துணைப் பிரதமர் டக்ளஸ் உக்கா எம்பாஸ்(Douglas Uggah Embas) கூறுகையில், காற்று மாசுபாட்டு அளவீடுகள் 500-ஐத் தாண்டினால், அரசு மற்றும் தனியார் துறை அலுவலகங்களை மூடுவதற்கான வழிகாட்டுதல்கள் உள்ளன. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நிகழ்ச்சிகளை நடத்துவதா அல்லது ரத்து செய்வதா என்பதைத் தாங்களே முடிவு செய்யலாம்; ஆனால் அதிகாரிகள் ஏதேனும் உத்தரவு…
மஇகா குழப்பத் தேவையில்லை – பிரதமர் பதில் சொல்லட்டும்!
ஹிண்ட்ராஃப்-உடன் செய்து கொண்ட ஒப்பந்தத்திற்கு பிரதமர்தான் பதில் சொல்ல வேண்டுமே அல்லாமல், மூன்றாம் தரப்பினர் அல்லர் என்கிறார் ஹிண்ட்ராஃப் இயக்கத்தின் தேசிய ஆலோசகர் நா. கணேசன். மலேசியாவில் நலிந்த நிலையில் உள்ள இந்தியர்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக ஹிண்ட்ராஃப் இயக்கத்துடன் தேசிய முன்னணி சார்பில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பிரதமர் செய்து…
மகாதிர் ‘நடப்பு விவகாரங்கள்’ பற்றிப் பேசுவார்
வரும் சனிக்கிழமை, முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் ஹுலு கிளாங், தாமான் மெலாவாத்தியில் பொது அரங்கு ஒன்றில் பேசுவார். காலை மணி 9.30க்குத் தொடங்கும் அந்நிகழ்வில் மகாதிர் “நடப்பு விவகாரங்கள்” பற்றிப் பேசுவார் என்று கூறப்படுகிறது. நடப்பு விவகாரங்கள் என்றால் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்மீது மேலும் …
ஜிஎஸ்டிக்கு வாக்களித்ததற்காக வருத்தப்படுகிறார் எம்பி
பிஎன்னின் செபாங்கார் எம்பி ஜுமாட் இட்ரிஸ், பொருள், சேவை வரியால் செலவினம் அதிகரித்திருப்பதை உணர்ந்து வருத்தப்படுகிறார். மருத்துவச் சேவைக் கட்டணங்களுடன் ஜிஎஸ்டி-க்காக தனியாக ரிம1,200 கொடுத்தபோதுதான் அவர் இதனை உணர்ந்தார். மகனைத் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அவருக்கு இந்த அனுபவம் ஏற்பட்டது. “மருத்துவ ஆலோசனைக்காக ஆறு விழுக்காடு…
சிலுவை விவகாரம்: பிரதமர் எச்சரிக்கை
தாமான் மேடான் தேவாலயத்தில் பதிக்கப்பட்டிருந்த சிலுவையை அகற்றக் கோரி ஆர்ப்பாட்டம் செய்தவர்களை பிதமர் நஜிப் கண்டித்ததோடு போலீஸ் அந்த விவகாரம் குறித்து விசாரணை செய்யும் என்று கூறினார். சமீபத்தில் திருத்தம் செய்யப்பட்ட தேசநிந்தனைச் சட்டம் 1948 ஐ ஆர்ப்பாட்டக்காரர்கள் மீறினர் என்று கருதப்பட்டால் அவர்கள் விசாரணைக்கு ஆளாவார்கள் என்று…
ஆட்சிக்குழு: அனுமதி தேவையில்லை; சிலுவையை அது இருந்த இடத்திலேயே மீன்டும்…
கடந்த ஞாயிற்றுக்கிழை தாமான் மேடான் முஸ்லிம்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து பிஜே தேவாலயம் அதன் கட்டடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிலுவையை அகற்றியது. இன்று, சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு அந்த சிலுவையை அது வைக்கப்பட்டிருந்த இடத்திலேயே மீண்டும் வைக்குமாறு தேவாலயத்திற்கு ஆலோசனை கூறியுள்ளது. வழிபாட்டு தலங்கள் எவ்வித அனுமதியும் இன்றி வாணிபத்திற்கான…
13 மாணவர் அமைப்புகள் #BatalGST பேரணிக்கு ஆதரவு
