"சுங்கை கோலோக் (Sungai Golok) ஆறு தொடர்ந்து வறண்டு வருவதால், சட்டவிரோத எல்லைக் கடப்புகள் குறித்து காவல்துறை கவலை கொண்டுள்ளதாக கிளந்தான் மாநில காவல்துறைத் தலைவர் யுசோஃப் மாமத் தெரிவித்துள்ளார்." சுங்கை கோலோக் ஆற்றின் நீர்மட்டம் குறைந்துள்ளதால், எல்லை தாண்டிய சட்டவிரோத ஊடுருவல்கள் அதிகரிக்கக்கூடும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.…
ஜிஎஸ்டி-யைத் தள்ளிப்போடச் சொல்கிறது பினாங்கு சட்டமன்றம்
பினாங்கு சட்டமன்றம், பொருள், சேவை வரியின் அமலாக்கத்தை 2015 ஏப்ரலுக்கு, அம்மாநிலம் ஒரு வளர்ந்த மாநிலமாக உருவாகும்வரை தள்ளி வைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளும் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது. அந்த அவசரத் தீர்மானத்தைக் கொண்டுவந்த லீ காய் லூன்(பிகேஆர்- மாச்சாங் பூபோக், ஜிஎஸ்டி எழைகளையும் நடுத்த வருமானம் பெறும் …
கேமரன் காடழிப்பில் ‘அரண்மனைக்கும் பங்குண்டாம்’
பகாங் அரண்மனை, கேமரன் மலையில் அதிகாரிகளின் பணியில் குறுக்கிட்டு, பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் காடழிப்புக்கு ஒப்புதல் அளிக்குமாறு அவர்களைக் கட்டாயப்படுத்தியதாக நியு ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸ்(என்எஸ்டி) செய்தி ஒன்று கூறியது. கடந்த வியாழக்கிழமை சில உயிர்களைப் பலிகொண்ட கொடூர நிலச் சரிவும் வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டதை அடுத்து இத்தகவல் வெளிவந்துள்ளது. அந்தக் …
தியான் சுவா மீதான தேச நிந்தனைக் குற்றச்சாட்டு தள்ளுபடி
பிகேஆர் உதவித் தலைவரும் பத்து எம்பி-யுமான தியான் சுவாமீது சாபா, லாஹாட் டத்துவில் தீவிரவாதிகளின் ஊடுருவல் தொடர்பில் அவர் தெரிவித்த கருத்து தேச நிந்தனையானது என்று சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை கோலாலும்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நீதிபதி நோர்ஷரிடா ஆவாங், அரசுத் தரப்பு குற்றச்சாட்டை நிரூபிக்கத் தவறிவிட்டது என்று …
பறிமுதல் செய்யப்பட்ட பைபிள்கள் திருப்பிக் கொடுக்கப்பட்டன
சிலாங்கூர் அரசு, கிட்டதட்ட ஓராண்டுக்கு முன்னர் மலேசிய பைபிள் கழக(பிஎஸ்எம்)த்திடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பைபிள்களைத் திரும்ப ஒப்படைத்துள்ளது. அவ்விவகாரத்துக்கு “அமைதித் தீர்வு” ஒன்று காணப்பட்டிருப்பதாக டிவிட்டரில் கூறிய சிலாங்கூர் மந்திரி புசார் அஸ்மின் அலி, பைபிள்களைத் திருப்பிக் கொடுக்கும் நிகழ்வில் தாமும் சிலாங்கூர் சுல்தானும் இருக்கும் படமொன்றையும் பதிவிட்டிருந்தார்.…
பிடிபிடிஎன்-னும் மற்ற நிதி நிறுவனங்களைப் போன்றதே
