உயிரியல் வம்சாவளி (பெற்றோர் யார் என்பது) அறியப்படாத பட்சத்தில், தத்தெடுக்கப்பட்ட குழந்தையை மலேசியக் குடிமகனாக அங்கீகரிக்க முடியாது என்று மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கூட்டாட்சி அரசியலமைப்பின் கீழ் குடியுரிமை கோரும் ஒருவர், வம்சாவளியுடன் தொடர்புடைய 'ஜஸ் சாங்குனிஸ்' (jus sanguinis) என்ற அரசியலமைப்புத் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டும்…
லாக்-அப்பில் ஸுனாரின் அந்த மூன்று நாள்கள்
மூன்று நாள்களை லாக்-அப்பில் கழித்து திரும்பி இருக்கிறார் ஸுனார் என்ற புனைபெயரில் பிரபலமாக விளங்கும் கேலிச்சித்திரக்காரர் சுல்கிப்ளி எஸ்.எம். அன்வார் உல்ஹாஹ். அந்த மூன்று நாள்களும் நினைத்தாலே இனிக்கும் சுகமான நாள்களல்ல. படுப்பதற்கு மெத்தையுமில்லை; பாயுமில்லை. பலகைதான். “லாக்-அப்பின் கடைசி நாளில்தான் ‘குட்மார்னிங்’ துண்டு, பல்பசை போன்றவற்றைக்க் கொடுத்தார்கள்”,…
ரோஸ்சுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை, பழனிவேலு
சங்கங்களின் பதிவகம் (ரோஸ்) மஇகா தேர்தல் விவகாரம் குறித்து மஇகாவுக்கு அனுப்பியுள்ள அனைத்து கடிதங்களையும் (டிசம்பர் 5, 2014, டிசம்பர் 31, 2014 மற்றும் பெப்ரவரி 6, 2015 தேதியிட்ட கடிதங்கள்) திரும்பப் பெற வேண்டும். இல்லையேல் அதற்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மஇகா…
பினாங்கில் அன்வார்-ஆதரவு பக்கத்தான் பேரணி திட்டப்படி நடக்கும்
பாஸ் ஆன்மிகத் தலைவர் நிக் அசிஸ் நிக் மாட் காலமானார் என்றாலும், பினாங்கு அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ள அன்வாருக்கு ஆதரவு தெரிவிக்கும் நிகழ்வு நாளை இரவு திட்டமிட்டபடி நடக்கும். “மக்களின் சுதந்திரம்” என்ற தலைப்புக் கொண்ட அந்நிகழ்வு செபராங் பிறையில் இரவு மணி 9-க்கு நடைபெறும் என மாநில …
நுருல் நுஹா: நாங்கள் தந்தைக்கு ‘விஐபி’ சலுகை கேட்கவில்லையே
சிறையில் அன்வார் இப்ராகிமின் உடல்நலம் கெடாமல் பார்த்துக்கொள்ள வேண்டுமே என்பதுதான் அவரது குடும்பத்தாரின் கவலையாகும். மற்றபடி அவருக்குத் தனிச் சலுகையை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. உடல்நிலை நன்றாக இல்லை என்கிற நிலையில் அவர் சிறை அறையில் வைக்கப்பட்டிருப்பதையும் ஒரு சிறிய மெத்தையில் தரையில் படுக்க வேண்டியிருப்பதையும் நினைத்து குடும்பத்தார் கவலை …
இஸ்மாயில் வருத்தப்படுகிறார் ஆனால், மன்னிப்பு கேட்க மாட்டார்
சீன வர்த்தகர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்ததற்கு மன்னிப்புக் கேட்பதில்லை என்பதில் பிடிவாதமாக இருக்கிறார் விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில் அமைச்சர் இஸ்மாயில் சப்ரி. ஆனால், தம் கருத்துக்கு இனச் சாயம் பூசப்பட்டு இன விவகாரமாகப் பார்க்கப்படுவதை எண்ணி அவர் “வருத்தம்” தெரிவித்தார். இந்த “வருத்தம்” மன்னிப்பு எனப் …
கேலிச்சித்திரக்காரர் ஸுனார் போலீஸ் பிணையில் விடுதலை
தேச நிந்தனைக்காக விசாரணையை எதிர்நோக்கியுள்ள அரசியல் கேலிச்சித்திரக்காரர் ஸுனார் போலீஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவரின் வழக்குரைஞர்களில் ஒருவரான மெலிஸ்ஸா சசிதரன், காலை மணி 10.40க்கு மலேசியாகினியிடம் இதை உறுதிப்படுத்தினார். “டாங் வாங்கி போலீஸ் நிலையத்திலிருந்து போலீஸ் பிணையில் சற்று நேரத்துக்குமுன்னர்தான் அவர் விடுவிக்கப்பட்டார்”, என்றாரவர். ஸுனார், எதிரணித் தலைவர் …
