"சுங்கை கோலோக் (Sungai Golok) ஆறு தொடர்ந்து வறண்டு வருவதால், சட்டவிரோத எல்லைக் கடப்புகள் குறித்து காவல்துறை கவலை கொண்டுள்ளதாக கிளந்தான் மாநில காவல்துறைத் தலைவர் யுசோஃப் மாமத் தெரிவித்துள்ளார்." சுங்கை கோலோக் ஆற்றின் நீர்மட்டம் குறைந்துள்ளதால், எல்லை தாண்டிய சட்டவிரோத ஊடுருவல்கள் அதிகரிக்கக்கூடும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.…
யுஎம் சுல்தானின் சொல்லை மதிக்க வேண்டும்
மலாயாப் பல்கலைக்கழகம், அதன் வேந்தர் பேராக் சுல்தான் பல்கலைக்கழகச் சுதந்திரம் காக்கப்படுவது அவசியம் எனக் கூறியிருப்பதைக் கருத்தில்கொண்டு அதன் முன்னாள் மாணவரும் எதிரணித் தலைவருமான அன்வார் இப்ராகிமின் சொற்பொழிவைத் தடுக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும். பல்கலைக்கழக மாணவர்களிடையே அன்வார் பேசுவதைத் தடுக்கும் யுஎம்-மின் செயல், சுல்தான் நஸ்ரின் முய்ஸுடின்…
சிறப்பு நோக்கங்களுக்கான கப்பல் சரக்குக் கப்பலாக மாறியது
யுனிவர்சிடி மலேசியா திரெங்கானு (யுஎம்டி), ரிம14 மில்லியன் செலவில் ‘சிறப்புப் பணிகளுக்குப் பயன்படும்’ கப்பலொன்றைக் கட்டத் திட்டமிட்டது. ஆனால், இறுதியில் உருவானதோ ஒரு சரக்குக் கப்பலாகும். அந்த வகையில் பணம் “வீணானதாக” பொதுக் கணக்குக் குழு (பிஏசி), இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் கண்டித்துள்ளது. இத்திட்டம்மீது மலேசிய …
விரைவில் வருகிறது- மூன்றாவது கூட்டணி
பிஎன்னும் பக்கத்தான் ரக்யாட்டும் உள்ளுக்குள் சச்சரவிட்டுக் கொண்டிருக்கையில் ‘இடச்சாரிகளை’க் கொண்ட ஒரு புதிய அரசியல் கூட்டணி உருவாகி வருகிறது. ஜனவரியில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் இந்தப் புதிய கூட்டணியை அமைப்பதில் முனைப்புக் காட்டும் கட்சிகள் பார்டி சோசலிஸ் மலேசியா(பிஎஸ்எம்)-வும் பார்டி ரக்யாட் மலேசியாவும் ஆகும். அவை, சாபா, சரவாக் …
என்ஜிஓ-கள்: உலகம் கூட்டரசு நீதிமன்றத்தை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருகிறது
எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிமின் குதப்புணர்ச்சிக் குற்றச்சாட்டுக்கு எதிரான மேல்முறையீடு நாளை விசாரணைக்கு வரும்போது மலேசியாவின் உச்ச நீதிமன்றம் அனைத்துலகத் தரத்துக்கு ஏற்ப நடந்துகொள்கிறதா என்பதை உலகம் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கும். “கூட்டரசு நீதிமன்றத்தின் தீர்ப்பு மலேசிய நீதித்துறையின் தரத்தைத் தீர்மானிக்கும். “மலேசியா, ஏற்கனவே கண்டனத்துக்கு இலக்காகியுள்ள நீதித்துறையின் …
துணிச்சல் பெருங்கள், யுஎம்முக்கு அன்வார் அறிவுறுத்தல்
எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் அவர் பயின்ற மலாயா பல்கலைக்கழகத்தை (யுஎம்)இன்று சாடினார். நாளை அப்பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறவிருக்கும் ஒரு நிகழ்ச்சியில் பேசுவதற்காக அவருக்கு அழைப்பு விடுத்த மாணவர் மன்ற தலைவருக்கு காரணம் கோரும் கடிதம் கொடுக்கப்பட்டிருப்பது பற்றி கருத்துரைத்த அவர், மாணவர் விவகாரங்களுக்கான யுஎம் உதவி…
