ஹாடி நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலேயே ஹுடுட் சட்டத்தைக் கொண்டுவர…

கிளந்தானில்  ஹுடுட்  சட்டத்தை  அமலாக்க  பாஸ்  மின்னல்  வேகத்தில்  செயல்பட்டு  வருகிறது.  அதன்  அமலாக்கத்துக்கு நாடாளுமன்றத்தின்  ஒப்புதல்  தேவை என்பதால்  நடப்பு  நாடாளுமன்றக்  கூட்டத்திலேயே  அந்த ஒப்புதலைப்  பெற  அது  முழுமூச்சாகக்  களம்  இறங்கியுள்ளது. நாடாளுமன்றத்துக்கு  அது  எழுதிய  கடிதமே  இதற்குச்  சான்று. நேற்று  கிளந்தான்  சட்டமன்றத்தில்  1993 …

அம்னோ: ஹூடுட் விவகாரத்தில் மசீச, கெராக்கான் தலையிடக்கூடாது

  ஹூடுட் சட்டம் கிளந்தானில் அமல்படுத்தப்படும் விவகாரத்தில் தலையிடக் கூடாது என்று டிஎபியிடம் கூறிய பின்னர், அம்னோ இப்போது அதன் பின் பங்காளிக் கட்சிகளிடமும் அவ்வாறே கூறியுள்ளது. அம்னோவுக்கு சொந்தமான உத்துசான் மலேசியாவின் செய்திப்படி அம்னோ உச்ச மன்ற உறுப்பினரும் மற்றும் அமைச்சருமான இஸ்மாயில் சாப்ரி யாக்கோப் பாரிசான்…

பிகேஆர் தியன் சுவா கைது செய்யப்பட்டார்

  பிகேஆர் உதவித் தலைவர் தியன் சுவா கித்தா லவான் அன்வார் ஆதரவு பேரணி சம்பந்தமாக மிக அண்மையில் கைது செய்யப்பட்டவராகிறார். இன்று காலையில் தமது வாக்குமூலத்தை அளிக்க டாங்வாங்கி மாவட்ட போலீஸ் தலைமையகத்திற்குச் சென்ற தியான் சுவா அங்கு கைது செய்யப்பட்டார். இந்த கித்தா லவான் பேரணி…

குவான் எங்: பாக்கத்தானை அழிப்பதற்கு பாஸ் அம்னோவுக்கு உதவுகிறது

  கிளந்தான் சட்டமன்றத்தில் ஹூடுட் மசோதா ஏற்றுக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து சில பாஸ் தலைவர்களை நம்பியது குறித்து டிஎபியின் தலைமைச் செயலாளர் தமது அச்ச உணர்ச்சியை வெளிப்படுத்தினார். எவர் பெயரையும் குறிப்பிடாமல், பாஸ் மாநில அரசு தாக்கல் செய்திருந்தது பழைய 1993 ஆம் ஆண்டு ஷரியா சட்டத்திற்கான திருத்தங்கள் அல்ல;…

எப்போதும் உறுதுணையாக இருப்போம்: பிரதமரிடம் பிஎன் தலைவர்கள் வலியுறுத்து

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கைப்  பதவி  இறக்க மறைமுக  முயற்சிகள்  நடப்பதாக  ஊகங்கள்  பெருகிவரும்  வேளையில்  பிஎன்  பங்காளிக்  கட்சிகளின்  தலைவர்கள்  அவருக்கு  முழு  ஆதரவைத்  தெரிவித்துக்  கொண்டனர். “பங்காளிக்  கட்சித்  தலைவர்களான  நாங்கள்  நஜிப்பின்  தலைமைத்துவத்துக்கு  எங்களின்  ஆதரவைத்  தெரிவித்துக்  கொள்வதுடன் பிஎன்னை  வழிநடத்துவதற்கும்  நாட்டின்  உருமாற்றத்துக்கும்  …

ஐஜிபி பதவிவிலகக் கோரி குந்தியிருப்புப் போராட்டம்

பக்கத்தான்  ரக்யாட்  ஏற்பாடு  செய்த  ‘கித்தா  லவான்’  பேரணிகளின்  தொடர்பில்  பேரணி  ஏற்பாட்டாளர்கள்  பலர்   அண்மைல்  கைது  செய்யப்பட்டதை  அடுத்து  போலீஸ்  படைத்  தலைவர்  காலிட்  அபு  பக்கார்  பதவி  விலகக்  கோரும்  இயக்கமொன்று  இன்று  தொடக்கப்பட்டது. இதையொட்டி  ஒரு  வார-காலத்துக்கு  24-மணி  நேர  குந்தியிருப்புப்  போராட்டம் ஒன்று …

பாஸுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பீர்: பக்கத்தானுக்கு டிஏபி எம்பி வலியுறுத்து

