நீர் உடன்பாடு கைவிடப்பட்டதற்குப் பல தரப்பினர் கண்டனம்

சிலாங்கூர்  அரசுக்கும் மத்திய  அரசாங்கத்துக்குமிடையிலான  நீர்  உடன்பாடு  கைவிடப்பட்டிருப்பதை  அறிந்து  பல  என்ஜிஓ-கள்  ஆத்திரமடைந்துள்ளன. இரு  அரசுகள்  மீண்டும்  பேச்சுகளுக்குத்  திரும்பி  சிலாங்கூர்  நீர்  விநியோகத்  தொழிலைச்  சீரமைக்கும்  பணியை  இவ்வாண்டுக்குள்  பூர்த்தி  செய்ய  வேண்டும்  என அவை  கேட்டுக்கொண்டன. “சிலாங்கூர்  நீர்  தொழில்  சீரமைப்புக்காக  இரு  அரசாங்கங்களும் …

ஜாஹிட்: புவா கடிதத்துக்காக சல்லிக் காசு பெற்றதில்லை

உள்துறை  அமைச்சர்   அஹமட்  ஜாஹிட்  ஹமிடி,  அமெரிக்காவில்  சூதாட்டக்  குற்றத்துக்காகக்  கைது  செய்யப்பட்ட  பால்  புவா  வெய்  சாங்-குக்கு  ஆதரவாகக்  கடிதம்  எழுதியதன்  தொடர்பில் தம்மைப் பற்றிப்  பலவாறாகப்  பேசப்படுவதை  அறிந்தே  இருப்பதாகக்  குறிப்பிட்டார். “எது  ஹலால்  எது  ஹராம்  என்பது  எனக்குத்  தெரியும். ஒரு கடிதத்துக்காக  என்னவெல்லாமோ …

ஜாஹிட்: சாபா, சரவாக் செல்லத் தடை செய்யப்பட்டவர்களின் பெயரை வெளியிடுவதற்கில்லை

தீவகற்ப  மலேசியாவிலிருந்து  சாபா, சரவாவுக்குள்  நுழைய  தடை  செய்யப்பட்டவர்களின்  பட்டியல்  அதிகாரத்துவ இரகசியச் ச் சட்டத்தின்கீழ்  வருவது  என்பதால்  அதை  வெளியிட  முடியாது   என  உள்துறை  அமைச்சர்  அஹ்மட்  ஜாஹிட்  ஹமிடி  கூறினார். அம்மாநிலங்களில் கால்வைக்க  முடியாதவர்களின்  பெயர்களைத்  தெரிவிக்குமாறு  திரேசா  கொக்  கேட்டதற்கு  அமைச்சர்  இவ்வாறு  பதிலளித்தார்.…

‘அவசரப்பட்டு விசாரணை செய்ய உத்தரவிட்டிருக்கிறார்’, ஐஜிபிமீது குற்றச்சாட்டு

மலாய்க்காரர்களைக்  கண்டு  அச்சமில்லை  என்று  முகநூலில்  பதிவிட்ட  பினாங்கு  துணை  முதலமைச்சர்  பி.இராமசாமி மீது  விசாரணை  நடத்துமாறு  பினாங்கு  போலீசுக்கு  உத்தரவிட்டதில் போலீஸ்  படைத்  தலைவர்  காலிட்  அபு  பக்கார்   அவசரப்பட்டு  நடந்து  கொண்டிருப்பதாகக்  குற்றம்  சாட்டப்பட்டிருக்கிறார். காலிட்  சுட்டிக்காட்டும்  அந்த  முகநூல்  பதிவு  பிஎன் கணினிப்படையினரின்  “கைவேலை” …

பெற்றோர்களின் முன் அனுமதியில்லாமல் சபா மாணவி இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்பட்டது…

  ஒரு 16 வயது மாணவி இஸ்லாம் மதத்திற்கு அவரது கிறிஸ்துவ பெற்றோர்களின் முன் அனுமதி இல்லாமல் மாற்றப்பட்டது சட்டப்படி செல்லுபடியாகாது  என வழக்குரைஞர்  மு. குலசேகரன் கூறினார். “மாணவியின்  மதமாற்றம் பெற்றோர்களின் சம்மதத்துடன் மட்டுமே முடியும்”,  என அவர் மேலும் கூறினார். பாலர் பள்ளி  ஆசிரியையான இந்திராதேவியின் வழக்கை சுட்டிக்காட்டிய  குலசேகரன் ,அந்த வழக்கில்  சிவில் நீதிமன்றம் அவருடைய முன்னாள்…

