அரசியல்வாதிகளின் பேச்சுகளை அரசாங்கம் ஒற்றுக்கேட்பதில்லை

பொதுமக்கள்  அல்லது  அரசியல்வாதிகளின்  தொலைபேசி பேச்சுகளை  அரசாங்கம்  ஒற்றுக்கேட்பதில்லை  எனப்  பிரதமர்துறை  அமைச்சர்  நன்சி  ஷுக்ரி  இன்று  நாடாளுமன்றத்தில்  தெரிவித்தார். ஜுலியன் டான் கொக்  பிங்(டிஏபி-ஸ்டேம்பின்)-கின்  கேள்விக்கு  அவர்  எழுத்துப்பூர்வமாக  இவ்வாறு  பதில்  அளித்தார்.

ஓ, முருகா!

  கனிமநீர் போத்தலில் ஒட்டப்பட்டிருக்கும் ஹலால் சின்னத்திற்கு அடுத்து ஒட்டப்பட்டுள்ள ஓர் இந்து தெய்வத்தின் படம் "வழிபாட்டு கூறுகளை" கொண்டிருக்கலாம் என்று மலேசிய பயனீட்டாளர்கள் சங்கம் (பிபிஐஎம்) கூறுகிறது. அம்மாதிரியான போத்தல்களை தயாரிப்பதற்கு அவற்றை தயாரித்த சுவான் சின் செண்ட். பெர்ஹாட்டிற்கு "தீய நோக்கம்" இருக்கலாம் என்று பிபிஐஎம்மின்…

நஸ்ரி: விவேகானந்தா ஆசிரமம் பாதுகாக்கப்பட வேண்டும்

  கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸ்சில் அமைந்திருக்கும் 110 ஆண்டுகால விவேகனந்தா ஆசிரமம் காப்பாற்றப்பட வேண்டும் என்று சுற்றுப்பயணம் மற்றும் கலாச்சார துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அசிஸ் அந்த ஆசிரமத்தை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்று பேசுகையில் கூறினார். ஆசிரமம் அமைந்துள்ள அந்நிலம் மேம்படுத்தப்படுவதை நிறுத்துவதற்காக…

அன்வார்: ஷாபி திரும்பவும் கல்லூரி சென்று சட்டம் பயில வேண்டும்

அரசுத்  தரப்பு  வழக்குரைஞர்  முகம்மட்  ஷாபி  அப்துல்லாவின்  வாதங்களைக்  கேட்டு  ஆத்திரமடைந்த   அன்வார்  இப்ராகிம், ஷாபி  திரும்பவும்  கல்லூரி  சென்று சட்டம் படிக்க  வேண்டும்  என்று  கடுப்பாகக்  கூறினார். அந்த  அனுபவம்  வாய்ந்த  வழக்குரைஞர்,  எதிர்த் தரப்பு  முன்வைத்த  வாதங்களுக்குப்  பதிலளிக்காமல்  அரசியல்  சொற்பொழிவாற்றினார்  என்றாரவர். ஷாபி  நீதிமன்ற …

பிபிஎஸ் சொத்துகள் முடக்கப்படும்

பினாங்கு மாநில  அரசால் உருவாக்கப்பட்ட  தன்னார்வக்  காவல்  படை(பிபிஎஸ்)-யின்  வங்கிக்  கணக்கும்  சொத்துகளும்  முடக்கப்படும். அது  ஒரு  சட்டவிரோதமான  அமைப்பு  என    அறிவிக்கப்பட்டிருப்பதை  அடுத்து  இவ்வாறு  செய்யப்படுகிறது. உள்துறை  அமைச்சர்  அஹமட்  ஜாஹிட்  ஹமிடி,  1966ஆம்  ஆண்டு சங்கங்கள்  சட்டப்படி  பிபிஎஸ்   சட்டத்துக்குப்  புறம்பான  அமைப்பு  என  நேற்று …

