இடைத் தேர்தல்: போலீஸ் தலையிட்டு கட்சி ஆதரவாளர்களை அமைதிப்படுத்தினர்

பெர்மாத்தாங்  பாவ்  இன்று  பிற்பகல் ஒரு  மணிவரை  43 விழுக்காட்டு  வாக்காளர்கள்  வாக்களித்திருப்பதாக  தேர்தல்  ஆணையம்  கூறிற்று. இதனிடையே, எஸ்கே  தானா லியாட்டில்  உரத்த  குரலில்  சச்சரவிட்டுக்  கொண்டிருந்த  பிஎன்  மற்றும்  பிகேஆர்  ஆதரவாளர்களைக் கட்டுப்படுத்த  எட்டு சரக்குந்துகளில்  போலீசார்  வந்திறங்கினர். கலகத்தடுப்பு  உடைகளுடனும்  கருவிகளுடனும்  வந்த  அவர்கள் …

அம்னோ வாகனத்துக்கு தீவைக்கும் முயற்சி

பெர்மாத்தாங் பாவ்  கம்போங்  கப்பாளா  புக்கிட்டில் அம்னோவின்  இரண்டு  வாகனங்களைத்  தீவைத்துக்  கொளுத்தும்  முயற்சி  மேற்கொள்ளப்பட்டதாக  அம்னோ  இளைஞர்கள்  கூறிக்  கொண்டனர். “கூட்டரசுப்  பிரதேசத்தின் ‘Skuad Sayang(அன்புப் படை)’  வாகனங்கள்  இரண்டுக்கு  அதிகாலை  மணி  4.30க்குத்  தீவைக்கும்  முயற்சி  நடந்துள்ளது”, என இளைஞர்  பிரிவு  டிவிட்டரில்  கூறியது. தீவைப்பு …

வாக்களிப்பு மையங்களில் கைகலப்பு

பெர்மாத்தாங் பாவ் இடைத்  தேர்தல்  தானா  லியா  வாக்களிப்பு  மையத்தில் பிகேஆர்,, அம்னோ  ஆதரவாளர்கள்  ஒருவரை ஒருவர்  கல்லால்  அடித்துக்  கொண்டனர். கைகலப்பும்  மூண்டது. அதில்  பலர்  காயமுற்றனர்.  சினமூட்டும்  வகையில்  நடந்து  கொண்டதாக இரு  தரப்புமே ஒருவரை  மற்றவர்  குற்றம்  சாட்டிக்கொண்டனர். சிலர்  தேர்தல்  ஆணையத்தைக்  குற்றம் …

வாக்காளர் எண்ணிக்கை குறையும் என இசி எதிர்பார்க்கிறது

பெர்மாத்தாங்  பாவ்  இடைத் தேர்தலில்  இன்று  வாக்களிப்பு  நாள். வாக்களிப்பதற்கு  24 வாக்களிப்பு  மையங்கள்  திறக்கப்பட்டு காலை  மணி  எட்டிலிருந்து  வாக்களிப்பு  நடைபெற்று  வருகிறது. மாலை  மணி 5-க்கு  வாக்களிப்பு  மையங்கள்  மூடப்படும். அத்தொகுதியில்  உள்ள  71,890 வாக்காளர்களில்  80  விழுக்காட்டினர்தான்  வாக்களிக்க  வருவார்கள்  என  தேர்தல்  ஆணைய…

பெரும்பான்மை குறைந்ததற்கு என்னைக் குறை சொல்லாதீர்- மகாதிர்

முன்னாள்  பிரதமர்   டாக்டர்  மகாதிர்  முகம்மட்,  ரொம்பின் இடைத்  தேர்தலில்  பிஎன்னின்  பெரும்பான்மை  குறைந்ததற்குத்  தாம் பொறுப்பல்ல  எனக்  கூறியுள்ளார். “அங்கு  ஜிஎஸ்டி, வாழ்க்கைச்  செலவின  அதிகரிப்பு, விலைவாசி  உயர்வு  ஆகியவைதான்  முக்கியத்துவம்  பெற்றிருந்தன. 1எம்டிபி (1மலேசியா  மேம்பாட்டு  நிறுவனம்)-க்குக்  கடைசி  இடம்தான். “கம்பத்து  மக்களுக்கு  1எம்டிபி  விவகாரம் …

பாலியல் படங்கள் வைத்திருந்த குற்றவாளிக்கு இரண்டாவது வாய்ப்பா?

