"சுங்கை கோலோக் (Sungai Golok) ஆறு தொடர்ந்து வறண்டு வருவதால், சட்டவிரோத எல்லைக் கடப்புகள் குறித்து காவல்துறை கவலை கொண்டுள்ளதாக கிளந்தான் மாநில காவல்துறைத் தலைவர் யுசோஃப் மாமத் தெரிவித்துள்ளார்." சுங்கை கோலோக் ஆற்றின் நீர்மட்டம் குறைந்துள்ளதால், எல்லை தாண்டிய சட்டவிரோத ஊடுருவல்கள் அதிகரிக்கக்கூடும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.…
அன்வாரின் வழக்குரைஞர் விவகாரத்தால் வழக்குரைஞர் மன்றத்துக்கு நெருக்குதல் அதிகரிக்கிறது
கூட்டரசு நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஒருவர் எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிமுக்காக வாதாடுவது தொடர்பில் மலேசிய வழக்குரைஞர் மன்றம் தன் நிலைப்பாட்டைத் தெளிவாக தெரிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. 21 வழக்குரைஞர்களும் சமூக ஆர்வலர்களும் சேர்ந்து அக்கோரிக்கையை முன்வைத்துள்ளனர், அவர்களில், பெர்காசா முன்னாள் உதவித் தலைவர் …
முன்னாள் நீதிபதி வழக்குரைஞராக மாறி வாதாடக்கூடாது
கூட்டரசு நீதிமன்ற முன்னாள் நீதிபதி கோபால் ஸ்ரீராம், அன்வார் இப்ராகிமின் வழக்குரைஞராக நீதிமன்றத்தில் வாதாடுவது குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அது வழக்குரைஞர் மன்றத்தின் தீர்மானத்தை மீறுவதாகும் என்றவர்கள் தெரிவித்தனர். கெராக்கான் இளைஞர் தலைவர் டான் கெங் லியாங், வழக்குரைஞர் மன்றம் இவ்வாண்டு மார்ச் 15-இல், …
ஜிஎல்சி-கள் பல பில்லியன் ரிங்கிட் கடன் பட்டுள்ளன ஆனால் புத்ரா…
தனியார் நிறுவனங்கள் அரசாங்கத்துக்கு செலுத்த வேண்டிய பெரும் தொகைகளை உள்ளடக்கிய கடன்கள் இன்னும் செலுத்தப்படாமல் இருப்பதை வெளிச்சம் போட்டுக்காட்டிய செர்டாங் எம்பி ஒங் கியான் மிங், அரசு-தொடர்புடைய நிறுவனங்களின்(ஜிஎல்சி) நிலவரமும் அதேதான் என்கிறார். அவை அரசாங்கத்திடம் பட்டுள்ள பல பில்லியன் ரிங்கிட் கடன்களை இன்னும் திருப்பிக் கொடுக்கவில்லை. புத்ரா …
சைபூல் ஆதரவாளர்கள்: காசுக்காக வரவில்லை, நீதி வேண்டி வந்தோம்
புத்ரா ஜெயாவில், நீதி மாளிகைக்கு வெளியில் சைபூலுக்கு ஆதரவு தெரிவிக்கும் கூட்டம் நேற்றைவிட இன்று அதிகமாக இருந்தது. நேற்று சுமார் 100 பேர் காணப்பட்ட இடத்தில் இன்று சுமார் 200 பேர் திரண்டு, “அன்வாரைக் கைது செய்! குதப்புணர்ச்சி செய்தவரைக் கைது செய்!”, என்று கூச்சலிட்டனர். பணத்துக்காக மாரடிக்கும் …
இப்ராகிமைத் தற்காத்துப் பேசுகிறார் மகாதிர்
பெர்காசா தலைவர் இப்ராகிம் அலி “பைபிள்களை எரிக்கச் சொன்னது” தேச நிந்தனைக் குற்றம் அல்ல என்கிறார் டாக்டர் மகாதிர் முகம்மட். “முஸ்லிம்களும் முஸ்லிம்-அல்லாதாருக்குமிடையில் சண்டை மூட்டுவது அவரின் நோக்கமல்ல”, என்று முன்னாள் பிரதமர் செய்தியாளர்களிடம் கூறினார். திருக்குர்ஆன் நூல்கள்கூட மிகவும் பழையதாக விட்டால் எரிப்பது உண்டு என்று கூறிய …
எம்எச்17: காரணமானவர்கள் நீதிமுன் நிறுத்தப்படுவர்; பிரதமர் உறுதி
