பாஸ்: பினாங்கில்”வெளிநாட்டில்-பிறந்த” 14,000 வாக்காளர்கள்

பினாங்கு பாஸ், அம்மாநில வாக்காளர் பட்டியலில் 14,000 ‘அந்நியர்கள்’ வாக்காளர்களாக இடம்பெற்றிருப்பதை அடையாளம் கண்டிருப்பதாகவும் அது பற்றி விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளது. இம்முறைகேட்டைக்  கட்சியின் தேர்தல் குழு கண்டுபிடித்ததாக மாநில பாஸ் இளைஞர் பகுதிச் செயலாளர் அப்னான் ஹமிமி தாயிப் அஸாமுடின் கூறினார். அவர்களின் அடையாள அட்டையில்…

தேர்தல் மோசடிகளில் ஈடுபட்டதை இராணுவத் தளபதி மறுத்தார்

தேர்தல் மோசடியில் தாங்கள் சம்பந்தப்பட்டதாக முன்னாள் ஆயுதப் படை வீரர்கள் சிலர் கூறிக் கொள்வது, துரோகச் செயல் என ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் சுல்கிப்லி முகமட் ஜின் வருணித்துள்ளார். இன்று பிற்பகல் வெளியிட்ட உணர்வுப்பூர்வமான அறிக்கை ஒன்றில் சுகிப்லி அந்தக் குற்றச்சாட்டுக்களை கூறியவர்களைக் கடுமையாகச் சாடியதுடன்…

பக்காத்தான்: தேர்தல் குழுவில் பிஎன் “எங்களை விழுங்கி விடும்”

தேர்தல் சீர்திருத்தம் மீதான உத்தேச நாடாளுமன்றத் தேர்வுக் குழுவின் அமைப்பு குறித்து பக்காத்தான் ராக்யாட் எம்பிக்கள் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர். பிஎன் ஆதரவு சுயேச்சை ஒருவர் சேர்த்துக் கொள்ளப்படுவார் என்பது அந்த ஆட்சேபத்துக்கு முக்கியக் காரணம் என மலேசியாகினியிடம் அவர்கள் தெரிவித்தனர். "அந்தக் குழுவில் பக்காத்தான் எப்படி வாக்களிக்க வேண்டும்?"…

இண்ட்ராப் வழக்குரைஞர் நாடுகடத்தப்பட்டது மீது ஏன் இந்த மெளனம்?

கருத்தாக்கம் - டாக்டர் லிம் டெக் கீ மக்களின் எதிர்ப்புணர்வையும் மனச்சாட்சியையும் உசுப்பிவிட்டு, அதிகாரத்தையும் பலத்தையும் மூர்க்கத்தனமாகப் பயன்படுத்தும்  பிஎன்னுக்கு எதிராகக் கிளர்ந்தெழ வைத்த இண்ட்ராப்புக்கும் அதன் ஆதரவாளர்களுக்கும் எவ்வளவு கடன்பட்டிருக்கிறோம் என்பதை மலேசியர்களில் பலர் மறந்து விட்டார்கள். ஏறத்தாழ மூன்றாண்டுகளுக்கு முன்னர், ஏழை இந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள்,…

புக்கிட் ஜாலில் தோட்ட மக்கள் பதற்றமடையத் தேவையில்லையா?

கடந்த 15 ஆகஸ்டு 2011-ல் மலேசிய நண்பனில் வெளிவந்த கூட்டரசுப் பிரதேச நகர்ப்புற நல்வாழ்வுத்துறை துணை அமைச்சர் சரவணனின் அறிக்கையின் உண்மை நிலையை கேட்டு கடிதம் ஒன்று இன்று புக்கிட் ஜாலில் தோட்ட மக்களால் அவரது பணிமனையில் வழங்கப்பட்டுள்ளது. அவரின் பத்திரிகை அறிக்கை படி, "புக்கிட் ஜாலில் தோட்ட…

