தீபாவளி வாழ்த்துகள்

செம்பருத்தி.  கோம்     அதன் வாசகர்கள், ஆதரவாளர்கள் மற்றும் அனைத்தமலேசியர்களுக்கும் அதன் இனிய தீபாவளி நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறது.   இந்நாட்டில் நமக்கும் வரலாறு உண்டு, அதனைத் தெரிந்து கொள்ள நாம் இத்தீப திருநாளில் நமக்கு நாமே ஆணையிட்டுக்கொள்ள வேண்டும். இந்நன்னாளில் லங்காசுகத்தை முதன்முதலில் ஆண்ட இந்து மன்னன் மாறன்…

கையூட்டுப் பெற்றதற்காக 2012-இலிருந்து 273 போலீசார் கைதுசெய்யப்பட்டுள்ளனர்

கையூட்டு  பெற்றதாக  சந்தேகிக்கப்படும்  போலீஸ்காரர்களை விசாரிக்கும்  பொறுப்பை  எப்போதுமே  மலேசிய  ஊழல்-தடுப்பு  ஆணையத்திடம் (எம்ஏசிசி)  ஒப்படைத்து  விடுவதாக  போலீஸ்  கூறியது. குற்றமிழைக்கும்  அதிகாரிகளை  போலீஸ்  பாதுகாப்பதில்லை, உடனடி  நடவடிக்கைக்காக  எம்ஏசிசி-இடம்  ஒப்படைக்கப்படுவதாக  தேசிய  போலீஸ்  படைத்  தலைவர் காலிட்  அபு  பக்கார்  தெரிவித்தார். “ஒழுங்குவிதி  மீறல்கள்,  நடைமுறை  மீறல்கள்…

நாடாளுமன்றத்துக்கு முழுமையான சீரமைப்பு தேவை

சட்ட முன்வடிவுகளைக்  கொண்டுவந்து  அவற்றை  நிறைவேற்றுமுன்னர் அவை  பற்றிப்  பொதுமக்களின் கருத்தைத்  தெரிந்துகொள்வது  முக்கியம்.  அதற்கேற்ப நாடாளுமன்றத்தை  முழுமையாக  சீரமைக்க  வேண்டும்  என்று முன்னாள்  உயர்கல்வி  துணை  அமைச்சர்  சைபுடின்  அப்துல்லா  முன்மொழிந்திருக்கிறார். புதிதாகக்  கொண்டுவரப்படும்  சட்டங்கள்  பற்றியோ  திருத்தங்கள்  பற்றியோ  எம்பிகளுக்கு, பிஎன் கட்சியினர்  உள்பட, விளக்கம் …

அமைச்சரவை ஏஜி-க்காக முடிவு செய்வதில்லை

மலாய்மொழி  பைபிள்களை  எரிக்கப்போவதாக  மிரட்டிய  பெர்காசா  தலைவர்  இப்ராகிம்  அலிமீது  நடவடிக்கை  எடுப்பதில்லை  என்பது  அமைச்சரவை  செய்த  முடிவு  அல்ல  என்கிறார் பிரதமர்துறை  அமைச்சர்  நன்சி  ஷுக்ரி. அவிவகாரம்  பற்றி  தாமும்  போக்குவரத்து  அமைச்சரும்   முரண்பாடான  அறிக்கைகளை  வெளியிட்டிருப்பதாகக் கூறப்படுவதில்   உண்மையில்லை   என்று  அவர் கூறினார். அவ்விவகாரத்தில்  அமைச்சரவை…

“ஆம், மலாய்க்காரர்கள் வந்தேறிகள்தான், ஆனால் முதலில் வந்தோம்”

