உயிரியல் வம்சாவளி (பெற்றோர் யார் என்பது) அறியப்படாத பட்சத்தில், தத்தெடுக்கப்பட்ட குழந்தையை மலேசியக் குடிமகனாக அங்கீகரிக்க முடியாது என்று மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கூட்டாட்சி அரசியலமைப்பின் கீழ் குடியுரிமை கோரும் ஒருவர், வம்சாவளியுடன் தொடர்புடைய 'ஜஸ் சாங்குனிஸ்' (jus sanguinis) என்ற அரசியலமைப்புத் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டும்…
மலாக்காவில் மதுவுக்குத் தடையா? கெராக்கான் இளைஞர்கள் கண்டனம்
மலாக்காவில் 90 விழுக்காடு முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள 7-11 கடைகளில் மது விற்பனைக்குத் தடை விதிக்கும் மாநில அரசின் முடிவை கெராக்கான் இளைஞர்கள் எதிர்க்கிறார்கள். மாநில அரசின் புதிய கொள்கை வர்த்தகத்தில் அரசியல் குறுக்கீட்டைக் காண்பிக்கிறது எனக் கூறிய அப்பிரிவின் தலைமைச் செயலாளர் வில்லியம் சாங், அந்தத் …
அன்வார் ஆதரவாளர்களைக் ‘கடைசித் தடவை’யாக சந்திக்கக் கூட்டங்கள் வாய்ப்பாக அமையும்
எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிமின் குதப்புணர்ச்சி வழக்கில் தீர்ப்பு நாள்(பிப்ரவரி 10) நெருங்கி வரும் வேளையில் பிகேஆர் நாடு முழுக்க தொடர்கூட்டங்களை நடத்தத் திட்டமிட்டுள்ளது. பிப்ரவரி 1 தொடங்கி தீர்ப்பு நாள்வரை 10 வெவ்வேறு இடங்களில் அக்கூட்டங்கள் நடத்தப்படும் என பிகேஆர் எம்பி ஜொகாரி அப்துல் கூறினார். “இதுவே, …
மஇகா சர்ச்சையில் சமரசப் பணியாற்ற வந்துள்ளார் துணைப்பிரதமர்
மஇகாவில் கட்சிச்சண்டை பெரிதாகி பதிவு இரத்தாகும் அபாயமும் ஏற்பட்டுள்ள வேளையில் பிஎன் தலைவர்கள் அதில் தலையிட்டு சண்டையிடும் தரப்பினரைச் சமாதானப்படுத்த முடிவு செய்துள்ளனர். சமரசப் பணியில் ஈடுபடப் போகின்றவர் துணைப் பிரதமர் முகைதின் யாசின். “நடப்பு நிலைமையில் நாங்கள் தலையிடுவது அவசியமாகும். விவகாரம் தானாகவே தீர்ந்துவிடும் என்று பார்த்தால் …
மலேசியாகினி ஜாஹிட் நிகழ்வுகளில் செய்தி சேகரிக்கத் தடை
உள்துறை அமைச்சு, அதன் நிகழ்வுகளிலும் அதன் அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி சம்பந்தப்பட்ட நிகழ்வுகளிலும் செய்தி சேகரிக்க மலேசியாகினிக்குத் தடை விதித்துள்ளது. இன்று காலை மலேசியாகினி மற்றும் கினிடிவி செய்தியாளர்கள் ஒரு நிகழ்வுக்குச் சென்றபோது அமைச்சரின் உதவியாளர் அவர்களைத் தடுத்து நிறுத்தினார். “ஒருதலைச் சார்ந்த செய்திகளாக போடுகிறீர்கள். “நாங்கள் …
மகாதிர்: அரசாங்கச் செலவுகளை வெளியார் தணிக்கை செய்வது நல்லது
முன்னாள் பிரதமர் மகாதிர் முகம்மட், கூட்டரசு அரசாங்கம் அதன் செலவுகளைக் கண்காணிக்க வெளிக் கணக்காய்வாளர்களை அமர்த்திக்கொள்வதே நல்லது என்கிறார். இன்று அவரது வலைப்பதிவில் இவ்வாறு குறிப்பிட்ட மகாதிர், மலேசியாவிடம் இப்போது பெரும் பணம் இருக்கிறது என்பதுடன் கூட்டரசு அரசாங்கமும் அதன் நிறுவனங்களும் நிறையவே செலவிடுகின்றன என்றார். “கூட்டரசு நில …
