கிறிஸ்துவ குறுவட்டுகளைத் திருப்பிக் கொடுக்க நீதிமன்றம் உத்தரவு

கோலாலும்பூர்  உயர்  நீதிமன்றம், “அல்லாஹ்”  என்னும்  சொல்லைக்  கொண்டிருந்ததற்காகக்  கைப்பற்றப்பட்ட  எட்டு  கிறிஸ்துவ  சமய  குறுவட்டுகளை(சிடி)  உரியவரிடமே  திருப்பிக்  கொடுக்குமாறு  உள்துறை  அமைச்சுக்கும்  அரசாங்கத்துக்கும், ஆறாண்டுகளுக்குப்  பிறகு,  இன்று  உத்தரவிட்டது. 2008,  மே  மாதம்  சரவாக்கிய  கிறிஸ்துவரான  ஜில்  அயர்லாந்திடமிருந்து அந்த  சிடி-கள் கைப்பற்றப்பட்டன. சிடி-களைக் கைப்பற்றவும்  அவற்றைத் …

கறுப்புப் பெட்டிகள் வல்லுனர்களிடம் கொடுக்கப்படும்

எம்எச்17-இலிருந்து  சில  பெட்டிகள் ரஷ்ய-ஆதரவு  பிரிவினைவாதப்  படையினர்  கண்டெடுத்திருப்பதாக. டோனெட்ஸ்க்  மக்கள்  குடியரசின் பிரதமர்  எனச்  சுயமாக. பிரகடனம்  செய்து  கொண்டிருக்கும்  அலெக்சாண்டர்  பொரோடாய்  கூறினார் அவை  அவ்விமானத்தின்  கறுப்புப்  பெட்டிகளாக  இருக்கலாம்  என  நம்பப்படுகிறது  ஆனால், வல்லுனர்கள்தாம்  அதை  உறுதிப்படுத்த  வேண்டும். “அவை  கறுப்புப்  பெட்டிகள்தாம்  என்பதை …

ஐநா பாதுகாப்பு மன்றத்தில் உக்ரேன்மீது தீர்மானம்

உக்ரேனில்  மலேசிய  விமானம்  சுட்டு  வீழ்த்தப்பட்டதன்  தொடர்பில்  இன்று  ஐநா பாதுகாப்பு மன்றத்தில்  ஒரு  தீர்மானம்  கொண்டுவரப்படுகிறது. அத்தீர்மானம்,  விமானம்  சுட்டுவீழ்த்தப்பட்டதைக்  கண்டிப்பதுடன்  அச்சம்பவத்துக்குக்  காரணமானவர்களைக்  கண்டுபிடித்துப்  பொறுப்பாக்க  வேண்டும்  என்றும்  விமானம்  விழுந்து  நொறுங்கிய  இடத்தில்  கிளர்ச்சிப்படையினர் எவ்வித மாற்றத்தையும்  செய்யக் கூடாது  என்றும் கேட்டுக்கொள்ளும். அச்சம்பவத்தில் …

எம்எச்17: இறந்தவர்களை ஹரிராயாவுக்கு முன்னர் கொண்டு வர வேண்டும், நஜிப்

  சுட்டு வீழ்த்தப்பட்ட எம்எச்17 இல் கொல்லப்பட்ட அனைத்து மலேசிய குடிமக்களும் ஹரிராயாவுக்கு முன்னர் நாட்டிற்கு கொண்டு வரப்பட வேண்டும் என்று பிரதமர் நஜிப் கூறினார். "அடையாளம் காணப்பட்டவர்களை மலேசிய அரசாங்கம் நாட்டிற்கு கொண்டு வரும். அவர்கள் மலேசிய மண்ணில் அடக்கம் செய்யப்படுவர்" என்று நஜிப் இன்றிரவு கோலாலம்பூரில்…