மலேசிய விமான நிறுவனமான எம்எச்17-ஐ சுட்டு வீழ்த்தியவர்களை நீதிமுன் நிறுத்தாமல் விடப்போவதில்லை என்பதில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் உறுதியாக இருக்கிறார். ஆனால், உக்ரேனில் தொடர்ந்து சண்டை நடப்பதால் விமானம் விழுந்த இடத்துக்குச் செல்வது தடைப்பட்டிருப்பதாக அவர் சொன்னார். காணாமல்போன எம்எச் 370 பற்றியும் அடுத்த சில மாதங்களில் …
இஸ்லாத்துக்கு எதிரானது என்ற தோற்றத்தைக் களையும் முயற்சியில் பிஎஸ்எம்
பார்டி சோசலிஸ் மலேசியா(பிஎஸ்எம்), அது இஸ்லாத்துக்கு எதிரான கட்சி என்ற தோற்றப்பாட்டைத் திருத்தி அமைக்க முயலும். இதன் பொருட்டு அது “இஸ்லாமும் சோசலிசமும்” என்னும் சிறு விளக்கநூலை வெளியிடும் என பிஎஸ்எம் தலைமைச் செயலாளர் எஸ்.அருட்செல்வன் கூறினார். அந்நூல் தொழிலாளர் விடுதலை பற்றி நபிகள் நாயகம் தெரிவித்த கருத்துகளை …
1எம்டிபி கடன்களுக்கு அரசாங்கம் பொறுப்பல்ல
அரசாங்கத்துக்குச் சொந்தமான முதலீட்டு அமைப்பான 1மலேசியா மேம்பாட்டு நிறுவனத்தின்(1எம்டிபி) கடன்களுக்கு அரசாங்கம் பொறுப்பாகாது. ஏனென்றால், பெரும்பாலான 1எம்டிபி-இன் கடன்கள் அரசாங்கத்தின் உத்தரவாதம் பெற்றவை அல்ல. 1எம்டிபி-இன் ரிம37பில்லியன் கடனில் ரிம5.8 பில்லியன் மட்டுமே அரசாங்கம் உத்தரவாதம் பெற்றதென நிதி அமைச்சு இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தது. அந்த முதலீட்டு நிறுவனத்தின் …
அன்வார் மேல்முறையீடு வழக்கு: அன்வாரின் அறிக்கைக்கு மதிப்பளித்திருக்க வேண்டும்
பேரரசரின் நாடாளுமன்ற எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் விதித்திருந்த ஐந்து ஆண்டுகால சிறைத் தண்டனைக்கு எதிராக அவர் செய்திருந்த மேல்முறையீடு மீதான விசாரணை நேற்று பெடரல் உச்சநீதிமன்றத்தில் தொடங்கி இன்று இரண்டாவது நாளாக காலை மணி 9.40 க்கு தொடங்கியது. இன்றைய விசாரணையில் அன்வாரின்…
அன்வாருக்கு எதிரான கூட்டுச் சதி: நீதிமன்றங்கள் கவனிக்கத் தவறிவிட்டன
தம்மை அரசியலிருந்து அகற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்ட கூட்டுச் சதி பற்றி அன்வார் குற்றவாளிக் கூண்டிலிருந்து விடுத்த அறிக்கைக்கு கோலாலம்பூர் உயர்நீதிமன்றமும் மேல்முறையீட்டு நீதிமன்றமும் முறையான மதிப்பளிக்கத் தவறி விட்டன என்று அன்வாரின் தற்காப்பு குழு நீதிமன்றத்தில் கூறியது. இவ்விவகாரம் குறித்து அவ்விரு நீதிமன்றங்களும் தலா ஒரு பத்தி மட்டுமே…
சேவியர்: அன்வாருக்கு வழங்கும் தீர்ப்பு நீதித்துறையின் களங்கத்தை நீக்கும் தீர்ப்பாக…
பேரரசரின் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், மக்கள் கூட்டணித் தலைவருமான அன்வாரின் மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு இந்நாட்டின் நீதித்துறை மீது ஏற்பட்டுள்ள களங்கத்தை நீக்கும் தீர்ப்பாக அமைய வேண்டும் என்பதே மலேசிய மக்களின் ஆசை என்றார் கிள்ளான் ஸ்ரீ அண்டாலாஸ் சட்டமன்ற உறுப்பினரும் பி.கே.ஆர் கட்சியின் தேசிய உதவித் தலைவருமான…