13 மாணவர் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இன்று யுனிவர்சிடி மலாயாவின் வேந்தர் துங்கு மணடபத்துக்குமுன் திரண்டு மே முதல் நாள் நடத்தத் திட்டமிடப்பட்டிருக்கும் #BatalGST பேரணிக்கு ஆதரவு தெரிவித்துக் கொண்டனர். பல்கலைக்கழகங்கள் பல்கலைக்கழகக் கல்லூரிகள் சட்டம் மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் அரசியல்- தொடர்புள்ள நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தடுக்கிறது என்ற போதிலும்…
தொழுகை இடமாக செயல்பட தேவாலயத்திடம் அனுமதி இல்லை
ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்துக்கு இலக்கான தேவாலயம் அது வழிபாட்டு இல்லமாக செயல்பட அனுமதி பெற்றிருக்கவில்லையாம். கடைவீட்டைத் தொழுகை இடமாக மாற்ற அனுமதி கேட்டு அது இதுவரை விண்ணப்பம் செய்யவில்லையாம். ஒரு கடைவீட்டை வழிபாட்டு இல்லமாக மாற்ற நினைத்தால் அதற்கு அரசாங்கத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும் என பிஜே மாநகராண்மைக் கழக(எம்பிபிஜே)…
சிலுவையை எடுத்த இடத்திலேயே திரும்ப வைப்பீர்: மஇகா இளைஞர்கள்
தாமான் மூடா தேவாலயம், ஆர்ப்பாட்டக்காரர்கள் கட்டாயப்படுத்தியதால் அகற்றிய சிலுவையை எடுத்த இடத்திலேயே திரும்பவும் வைக்க வேண்டும் என மஇகா இளைஞர் தலைவர் சி.சிவராஜ் கேட்டுக்கொண்டிருக்கிறார். “தேவாலயம் 50 ஆர்ப்பாட்டக்காரர்கள் கொடுத்த நெருக்குதலுக்கு அஞ்சி, அவர்களின் திருப்திக்காக சிலுவை அகற்றியிருக்க வேண்டியதில்லை. “அது அவர்கள் செய்த முதல் தவறு. இனி,…
மகாதிர் ‘ரோஸ்மாவின் டாம்பீகம்’ பற்றிக் கிண்டலடித்ததை நாளேடுகள் கண்டுக்கொள்ளவில்லை
பிரதமரின் மனைவி ரோஸ்மா மன்சூர் “ஆடம்பர” வாழ்க்கை வாழ்வதாக முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் கூறியிருப்பதை மலாய்மொழி நாளேடுகள் எதுவும் ஆங்கில நாளேடுகளில் பலவும் வெளியிடவே இல்லை. சன் -இலும் சீன நாளேடுகளிலும் மட்டுமே அச்செய்தி வெளியாகி இருந்தது. பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்மீது பல குற்றம்குறைகள் …
தேவாலய-எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களை ஜி-25 கண்டித்தது
25 மலாய் மேன்மக்களைக் கொண்ட அமைப்பு (ஜி25), ஒரு தேவாலயக் கட்டிடத்திலிருந்து சிலுவையை அகற்றக் கோரி ஆர்ப்பாட்டம் செய்தவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டிருக்கிறது. அவர்களுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்கத் தவறினால், அது சமுதாயத்தில் உள்ள சமயத் தீவிரவாதிகளுக்கு ஊக்கமளிப்பதாக அமைவதுடன் மற்ற சமயத்தவரின் …
ஐஜிபி-இன் இரட்டை நியாயம்: சாடுகிறார் அம்னோ உறுப்பினர்
முன்னாள் அம்னோ எம்பியான சைபுடின் அப்துல்லா ஆர்ப்பாட்டங்களின் விசயத்தில் போலீஸ் இரட்டை நியாயத்தைக் கடைப்பிடிப்பதைக் கண்டு அதிருப்தி அடைந்துள்ளார். எதிரணி-ஆதரவு கித்தா லவான் பேரணிகளின்போது பல சமூக ஆர்வலர்களையும் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் விசாரணைக்காக போலீஸ் கைது செய்திருக்கிறது. ஆனால், ஞாயிற்றுக்கிழமை அம்னோ-தொடர்புள்ளவர்கள் தாமான் மூடாவில் ஒரு தேவாலயத்துக்கு எதிராக …