பினாங்கில் த ஸ்டார் பிரதிகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன

இன்று பினாங்கில் த ஸ்டார் நாளேட்டின் அலுவலகத்துக்குமுன் கூடிய ஒரு சிறு கூட்டம் அச்செய்தித்தாள் பிரதிகளைக் குவித்து வைத்து எரியூட்டியது. தங்களைப் பல்வேறு மலாய் என்ஜிஓ-களின் பிரதிநிதிகள் என்று கூறிக்கொண்ட 11 பேர், முதலில் அந்நாளேட்டை “பேப்பர் ஹராம்”, “பெரித்தா பல்சு”என்று சத்தமிட்டுக்கொண்டே அதன் பிரதிகளைக் காலில் போட்டு…

மாமாக் உணவகங்கள்: எங்கள் விலைகள் குறைவு

நாட்டின் மற்ற உணவகங்களைவிட தங்கள் உணவகங்களில் உணவு மற்றும் பானங்கள் குறைந்த விலைக்கு விற்கப்படுவதாக முஸ்லிம் உணவக உரிமையாளர் சங்கம்(பிரிஸ்மா) கூறுகிறது. வேண்டுமானால் அதிகாரிகள் மாமாக் உணவகங்களின் தரத்தில் உள்ள எல்லா உணவகங்களிலும் உணவு விலைகளை ஆராய்ந்து ஒப்பிட்டுப் பார்க்கலாம் என்று அதன் தலைவர் நூருல் ஹசான் சாவுல்…

த ஸ்டார் நாளேட்டின்மீது அரசின் நடவடிக்கை நியாயமற்றது

ஆங்கில நாளேடான த ஸ்டாரில் நிகழ்ந்த ஒரு தவற்றுக்காக அரசாங்கம் அதன் விரிவான அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்நாளேட்டிடம் கெடுபிடி செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என சுயேச்சை இதழியல் மையம்(சிஐஜே) கேட்டுக்கொண்டிருக்கிறது. “அமைச்சின் தலையீடும் ஆகஸ்ட் 12-இல் அச்செய்தித்தாள் வெளியிட்டிருந்த மன்னிப்பை அது நிராகரித்த விதமும் பொருத்தமற்ற செயலாகும். அது,…

இடைநீக்கம் செய்யப்பட்ட மஇகா இளைஞர் பிரிவுச் செயலாளர்: ‘நான் முறையீடு…

மஇகாவிலிருந்து  நீக்கப்பட்ட உறுப்பினர்களை கட்சி மீண்டும் சேர்த்துக் கொண்டதற்காகக் கட்சித் தலைமைத்துவத்தை குறை கூறியதற்காக நேற்று தொடக்கம் 12 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்ட மஇகா இளைஞர் பிரிவுச் செயலாளர் சி சிவராஜா, தாம் அடுத்த வாரம் முறையீடு செய்து கொள்ளப் போவதாக அறிவித்துள்ளார். Read More

அரசாங்கம், தேர்தல் சீர்திருத்தங்களைத் தன்னால் முடிந்த அளவுக்குச் செய்யும், பிரதமர்

நாட்டில் தேர்தல் முறையை சீர்திருத்துவதற்கு அரசாங்கம் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யும் என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறியிருக்கிறார். அந்த நோக்கத்தின் அடிப்படையில் அரசாங்கம் நாடாளுமன்ற சிறப்புக்குழுவை அமைக்க ஒப்புக் கொண்டது என்றும் அது தேர்தல்கள் நியாயமாகவும் சுதந்திரமாகவும் இருக்க வேண்டும் என அரசாங்கம் விரும்புவதைக் காட்டுகிறது என்றும்…