பத்து கவான் வீடுகளில் விரிசல்கள்
செபராங் பிறை செலாத்தான், பத்து கவானில், கம்போங் மஸ்ஜித்தில் உள்ள எட்டு வீடுகளில் விரிசல்கள் தோன்றியிருப்பதற்கு அருகில் நடக்கும் கல்லுடைப்பு வேலைகள்தான் காரணம் என பினாங்கு பயனீட்டாளர் சங்கம் (கேப்) கூறுகிறது. குவாரியில் நடக்கும் கல்லுடைப்பு வேலைகளால் சுமார் 200 குடியிருப்பாளர்கள் ஐந்தாண்டுகளுக்கு மேலாகவே பிரச்னைகளை எதிர்நோக்கி வந்திருப்பதாகவும் …
அல்வின், அலி ஆகியோரைக் கைது செய்ய இண்டர்போல் உதவி நாடப்படுகிறது
அரசியல் அடைக்கலம் தேடி வெளிநாடு சென்றுள்ள அலி அப்ட் ஜலில், அல்வின் டான் ஆகியோரின் இருப்பிடம் அறியவும் அவர்களைக் கைது செய்யவும் போலீசார் அனைத்துலகப் போலீசான இண்டர்போலின் உதவியை நாடியுள்ளனர். இன்ஸ்பெக்டர்-ஜெனரல் அப் போலீஸ் காலிட் அபு பக்கார் இதனைத் தெரிவித்தார். மூன்று தேச நிந்தனைக் குற்றச்சாட்டின் பேரில் …
உலகம் மூன்று நாள்களுக்கு இருளில் மூழ்கும் என்பது வெறும் புருடா
டிசம்பர் மாதம் உலகில் மூன்று நாள்களுக்கு இருள் சூழ்ந்திருக்கும் என்ற செய்தி வெறும் புருடா என்றும் அதை நம்ப வேண்டாம் என்றும் தேசிய பரவெளி நிறுவனம்(அங்காசா) ஓர் அறிக்கையில் கூறியுள்ளது. சமூக ஊடகங்களில் வலம் வந்த அச்செய்தி அமெரிக்க வான், விண்வெளி நிர்வாகத்தின்(நாசா) தலைவர் சார்ல்ஸ் போல்டனை மேற்கோள் …
எம்ஏஎஸ்-ஸுக்கு ஏற்பட்ட நிலை FGV-க்கும் நேரலாம்
அரசாங்கம், கடந்த ஈராண்டுகளாக பெல்டா குளோபல் வெண்ட்சர்ஸ் (FGV)ஹோல்டிங்ஸ் நிறுவனம் கண்டுவரும் மோசமான அடைவுநிலையைத் தடுத்து நிறுத்தாவிட்டால் புரோட்டோன், மலேசிய விமான நிறுவனம் போன்றவை சென்ற வழியே அதுவும் செல்லக்கூடும் என எம்பி ஒருவர் எச்சரித்துள்ளார். 2012-இலிருந்து இவ்வாண்டு அக்டோபர் முடிய அந்நிறுவனத்தின் பங்கு விலைகள் 36.77 விழுக்காடு …
பயங்கரவாத மிரட்டல்மீது வெள்ளை அறிக்கை
அரசாங்கம், மலேசியர்கள் சம்பந்தப்பட்ட பயங்கரவாத மிரட்டல் குறித்து மக்களுக்குத் “தெரிவிக்க” விரைவில் வெள்ளை அறிக்கை ஒன்றை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும். கோ சுங் சென் (டிஏபி-காப்பார்)-னின் வினாவுக்கு இவ்வாறு பதிலளித்த உள்துறை அமைச்சு, அறிக்கை “தயாராகி வருவதாக”க் கூறியது. ஆனால், அது எப்போது தாக்கல் செய்யப்படும் என்பதை அது …
இஸ்லாத்துக்குக் கடப்பாடு கொண்டவர்தானா கைரி? பெர்காசா கேள்வி
இப்ராகிம் அலி பைபிளைக் கொளுத்தப்போவதாக மிரட்டல் விடுத்ததைத் தேச நிந்தனை குற்றம்தான் என்று விடாமல் கூறிக்கொண்டிருக்கும் அம்னோ இளைஞர் தலைவர் இஸ்லாத்துக்குக் கடப்பாடு கொண்டர்தானா என பெர்காசா வினவுகிறது. “அம்னோ இளைஞர் தலைவர் எந்தச் சமயத்துக்காகப் போராடுகிறார்?”, என பெர்காசா இளைஞர் தலைவர் இர்வான் பாஹ்மி இட்ரிஸ் ஓர் …
நீதிமன்றத்துக்கு வெளியில் சைபூல் சட்டைகளுக்கு தீ வைக்கப்பட்டது
