அரசாங்கக் கொள்கைகளை டிவி-இல் விளக்க வேண்டும்

பொதுமக்களுக்குக்  கவலை  தரும் விவகாரங்களுக்கு பிரதமரும்  அவரின் அமைச்சரவையும்  தொலைகாட்சி  வழி நேரடியாக  விளக்கமளிப்பது  நல்லது  என்கிறார்  கருவூலத்தின்  முன்னாள்  தலைமைச்  செயலாளர்  ஷெரிப்  முகம்மட்  காசிம். டிவி 3-இல் ஏப்ரல் 9-இல்  ஒளியேறிய  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கின்  நேர்காணல்  பற்றிக்  கருத்துரைத்த  ஷெரிப்,  அப்படிப்பட்ட  நேர்காணல்களில் …

மகாதிர்: நஜிப் வீட்டுத் திருமணம் ‘நூற்றாண்டின் மிகப் பெரிய திருமணம்’

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கின்  மகளின்  திருமணம்  மிக  ஆடம்பரமாக  நடைபெற்றதாக  விமர்சித்துள்ள  டாக்டர்  மகாதிர்  முகம்மட்  அதை “இந்நூற்றாண்டின்  மிகப்  பெரிய  திருமணம்”  என்றும் வருணித்துள்ளார். “இந்த  ஆண்டுக்கு மட்டுமல்ல  இந்த  நூற்றாண்டுக்கே மிகப்  பெரிய  திருமணம்  இதுதான். “அவர்கள்  300  பேருடன்  கஸக்ஸ்தான்  சென்றார்களே  அதை…

கைரி:நஜிப்பைக் கவிழ்க்கும் சதியில் தொடர்பில்லை

அம்னோ  இளைஞர் தலைவர்  கைரி  ஜமாலுடின். அப் பிரிவு  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கைக்  கவிழ்க்க  சதித்திட்டம்  தீட்டுகிறது  என்பதையும் அதில்  அவருக்கும்  தொடர்புண்டு  என்று கூறப்படுவதையும்  மறுக்கிறார். “நான்  ஆண்பிள்ளை. யாரையும்  கவிழ்க்க கையாட்கள்  எனக்குத்  தேவையில்லை”, என்று  புக்கிட்  மெர்தாஜாமில், பெர்மாத்தாங்  பாவ் இடைத்  தேர்தல் …

அன்வாரின் குதப்புணர்ச்சி வழக்கு : நூலாக வருகிறது

எதிரணித்  தலைவர் அன்வார்  இப்ராகிமின்  குதப்புணர்ச்சி வழக்குகளை விவரிக்கும்  நூல்  ஒன்று  நாளை முதல்  கடைகளில் விற்பனைக்கு  வருகிறது. 'The Prosecution of Anwar Ibrahim: The Final Play ’  என்ற  அந்நூலை  குயின்ஸ்  கவுன்சில்  மார்க் ட்ரோவெல்  எழுதியுள்ளார். ஆஸ்திரேலியரான  ட்ரோவெல்   குதப்புணர்ச்சி வழக்கு II…

பெர்மாத்தாங் பாவில் நான்கு-முனை போட்டி

பெர்மாத்தாங்  பாவ்  இடைத்  தேர்தலில்  நால்வர்  போட்டியிடுவதாக  தேர்தல்  அதிகாரி  ஜூஸ்னி  இஸ்மாயில்  அறிவித்தார். பிகேஆரின்  டாக்டர்  வான்  அசிசா  வான்  இஸ்மாயில்,  அம்னோவின் சுஹாய்மி  சபுடின், பிஆர்எம்-இன் அஸ்மான் ஷா  ஒஸ்மான், சுயேச்சை  வேட்பாளர்  சாலே இஷாக் ஆகியோரே  அந்நால்வருமாவர். வேட்பு  மனு  தாக்கல்  சுமூகமாகவே  நடந்தது.…

