ஹுடுட் சட்டம் சாத்தியமில்லை என்கிறார் சட்ட அமைச்சர்

இந்நாட்டில்  ஹுடுட்  சட்டம்  கொண்டுவருவது  பொருத்தமற்றது  எனச்  சுற்றுலா  அமைச்சர்  நஸ்ரி  அப்துல் அசீஸ்  மொழிந்ததை  வழிமொழிந்திருக்கிறார் நடப்பில்  சட்ட  அமைச்சர்  நன்சி  ஷுக்ரி. நஸ்ரி, நேற்று  இந்நாட்டில்  ஹுடுட்  கொண்டு  வருவது  சாத்தியமிலலை  என்றும்  அதனால்  அதைப்  பற்றிப்  பேசுவது  தேவையற்றது  என்றும்  கூறியதாக  அறிவிக்கப்பட்டிருந்தது. “நஸ்ரி …

ஹாடியுடன் உறவுகளை முறித்துக் கொண்டது டிஏபி

டிஏபி  பாஸ்  தலைவர்  அப்துல்  ஹாடி  ஆவாங்குடன்  உறவுகளைத்  துண்டித்துக்  கொண்டிருக்கிறது. “நேர்மையற்ற” ஒருவருடன்  இணைந்து பணியாற்ற  முடியாது  என்று  அது  கூறியது. நேற்றிரவு  நடைபெற்ற மத்திய  நிர்வாகக்  கூட்டத்தில்  இம்முடிவு  எடுக்கப்பட்டது. இம்முடிவினால்  “பக்கத்தான் ஓர்  இக்கட்டான  நிலைக்குத் தள்ளப்படும்”  என்பதை  அது  உணர்ந்தே  உள்ளது. பிகேஆரும் …

ஜிஎஸ்டி 80 எதிர்ப்பாளர்கள் கைது செய்யப்பட்டனர்

  ஜிஎஸ்டி சம்பந்தப்பட்ட தங்களுடைய 106 கேள்விகள்களுக்கு பதில் வேண்டும் எனக் கோரி பெட்டாலிங் ஜெயாவிலுள்ள கூட்டரசுப் பிரதேச கஸ்டம்ஸ் வளாகத்தில் கூடி உட்கார்ந்து போராட்டம் நடத்தியவர்களில் மொத்தம் 80 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் எதிர்ப்புக் கூட்டத்தினரின் தலைவர் எஸ். அருள்செல்வம், சோலிடேரிட்டி அனாக்…

சிலாங்கூர் புத்ரா ஜெயாவுடன் நீர் உடன்படிக்கை மீதான பேச்சுகளை மீண்டும்…

கூட்டரசு  அரசாங்கம்  நீர்  உடன்படிக்கையில்  உள்ள  நிபந்தனைகள்படி  நடந்துகொள்ள  இணக்கம்  தெரிவித்ததால்  நிர்  உடன்படிக்கை  மீதான  பேச்சுகளைத்  தொடர  சிலாங்கூர்  மாநிலம்  ஒப்புக்கொண்டதாக  அம்மாநில மந்திரி  புசார்  அஸ்மின்  அலி  கூறினார். “முதன்மை உடன்படிக்கையின்படி நடந்துகொள்ள  கூட்டரசு  அரசாங்கம் ஒப்புக்கொண்டிருப்பதாக  எரிபொருள், பசுமைத் தொழில்நுட்பம், நீர்வள  அமைச்சிடமிருந்து  கடிதம்…

ஐஜிபி-யை நாடாளுமன்றக் குழு விசாரணைக்கு உட்படுத்த பக்கத்தான் கோரிக்கை

பக்கத்தான்  ரக்யாட்,  போலீஸ்  படைத்  தலைவர்(ஐஜிபி)  காலிட்  அபு  பக்கார்  நாடாளுமன்ற  உறுப்பினரின்  சலுகையைமீறி  நடந்து  கொண்டார்  என்பதால் அவரை  நாடாளுமன்ற  விசாரணைக்கு  உட்படுத்த  அனுமதி  கோரியுள்ளது. லெம்பா  பந்தாய்  எம்பி  நூருல்  இஸ்ஸா  அன்வார் நாடாளுமன்றத்தில்  ஆற்றிய  உரைக்காக  அவரைக்  கைது  செய்த  காலிட்,  நூருலின்  நாடாளுமன்றச் …