சிறுவர்  பாலியல் படங்களை  வைத்திருந்த குற்றத்துக்காக  தண்டிக்கப்பட்ட  மலேசிய  மாணவருக்கு மாரா  இரண்டாவது வாய்ப்பு  வழங்குவதைச்  சுட்டிக்காட்டிய  முன்னாள்  மாணவர்  தலைவர்  ஒருவர், அது அரசாங்கத்தின்  பாரபட்ச  போக்குக்குத்  தெளிவான  சான்றாகும்  என்றார். “சிறுவர்  பாலியல் படங்கள்  வைத்திருந்தவருக்கு  இரண்டாவது  வாய்ப்பு  வழங்கப்படுகிறது. (ஆனால்) ஜனநாயகத்துக்குக்  கோரிக்கை  விடும் …

கைதிகளுக்கு வாக்களிக்கும் உரிமை கோரி அன்வார் மனு தாக்கல்

பெர்மாத்தாங்  பாவ்  முன்னாள்  எம்பி  அன்வார்  இப்ராகிம்,  தாம்  சிறைக்கைதியாக  இருந்தாலும்  தமக்கு  வாக்களிக்கும்  உரிமை  வழங்கக்  கோரி  நீதிமன்றத்தில் மனு  தாக்கல்  செய்துள்ளார். அதில்  அவர்,  குதப்புணர்ச்சிக்  குற்றச்சாட்டில்  ஐந்தாண்டு  சிறைத்தண்டனை  விதிக்கப்பட்டிருந்தாலும்  அத்தீர்ப்புக்கு  எதிராக  மனு  செய்திருப்பதாகக்  கூறினார். தாம்  பெர்மாத்தாங்  பாவில்  ஒரு  தகுதிபெற்ற …

அசிசா: ‘ஐயா, நான் ஒரு பாட்டிதான், அதனால் என்ன?’

பெர்மாத்தாங்  பாவில்  போட்டியிடும்  பிகேஆர்  வேட்பாளர் டாக்டர் வான்  அசிசா  வான்  இஸ்மாயில்  தம்மைப்  “பாட்டி”  என்றும் 44-வயது  பிஎன்  வேட்பாளர்  சுஹாய்மி  சபுடின்  இளம் வயதினர்  என்றும் கூறுவோரைச்  சாடினார். வான்  அசிசா, பரப்புரைக்குச்  செல்லும்  நேரங்களில்  பெரும்பாலும் கையில்  விசிறியுடன்  செல்வதால்  அவரை “விசிறி  பாட்டி” …

‘ரொம்பினை வைத்து நஜிப் ஆட்சிமீது வாக்காளர்களின் உணர்வுகளை மதிப்பிட முடியாது’

ரொம்பின்  இடைத்  தேர்தல்  முடிவுகளை  வைத்து பரதமர்  நஜிப்  அப்துல் ரசாக்கின்  நிர்வாகத்தைப்  பிடித்தாட்டும்  விவகாரங்கள் வாக்காளர்  உணர்வுகளில்  தாக்கத்தை  ஏற்படுத்தியுள்ளதாக  முடிவு  செய்துவிட  இயலாது. பிஎன்னின்  பெரும்பான்மை  குறைந்தது  உண்மைதான். அதற்கு  வாக்காளர்கள்  குறைந்த  எண்ணிக்கையில் வாக்களிக்க  வந்தது  ஒரு  காரணமாக  இருக்கலாம்  என ஜனநாயக, பொருளாதார…