கிளந்தான்  சட்டமன்றத்தில்  ஹுடுட்  சட்டவரைவு  நிறைவேற்றப்பட்டதன்வழி   பக்கத்தான்  கூட்டணியின்  பொதுக்  கொள்கைத்  தளம் மீறப்பட்டிருக்கிறது  என்றும்  அதற்காக  பாஸுக்கு  எதிராக நடவடிக்கை  எடுக்க  வேண்டும்  என்றும்  டிஏபி  எம்பி  ஒருவர்  கேட்டுக்  கொண்டிருக்கிறார். “பக்கத்தான்  ரக்யாட்  மக்களின்  நம்பிக்கையைத்  திரும்பப்  பெற  விரைந்து  செயல்பட  வேண்டும். “அது  பொதுக் …

டெக்சி, பேருந்து கட்டணங்கள் உயர்கின்றன

ஏப்ரல்  முதல்  தேதியிலிருந்து  டெக்சி, பேருந்து  கட்டணங்கள்  உயரும். தொடக்கக் கட்டணம்  ரிம3  என்பதில்  மாற்றமில்லை  என்றாலும்  இப்போது ஒவ்வொரு 115 மீட்டருக்கும் 10 சென்  என்றிருப்பது  ஒவ்வொரு  200 மீட்டருக்கும்  25 சென்னாக திருத்தி  அமைக்கப்படுகிறது. மிட்  வேலியிலிருந்து  சன்வே  பிரமிட்  செல்வதாக  வைத்துக்  கொண்டால்  அந்த…

சுஹாகாம் இஸ்ஸாவைக் கைது செய்த போலீசைச் சாடியது

மலேசிய  மனித  உரிமை  ஆணையம், போலீஸ்  லெம்பா  பந்தாய்  எம்பி  நூருல் இஸ்ஸா  அன்வார்  நாடாளுமன்றத்தில்  ஆற்றிய  உரைக்காக  அவர்மீது  தேச  நிந்தனைச்  சட்டத்தைப்  பயன்படுத்தி  இருப்பது  நாடாளுமன்றச்  சலுகைகளை  மீறும்  நடவடிக்கையாகும்  எனக்  கூறியது. அதிகாரிகள்  நாடாளுமன்றச்  சலுகைகளை மதிக்க  வேண்டும்  சுஹாகாம்  தலைவர்  ஹஸ்மி அகாம் …

எக்ஸ்கோ: நாங்கள் சுன்னத் செய்வதை முஸ்லிம்-அல்லாதார் தடுக்க முடியாது

ஹுடுட்  சட்டம்  முஸ்லிம்களுக்கு  மட்டுமே  உரியது  என்பதால்  முஸ்லிம்-அல்லாதார்  அதற்கு  எதிர்ப்புத்  தெரிவிக்கக்  காரணம்  ஏதுமில்லை. கிளந்தானில்  ஹுடுட்  சட்ட  அமலாக்கத்தைத் தற்காத்துப்  பேசிய  மாநில  ஆட்சிக்குழு  உறுப்பினர்  நஸருடின்  டாவுட்  இவ்வாறு  கூறினார். “நாம்  சுன்னத்  செய்யக்  கூடாது  என்று  அவர்கள்(முஸ்லிம்- அல்லாதார்)  சொல்ல  முடியுமா?  அவர்கள் …

கைரி: பிரதமர், மகாதிரைக் கெட்டவர் எனக் குறிப்பிடவில்லை

அம்னோ  தலைவர்  நஜிப்  அப்துல்  ரசாக்  அண்மையில்  கட்சியில் உள்ள  ‘கெட்டவர்கள்’ என்று குறிப்பிட்டபோது  முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகமட்டைக்  கருத்தில்  கொண்டு  அவ்வாறு  பேசவில்லை  என  அம்னோ  இளைஞர்  தலைவர்  கைரி  ஜமாலுடின்  கூறினார். இன்று  செய்தியாளர்  கூட்டமொன்றில்  அது  பற்றி  வினவியதற்கு ‘கெட்டவர்கள்’  யார் …

ஹுடுட் சட்டவரைவு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது

கிளந்தான்  ஷியாரியா  சட்டம் 1993-க்குத்  திருத்தம்  கொண்டுவரும் சட்டவரைவு  கிளந்தான்  சட்டமன்றத்தில்  ஒருமித்த  இணக்கத்துடன்  நிறைவேற்றப்பட்டது. 45 சட்டமன்ற  உறுப்பினர்களில்  44 பேர்  இன்று  சட்டமன்றம்  வந்திருந்தனர். வந்த  அனைவரும்  அதற்கு  ஆதரவு  தெரிவித்தனர். செம்பாக்கா தொகுதிக்கான  இடம்  பாஸ்  ஆன்மிகத்  தலைவர்  நிக்  அஸிஸ்  நிக்  மாட் …

