‘பெயர் இல்லை’ என்பதே ஒருவரின் பெயரான விந்தை

சாபா, தாவாவில் பிறந்த ஒருவர் 40 ஆண்டுகளாக ‘பெயர் இல்லை’ என்ற பெயருடன் வாழ்ந்து வந்ததாக சாபா குடியேறிகள் மீதான அரச விசாரணை ஆணையத்திடம் இன்று கூறினார். மஹாட் இஸ்மாயில், 65, பிறந்தபோது அவரின் தந்தை மற்ற விசயங்களில் மும்முரமாக இருந்ததால் பெயரைப் பதிவு செய்யவில்லை உடனே,“மருத்துவ மனை…

கோபிந்த்: இஓ-வுக்குப் பதிலாகக் கொண்டுவரப்படும் சட்டத்தின் வரைவைக் காட்டுங்கள்

அவசரகாலச் சட்டவிதி(இஓ)களுக்குப் பதிலாகக் கொண்டுவரப்படும் புதிய சட்டத்தின் வரைவை முதலில் தங்களுக்குக் காண்பிக்க வேண்டும். அப்போதுதான் அதன் தொடர்பில் பின்னூட்டம் வழங்க முடியும் என்கிறார் பூச்சோங் எம்பி கோபிந்த் சிங் டியோ. அப்புதிய சட்டம் தொடர்பில் மாற்றரசுக் கட்சிகள், என்ஜிஓ-கள் முதலியோரின் கருத்துகளை வரவேற்பதாக உள்துறை அமைச்சர் கூறியிருப்பதற்கு…

ஜூலை 24-இல் கோலா பெசுட் இடைத் தேர்தல்

கோலா பெசுட் இடைத் தேர்தல் ஜூலை 24, புதன்கிழமை நடைபெறும். வேட்பு மனு தாக்கல் செய்யும் நாள் ஜூலை 12. அது ஒரு வெள்ளிக்கிழமை. வெள்ளிக்கிழமை திரெங்கானுவில் விடுமுறை நாளாகும். இதனை இன்று அறிவித்த தேர்தல் ஆணையம், முன்கூட்டிய வாக்களிப்பு ஜூலை 20-இல் நடத்தப்படும் எனத் தெரிவித்தது. இந்தத்…

நீர் விரயத்தைத் தடுப்பதற்குக் கொடுத்த நிதியில் ஷபாஸ் கார் வாங்கியது;…

2011-இல், சியாரிகாட் பெக்காலான் ஆயர் சிலாங்கூருக்கு (ஷபாஸ்) அதன்  விரயமாகும் தண்ணீரை 20விழுக்காடாகக் குறைக்கும் திட்டத்துக்காக மாநில அரசு  ரிம784 மில்லியன் ஒதுக்கீடு செய்தது. ஆனால், விரயமாகும் தண்ணீரின் அளவு குறையவில்லை.  அது இன்னும் 33 விழுக்காடாகவே உள்ளது.  அப்பணத்தில் 32 விழுக்காடு மட்டுமே அத்திட்டத்துக்காக செலவிடப்பட்டிருக்கிறது. “மீதி, …

மதமாற்ற சட்டமசோதா: கருத்துரைக்க எம்பிகள் தயக்கம்

இஸ்லாமிய சட்ட நிர்வாக (கூட்டரசு பிரதேசம்) திருத்த மசோதா 2013 மீது கருத்துத் தெரிவிக்க பாஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாராக இல்லை.  மற்ற முஸ்லிம் எம்பிகள் சர்ச்சைக்குரிய அச்சட்ட முன்வடிவு குறித்து மேலும் விவாதிக்கப்பட வேண்டும் என்கிறார்கள். நாடாளுமன்ற வளாகத்தில் பாஸ் உதவித் தலைவர் மாபுஸ் ஒமார் (படத்தில்…

கேள்வி நேரம் இல்லாததற்கு மன்னிப்பு கேட்டார் குவான் எங்

பினாங்கு சட்டமன்றத்தில் கேள்வி நேரம் இரத்துச் செய்யப்பட்டதற்கு முதலமைச்சர் லிம் குவான் எங் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். “இது ஒரு தவறு. இவ்வாறு நிகழ்ந்திருக்கக் கூடாது. அதற்காக மாநில அரசின் சார்பில் மன்னிப்பு கேட்கிறேன்”, என்றாரவர். கவர்னர் உரை மீதான விவாதத்தை முடித்து வைத்துப் பேசுகையில் லிம் இவ்வாறு கூறினார்.