நாடாளுமன்ற அவசரக் கூட்டம் எம்எச்370 தையும் விவாதிக்க வேண்டும், கிட்…

  எதிர்வரும் புதன்கிழமை தொடங்கவிருக்கும் நாடாளுமன்ற அவசரக் கூட்டம் எம்எச்17 பேரிழைப்பை விவாதிப்பதோடு எம்எச்370 காணாமல் போனதையும் விவாதிக்க வேண்டும் என்று டிஎபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் இன்று கூறினார். இரண்டு பேரிழப்புகளுக்கிடையில் பல வேறுபாடுகள் இருக்கின்றன. முதல் இழப்பு இன்னும் ஒரு பெரிய மர்மமாக…

அனைத்துக்கட்சி தேர்வுக் குழு அமைக்க எம்பி அறைகூவல்

எதிர்வரும்  புதன்கிழமை  எம்எச் 17மீதான  நாடாளுமன்றக் கூட்டம்  நடத்துவதற்குமுன்  அச்சம்பவத்தை  விசாரிக்க  நாடாளுமன்றத்  தேர்வுக் குழுவை  அமைக்க  வேண்டும்  என  செகாம்புட்  எம்பி  லிம்  லிப்  எங்  முன்மொழிந்திருக்கிறார். “எம்எச்-17 பற்றி  ரஷ்ய, யுக்ரேய்ன்  தூதர்களை  விசாரிக்க   அனைத்துக்கட்சி  நாடாளுமன்றத்  தேர்வுக்குழு  அமைக்க  வேண்டும்  எனப்  பிரதமர்  நஜிப் …

ஏவுகணையைப் பாய்ச்சியவர் யார்? கண்டுபிடிக்கும் முயற்சியில் அமெரிக்கா தீவிரம்

செயற்கைக்  கோள்  படங்கள்,  எம்எச்17-ஐ  சுட்டுவீழ்த்திய  ஏவுகணை  புகையைக்  கக்கியவாறு தரையிலிருந்து விண்ணுக்குப் பாய்ந்து  செல்வதைக்  காண்பிக்கின்றன. அகச்சிவப்பு  உணரிகள்  விமானம்  வெடித்தைப்  பதிவு  செய்துள்ளன. இவற்றை வைத்து  ஏவுகணையைப்  பாய்ச்சியவர்கள் யார், ஏன்  பாய்ச்சினார்கள், எங்கிருந்து  பாய்ச்சினார்கள்  முதலிய  விவரங்களைக்  கண்டறியும்  முயற்சியில்  அமெரிக்க  ஆய்வாளர்கள்  ஈடுபட்டுள்ளனர்.…

எம்எச்17: கண்காணிப்பாளர்களைத் துப்பாக்கிக்காரர்கள் தடுத்தனர்

நேற்று, ஐரோப்பிய  பாதுகாப்பு,  ஒத்துழைப்பு  நிறுவனத்தின்  கண்காணிப்பாளர்கள்(ஓஎஸ்சிஇ),  கிளர்ச்சிப்  படையினர்  வசமுள்ள யுக்ரேய்னின்  கிழக்குப்  பகுதியில்   மலேசிய  விமானம்  விழுந்து  நொறுங்கிய  இடத்தைப்  பார்வையிடச்   சென்றபோது துப்பாக்கிக்காரர்கள்  அவர்களைத்  தடுத்து  நிறுத்தினர். தடை  இருக்காது என்று  நினைத்து  விமானம்  விழுந்து  நொறுங்கிய  இடத்தைப் பார்வையிடச்  சென்றதாக    ஓஸ்சிஇ  பேச்சாளர்…

வான் அஸிசா சிலாங்கூர் மந்திரி புசார், சதித்திட்டம் வலுவடைந்து வருகிறது

  பிகேஆர் கட்சி உறுப்பினர்கள் மற்றும் பக்கத்தான் கூட்டணியின் பங்காளிக் கட்சிகள் அளித்து வரும் அழுத்தம் காரணமாக ஹரிராயா கொண்டாட்டங்களுக்குப் பின்னர் சிலாங்கூர் மந்திரி புசார் காலிட் இப்ராகிம்மை மாற்றுவதற்கு பிகேஆர் தீர்மானித்து விட்டதாகத் தெரிகிறது. நேற்றிரவு, பிகேஆர் நடப்பியல் தலைவர் அன்வார் இப்ராகிம் சிலாங்கூர் கட்சி தலைவர்களை…

