பாக் சமட்-டுக்கு அரசாங்க-ஆதரவு தொழுகையுரைகளைக் கேட்டு அலுத்துப் போய்விட்டதாம்

தேசிய  இலக்கியவாதி  ஏ.சமட்  சையிட்  வெள்ளிக்கிழமை  தொழுகைக்குத்  தேசிய  பள்ளிவாசலுக்குச்  செல்வதை  நிறுத்தி  விட்டார். அங்கு  அரசாங்க-ஆதரவு  தொழுகையுரைகளைக்  கேட்டுக்  கேட்டு  எரிச்சலடைந்து  விட்டாராம்  அவர். பாக்  சமட்  என்ற  பெயரில்  பிரபலமாக  விளங்கும்  அந்த  இலக்கியவாதி  இப்போதெல்லாம்  அங்கிருந்து  இரண்டு  கிலோமீட்டர்  தள்ளியிருக்கும்  மஸ்ஜித்  இந்தியா-வுக்குத்தான்  செல்கிறார்.…

அன்வாருக்குக் கூடுதல் தண்டனை பெற்றுத் தருவதில் குறியாக இருக்கிறார் ஷாபி

கூட்டரசு  நீதிமன்றம்,  அன்வார்  இப்ராகிம் குற்றவாளிதான்  என்ற  தீர்ப்பை  நிலைநிறுத்தும்  என்று  நம்பிக்கைக்  கொண்டிருக்கும்  அரசுத்தரப்பு  வழக்குரைஞர்  முகம்மட்  ஷாபி  அப்துல்லா,  அவருக்கு  மேலும்  கடுமையான  தண்டனையைப்  பெற்றுத்தருவதில்  பிடிவாதமாக  இருக்கிறார். செய்தியாளர்களிடம்  பேசிய  அவர், “குற்றவாளி  என்று  தீர்ப்பளிக்கப்பட்டால்  அவருக்குக்  கொடுக்கப்பட்ட  ஐந்தாண்டுச்  சிறைத்  தண்டனையைக் கூட்டுமாறு …

தொகுதிகள் கூட்டப்படுவதை பக்கத்தான் ஒப்புக்கொள்ளக்கூடாது

தேர்தல் தொகுதிகளின்  எண்ணிக்கை  அதிகரிக்கப்படுவதற்கு  பக்கத்தான்  உடன்படக்கூடாது  எனத்  தேர்தல்  சீரமைப்புக்காகப்  போராடும்  அமைப்புகளான  பெர்சேயும் திண்டாக்  மலேசியாவும்  கேட்டுக்கொண்டுள்ளன. “சமூக  அமைப்புகள்  திட்டவட்டமாகக்  கூறியுள்ளோம்: இட எண்ணிக்கை  அதிகரிப்பு வேண்டாம். “எதிரணிகள்  இடங்கள்  கூட்டப்படுவதற்கு ஒப்புக்கொண்டால்  அதைப்  பொதுமக்களுக்கு  இழைத்த  துரோகமாகத்தான்  கருதுவோம்”, என திண்டாக்  மலேசியா …

அன்வார் மேல்முறையீட்டு வழக்கு: தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது

  அன்வார் மேல்முறையீட்டு வழக்கில் வாதங்கள் முன்வைக்கப்படுவதில் நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டதால், நீதிமன்றம் அதன் தீர்ப்பை பின்னொரு நாளில் அறிவிக்கும் என்று நீதிபதி அரிப்பின் தெரிவித்தார். நீதிமன்றம் அன்வாரின் பிணையையும் நீட்டித்தது. தமது வாதத்தைத் தொடங்கிய ஸ்ரீராம், புஸ்ராவி மருத்துவமனை டாக்டர் ஓஸ்மான் ஒரு நேர்மையான, நம்பிக்கைக்குரிய சாட்சி…