புத்ரா ஜெயாவில் நீதி மாளிகைக்கு வெளியில் அன்வார் இப்ராகிம்- ஆதரவாளர்கள் சிலர் முகம்மட் சைபூல் புஹாரி பெயர் பொறிக்கப்பட்ட இரண்டு டி-சட்டைகளுக்குத் தீ வைத்த சம்பவமும் அதன் பின்னர் நீதிமன்றத்தைச் சுற்றிலும் வைக்கப்பட்டிருந்த தடுப்புகளைமீறி உள்ளே செல்ல முயன்றதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உடனே பிகேஆர் இளைஞர் பகுதியைச் …
கூண்டில் இருந்தாலும் குறும்பு போகவில்லை
எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிமின் வழக்கு நடைபெறும் கூட்டரசு நீதிமன்றத்தில் பார்வையாளர்களுக்காக சுமார் 70 இருக்கைகள் உள்ளன. ஆனால், காலை எட்டு மணிக்கு முன்னதாகவே அத்தனையும் நிரப்பப்பட்டு விட்டன. இருக்கைகள் கிடைக்காதவர்கள் நீதிமன்றத்தை விட்டு வெளியேறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். அப்போது அன்வார் குறுக்கிட்டு, “இருக்கைகள் இல்லாவிட்டால் என்ன, இங்கே கூண்டுக்குள்…
அன்வார் வழக்கு: ஸ்ரீராம் கோபால் நடத்துகிறார்
அன்வார் இப்ராகிம் குதப்புணர்ச்சி வழக்கு II இல் அன்வாரின் மேல்முறையீடு விசாரணை இன்று பெடரல் உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது. அன்வாரின் தற்காப்பு குழுவுக்கு பெடரல் உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஸ்ரீராம் கோபால் தலைமை ஏற்றுள்ளார். தற்காப்புக் குழுவின் விவாத்தை ஸ்ரீராம் கோபால், என். சுரேந்திரன், ராம் கர்பால் மற்றும்…
ஒருவரை சிறையிலடைத்தால், 10,000 பேர் எழுவர்
மலாயா பல்கலைக்கழக வளாகத்தில் உரையாற்றுவதற்கு பேரரசரின் நாடாளுமன்ற எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் அனுமதிக்கப்படவில்லை. ஆனால், அவர் அங்கு பேசினார். 2,000 க்கும் மேற்பட்ட மாணவர்களும் தன்னார்வலர்களும் முன்னதாக ஏற்பாடு செய்திருந்தவாறு பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் தேவான் துங்கு சான்செலர் கட்டடத்தின்முன் உரையாற்றுவதை சாதித்துக் காட்டினர். மாணவர்களும்…
அன்வாருடன் ஆயிரக்கணக்கான மாணவர்கள் யுஎம்முக்குள் சென்றனர்
ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்களும் தன்னார்வலர்களும் மலாயா பல்கலைக்கழக வாயிற்கதவை உடைத்து பல்கலைக்கழக வளாகத்திற்குள் சென்றனர். அங்கிருந்து அவர்கள் அன்வாருடன் தேவான் துங்கு சான்செலரை நோக்கி சென்றனர். அங்கு அன்வார் உரை நிகழ்த்த தடை செய்யப்பட்டுள்ளது. அன்வார் அவரது குடும்பத்தாருடன் நான்குசக்கர வண்டியில் இரவு மணி 9.40 க்கு…
அன்வாரின் உரையைக் கேட்க யுஎம் வாயிற்கதவு முன்பு கூட்டம் கூடுகிறது
அன்வார் பங்கேற்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளக்கூடாது என்று பல்கலைக்கழகம் மாணவர்களை எச்சரித்துள்ளது. ஆனாலும் பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் இன்றிரவு பேசுவதைக் கேட்க பல்கலைக்கழக முன்வாயிலில் கூட்டம் கூடியுள்ளது. சுமார் 500 மாணவர்களும் அன்வார் ஆதரவாளர்களும் கோலாலம்பூர் கேட்டின் முன்பு மழைத்தூறலையும் பொருட்படுத்தாமல் அன்வாருக்காக காத்திருக்கின்றனர். பல்கலைக்கழக வளாகத்தில்…