மைக்கி: அட்னான் ஆசிரமத்தைக் காக்க வேண்டும்

கூட்டரசு பிரதேச  அமைச்சர்  தெங்கு  அட்னான்  தெங்கு  மன்சூர்,  பிரிக்பீல்ட்சில்  வரலாற்றுச்  சிறப்புமிக்க  சுவாமி  விவேகாநந்தா  ஆசிரம்  அமைந்துள்ள  பகுதியில்  மேற்கொள்ளப்படவுள்ள  மறு-மேம்பாட்டுத்  திட்டத்தில்  தலையிட  வேண்டும். இவ்வாறு கேட்டுக்கொண்ட  மலேசிய  இந்திய  வர்த்தக, தொழிலியல்  சங்கக்  கூட்டமைப்பு (மைக்கி)  தலைவர்  கே.கே. ஈஸ்வரன், தெங்கு  அட்னான்  மேம்பாட்டுப் …

பிகேஆர்: அன்வார் சிறைக்கு அனுப்பப்பட்டால் மக்கள் பொங்கி எழுவர்

பிகேஆர்  நடப்பில்  தலைவர்  அன்வார்  இப்ராகிம்  குதப்புணர்ச்சி  வழக்கில்  குற்றவாளி  எனத்  தீர்ப்பளிக்கப்பட்டால்  ஆர்ப்பாட்டங்கள்  நடப்பது  உறுதி  என்று  அதன்  உதவித்  தலைவர்  தியான்  சுவா  எச்சரிக்கிறார். நீதி  மாளிகைக்கு  வெளியில்  500  பேருக்கு  மேற்பட்ட  ஆதரவாளர்களிடையே  பேசிய  தியான்  சுவா, கோலாலும்பூரில்  வார  இறுதியில்  ஆதரவாளர்கள்  ஒன்றுதிரட்டப்படுவர் …

அஸ்மின்: குப்பைகளைக் கண்டால் என்னிடம் சொல்லுங்கள்

மந்திரி  புசார்  அஸ்மின்  அலி, மூன்று  மாதங்களில்  சிலாங்கூரைக்  குப்பையற்ற  மாநிலமாக  மாற்ற  உறுதி  பூண்டிருக்கிறார். குப்பைகளைக்  கண்டால் புகார்  செய்வதற்காக  தம்  கைபேசி  எண்ணையும்  அவர்  கொடுத்திருக்கிறார். இதன்  தொடர்பில்  எல்லா நகராட்சி  மன்றங்களுக்கும் அவர்  கண்டிப்பான உத்தரவைப்  போட்டிருக்கிறார். “பெட்டாலிங்  ஜெயா  நகராட்சி  மன்றம்,  சுபாங்…

மஇகா: 2020-இல் தேவாலயங்களே இருக்கமாட்டா

முஸ்லிம்- பெரும்பான்மை  பகுதிகளில்  தேவாலயங்கள்  கட்ட  எதிர்ப்புத் தெரிவிக்கப்படுவதை  மஇகா  இளைஞர்  தலைவர்  சி.சிவராஜா  கண்டித்துள்ளார். போகும்  போக்கைப்  பார்த்தால்  2020-இல்  முஸ்லிம்- அல்லாதாருக்கு  வழிபாட்டு  இல்லங்களே  இருக்காது  போல்  தெரிகிறது  என்றாரவர். முஸ்லிம்களின்  எண்ணிக்கை  பெருகிக்கொண்டே  வருகிறது. 2020-இல்  அது  மலேசிய  மக்கள்  தொகையில்  70  விழுக்காடு …

எம்பி: அமைச்சரவை ஒத்துக்கொள்ளாவிட்டால் குருப் விலகுவாரா?