யுஎம்மில் எண்மருக்கு ஆதரவு தெரிவிக்க 100 மாணவர்கள் திரண்டனர்

பல்கலைக்கழகம்  சட்டவிரோதமானது  என  அறிவித்த  சொற்பொழிவை  ஏற்பாடு  செய்ததற்காக  ஒழுங்கு  நடவடிக்கையை  எதிர்நோக்கியுள்ள  எட்டு  மாணவர்களுக்கு  ஆதரவு   தெரிவிக்க  சுமார்  100  மாணவர்கள்  இன்று  காலை  மலாயாப்  பல்கலைக்கழக(யுஎம்)த்தில்  ஒன்று திரண்டனர். அக்டோபர்  27-இல்,  எதிரணித்  தலைவர்  அன்வார்  இப்ராகிம்  கலந்துகொண்ட  ஒரு  நிகழ்வை  ஏற்பாடு  செய்த  யுஎம் …

பெர்சே: ஆர்ப்பாட்டத்தைவிட ஆட்சேபணை தெரிவிப்பதே மேல்

தேர்தல்  தொகுதிகளை  திருத்தி   அமைக்கும்  நடவடிக்கை  நியாயமாக  நடைபெறுவதை வலியுறுத்த  தெரு  ஆர்ப்பாட்டங்களைவிட பரப்புரைகளே  மேலானவை  என்று  பெர்சே  தலைவர்  மரியா  சின்  அப்துல்லா  நினைக்கிறார். அரசாங்கமும்  இப்போது  “கெட்டிக்காரத்தனமாக”  ஆர்ப்பாட்டங்கள் நடத்த  இடமளிக்கிறது  ஆனால்,  எழுப்பப்படும்  கோரிக்கைகளைப்  புறக்கணித்து  விடுகிறது. எனவே, தேவை “புதிய  வழிமுறைகள்”  என்றாரவர்.…

யுஎம் கிளர்ச்சிக்கார மாணவர்களை வெளியேற்றினால் சிலாங்கூர் சேர்த்துகொள்ளும்

கடந்த  மாதம்  எதிரணித்  தலைவர்  அன்வார்  இப்ராகிம்  கலந்துகொண்ட  மாணவர்  பேரணிக்கு  ஏற்பாடு  செய்த  எட்டு  மாணவர்களை  மலாயாப்  பல்கலைக்கழகம்(யுஎம்)  வெளியேற்றினால்  அவர்கள்  சிலாங்கூர்  கல்விக் கழகங்களில்  சேர்த்துக்கொள்ளப்படுவர். “யுஎம்  அம்மாணவர்களை  நீக்க  முடிவு  செய்தால்,  அவர்கள்  யுனிவர்சிடி  சிலாங்கூர்(யுனிசெல்)  அல்லது  கோலேஜ்  யுனிவர்சிடி  இஸ்லாம்  சிலாங்கூர்  போன்ற …

திருநங்கைகளின் உரிமையை மதிக்க வேண்டும்: நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு

திருநங்கைகளுக்குப்  பெண்கள்போல்  உடை  அணியவும்  பாவனை  செய்யவும்  உரிமை  உண்டு  என  மேல்முறையீட்டு  நீதிமன்றம்  அதிரடித்  தீர்ப்பு  ஒன்றை  வழங்கியுள்ளது. பெண்களைப்  போல்  நடந்துகொள்ளும்  முஸ்லிம்  ஆண்களைத்  தண்டிக்கும்  ஷியாரியா  குற்றவியல் (நெகிரி  செம்பிலான்) இணைப்புச்  சட்டம்  பகுதி 66,  கூட்டரசு  அரசமைப்புக்கு  முரணானது  என நீதிபதி  ஹிஷாமுடின் …

பொதுத் தேர்தல் முடிவுகளைச் செல்லாதாக்கும் பக்கத்தான் முயற்சி தோல்வி

அழியா  மை குளறுபடிகளால்  13வது  பொதுத்  தேர்தல்  முடிவுகளைச் செல்லாதென  அறிவிக்கக்  கோரி  பக்கத்தான்  செய்திருந்த  மனுவை  மேல்முறையீட்டு  நீதிமன்றம்  தள்ளுபடி  செய்தது. அந்நீதிமன்றத்தின்  மூன்று  நீதிபதிகளில்  இருவர்,  அக்கோரிக்கை  ஒரு  தேர்தல்  மனுவாக  தேர்தல்  நீதிமன்றத்தில்  விசாரிக்கப்பட  வேண்டியது  எனக்  கூறினர். எனவே, தேர்தல்  வழக்கான  அதை …