தேசிய உயர்க் கல்வி கடனுதவி நிதி நிறுவனம், பொதுமக்கள் தன்னையும் மற்ற நிதி நிறுவனங்கள் போலத்தான் கருத வேண்டும் என விரும்புகிறது. அந்த அடிப்படையில்தான் அது கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்களின் பெயர்களை 2015 ஜனவரி 1-இலிருந்து மத்திய கடன் தகவல் கட்டமைப்பில் (சிசிஆர்ஐஎஸ்) சேர்க்க முடிவு செய்துள்ளது. பிடிபிடிஎன், …
விவேகனந்தா ஆசிரமம்: நாளை கூடும் அமைச்சரவை முடிவு காண வேண்டும்
-மு. குலசேகரன், நவம்பர் 13, 2014. விவேகனந்தா ஆசிரமம் மேம்படுத்தப்பட வேண்டும் என்ற திட்டத்துடன் அந்த ஆசிரம வாரியக்குழுவின் தலைவர் டாக்டர் அம்பிகைபாகன் தமது நிலைப்பாட்டை அறிவித்திருக்கிறார். விவேகனந்தா ஆசிரம மேம்பாட்டுத் திட்டத்திற்கு பெரும்பாலான பொதுமக்களும் அரசு சார்பற்ற இயக்கங்களும் பலத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில்,…
பினாங்கு பிஎன் சட்டமன்றத்தைப் புறக்கணித்தது
பினாங்கில் பத்து பிஎன் பிரதிநிதிகள் மாநிலச் சட்டமன்றக் கூட்டத்தைப் புறக்கணித்தார். சுங்கை புயு சட்டமன்ற உறுப்பினர் பீ பூன் போ-மீதுள்ள ஆத்திரத்தில் அவர்கள் அவ்வாறு செய்தனர். மாநில நலவளர்ச்சி, சுற்றுச் சூழல், சமூக விவகாரக் குழுத் தலைவருமான பீ, சிறுசிறு விவகாரங்களைப் பெரிதுபடுத்தி மக்களைக் குழப்பப் பார்க்கிறாராம். சட்டமன்றப் …
ஜாஹிட்: பிணைப்பணம் கொடுப்பது அரசாங்கக் கொள்கை அல்ல
தென் பிலிப்பின்சுக்குக் கடத்திச் செல்லப்பட்ட சாபாவைச் சேர்ந்த மீன் வளர்ப்புப் பண்ணை உரிமையாளர் ஒருவரையும் ஒரு போலீஸ்காரையும் கடத்தல்காரர்கள் கேட்கும் பிணைப்பணத்தைக் கொடுத்து மீட்டு வரலாமே என்று எதிரணி எம்பி ஒருவர் கூறியதை உள்துறை அமைச்சர் ஜாஹிட் ஹமிடி நிராகரித்தார். “பிணைப்பணம் கொடுப்பது அரசாங்கத்தின் கொள்கை அல்ல, போலீஸ்காரர்கள் …
பரிதவிக்கும் 330 மாணவர்கள்: அரசாங்கம் உதவ வேண்டுமென எம்பிகள் கோரிக்கை
பினாங்கில் நிதி நெருக்கடி காரணமாக இழுத்துமூடப்பட்ட ஒரு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 330 பேருக்கு உதவ அரசாங்கம் உடனடியாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பக்கத்தான் எம்பிகள் சிலர் கேட்டுக்கொண்டிக்கின்றனர். மாணவர்கள் வேறு பல்கலைக்கழகங்களுக்கு மாறிச் செல்லத் தயாராக இருக்கிறார்கள். ஆனால், கல்வி அமைச்சு இன்னும் பச்சை விளக்கு …
எல்லா மருந்துகளுக்கும் ஜிஎஸ்டி-இலிருந்து விலக்களிக்க இயலாது
சுகாதார அமைச்சர் டாக்டர் எஸ்.சுப்ரமணியம், எல்லா மருந்துகளையும் பொருள், சேவை வரியிலிருந்து விலக்களிக்கப்பட்ட பொருள்களாக வகைப்படுத்த வேண்டும் என்று மலேசிய மருந்தாளுநர் சங்கம்(எம்பிஎஸ்) முன்வைத்த பரிந்துரையை ஏற்கவில்லை. “அத்தனையையுமா?அது முடியாது”, என்றவர் செய்தியாளர் கூட்டமொன்றில் தெரிவித்தார். ஆனாலும், அது ஒரு நீண்டகாலக் கொள்கை அல்ல என்றும் அமைச்சர் கூறினார். …
எம்பி: ரிம6 மில்லியன் கொடுத்து கடத்தப்பட்டவர்களை மீட்க அரசாங்கத்துக்கு மனமில்லையா?