இன்று பெர்மாத்தாங் பாவ் இடைத் தேர்தல் நியமனம்

  பெர்மாத்தாங் பாவ் நாடாலுமன்ற இடைத் தேர்தலுக்கான வேட்பாளர் நியமனம் இன்று காலை மணி 9.00 லிருந்து 10.00 வரையில் நடைபெறும். இன்றிலிருந்து தொடங்கும் தேர்தல் பிரச்சாரம் இரண்டு வாரங்களுக்கு நடைபெறும். கடுமையான போட்டியாக இருக்கும் என்று கருதப்படும் இந்த இடைத் தேர்தலில் வாக்களிப்பு மே 7 இல்…

ஆர்ப்பாட்டக்காரர்கள் கிழக்கு மலேசியாவைப் பார்த்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்

பெட்டாலிங்  ஜெயாவில்  ஒரு  தேவாலயத்துக்கு  எதிராக  ஆர்ப்பாட்டம்  செய்தவர்கள், சாபா, சரவாக்கைப்  பின்பற்றி  பல்வேறு  சமயத்தவரிடையே  உறவுகளை  வலுப்படுத்த  வேண்டும்  என  அம்னோ  தலைமைச்  செயலாளர்  தெங்கு  அட்னான்  மன்சூர்  கூறினார். “சாபா, சரவாக்கில் நடப்பதை  அவர்கள் பின்பற்ற  வேண்டும். தேவாலயமும்  பள்ளிவாசலும்  பக்கத்தில் பக்கத்தில்  உள்ளன. “வெள்ளிக்கிழமை …

நஜிப், ரோஸ்மாவுக்கு எதிரான செந்தமிழ்ச் செல்வியின் மனு தள்ளுபடி

காலஞ்சென்ற  தனியார்  துப்பறிவாளர்  பி.பாலசுப்ரமணியத்தின்  மனைவி  ஏ.செந்தமிழ்ச்செல்வி,  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்குக்கும்  அவரின்  மனைவி  ரோஸ்மா  மன்சூருக்கும்  எதிராக பதிவுசெய்திருந்த  ரிம1.9 மில்லியன் வழக்கை  மேல்முறையீட்டு  நீதிமன்றம்  இன்று  தள்ளுபடி  செய்தது. செந்தமிழ்ச்செல்வியின்  வழக்குரைஞர்  அமெரிக்  சிது  பதிவுசெய்த  முறையீட்டு  மனு  குறைபாடுடையது  என  மேல்முறையீட்டு  நீதிமன்றம் …

சமூக ஆர்வலர் ஆடம் அட்லியின் தந்தை விபத்தில் மரணம்

சமூக ஆர்வலர் ஆடம் அட்லியின் தந்தை  அப்துல் ஹலிம் அப்துல் அமிட் இன்று  காலை  உயிரிழந்தார். தந்தை  இறந்த  செய்தியை  ஆடம் டிவிட்டரில்  பதிவிட்டிருந்தார். கெரேதாஅபி   தானா மலாயுவின் முன்னாள்  ஊழியரான  அப்துல் ஹாலிம் நேற்றிரவு  பினாங்கில்,  பினாங்காவில் மோட்டார்-சைக்கிளில்  சென்றபோது விபத்தில்  சிக்கிக்  கொண்டார்.  விபத்தில் படுகாயமடைந்த …

கைரி:‘நேரான பாலம்’ கட்டுவதே மலேசியாவின் விருப்பம்

ஜோகூர்- சிங்கப்பூர்  பாலத்துக்குப்  பதிலாக நேரான  பாலம்  ஒன்றைக்  கட்டும்  சாத்தியத்தைதான்  மலேசியா  ஆராய்ந்து  வருவதாக  இளைஞர், விளையாட்டுத்  துறை  அமைச்சர்  கைரி  ஜமாலுடின் கூறுகிறார். இரு  நாட்டுத்  தலைவர்களும்  இன்னும்  10  நாள்களில்  சந்திப்பார்கள்  என்றும்  அப்போது அவர்கள் அதை  ஆராய்வார்கள்  என்றும்  கைரி  சிங்கப்பூரில்  செய்தியாளர்களிடம் …