ஜிஎஸ்டி எதிர்ப்பாளர்கள் இரவை லாக்-அப்பில் கழிக்க நேரலாம்

பொருள், சேவை வரி  தொடர்பில்  106  கேள்விகளுக்கு  விடை  கோரி,  பெட்டாலிங்  ஜெயாவில்  உள்ள  கூட்டரசுப்  பிரதேச  சுங்கத் துறை  வளாகத்தில் உள்ளிருப்புப் போராட்டம்  நடத்திய ஆர்ப்பாட்டக்காரர்கள் பலர் கைது  செய்யப்பட்டனர். ஆர்ப்பாட்டத்துக்குத்  தலைமைதாங்கிய  எஸ். அருட்செல்வனும்  கைதானவர்களில்  ஒருவர். “கேள்விகளுக்குப்  பதில் கிடைக்கும்வரை  இரவையும்  இங்கேயே  கழிக்கத் …

பாஸ் தலைவர்: கிட் சியாங்கின் யோசனை ‘அவசரப்பட்டுத் தெரிவிக்கப்பட்டது’

அரசமைப்பையும்  சட்ட  ஆளுமையையும்  பாதுகாக்க இரு  தரப்புகளையும்  சேர்ந்த  எம்பிகள்  சேர்ந்து  கூட்டு  அரசாங்கம்  அமைக்க  வேண்டும்  என்ற  டிஏபி  பெருந் தலைவர்  லிம்  கிட் சியாங்கின் கருத்து  “அவசரப்பட்டுத்  தெரிவிக்கப்பட்ட கருத்து”  என்கிறார்  பாஸ்  எம்பி  முஜாஹிட் யூசுப்  ராவா. ஹுடுட்  சட்டத்தின்  அமலாக்கம்  அரசமைப்புக்கு  உட்பட்டதா …

கிட் சியாங்: கூட்டு அரசாங்கத்தால்தான் மலேசியாவைக் ‘காப்பாற்ற’முடியும்

மலேசிய  அரசியல்  திரிசங்கு  சொர்க்க  நிலையில் இருப்பதாகவும்  கூட்டரசு  அரசாங்கத்தில்  கூட்டணி  அமைப்பதே  “மலேசியாவைக்  காப்பாற்றும்”  வழி  என்றும்  லிம் கிட்  சியாங்  நினைக்கிறார். அந்தக்  கூட்டு அரசாங்கத்தில்  ஆளும்  கட்சி, எதிரணி  ஆகிய  இரு  தரப்புகளின்  எம்பிகள்  இடம்பெற்றிருக்க  வேண்டும். அவர்கள்  ஒன்று  சேர்ந்து  அரசமைப்பையும்  சட்ட …

லீ குவான் இயு காலமானார்

  சிங்கப்பூரின் முதல் பிரதமரும் அச்சிறிய நவீன நாட்டின் சிற்பியுமான லீ குவான் இயு இன்று அவரது 91 ஆவது வயதில் காலமானார். சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றிருந்தாலும் அவரது மகன் பிரதமர் லீ ஹிசியன் லூங் அரசாங்கத்தில் செல்வாக்கு மிக்கவராக லீ இருந்து…

செம்பகா இடைத் தேர்தலில் பாஸ் வெற்றி

  கிளந்தான் சட்டமன்ற செம்பகா தொகுதியில் இன்று நடைபெற்ற இடைத் தேர்தலில் பாஸ் கட்சியின் வேட்பாளர் அஹமட் பாதான் மாமுட் 10,000 க்கு கூடுதலான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட இதர நான்கு வேட்பாளர்களும் படுதோல்வி அடைந்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் அவர்களுடைய வைப்புத் தொகையான…

ஹுடுட் சட்டத்திற்கு மஇகா ஆதரவு இல்லை

மலேசிய அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானதாக இருக்கிறது என்று கூறப்படும் தனிப்பட்ட உறுப்பினரால் தாக்கல் செய்யப்படும் ஹூடுட் மசோதாவுக்கு மஇகா ஆதரவு அளிக்காது என்று அக்கட்சியின் தலைவர் ஜி. பழனிவேல் இன்று கூறினார். இந்த விவகாரத்தில் மசீச மற்றும் கெராக்கான் போன்ற பிஎன் பங்காளிக் கட்சிகளின் நிலைப்பாட்டை மஇகா பகிர்ந்து…

எரிக் பால்சன் மீண்டும் கைது செய்யப்பட்டார்

  இன்று பின்னேரத்தில், சுதந்திற்கான வழக்குரைஞர்கள் (எல்எப்எல்) என்ற அமைப்பின் இணை நிறுவனரான எரிக் பால்சன் அவர் செய்திருந்த டிவிட் செய்திக்காக கைது செய்யப்பட்டார் என்று அவரது வழக்குரைஞர் மலேசியாகினியிடம் மாலை மணி 6.30 அளவில் கூறினார். தற்போது அவர் டாங் வாங்கி போலீஸ் நிலையத்தில் விசாரணைக்காக தடுத்து…