நிக் அசிஸ் காலமானார்
பாஸ் கட்சியின் ஆன்மீகத் தலைவரும் கிளந்தான் மாநிலத்தின் முன்னாள் மந்திரி புசாருமான நிக் அசிஸ் நிக் மாட் முதுமையின் காரணமாக நேற்று காலமானார். அவர் கிளந்தான் மாநில மந்திரி புசாராக 23 ஆண்டுகள் பதவி வகித்துள்ளார். அவரது இல்லத்திற்கு அருகிலுள்ள மசூதியில் அவரது ஈமச் சடங்கு காலை…
தேவையற்ற இழப்புகளையும் சேதாரத்தையும் குற்றமாக்க வேண்டும்
அரசாங்கச் சேவையில் ஊழலை ஒழிக்க அரசாங்க அதிகாரிகளிடையே நிகழும் ஒழுக்கக்கேடுகளைக் குற்றச்செயல்களாக்க வேண்டும் என்கிறது மலேசிய ஊழல்-தடுப்பு ஆணையம்(எம்ஏசிசி). அப்படிச் செய்வது தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கை சுட்டிக்காட்டுவது போல், அரசாங்கச் செலவுகளில் ஏற்படும் தேவையற்ற இழப்புகளையும் சேதாரத்தையும் தடுக்கும் என எம்ஏசிசி-இன் நடவடிக்கை மீளாய்வு வாரிய(ஓபிஆர்) தலைவர் ஹடினான் …
எம்பி: அன்வார் அரச மன்னிப்பை நாட மாட்டார்
தம்மீது சுமத்தப்பட்டது ஒரு பொய்யான குற்றச்சாட்டு என்று அன்வார் இப்ராகிம் கூறிக்கொண்டிருப்பதால் அவர் அரச மன்னிப்பை நாட மாட்டார் என்கிறார் பாஸ் எம்பி காலிட் சமட். இது தம்முடைய தனிப்பட்ட கருத்து என்றும் அவர் சொன்னார். “அன்வார் அதற்கு மனுச் செய்ய மாட்டார் என்றே நம்புகிறேன் அப்படிச் செய்வது …
பிகேஆர்: அன்வார்-ஆதரவு ஆர்ப்பாட்டம் பற்றி அறியோம்
வார இறுதியில், அன்வார் இப்ராகிமின் ஆதரவாளர்கள் சோகோ, டட்டாரான் மெர்டேகா வட்டாரத்தில் ஒன்றுதிரண்டு அவர் சிறையிடப்பட்டதை எதிர்த்து பேரணி நடத்தப்போவதாக தகவல் கிடைத்திருக்கிறது என போலீசார் கூறுகிறார்கள். எப்படிப்பட்ட பேரணியையும் சமாளிக்க போலீஸ் ஆயத்தமாக உள்ளது என போலீஸ் படை துணைத் தலைவர் நூர் ரஷிட் இப்ராகிம் குறிப்பிட்டதாக …
இஸ்மாயில் சப்ரியுடன் சேர்ந்து கூட்டறிக்கையா? லியோ மறுப்பு
அமைச்சர் இஸ்மாயில் சப்ரி, சீன வர்த்தகர்களைக் குறைகூறியது பற்றி விளக்கமளிக்கும் அறிக்கை ஒன்றை வெளியிட்டு அது, மசீச தலைவருடன் சேர்ந்து வெளியிடப்படும் கூட்டறிக்கை என்றும் கூறியிருந்ததை லியோ தியோங் லாய் உடனடியாக மறுத்தார். முகநூலில் அவ்வறிக்கை பதிவான 30வது நிமிடத்தில் லியோவின் மறுப்பு டிவிட்டரில் வெளியானது. . “இஸ்மாயில் …
சிறையில் அன்வார்
குதப்புணர்ச்சி வழக்கில் ஐந்தாண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட அன்வார் இப்ராகிம் சுங்கை பூலோ சிறைச்சாலையில் தனி அறையில் வைக்கப்பட்டிருக்கிறார். அங்கு மற்ற கைதிகளும் இப்படித் தனி அறைகளில் சிறை வைக்கப்பட்டிருப்பதாக சிறைச்சாலை தலைமை இயக்குனர் சுல்கிப்ளி ஒமார் கூறினார். “ஒரு தனி சிறை அறை அவருக்கு மட்டுமே. உணவு, உடை,…
ஜாஹிட்: கைதி அன்வாருக்கு ‘விஐபி’ சலுகை கிடையாது
அன்வார் இப்ராகிம் அம்னோவில் இருந்தபோது அவரும் அஹ்மட் ஜாஹிட் ஹமிடியும் நெருக்கமான கூட்டாளியாக இருந்திருக்கலாம். அதற்காக அவர் சிறையில் தனிச் சலுகைகளை எதிர்பார்க்க முடியாது என உள்துறை அமைச்சர் ஜாஹிட் கூறினார். “சிறைச்சாலை எல்லாக் கைதிகளையும் சட்டப்படி எப்படி நடத்த வேண்டுமோ அப்படியே நடத்தும்”,என புத்ரா ஜெயாவில் செய்தியாளர்களிடம் …
