தபூங் ஹாஜி தொடர்பான அரச விசாரணை ஆணையத்தின் அறிக்கையில் எழுப்பப்பட்ட பிரச்சினைகள் குறித்த விசாரணையின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் ஒருவரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கைது செய்துள்ளது. இந்த கைதை உறுதிப்படுத்திய மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் அப்த் ஹலிம் அமான், இந்த வழக்கு…
தெங்கு ரசாலி: எல்லாம் மலாய்க்காரர்கள் மயம், மிரட்டல் எங்கிருந்து வருகிறது?
சிவப்புச் சட்டை பேரணியின் நோக்கம் குறித்து தாம் குழப்பமுற்றுள்ளதாக அம்னோவின் தலைவர்களில் ஒருவரான தெங்கு ரசாலி இன்று இன்ஸ்டிடியூட் இன்டெக்கிரிட்டி மலேசியாவில் நடைபெற்ற ஒரு கலந்துரையாடலில் கூறினார். "உங்களுக்கு அரசாங்கம் இருக்கிறது. அதற்கு தலைமை ஏற்றிருப்பவர் ஒரு மலாய்க்காரர்; பினாங்கு மாநில அரசு ஒன்றைத் தவிர, மாநில…
சுஹாகாம்: அமைதியாக ஒன்றுகூடுதல் ஓர் உரிமை, ஆனால் சட்டம் பின்பற்றப்பட…
அமைதியாக ஒன்றுகூடும் சுதந்திரம் ஒவ்வொரு மலேசிய குடிமகனுக்கும்/குடிமகளுக்கும் உண்டு. ஆனால், அந்த உரிமையைப் பயன்படுத்தும் போது அது சட்டத்தில் கூறப்பட்டுள்ளதற்கு ஏற்றவாறு செய்யப்பட வேண்டும் என்று மலேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் ஹஸ்மி அஹம் கூறினார். ஆகவே, நாளை (செப்டெம்பர் 16) நடைபெற திட்டமிடப்பட்டுள்ள ஹிம்புனான்…
ஜிபிஎம்: நாட்டை மீண்டும் நிருமானிக்க வாரீர்
என்றுமே ஒரு சுதந்திரமான, தன்னாட்சி உரிமையுடைய, ஜனநாயாக கோட்பாட்டின்படி தோற்றுவிக்கப்பட்ட, அதன் மக்களிடையே அமைதியை, நல்லிணக்கதை நிலைநிறுத்திய நாடாக மலேசிய திகழும் என்ற மலேசிய தந்தை துங்கு அப்துல் ரஹ்மானின் இலட்சியத்தால் உந்தப்பட்ட நாம் உயர்ந்த இலட்சியங்கள், நம்பிக்கை மற்றும் பேரார்வம் ஆகியவற்றோடு செப்டெம்பர் 16, 1963 இல்…
முகைதின் யாசின்: பேரணி மலாய்க்காரர்களைப் பாதுகாப்பதற்கு சிறந்த வழியல்ல
அம்னோ துணைத் தலைவர் முகைதின் யாசின் நாளை நடைபெறவிருக்கும் சிவப்புச் சட்டை பேரணிக்கு எதிர்ப்பு தெரிவித்தார். அப்பேரணி எதிர்மறையான தோற்றத்தை அளித்துள்ளது என்றாரவர். மலாய்க்காரர்களின் கௌரவத்தைத் தற்காக்க வேறு நல்ல வழிகள் இருக்கின்றன என்று அவர் மேலும் கூறினார். மலேசிய தினத்தை நேசம் மற்றும் ஒற்றுமை ஆகியவற்றை…
அலி திஞ்சு: 20,000 முன்னாள் இராணுவ வீரர்கள் நாளை செயலில்…
நாளை நடைபெற திட்டமிடப்பட்டிருக்கும் சிவப்புச் சட்டை பேரணியின் போது "டிஎபி சீனர்கள்" ஏதாவது தொந்தரவு கொடுக்காமல் இருப்பதை உறுதி செய்வதற்காக 20,000 முன்னாள் இராணுவ வீரர்கள் அங்கு இருப்பார்கள். இன்றிரவிலிருந்து ஆயிரக்கணக்கான முன்னாள் இராணுவ வீரர்கள் கோலாலம்பூரில் இன்னும் அறிவிக்கப்படாத இடங்களில் கூடத் தொடங்குவர் என்று மலேசிய…
தனேந்திரா, இந்தியர்களை அடகு வைக்காதீர்!
