அன்வாரின் காரோட்டுனர்: சைபூலைவிட நான் அழகானவன்

அன்வார் இப்ராகிம்  தண்டிக்கப்பட்டது  அவரின் பணியாளர்களையும் பாதித்துள்ளது. அவரின்  காரோட்டுனராக  பணியாற்றிய  அப்துல்லா  சானி,55, “32 ஆண்டுகளாக  அவரிடம்   பணியாற்றி  இருக்கிறேன்”, என்றார். “இருவரும்  ஒரே  அறையில்  படுத்துறங்கியது  உண்டு. எதுவும்  நடந்ததில்லை. “அத்துடன்  நான்  சைபூலைவிடவும்  அழகானவன்”, என்றார்  அப்துல்லா. மேலும், அன்வார்மீது  குதப்புணர்ச்சி  குற்றஞ்சாட்டிய  முகம்மட் …

அன்வார் மீதான குதப்புணர்ச்சி வழக்கு 2 இன் தீர்ப்பு அரசியல்…

-டாக்டர் சேவியர் ஜெயக்குமார், பிகேஆர் உதவித் தலைவர், பெப்ரவரி 11, 2015.    மலேசிய எதிர்க்கட்சி தலைவர்   அன்வார் இப்ராகிம் மீது சுமத்தப்பட்ட  குதப்புணர்ச்சி வழக்கில்  அவருக்கு மேல் முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, நீதித்துறையின் மீது ஏற்பட்டுள்ள அவநம்பிக்கையை மேலும் வலுப்படுத்திவிட்டது. இவ்வழக்கு நாட்டுக்குப் பெரும் அவமானமாக அமைந்து விட்டது.   அரசியல்…

கூண்டில் இருந்தவாறு நீதிபதிகளைச் சரமாரியாக தாக்கினார் அன்வார்

ஐந்தாண்டுச் சிறைத்தண்டனையைக்  கூட்ட  வேண்டுமென்ற  அரசுத்தரப்பின்   முறையீட்டின்மீது   வாதம்  நடந்தபோது  அன்வார்  இப்ராகிம்  ஐவரடங்கிய  நீதிபதிகள் குழுவைக்   காரசாரமாக தாக்கினார். தலைமை  நீதிபதி  நிறுத்தச்  சொல்லியும்  அவர்  நிறுத்தாததால்  நீதிபதிகள்  நீதிமன்றத்திலிருந்து வெளியேறினர். நீதிமன்றத்தில் பேச  அனுமதிக்கப்பட்டதும்  எதிரணித்  தலைவர்,   அரசியல்  சதித்திட்டம்  தீட்டிய தம்  அரசியல்  எதிரிகளுடன் …

அன்வார் தண்டிக்கப்பட்டது உலக ஊடகங்களில் தலைப்புச் செய்தியானது

எதிரணித்  தலைவர்  அன்வார்  இப்ராகிம் குதப்புணர்ச்சி  வழக்கில்  குற்றவாளி  எனத்  தீர்ப்பளிக்கப்பட்டது  உலக  நாளேடுகளிலும்  செய்தித்  தளங்களிலும்  முக்கிய  செய்தியாக இடம்பெற்றது. டிவிட்டரில்  அதிகம்  தேடப்படும்  10  தலைப்புகளில்  அன்வார்  என்பதும்  ஒன்றாக  இருந்தது. பிரிட்டனின்  பிபிசி, அல்-ஜசீரா, புளும்பெர்க்  செய்தி  நிறுவனம், சிங்கப்பூரின்  சேனல்  நியுஸ்  ஏசியா …

ஷாபி: தண்டனையில் மகிழ்ச்சி காணவில்லை

குதப்புணர்ச்சி  வழக்கு 2-இல் அரசுத்  தரப்புத்  தலைமை  வழக்குரைஞராக  செயல்பட்ட முகம்மட்  ஷாபி  அப்துல்லா, “ஓர்  இளைஞனின்  வாழ்க்கையே  சிதைந்து  போனது” என்பதால்    அன்வார்  இப்ராகிமுக்குக்  கூட்டரசு  நீதிமன்றம் தண்டனை  வழங்கியதை  எண்ணி  மகிழ்ச்சி  அடையவில்லை  என்றார். “இறுதியில்  நீதி  கிடைத்திருப்பது எனக்குத்  தெரியும். அதனால்  முடிவை  எண்ணி …