ஆர்ப்பாட்டம் நடக்கும் என்ற மிரட்டலைத் தொடர்ந்து குளுவாங் கூட்டம் இரத்து

குளுவாங்கில் நேற்றிரவு  நடைபெறவிருந்த பொருள்  சேவை  வரி  மற்றும்  இன  அரசியலுக்கு எதிரான  கருத்தரங்கு நடைபெறவில்லை. கருத்தரங்கு  நடைபெறவிருந்த  உணவகம்  மூடப்பட்டிருந்தது. உணவகம்  மூடப்பட்டிருந்ததற்குக் காரணம்  தெரியவில்லை. ஆனால், அம்னோ  இளைஞர்கள்  அக்கருத்தரங்கு “இனவாதமிக்கது”  என்று  கூறி  அது  நடந்தால்  அதற்கெதிராக  ஆர்ப்பாட்டம்  செய்யப்போவதாக    எச்சரித்திருந்தனர்.. கருத்தரங்கு  பேச்சாளர்கள்…

அம்னோ: இணையத் தளம்: நஜிப்பை வெளியேற்ற இளைஞர் தலைவர்கள் சதி…

அம்னோ- ஆதரவு  இணையத் தளமொன்று  அம்னோ  இளைஞர்  தலைவர்கள்  பிரதமர்  நஜிப்பைக்  கவிழ்ப்பதற்குச்  சதி  செய்வதாகக்  குற்றம்  சாட்டியுள்ளது. ஆனால், சதிக்கூட்டத்தில்  ஒருவர்  எனக்  குறிப்பிடப்பட்ட  இளைஞர்  பிரிவு  நிர்வாகக்  குழு  உறுப்பினர்  அர்மான்  அஸ்ஹா  அபு  ஹனிபா  அக்குற்றச்சாட்டை  மறுத்தார். நேற்றிரவு  நடைபெற்ற  ஒரு கூட்டத்தில்  அம்னோ …

மகாதிர்: 1எம்டிபி-இல் ரிம27 பில்லியனைக் காணவில்லை

1மலேசியா  மேம்பாட்டு  நிறுவனம்(1எம்டிபி)  செய்த  கொள்முதல்களையெல்லாம்  கணக்கிடும்  சிரமமான  பணியை  மேற்கொண்ட  டாக்டர்  மகாதிர்  முகம்மட் ரிம27 பில்லியனுக்குக்  கணக்கில்லை  என்கிறார். “தெரிந்த  கொள்முதல்களைக்  கூட்டிப்  பார்த்தால்  ரிம14.7 பில்லியன்  வருகிறது. மீதமிருப்பது  ரிம27 பில்லியன். “ஒரு  பில்லியனுக்குமேல்   பெட்ரோ  சவூதிக்கு,  அந்நிறுவனத்தின்  மதிப்பையோ அதன்  சொத்துகளையோ சரிபார்த்துக் …

இன்னொரு முன்னாள் அமைச்சரும் அம்னோவை எச்சரிக்கிறார்

சக முன்னாள்  அமைச்சர்களான  சைட்  ஹமிட் அல்பார், சைனுடின்  மைடின்  ஆகியோரைப்  பின்பற்றி  முன்னாள்  தகவல்  அமைச்சர்  ரயிஸ்  யாத்திமும்  அம்னோவில்  மாற்றம்  தேவை  என்று  எச்சரிக்கை  மணி  அடித்துள்ளார். விவகாரங்கள்  பற்றி  விளக்களித்து  பொதுமக்களின்  அதிருப்தியை அடக்கி விடலாம்  என்ற  அம்னோவின்  பாரம்பரிய  அணுகுமுறை  இப்போது  எடுபடாது …

‘தேவாலய ஆர்ப்பாட்டக்காரர்களைத் தண்டிக்காதீர், நல்லறிவு புகட்டுவீர்’