ஹுடுட் சட்ட வரைவை பிஆர்எஸ் எதிர்க்கும்

பாஸ்  நாடாளுமன்றத்தில்  தாக்கல்  செய்யவுள்ள  ஹுடுட்  சட்டவரைவை  பிஎன்  ஆதரித்தாலும்  அக்கூட்டணியில்  உள்ள  கட்சிகளில்  ஒன்றான  பார்டி ரக்யாட் சரவாக்(பிஆர்எஸ்) ஆதரிக்காது. “அதை நாங்கள்  எதிர்ப்போம். இதுதான்  எங்கள்  கட்சியின்  நிலைப்பாடு”, என  பிஆர்எஸ்  தலைவர்  ஜேம்ஸ்  மாசிங்  கூறினார். “எங்களின்  ஆறு  நாடாளுமன்ற உறுப்பினர்களும்  அச்சட்ட  வரைவுக்கு  ஆதரவு …

அமார்: ஹுடுட்டை முஸ்லிம்-அல்லாதார் எதிர்க்கவில்லை, எதிர்ப்பது டிஏபி மட்டும்தான்

கிளந்தான்  துணை  மந்திரி  புசார்  முகம்மட்  அமார்  நிக்  அப்துல்லா,  நாட்டில்  உள்ள  முஸ்லிம்  அல்லாதார்  ஹுடுட்டை  எதிர்க்கவில்லை  என்றும்  டிஏபி  மட்டும்தான்  எதிர்ப்புக்குரல்  கொடுத்து  சத்தம்  போட்டுக்  கொண்டிருக்கிறது  என்றும்  கூறினார். அமார் நேற்று  மலேசியாகினியிடம்  பேசினார். “எதிர்ப்புக்  குரல்  கொடுப்பவர்கள்  முஸ்லிம்- அல்லாதவர்கள்  அல்லர். டிஏபி …

வறுமைக் கோடு உண்மை நிலவரத்தைப் பிரதிபலிக்கவில்லை

கூட்டரசு அரசாங்கம்  வறுமைக்  கோட்டைக்  குறைந்தது  மாதம்  ரிம1,500  என்ற  நிலைக்கு  உயர்த்த  வேண்டும்  என்பதை  வலியுறுத்திய  சிலாங்கூர்  மந்திரி  புசார்  அஸ்மின்  அலி,  அதுதான்  பொருளாதாரச்  சூழலின்  “நடப்பு  நிலவரத்தை”ப்  பிரதிபலிப்பதாக  இருக்கும் என்றார். இப்போது  ரிம900  என்றிருக்கும்  வறுமைக்கோட்டுக்  குறியீடு  திருத்தப்பட்டால்  வறுமைக்கோட்டுக்  கீழே  வாழும் …

அட்னான்: பாஸின் சட்டவரைவு ஓர் ‘அரசியல் ஹுடுட்’

கிளந்தான்  அரசு  ஷியாரியா சட்டத்துக்குத் திருத்தங்கள்  கொண்டுவந்து  மூன்று  நாள்கள்  ஆகின்றன  என்றாலும்,  அதன்மீது  ஆளும்  கட்சியின்  நிலைப்பாடு  என்னவென்பது தெரியாமலேயே  இருக்கிறது.   பிஎன்  தலைமைச்  செயலாளர்  தெங்கு  அட்னான்  தெங்கு  மன்சூரிடம்  கேட்டால் அக் கேள்விக்குப்  பதிலளிப்பதைத்  தட்டிக்கழிக்கிறார்.  அந்தச்  சட்டவரைவை “அரசியல்  ஹுடுட்”  என்று  மட்டும் …

காவலில் வைக்க நீதிமன்ற ஆணை கிடைக்கவில்லை; தியான் சுவா விடுவிக்கப்பட்டார்

போலீசார்  பிகேஆர்  உதவித்  தலைவர்  தியான்  சுவாவை  விசாரணைக்காக  காவலில்  வைக்க  நீதிமன்ற  உத்தரவைப்  பெற  முயன்று,  முடியாது  போனதால்  வேறு  வழியின்றி  அவரை  விடுவித்தனர். “அவரைக்  காவலில்  வைக்க  போலீசார்  செய்திருந்த  மனுவை  மெஜிஸ்திரேட்  சாரா  ஸரியாத்தி  தள்ளுபடி  செய்ததை  அடுத்து  தியான்  சுவா  விடுதலையானார்”, என…

என்னதான் முடிவெடுக்கப்பட்டது ஹுடுட் மீதான அமைச்சரவைக் கூட்டத்தில்?