தென் பிலிப்பின்சுக்குக் கடத்திச் செல்லப்பட்டு ஐந்து மாதங்களாக அங்கு பிடித்து வைக்கப்பட்டிருக்கும் சாபாவைச் சேர்ந்த மீன் வளர்ப்புப் பண்ணை உரிமையாளர் ஒருவரையும் ஒரு போலீஸ்காரரையும் விடுவிப்பதற்குக் கடத்தல்காரர்கள் கேட்கும் பிணைப்பணத்தைக் கொடுக்க அரசாங்கம் தயங்குவது ஏன் என்று எதிரணி எம்பி ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். “எத்தனையோ காரியங்களுக்கு பில்லியன் …
1எம்டிபி பற்றிப் பேசுவதைத் தடுக்கப் பார்க்கிறது பிஎன்
டிஏபி எம்பி டோனி புவா, தாம் 1மலேசியா மேம்பாட்டு நிறுவனம்(1எம்டிபி) பற்றிப் பேசுவதை பிஎன் தடுக்க முயல்வதாகக் குற்றம் சாட்டியுள்ளார். தடை விதிக்கப்படுவது பற்றியும் அவர் கவலைப்படவில்லை. அது அவ்விவகாரம் தொடர்பில் தம் தரப்பை எடுத்துரைக்க “பொன்னான வாய்ப்பாக” அமையும் என்றாரவர். நிதி துணை அமைச்சர் அஹ்மட் மஸ்லானும் …
ஆர்டிடி நடவடிக்கையை நிறுத்துவீர்: பாஸ் இளைஞர்கள் கோரிக்கை
சாலைப் போக்குவரத்துத் துறை(ஆர்டிடி) வரையறைகளுக்கு உட்படாத துடிப்பு விளக்குகள், ஒளிர்செறிவுமிக்க விளக்குகள், இலக்கத் தகடுகள் ஆகியவற்றுக்கு எதிராக மேற்கொண்டிருக்கும் நடவடிக்கையை நிறுத்த வேண்டும் என பாஸ் இளைஞர் பகுதி மகஜர் கொடுத்துள்ளது. நவம்பர் முதல் நாள் தொடங்கிய அந்நடவடிக்கையால், சாலையைப் பயன்படுத்துவோர் சிரமங்களுக்கு ஆளாவதாகவும் அச்சோதனை நடவடிக்கைகளால் மோசமான …
வல்லினம் கலை இலக்கிய விழா 6 : ஒரு முழுமையான…
வல்லினம் ஏற்பாட்டில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் கலை இலக்கியவிழா 2.11.2014-ல் தலைநகரில் அமைந்துள்ள கிராண்ட் பசிப்பிக் தங்கும் விடுதியில் சிறப்பாக நடைப்பெற்று முடிந்தது. முன்னதாக வல்லினத்தின் எட்டு ஆண்டுகளின் செயல்பாடுகள் திரையில் ஒளிப்பரப்பாகி அதன் தீவிரமான செயல்பாடுகளை அரங்கத்தினருக்குப் புரிய வைத்தது. அடுத்ததாக 'வல்லினம் விருது' பெறப்போகும் எழுத்தாளர்…
அமைச்சர்களில் இருவர் மட்டுமே மிதவாதிகள்
மலேசிய அமைச்சர்களில் மிதவாதிகள் என்று பார்த்தால் இருவர் மட்டுமே கண்ணுக்குத் தெரிகிறார்கள். அவர்களே, மிதவாதத்தைக் கையிலெடுத்து தீவிரவாதத்தை எதிர்க்கும் துணிச்சல் பெற்றவர்கள் என்று டிஏபி பெருந் தலைவர் லிம் கிட் சியாங் கூறினார். “அவ்விரு ‘’மிதவாத’ அமைச்சர்கள் தவிர்த்து அமைச்சரவையில் மற்றவர்கள் எல்லாம் ஒன்று, தீவிரவாதிகள் அல்லது ‘பெயரளவில் …
டிஐ-எம்: 1பெஸ்டாரி நெட் விவகாரத்தில் ஒய்டிஎல்-லுக்கு எதிராக சட்ட நடவடிக்கை…
ஊழல் கண்காணிப்பு அமைப்பான ட்ரேன்பேரன்சி இண்டர்நேசனல் மலேசியா (டிஐ-எம்), 1பெஸ்தாரி நெட் என்ற பெயரில் பள்ளிகளுக்கு மின் -கல்வித் திட்டச் சேவை வழங்க குத்தகை பெற்றுள்ள நிறுவனத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டுள்ளது. அந்த மின் -கல்வித் திட்டத்தின் இணைய சேவையாளரான ஒய்டிஎல் தொடர்பு நிறுவனம் …
அம்னோ: உதவிச் சம்பளத்தை இழக்க நேர்ந்தால் பாஹ்மி அதை ஏற்கத்தான்…