எம்எச்17: நாடாளுமன்றத்தின் அவசரக் கூட்டத்தைக் கூட்டுகிறார் நஜிப்

  கிழக்கு உக்ரேய்னில் எம்எச்17 சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறப்படுவது சம்பந்தமாக நாடாளுமன்றத்தின் அவசரக் கூட்டத்தை  நடத்த தீர்மானித்திருப்பதாக பிரதமர் நஜிப் இன்றிரவு கூறினார். இன்றிரவிலிருந்து திங்கள்கிழமை வரையில் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் பிரதமர் நஜிப் அறிவித்தார். மாஸ் விமானத்தின் மீது தொடுக்கப்பட்ட  தாக்குதல் "மனிதத்தன்மையற்றது,…

இவரா எம்எச் 17மீது ஏவுகணையைப் பாய்ச்சிவர்?

எம்எச் 17-ஐ சுட்டு வீழ்த்தியவர்  என்ற  சந்தேகத்துக்கு  உரியவராக  இருப்பவர்  இகோர் கீர்கின். இவர், சுயமாக  பிரகடனம்  செய்துகொள்ளப்பட்டிருக்கும்  டொனெட்ஸ்க்  மக்கள்  குடியரசின்  தற்காப்பு  அமைச்சராவார். முன்னாள்  உளவுத்துறை  அதிகாரியான  இவருக்கு  ஸ்ட்ரெல்கோவ்- சுட்டுத்தள்ளுபவர்-  என்ற  பட்டப்பெயரும்  உண்டு  என  சிட்னி  மோர்னிங்  ஹெரால்ட்  கூறுகிறது. உத்தரவுக்குக்  கீழ்ப்படியாத …

லியோ: எரிபொருளை மிச்சப்படுத்த எம்ஏஎஸ் அந்த ஆபத்தான பாதையைப் பயன்படுத்தவில்லை

போக்குவரத்து  அமைச்சர்  லியோ  தியோங்  லாய்,  எரிபொருளை  மிச்சப்படுத்தவே  எம்எச்  17  தென்கிழக்கு  யுக்ரேய்னுக்கு  உயரே  பறந்ததாகக்  கூறப்படுவதை  மறுத்தார். “அது  உண்மையல்ல. பல  ஆண்டுகளாக  எம்ஏஎஸ்  அப்பாதையைத்தான்  பயன்படுத்தி  வந்துள்ளது. பல  நாடுகள்  அதே  பாதையைத்தான்  பயன்படுத்துகின்றன”, என  இன்று  செப்பாங்கில்  சமா  சமா  ஹோட்டலில்  செய்தியாளர்  …

எம்பி: நிக் அசீஸ் மருத்துவமனையில் நன்றாகவே உள்ளார்

பாஸ்  ஆன்மிகத்  தலைவர்  நன்றாக  இருப்பதாகவும்  அவர்  கோத்தா  பாரு,  குபாங்  கிரியானில்  யுனிவர்சிடி  சயின்ஸ்  மலேசியா  மருத்துவமனையில்  ஓய்வெடுத்துக்  கொண்டிருக்கிறார்  என்றும்  கிளந்தான்  மந்திரி  புசார்  கூறினார். நிக்  அசீசைத்   திங்கள்கிழமை  சென்று  கண்டதாக  அஹ்மட்  யாக்கோப்  கூறினார்.  சில  தரப்பினர்  அவரைப்  பற்றித்  தப்பான  தகவலைச் …

இரண்டாவது கறுப்புப் பெட்டியும் 121 சடலங்களும் கண்டெடுக்கப்பட்டன

யுக்ரேய்னில்  எம்எச் 17  விழுந்து  நொறுங்கிய  இடத்தில்  121  சடலங்கள்  கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. இதை  யுக்ரேய்ன்  அவசரகாலச்  சேவை  அறிவித்ததாக  ரஷ்யாவின் பிராவ்டா  செய்தித்தாள்  தெரிவிக்கிறது. இதனிடையே,  மீட்புப்  பணியாளர்கள்  இரண்டாவது  கறுப்புப்  பெட்டியைக் கண்டெடுத்துள்ளனர்.  ராய்ட்டர்ஸ்  செய்தி நிறுவனம்  இதை  அறிவித்துள்ளது.    