  மலாய்க்காரர்களும் வந்தேறிகள்தான். ஆனால் அவர்கள் முதலில் வந்தவர்கள் என்று முன்னாள் அமைச்சர் ஸைனுடின் மைதின் ஒப்புக் கொண்டார். நேற்று கெராக்கான் மாநாட்டில் அதன் ஜொகூர் பேராளர் டான் லாய் சூன் சீனர்களையும் இந்தியர்களையும் வந்தேறிகள் என்று கூறி வரும் அம்னோ தலைவர்களை சாடியதோடு மலாய்க்காரர்களும் வந்தேறிகள்தான் என்று…

மலாய்க்காரர்களும் வந்தேறிகள்தான் என்று கூறிய கெராக்கான் உறுப்பினர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

  நேற்று கெராக்கான் மாநாட்டில் பேசிய அக்கட்சியின் ஜொகூர் மாநில பேராளர் டான் லாய் சூன் இன்று அக்கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். அவர் தமது உரையில் சீனர்களையும் இந்தியர்களையும் வந்தேறிகள் என்று கூறி வரும் அம்னோ தலைவர்களைக் கண்டித்ததுடன் மலாய்க்காரர்களும் வந்தேறிகள்தான் என்று கூறினார். டான் லாய் சூன்…

ஜஹிட்: தாய்மொழிப் பள்ளிகளை மூடவேண்டிய நேரம் வந்தாயிற்று

ஒற்றுமையின்  பொருட்டு  தாய்மொழிப் பள்ளிகளை  அகற்ற  வேண்டிய  தருணம்  வந்துவிட்டது  என்று  உள்துறை  அமைச்சர்  அஹமட்  ஜஹிட்  ஹமிடி  கூறியதாக  அறிவிக்கப்பட்டுள்ளது. “வந்த  நாட்டை  மறந்து விடுங்கள்.  ஏனென்றால்,  இன்று  நாம்  அனைவருமே  மலேசியர்கள்”, என்றவர்  கூறியதாக  அம்னோவுக்குச்  சொந்தமான  உத்துசான்  மலேசியா  நாளேடு  அறிவித்துள்ளது. தாய்மொழிப்  பள்ளிகள் …

நாங்கள் புல்லுருவிகளா? கெராக்கான்மீது பெர்காசா பாய்ச்சல்

கெராக்கான்  மாநாட்டில் “புல்லுருவி” என்ஜிஓ-கள்  பற்றிக்  குறிப்பிடப்பட்டது  பெர்காசாவை  மறுபடியும்  உசுப்பி  விட்டிருக்கிறது. சிலாங்கூர்  பெர்காசா  தலைவர் யஹ்யா  அபு  பக்கார்,  மலாய்  மேலாண்மைக்காக  போராடும்  அந்த  அமைப்பைக்    கருத்தில்  வைத்துதான் கெராக்கான்  இளைஞர்  தலைவர்  டான்  கெங்  லியாங்,    அவ்வாறு  குறிப்பிட்டாரா  என  முகநூலில்  வினவினார். “கெராக்கான் …

தாய்மொழிப்பள்ளிகள் மூடப்பட வேண்டும்: உள்துறை அமைச்சர் ஹமிடிக்கு குலா கண்டனம்

-மு. குலசேகரன், அக்டோபர் 20, 2014. இன்றைய உத்துசான் மலேசிய  நாளிதழில்  உள்துறை அமைச்சர்  சாஹிட் ஹமிடி நாட்டில் உள்ள எல்லாப் பள்ளிகளையும்  ஒரே மொழிப் பள்ளிகளாக  மாற்ற வேண்டும் என்ற தமது தனிப்பட்ட கருத்தை தெரிவித்ததாக  செய்தி வந்துள்ளது. இந்தச் செய்தி மிகவும் கண்டனதுக் குறியது. இந்த…

லியோ: பைபிள் எரிப்பு விவகாரத்தில் அமைச்சரவை முடிவெடுத்துவிட்டதாகக் கூறப்படுவது உண்மையல்ல