இந்திய மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக வழங்கப்பட்ட 2000 ஏக்கர் நிலம்:…
-மு. குலசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர், ஜனவரி 28, 2014. மஇகா விற்கு சொந்தமான சொத்துக்களின் தற்போதைய நிலைமை இந்திய மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக வழங்கப்பட்ட இந்த 2 ஆயிரம் ஏக்கர் நிலத்துக்கும் வந்து சேரக் கூடாது. ச.சாமி வேலு, எம். சரவணன், வீரசிங்கம், டாக்டர் சுப்ரமணியம் மற்றும் ஜி.பழனிவேல்…
டிங்கிக் காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகிறது: அமைச்சர் எச்சரிக்கை
2014-உடன் ஒப்பிடும்போது 2015-இன் முதல் மூன்று வாரங்களில் டிங்கிக் காய்ச்சல் கண்டவர் எண்ணிக்கை 65 விழுக்காடு கூடியிருக்கிறது. இக்காலத்தில் 8,502 பேருக்கு டிங்கிக் காய்ச்சல் கண்டதாகவும் 20பேர் அந்நோயால் இறந்தார்கள் எனவும் சுகாதார அமைச்சர் டாக்டர் எஸ்.சுப்ரமணியம் கூறினார். 2014-இன் முதல் மூன்று வாரங்களில் எழுவர் மட்டுமே அந்நோயால் …
மஇகா தலைமையகத்தில் பரபரப்பு: உதவித் தலைவர் வாசலில் தடுக்கப்பட்டார்
மஇகா எதிர்நோக்கும் நெருக்கடி குறித்து செய்தியாளர் கூட்டமொன்றை நடத்துவதற்காகக் கட்சித் தலைமையகம் சென்றார் உதவித் தலைவர் எம்.சரவணன். ஆனால், அவர் உள்ளே செல்ல முடியாதபடி சுமார் 20 “குண்டர்கள்” அவரைத் தடுத்து நிறுத்த முயன்றார்கள். தாங்கள் தலைமையகக் கட்டிடத்தைப் பாதுகாக்க தலைவர் ஜி.பழனிவேல், தலைமைச் செயலாளர் ஜி. குமார்…
QZ8501: தேடும் நடவடிக்கை விரைவில் முடிவுக்கு வரலாம்
ஏர் ஏசியா விமான விபத்தில் பலியானவர்களைத் தேடும் முயற்சி, மேலும் சடலங்கள் கிடைக்கவில்லையானால் அடுத்த சில நாள்களில் முடிவுக்கு வரலாம். டிசம்பர் 28-இல், சுராபாயாவிலிருந்து சிங்கப்பூர் நோக்கிப் பறந்துகொண்டிருந்த ஏர்பஸ் ஏ320 ஜாவா கடலில் விழுந்தது. அதில் இருந்த 162 பேரும் உயிரிழந்தனர். இதுவரை 70 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.…
நேருக்குநேர் சந்திக்கத் தயாரா? குவான் எங்குக்கு பாஸ் சவால்
பினாங்கில் ஊராட்சித் தேர்தல் நடத்துவதுமீது இரு கட்சிகளின் நிலைப்பாடு பற்றி நேருக்குநேர் விவாதிக்க வருமாறு பாஸ் தலைமைச் செயலாளர் முஸ்டபா அலி, டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங்குக்குச் சவால் விடுத்துள்ளார். டிஏபி பினாங்கில் ஊராட்சித் தேர்தல் நடத்துவதற்கு பாஸ் இணக்கம் தெரிவித்ததாக லிம் கூறுவது “பொய்”…
மகாதிர் சொல் கேட்பீர்: மெகா அணைகள் கட்டுவதை நிறுத்துவீர்
சரவாக் மாநில அரசு, முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் கூறும் அறிவுரையைக் கேட்டு மாநிலத்தில் மெகா அணைக்கட்டுகள் கட்டும் திட்டத்தை நிறுத்த வேண்டும். நேற்று மகாதிர் தெரிவித்த கருத்துக்கு எதிர்வினையாற்றிய சரவா ஆறுகள் பாதுகாப்பு இயக்கம்(SAVE Rivers), ராட்சத அணைக்கட்டுகள் சூற்றுச்சூழலுக்கு மட்டுமல்லாமல் மக்கள் வாழ்வுக்கும் கேடு …