கிளந்தானில்  கொண்டுவரப்பட்ட  ஹுடுட்  சட்டத்  திருத்தங்கள்மீது  நேற்று அமைச்சரவைக்  கூட்டமொன்று   நடந்தது. அக்கூட்டத்தில்  செய்யப்பட்ட  முடிவு  பற்றி  அம்னோ  அமைச்சர்கள்  தெரிவித்த  தகவல்கள்  ஒரு விதமாகவும்   மசீச  அமைச்சர்கள்  தெரிவித்த  தகவல்கள்  வேறு  விதமாகவும்  இருந்தன. அம்னோ  அமைச்சர்கள்,  கிளந்தானில்  அக்கட்சியின்  பிரதிநிதிகள்  ஹுடுட்டுக்கு  அளித்த  ஆதரவை  ஏகமனதாக …

போலீசார் ஆயிஷாவையும் அவரை மிரட்டியவர்களையும் விசாரிப்பர்

கிளந்தான்  அரசு  ஹுடுட்டுக்கு  முன்னுரிமை  கொடுப்பதைக்  கேலி  செய்யும்  காணொளியின்  அறிவிப்பாளரான  பிஎப்எம்  நிலையத்தைச்  சேர்ந்த  ஆயிஷா  தாஜுடினுக்கு  மிரட்டல்  விடுத்தவர்கள்  விசாரிக்கப்படுவார்கள்  என  போலீஸ்  இன்று கூறியது. போலீசார்  அறிவிப்பாளரையும்  விசாரிப்பார்கள். “இரு  தரப்பினரையும்  போலீஸ்  விசாரிக்கும். பிஎப்எம்  அறிவிப்பாளரையும்  விசாரிக்கும், அவருக்கு  மிரட்டல்  விடுத்தவர்களையும்  விசாரிக்கும்.…

நிஸார்: பாஸ் தலைமைத்துவத்தில் மாற்றம் வேண்டும்

  பாஸ் கட்சியில் பொறுப்பிலிருக்கும் எந்த ஓர் உறுப்பினருக்கும் கட்சியின் மூத்த தலைவர்களை மாற்றும் மற்றும் புதிய தலைவர்களை நியமிக்கும் உரிமை உண்டு என்று முகமட் நிஸார் ஜமாலுடின் கூறுகிறார். கட்சி தலைவர்களிடையே காணப்படும் மோதல்கள் பற்றி கருத்துரைத்த பாஸ் மத்திய குழு உறுப்பினரான அவர் கட்சியின் தலைமைத்துவம்…

ஹூடுட் விவகாரத்தில் பிகேஆர் ஏகமனதான முடிவை எடுத்துள்ளது

  பிகேஆர் ஹூடுட் மசோதா மீது ஏகமனதான முடிவை எடுத்துள்ளது. ஆனால், அது என்ன முடிவு என்பது பற்றி கூறுவதில் கட்சித் தலைவர்கள் மௌனமாக இருக்கின்றனர். "நாங்கள் இணைந்து சிறப்பாகச் செயல்படுகிறோம்", என்று பிகேஆர் உதவித் தலைவர் ஷம்சூல் இஸ்கந்தர் முகமட் அகின் செய்தியாளர்களிடம் கூறினார். அக்கூட்டத்தில் கட்சித்…

வழக்குரைஞர் மன்றம்:ஹூடுட் சட்டம் கிளந்தான் அரசமைப்புச் சட்டத்தை மதிக்கவில்லை என்பதைக்…

  நேற்று கிளந்தான் மாநில சட்டமன்றம் ஹூடுட் சட்டத்தை இயற்றிது. அச்செயல் அந்த மாநிலம் மலேசிய அரசமைப்புச் சட்டத்தை மதிக்கவில்லை என்பதைக் காட்டுகிறது என்று மலேசிய வழக்குரைஞர் மன்றம் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறுகிறது. மலேசிய அரசமைப்புச் சட்டம் சமயச் சார்பற்றது. அச்சட்டத்தின் கீழ் முஸ்லிம்களும் முஸ்லிம்…

ஹுடுட் சட்டவரைவை நஜிப் தடுப்பாரா?

நேற்று நாடாளுமன்றத்தில்  பிஎன் பங்காளிக்கட்சிகளின்  தலைவர்கள்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கைச்  சந்தித்தபோது  அங்கு   விவாதிக்கப்பட்ட  முக்கியமான  விவகாரங்களில்  ஹுடுட்  சட்டவரைவும்  ஒன்று. ஹுடுட்  கூட்டரசு  அரசமைப்புக்கு  எதிரானது  என்பதில்  தலைவர்கள்  ஒருமித்த  கருத்தைக்  கண்டதாக  தெரிகிறது. “இந்த  ஒருமித்த  கருத்தை  நஜிப்பும்  ஏற்றுக்கொண்டார்”, எனப்  பங்காளிக்கட்சி  ஒன்றின் …