ஹாடியைத் தோற்கடிப்பது எளிதான செயலல்ல, இளைஞர் தலைவர்

15 ஆண்டுகள் பாஸ்  தலைவராக  உள்ள  அப்துல்  ஹாடியை  எதிர்த்துப்  போட்டியிடுவது  எளிதானதல்ல  என்கிறார்  பாஸ்  இளைஞர்  தலைவர்  சுஹாய்ஸான்  காயாட். எதிர்வரும்  கட்சித்  தேர்தலில்,  தலைவர்  பதவிக்கு அவரை  எதிர்த்துப்  போட்டியிருக்குமா  என்று  வினவப்பட்டதற்கு  அவர்  இவ்வாறு  கூறினார். “அவரை  எதிர்ப்பது  கடினம். அவருக்கு  இணையான  தலைவர் …

‘வாருங்கள் வாதிடலாம்’- ஷாபிக்கு ஹனிபா மீண்டும் சவால்

பாஸ் செப்பாங்  எம்பி  முகம்மட்  ஹனிபா  மைடின்,   அன்வார் இப்ராகிமின் குதப்புணர்ச்சி  வழக்குமீது  வாதமிட  வருமாறு அரசாங்கம்  நியமித்த  அரசுத்தரப்பு  வழக்குரைஞரான  ஷாபி  அப்துல்லாவுக்கு  மீண்டும்  சவால்  விடுத்துள்ளார். இன்று  நாடாளுமன்றத்தில்  அவர்  இச்சவாலை  விடுத்தார். “ஆம். அதன்மீது  வாதமிட  நான்  தயார். ஷாபியுடன்  அல்லது  வேறு  யாருடனும்,…

ஷாபியின் முதலாவது விளக்கக் கூட்டத்தை ஏற்பாடு செய்ததை அரசாங்கம் ஒப்புக்கொண்டது

அன்வார்  இப்ராகிமின்  குதப்புணர்ச்சி  வழக்கு II-மீதான  ஷாபி  அப்துல்லாவின்  முதலாவது  விளக்கக்  கூட்டத்தை  ஏற்பாடு  செய்ததை  ஒப்புக்கொண்ட  அரசாங்கம்,  அதன்பின்னர்  நடந்த  விளக்கக்  கூட்டங்களுக்கும்  தனக்கும்  தொடர்பில்லை  என்று  கூறிற்று. அரசாங்கம் “முதலாவது  கூட்டத்தை  மட்டுமே  ஏற்பாடு  செய்தது”  என  நன்சி  ஷுக்ரி இன்று  நாடாளுமன்றத்தில்  தெரிவித்தார். “மற்ற …

மகாதிர்: 1எம்டிபி பற்றிய கேள்விகள் வேண்டாமே

எதைப்  பற்றிக்  கேட்டாலும்  தயங்காது  பதிலளிக்கக்  கூடியவர்  முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட். ஆனால்,  அவர்  இன்று  தாம்  கலந்துகொள்ளும்  நிகழ்வு  பற்றி  மட்டுமே  கேள்விகள்  கேட்க  வேண்டும்  என்பதை வலியுறுத்தியது  ஆச்சரியமாக  இருந்தது. செர்டாங்  பெர்டானா  பல்கலைக்கழகத்தில்  செய்தியாளர்களிடம்  பேசிய  மகாதிர், 1மலேசியா  மேம்பாட்டு  நிறுவனம்…

1எம்டிபி-இன் கேய்மன் நிதியான ரிம4 பில்லியன் இப்போது சிங்கப்பூரில்

1மலேசியா  மேம்பாட்டு  நிறுவனம் (1எம்டிபி) கேய்மன்  தீவில்  செய்த  முதலீட்டில்  மிச்சமிருந்த  யுஎஸ்$1.103 பில்லியன்  இப்போது  சிங்கப்பூர்  வங்கி  ஒன்றில்  இருப்பதாக  அரசாங்கம்  தெரிவித்தது. 4 பில்லியன் ரிங்கிட்டுக்குச்  சமமான  அத்தொகை  இப்போது பிஎஸ்ஐ  பேங்க்  லிமிடெட்  சிங்கப்பூரில்  வைக்கப்பட்டிருப்பதாக  நிதி  அமைச்சு  டோனி  புவா(டிஏபி- பெட்டாலிங்  உத்தாரா)வின் …

அரசாங்கம் ஷாபிக்குக் கொடுத்தது ரிம1,000 மட்டுமே

அன்வார் இப்ராகிமின்  குதப்புணர்ச்சி 11-வழக்கில்  அரசுத்  தரப்புத்  தலைமை  வழக்குரைஞராக  பணியாற்றிய  வழக்குரைஞர்  ஷாபி  அப்துல்லாவுக்குச் சன்மானமாக  ரிம 1,000  மட்டுமே  வழங்கப்பட்டதாக  நடப்பில்  சட்ட  அமைச்சரான  நன்சி  ஷுக்ரி  கூறினார். “ஷாபி  பெற்ற  மொத்த  தொகையே  ரிம1,000-தான்”, என எர்  டெக்  ஹாவ்(டிஏபி- பக்ரி ஹாவின்  கேள்விக்கு …