இசி: நீண்ட வாரக் கடைசி வாக்காளர் குறைவுக்குக் காரணம்

ரொம்பின்  இடைத்  தேர்தலில்  பதிவு  செய்யப்பட்ட  53,926 வாக்காளர்களில்  80 விழுக்காட்டினர்  வாக்களிப்பார்கள்  என்று  எதிர்பார்க்கப்பட்ட  வேளையில்  74 விழுக்காட்டினர்தான்  வாக்களித்திருக்கிறார்கள். வாரக்  கடைசி  நீண்டு  போனது  இதற்குக்  காரணமாக  இருக்கலாம்  எனத்  தேர்தல்  ஆணையத்  தலைவர்  அப்துல்  அசிஸ்  யூசுப்  கூறினார். 2013  பொதுத்  தேர்தலில் 86…

ரோம்பின் இடைத்தேர்தல்: பிஎன் வெற்றி

  ரோம்பின் தொகுதிக்கான நாடாளுமன்ற இடைத்தேர்தலில் பாரிசான் வேட்பாளர் வெற்றி பெற்றார். ஆனால், அவருடைய பெரும்பான்மை வாக்குகள் வெகுவாக குறைந்துள்ளன. அதற்கான காரணம் வாக்காளர்கள் ஜிஎஸ்டி வரி மீதான கோபமாக இருக்கக்கூடும். இரவு மணி 10.15 க்குப் பின்னர் தேர்தல் ஆணையம் பாரிசான் வேட்பாளர் ஹசான் அரிப்பின் வெற்றி…

விரைவு ரயில் திட்டம் தள்ளி வைக்கப்பட்டது

சிங்கப்பூரும் கோலாலும்பூருக்குமிடையில் 2020-இல்  கட்டி  முடிப்பதாக  இருந்த  அதிவேக ரயில்  திட்டத்தைத்  தள்ளிவைக்க  முடிவு  செய்யப்பட்டுள்ளது. அது சிக்கல்மிக்க  திட்டம்  என்பதால்  இம்முடிவு  எடுக்கப்பட்டதாக  இரு  நாட்டுப்  பிரதமர்களும்  அறிவித்தனர். ஆண்டு  இறுதிக்குள்  ஓர்  உடன்பாட்டுக்கு  வந்து  ரயில்  திட்டத்தை  கட்டி  முடிக்கும்  புதிய காலவரிசையை  அறிவிக்க  முடியும் …

மைனர்கள் கைது பற்றி அமைச்சர் மெளனம்

கடந்த  வெள்ளிக்கிழமை பொருள், சேவை  வரி  எதிர்ப்புப் பேரணியின்போது  ஆறு  மைனர்கள்(21 வயது ஆகாதவர்கள்) ஓர்  இரவு  முழுக்க தடுத்து  வைக்கப்பட்டது  பற்றி  மகளிர், குடும்ப, சமூக  மேம்பாட்டு  அமைச்சர்  ரொஹானி  அப்துல் கரிமிடம்  வினவியதற்கு  அவர்  மெளனம்  சாதித்தார். பின்னர், “அதைச்  சம்பந்தப்பட்ட  அதிகாரிகளிடமே  விட்டு  விடுகிறோம்”,…

வாக்காளர் எண்ணிக்கை குறையலாம் என பக்கத்தான் கவலை

மிகவும்  ஆவலுடன்  எதிர்பார்க்கப்படும்  பெர்மாத்தாங்  பாவ்  இடைத்  தேர்தலுக்கு  இன்னும்  இரண்டு நாள்களே  எஞ்சியுள்ள  வேளையில் பக்கத்தான் ரக்யாட்டுக்கு பயம்  வந்து  விட்டது. வாக்காளிப்பு  நாளில்  வாக்களிக்க  வருவோர்  எண்ணிக்கை  குறைந்தால்  அது  தன்  வேட்பாளர்  டாக்டர்  வான்  அசிசா  வான்  இஸ்மாயிலின்  வெற்றி  வாய்ப்பைப்  பாதிக்கலாம்  என்று …