ஸ்ரீராம்: அன்வாருக்கு ஆதரவாக இருக்க டாக்டர் ஓஸ்மானுக்கு காரணம் ஏதும்…

  பெடரல் உச்சநீதிமன்றத்தில் நடந்து வரும் அன்வார் மேல்முறையீட்டு விசாரணை நாளை பிற்பகல் மணி 3.00 மீண்டும் தொடங்கும். அன்வார் தற்காப்புக் குழுவின் தலைவர் ஸ்ரீராம் அவரது வாதத்தை தொடர்வார். சைபுல்லை முதலில் சோதணை செய்த புஸ்ராவி மருத்துவமனையின் டாக்டர் ஓஸ்மான் தம்மைத் தற்காத்துக் கொள்ள இங்கு இல்லாததால்…

பாஸின் அலட்சியம் டிஏபிக்கு ஏமாற்றமளிக்கிறது

பக்கத்தான்  ரக்யாட் கூட்டங்களில்  பாஸ்  தலைவர்  அப்துல் ஹாடி ஆவாங்  கலந்துகொள்ளாதிருப்பதும்  அதை  அற்ப  விவகாரம்  எனக்  கூறும்  அக்கட்சியின்  தலைமைச்  செயலாளர்  முஸ்தபா  அலியின்  அலட்சியப்போக்கும் ஏமாற்றமளிப்பதாக  டிஏபி  கூறுகிறது. பக்கத்தானின்  தொடர்ச்சிக்கும்  தொடர்ந்து  இருப்பதற்கும்  அவசியமான  விவகாரங்களை  அற்பமானவை  என்று கூறித்  தட்டிக்கழிப்பது  எரிச்சலூட்டுகிறது  என …

அரசாங்கம் பெட்ரோல் விலையைக் குறைக்கக் காரணம் ஏதுமில்லை

உலகளவில்  எண்ணெய்  விலைகள்  வீழ்ச்சியடைந்து  வருவதையொட்டி  மலேசியாவில் எண்ணெய்  விலையைக்  குறைக்க  வேண்டியதில்லை  என்று கூறும்  அரசாங்கம்,  ரோன் 95 பெட்ரோலுக்கு இன்னமும்  உதவித்  தொகை  கொடுக்கப்பட்டு  வருவதைச்  சுட்டிக்காட்டுகிறது. எதிரணித்  எம்பிகள்  பலரது  கோரிக்கைகளுக்குப்  பதிலளித்த  நிதி  துணை  அமைச்சர்  அஹ்மட்  மஸ்லான், ஒவ்வொரு  லிட்டர்  எண்ணெய்க்கும் …

உதவித்தொகை அகற்றப்படுவதை 72விழுக்காட்டினர் ஆதரிக்கவில்லை

அண்மையில்  மேற்கொள்ளப்பட்ட  ஆய்வு  ஒன்று  எரிபொருளுக்கும்  மின்சாரத்துக்கும்  கொடுக்கப்படும்  உதவித்  தொகை  அகற்றப்படுவதை  விரும்பவில்லை எனக்  காண்பிக்கிறது. மலேசிய  தண்ணீர்,  எரிபொருள்  ஆராய்ச்சி  சங்கம்(ஏவர்), தேசிய நடத்திய  ஆய்வில்,  ஆய்வில்  கலந்துகொண்டோரில்  27 விழுக்காட்டினர்  மட்டுமே  எரிபொருள், மின்சார  உதவித்  தொகைகளைக் குறைக்கவும்  சீரமைக்கவும்  அரசாங்கம்  மேற்கொள்ளும்  முயற்சிகளுக்கு …

நஸ்ரி: கனிமநீர் போத்தலுக்காக தேச நிந்தனை வழக்கு போட முடியாது

கனிமநீர்  போத்தலில் இந்து தெய்வ  உருவம் பொறிக்கப்பட்டிருக்கும்  விவகாரத்தைத்  தேசிய  நிந்தனைச்  சட்டத்தின்கீழ்  விசாரிக்க  வேண்டும்  என  மலேசிய  இஸ்லாமிய  பயனீட்டாளர்  சங்கம்  சொல்லியிருப்பது அறிவுடைமையாகாது. இவ்வாறு  குறிப்பிட்ட  சுற்றுலா  அமைச்சர்  நஸ்ரி  அசீஸ்,“நிறுவனத்தின்  நிர்வாகியைத் தூக்கில்  போட  வேண்டும்  என்கிறீர்களா? எனக்குப்  புரியவில்லை”, எனச்  சிரித்தார். “நிதானமாக …

சில மாணவர்களுக்காக பில்லியன் ரிங்கிட் திட்டமா?