பைபிளை  எரிக்கப்போவதாக  இப்ராகிம்  அலி  விடுத்த  மிரட்டலைச்  சட்டத்துறைத்  தலைவர்  மறுபரிசீலனை  செய்ய  வேண்டும்  என்ற  பிரதமர்துறை  அமைச்சர்  ஜோசப்  குருப்-பின்  கோரிக்கையை  அமைச்சரவை  ஏற்கவில்லை  என்றால்  குருப்  பதவி  விலகத்  தயாரா? இப்படி  ஒரு  சவாலை  விடுத்துள்ளார்  பாஸ் கட்சியின்  சிப்பாங்  எம்பி  ஹனிபா  மைடின்.  நாடாளுமன்ற …

பங் மொக்தார்: புரோட்டோனின் போலிகளைக் கண்டு வெட்கப்படுகிறேன்

தேசிய  கார்  தயாரிப்பாளரான  புரோட்டோன்  “சுயமாக” கார்  தயாரிக்காமல்  மற்ற  கார்  தயாரிப்பாளர்களின்  தொழில்நுட்பத்தைப்  பயன்படுத்தியே  கார்  தயாரிப்பதைக்  கண்டு அவமானத்தால்  கூனிக்  குறுகிப்போவதாக   கினாபாத்தாங்கான் பிஎன்  எம்பி  பங்  மொக்தார்  ரடின்  கூறுகிறார். “முன்பு  மிட்சுபிஷி. இப்போது  ஹொண்டா. உடல்  மலேசியாவுடையதாகவும்  உள்ளிருப்பது  ஜப்பானுடையதாகவும்  இருப்பதால்  பயன்…

பிள்ளை பராமரிப்பு விவகாரத்திலிருந்து நழுவுகிறது அரசாங்கம்

குழந்தை  பராமரிப்பு  உள்பட, வெவ்வேறு  சமயத்தவர்  சம்பந்தப்பட்ட  திருமணப்  பிரச்னைகள்  மாநில  அளவில்  தீர்த்துக்கொள்ளப்பட  வேண்டியவை என்கிறார்  பிரதமர்துறை  அமைச்சர்  ஜமில்  கீர்  பஹாரோம்.  ஏனென்றால், ஷரியா  நீதிமன்றமும்  இஸ்லாமிய  விவகாரங்களும்  மாநில  அரசுகளின்  அதிகாரத்துக்கு  உட்பட்டவை. “அவற்றைக்  கூட்டரசு  அரசாங்கத்திடம்  கொண்டு  வராதீர்கள். மாநில  அரசுகளுக்கே  திரும்பிச் …

பாஹ்மிக்கும் நண்பர்களுக்கும் ஆதரவாக மாணவர்கள் யுஎம்-மை ஆக்கிரமிப்பார்கள்

வெள்ளிக்கிழமை  மலாயாப்  பல்கலைக்கழக (யுஎம்) மாணவர்கள் அப்பல்கலைக்கழகத்தை  ‘ஆக்கிரமித்துக்  கொள்வர்’. கடந்த  வாரம் பல்கலைக்கழக  வளாகத்தில்  பேரணியில்  கலந்துகொண்ட பல்கலைக்கழக மாணவர்கள்  எண்மருக்கு  எதிராக எடுக்கப்படும்  ஒழுங்கு  நடவடிக்கைக்  கண்டிக்கும்  வகையில்  அவர்கள்  அந்நடவடிக்கையை  மேற்கொள்வார்கள். மாணவர்  ஒற்றுமையைக்  காண்பிக்க, அவர்கள்   காலை மணி  9--இலிருந்து  மாலை  மணி…

இடைநீக்கம் செய்யப்பட்ட எம்பிகளுக்கு சம்பளம் கொடுக்கப்பட வேண்டும்: நீதிமன்றம் தீர்ப்பு

எம்பிகள்  நாடாளுமன்றத்திலிருந்து  இடைநீக்கம்  செய்யப்பட்டிருக்கும்  வேளையில்  அவர்களுக்கு  சம்பளமும் மற்ற  ஊதியங்களும்  வழங்கப்பட   வேண்டும்  என்ற  தீர்ப்பை  கூட்டரசு  நீதிமன்றம் இன்று  நிலைநிறுத்தியது. 2009-இல்  ஒராண்டுக்  காலம்  இடைநீக்கம்  செய்யப்பட்டிருந்தபோது  தமக்குச்  சம்பளம் கொடுக்கப்படாமல்  நிறுத்தி  வைக்கப்பட்டதை  அடுத்து  பூச்சோங்  எம்பி  கோபிந்த்  சிங்  டியோ  சம்பளம்  கொடுக்கப்பட …