அன்வாரின் உரையை நுருல் அவரது சொந்த உரையாக எடுத்துக் கொள்ள…

  பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற உறுப்பினரும் பேரரசரின் நாடாளுமன்ற எதிரணித் தலைவருமான அன்வார் இப்ராகிமின் உரையை பிகேஆர் லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினர் நூருல் இஸ்ஸா நாடாளுமன்ற மக்களவையில் வாசிப்பதற்கு மக்களவை இன்று தடை விதித்தது. எதிரணித் தலைவருடைய உரையின் ஒரு பகுதியை நூருல் இஸ்ஸா அவரது சொந்த…

பாஸ் கட்சியின் தலைமைப் பதவிக்கான நியமனத்தை துவான் இப்ராகிம் நிராகரித்தார்

  எதிவரும் கட்சித் தேர்தலில் பாஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு துவான் இப்ராகிம் துவான் மான் நியமனம் செய்யப்பட்டிருந்தார். ஆனால், அவர் அந்த நியமனத்தை நிராகரித்து விட்டார். பாஸ் கட்சியின் உதவித் தலைவரான அவர், தமது நியமனத்தை "அதிர்ச்சி" அளிப்பதாகும் என்று வர்ணித்தார். தற்போதைய தலைவர் அப்துல் ஹாடி…

ரபிஸி கைது செய்யப்பட்டார்

  அன்வார் இப்ராகிம் ஆதரவு கித்தா லவான் பேரணியில் கலந்து கொண்டதற்காக பிகேஆரின் ரபிஸி ரமலி இன்று கைது செய்யப்பட்டார். இவர் கைது செய்யப்பட்ட நான்காவது பிகேஆர் தலைவர். 1 மலேசியா மேம்பாடு பெர்ஹாட்டிற்கு எதிராக போலீஸ் புகார் செய்வதற்காக சென்ற ரபிஸியை போலீசார் கைது செய்தனர். இப்போது…

‘பழனிவேலின் காணொளியால்’ பரபரப்பு

மஇகாவில்  பல குளறுபடிகள்  நிகழ்ந்துவரும்  வேளையில், சமூக  வலைத்தளங்களில்  உலவி  வரும்  பழனிவேலின்  காணொளி ஒன்று  பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. 3:16 நிமிடம் ஓடும்  அந்தக் காணொளியில்  இருப்பது  மஇகா  தலைவர்தானா என்பதை  உறுதிப்படுத்த  இயலவில்லை. அக்காணொளியில்  பேசும்  அந்த  மனிதர்,  அவருக்கு  பிகேஆருடன்  நெருக்கமான  உறவு  இருப்பதாகக்  கூறுகிறார்.…

‘ஐஜிபி நீதிமன்றத்தை அவமதிக்கிறார்’,வழக்குரைஞர்

இன்ஸ்பெக்டர்-ஜெனரல் அப்  போலீஸ்,  காலிட்  அபு  பக்கார்,  2012  அமைதிப்  பேரணிச்  சட்டம்  பகுதி 9(5)-ஐ  அமல்படுத்துவதன்வழி  நீதிமன்றத்தை  அவமதிக்கிறார்  என  வழக்குரைஞர்  எரிக்  பால்சன்  கூறினார். அச்சட்டம்  அரசமைப்புக்கு  விரோதமானது  என மேல்முறையீட்டு  நீதிமன்றம்  கடந்த  ஆண்டு  தீர்ப்பளித்துள்ளதாகவும்  எனவே  அது  செல்லாது  எனவும்  சுதந்திரத்துக்குப் போராடும் …

புத்ரா ஜெயா: நீர் உடன்பாடு முறிந்ததற்கு சிலாங்கூரே காரணம்

சிலாங்கூர் மாநில  அரசுதான்  நீர்  உடன்பாட்டை  “முறித்துக்கொண்டது” எனக்  கூட்டரசு  அரசாங்கம்  கூறுகிறது. இன்று  நாடாளூமன்றத்தில்  இதனைத்  தெரிவித்த  எரிபொருள், பசுமைத்  தொழில்நுட்பம், நீர்வள  அமைச்சர்  மெக்சிமஸ்  ஒங்கிலி,  செப்டம்பரில்  இரு  தரப்பினரும்  செய்துகொண்ட  உடன்பாட்டின்  நிபந்தனைகளை  மாநில  அரசுதான்  நிறைவேற்றவில்லை  என்றார். “எங்களைப்  பொறுத்தவரை,  உடன்பாட்டை  நீட்டிப்பதில்லை …