மூன்றாண்டுகள்  ஆகிவிட்டன. பில்லியன்  ரிங்கிட்  செலவிடப்படுள்ளது. ஆனால், 1BestariNet-டை  மூன்று  விழுக்காட்டுக்கும்  குறைவான  மாணவர்களே  பயன்படுத்துகிறார்கள்  என்கிறார்  டிஏபி-இன்  சைருல் கீர்  ஜொகாரி. “இதனால். இதற்கும் பிபிஎஸ்எம்ஐ-  திட்டத்துக்கு  ஏற்பட்ட  நிலைதானா  என்ற  கேள்வி  எழுகிறது. அத்திட்டத்தில்  கணிதம், அறிவியல்  பாடங்களை  ஆங்கிலத்தில்  கற்பிப்பதற்கு  உதவும்  ஐடி  வன்பொருள்கள்…

நஜிப்: நம்மைப் பார்த்து பொறாமைப்படுகிறார் டச்சுப் பிரதமர்

நெதர்லாந்து  பிரதமர்  மார்க்  ருட், மலேசியப்  பொருளாதார  மேம்பாடு கண்டு  பொறாமை கொள்கிறாராம்.  பிரதமர்  நஜிப்  அப்துல் ரசாக்  இன்று  நாடாளுமன்றத்தில்  கூறினார். “நேற்று, நெதர்லாந்து  பிரதமரைச்  சந்தித்தபோது  நம்முடைய  பொருளாதார  முன்னேற்றம்  அவருடைய  நாட்டினுடையதைவிட  சிறப்பாக  இருப்பதாகக்  குறிப்பிட்டார். “அவர்  சொன்னதை  அப்படியே  எடுத்துச்  சொல்கிறேன் -உங்கள் …

முருகன் படம் ஒட்டப்பட்ட கனிமநீர் போத்தல்கள் அகற்றப்படும்

பத்துமலை கோயிலை விளம்பரப்படுத்தும் நோக்கத்துடன் கனிமநீர் போத்தலில் ஹலால் சின்னத்திற்கு பக்கத்தில் இந்து தெய்வம் முருகன் படம் பதிக்கப்பட்டிருக்கும் கனிமநீர் போத்தல்கள் நிலையடுக்கிலிருந்து அகற்றப்படும் என்று அந்நீர் தயாரிப்பு நிறுவனம் சுவான் சின் செண்ட். பெர்ஹாட் கூறுகிறது. மலேசிய முஸ்லிம் பயனீட்டாளர் சங்கம் (பிபிஐஎம்) போட்ட கூப்பாட்டை தொடர்ந்து…

சிலாங்கூர் எம்பி கபடதாரிகளின் அப்பன், நோ கூறுகிறார்

சர்ச்சைக்குரிய  கின்ராரா-டமன்சாரா  விரைவுசாலை  திட்டம்  தொடர  அனுமதி  கொடுத்துள்ள  சிலாங்கூர்  மந்திரி  புசார்  அஸ்மின் அலி “கபடதாரிகளுக்கெல்லாம்  அப்பன்”  என்று  மாநில  அம்னோ வருணித்துள்ளது. அஸ்மின்  மக்களுக்குச்  சேவையாற்றப்போவதாகக்  கொடுத்த  வாக்குறுதியை  மறந்து  சுய  ரூபத்தைக் காண்பிக்கத் தொடங்கியுள்ளார்  என  சிலாங்கூர்  அம்னோ  தலைவர்  நோ  ஒமார்  கூறினார்.…