எஸ்பிஎம் வினாத்தாளில் இனச் சர்ச்சையைத் தூண்டும் தலைப்புகளைக் கண்டு எம்பி…

Info Didik  வெளியிட்டிருக்கும்  எஸ்பிஎம்  மேற்கோள்  நூல்  ஒன்றில்  பகாசா  மலேசியாவில்  கட்டுரை  எழுதும் பகுதியில்  “சீனர்கள்  மலாய்க்காரர்களைக்  கொல்ல  விரும்புகிறார்கள்”  என்ற  தலைப்பில்  கட்டுரை  எழுதுமாறு  மாணவர்கள்  கேட்டுகொள்ளப்பட்டிருந்து  கண்டு சிபு டிஏபி  எம்பி  ஒஸ்கார்  லிங் அதிர்ச்சி  அடைந்தார். அதுபோல் பல  தலைப்புகள். அது  முந்திய  ஆண்டுகளில்  வெளிவந்த …

நீதிமன்றத்துக்கு வெளியில் ‘அன்வாரைக் கைது செய்’, ‘வாழ்க சைபுல்’ முழக்கங்கள்

இன்று  எதிரணித்  தலைவர்  அன்வார்  இப்ராகிமின்  குதப்புணர்ச்சி  வழக்கு  விசாரணை  முடிந்த  பின்னரும்  சைபுல்  ஆதரவாளர்கள் சுமார்  100 பேர்  கலைந்து செல்லாமல்  நீதிமன்றத்துக்கு  வெளியிலேயே  சுற்றிக்  கொண்டிருந்தனர். கைகளில் அறிவிப்புப்  பலகைகளை  ஏந்தி  இருந்த  அவர்கள் "Tangkap Anwar"(அன்வாரைக்  கைது  செய்), "Hidup Saiful” (சைபுல்  வாழ்க)…

பைபிள் விவகாரத்தில் சுல்தானின் ஒப்புதலை நாடுகிறார் எம்பி

  சிலாங்கூர் பைபிள் விவகாரத்தில் மாநில அரசு சுல்தானின் ஒப்புதலை நாடுகிறது. அதன் பின்னர் அதற்கு ஒரு தீவு காணப்படும் என்று சிலாங்கூர் மந்திரி புசார் அஸ்மின் அலி இன்று கூறினார். பறிமுதல் செய்அயப்பட்ட பைபிள்கள் சம்பந்தமாக ஜாயிஸ் மற்றும் மைஸ்சுடன் பல சந்திப்புகள் நடத்தப்பட்டுள்ளன. நல்ல விளைவுகளைக்…

ரிம1 பில்லியன் இழப்பீடு நெடுஞ்சாலை பராமரிப்பாளர்களுக்கு

கூட்டரசு  அரசாங்கம்,,  2008-இலிருந்து 2013-வரை சாலைக்  கட்டணத்தைக்  கூட்டாமல்  இருப்பதற்காக   நெடுஞ்சாலை  பராமரிப்பாளர்களுக்கு  ரிம1 பில்லியன்  இழப்பீடு  கொடுத்துள்ளது. நாடாளுமன்றத்தில் ங்கா  கொர்  மிங்-குக்கு  வழங்கப்பட்ட  எழுத்து  வடிவிலான  பதிலில்  பொதுப்பணி  அமைச்சு  இதனைத்  தெரிவித்தது. 2014ஆம்  ஆண்டுக்கு  மேலும்  ரிம400 மில்லியன்  அவற்றுக்குக்  கொடுக்க  வேண்டியிருக்கும். 15…