பைபிளைக்  கொளுத்த  வேண்டும்  என்று  தூண்டிய  பெர்காசா  தலைவர்  இப்ராகிம்  அலிக்கு  எதிராக  நடவடிக்கை  இல்லை  என்று  அமைச்சரவை  முடிவு  செய்திருப்பதாகக்  கூறப்படுவதைப்  போக்குவரத்து  அமைச்சர்  லியோ  தியோங்  லாய்  மறுத்துள்ளார். அவ்விவகாரம்  பற்றி  அமைச்சரவை  விவாதித்தது  உண்மைதான்  என்பதை  ஒப்புக்கொண்ட  லியோ, அதில்  முடிவு  எதுவும்  செய்யப்படவில்லை …

தண்ணீர் சீரமைப்பு ஒப்பந்தம் இரகசியமானதா? விளக்கம் தேவை

சிலாங்கூர்  நீர்  சீரமைப்பு  ஒப்பந்தம்  எதற்காக  இரகசியமாக  வைக்கப்பட  வேண்டும்  என்பதற்கு  புத்ரா  ஜெயா-விடமிருந்து  விளக்கம்  தேவை  என  சிலாங்கூர்  மந்திரி  புசார்  கேட்கிறார். இன்று  செய்தியாளர்களிடையே  பேசிய  எம்பி,  முகம்மட்  அஸ்மின்  அலி, அந்த ஒப்பந்தத்தைப்  படித்துப்  பார்த்ததாகவும்  அதை  தேசிய  இரகசியப் பாதுகாப்புச்  சட்டத்தின்கீழ்  வைக்க …

‘உணர்ச்சிவயப்பட வைக்கும்’ விவகாரங்களை வெளியிடாதீர்: ஊடகங்களுக்கு கெராக்கான் அறிவுறுத்து

ஊடகங்கள்,,  உணர்ச்சிவயப்பட  வைக்கும்  செய்திகளைக் குறிப்பாக  அரசியல்  தலைவர்கள், கட்சியினர்  எழுப்பும்  இன  விவகாரங்களை   வெளியிடுவதைத்  தவிர்க்க  வேண்டும். “அப்படிப்பட்ட  கருத்துகளுக்கு  ‘இடமில்லை’ என்று  சொல்ல  வேண்டிய  ஊடகங்கள் அவற்றை  வெளியிடுவோருக்கு  விளம்பரம்  கொடுப்பது  அவர்களை ஹீரோக்கள்  ஆக்கிவிடும்” என  கெராக்கான் உதவித்  தலைவர்  ஏ.கோலிலன்  பிள்ளை  கூறினார்.…

கெராக்கான் அதன் பேராளரைக் கட்சிநீக்கம் செய்ய வேண்டும்; மலாய் என்ஜிஓகள்…

கெராக்கான் பேராளர்  ஒருவர்,  அம்னோ  தலைவர்கள் “வந்தேறிகள்” என்று  கூறுவதை  நிறுத்த  வேண்டும்  ஏனென்றால்  அவர்களும்  குடியேறி  வந்தவர்கள்தாம்  என்று  தெரிவித்த  கருத்துக்காக  அவர்மீது  மலாய்  என்ஜிஓ-கள்  ஆத்திரம்  கொண்டுள்ளன. நேற்றைய  கெராக்கான் மாநாட்டில்  அக்கருத்தைத்  தெரிவித்த ஜோகூர்  பேராளர்  டான்  லாய்  சூன்னை  கெராக்கான்  தலைவர்  கட்சியிலிருந்து …

தேச நிந்தனைச் சட்டம் இருக்கிறது, ஜாக்கிரதை, எச்சரிக்கிறார் அமைச்சர்

  தம்மை குறைகூறிய இருவரை வாயாடிகள் என்று வர்ணித்த நகர நல்வாழ்வு, வீடமைப்பு மற்றும் உள்ளாட்சி அமைச்சர் அப்துல் ரஹ்மான் டாலான் தேச நித்தனைச் சட்டம் இருப்பதைக் கவனித்தில் கொள்ளுங்கள் என்று அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். அமைச்சர் டாலான் மலேசியாவின் தேச நிந்தனைச் சட்டம் குறித்து அமெரிக்க தெரிவித்திருந்த…