தாமான்  மேடான்  தேவாலயத்தில்  ஆர்ப்பாட்டம்  செய்தவர்களைத்  தண்டிக்க  வேண்டாம்  என்றும்  அரசாங்கம்  சமயங்களுக்கிடையில்  நல்ல  புரிந்துணர்வை  ஏற்படுத்தும்  பணிகளை  மேற்கொள்ள  வேண்டும் என்றும் சாபா  தேவாலயங்கள்  மன்றம் (எஸ்சிசி)  கேட்டுக்கொண்டிருக்கிறது. “அது  தவிர (தண்டிப்பதைவிட) மலேசியரிடையே நல்ல  புரிந்துணர்வை ஏற்படுத்தும் பொறுப்பான, தார்மீக  கடமையும்  அரசாங்கத்துக்கு  உண்டு. “இதுபோன்ற …

மலேசியத் தூதர் டெம்போ-வைச் சந்தித்து நஜிப் பற்றித் ‘தெளிவுபடுத்துவார்’

மலேசியத்  தூதர்  ஸஹ்ரேய்ன்  முகம்மட்  ஹஷிம்,  டெம்போ  சஞ்சிகையின்  ஆசிரியர்களைச்  சந்தித்து  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கின்  பின்னணி  பற்றி   அவர்களுக்கு  விளக்கமளிப்பார். இந்தோனேசியாவில்  பிரபலமாக  விளங்கும்  நடப்பு  விவகாரங்களை  விவரிக்கும்  சஞ்சிகையான  டெம்போ.  நஜிப்  மற்றும்  அவரின்  துணைவியாரது  ஆடம்பர  வாழ்க்கை  பற்றிக்  கட்டுரை வெளியிட்டிருந்ததை  அடுத்து …

ஆயர் போலீஸ் பாதுகாப்பை நாடுகிறார்

கடந்த  ஞாயிற்றுக்கிழமை  எந்த  தாமான்  மேடான்  தேவாலயத்தில்  சிலுவையை  அகற்றக்  கோரி  ஆர்ப்பாட்டம்  நடந்ததோ  அந்தத்  தேவாலயம்  போலீஸ்  பாதுகாப்பை  நாடுகிறது. தேவாலயம்  செய்த  போலீஸ்  புகாரில்  அதன்  ஆயர்,  தம்  பாதுகாப்பு  குறித்தும்  தேவாலயம்  வரும்  கூட்டத்தினரின்  பாதுகாப்பு  குறித்தும்  அஞ்சுவதாகக்  கூறினார். குறிப்பாக, ஆர்ப்பாட்டக்காரர்களில்  ஒருவரைச் …

‘இனவாத’ ஜிஎஸ்டி கருத்தரங்குக்கு எதிராக அம்னோ இளைஞர்கள் ஆர்ப்பாட்டம் செய்வர்

குளுவாங்கில்  இன்றிரவு டிஏபி  பிரதிநிதிகள் கலந்துகொள்ளும்  ஒரு  கருத்தரங்கம்  “இனவாதமிக்கது”  என்பதால்  அம்னோ  இளைஞர்கள்  அதை எதிர்த்து  ஆர்ப்பாட்டம்  செய்வர். பொருள்  சேவை  வரி  மற்றும்  இன  அரசியல்  மீதான  அக்கருத்தரங்கில்  செனாய்,  மெங்கிபோல்  சட்டமன்ற  உறுப்பினர்கள்  உள்பட  டிஏபி-இன்  நான்கு  பேச்சாளர்கள்  கலந்துகொள்கிறார்கள். “டிஏபி இன  அடிப்படையில்…

உறுப்பினர்கள் 55-இல் இபிஎப் பணத்தை மீட்டுக்கொள்ளலாம்: பிரதமர் உத்தரவாதம்

ஊழியர்  சேமநிதி  வாரிய(இபிஎப்)  உறுப்பினர்கள் 55வது  வயதில்  அவர்களின்  சேமிப்பை  மீட்டுக்கொள்ள  முடியும்  எனப்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  உததரவாதம்  அளிக்கிறார். “இபிஎப்  உறுப்பினர்கள் 55 வயதில் பணத்தை  மீட்டுக்கொள்ளும்   உரிமை  தக்க வைத்துக்கொள்ளப்படும்  என்று  உத்தரவாதம் அளிக்கிறேன்”, என  நஜிப்  இன்வெஸ்ட்  மலேசியா  2015  நிகழ்வில்…

