். பெயரை வெளியிட விரும்பாத அத்தலைவர் அப்பிரச்சாரத்திற்கு அம்னோ அனுமதி…

சிருல்: தற்போதைக்கு நான் ஒன்றும் சொல்வதற்கில்லை

  இன்று நடைபெறும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சிருல் அஸார் ஒமார் மற்றும் பாஸ் தகவல் பிரிவு தலைவர் மாபுஸ் ஒமாருக்கு இடையிலான டெலியுரையாடல் சிருல் தாம் தற்போதைக்கு ஒன்றும் சொல்வதற்கில்லை என்றதால் பெரும் ஏமாற்றத்தில் முடிந்தது. "நான் ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் பாதுகாப்பில் இருப்பதால்…

மாபுஸ்: சிருலுடனான டெலியுரையாடல் நடக்குமா, நடக்காதா?

  ஆஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சிருல் அஸார் ஒமாருடனான டெலியுரையாடல் நடைபெறுமா என்பது நாளைக்குத்தான் தெரியும் என்று பாஸ் கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் மாபுஸ் ஒமார் கூறினார். ஆஸ்திரேலிய குடிநுழைவுத்துறை முன்னாள் போலீஸ் படை கொமாண்டோவான சிருல் பேட்டி அளிப்பதற்கு அனுமதிக்காது என்று அண்மையச் செய்தி கூறுகிறது…

டிஎபி எம்பி எச்சரிக்கை: ஹூடுட் மசோதா தாக்கல் செய்தால், பாஸ்…

எதிர்வரும் மார்ச் 18 இல் கிளந்தான் பாஸ் மாநில அரசு ஹூடுட் சட்ட மசோதாவை தாக்கல் செய்யுமானால் அக்கட்சி பாக்கத்தானிலிருந்து விலகிக்கொண்டு விட்டதாக கருத்தப்படும் என்று டிஎபி நாடாளுமன்ற உறுப்பினர் கோபிந்த் சிங் டியோ எச்சரித்தார். "பாஸ் ஹூடுட் மசோதா தாக்கல் செய்வதை மேற்கொண்டால் அது பாக்கத்தானின் பொதுவான…

நமது பல்கலைக்கழகங்கள் உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களுக்குச் சமமானவையா?

  மலேசியாவின் உயர்க்கல்வி இப்போது மேம்பாடடைந்துள்ள நாடுகளுக்கு, பிரிட்டன், ஜெர்மனி மற்றும் ஆஸ்திரேலியா உட்பட, சமமானதாக இருக்கிறது. இதனை இந்நாட்டின் உயர்நிலைக் கல்வி நிலையங்களில் 135,000 வெளிநாட்டு மாணவர்கள், மொத்த மாணவர்களில் 10 விழுக்காட்டினர், கல்வி பயில்வது உறுதிப்படுத்துகிறது என்று இரண்டாவது கல்வி அமைச்சர் இட்ரீஸ் ஜூசோ கூறியதாக…

கிளந்தான் ஹுடுட் சட்ட மசோதா மார்ச் 18 இல் தாக்கல்…

  கிளந்தான் மாநில சட்டமன்றத்தின் அடுத்த கூட்டத் தொடரில் கிளந்தான் மாநில அரசு அதன் ஹூடுட் சட்ட திருத்த மசோதாவை மார்ச் 18 இல் தாக்கல் செய்கிறது. துணை மந்திரி புசார் முகமட் அமர் நிக் அப்துல்லா இதனை நேற்று உள்ளூர் சீன மன்றங்களின் தலைவர்கள் அளித்த சீன…

சிருல் அனைத்தையும் கூற ஆஸ்திரேலியா அனுமதிக்கக்கூடும்

  அல்தான்துயா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் சிருல் அஸார் ஒமார் அது பற்றிய அனைத்தையும் தொலைக்காட்சி நேர்காணலில் கூற அனுமதிக்கக் கூடிய சாத்தியத்தை ஆஸ்திரேய குடிநுழைவுத்துறை நிராகரிக்கவில்லை. ஆனால், அதற்கான முறையான நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்று கூறியது. "பொதுவாக நேர்காணல்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள இடத்தின்…

அருட்செல்வம் விடுவிக்கப்பட்டார்

  நேற்றிரவு கைது செய்யப்பட்ட மலேசிய சோசலிசக் கட்சியின் தலைமைச் செயலாளர் எஸ். அருட்செல்வம் இன்று பின்னேரத்தில் விடுவிக்கப்பட்டார். போலீசார் அவரை மேற்கொண்டு தடுத்து வைக்க முன்வைத்த கோரிக்கையை இன்று காலையில் மஜிஸ்திரேட் நீதிமன்றம் நிராகரித்து விட்டது. போலீசார் அவரை விசாரிக்க இன்று மாலை மணி 7.00 வரையில்…

சிருல் கூற்றைத் தள்ளுபடி செய்த ஐஜிபி-க்கு மாபூஸ் கண்டனம்

பாஸ்  தகவல் தலைவர்  மாபூஸ், அல்டான்துன்யாவை  கொலை  செய்ததாகக்  குற்றஞ்சாட்டப்பட்டுள்ள  சிருல், மலேசியாகினிக்குத்  தொலைபேசிவழி  வழங்கிய  நேர்காணலில்  தனக்கிடப்பட்ட  உத்தரவுப்படி  நடந்துகொண்டதாகக்  கூறியிருப்பதைத்  தள்ளுபடி  செய்த  இன்ஸ்பெக்டர்- ஜெனரல்  அப்  போலீஸ்  காலிட்  அபு  பக்காரைக்  கடிந்து  கொண்டிருக்கிறார். “சிருல்  அப்படி  ஒரு  குற்றச்சாட்டை  வெளியிட்டிருக்கும்போது அவர்  அப்படி…