-மு. குலசேகரன், செப்டெம்பர் 15, 2015. ரிம300 மில்லியன் நிதியைப் பெற்று 20 லட்சம் மில்லியன் இந்தியர்களின் வாக்குகளை பாரிசானுக்கு அடகுவைக்க நினைப்பது முட்டாள்தனமாகும். 2008இல் இருந்தே இந்தியர்களின் போக்கு பாரிசானுக்கு எதிராகவே மாறிக்கொண்டு வருகின்றது என்பதை தனேந்திரன் அறிந்திருந்தும் அறியாமல் இருப்பது ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும்…
பேரணி அராஜகத்துக்கு இட்டுச் செல்லலாம், எஸ்யுபிபி கவலை
நாளை கோலாலும்பூரில் நடத்தத் திட்டமிடப்பட்டிருக்கும் பேரணியைக் கடுமையாகக் கண்டிக்கும் எஸ்யுபிபி அது போன்ற செயல்கள் மலேசியாவை அராஜக பாதைக்கு இட்டுச் சென்று விடலாம் என்று கூறியது. “ஆர்ப்பாட்டங்கள் எதிர்- ஆர்ப்பாட்டங்கள் என்னும் அண்மைக்கால போக்கு, அவை ‘மஞ்சள் சட்டை அணிந்திருந்தாலும்’ ‘சிகப்புச் சட்டை அணிந்திருந்தாலும்’, மலேசிய வாழ்க்கைமுறைக்கு ஏற்றதல்ல.…
எதிரணித் தலைவர்களின் கொடும்பாவி எரிப்புக்கு பாஸ் கண்டனம்
கடந்த ஞாயிற்றுக்கிழமை கிளந்தான், கோத்தா பாருவில் எதிரணித் தலைவர்களின் கொடும்பாவிகள் எரிக்கப்பட்ட செயலை பாஸ் கண்டித்தது. “இது காட்டுமிராண்டித்தனமான செயல் என்பதுடன் மலேசியக் கலாச்சாரத்துக்கு ஏற்புடையதுமல்ல”, என பாஸ் தலைமைச் செயலாளர் தாகியுடின் ஹசான் கூறினார். சமுதாயத்தில் பதற்றத்தையும் வெறுப்பையும் ஊட்டும் செயல்களுடன் பாஸ் ஒருபோதும் ஒத்துப்போவதில்லை என்றாரவர்.…
‘அன்வாருக்கு முறையான மருத்துவ சிகிச்சை தேவை’
சிறையில் உள்ள பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு அவசர அறுவை சிகிச்சை தேவைப்படுவதாக அவரின் குடும்பத்தினர் கருதுகின்றனர். ஆனால், சுகாதார அமைச்சின் கருத்து வேறு விதமாக இருக்கிறது. தேவையான சிகிச்சை அன்வாருக்கு அளிக்கப்படாவிட்டால் அவரது குடும்பத்தார் சுகாதார அமைச்சின் டாக்டர் ஜெயேந்திரன் சின்னதுரைக்கு எதிராக மலேசிய மருத்துவ …
அல் ஜசீரா அல்டான்துன்யா ஆவணப் படத்தைத் தற்காத்துப் பேசுகிறது
அல் ஜசீரா அதன் செய்தியாளர் மேரி என் ஜோலி படைத்த ‘Murder in Malaysia’(மலேசியாவில் கொலை) ஆவணப் படத்தில் எந்தக் குறையும் காணவில்லை. மங்கோலிய பெண்ணான அல்டான்துன்யா ஷரீபுவின் கொலையை ஆராயும் அந்த ஆவணப் படத்தைத் தயாரித்ததில் எந்த உள்நோக்கமும் கிடையாது என அத்தொலைக்காட்சி நிலையப் பேச்சாளர் ஒருவர் …
புகை மூட்டத்தால் பள்ளிகள் மூடப்பட்டன
அரசாங்கம் கோலாலும்பூர், சிலாங்கூர், புத்ரா ஜெயா, மலாக்கா, நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்களில் பள்ளிகளை மூடும்படி உத்தரவிட்டுள்ளது. கல்வி அமைச்சர் மஹாட்சிர் காலிட் அந்த உத்தரவைப் பிறப்பித்திருப்பதாக துணை அமைச்சர் பி.கமலநாதன் நேற்றிரவு டிவிட்டரில் தெரிவித்திருந்தார். புகை மூட்டம் மோசமடைந்ததைத் தொடர்ந்து இம்முடிவு எடுக்கப்பட்டது. நேற்றிரவு கோலசிலாங்கூரில் காற்றுத் …
நீங்கள் மலாய்க்காரர்களைப் பாதுகாக்கவில்லை: சிகப்புச் சட்டைகளிடம் மகாதிர் வலியுறுத்து