‘வலுக்கட்டாயமாக நஜிப்பை வெளியேற்றுவது ஒன்றே வழி’

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  தம்  போக்கை  மாற்றிக்கொள்வார்  அல்லது  அவருக்கு  முன்னிருந்த  அப்துல்லா  அஹ்மட்  படாவியைப்போல்  தாமே  பதவி  விலகுவார்  என்று  டாக்டர் மகாதிர்  முகம்மட்டும்  மற்ற  அம்னோ  மூத்த  உறுப்பினர்களும்  நினைத்தால்  ஏமாந்துதான்  போவார்கள். இவ்வாறு கூறும்  மூத்த  செய்தியாளர்  ஏ.காடிர்  ஜாசின், அவரைக்  கட்டாயப்படுத்திப் …

சிறையில் உள்ள அன்வாரின் நாடாளுமன்ற இடம் காலியாகாது

எதிரணித்  தலைவர்  அன்வார்  இப்ராகிம், ஆறு  மாதம்  நாடாளுமன்றத்துக்கு  வராதிருந்தாலும்  அவரின்  இடம்  காலியாகாது  என்கிறார்  அவரின்  வழக்குரைஞர்  என்.சுரேந்திரன். எம்பி  ஒருவர்  ஆறு  மாதம்  வராதிருந்தால்  அவரின்  நாடாளுமன்ற இடம்  இயல்பாகவே  காலியாகும்  என்ற  கூட்டரசு  அரசமைப்பு  விதி  அன்வாருக்குப்  பொருந்தாது  என  சுரேந்திரன்  கூறினார். “அன்வார் …

அம்னோ பிரதிநிதிகள் அனைவரும் ஹுடுட் சட்டவரைவுக்கு ஆதரவு

கிளந்தான்  சட்டமன்றத்தில், 1993 ஷியாரியா  குற்றவியல்  சட்டத்துக்குத் திருத்தம்  கொண்டுவரும்  சட்டவரைவு  தாக்கல் செய்யப்பட்டபோது  முன் எப்போதுமில்லாத  வகையில்  எதிரணியினர்  அத்தனை  பேரும்  அதற்கு  ஆதரவு  தெரிவித்தனர். அச்சட்டவரைவுமீது  முதலில்  பேசிய   எதிரணி பிரதிநிதியான  கொக்  லானாஸ்  சட்டமன்ற  உறுப்பினர் முகம்மட்  அல்வி  சே  அஹ்மட், ஹுடுட்  சட்ட …

ஹுடுட் சட்டவரைவைச் சட்ட ரீதியாக எதிர்க்க முனைந்துள்ளது கெராக்கான்

கிளந்தான்  சட்டமன்றத்தில் கிளந்தான்  ஷியாரியா  குற்றவியல்  சட்டத்  திருத்த  சட்டவரைவு  தாக்கல்  செய்யப்படும்  வேளையில்  கெராக்கான்  கட்சி  அதைச்  சட்ட  ரீதியாக  எதிர்க்க முனைந்திருக்கிறது. அச்சட்டவரைவை  அரசமைப்புக்கு  விரோதமானது  என  அறிவிக்குமாறு கோரும்  மனு  ஒன்றை  அக்கட்சியின்  வழக்குரைஞர்  குழு  கோட்டா  பாரு உயர்  நீதிமன்றத்தில்  பதிவு  செய்திருப்பதாக …

எம்பி: ஹுடுட்டைக் குறைகூறுவோர் சமய நம்பிக்கையற்றவர்கள்

1993 ஷியாரியா  குற்றவியல்  சட்டத்தில்  திருத்தம்  செய்வதற்காகக்  கொண்டுவரப்படும்  சட்டவரைவை  எதிர்ப்பவர்களைச்  “சமய  நம்பிக்கையற்றவர்கள்”  என வருணித்திருக்கிறார்  கிளந்தான்  மந்திரி  புசார்  அஹ்மட்  யாக்கூப். இன்று  அச்சட்டவரைவை  கிளந்தான் சட்டமன்றத்தில்  தாக்கல்  செய்த  அஹ்மட்,  அவர்கள்  அதைக்  “கொடூரமானது, மனிதத்தன்மையற்றது”  என்று  குறைகூறியிருப்பதாகக்  குறிப்பிட்டார். “அது  கண்மூடித்தனமான  குற்றச்சாட்டு”,…