புவா: ஐஜிபி கருத்துரைப்பதை நிறுத்த வேண்டும்
தேவாலயத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்காரின் சகோதரரும் சம்பந்தப்பட்டிருப்பதால் அவர் அது பற்றிக் கருத்துரைக்கக் கூடாது என டிஏபி எம்பி டோனி புவா கூறினார். விசாரணை என்று எதுவும் தொடங்குமுன்னரே அதில் விசாரிப்பதற்கு எதுவுமில்லை எனக் கூறியதே ஐஜிபி-இன் நடுநிலைப்போக்கையும் அவரின் தீர்ப்புரையையும்…
ஸாகிட் ஹமிடி: தேவாலயத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம் தேசநிந்தனையானது
பெட்டாலிங் ஜெயா, தாமான் மேடானில் அமைந்துள்ள தேவாலயத்திற்கு எதிராக நேற்று மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டம் தேசநிந்தனையானது என்று தாம் கருதுவதாக உள்துறை அஹமட் ஸாகிட் ஹமிடி கூறினார். இந்த விவகாரத்தில் ஸாகிட்டின் கருத்து போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பாக்கரின் நிலைப்பாட்டிற்கு முற்றிலும் வேறுபட்டதாக இருக்கிறது. அந்த ஆர்ப்பாட்டம்…
எதிரணியின் சுலோகத்தைத் தத்தெடுத்துக் கொண்டார் நஜிப்
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மீது குறைசொல்லும் படலத்தைத் தொடரும் டாக்டர் மகாதிர் முகம்மட், அவர் சீன, இந்தியர்களின் வாக்குகளைக் கவர்வதற்காக எதிரணியினரின் சுலோகத்தைத் தத்தெடுத்துக் கொண்டதாகக் கூறியுள்ளார். சீனர்களுக்குப் புதிய பொருளாதாரக் கொள்கை பிடிக்கவில்லை என்பதால் அவர்கள் அப்துல்லா அஹமட் படாவியை நிராகரித்தார்கள் என நஜிப்புக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
ஜிஎஸ்டி-எதிர்ப்புப் பேரணிக்கு 1மில்லியன் பேரைத் திரட்டுவது கித்தா லவானின் இலக்கு
மே முதல் நாள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள #BatalGST பேரணிக்கு சுமார் ஒரு மில்லியன் ஆர்ப்பாட்டக்காரர்களைத் திரட்ட இலக்குக் கொண்டிருப்பதாக கித்தா லவான் செயலகம் இன்று தெரிவித்தது. தொழிலாளர் தினத்தன்று நடைபெறும் அப்பேரணி ‘Kami Semua Tok Janggut (நாம் எல்லாருமே தோக் ஜங்குட்-கள்தாம்) என்ற கருப்பொருளைக் கொண்டிருக்கும். வெள்ளிக்கிழமை …
சிலுவையை எடுத்த இடத்திலேயே வைக்க எம்பி உதவ வேண்டும்
சிலாங்கூர் மந்திரி புசார் அஸ்மின் அலி, நேற்று பெட்டாலிங் ஜெயா தேவாலயம் ஒன்றிலிருந்து அகற்றப்பட்ட சிலுவையை எடுத்த இடத்திலேயே திரும்பவும் வைப்பதற்கு உதவ வேண்டும் என கெராக்கான் இளைஞர் பிரிவு கேட்டுக் கொண்டிருக்கிறது. அப்பிரிவின் தலைவர் டான் கெங் லியாங், மாநில அரசு இவ்விவகாரத்தை உடனடியாகக் கவனிக்க வேண்டும் …
மந்திரி புசார்: சிலுவை கிறிஸ்துவர்களின் புனித சின்னம்
கிறிஸ்துவர்கள் புனிதமாக போற்றும் சிலுவையை அகற்றக்கூடாது என்கிறார் சிலாங்கூர் மந்திரி புசார் அஸ்மின் அலி. “சிலுவை கிறிஸ்துவர்களுக்கு ஒரு புனிதமான சின்னம். “அச்சின்னத்தை அகற்றுமாறு கட்டாயப்படுத்துவது ஏற்புடையதல்ல. அது கிறிஸ்துவ சமூகத்தை அவமதிப்பதாகும்”, என்றவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். நேற்று, பெட்டாலிங் ஜெயா, தாமான் மூடாவில் ஒரு தேவாலயத்துக்குமுன் நடைபெற்ற …
