தபூங் ஹாஜி தொடர்பான அரச விசாரணை ஆணையத்தின் அறிக்கையில் எழுப்பப்பட்ட பிரச்சினைகள் குறித்த விசாரணையின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் ஒருவரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கைது செய்துள்ளது. இந்த கைதை உறுதிப்படுத்திய மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் அப்த் ஹலிம் அமான், இந்த வழக்கு…
கெராக்கான்: பிஎன் ஒன்றுபடவில்லை என்றால் பெரிய ‘சுனாமி’ ஏற்படலாம்
பினாங்கு கெரான் பேராளர்களிடையே உரையாற்றிய கட்சித் தலைவர் மா சியு கியோங், எதிர்வரும் பொதுத் தேர்தலில் “மிகப் பெரிய சுனாமி” ஏற்பட்டு அதில் பிஎன் மொத்தமாக அடித்துச் செல்லப்படலாம் என்று எச்சரித்தார். மக்களின் ஆதரவு எதிரணி பக்கம் திரும்பலாம் என்பதைத்தான் சுனாமி என்று அவர் குறிப்பிட்டார். பிஎன் தலைவர்கள் …
அம்பிகா: கைருடின் நீண்ட காலம் காவலில் வைக்கப்படுவது சரியல்ல
வழக்குரைஞர் மன்ற முன்னாள் தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசன், முன்னாள் அம்னோ தலைவர் கைருடின் அபு ஹாசான் விசாரணைக்காக நீண்ட காலத்துக்குத் தடுத்து வைக்கப்பட்டிருப்பதைச் சாடினார். “மேல் நடவடிக்கைக்காகக் காவலில் வைப்பதே தண்டனை ஆகிவிடக் கூடாது. ஆறு நாள்களுக்கு அவரைக் காவலில் வைப்பது அதிகாரமீறல் என்றே நினைக்கிறேன். “இவ்வளவு நீண்ட …
1எம்டிபிமீது அமெரிக்க எப்பிஐ விசாரணை: WSJ தகவல்
அமெரிக்கப் புலனாய்வுப் பிரிவான எப்பிஐ 1எம்டிபி விவகாரம் மீது விசாரணைதைத் தொடங்கியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அம்னோ தலைவர் கைருடின் அபு ஹாசன் தடுத்து வைக்கப்பட்டுள்ள வேளையில் இவ்விசாரணை தொடங்கப்பட்டிருப்பதாக தகவலறிந்த வட்டாரமொன்று தெரிவித்ததாக நிதியியல் நாளேடான வால் ஸ்திரிட் ஜர்னல் கூறியது. கைருடின் எப்பிஐ அதிகாரிகளைச் சந்திக்க அமெரிக்கா …
1எம்டிபி மீது புகார் செய்த இருவர் நாட்டை விட்டு வெளியேறத்…
பத்து கவான் அம்னோ தொகுதி முன்னாள் துணைத் தலைவர் கைருடின் அபு ஹசானும் டாக்டர் மகாதிர் முகம்மட்டின் முன்னாள் உதவியாளர் மத்தியாஸ் சாங்கும் நாட்டை விட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அவ்விருவரும் 1எம்டிபிமீது பல நாடுகளில் புகார் செய்தவர்களாவர். இன்று காலை நியூ யோர்குக்கும் லண்டனுக்கும் செல்லவிருந்ததாக கைருடின் …
முகைதின்: தலைவர்கள் இனவாதம் பேசி ‘ஹீரோக்கள்’ ஆகப் பார்க்கிறார்கள்
அம்னோ துணைத் தலைவர் முகைதின் யாசின், இன உணர்வுகளை உசுப்பி விடுவதற்காக நிகழ்வுகள் நடத்தப்படுவது பற்றிக் கவலை தெரிவித்தார். இப்படிப்பட்ட நிகழ்வுகளை ஏற்பாடு செய்கின்றவர்கள் குறுகிய அரசியல் நோக்கம் கொண்டவர்கள் என்பதுடன் அவர்களின் செய்கை சமுதாயத்தில் அச்சத்தை உண்டு பண்ணுகிறது என்றும் அவர் சொன்னார். யார், எவர் என்பதை…
WSJ: 1எம்டிபி-இலிருந்து ஐபிஐசி-க்கு அனுப்பப்பட்ட இன்னொரு யுஎஸ்$1 பில்லியனையும் காணோம்
1எம்டிபி நிறுவனம் அபு டாபியில் உள்ள இண்டர்நேசனல் பெட்ரோலியம் இன்வெஸ்ட்மெண்ட் நிறுவனத்துக்கு(ஐபிஐசி)ச் செலுத்திய இன்னுமொரு யுஎஸ்$1 பில்லியனும் காணாமல் போயிருப்பதாக வால் ஸ்திரிட் ஜர்னல் (WSJ) கூறியுள்ளது. “எம்டிபி அபு டாபி நிறுவனமான ஐபிஐசிக்கு அனுப்பியதாகக் கூறும் $993 மில்லியன் எங்கே என (அபு டாபி) அதிகாரிகள் விசாரணை …