வாக்காளர்களுக்குப் போக்குவரத்து உதவித்தொகை கொடுப்பது குற்றமாகாது

ஒரு  தேர்தலில்  வாக்காளர்களுக்குப்  போக்குவரத்துப் படி  வழங்குவது  எந்தத்  தேர்தல்  சட்டத்தையும் மீறுவதாகாது  என்கிறார்  தேர்தல்  ஆணைய(இசி) தலைவர்  அப்துல் அசிஸ்  யூசுப். “குறிப்பிட்ட  கட்சிக்கு  வாக்களிக்க வாக்காளருக்குப்  பணம்  கொடுப்பதும்  அவ்வாக்காளர்  அக்கட்சிக்கே வாக்களிப்பதும்தான்  குற்றமாகும். “வாக்காளர்கள்  திரும்பி  வந்து வாக்களிக்க  உதவித்  தொகை  வழங்குவது  பற்றி…

இன்று ரொம்பினில் இடைத் தேர்தல்

இன்று  ரொம்பின்  நாடாளுமன்றத்  தொகுதிக்கான  இடைத்  தேர்தல்  நடைபெறுகிறது. அத்தொகுதிக்கான  நாடாளுமன்ற  உறுப்பினர்  ஜமாலுடின்  ஜர்ஜிஸ் ஏப்ரல் 4-இல் ஹெலிகாப்டர் விபத்தில்  காலமானதை  அடுத்து  இவ்விடைத்  தேர்தல்  நடைபெறுகிறது. அத்தொகுதியில் 52,744  வாக்காளர்கள்  உள்ளனர். வாக்களிப்பு  காலை மணி 8-க்குத்  தொடங்கியது. மாலை மணி 5-க்கு  முடிவுறும். ரொம்பின்…

பிஎஸ்டி புதிதாக ஆள் சேர்ப்பதை நிறுத்தியுள்ளது, பண முடையா?

புதிதாக  ஆள்  சேர்ப்பதை  நிறுத்துமாறு 15 அரசுத் துறைகளுக்கு   உத்தரவிடப்  பட்டிருப்பதாக  சின் சியு  டெய்லி  செய்தி  ஒன்று  தெரிவிக்கிறது. இதில்  கல்வி  அமைச்சு, போலீஸ், ஆயுதப் படைகள்  ஆகியவையும்  உள்ளிட்டிருப்பதாக அச்செய்தி  கூறிற்று. ஏப்ரல் 22  தேதியிடப்பட்ட  அரசாங்கச்  சுற்றறிக்கையின்படி  அரசுத் துறைகளுக்குப்  புதிதாக  ஆள்  சேர்ப்பது …

10 ரிங்கிட்டுக்கு 10 ரிங்கிட் முன் கட்டண அட்டை :…

ரிம10 முன் கட்டண அட்டைக்கு மக்கள் 10 ரிங்கிட் மட்டுமே செலுத்துவதை  உறுதிப்படுத்தப்போவதாக தொடர்பு,  பல்லூடக  அமைச்சர்  அஹமட்  சபரி சிக்  கூறினார். தொலைத்தொடர்பு  நிறுவனங்களைச்  சந்திக்கும்போது  இந்த  நிலைப்பாட்டை  முன்னிறுத்தியே  பேச்சு  நடத்தப்போவதாக  அமைச்சர்  கூறினார். அதன்  பின்னர்  அது  அமைச்சரவைக்குக்  கொண்டு  செல்லப்பட்டு  ஒரு  முடிவெடுக்கப்படும்.…