அலி உயிரை காப்பாற்றிக்கொள்ள வெளியேறியதாகக் கூறுகிறார்
தன்னார்வலர் அலி அப்துல் ஜாலில் நான்கு முறை கைது செய்யப்பட்டவர்; பல தேச நிந்தனை குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டவர். இவற்றை எல்லாம் பொருட்படுத்தாமல் தைரியமாக இருந்தவர் திடீரென்று நாட்டை விட்டு வெளியேறினார். அலி நாட்டை விட்டு வெளியேறி இறுதியில் சுவீடன் நாட்டில் தஞ்சம் புகுந்தார். அதற்குக் காரணம் தேச…
ஹெலோயீன் கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு
அக்டோபர்பெஸ்ட் பீர் கொண்டாட்டம் மற்றும் நாய் தொடுதல் நிகழ்ச்சி ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்த இஸ்லாமிய மிதவாதிகள் இப்போது நெகிரி செம்பிலானில் நடத்தப்படவிருக்கும் ஹெலோயீன் (Halloween) கொண்டாட்டதிற்கும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். பல இஸ்லாமிய கூட்டத்தினரின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து ஓர் அனைத்துலக பள்ளியில் நடத்தப்பட விருந்த ஹெலோயீன் இரவு…
அன்வார் சிறைத் தண்டனையையும் தேச நிந்தனைக் குற்றச்சாட்டையும் எதிர்பார்க்கிறார்
குதப்புணர்ச்சி வழக்கு II இல் சிறைத் தண்டனையையும் அத்துடன் தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டையும் எதிர்பார்ப்பதாக எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் மலேசியாகினிடம் கூறினார். குதப்புணர்ச்சி வழக்கில் தாம் சிறையிலடைக்கப்பட்டாலும், தாம் நீண்ட காலத்திற்கு சிறையில் இருப்பதை உறுதி செய்யும் பொருட்டு அதிகாரிகள் தேச நிந்தனைக்…
அரசுத்தரப்பு: அன்வாருக்கு ஐந்தாண்டு போதாது
அன்வாருக்குக் குதப்புணர்ச்சி வழக்கு-2இல் முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய ஐந்தாண்டுச் சிறை போதாது என்றும் கூடுதல் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்றும் அரசுத் தரப்பு வழகுரைஞர்கள் கூறியுள்ளனர். கூட்டரசு நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு முன்வைத்துள்ள வாதத் தொகுப்பு மலேசியானியின் பார்வைக்குக் கிட்டியது. அதில், அவர்கள் முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் தவறு …
காவலில் வைக்கப்பட்டார் ரிஸால்மான்
பாலியல் குற்றச்சாட்டை எதிர்நோக்குவதற்காக நியு சிலாந்திடம் ஒப்படைக்கப்பட்ட மலேசிய தூதரக இராணுவ அதிகாரி முகம்மட் ரிஸால்மான் இஸ்மாயிலைக் காவலில் வைக்குமாறு வெலிங்டன் வட்டார நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. அவர் செவ்வாய்க்கிழமை விசாரணைக்காக மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார்.