யுக்ரேய்ன் தூதரகம்: விமானத்தை வீழ்த்தியவர்கள் ரஷ்ய-ஆதரவு கிளர்ச்சிக்காரர்கள்தான்

எம்எச் 17 சுட்டு  வீழ்த்தப்பட்டதற்கு  யுக்ரேய்ன்  காரணமல்ல  என்று  கோலாலும்பூரில்  உள்ள  அதன்   தூதரகம்  கூறியுள்ளது. “ரஷ்ய-ஆதரவு  கிளர்ச்சிக்காரர்களும்  ரஷ்யாவில்  தயாரிக்கப்பட்ட  ஆயுதமும்தான்  அதற்குக்  காரணம்”  என்று  அது  கூறியது. “யுக்ரேய்ன்  பயங்கரவாதிகளுக்கு  எதிரான  நடவடிக்கைகளை  மேற்கொண்ட  நேரங்களில் எல்லாம்  அதன்  ஆகாயத்  தற்காப்புச்  சாதனங்களைப்  பயன்படுத்தியது  இல்லை …

இஸ்மா தலைவர் மீதான வழக்கு அக்டோபரில் மூன்று நாள்களுக்கு நடக்கும்

ஈக்காத்தான்  முஸ்லிம்  மலேசியா (இஸ்மா)  தலைவர்  அப்துல்லா  ஷேக் அப்ட்  ரஹ்மான்  மீதான  வழக்கு  அக்டோபர்  13 நாள் தொடங்கி  மூன்று  நாள்களுக்கு  காஜாங்  செஷன்ஸ்  நீதிமன்றத்தில்  விசாரணைக்கு  வருகிறது. செஷன்ஸ்  நீதிமன்ற  நீதிபதி  நோர்  ஹஸானி  ஹம்சா,  வழக்கு  விசாரணைக்கான  நாளை  இன்று  நிர்ணயித்தார். "Kedatangan pendatang…

ஆபத்தான பாதையிலா பயணிப்பது: எம்ஏஎஸ்-ஸைச் சாடுகிறது பாஸ்

நேற்றிரவு  எம்எச் 17  சுட்டு  வீழ்த்தப்பட்ட  பாதை  ஆபத்தானது என்று  தெரிந்தும்  அந்தப்  பாதையைப்  பயன்படுத்திய  மலேசிய  விமான  நிறுவனத்தை  பாஸ்  இளைஞர்  பகுதி  சாடியது. இவ்வாரத்  தொடக்கத்தில்  அப்பகுதியில்  ஒரு  போக்குவரத்து  விமானம்  சுட்டு  விழ்த்தப்பட்டது. அது  தெரிந்தும்  அதே  பாதையைப்  பயன்படுத்தியது  அறிவுடைமையாகுமா  என  அதன் …

எம்எச் 17 யுக்ரேய்னில் விழுந்து நொறுங்கியது

மலேசிய  விமான  நிறுவனத்தின் விமானம் ஒன்று யுக்ரெய்னில் விழுந்து நொறுங்கியிருக்கிறது. அந்த விமானத்தில் 295 பயணிகள் இருந்தனர். இந்த விமானம் ஆம்ஸ்டர்டாமிலிருந்து கோலாலும்பூருக்கு வந்துகொண்டிருந்த வழியில் இப்படி நடந்திருக்கிறது. அது  ஏவுகணையால்  சுட்டு வீழ்த்தப்பட்டதாக  செய்திகள்  கூறுகின்றன. இச்சம்பவம்  குறித்து  அதிர்ச்சி தெரிவித்த  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக் …