சாட்சி: குறைந்தது இரண்டு வாரத்திற்கு ஒரு போலி அடையாளக் கார்டு…

சபாவில் போலி அடையாளக் கார்டுகள் அதிகமாகக் காணப்படுகின்றன.  குறைந்தது இரண்டு வாரத்திற்கு ஒரு கள்ள அடையாளக் கார்டு கண்டு  பிடிக்கப்படுவதாக சபா தேசியப் பதிவுத் துறை இயக்குநர் இஸ்மாயில் அகமட்  கூறுகிறார். அத்தகைய போலிகளில் மை அடையாளக் கார்டுகள் மட்டும் சம்பந்தப்படவில்லை.  பழைய நீல நிற அடையாளக் கார்டுகளும்…

வாக்குகள் எண்ணப்படுவதை நேரடியாக ஒளிபரப்ப அரசாங்கம் எண்ணுகின்றது

கோலா பெசுட் இடைத்தேர்தலின் போது வாக்குச் சாவடிகளில் வாக்குகள்  எண்ணப்படுவதை நேரடியாக வீடியோ ஒளிபரப்புச் செய்வதற்குத் தேர்தல்  ஆணையம் அனுமதிக்க வேண்டும் என கூட்டரசு அரசாங்கம் விரும்புகின்றது. அவ்வாறு அனுமதிக்குமாறு தேர்தல் ஆணையத்தைத் தாம் வற்புறுத்தப் போவதாகவும் அதனைச் செய்யும் ஆற்றல் ஆர்டிஎம்-முக்கு உள்ளதா என்பதை  விசாரிக்கப் போவதாகவும்…

கைரி வீட்டில் திருடியவர்கள் படம் உருவாக்கப்பட்டுள்ளது. தர்மேந்திரன் விவகாரத்தில் எங்கே…

கிரிமினல் வழக்குகளில் சந்தேகத்துக்குரிய நபர்களுடைய உருவகப் படங்களை  வெளியிடுவதில் போலீசார் இரட்டைத் தரத்தைப் பின்பற்றக் கூடாது என டிஏபி  சிகாம்புட் எம்பி லிம் லிப் எங் கேட்டுக் கொண்டுள்ளார். என் தர்மேந்திரனின் தடுப்புக் காவல் மரணத்தில் சம்பந்தப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் நான்காவது போலீஸ் அதிகாரியின் படத்தை வெளியிடுமாறு  தாம் பல…

மதம் மாற்ற மசோதா மீது தெளிவு இல்லை எனச் சாடுகிறார்…

2013ம் ஆண்டுக்கான இஸ்லாமிய சமய நிர்வாக (கூட்டரசு பிரதேசம்) மசோதா விவகாரத்தில் அமைச்சரவையில்  தெளிவு இல்லை என எதிர்த்தரப்புத் தலைவர்  அன்வார் இப்ராஹிம் சாடியுள்ளார். அந்த மசோதாவை கடந்த வாரம் மக்களவையில் தாக்கல் செய்யும் முன்னர்  அமைச்சரவை அதனை விவாதித்திருக்க வேண்டும் என அவர் சொன்னார். "அந்த மசோதாவின் தற்போதைய நிலை குறித்து…

அரசமைப்பில் திருத்தம் செய்து மதமாற்ற குழப்பத்துக்கு முடிவு கட்டலாம்

தன்மூப்பாக குழந்தைகளை இஸ்லாத்துக்கு மதமாற்றம் செய்வதன் தொடர்பில் எழுந்துள்ள குழப்பத்துக்கு முடிவுகாண வேண்டுமானால் அரசாங்கம் கூட்டரசு அரசமைப்பில்  திருத்தம் செய்ய வேண்டும்  என்று டிஏபி தேசிய தலைவர் கர்பால் சிங் கூறுகிறார். அப்படிச் செய்வதற்கு டிஏபி-இன் 38 எம்பிகளும் அதற்கு ஆதரவளிப்பர் என இன்று நாடாளுமன்ற வளாகத்தில் அவர்…

‘பினாங்கு அரசு விவகாரங்களை மூடிமறைக்கப் பார்க்கிறது’