தேர்தல் மோசடி: ஆனால் டாக்டர் மகாதீர் அவர்களே, நீங்கள் ஒன்றுமே…

"மகாதீர் அவர்களே, தாங்கள் தோல்வி செய்வதை உறுதி செய்ய எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்துடன் இணைந்து வேலை செய்தன. அது உங்களுக்குத் தெரியும். என்றாலும் அவை அவ்வாறு செய்வதற்கு நீங்கள் அனுமதித்தீர்கள். நல்ல நியாயம் தான்."   மகாதீர்:  தில்லுமுல்லுகளில் எதிர்க்கட்சிகளும் சம்பந்தப்பட்டுள்ளன பென் கோர்: "என்னுடைய காலத்தில் எதிர்க்கட்சிகள்…

பினாங்கு டிஎபி தலைமையகம் சந்தேகத்துக்குரிய தீ வைப்புத் தாக்குதலுக்கு இலக்கானது

பினாங்கில் உள்ள அந்த மாநில டிஎபி தலைமையகத்தின் மீது நான்கு நாட்களுக்கு முன்பு சிவப்புச் சாயம் வீசப்பட்டது. இன்று அதிகாலை மணி மூன்று அளவில் அந்தக் கட்டிடத்துக்கு வெளியில் வைக்கப்பட்டிருந்த பத்திரிக்கை அடுக்குகளுக்கு நெருப்பு வைக்கப்பட்டுள்ளது. Read More

‘அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக சீர்திருத்தங்கள் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது

அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக தேர்தல் சீர்திருத்தங்கள் நிறைவு பெற வேண்டும் என அரசாங்கத்தைக் கட்டாயப்படுத்த முடியாது என பிரதமர் துறை அமைச்சர் முகமட் நஸ்ரி அப்துல் அஜிஸ் கூறுகிறார். Read More

இப்போது ‘இல்லாத மை கார்டு குறியீட்டு எண்களுடன்’ வாக்காளர்கள்

தேர்தல் சீர்திருத்தம் மீதான உத்தேச நாடாளுமன்றத் தேர்வுக் குழு குறித்து பிஎன்னும் பக்காத்தான் ராக்யாட்டும் சர்ச்சையில் ஈடுபட்டுள்ள வேளையில் வாக்காளர் பட்டியல்களில் காணப்படும் மேலும் பல குளறுபடிகளை அரசியல் கட்சிகளும் பொது மக்களும் அம்பலப்படுத்தியுள்ளனர். Read More

முன்னாள் ஐஜிபி கேள்விகளுக்குப் பதில் சொல்ல மறுத்தார்

முன்னாள் ஐஜிபி மூசா ஹசான், அன்வார் இப்ராஹிமின் வழக்குரைஞர்கள் வழக்கின் முக்கிய விஷயங்களை தொட்ட பின்னர் எழுப்பிய கேள்விகளுக்குப் பதில் அளிக்க மறுத்து விட்டார். Read More

இசி: பிஎஸ்சி-இல் பெர்சே 2.0 இடம்பெறக்கூடாது

தேர்தல் சீர்திருத்தம் மீதான நாடாளுமன்றத் தேர்வுக்குழுவில் பெர்சே 2.0க்கு இடமளிக்கக் கூடாது என்று தேர்தல் ஆணைய(இசி) துணைத் தலைவர் வான் அஹ்மட் வான் ஒமார் அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டிருக்கிறார். அக்குழுவில் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த எம்பிகள் மட்டுமே இடம்பெற்றிருக்க வேண்டும் என்றவர் கூறியதாக மலாய்மொழி நாளேடான பெரித்தா ஹரியான் செய்தி…

மாற்றரசுக் கட்சிகளும் தேர்தல்”தில்லுமுள்ளு” செய்ததுண்டு

மாற்றரசுக் கட்சிகளும் தேர்தலில் தில்லுமுள்ளு செய்ததுண்டு என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட் கூறுகிறார். “நான் பிரதமராக இருந்த காலத்தில் மாற்றரசுக் கட்சியும் அப்படிப்பட்ட தந்திரங்களில் ஈடுபட்டதுண்டு. ஒருமுறை ஒரே வீட்டிலிருந்து 50 பேர்  வாக்காளர்களாக பதிவு செய்து கொண்டிருந்தனர். “எப்படி என்று தெரியவில்லை. ஆனால், அத்…