நீங்களும் வந்தேறிகள்தான் என்பதை மறந்துவிடாதீர், அம்னோவுக்கு நினைவுறுத்தல்

  இன்று கெராக்கான் மாநாட்டில் பேசிய ஒரு பேராளர் அம்னோ தலைவர்கள் "வந்தேறிகள்" என்று கூறும் கருத்துகளுக்கு எதிராக அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். மலாய்க்காரர்களும் வந்தேறிகள்தான் என்று அப்பேராளர் அவர்களுக்கு நினைவுறுத்தினார். "மலேசியர்களின் நிலைப்பாட்டை நான் தெளிவுபடுத்துகிறேன். மலாய்க்காரர்கள், சீனர்கள் மற்றும் இந்தியர்கள் ஆகிய அனைவரும், உண்மையான பூமிபுத்ராக்காளாகிய…

பொய்யை நம்பியதால் சீனர்கள் வாக்களிக்கவில்லை, நஜிப்

  பதிமூன்றாவது பொதுத் தேர்தலில் பாரிசானுக்கு சீனர்களின் வாக்குகள் பெருமளவுக்கு குறைந்ததற்குக் காரணம் அவர்கள் பொய்களை நம்பியதுதான் என்று பாரிசான் தலைவர் நஜிப் ரசாக் கூறுகிறார். "சீனர்களின் வாக்குகள் குறைந்ததற்கு என்ன காரணம் என்று கற்பனை செய்து பாருங்கள்", என்று அவர் செத்தியா அலாம், சிலாங்கூரில் நடைபெற்ற 43…

அன்வார்: நாட்டை விட்டு வெளியேறும் திட்டம் இல்லை

  தமக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள குதப்புணர்ச்சி வழக்கில் தாம் சிறையில் அடைக்கப்படும் சாத்தியம் இருந்த போதிலும், தாம் நாட்டை விட்டு வெளியேறப் போவதில்லை என்று எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறுகிறார். அன்வார் தற்போது பிரிட்டனில் இருக்கிறார். முஸ்லிம் உலகில் உயர்கல்வி சீர்திருத்தம் குறித்த ஒரு பணிப்படை கூட்டத்தில்…

போர்னியோ நெடுஞ்சாலைத் திட்டக் குத்தகை மறு ஆய்வு செய்யப்படும்

போர்னியோ  நெடுஞ்சாலைத்  திட்டக் குத்தகை  சாபா  குத்தகையாளர்களுக்குத்தான்  கொடுக்கப்பட  வேண்டும்  என்று  கூறப்படுவது  பிரதமர்  நஜிப் அப்துல் ரசாக்கின்  கவனத்துக்குக்  கொண்டு  செல்லப்பட்டிருப்பதாக  சாபா  முதலமைச்சர்  முசா  அமான்  நேற்றுத்  தெரிவித்தார். “அது  பற்றிப்  பிரதமருடன்  பேசினேன். அவரும்  அதை  மறு ஆய்வு  செய்ய  இணங்கியுள்ளார். “அத்திட்டத்தால்  உள்ளூர் …

அன்வாரின் வழக்குரைஞர்களை மிரட்டக்கூடாது

தங்களுக்கு  எதிரான  மிரட்டல்கள்  நிறுத்தப்பட  வேண்டும்  என்ற  அன்வார் வழக்குரைஞர்களின்  கோரிக்கை  குறித்து அரசாங்கமும்  சட்டத்துறைத்  தலைவரும் (ஏஜி) மவுனமாக  இருப்பது  வருத்தமளிப்பதாக  பிகேஆர்  சட்டப்  பிரிவுத்  தலைவர்  ஆர்.சிவராசா  கூறினார். அன்வாரின்  வழக்குரைஞரும்  பாடாங்  செராய்  எம்பி-யுமான  என். சுரேந்திரக்கு  எதிராக  தேச  நிந்தனைக்  குற்றம்  சுமத்தப்பட்டிருப்பதன் …