ஷாபி: பிரதமர் விவரமாக விளக்கமளிக்க வேண்டும்
அம்னோ உதவித் தலைவர் முகம்மட் ஷாபி அப்டால், டாக்டர் மகாதிர் முகம்மட் எழுப்பிய விவகாரங்களுக்குப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் விவரமாக விளக்கமளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருக்கிறார். மற்றவர்களைவிட கட்சியும் அரசாங்கமும் அதற்கு விளக்கமளிப்பது மேல் என்றாரவர். “அவர் பல கேள்விக்ளை முன்வைத்துள்ளார். அவற்றுக்கு விவரமாக விளக்கமளிப்பது …
ஆயர்: சிலுவையை அகற்றியது ஒரு துடுக்கான செயல்
கத்தோலிக்க ஆயர் டாக்டர் பால் டான் சீ இங், பெட்டாலிங் ஜெயா, தாமான் மேடானில் ஓர் ஆலயத்தின்முன் கூடிய ஆர்ப்பாட்டக்கார்கள் அதன் சுவரிலிருந்த சிலுவையை கட்டாயப்படுத்தி அகற்றிய செயலைக் கடுமையாகக் கண்டித்துள்ளார். ஆலயத்தின்முன் கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள், அப்பகுதியில் இந்தியர்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தபோதும் அது மலாய்க்காரர்கள்/முஸ்லிம்கள் அதிகம் வாழும் …
ரோஸ்மாவின் ஆடம்பர வாழ்க்கை பற்றிக் கேள்வி எழுப்புகிறார் மகாதிர்
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்மீது சரமாரியாக தாக்குதல் தொடுத்துள்ள டாக்டர் மகாதிர் முகம்மட் இப்போது முதல்முறையாக பிரதமரின் துணைவியார் ரோஸ்மா மன்சூர் பற்றி தம் வலைப்பதிவில் எழுதியுள்ளார். “அவருடைய (நஜிப்) தனிப்பட்ட வாழ்க்கையில் பல விசயங்கள் சரியாக இல்லை என்று நினைக்கிறேன். “அவற்றை, அவரதும் அவரின் துணைவியாரதும் ஆடம்பர …
சிலுவையை அகற்ற பிஜே தேவாலயம் ஒப்புக்கொண்டது
பெட்டாலிங் ஜெயா, தாமான் மேடானில் புதிதாக கட்டப்பட்ட தேவாலயம் இன்று அதிர்ச்சிக்கு உள்ளாயிற்று. அதன் வாசல் முன் கூடிய எதிர்ப்பாளர்கள் தேவாலயம் அதன் சிலுவையை அகற்ற வேண்டும் ஆர்ப்பாட்டம் செய்தனர். த ஸ்டார் ஓன்லைன் பதிவின்படி, சுமார் 50 குடியிருப்பாளர்கள் அத்தேவாலயம் அமைந்திருக்கும் இடத்திற்கு வெளியில் கூடி அத்தேவாலயத்தின்…
பிஎன் பெர்மாத்தாங் பாவ்வில் வெற்றி பெறுவது கடினம் – மகாதிர்
பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் பிஎன் வெற்றி பெறுவது கடினம் ஏனென்றால் அங்கு அன்வார் இப்ராகிம் வெறியர்கள் இருக்கிறார்கள் என்று மகாதிர் முகமட் கூறுகிறார். "அன்வார் இருந்த இடத்தில் அது மிகவும் கடினமானது, அங்கு வெறியர்கள் இருக்கிறார்கள்", என்று மகாதிர் செய்தியாளர்களிடம் கூறினார். "(இந்த) மக்கள்…
நஜிப்புக்கு எதிராக மகாதிர் எதிரணியுடன் சேரமாட்டார்
பிரதமர் நஜிபுக்கு எதிரான தமது போராட்டத்தில் தாம் லிம் கிட் சியாங் அல்லது வேறு எவருடனோ சேர்ந்துகொள்ளப் போவதில்லை முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட் கூறினார். "நஜிப்பை இறக்குவதற்கு தாம் எவருடனும் சேர்ந்து வேலை செய்யவில்லை, நிச்சயமாக எதிரணியுடன் இல்லை. எனது பிரச்சனை அம்னோவுடனானது", என்று…