நஸ்ரி: பிஎஸ்சி மூலம் புதிய தேர்தல் சட்டம் உருவாகலாம்

நாடாளுமன்றத் தேர்வுக்குழு(பிஎஸ்சி), அடுத்த பொதுத்தேர்தலுக்குமுன் சுதந்திரமான நியாயமான ஜனநாயக நடைமுறையை உறுதிப்படுத்த புதிய தேர்தல் சட்டமொன்றை உருவாக்குவது பற்றி ஆராயும் எனப் பிரதமர்துறை அமைச்சர் முகமட் நஸ்ரி அப்துல் அசீஸ் கூறுகிறார். “தேர்வுக்குழு, தேர்தல் தொடர்பான விவகாரங்கள் குறித்து ஓர் அறிக்கையைத் தயாரித்த பின்னர் தேர்தல் ஆணையத்துடன்(இசி) கலந்துபேசி சில…

பெர்சே “சட்ட விரோதமானது”: ஆட்சேபங்கள் செப்டம்பர் 19ம் தேதி செவிமடுக்கப்படும்

பெர்சே 2.0ஐ சட்ட விரோத அமைப்பு என உள்துறை அமைச்சு பிரகடனப்படுத்தியதை நீதித் துறை மறு ஆய்வு செய்ய வேண்டும் என சமர்பிக்கப்பட்ட விண்ணப்பம் தொடர்பான பூர்வாங்க ஆட்சேபங்களை செவிமடுப்பதற்கு கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் செப்டம்பர் 19ம் தேதியை நிர்ணயம் செய்துள்ளது. Read More

அம்னோ வரலாற்றில் வெளிப்படையாக விலகிச் செல்லும் துணைப் பிரதமர்

"முஹைடின் நஜிப்பைக் காட்டிலும் வலுவானவராகத் தெரிகிறார். ஏனெனில் நஜிப் எதனைச் சொன்னாலும் அதற்கு முஹைடின் ஆதரவு அளிப்பதாகவே தோன்றவில்லை"       Read More

‘தேர்தல் சீர்திருத்தங்கள் மீதான சுஹாக்காம் யோசனைகளை அமல் செய்க

தேர்தல் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கு அனைத்து மக்களுடைய கவனமும் நாடாளுமன்றத் தேர்வுக் குழு மீது பதிந்துள்ள வேளையில் 2007ம் ஆண்டு சுஹாக்காம் என்னும் மனித உரிமை ஆணையம் பரிந்துரை செய்த சீர்திருத்தங்கள் குறித்து வழக்குரைஞர் மன்றம் அரசாங்கத்துக்கு நினைவுபடுத்தியுள்ளது. Read More

உங்கள் கருத்து: நஜிப் அவர்களே, முதலில் பெர்சே 2.0 இடம்…

"அரசாங்கம் உண்மையாக நடந்து கொள்கிறது என்பதை மெய்பிக்க நஜிப், பெர்சேயிடம் வெளிப்படையாக மன்னிப்புக் கேட்க வேண்டும். அதே வேளையில் அம்பிகா தேர்வுக் குழுவில் இடம் பெறுவதற்கு அழைக்கப்பட வேண்டும்."     அன்வார்: தேர்தல் குழு "தேர்தல் ஆணையத்துக்கு நெருக்கடியைத் தவிர்க்கும்" தந்திரம் பல இனம்: பிரதமர் நஜிப்…

குதப்புணர்ச்சி வழக்கு II: முன்னாள் ஐஜிபி நாளை பேட்டி காணப்படுவார்

முன்னாள் தேசியப் போலீஸ் படைத் தலைவர் மூசா ஹசானையும் மேலும் இரண்டு சாத்தியமான சாட்சிகளையும் நாளை அன்வார் இப்ராஹிமின் வழக்குரைஞர்கள் பேட்டி காண்பர். Read More