பிஎன்னுக்குப் ‘புல்லுருவி’ என்ஜிஓ-களுடன் உறவு தேவையில்லை

பிஎன்,  “இன, சமயம்”  சார்ந்த  என்ஜிஓ-களுடன்  நெருக்கமாக  இருப்பது  போல்  காணப்படும் நிலையை  விட்டொழிக்க  வேண்டும். அந்த  என்ஜிஓ-கள்  “புல்லுருவிகள்”  என்றும்  அவற்றால் பிஎன்னுக்குக்  கெடுதல்தான்  என்றும்  கெராக்கான்  இளைஞர் தலைவர்  எச்சரித்துள்ளார். “அவை  பிஎன்னுக்கு  ஆதரவாக  இருப்பதுபோன்ற  தோற்றப்பாட்டை  உருவாக்கி  வைத்துள்ளன.  ஆனால், அவற்றின்  தலைவர்களின்  தீவிரப் …

ஜனநாயகத்துக்கான கூப்பாடு அழிவைக் கொண்டுவரும்: கெராக்கான் வனிதா எச்சரிக்கை

கூடுதல்  ஜனநாயகத்துக்கு விடுக்கப்படும்  கோரிக்கைகளுக்கு  செவிசாய்க்க  வேண்டாம்  என்று  எச்சரிக்கும்  கெராக்கான்  மகளிர்  பகுதி,  மலேசியாவின்  “அரசியல்  நிலைப்பாட்டுக்கு”  தடுப்புச்  சட்டங்கள்  தேவை  என்றும்  வலியுறுத்துகிறது. “கெராக்கான்  மகளிர்  பகுதி  தடுப்புச்  சட்டங்களை  முழுமையாக  ஆதரிக்கிறது.  அவை, அரசியல்  நிலைத்தன்மையைக்  காக்கவும்  கூட்டரசு  அரசமைப்பு, ருக்குன் நெகாரா ஆகியவற்றை …

டிஎபி: பெட்ரோல் விலையை உடனடியாக குறைக்க வேண்டும்

  எரிபொருளுக்கான உலகச் சந்தையின் விலையைப் பார்க்கும் போது மலேசியாவில் ரோன்95க்கு அரசாங்கம் மானியம் ஏதும் அளிக்கவில்லை என்பதோடு மலேசியர்கள் சந்தை விலையை விட கூடுதலான விலை கொடுக்கின்றனர் என்று டிஎபி பேராக் கூறுகிறது. நேற்றைய விலையின்படி, உலகச் சந்தையில் ஒரு பீப்பாய் பெட்ரோலின் விலை யுஎஸ்$84.47 (ரிம277)…

பில்லியன் கணக்கான ரிங்கிட் மதிப்புள்ள டிபிகேஎல் நிலங்கள் ‘கமுக்கமாக விற்கப்பட்டன’

கோலாலும்பூர்  மாநகராட்சி  மன்றம் (டிபிகேஎல்)  அதன்  நிலங்களைச்  சில  தரப்பினருக்கு   இரகசிமாக  விற்பனை  செய்திருப்பதாக   செராஸ்  எம்பி  டான்  கொக்  வாய்  கூறினார். “திறந்த  டெண்டர்கள்  அழைக்கப்படும்  என  விளம்பரப்படுத்தப்பட்ட  சில  திட்டங்கள்  கடந்த  இரண்டு, மூன்று  ஆண்டுகளில்  சில  தரப்புகளுக்குக்  கமுக்கமாக  விற்கப்பட்டுள்ளன. “நேரடிப்  பேரம்பேசி எல்லாம் …