நாளை நடக்கும் சிகப்புச் சட்டைப் பேரணி மலாய்க்காரர்களைப் பாதுகாக்க நடத்தப்படுவதாகவும் பெர்சே 4 ஒரு இனவாதப் பேரணி என்றும் கூறப்பபடுவதை அபத்தம் என்று கூறி ஒதுக்கித் தள்ளினார் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட். “பெர்சே 4 இனவாதம் சார்ந்ததல்ல, எல்லா இனத்தவரும் அங்கு இருந்தனர். “அவர்கள் (சிகப்புச் …
ஜோகூரில் இனவாதத்துக்கு இடமில்லை: சுல்தான் அறிவிப்பு
ஜோகூர் சுல்தான் சுல்தான் இப்ராகிம் சுல்தான் இஸ்கண்டர் அம்மாநிலத்தில் இனவாதமோ வெறுப்போ வளர்வதற்கு இடமளிக்க மாட்டார். “மலாய்க்காரர்களுக்குச் சிறப்புச் சலுகைகள் உண்டு. அதேபோல் இந்தியர்களுக்கும் சீனர்களுக்கும் ஜோகூரைத் தங்களின் தாயகம் என்று கூறிக்கொள்ளும் உரிமை உண்டு. “அவர்களின் முன்னோர்கள் சீனாவிலிருந்து அல்லது இந்தியாவிலிருந்து வந்திருக்கலாம். ஆனால் அவர்கள் ஜோகூர் …
கடல்படை அதிகாரி ரிம19,000 கடிகாரத்தைப் பெற்றுக்கொண்டதாகக் குற்றச்சாட்டு
அரச மலேசிய கடல்படை அதிகாரி லெப்டனண்ட் கமாண்டர் கைருல் இஸ்வான் முகம்மட் கீர்,37, கடல்படைக்குப் பொருள்களை சப்ளை செய்யும் குத்தகையாளரிடமிருந்து ரிம19,000 பெறுமதியுள்ள கைக்கடிகாரத்தைப் பெற்றுக் கொண்டதாக செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றம் சாட்டப்பட்டது. கைருல் குற்றச்சாட்டை மறுத்தார். பொருள் கட்டுப்பாட்டு அதிகாரியான கைருல் அந்த பெல் &…
சிகப்புச் சட்டைப் பேரணியைத் தடுப்பீர்: நஜிப்புக்கு என்ஜிஓ-கள் கூட்டணி கோரிக்கை
என்ஜிஓ-களின் கூட்டணி ஒன்று புதன்கிழமை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள ‘சிகப்புச் சட்டை’ப் பேரணியைத் தடுத்து நிறுத்தக் கோரி பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்குத் திறந்த மடல் ஒன்றை வரைந்துள்ளது. 19 அமைப்புகளின் ஒப்புதலுடன் Otai Reformis வரைந்துள்ள அக்கடிதம் பேரணி ஏற்பாட்டாளர்கள் ‘இஸ்லாமிய அரசு’ (ஐசிஸ்) போராளிகள் போன்றவர்கள் எனக்…
செப். 16 பேரணி மலாய்ப் பேரணி அல்ல; அது அரசாங்க-ஆதரவுப்…
செப்டம்பர் 16-இல் நடைபெறும் பேரணி “மலாய்க்காரர் மானம் காக்கும்” பேரணி அல்ல என்றும் அது நாட்டின்மீது அன்பு கொண்டவர்களும் அரசாங்கத்தை ஆதரிப்போரும் கூடும் பேரணி எனக் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர் கூறினார். “இது மலாய்க்காரர்கள் கூடும் கூட்டமல்ல. எல்லா இனங்களையும் சேர்ந்த மக்கள் …
ஐஜிபி: ஜோலிக்குத் தகவலளித்தவர்கள்மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கக் கூடும்
அல் ஜசீரா செய்தியாளர் மேரி என் ஜோலி மங்கோலியப் பெண்ணான அல்டான்துன்யாவின் கொலை பற்றி ஆவணப்படமொன்றைத் தயாரிப்பதற்குத் தகவலளித்து உதவியதாகக் கூறிக் கொள்வோரை போலீசார் கண்காணித்து வருகிறார்கள். “ஜோலிக்குத் தப்பான தகவல்களைக் கொடுத்தவர்கள் பற்றி எங்களுக்குத் தெரியும். அவர்களைக் கண்காணித்து வருகிறோம். அவசியம் என்றால் அவர்கள்மீது நடவடிக்கையு எடுப்போம்”,…