குருப்-புக்கு எதிராக பெர்காசா அவதூறு வழக்கு
மலாய் உரிமைகளுக்குப் போராடும் என்ஜிஓ-வான பெர்காசா, தன்னை “இனவாத, குறுகிய நோக்குடைய” அமைப்பு என வருணித்துள்ள பிரதமர்துறை அமைச்சர் ஜோசப் குருப்-புக்கு எதிராக அவதூறு வழக்கு பதிவு செய்துள்ளது. குருப், நேற்று, பெட்டாலிங் ஜெயா, சன்வேயில் குருப் அவ்வாறு கூறினார் என பெர்காசா தலைவர் இப்ராகிம் அலி கூறினார்.…
மேஜர் ஜைடி-இன் கீழ் அதிகாரி பதவி இறக்கம்
அரச ஆகாயப்படை விமானி மேஜர் ஜைடி அஹ்மட், இராணுவ நீதிமன்றத்தால் பணிநீக்கம் செய்யப்பட்ட ஒரு வாரத்தில் அவருக்குக் கீழ்ப் பணியாற்றிய அதிகாரி ஒருவர் பதவி இறக்கப்பட்டிருக்கிறார். 13வது பொதுத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட அழியா மை பற்றி ஊடகங்களிடம் பேசியதற்காக ஜைடி பணிநீக்கம் செய்யப்பட்டார். அதை அடுத்து அவருக்குக் கீழ்ப் …
பிகேஆர்: ஜாஹிட் மவுனம் காக்க விரும்பினால் பதவி விலகுவது நல்லது
உள்துறை அமைச்சர் ஜாஹிட் ஹமிடி, அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட சூதாட்ட மன்னன் என்று கூறப்படும் பால் புவாவுக்கு ஆதரவுக் கடிதம் எழுதியது பற்றித் தொடர்ந்து மவுனம் காக்க விரும்பினால் அவர் பதவி விலகுவதே நல்லது என்று பிகேஆர் கூறியது. கடந்த ஆண்டு லாஸ் வேகாஸில் கைது செய்யப்பட்ட புவாவுடன் …
அன்வார் இல்லையென்றால் பாஸ்- டிஏபி பிளவு மேலும் மோசமடையும்
பிப்ரவரி 10-இல், பக்கத்தான் ரக்யாட் தலைவர் அன்வார் இப்ராகிம் குற்றவாளி எனத் தீர்ப்பாகி உள்ளே போய்விட்டால் பாஸ், டிஏபி உறவுகள் படுமோசமாகி விடும். அம்னோவும் பாஸும் சேர்ந்து ஒற்றுமை அரசாங்கம் அமைக்கும் சாத்தியம் பற்றிக் கருத்துரைத்தபோது மசீச இளைஞர் தலைவர் சோங் சின் வூன் இவ்வாறு கூறினார். “முன்பு …
சிருல் ‘காட்டிக்கொடுக்கப்பட்டாராம்’
போலீஸ் அதிகாரியாக தன் கடமையைச் செய்ததற்காக சிருல் அஸ்ஹார் உமர் “காட்டிக்கொடுக்கப்பட்டார்” என அவரின் தாயார் பியா சமட் கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அல்டான்துன்யா கொலையில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தாலும் சிருல் விடுவிக்கப்படுவார் என்று அவரது குடும்பம் நம்புகிறது. பியா,74, இதைத் தெரிவித்ததாக பாஸ் கட்சி செய்தித்தாளான ஹராகா டெய்லி …
பிபிஎஸ் சட்டவிரோதமானது என்ற குற்றச்சாட்டை எதிர்த்து பினாங்கு வழக்கு தொடுக்கிறது
பினாங்கு அரசு, அதன் தன்னார்வ காவல் படை(பிபிஎஸ்) சட்டவிரோதமானது என்ற குற்றச்சாட்டை நீதிமுறை மேலாய்வு செய்ய வேண்டும் என்று மனுச் செய்து கொண்டிருக்கிறது. 10-அம்ச- அடிப்படையில் மேலாய்வு செய்யக் கேட்டுக்கொள்ளும் அம்மனு இன்று பினாங்கு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அம்மனு உள்துறை அமைச்சு, போலீஸ் படைத் தலைவர், …
ஏர் ஏசியா X சிஇஓ: நான் பதவி விலகவில்லை