பெர்சே பேரணிக்குப் பிள்ளையை அழைத்து வந்தது பற்றி எம்பி-இடம் விசாரணை
சிலாங்கூர் மந்திரி புசார் அஸ்மின் அலி அவரின் பிள்ளையை பெர்சே 4 பேரணிக்கு அழைத்து வந்தது தொடர்பில் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். இன்று டாங் வாங்கி போலீஸ் தலைமையகம் சென்ற அவரிடம் மஞ்சள்நிற டி-சட்டை அணிந்து பேரணியில் கலந்து கொண்டது பற்றியும் மே மாதம் பெர்மாத்தாங் பாவில் …
ஹாடி: பாஸ் ‘துரோகமிழைத்த’ கட்சியுடன் ஒத்துழைக்காது
இஸ்லாத்துக்குத் துரோகமிழைத்த கட்சியுடன் ஒத்துழைக்க இயலாது என்று கூறிய பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங், அவர்கள் “துரோகிகள்”, “எதிரிகளை விடவும் மோசமானவர்கள்” என்றார். பாஸ் முக நூல் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த காணொளி ஒன்றில் ஹாடி இவ்வாறு கூறினார். அவர் பெயரைக் குறிப்பிடாவிட்டாலும் பார்டி அமானா நெகராவைக் …
நஜிப்பின் சொத்துகளை முடக்கிவைக்க அனினா நீதிமன்றத்தில் மனு தாக்கல்
லங்காவி அம்னோ மகளிர் உறுப்பினர் அனினா சாடுடின் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் சொத்துகளை முடக்கிவைக்கக் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அனினா, பிரதமரின் சொந்தக் கணக்கில் செலுத்தப்பட்ட யுஎஸ்700 மில்லியன் தொடர்பில் நஜிப் மீதும் கட்சியின்மீதும் வழக்கு தொடுத்ததை அடுத்து அம்னோ அவரது உறுப்பியத்தை இரத்துச் …
நஜிப்: பேரணியில் நிகழ்ந்த இனத்தை இழிவுபடுத்தும் செயல்கள் விசாரிக்கப்படும்
அரசாங்கம் பாதுகாப்புக்கும் மற்ற இனங்களுக்கும் மிரட்டல் விடுக்கப்படுவதை,, மிரட்டல் விடுப்பவர்கள் சிகப்புச் சட்டை ஆர்ப்பாட்டக்காரர்களாக இருந்தாலும்கூட பார்த்துக் கொண்டிருக்காது எனப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் எச்சரித்துள்ளார். “அதனால்தான் தடைவிதிக்கப்பட்ட பகுதிக்குள் (பெட்டாலிங் ஸ்திரிட்) நுழைய முயன்ற கூட்டத்தை அதிகாரிகள் கலைத்தனர், அதற்காக தண்ணீர் பீரங்கிகளையும் பயன்படுத்த வேண்டியதாயிற்று.…
பெர்சே கருத்தரங்கில் சிவப்புச் சட்டையினர் கலாட்டா
இன்று பாயான் பாருவில் நடைபெற்ற பெர்சே கருத்தரங்கில் சிவப்பு சட்டையினர் நுழைந்ததின் விளைவாக கருத்தரங்கு சுமார் 30 நிமிடங்களுக்குத் தடைபட்டது. அந்த கருத்தரங்கு தொடங்கிய சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பின்னர் பாயான் பாரு அம்னோ தகவல் பிரிவு தலைவர் ரிட்ஷ்வான் பாக்கார் மற்றும் அம்னோ இளைஞர்…
புதிய கூட்டணி அமைக்க எதிரணியினருக்கு பிகேஆர் அழைப்பு
பிகேஆர் தலைவர் வான் அசிசா வான் இஸ்மாயில், ஒரு புதிய கூட்டணி அமைப்பது பற்றி விவாதிக்க மற்ற எதிரணித் தலைவர்கள் மூவரை அடுத்த செவ்வாய்க்கிழமை வட்டமேசை பேச்சுகளுக்கு அழைத்திருக்கிறார். “ஒரு எதிரணித் தலைவர் என்ற முறையில் மற்ற எதிரணித் தலைவர்களுடன் கூடிப் பேசுவதற்கான முயற்சிகளை முன்னெடுத்திருக்கிறேன். “இறை அருளால்,…
‘சீனா பாபி’ என்று அழைப்பதில் என்ன தவறு? சீனர்கள் பன்றிதானே…