அன்வாருக்கு ஐந்தாண்டுச் சிறைத் தண்டனை நிலைநிறுத்தப்பட்டது

எதிரணித்  தலைவர்  அன்வார்  இப்ராகிமுக்கு  முறையீட்டு  நீதிமன்றம்  ஏற்கனவே  விதித்திருந்த  ஐந்தாண்டுச்  சிறைத்  தண்டனை  நிலைநிறுத்தப்படுவதாக   நீதிபதி  அரிப்பின்  கூட்டரசு நீதிமன்றத்தில் அறிவித்தார். அன்வார்  தம்மை  காஜாங்  சிறைக்கு  அல்லாமல்  சுங்கை  பூலோ  சிறைக்கு  அனுப்ப  வேண்டுமெனக்  கேட்டுக்கொண்டதாகவும்  அவரது  கோரிக்கையை  நீதிமன்றம்  ஏற்றுக்கொண்டதாகவும்  அவரின்  வழக்குரைஞர்  கோபிந்த் …

நீதிக்கும் சனநாயகத்திற்கும் கிடைத்த மோசமான தோல்வி!

சுவாராம் மனித உரிமை இயக்கத்தின் தலைவரும் வழக்கறிஞருமான கா. ஆறுமுகம், உச்சநீதிமன்றம் அன்வாரைக் குற்றவாளி என்று தீர்ப்பளித்து 5 வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கியது தமக்கு ஆழ்ந்த அதிர்ச்சியைத் தருகிறது என்றார். “அன்வாரை அரசியலில் இருந்து அகற்ற மேற்கொண்ட அரசாங்கத்தின் சதிக்கு கிடத்த ஒரு கீழ்த்தரமான வெற்றி, மலேசியாவின் நீதிக்கும்…

4அன்வார் குதப்புணர்ச்சி வழக்கு2: அன்வார் குற்றவாளி எனத் தீர்ப்பு

  குதப்புணர்ச்சி வழக்கு 2 இல் அன்வாருக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக அவர் செய்திருந்த மேல்முறையீடு வழக்கில் இன்று பெடரல் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கவிருக்கிறது. இன்று காலை மணி 8.00 க்கு முன்பாகவே புத்ராஜெயா உச்சநீதிமன்றத்தின் முன் கூட்டம் கூடத் தொடங்கி விட்டது. அனைத்துலக கண்காணிப்பாளர்களும் வந்துள்ளனர்.…

QZ8501: ஒரே மலேசியரின் உடல் அடையாளம் காணப்பட்டது

டிசம்பர் 28-இல்  ஜாவா  கடலில்  வீழ்ந்த  ஏர் ஏசியா QZ8501 விமானத்தில்  இருந்த ஒரே  மலேசியரான  சீ சுங்  ஹுவாயின்  உடலை  நேற்று  இந்தோனேசிய  அதிகாரிகள்  அடையாளம்  கண்டனர். சில  நாள்களுக்குமுன்  அந்த  உடல்  கண்டெடுக்கப்பட்டது  என்றாலும்  நேற்றுத்தான்  அது  சீ-இன் உடல்  என்பது  டிஎன்ஏ  சோதனைகளில்  உறுதிப்படுத்தப்பட்டது.…