பெரிய மீன்கள் எம்ஏசிசி-இடம் சிக்குவதில்லை
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் எவ்வளவுதான் வரிந்து கட்டிக்கொண்டு உழலுக்கு எதிராக வேலை செய்து பலர் கைது செய்யப்பட்டதாக செய்தித்தாள்களில் கொட்டை எழுத்துக்களில் விளம்பரப்படுத்திக் கொண்டாலும் இந்தோனேசியாவுடன் ஒப்பிடும்போது இது சப்பென்று இருக்கிறது. இரண்டு நாடுகளின் ஊழல்-எதிர்ப்புப் போராட்டத்தையும் ஒப்பிட்ட டிஏபி பெருந் தலைவர் லிம் கிட் சியாங்…
அன்வார்: மகாதிருடன் சமரசம் செய்துகொள்வதற்கில்லை
எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம், முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிரை மன்னிக்கத் தயார். ஆனால், அவர் இழைத்த தீமைகளை மறப்பதற்குத் தயாராக இல்லை; அவற்றை மறந்து அவருடன் கைகுலுக்கி சமரசம் செய்துகொள்ளத் தயாராக இல்லை. “மகாதிர் பணி ஓய்வு பெற்ற பின்னர்(2003-இல்) அவரைப் பற்றி என்றும் நான் கடுமையாக …
அன்வாருக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனை போதாது, அரசு தரப்பு…
அன்வார் குதப்புனர்ச்சி வழக்கு II இல் மேல்முறையீட்டு நீதிமன்றம் விதித்த ஐந்து ஆண்டு சிறை தண்டனை போதாது என்று அரசு தரப்பு வழக்குரைஞர் குழு கூறுகிறது. விதிக்கப்பட்ட ஐந்து ஆண்டு சிறை தண்டனை பொதுநல நீதியின் நோக்கத்தை எட்டவில்லை என்று அரசு தரப்பு வழக்குரை குழு முன்வைத்துள்ள வாதத்தை…
எங்களுடைய பொதுக்கூட்டத்தில் தலையிடாதீர், அம்னோ கெராக்கானுக்கு சொல்கிறது
எதிர்வரும் அம்னோ பொதுக்கூட்டத்தில் இதர கட்சிகள் தலையிடக்கூடாது என்று அம்னோ இளைஞர் பிரிவு செயற்குழு உறுப்பினர் அர்மான் அஸ்ஹா ஹனிபா கூறுகிறார். கெராக்கானை பின்பற்றி அம்னோவும் அதன் பொதுக்கூட்டத்தில் உணர்ச்சிகரமானக் கருத்துகளைத் தெரிவிக்கும் பேராளர்களை இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று கெராக்கான் தலைமைச் செயலாளர் லியாங் டெக்…
கிட் சியாங்: ஹலோ காலிட், மலேசியர்கள் குறைந்த ஞாபசக்தி உடையவர்கள்…
சுயேட்சை போலீஸ் புகார்கள் மற்றும் தவறான நடத்தை ஆணையம் (ஐபிசிஎம்சி) அமைக்கப்படுவதற்கு போலீஸ் தரப்பு கடும், ஏன், அச்சம்தருகிற அளவிலான எதிர்ப்பைத் தெரிவித்ததின் விளைவாக முன்னாள் பிரதமர் அப்துல்லா படாவி ஐபிசிஎம்சிக்கு மாற்றாக பல்லில்லாத இஎஐசி கொண்டு வந்தார். நேற்று, போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு…
அன்வார்: எனக்குத் தடை விதிக்க யும்முக்கு என்ன உரிமை இருக்கிறது?
எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் எதிர்வரும் திங்கட்கிழமை அவருக்கு எதிரான குதப்புணர்ச்சி வழக்கை எதிர்கொள்ளவிருக்கிறார். அதே தினத்தில் அவர் மலாயா பல்கலைக்கழகத்தில் உரையாற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அவர் அங்கு உரையாற்ற தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தடையோ இல்லையோ, அன்வார் உரையாற்றுவது நிச்சயம். தாம் உரையாற்றுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது…
பினாங்கில் வெளிநாட்டு சமையல்காரர்களுக்குத் தடை