ஐஜிபியை நாடாளுமன்றம் கண்டிக்க வேண்டும், பிகேஆர் கூறுகிறது

  நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைக்காக நாடாளுமன்ற உறுப்பினரை கைது செய்ததற்காக போலீஸ் படை தலைவரை (ஐஜிபி) கண்டிக்க பக்கத்தான் ரக்யாட் ஒரு தீர்மானத்தை முன்மொழியவிருக்கிறது. பிகேஆர் லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினர் நூருல் இஸ்ஸா அவரது தந்தையின் உரையை நாடாளுமன்றத்தில் வாசித்தது தேசநிந்தனை குற்றம் என்று கூறி அதற்காக…

இஸ்ஸாவை அடுத்து போலீஸ் நூஹாவிடம் விசாரணை செய்யும்

அன்வார்  இப்ராகிமின்  மூத்த மகள்  நூருல்  இஸ்ஸாவை விடுதலை  செய்த  போலீசார்  அடுத்து  அவரின்  தங்கை  நூருல்  நூஹாவை  விசாரணைக்கு  அழைத்திருக்கிறார்கள். இன்று  டாங்  வாங்கி  போலீஸ்  நிலையம்  சென்றிருந்தபோது  தம்மை  அணுகிய  போலீசார்  தம்மிடம்  வாக்குமூலம்  பதிவுசெய்ய  விரும்புவதாக  தெரிவித்தனர்  என  நூருல்  நூஹா  மலேசியாகினியிடம்  கூறினார்.…

பிடிபட்டவர்களிடம் கித்தா லவான் பேரணிக்கு நிதியளிப்பவர்கள் பற்றித் தெரிந்துகொள்ள போலீசார்…

கித்தா  லவான்  பேரணியில்  கலந்துகொண்டதற்காகக்  கைதான  சமூக  ஆர்வலர்கள்  இருவரிடம்  பேரணி  ஏற்பாட்டாளர்கள்  பற்றியும் பேரணிக்கு  நிதி  எங்கிருந்து  கிடைக்கிறது  என்றும்  விசாரிக்கப்பட்டது. தம்மிடமும்  சக  சமூக  ஆர்வலரான  ஆடம்  அலியிடமும்  நடத்தப்பட்ட  விசாரணையில்  அந்த நோக்கம்  தெளிவாக  தெரிந்தது  என்று  மந்திப்  சிங்  மலேசியாகினியிடம்  தெரிவித்தார். “பேரணி …

வெள்ள நிவாரண நிதியில் ரிம462 மில்லியனுக்கு கணக்கு எங்கே?

தீவகற்ப  மலேசியாவில்  கடந்த  ஆண்டு  ஏற்பட்ட  வெள்ளத்தை  அடுத்து  வெள்ள  நிவாரணப்  பணிகளுக்காக  ஒதுக்கப்பட்ட  ரிம800 மில்லியனில்  ரிம462 மில்லியன்  எப்படிச்  செலவிடப்பட்டது  என்பதை  அரசாங்கம்  விளக்க  வேண்டும்  என  டிஏபி  கேட்டுக்  கொண்டிருக்கிறது. இதுவரை ரிம338 மில்லியனுக்கு  மட்டும்தான்  அரசாங்கம்  கணக்குக்  கொடுத்திருக்கிறது  என  அக்கட்சியின்  சிரம்பான் …

தெங்கு ரசாலி: உத்தரவாத கடிதங்களை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதுதான் வழக்கம்

அம்னோவின்  மூத்த  தலைவர்களில்  ஒருவரான  தெங்கு  ரசாலி  ஹம்சா,  தாம்  நிதி  அமைச்சராக  இருந்த  காலத்தில்  அரசாங்கம்  அளிக்கும்  உத்தரவாத  கடிதங்களோ நிதி  விவகாரங்கள்  தொடர்பான  மற்ற  ஆவணங்களோ  நாடாளுமன்றத்தில்  தாக்கல்  செய்யப்படுவதுதான்  வழக்கம்  என்றார். அரசாங்கம்  1மலேசியா  மேம்பாட்டு  நிறுவன (1எம்டிபி) கடன்  பத்திரங்களின்  தொடர்பில்  ரிம11…

நூருல் இஸ்ஸா விடுவிக்கப்பட்டார், ஆனால்……

நேற்றிரவு  போலீஸ்  நிலையத்தில்  தடுத்து  வைக்கப்பட்ட  லெம்பா  பந்தாய்  எம்பி  நூருல்  இஸ்ஸா  அன்வார், போலீஸ்  பிணையில்  விடுவிக்கப்பட்டார். ஆனாலும், ஏப்ரல்  16-இல், அவர்  மறுபடியும்  போலீஸ்  நிலையத்தில்  முன்னிலை  ஆக  வேண்டும். விடுவிக்கப்பட்ட  பின்னர்  நூருல்  செய்தியாளர்களிடம்  பேசினார். “நான்  கைது  செய்யப்பட்டது  ஐஜிபி, பிரதமர்  நஜிப் …