அன்வார்: எம்எச்17 பயணிகளைக் கொன்ற கொலைகாரர்களை நீதிமுன் நிறுத்த வேண்டும்

யுக்ரேய்னில்  சுட்டு  வீழ்த்தப்பட்ட  எம்எச் 17  விமானத்தில்  பயணம்  செய்தவர்களின்  குடும்பத்தார்  தகவல்  பெறுவதற்காக  கோலாலும்பூர்  அனைத்துலக  விமான  நிலையத்தில்  திரள்கின்றனர். பெயர்கள்  பதிந்துகொள்ளப்பட்டு  அவர்கள்  புத்ரா  ஜெயா   மரியோட்  ஹோட்டலுக்கு  அனுப்பி  வைக்கப்பட்டனர். அங்கு  எம்ஏஎஸ்  அவர்களுக்கு  விளக்கம்  அளிக்கும். எதிரணித்  தலைவர்  அன்வார்  இப்ராகிம்,  எம்எச்…

298 பேருடன் மலேஷிய விமானம் யுக்ரெய்னில் ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்டதா?

  மலேஷியன் ஏர்லைன்ஸ் விமானங்கள் (ஆவணப்படம்)   மலேஷியன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று யுக்ரெய்னில் விழுந்து நொறுங்கியிருக்கிறது. அந்த விமானத்தில் 298 பயணிகள் இருந்தனர். இந்த விமானம் ஆம்ஸ்டர்டாமிலிருந்து கோலாலம்பூருக்கு வந்துகொண்டிருந்த வழியில் இப்படி நடந்திருக்கிறது. தனது விமானத்துடனான (எண் எம்எச்17) தகவல்தொடர்பு அனைத்தும் துண்டிக்கப்பட்டுவிட்டதாக மலேஷியன் ஏர்லைன்ஸ்…

தாவோ சமயத்தின் பாதுகாப்பு தெய்வமான நெஸாவின் சிலை உடைக்கப்பட்டது

  ஜொகூர், கம்போங் தெம்பியோவில் அமைந்திருந்த சீன தாவோ சமயத்தின் பாதுகாப்பு தெய்வம் என்ற நெஸாவின் 10 மீட்டருக்கும் கூடுதலான உயரமும் 38 டன் எடையும் கொண்ட சிலை கோட்டா திங்கி அம்னோ இளைஞர் பிரிவு தெரிவித்த அதிருப்தியைத் தொடர்ந்து நேற்று உடைக்கப்பட்டது. அச்சிலை அமைந்திருந்த கோயில் அங்குள்ள…

மகாதிர்: அசிசா மந்திரி புசார் ஆவதில் தவறில்லை

அன்வார்  இப்ராகிமின்   பரம  வைரியான டாக்டர்  மகாதிர்  முகம்மட்,  அவரின்  துணைவியார்  டாக்டர்  வான்  அசிசா  வான்  இஸ்மாயில்  சிலாங்கூர் மந்திரி  புசார்  ஆவதற்கு  ஆதரவு  தெரிவித்துள்ளார். பெண்கள்,  மந்திரி  புசார்  உள்பட  தலைமைப் பொறுப்பேற்பதில்  தவறில்லை  என  முன்னாள் பிரதமர்  கூறினார். வான்  அசிசா, சிலாங்கூர்  மந்திரி …

தீபக்கின் கடனில் எல்லாம் சட்டப்படியே நடந்துள்ளது

கம்பள  வியாபாரி  தீபக்  ஜெய்கிஷனுக்குக்  கடனளிக்கப்பட்டதில்  எல்லாம்  சட்டப்படியே  நடந்துள்ளது  என்று  கூறுகிறார்  உள்நாட்டு  வாணிக, கூட்டுறவு,  பயனீட்டாளர்  விவகார  அமைச்சர்  ஹசான்  மாலேக். அவரின் கடனில்  எஞ்சியிருப்பது  ரிம32 மில்லியன்  மட்டுமே  என்று ஹசான்  ஓர்  அறிக்கையில்  கூறினார்.  அது திருப்பிச் செலுத்தப்படாத கடன்  என  வகைப்படுத்தப்பட்டுள்ளது.…