எம்ஏஎஸ்-ஸுக்குக் கண்டனம் தெரிவிக்க வருகிறார்கள் எம்எச்370 பயணிகளின் உறவினர்கள்
காணாமல்போன் எம்எச்370 பயணிகளின் உறவினர்கள் ஒரு குழுவாக சீனாவிலிருந்து மலேசியா வந்துள்ளனர். எம்எச்370 “விபத்து” காரணமாகக் காணாமல்போனதாக மலேசிய அரசாங்கம் அறிவித்ததற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவே அவர்கள் வந்திருக்கிறார்கள். 15-பேரடங்கிய அக்குழுவினர், எம்ஏஎஸ் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து (டிசிஏ) அதிகாரிகளைச் சந்திக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் எம்ஏஎஸ் தலைமையகத்தின்முன் …
மகாதிர்: நான் பிரதமராக இருந்தால் பதவி விலகுவேன்
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் இன்று பிரதமராக இருந்தால் பதவியைவிட்டு விலகிச் சென்று விடுவாராம். ஒரு கேள்விக்குப் பதிலளித்த அவர், பிரதமராக இருப்பவரால் திறமையாக செயல்பட முடியாதபோது பதவி விலகுவதே நல்லது என்றார். பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைக் குறி வைத்துத்தான் அவர் இவ்வாறு கூறினார் என்பது …
சிறைச்சாலைக்குமுன் திரண்ட அன்வார் ஆதரவாளர்கள்
எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் சிறைக்கு அனுப்பப்பட்டாலும் அவரின் ஆதரவாளர்கள் அவரைக் கைவிடவில்லை. நேற்றிரவு அவரின் ஆதரவாளர்கள் தங்களின் ஆதரவைத் தெரிவிக்க சுங்கை பூலோ சிறைச்சாலைக்குமுன் ஒன்று திரண்டனர். பதாதைகளையும் மெழுகுதிரிகளையும் கையில் ஏந்தியிருந்த அவர்கள், உரத்த குரலில் “ரீபோர்மாசி”, “பேபாஸ் அன்வார்(அன்வாரை விடுவிப்பீர்)” என உற்சாகமாக முழக்கமிட்டனர்.…
நாளை நடைபெறவிருக்கும் மலேசியாகினி கருத்தரங்கு: “அன்வார் இல்லாத அரசியல்”
நேற்று பெடரல் உச்சநீதிமன்றம் எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் குற்றவாளிதான் என்று தீர்ப்பளித்து அவருக்கு முன்னதாக மேல்முறையீட்டு நீதிமன்றம் விதித்திருந்த ஐந்தாண்டு சிறை தண்டனையை நிலைநிறுத்தியது. இது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, பக்கத்தானின் எதிர்காலம் பற்றிய ஊகங்களோடு, பொதுவாக நாட்டின் அரசியல் போக்கு எப்படி இருக்கப்…
அன்வாரின் இடத்தை அஸ்மின் ஏற்பாரா? அஸ்மின் பதிலளிக்க மறுப்பு
சிலாங்கூர் மந்திரி புசார் அஸ்மின் அலியிடம் அவர் நாடாளுமன்றத்தில் அன்வார் இப்ராகிமுக்குப் பதிலாக எதிரணித் தலைவர் பொறுப்பை ஏற்கும் வாய்ப்பு உள்ளது பற்றி வினவியதற்கு அவர் பதிலளிக்கத் தயங்கினார். செய்தியாளர்கள் வற்புறுத்திக் கேட்டதற்கு அவ்விவகாரத்தில் தம் விருப்பு வெறுப்புக்கு இடமில்லை என்று கோம்பாக் எம்பியும் பிகேஆர் துணைத் தலைவருமான …
மின் கட்டணம் குறைகிறது
மார்ச் முதல் தேதி தொடங்கி ஜுன் 30-வரை மின்கட்டணத்தைக் குறைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக எரிசக்தி, பசுமை தொழில்நுட்பம் மற்றும் நீர்வள அமைச்சர் மெக்சிமஸ் ஓங்கிலி தெரிவித்தார் புதிய மின்கட்டணத்தின்வழி பயனீட்டாளர்கள் மாதம் ரிம13.50 முதல் ரிம45.00 வரை மிச்சப்படுத்தலாம் என அமைச்சர் தெரிவித்தார்.