தொழுகையுரைமீது கருத்துத் தெரிவித்த எக்ஸ்கோ போலீசுடன் ஒத்துழைப்பார்

பினாங்கு ஆட்சிக்குழு  உறுப்பினர்  சொங்  எங், பாலியல்  வல்லுறவு மீது  சிலாங்கூர்  இஸ்லாமிய  சமயத் துறை(ஜயிஸ்) தெரிவித்த  கருத்தைக்  குறைகூறியது  பற்றி  போலீசிடம் விளக்கமளிக்க  முன்வந்துள்ளார். “டிவிட்டரில்  ஐஜிபி-இன்  பதிவைப் பார்த்தேன். போலீசுக்கு  முழு  ஒத்துழைப்பு  கொடுப்பேன். நான்  பாலியல்  வல்லுறவு  தொடர்பில்  ஒரு  மாற்றுக்  கருத்தை  வெளியிட்டேன். …

எண்ணெய் விலை யுஎஸ்$65- யுஎஸ்$70 ஆக இருக்கும்

சீனா, இந்தியா,  ஆப்ரிக்கா  ஆகியவற்றில்  தேவை பெருகி  வருவதால்  எண்ணெய்  விலை யுஎஸ்$65க்கும்  யுஎஸ்$70-க்குமிடையே  உயர்வு  காணும்  வாய்ப்பு  இருக்கிறது. ஜூன்  மாதத்தில்   உலகப்  பொருளாதாரம்  உயரத்  தொடங்கும்போது  இப்போது  வீழ்ச்சி  கண்டுவரும்  கச்சா  எண்ணெய் விலையும்  உயர்வு  காணும்  என  முன்னாள்  நிதி  அமைச்சர்  டயிம்  சைனுடின் …

அமைச்சர் இஸ்மாயில் சப்ரியிடம் போலீஸ் வாக்குமூலம் பதிவு

பொருள்விலையைக்  குறைக்காத  சீனர்களின்  கடைகளை  மலாய்க்காரர்கள் புறக்கணிக்க  வேண்டும்  என்று  முகநூலில்  பதிவிட்ட  விவசாயம், விவசாயம்  சார்ந்த  அமைச்சர்  இஸ்மாயில்  சப்ரியிடம்  போலீசார்  வாக்குமூலம்  பதிவு  செய்துள்ளனர். இன்று  பிற்பகல்  மணி  3.30க்கு  புக்கிட்  அமான்  போலீஸ்  தலைமையகத்தில்  அவரிடம்  வாக்குமூலம்   பதிவு  செய்யப்பட்டதாக  போலீஸ்  படைத்  தலைவர் …

அம்பிகாவின் சமாதான யோசனை நடைமுறைக்கு ஒத்துவராது

ஆளும்  கூட்டணியும்  எதிரணியினரும், என்ஜிஓ-களும்  அமைதி  உடன்பாடு காண  வேண்டும்  என்று  நெகரா  கூ  புரவலர்  அம்பிகா  ஸ்ரீநிவாசன்  முன்வைத்த  ஆலோசனைக்கு  வரவேற்பு இருக்கிறது  ஆனால், அது  செயல்வடிவம்  பெறும்  சாத்தியம்  இருப்பதுபோலத்  தெரியவில்லை. ஆளும்  கட்சியிடமும்  எதிரணியிடமும்  ஒருவர்  மற்றொருவருடன்  ஒத்துழைக்கும்  அரசியல்  விருப்பமும்  இல்லை, ஆர்வமும் …

மகாதிர்: கிட் சியாங்கோ, டிஏபியோ கம்முனிஸ்டுகள் அல்ல

லிம்  கிட்  சியாங்கும்  டாக்டர்  மகாதிர் முகம்மட்டும்  அரசியலில்  என்றும்  எலியும்  பூனையுமாக  இருப்பவர்கள். வாய்ப்புக்  கிடைக்கும்போதெல்லாம்  ஒருவரை  மற்றவர்  குறைசொல்லத் தயங்கவே  மாட்டார்கள். முன்னாள்  பிரதமரைப்  பொருத்தவரை   அவர்,  டிஏபி  பெருந்  தலைவரை  என்ன  வேண்டுமானாலும்  சொல்வார்.  அவரை  ஒரு  கம்முனிஸ்டு  என்று  மட்டும்  சொல்ல  மாட்டார்.…