பினாங்கின் பக்காத்தான் ரக்யாட் அரசு  “முக்கிய விவகாரங்களை மூடிமறைக்க” விரும்புகிறது அதனால்தான் சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தை எடுத்துவிட்டது என்கிறார்கள் பினாங்கு பிஎன் இளஞர் தலைவர்கள். அவர்கள் இன்று சட்டமன்றத்தைப் “பார்வையிட”ச் சென்றிருந்தனர். மாநில பிஎன் இளைஞர் தகவல் தலைவர் இங் கூன் லெங், ஆட்சிக்குழு உறுப்பினர்கள் “முக்கியமான” விவகாரங்கள்…

Red Bean Army-யை இன்னும் அடையாளம் காணவில்லை:அமைச்சு ஒப்புதல்

Red Bean Army (தட்டப் பயறு இராணுவம்) என்ற பெயரில் அழைக்கப்படும் மின்வெளி படையை அரசாங்கம் இன்னும் அடையாளம் காணவில்லை. டிஏபி-இன் நிதியுதவியில் செயல்படுவதாகக் கூறப்படும் அது எங்குள்ளது, யார்யார் அதில் உள்ளனர் போன்ற விவரங்கள் இன்னும் தெரியவில்லை என தொடர்பு, பல்லூடக துணை அமைச்சர் ஜைலானி ஜொகாரி…

கள்ளக் குடியேறிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் அரசியல் குறுக்கீடு

சாபா குடிநுழைவுத் துறை முன்னாள் துணை இயக்குனர் இஸ்மாயில் அஹ்மட்,  கள்ளக் குடியேறிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்போது அரசியல்வாதிகள் தலையிடுவது உண்டு என்றார். சாபாவில் குடியேறிகள்மீது விசாரணை நடத்திவரும் அரச ஆணையத்திடம் இன்று சாட்சியம் அளித்த இஸ்மாயில்,  சில சட்டமன்ற உறுப்பினர்கள் அவர்களின் ஆதரவானவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க…

அஸ்ரி: திருக் குர்ஆன் கட்டாய மதமாற்றத்தைத் தடுக்கிறது

இஸ்லாத்தைத் தழுவும் தாயோ தந்தையோ தங்கள் பிள்ளைகளையும் மதமாற்றுதல் கூடாது. இதைத் தெரிவித்த முன்னாள் பெர்லிஸ் முப்தி டாக்டர் முகம்மட் அஸ்ரி சைனல், இஸ்லாத்தில் கட்டாய மதமாற்றம் இல்லை என்று திருக் குர் ஆன் கூறுவதைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார். ஒருவர் சுயமாக உணர்ந்து சுய விருப்பத்தின்பேரில்…

சிம்பாங் ரெங்காம் எம்பிக்கு எதிராக பக்காத்தான் தீர்மானம்

பக்காத்தான் ரக்யாட், சிம்பாங் ரெங்காம் எம்பி லியாங் டெக் மெங்கை நாடாளுமன்ற உரிமை, சலுகைக் குழுவின் விசாரணைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று கூறும் தீர்மானம் ஒன்றை நேற்று பதிவு செய்தது. ஜெலுத்தோங்  டிஏபி எம்பி ஜெப் ஊய் (இடம்),  மற்ற பக்காத்தான் எம்பிகளின் ஆதரவுடன் அந்தத் தீர்மானத்தை…

ஸ்ரீலங்கா பற்றிய ஆவணப்படத்தைத் திரையிட்ட மூவர் கைது

ஸ்ரீலங்கா உள்நாட்டுப் போர் பற்றிய சர்ச்சைக்குரிய ஆவணப்படத்தை அனுமதி இன்றி பொதுமக்களுக்குத் திரையிட்டுக் காட்டியதற்காக மூவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டனர். 'No Fire Zone: In the Killing Fields of Sri Lanka' என்ற அந்த ஆவணப்படத்தின் திரையீட்டுக்கு இரண்டு என்ஜிஓகள்- கோலாலும்பூர், சிலாங்கூர் சீன அசெம்ளி…