யுனிவர்சிடி மலாயா (யுஎம்) மாணவர் தலைவர் பாஹ்மி சைனலுக்குக் கொடுக்கப்பட்ட உதவிச் சம்பளத்தைப் பொதுச் சேவைத் துறை(பிஎஸ்டி) மீட்டுக்கொள்ள நேர்ந்தால் அதை அவர் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்கிறார் அம்னோ கல்விப் பிரிவுத் தலைவர் இப்ராகிம் அபு ஷா. “உதவிச் சம்பளம் கிடைக்கப்பெற்ற மாணவர்கள் அவர்களின் கல்விக்கு அவர்கள்தான் பொறுப்பு.…
12,000 வங்காள தேசத் தொழிலாளர்கள் சரவாக் வருவதைத் தடுக்க வேண்டும்
கோத்தா செந்தோசா டிஏபி சட்டமன்ற உறுப்பினர் சொங் சியாங் ஜென், சரவாக் தோட்டப்புறங்களில் வேலை செய்வதற்கு வங்காள தேசத்திலிருந்து 12,000 தொழிலாளர்கள் தருவிக்கப்படுவதை தடுக்க வேண்டும் என்று மாநில அரசைக் கேட்டுக்கொண்டிருக்கிறார். “குறைந்த சம்பளத்தில் வேலை செய்வதற்காக சரவாக் வரும் இத்தொழிலாளர்கள் உள்ளூர் மக்களுக்குப் போட்டியாக விளங்குவார்கள்”, என்றவர் …
1எம்டிபி-இன் கணக்குகளைத் தணிக்கை செய்யக் காரணமில்லை
1மலேசியா மேம்பாட்டு நிறுவன(1எம்டிபி)த்தின் கணக்குகளை அனைத்துலக அளவில் பெயர்பெற்ற பெரிய நிறுவனங்கள் ஏற்கனவே தணிக்கை செய்திருப்பதால் தாம் அதைத் தனியே தணிக்கை செய்ய “காரணம் ஏதுமில்லை” எனத் தலைமைக் கணக்காய்வாளர் அம்ப்ரின் புவாங் கூறினார். “ஏன் நாங்கள் 1எம்டிபி கணக்குகளைத் தணிக்கை செய்யவில்லை? ஏற்கனவே பெரிய நிறுவனங்கள் தணிக்கை …
பழனிவேலைக் கவிழ்க்க சதியா? மறுக்கிறார் சரவணன்
மஇகா தலைவர் ஜி.பழனிவேலைக் கவிழ்க்க சதித் திட்டம் உருவாகிக் கொண்டிருப்பதாக வதந்தி பரப்புவோரை கட்சி உதவித் தலைவர் எம்.சரவணன் கடுமையாகச் சாடினார். “2016-இல், கட்சித் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகுவதாக பழனிவேல் தாமே அறிவித்திருக்கிறார் என்கிறபோது அவரைக் கவிழ்க்க யாரும் சதி செய்ய வேண்டிய அவசியமே இல்லை”, என இளைஞர்,…
நாடாளுமன்றத்தில் சாபா, சரவாவுக்கு 35 விழுக்காட்டு இடங்கள் தேவை
சாபா, சரவாக் ஆகிய மாநிலங்களுக்கு கூடுதல் நாடாளுமன்ற இடங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்று சாபா மாநில சீரமைப்புக் கட்சி (ஸ்டார் சாபா) கோரிக்கை விடுத்துள்ளது. “புதிதாக மேற்கொள்ளப்படவுள்ள தேர்தல் தொகுதி எல்லைகளைத் திருத்தி அமைக்கும் பணிகள் எந்த அடிப்படையில் செய்யப்படும் என்பது தெரியவில்லை ஆனால், சாபா, சரவாக்கின் அரசமைப்பு …
பேராக் பிஎன் சட்டமன்ற உறுப்பினர் மனைவியர் மன்றத்தின் நிதி வசதியை…
சங்கப் பதிவதிகாரி (ஆர்ஓஎஸ்), பேராக் பிஎன் சட்டமன்ற உறுப்பினர் மனைவியர் நலவளர்ச்சி மன்றத்துக்கு(பைடூரி) நிதி எங்கிருந்து கிடைக்கிறது என்பதை ஆராய வேண்டும் என பேராக் பாஸ் இளைஞர் பகுதி கேட்டுக்கொண்டிருக்கிறது. அதற்கு மாநில அரசிலிருந்து பணம் செல்கிறதா என்பதை ஆர்ஓஎஸ் ஆய்வு செய்ய வேண்டும். அப்படி இருந்தால் அது …
‘மலேசியாவின் சாரத்தை’விவரிக்கும் தொடர்விளக்கக் கூட்டங்கள்: நெகாரா கூ நடத்துகிறது
சமூக இயக்கமான நெகாரா கூ ‘மலேசியாவின் சாரத்துக்கு’ப் புத்துயிர் அளிக்க நாடு முழுக்க தொடர்விளக்கக் கூட்டங்களை நடத்தி மிதவாதம், அமைதி, நல்லிணக்கம் ஆகியவற்றை எடுத்துரைக்கும். தீவிரவாத கருத்துகளைப் பரப்பும் முயற்சிகள் அண்மைக் காலமாக பெருகியிருப்பதைப் பார்க்கையில் இது மிகவும் அவசியமாகிறது என அதன் தலைவர் சைட் கமருடின் கூறினார்.…