தேர்தல் தொகுதி வரைபடங்கள் பொதுமக்களுக்கு விற்கப்படாது

தேர்தல்  ஆணையம் (இசி) புதிய  தேர்தல்  தொகுதிகளை  முடிவு செய்ததும் அந்தந்த  தொகுதிகளில்   அவற்றைக்  காட்சிக்கு  வைக்கும்.  அவற்றைப்  பார்த்து  பொதுமக்கள்  தங்கள்  தொகுதிகள்  பற்றித்  தெரிந்துகொள்ளலாம். தொகுதிகள்  பற்றிக்  கருத்துத்  தெரிவிக்க  விரும்வோர் அப்போது  அவற்றைப்  படம்  பிடித்து  வைத்துக்கொள்ள  வேண்டும். ஏனென்றால்,  புதிய  தொகுதிகள்  அங்கீகரிக்கப்பட்டு …

சிலாங்கூரில் தீவிரவாதத்துக்கு இடமில்லை: எம்பி திட்டவட்டம்

சிலாங்கூர்  மந்திரி  புசார்  அஸ்மின் அலி  அம்மாநிலம்  நீதியையும்  மிதவாதத்தையும்  நிலைநிறுத்த  பாடுபடும்  என உறுதி  கூறியுள்ளார். பெட்டாலிங்  ஜெயாவில்  முஸ்லிம்  ஜனநாயகவாதிகள் கருத்தரங்கில்  பேசிய  அவர்,  “தீவிரவாதிகளுக்கும்” “வெறியர்களுக்கும்”  சிலாங்கூர் மாநிலத்தில்  இடமில்லை  என்றார். “அந்த  வகையில்,  அப்படிப்பட்ட  உணர்வுகளுக்கு  சிலாங்கூர்  மாநில  நிர்வாகத்தில்  இடமிருக்காது  என்பதையும் …

அஸ்மின், ஃபாட்வாவை எதிர்ப்பது எங்களது உரிமை

  சிலாங்கூர் இஸ்லாமிய விவகார மன்றம் சிஸ்டர்ஸ் இன் இஸ்லாம் (எஸ்ஐஎஸ்) என்ற அமைப்புக்கு எதிராக விடுத்திருந்த ஃபாட்வாவை எதிர்ப்பது தங்களுடைய உரிமை என்று அந்த அமைப்பு கூறுகிறது. சிலாங்கூர் மந்திரி புசார் அஸ்மின் அலியின் கருத்துக்கு எதிர்வினையாற்றிய எஸ்ஐஎஸின் திட்ட நிருவாகி சூரி கெம்பெ தங்களுடைய அமைப்பின்…

பாஸ்: ரசாலி இருக்கையில் பக்கத்தான் எதற்கு?

பிஎன்/அம்னோ-வில்  முன்னாள்  நிதி  அமைச்சர்  தெங்கு  ரசாலி  போன்ற ஒருவர் இருக்கும்போது  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்குக்கு  பக்கத்தான்  ரக்யாட்  போன்ற  அரசியல்  எதிரிகள்  தேவையில்லை. தெங்கு  ரசாலி,  கடந்த  வாரம்  நஜிப்  நாடாளுமன்றத்தில்  தாக்கல்  செய்த  2015  பட்ஜெட்டைக்  குறைகூறியிருப்பதை  அடிப்படையாக  வைத்து  பாஸ்  ஆய்வு  மைய …

பாஹ்மிக்கு ஆதரவு தெரிவிக்க யுஎம் மாணவர்கள் ஒன்றுதிரள வேண்டும்

எதிரணித்  தலைவர் அன்வார்   இப்ராகிமின்  சொற்பொழிவு  நிகழ்வில்  கலந்து கொண்டதற்காக  மலாயாப் பல்கலைக்கழக(யுஎம்)த்தின்  ஒழுங்கு  நடவடிக்கையை  எதிர்நோக்கும்  மாணவத்  தலைவர்  பாஹ்மி  சைனலுக்கு  ஆதரவாக யுஎம்  மாணவர்கள்  ஒன்றுதிரள  வேண்டும்  என  மாணவர்  அமைப்பு  ஒன்று கேட்டுக்கொண்டிருக்கிறது. நவம்பர் 7-இல், பாஹ்மி  விசாரிக்கப்படும்போது  மாணவர்கள்  அணி திரண்டு  பாஹ்மிக்கு …