உத்துசானுக்கு எதிரான வழக்கில் நிஜாருக்கு வெற்றி

WWW1 கார் எண்பலகை விவகாரம் தொடர்பில் உத்துசான் மலேசியாவுக்கு எதிராக தொடுத்த வழக்கில் பேராக்கின் முன்னாள் மந்திரி புசார் முகம்மட் நிஜார் ஜமாலுடின் வெற்றி பெற்றார். அவருக்கு இழப்பீடாக ரிம250,000 வழங்க உத்துசானுக்கு உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. வழக்குச் செலவாக ரிம30,000 கொடுக்க வேண்டும் என்றும் நீதிபதி…

போலி அடையாளக் கார்டு பறிமுதல் ஆர்சிஐ-யைக் கீழறுப்புச் செய்யும் தந்திரமா…

'இனிமேல் போலி அடையாளக் கார்டுகளை வைத்திருக்கும் யாரும் சாட்சியமளிக்க  முன் வரமாட்டார்கள். சாட்சிகளை மிரட்டினால் ஆர்சிஐ எப்படி உண்மையை  அறியப் போகிறது?' ஆர்சிஐ-யில் இந்தோனிசியரின் அடையாளக் கார்டு பறிமுதல் மலேசிய இனம்: நான் தவறைச் சரி எனச் சொல்லவில்லை. சாட்சிகள் முன்வந்து  சாட்சியமளிப்பதை தடுப்பதற்கு விடுக்கப்பட்டுள்ள மிரட்டலாகும். ஆர்சிஐ…

திறந்த வெளியில் மது அருந்தத் தடை செய்யும் சட்டம் அரசு…

கடந்த வெள்ளிக்கிழமை சிலாங்கூர்  சுல்தான்   மாநிலச் சட்டமன்றக் கூட்டத்தைத்  திறந்து வைத்து ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவித்து மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்கள்  ஆற்றிய உரைகளின் தொடரில் 2- 7-2013 செவ்வாய்க்கிழமை சட்டமன்றத்தில் உரை நிகழ்த்திய முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினர்  டாக்டர் சேவியர்,  பொது இடங்களிலும், திறந்த வெளிகளிலும்  மது …

கூட்டரசு பிரதேச இஸ்லாமிய நிர்வாக மசோதா சிலாங்கூரிலும் வீண் சலசலப்பை…

-டாக்டர் சேவியர்ஜெயக்குமார், ஸ்ரீ அண்டாலாஸ் சட்டமன்ற உறுப்பினர்,ஜூலை 3, 2013.   கடந்த வாரம்  மக்களவையில் தாக்கல்  செய்யப்பட்ட குழந்தைகள்  மத மாற்றம் மீதான மசோதாவை மீண்டும் அடுத்த வாசிப்புக்கு எடுத்துச் சென்று அதனைச் சட்டமாக்கும் யுக்தியை அரசாங்கம் கைவிட வேண்டும் என்பதில் இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு இரண்டு விதக்…

மஇகா: இந்தியர்களுக்கான மெட்ரிகுலேசன் இடங்களை நிரப்புவீர்

மெட்ரிகுலேசன் வகுப்புகளில் இந்தியர்களுக்காக ஒதுக்கப்பட்ட 1500 இடங்களையும் கல்வி அமைச்சு நிரப்ப வேண்டும் என்று மஇகா தலைவர் ஜி.பழனிவேல் விரும்புகிறார். மெட்ரிகுலேசன் வகுப்புகளில் இடமளிக்கப்பட்டு அதை இந்திய மாணவர்களில் சிலர் நிராகரித்திருந்தால் அந்த இடங்களை மற்ற இந்திய மாணவர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று இயற்கை வள, சுற்றுச்சூழல் அமைச்சரான…

இன்னொரு அமைச்சரும் சட்டமசோதாவுக்கு எதிர்ப்பு

2013 இஸ்லாமிய சட்ட நிர்வாக(கூட்டரசு பிரதேசம்) திருத்த மசோதாவுக்கு சுற்றுலா அமைச்சர் முகம்மட் நஸ்ரி அப்துல் அஜீஸ் எதிர்ப்புத் தெரிவித்திருப்பது அறிந்ததே. இப்போது இன்னொரு அமைச்சரும் அதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளார். பிரதமர்துறை அமைச்சரான பால் லவ் (வலம்), பெற்றோரில் ஒருவர் 18-வயதுக்குக் குறைந்த தம் பிள்ளைகளை இஸ்லாத்துக்கு மதமாற்ற…