அன்வார் குடும்பத்தாரின்‘விடுதலை நோக்கி நெடும்பயணம்’
‘விடுதலை நோக்கி நெடும்பயணம்’ என்னும் இயக்கத்தை ஏற்பாடு செய்யப்போவதாக அன்வார் இப்ராகிம் குடும்பத்தார் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் தெரிவித்தனர். அவ்வியக்கத்துக்கு அன்வார் இப்ராகிமின் இரண்டாவது மகளான நுருல் நுகா தலைமைவகிப்பார். . “நாங்கள் அவ்வியக்கத்தை வழிநடத்த ஒரு செயலகத்தை அமைத்து அன்வாரின் விடுதலைக்காகவும் அநீதிக்கு எதிராகவும் போராடுவோம்”, என …
நீதிபதிகளை நையாண்டி செய்த கேலிச்சித்திரக்காரர் கைது
ஒரு டிவிட்டர் பதிவுக்காக கேலிச்சித்திரக்காரர் ஸுனார் நேற்றிரவு கைது செய்யப்பட்டு விசாரணைக்காக மூன்று நாள் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார். கூட்டரசு நீதிமன்றம் அன்வார் இப்ராகிமின் ஐந்தாண்டுச் சிறைத்தண்டனையை நிலைநிறுத்தித் தீர்ப்பளித்ததை அடுத்து ஸுனார் டிவிட்டரில் இட்டிருந்த பதிவுக்காக அவர் கைது செய்யப்பட்டார். தேச நிந்தனைச் சட்டம் பகுதி 4(1) (சி)-இன்கீழ் …
பெர்மாத்தாங் பாவில் அன்வாரின் மகள் போட்டியிடுவாரா?
அன்வார் இப்ராகிமின் மகள் நுருல் நுகா, பெர்மாத்தாங் பாவில் போட்டியிடுவார் என்று ஊகங்கள் அடிபடுகின்றன. செய்தியாளர் கூட்டமொன்றில் அவரின் அக்காள் நுருல் இஸ்ஸாவிடம் அதைக் கேட்டதற்கு அவர் அதைப் பற்றிப் பேசுவதைத் தவிர்த்தார். அச்செய்தியாளர் கூட்டம் ‘விடுதலை நோக்கி நெடும்பயணம்’ பற்றி விளக்குவதற்காகக் கூட்டப்பட்டது என்பதால் இடைத் தேர்தல் வேட்பாளர் …
அன்வார் செவ்வாய்க்கிழமை ‘வெளியில் வருவார்’
குதப்புணர்ச்சி வழக்கில் ஐந்தாண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் அடுத்த செவ்வாய்க்கிழமை கோலாலும்பூர் உயர் நீதிமன்றத்துக்கு வருவார். அவர் வெளியுறவு அமைச்சர் அனிபா அமானுக்கு எதிராக தொடுத்துள்ள ரிம100 மில்லியன் அவதூறு வழக்கில் சாட்சியமளிக்க நீதிமன்றம் வருவார் என்பதை அவரின் வழக்குரைஞர் ஜே.லீலா மலேசியாகினியிடம் …