பினாங்கில் அங்காடிக் கடைக்காரர்கள் வெளிநாட்டுச் சமையல்காரர்களை வேலைக்கு வைத்துக்கொள்ளத் தடை விதிக்கப்படும். ஒரு ஆய்வில் 86 விழுக்காட்டினர் ஆதரவு தெரிவித்ததை அடுத்து பினாங்கு அரசு அம்முடிவுக்கு வந்துள்ளது. அடுத்த ஆண்டிலிருந்து அக்கொள்கை நடப்புக்கு வருவதாக பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் கூறினார். “வெளிநாட்டவர் சமையல்காரர்களுக்கு உதவியாக, கடை …
எதிர்ப்புக்கிடையே அன்வாரின் சொற்பொழிவை நடத்துவதில் மாணவர்கள் தீவிரம்
பல்கலைக்கழக அதிகாரிகளின் மருட்டலையும் பொருட்படுத்தாமல் எதிரணித் தலைவர் அன்வாரின் சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்வதில் யுனிவர்சிடி மலாயா மாணவர் சங்கம் (பிஎம்யுஎம்) உறுதியாக உள்ளது. சொற்பொழிவு நடத்தப்படுவது பற்றிப் பல்கலைக்கழகம், அதன் ஏற்பாட்டாளரும் பிஎம்யுஎம் தலைவருமான பாஹ்மி சைனலுக்கு விளக்கம் கேட்டுக் கடிதம் அனுப்பியிருப்பதாக இன்று பெரிதா ஹரியான் கூறியது.…
சிலாங்கூரில் கைவிடப்பட்ட வீடமைப்புத் திட்டங்கள் புத்துயிர் பெறும்
சிலாங்கூர் அரசு அம்மாநிலத்தில் கைவிடப்பட்ட வீடமைப்புத் திட்டங்களுக்குப் புத்துயிர் அளிக்க ரிம 20மில்லியன் நிதி ஒன்றை ஏற்படுத்தியுள்ளது. அதில் குறைந்த-விலை வீடுகளுக்கே முன்னுரிமை கொடுக்கப்படும் என வீடமைப்புக்குப் பொறுப்பான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் இஸ்கண்டர் அப் சமட் கூறினார். “இதன்கீழ் உதவிபெறும் நான்கு வீடமைப்புத் திட்டங்கள் இதுவரை அடையாளம் …
உதயாவின் சிறைக் கொடுமைகளை சுஹாகாம் விசாரிக்க வேண்டும்
காஜாங் சிறையில் ஏற்பட்ட கொடூர அனுபவங்கள் என அதன் முன்னாள் கைதிகளில் ஒருவரான பி..உதயகுமார் சொல்லியிருப்பவை உண்மையானவையா என்பது குறித்து மனித உரிமை ஆணையம் (சுஹாகாம்) விசாரணை நடத்த வேண்டும் என்று புரோஹாம் வலியுறுத்தியுள்ளது. “சிறைகளுக்கு வருகை அளிக்கவும் அங்குள்ள நிலவரங்கள்மீது பொது விசாரணை நடத்தவும் சுஹாகாம் சட்டம் …
என்ஜிஓ: அன்வார்மீது அரசியல் வழக்குகள் தொடுப்பதை நிறுத்துக
அனைத்துலக மனித உரிமைப் போராட்ட அமைப்பு ஒன்று, அரசாங்கம் எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம்மீது “அரசியல்-நோக்கம் கொண்ட வழக்குகள் தொடுப்பதை” நிறுத்திக்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளது. “குற்றச்செயல் எனக் கருதப்பட முடியாத ஒன்றுக்காக அன்வார்மீது வழக்கு தொடுப்பதானது, ஓர் அரசியல் எதிரியை அகற்ற அரசாங்கம் எவ்வளவு தூரம் செல்லத் …
ரிஸால்மான் இன்று நியு சிலாந்து செல்கிறார்
நியு சிலாந்தில் பாலியல் தாக்குதல் நடத்திய குற்றத்தை எதிர்நோக்கியுள்ள முகம்மட் ரிஸால்மான் இஸ்மாயில் இன்று வெலிங்டன் அனுப்பப்படுவதை வெளியுறவு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. நியு சிலாந்து போலீஸ் அதிகாரிகளும் மலேசிய இராணுவ அதிகாரிகள் இருவரும் அவருடன் செல்வார்கள் என அமைச்சின் அறிக்கை ஒன்று கூறிற்று.
இஸ்மா: மலாய்க்காரர்கள் “வந்தேறிகள்” அல்ல; பயணிகள்
மலாய்க்காரர்களை "வந்தேறிகள்" என்று முத்திரை குத்துவது முறையல்ல என்று இக்காதான் முஸ்லிமின் மலேசியா (இஸ்மா) கூறுகிறது. அவர்கள் உண்மையிலே "பயணிகள்". இங்கு வந்தவர்கள் இங்கேயே தங்கிவிட்டனர். ஆகவே, கெராக்கான் மாநாட்டில் பேசிய டான் லாய் சூன் மலாய்க்காரர்களை "வந்தேறிகள்" என்று கூறியது வரலாற்று உண்மைகளுக்கு முரணானது என்று…