பாடாங் புசார் மருத்துவமனை- நிறைவேற்றப்படாத இன்னொரு வாக்குறுதி

பாடாங் புசார்  மருத்துவமனை  திட்டத்தை  நிறுத்தி  வைக்கும்  முடிவு  அரசாங்கத்தின்  வாக்குறுதியை  நம்பிய  மக்களுக்குக்  கிடைத்த  மற்றுமொரு  ஏமாற்றமாகும்  என பெர்லிஸ்  பிகேஆர்  இளைஞர்  தலைவர் முகம்மட்  ஷாருன்  ரட்ஸி கூறினார். 2011-இல்  அறிவிக்கப்பட்ட  அத்திட்டத்தைப் பணப்பற்றாக்குறையால்   தள்ளிவைப்பதென  பொருளாதாரத்  திட்டமிடல்  பிரிவு முடிவு  செய்துள்ளது. “கூட்டரசு  அரசாங்கம் …

‘ஹுடுட்-எதிர்ப்பு வேட்பாளருக்கு வாக்களிப்பது பாவம்’ என்று பதிவிட்டவர்மீது பாஸ் இளைஞர்கள்…

பெர்மாத்தாங்  பாவ்  பாஸ்  தலைவர்  ஒருவர்  ஹுடுட்டை  எதிர்க்கும்  வேட்பாளர்களுக்கு  முச்லிம்கள்  வாக்களிக்கக்  கூடாது  என்று  பதிவிட்டிருப்பதைக்  கண்டு பாஸ்  இளைஞர்  பிரிவு  கொதிப்படைந்துள்ளது. அவ்வாறு  பதிவிட்ட  அத்தொகுதி  உலாமா விவகாரப்  பிரிவுத்  தலைவர்  பத்ருல்  அப்துல்  ரஹ்மான், அப்படிப்பட்ட  வேட்பாளர்களுக்கு  வாக்களிப்பது “ஹராமாகும்”  என்றார். அவருடைய  பதிவுக்கு …

54 ஜிஎஸ்டி- எதிர்ப்பாளர்கள் நாளை குற்றம் சாட்டப்படுவர்

கடந்த  மாதம் கிளானா  ஜெயா சுங்கத்  துறை  தலைமையகத்தில்  பொருள், சேவை  வரிக்கு  எதிராக  உள்ளிருப்புப்  போராட்டம்  நடத்தியபோது  கைதான சமூக  ஆர்வலர்களில்  54பேர்  அமைதிப்  பேரணிச்  சட்டத்தை  மீறியதற்காக  நாளை  நீதிமன்றத்தில்  நிறுத்தப்படுவர். உள்ளிருப்புப்  போராட்டத்தில்  ஈடுபட்டதற்காக ஏற்கனவே 25 பேர் -அவர்களில்  இருவர்  நாடாளுமன்ற  உறுப்பினர்கள்-…

ஐஜிபி-இன் சகோதரர் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்

தாமான்  மேடானில்  சிலுவை- எதிர்ப்பு  ஆர்ப்பாட்டம்  நடத்தியதற்காக  அப்துல்லா  அபு  பக்கார், பெட்டாலிங்  ஜெயா போலீஸ்  மாவட்டத்  தலைமையகத்துக்கு  விசாரணைக்காக  அழைக்கப்பட்டிருக்கிறார். ஆனால், போலீஸ் படைத்  தலைவர்  காலிட்  அபு  பக்காரின்  உடன்பிறப்பான  அவர்  அதைப்  பற்றிக் கவலைப்படவில்லை. தாமான்  லிண்டோங்கான்  ஜெயா  அம்னோ  கிளைத்  தலைவரான  அப்துல்லா,…