ஏர் ஏசியா X-இன் தலைமை செயல் அதிகாரி(சிஇஓ) அஸ்ரான் ஒஸ்மான் ரனி, பதவிவிலகல் கடிதம் கொடுத்திருப்பதாகக் கூறும் செய்திகளை மறுக்கிறார். “நான் பதவி விலகவில்லை. அந்த விமான நிறுவனத்தை நான்தான் நடத்திக் கொண்டிருக்கிறேன். இச்செய்திகள் எங்கிருந்து வருகின்றன என்பது எனக்குத் தெரியவில்லை”, என்றாரவர். கினிபிஸ்- உக்கு அனுப்பிய மின்னஞ்சலில்,…
தீவிரவாதிகளே நாட்டின் நெம்.1 எதிரிகள்
தீவிரவாதிகள், அதுவும் சமுதாயத்துக்கு அச்சத்தை ஊட்டுபவர்களே நாட்டின் முதல் எதிரிகள் என்று பிரதமர்துறை அமைச்சர் ஜோசப் குருப் கூறினார். “தீவிரவாத தரப்பினரைத் தடுத்து நிறுத்தாவிட்டால் தேசிய ஒற்றுமைக்குத் தடையாக விளங்குவார்கள்”. ஆசிய வியூக, தலைமைத்துவ கழகம் (அஸ்லி) ஏற்பாடு செய்திருந்த ஒரு மாநாட்டில் உரையாற்றியபோது குருப் இவ்வாறு கூறினார்.…
இஸ்மா அரண்மனை பெயரைச் சொல்லி சிறுபான்மையினரை மிரட்டுகிறது
ஈக்காத்தான் முஸ்லிமின் மலேசியா (இஸ்மா) 117-ஆண்டுகள் பழமைவாய்ந்த ஸ்ரீசுந்தரராஜப் பெருமாள் கோயில் புதுப்பிக்கப்பட்டதற்கு அரண்மனை பெயரைச் சொல்லி எதிர்ப்புத் தெரிவிப்பதன்வழி “நாட்டில் இனங்களுக்கிடையில் பதற்றத்தை உண்டுபண்ண முயல்கிறது” என சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் வி.கணபதி ராவ் சாடினார். இஸ்மா, இனவாதப் பேச்சுகளின் மூலமாக மலேசியர்களின் ஒற்றுமையை உடைத்தெறிய முயல்கிறது …
இஸ்மா, ஆலய-எதிர்ப்பை மீண்டும் கிளப்பிவிட்டு ஆத்திரமூட்டியுள்ளது
ஈக்காத்தான் முஸ்லிமின் மலேசியா (இஸ்மா), சமூக வலைத்தளத்தில் கிள்ளான் ஆலய-எதிர்ப்பு விவகாரத்தை மீண்டும் கிளறிவிட்டிருப்பது இந்து சமூகத்தை ஆத்திரமடைய வைத்துள்ளது. அந்த வலச்சாரி அமைப்பைத் தேச நிந்தனைச் சட்டத்தின்கீழ் விசாரிக்க வேண்டும் என மலேசிய இந்தியர் முற்போக்குச் சங்கத் தலைமைச் செயலாளர் எஸ்.பாரதிதாசன் கேட்டுக்கொண்டிருக்கிறார். “எதற்காக இஸ்மா வேண்டுமென்றே …
புதிய சட்டம் ஐஎஸ்ஏ போன்றிருக்கிறது எனக் கண்டனம்
இரத்துச் செய்யப்பட்ட உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தில் இருந்த விசாரணையின்றித் தடுப்புக்காவலில் வைக்கும் வசதி புதிதாக கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாதத்துக்கு எதிரான சட்டத்தில் இடம்பெறுவதைப் பல தரப்பினர் குறைகூறியுள்ளனர். புதிய சட்டம் அதற்கு வகை செய்யும் என உள்துறை துணை அமைச்சர் வான் ஜுனாய்டி துவாங்கு ஜப்பார் கூறியதாக மலேசியன் இன்சைடர் …
அஸ்மின்: பாஸ்- டிஏபி சில்லறை சண்டை ஓய வேண்டும்
பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி, ஊராட்சித் தேர்தல்மீது டிஏபியும் பாஸும் சர்ச்சையிடுவதற்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என விரும்புகிறார். “இதற்கு பக்கத்தானுக்குள்ளேயே தீர்வு காண வேண்டும். பக்கத்தான் ரக்யாட் தலைமைத்துவ மன்றக் கூட்டம் கூட்டப்படும்போது இவ்விவகாரமும் விவாதிக்கப்படுவது நிச்சயம். “பக்கத்தான் ரக்யாட்டின் பலமே ஒரு கருத்துடனும் …