ஆர்ஓஎஸ்-ஸை நீதிமன்றத்துக்கு இழுக்காதீர்கள்: மஇகா-வுக்கு ஜாஹிட் வலியுறுத்து

மறுதேர்தல்  நடத்த  வேண்டுமென்ற  உத்தரவால்  அதிருப்தி  அடைந்துள்ள  மஇகா  உறுப்பினர்கள்  சங்கப்  பதிவதிகாரி(ஆர்ஓஎஸ்)யை  நீதிமன்றத்துக்கு இழுக்க  வேண்டாம்  என  உள்துறை  அமைச்சர்  ஜாஹிட்  ஹமிடி   கேட்டுக்கொண்டிருக்கிறார். “ஆர்ஓஎஸ்  கலந்துரையாடுவதற்கு  எப்போதுமே வாயிலைத்  திறந்து  வைத்துள்ளது. எந்த  விவகாரத்தையும் அவர்களுடன்  பேசித்  தீர்வு  காணலாம்”,என  ஜாஹிட்  இன்று  புத்ரா  ஜெயாவில் …

மே மாதம் தலைவர் தேர்தலை நடத்த மஇகாவுக்கு உத்தரவு

மஇகா  அதன்  தலைவர்  பதவிக்கான தேர்தலை  மே  மாதம்  நடத்த  வேண்டும்  எனச்  சங்கப்  பதிவதிகாரி(ஆர்ஓஎஸ்)  உத்தரவிட்டிருப்பதாக  உள்துறை  அமைச்சர்  அஹ்மட்  ஜாஹிட்  ஹமிடி  இன்று  தெரிவித்தார். மஇகா  அதன்  கிளைகள்,  பிரிவுகள், தொகுதிகள், மத்திய  தலைமைத்துவம்  என  எல்லாப்  பதவிகளுக்குமே  தேர்தல்களை  நடத்த  வேண்டும். இதைத்  திட்டவட்டமாக …

மஇகா இளைஞர்கள்: அஸ்மின் முற்போக்குவாதியாக தெரியவில்லை

முஸ்லிமாக   மதம்  மாற  நினைப்போருக்கு “முதலில்  மணமுறிவு, பிறகுதான்  மதமாற்றம்” என்ற  நிபந்தனையை  விதிக்க   நெகிரி  செம்பிலான்  உத்தேசித்திருப்பதுபோல்  எதிரணியினரால்  வழிநடத்தப்படும்  சிலாங்கூர்  அரசு உத்தேசிக்கவில்லை  என்பது மஇகா   இளைஞர்  பகுதிக்கு “அதிர்ச்சி” அளிக்கிறது. நெகிரி  செம்பிலான்  மந்திரி  புசார்  முகம்மட்  ஹசான்   அவ்வாறு  முன்மொழிந்தது  ஒரு  பொன்னான …

மகாதிர்: இஸ்மாயில் கூறியதைத் துல்லியமாக ஆராய்வீர்

முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்.   மலாய்க்கார்கள்  சீனர்களின் கடைகளைப்  புறக்கணிக்க  வேண்டும்  என்று  அமைச்சர்  இஸ்மாயில்  சப்ரி  கூறியதை  பொதுமக்கள்  நுட்பமாக  ஆராய  வேண்டும்  எனக் கேட்டுக்கொண்டிருக்கிறார். “குற்றம்குறை  சொல்வதற்குமுன்  அவர்  சொன்னதைச்  சரியாக  மதிப்பிட  வேண்டும். செய்தித்தாள்களில்  படிப்பது  மட்டும்  போதாது”, என்றார். இஸ்மாயில் எந்தவொரு …

இஸ்மாயில் விவகாரத்தை மீண்டும் அமைச்சரவையில் எழுப்புவோம்: மசீச சூளுரை

விவசாயம்,  விவசாயம்  சார்ந்த  தொழில் அமைச்சர்  இஸ்மாயில்  சப்ரி  விவகாரத்தில் மசீச  கடுமையாகக்  கண்டனம் தெரிவிக்கவில்லை  என்று  கூறப்படுவதை  அதன்  தலைவர்  லியோ  தியோங்  லாய்  மறுத்தார். முகநூலில்  சர்ச்சைக்குரிய  பதிவிட்டதற்குப்  பொறுப்பேற்க  சப்ரி  தொடர்ந்து  மறுப்பாரானால் அவ்விவகாரத்தை  அடுத்த  அமைச்சரவைக்  கூட்டத்தில்  மீண்டும் எழுப்பப்போவதாக  லியோ  உறுதி …

டிஏபி: ஜோகூரில் காடழிப்புப் பற்றி வாய் திறவாவது ஏன்?