வழக்குரைஞர்கள்: செப் 16 பேரணியில் வன்செயல்கள் மூளாமல் போலீசார் பார்த்துக்கொள்ள…
செப்டம்பர் 16-இல் மலாய் என்ஜிஓ-கள் நடத்தும் பேரணியில் இனவாத வன்செயல்கள் தலையெடுக்காமல் அதிகாரிகள் பார்த்துக்கொள்ள வேண்டும் என சுதந்திரத்துக்கான வழக்குரைஞர்கள் அமைப்பு கேட்டுக் கொண்டிருக்கிறது. மலாய் மானம் காப்பதற்காக நடத்தப்படும் பேரணி என்று அழைக்கப்படும் அதில் வன்செயல்கள் தலையெடுக்கும் அபாயம் இருப்பதாக அந்த அமைப்பின் செயல்முறை இயக்குனர் எரிக்…
அம்னோ தொகுதி டிஏபி தந்தை,மகன் கொடும்பாவிகளைக் கொளுத்தியது
கோத்தா பாரு அம்னோ தொகுதி உறுப்பினர்கள் டிஏபி தலைவர்கள் லிம் கிட் சியாங் அவரின் மகன் லிம் குவான் எங் ஆகியோரின் கொடும்பாவிகளை எரித்தனர். கொடும்பாவிகளுக்கு மஞ்சள்நிற பெர்சே 4 டி-சட்டைகள் அணிவிக்கப்பட்டிருந்தன. யுடியூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த காணொளியில், அத்தொகுதித் தலைவர் பாத்மி சே சாலே கொடும்பாவிகளுக்கு எரியூட்டுவதைக் …
அல் ஜசீரா செய்தியாளரை நாடு கடத்தும் உரிமை அரசாங்கத்துக்கு உண்டு
அவசியம் நேரும்போது யாரையும் நாடு கடத்தும் சிறப்புரிமை அரசாங்கத்துக்கு உண்டு என உள்துறை துணை அமைச்சர் நூர் ஜஸ்லான் முகம்மட் கூறினார். மங்கோலிய நாட்டவரான அல்டான்துன்யா கொலை பற்றி ஆவணப்படம் தயாரிப்பதில் ஈடுபட்டிருந்த அல் ஜசீரா செய்தியாளர் நாடு கடத்தப்பட்டது பற்றிக் கருத்துரைத்தபோது நூர் ஜஸ்லான் அவ்வாறு குறிப்பிட்டார்.…
ஜமால்: செப்டம்பர் 16-இல் ஒரே பேரணிதான்
பெர்சே-க்கு எதிர்ப்பாக சிகப்புச் சட்டைப் பேரணி நடத்தப்போவதாகக் கூறிகொண்டிருந்த ஜமால் முகம்மட் யூனுஸ், சிகப்புச் சட்டையினர் செப்டம்பர் 16-இல் தேசிய சீலாட் கூட்டமைப்பு (பெசாகா) ஏற்பாடு செய்துள்ள பேரணியில் சேர்ந்து கொள்ளப்போவதாக அறிவித்துள்ளார். பெசாகா தலைவர் முகம்மட் அலி ருஸ்தம்,, சீலாட் தரப்பினரின் ‘ஹிம்புனான் ரக்யாட் பெர்சத்து (மக்கள் …
5 மாநிலங்களிலும் கூட்டரசுப் பிரதேசத்திலும் காற்றின் தரம் மோசமடைந்திருந்தது
இன்று காலை 9மணிக்குப் பதிவான காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு(ஏபிஐ) தீவகற்ப மலேசியாவிலும் சரவாக்கிலும் 18 இடங்களில் காற்று ஆரோக்கியமற்ற நிலையில் இருந்ததைக் காண்பிக்கிறது. தீவகற்ப மலேசியாவில் மலாக்கா, நெகிரி செம்பிலான், சிலாங்கூர், கோலாலும்பூர், புத்ரா ஜெயா, ஜோகூர் ஆகியவை புகை மூட்டத்தால் பாதிக்கப்பட்டிருந்ததாக சுற்றுசூழல் துறை அதன் அகப்பக்கத்தில் …
லிம்: அல்டான்துன்யா விவகாரம்மீது முழு விசாரணை நடந்தாலொழிய நஜிப்புக்கு நிம்மதி…
மலேசியர்களும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் மங்கோலிய நாட்டவரான அல்டான்துன்யா வழக்கு முடிந்துவிட்டதாக நினைக்க இயலாது. அதன்மீது முழுமையான விசாரணை நடந்த பிறகுதான் அப்படி ஒரு முடிவுக்கு வர முடியும் என்கிறார் டிஏபி பெருந் தலைவர் லிம் கிட் சியாங். “அல்டான்துன்யாவின் ஆன்மா சாந்தி அடையாது, நஜிப்பும் மலேசியர்களிடமிருந்தும் …