கித்தா லவான் பேரணி: மேலும் ஒரு பிகேஆர் தலைவர் கைது

சனிக்கிழமை  நடைபெற்ற  கித்தா  லவான்  பேரணி  தொடர்பில்  பிகேஆர்  மத்திய  செயல்குழு  உறுப்பினர்  ஃபாரிஸ்  மூசா  இன்று  கைது  செய்யப்பட்டார். கைது  செய்யப்பட்டதை ஃபாரிஸ்  டிவிட்டரில்    உறுதிப்படுத்தினார். அமைதிப்  பேரணிச்  சட்டம்  மற்றும்  குற்றவியல்  சட்டம்  பகுதி  143-இன்கீழ்  தாம்  தடுத்து  வைக்கப்பட்டிருப்பதாக  அவர்  டிவிட்  செய்திருந்தார். ஃபாரிஸ், …

1எம்டிபி: நஜிப்பும் விசாரிக்கப்படலாம்

1மலேசியா  மேம்பாட்டு  நிறுவன(1எம்டிபி)த்தின்  கணக்குகள் அந்நிறுவனம்  தொடங்கப்பட்ட  2009-ஆம்  ஆண்டிலிருந்து  ஆய்வு  செய்யப்படும்  எனத்  தலைமைக்  கணக்காய்வாளர்  அம்ப்ரின்  புவாங்  அறிவித்துள்ளார். இன்று  இதை  அறிவித்த  அவர்,  இவ்விவகாரத்தில்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கும்  விசாரிக்கப்படலாம்  என்றார். “தேவை  என்றால்  விசாரிப்போம். போலீசும்  இதைத்தான்  சொல்லியுள்ளது”, என்று  அம்ப்ரின் …

அன்வாரின் சிறைத் தண்டனையை எதிர்த்து எம்பிகள் மொட்டை அடித்துக் கொண்டனர்

எதிரணித்  தலைவர்  அன்வார் இப்ராகிம்  சிறையிடப்பட்டதற்கு  எதிர்ப்புத்  தெரிவிக்க  15-க்கு  மேற்பட்டோர்  இன்று  நாடாளுமன்றத்துக்கு  முன்  மொட்டை  அடித்துக்  கொண்டனர். அவர்களில்  கோட்டா  கினாபாலு  எம்பி  ஜிம்மி  வோங், பாசிர்  பூத்தே  எம்பி  நிக்  மைஸான்  நிக்  முகம்மட்  ஆகியோரும்  உள்ளிட்டிருந்தனர். நிக்  மைஸான்,  “குறைபாடுடைய” நீதிமுறைக்கு  எதிர்ப்புத் …

செம்பாக்கா இடைத் தேர்தலில் ஐந்து-முனை போட்டி

கிளந்தான், செம்பாக்கா  இடைத்  தேர்தல்  ஐந்து-முனைப்  போட்டியாக  அமையும். பாஸின்  கோட்டையான  அத்தொகுதியில்  பாஸுக்கு  எதிராக  4 சுயேட்சை வேட்பாளர்கள் களமிறங்குகிறார்கள். பாஸ் கட்சி  பாவுங்  பள்ளிவாசல்  இமாம் அஹ்மட் பாத்தான் முஹ்மூட்டை  அதன்  வேட்பாளராக நியமித்துள்ளது.  அவரை  எதிர்த்து  கிளந்தான்  பெர்காசா  உதவித் தலைவர் ஷரிப்  மஹ்மூட், …

மகாதிர்: சிவப்புச் சட்டைக்காரர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்

  நேற்று அம்னோ தொகுதித் தலைவர்கள் அனைவரும் பிரதமர் நஜிப்புடன் நடத்திய தோழமைக் கூட்டத்தில் சிவப்புச் சட்டை அணிந்திருந்தனர். ஆகவே, கட்சியில் எல்லாம் நல்லதாகவே இருக்கும் என்று கூறப்பட்டது. நேற்று நஜிப்புக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக கூடியிருந்த அம்னோ தொகுதித் தலைவர்கள் பற்றி கேட்ட போது டாக்டர் மகாதிர் இப்படி…

1எம்டிபி மீது விசாரணை நடத்த சிறப்பு பணிப்படை

  1மலேசியா மேம்பாடு பெர்ஹாட் சம்பந்தப்பட்ட விவகாரங்கள் பற்றி விசாரணை நடத்துவதற்காக ஒரு சிறப்பு பணிப்படை அமைக்கப்பட்டுள்ளது என்று இன்ஸ்பெக்டர் ஜெனரல் காலிட் அபு பாக்கார் தெரிவித்துள்ளார். அப்பணிப்படையில் போலீசார், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் மற்றும் சட்டத்துறை தலைவர் அலுவலகம் இடம் பெற்றிருக்கும் என்று அவர் செய்தியாளர்களிடம்…