ஜோகூர்  மாநில  வெட்டுமரத்  தொழில்  பற்றிக்  கேள்வி  கேட்டால் மந்திரி  புசார் முகம்மட்  காலிட்  நோர்டினும்  மாநில  அரசும் பதிலளிக்காமல்  வாயை  மூடிக்  கொள்வதாக  டிஏபி  சட்டமன்ற  உறுப்பினர் கூறினார். “வெட்டுமரத்  தொழில்  பற்றிய  எந்த  விவரத்தை  மூடிமறைக்க  அவர்கள்  முயல்கிறார்கள்?”, என பெந்தாயான்  சட்டமன்ற  உறுப்பினர்  சுவா …

ஹட்டா, மாட் சாபு ஆகியோருக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய ஹாடி…

பாஸ்  கட்சித்  தலைவர்  அப்துல்  ஹாடி  ஆவாங்கின் ஆதரவாளர்கள்  கட்சியின்  மத்திய  குழு(சிசி)க்  கூட்டத்துக்கு  முன்னதாக  பாஸ்  தலைமையகக் கட்டிடத்துக்குமுன்  ஒன்று  திரண்டனர். சுமார்  80  பேரடங்கிய அக்கூட்டம், தலைவருக்கு  ஆதரவு  தெரிவிக்கவும்  தலைவரைக்  கவிழ்க்க  முனைவோருக்கு  எதிர்ப்புத்  தெரிவிக்கவும்  கூடியிருப்பதாகக்  கூறிக்கொண்டது. ஹாடிக்கு  எதிராகக்  காய்  நகர்த்துவோரில் …

நெகிரியின்‘மணமுறிவுக்குப் பின்னரே மதமாற்றம்’ திட்டத்துக்கு அபிம் எதிர்ப்பு

முஸ்லிமாக  மாதம்  மாற  விரும்பும்  ஒருவர்  முதலில் முஸ்லிம்-அல்லாத  வாழ்க்கைத்  துணையை  விவாக ரத்து  செய்வதைச்  சட்டவிதியாக்கும்  நெகிரி  செம்பிலான் திட்டத்துக்கு  அங்காத்தான்  பீலீயா  இஸ்லாம்  மலேசியா  எதிர்ப்புத்  தெரிவிக்கிறது. “அபிம்  அப்பரிந்துரையை  எதிர்க்கிறது. அதற்குப்  பதிலாக,  முஸ்லிம்-அல்லாத  தம்பதிகளின் வழக்கு  விசாரணைக்கு ஷியாரியா  நீதிமன்றங்கள்  கதவுகளைத்  திறக்க …

ஹாடி: நான் ஒன்றும் பள்ளி மாணவன் அல்ல, கட்டாயப்படுத்த

நான்கு  மாதங்களாக  நடக்காத  பக்கத்தான்  ரக்யாட்  தலைமைத்துவ  மன்றக்  கூட்டத்தை  நாளை  நடத்தத்  திட்டமிடப்பட்டுளது. ஆனால்  கூட்டத்துக்கு  வருவாரா,  மாட்டாரா  என்பதை. பாஸ்  தலைவர்  அப்துல்  ஹாடி   ஆவாங்  இன்னமும்  உறுதிப்படுத்தவில்லை. தாம்  பள்ளி மாணவன்  அல்ல  என்றும்  கூட்டத்தில்  கலந்துகொள்ளுமாறு  யாரும்  தம்மைக்  கட்டாயப்படுத்த  முடியாது  என்றும் …