வேட்பாளர்களுக்கு பிஎம் கிரெடிட் தேவை என்பது அபத்தம்

தேர்தலில்  போட்டியிட  விரும்புவோர்  எஸ்பிம் தேர்வில்  பகாசா மலேசியா  பாடத்தில்  குறைந்தது  கிரெடிட்  பெற்றிருக்க  வேண்டும்  என்பது  சுத்த  அபத்தம் என்கிறார் சரவாக்  ஐக்கிய  மக்கள்  கட்சி(எஸ்யுபிபி)த்  தலைவர்  டாக்டர்  சிம் குய்  ஹியான். ஆனால், எம்பிகளுக்கும்  சட்டமன்ற  உறுப்பினர்களுக்கும்  நன்றாக  எழுத,படிக்க  தெரிந்திருக்க  வேண்டும்  என்பதை  அவர் …

வான் அஸிஸாவின் வெற்றி பல்லின மக்களின் வெற்றி!-

-டாக்டர் சேவியர் ஜெயக்குமார், மே 4, 2015   அடுத்த மூன்று நாட்களில் பகாங் ரொம்பின்  மற்றும் பினாங்கு பெர்மாத்தாங் பாவ் ஆகிய இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தல்களை மலேசிய மக்கள் எதிர்க்கொண்ட பொழுதும், பினாங்கு பெர்மாத்தாங் பாவ்தொகுதி இடைத்தேர்தல் நாட்டு மக்களின் கவனத்தை மட்டுமின்றி உலக…

ஜிஎஸ்டி எதிர்ப்பு பேரணி: இப்போது மாட் சாபு கைது செய்யப்பட்டுள்ளார்

  மே 1 இல் நடைபெற்ற ஜிஎஸ்டி எதிர்ப்பு பேரணியில் பங்கேற்றதற்காக பாஸ் கட்சியின் துணைத் தலைவர் மாட் சாபு இன்று கைது செய்யப்பட்டார். விசாரணைக்கு வரும்படி போலீசார் கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து தாமாகவே டாங் வாங்கி போலீஸ் நிலையத்திற்கு காலை மணி 11.30 க்கு சென்றதாக மாட் சாபு…

நாளை அனைவரும் கருப்பு ஆடை அணிய பெர்சே கோரிக்கை

தேர்தல்  சீரமைப்புக்காக  போராடும்  பெர்சே,  அண்மையில்  மே  தினப் பேரணியில்  கலந்து  கொண்டவர்களுக்கு  எதிராக  மேற்கொள்ளப்பட்ட  நடவடிக்கைக்குக்  கண்டனம்  தெரிவிக்கும்  வகையில்  மலேசியர்கள்  நாளை  கருப்பு  ஆடை  தரிக்க வேண்டும்  எனக்  கேட்டுக்கொண்டிருக்கிறது. ‘ஒப்ஸ் ஹித்தாம் 505’ என  அழைக்கப்படும்  இக்  கண்டன  இயக்கம்  13வது பொதுத்  தேர்தலில் …

இறுதிக் கட்ட பரப்புரையில் ஹுடுட்டை வைத்து ஆடுகிறது பாஸ்

ஹுடுட்  செயலாக்கத்துக்கு  ஆதரவளிக்கும்  எம்பிகளின்  எண்ணிக்கை  அதிகரிக்க  வேண்டும். அதற்காகவாவது  பாஸ்  வேட்பாளருக்கு  வாக்களிக்க  வேண்டும்  என  ரொம்பின்  வாக்காளர்களிடம்  வலியுறுத்தப்பட்டுள்ளது. நேற்று  முவாட்ஸாம்  ஷாவில்  ஒரு  செராமாவில்  உரை  நிகழ்த்திய  பாஸ்  உதவித்  தலைவர்  துவான்  இப்ராகிம்  துவான்  மான், பாஸ் எம்பி   ஒருவர்  இருப்பது  பாஸ் …