நகர்புற ஏழைகள் பகுதி-நேர வேலை செய்து வருமானத்தைப் பெருக்கிக் கொள்ளலாம்

நகர்புற ஏழைகள், நகரங்களில்  வேலை  செய்து ரிம3,000  அல்லது  குறைவாக  வருமானம்  பெறுவோர்,  வியாபாரம், பகுதி-நேர  வேலை  போன்றவை செய்து  குடும்ப  வருமானத்தைப்  பெருக்கி  வாழ்க்கைத்  தரத்தை  உயர்த்திக்  கொள்ள வேண்டும். அப்படிச்  செய்வது நகர்புறங்களில்  உயர்ந்துவரும்  வாழ்க்கைச்  செலவினத்தை  எதிர்கொள்ள  உதவியாக  இருக்கும்  என  மலேசிய  முஸ்லிம் …

பாக்’ லா: பைபிளை எரிக்காதீர்

முன்னாள்  பிரதமர் அப்துல்லா  அஹ்மட் படாவி,  பைபிளை  எரிக்கும்  வேலையெல்லாம் கூடாது  என்பதை  வலியுறுத்தினார். பெர்காசா  தலைவர் இப்ராகிம்  அலி  இஸ்லாத்தின்  புனிதத்தைக் காக்கத்தான்  பைபிளை  எரிக்க  வேண்டும்  என்றார்  என்பதால்  அவர்மீது  நடவடிக்கை  எடுப்பதில்லை  என  அரசாங்கம் முடிவு  செய்திருப்பது  பற்றிக்  கருத்துக் கேட்கப்பட்டதற்கு  அவர்  இவ்வாறு …

எண்ணெய் விலை மேலும் குறைந்தால் உதவித் தொகைக்கு அவசியமிருக்காது

எண்ணெய்  விலை  ஒரு பீப்பாய்க்கு யுஎஸ்$73  என்ற  நிலைக்குக்  குறைந்தால் அதன்  பின்னரும் அரசாங்கம்,  நிதிச் சுமைக்கு  உதவித்  தொகைகள்தான்  காரணம்  எனச்  சொல்லிக்  கொண்டிருக்க  முடியாது. எண்ணெய்  விலை அந்த  நிலைக்குக்  குறைந்தால்  அரசாங்கம்  உதவித்  தொகை  என்ற  பெயரில்  எதுவும்  வழங்க  வேண்டிய  அவசியமிருக்காது  என …

மக்கள் எழுச்சி என்று மிரட்டுவது தேச நிந்தனைக் குற்றமாகும்

குதப்புணர்ச்சி  வழக்கில்  அன்வார் இப்ராகிம்  குற்றவாளி  எனத்  தீர்ப்பளிக்கப்பட்டால்  தெரு  ஆர்ப்பாட்டங்கள்  நடக்கும்  என  பிகேஆர்  கூறியிருப்பது  பொது  ஒழுங்குக்கு  விடுக்கப்பட்ட  மருட்டல் என  மக்கள்  முற்போக்குக்  கட்சி (பிபிபி) கருதுகிறது. பிகேஆர்  உதவித்  தலைவர் தியான்  சுவா  அவ்வாறு  கூறியது   “ஒரு  மிரட்டல்”  என்பதுடன்  அரசாங்கத்துக்கு  எதிராக …

பிஎஸ்எம் பக்கத்தானில் சேராது

பல ஆண்டுகள் காத்திருப்புக்கும்  பல  கருத்து  வேறுபாடுகளுக்கும்  பின்னர்,   பக்கத்தான்  ரக்யாட்டில்  சேரும்  எண்ணத்தை  பிஎஸ்எம்  கைவிட்டது. ஆனாலும்,   ஆளும்  பாரிசான்  நேசனல்  அரசாங்கத்தை வீழ்த்தும்  முயற்சியில்  பக்கத்தானுடன்  சேர்ந்து  பணியாற்ற  அது விருப்பம்  கொண்டிருக்கிறது. “14வது  பொதுத்  தேர்தலில்  ;பிஎன்னைக்  கவிழ்க்க  பக்கத்தானுடன்  தேர்தல்கூட்டு வைத்துக்கொள்ள பிஎஸ்எம் …