சுங்கை புசார் அம்னோ தொகுதித் தலைவர் ஜமால் முகம்மட் யூனுஸ் சீனர்களை ‘சீனா பாபி’(சீனப் பன்றி) என்று அழைப்பது அவர்களை அவமதிப்பதாகாது என்கிறார் . அதற்கு உணவின் அடிப்படையில் விளக்கமும் கொடுத்தார்.. பன்றி என்பது மலாய்க்காரர்களுக்குத்தான் ஆகாது. பன்றி சாப்பிடுவது இஸ்லாத்தில் தடுக்கப்பட்டிருக்கிறது. “சீனர்களுக்கு அதில் என்ன பிரச்னை.…
ஐஜிபி: பேரணியில் நிகழ்ந்த இன இகழ்வுகளுக்கு வருந்துகிறேன்; புகார்கள் விசாரிக்கப்படும்
போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கார், நேற்றைய சிகப்புச் சட்டைப் பேரணியில் இனத்தை இழிவுபடுத்தும் செயல்கள் நிகழ்ந்ததற்காக வருத்தம் தெரிவித்தார். பெட்டாலிங் ஸ்திரிட்டில் கலைந்து செல்லுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டும் கலைந்து செல்லாமல் போலீஸ் அதிகாரிகளின்மீது போத்தல்களை விட்டெறிந்த ஆர்ப்பாட்டக்காரர்களையும் அவர் கடிந்து கொண்டார். “பேரணிக்கு முன்பே எச்சரித்திருந்தேன்,…
பேரணி ஏற்பாட்டாளர்களுக்குச் சுத்திகரிப்புக்கு ‘பில்’ அனுப்பப்படும்
நேற்றைய சிகப்புச் சட்டைப் பேரணிக்கு ஏற்பாடு செய்தவர்களுக்குச் சுத்திகரிப்புக் கட்டணச் சீட்டு அனுப்பப்படும் என நகர்ப்புற நல்வாழ்வு, வீடமைப்பு, ஊராட்சி அமைச்சர் அப்துல் ரஹ்மான் டஹ்லான் கூறினார். “ஆலாம் பிலோராவிடம் செலவுத் தொகையைத் தெரிவிக்குமாறு கேட்டிருக்கிறேன். அவர்கள் கணக்கை இறுதி செய்து கொண்டிருக்கிறார்கள். கட்டணச் சீட்டு ஆர்ப்பாட்டத்தின் ஏற்பாட்டாளர்களுக்கு …
மலாய்க்காரர் மானம் காக்க இனவாத சுலோகங்கள்தான் கிடைத்தனவா அம்னோவுக்கு?
சிலாங்கூர் மந்திரி புசார் அஸ்மின் அலி, நேற்று கோலாலும்பூரில் நடந்த சிகப்புச் சட்டைப் பேரணியை நினைத்து வெட்கப்படுகிறார். “சிகப்புச் சட்டை அணிந்த மலாய்க்காரர்கள்- ஆண்களும், பெண்களும்- இனவாத சுலோகங்கள் முழக்கமிடுவதையும் வெறுப்புணர்வை வெளிப்படுத்துவதையும் கண்டு என்னுள் ஏற்பட்ட வெட்கக்கேட்டையும் அருவறுப்பையும் வருணிக்க வார்த்தைகள் இல்லை. “இதுதான் மலாய்க்காரர் மானத்தை …
மொராய்ஸ் கொலை ஒரு மிரட்டும் நடவடிக்கை: ஏஜி அலுவலகம் சாடல்
அரசாங்க வழக்குரைஞர் கெவின் அந்தோனி மொராய்ஸ் கொலை போன்ற மிரட்டல் நடவடிக்கைகளைக் கண்டு அஞ்சவில்லை எனச் சட்டத்துறைத் தலைவர் (ஏஜி) அலுவலகம் கூறியது. “அதன் அதிகாரிகளுக்கு எதிரான இப்படிப்பட்ட கோழைத்தனமான, மிரட்டல் நடவடிக்கைகளைக் கண்டு ஏஜி அலுவலகம் அச்சம் கொள்ளாது”, என அது நேற்றிரவு ஓர் அறிக்கையில் கூறிற்று.…
பெட்டாலிங் தெரு அமைதி கண்டது; வன்செயல் விசாரிக்கப்பட வேண்டும், நஜிப்…
இரவு மணி 7.05: கோத்தா கினபாலு - பெட்டாலிங் தெருவில் நடந்த வன்செயல் குறித்து விசாரிக்குமாறு போலீசாரை பிரதமர் நஜிப் கேட்டுக்கொண்டார். "(இது) நடந்திருக்கக்கூடாது. அனைவரும் உத்தரவுக்கு ஏற்ப நடந்து கொண்டிருக்க வேண்டும்", பிரதமர் நஜிப் டிவிட்டர் செய்தார். இதனிடையே, மணி 6.50 அளவில் ஜமால் முகமட்…
பேரணியில் 300,000 பேர் கூடினராம்: ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்
திரெங்கானுவைச் சேர்ந்த கெராக்கான் கபாங்கித்தான் ரக்யாட் தலைவர் ரசாலி இட்ரிஸ் பேரணி மிகப் பெரிய வெற்றி என்று அறிவித்தார். 300,000 பேர் திரண்டு வந்திருக்கிறார்கள் என்று கூறிய அவர், அவர்கள் பெர்சே 4-இல் நஜிப், பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங்கின் படத்தைக் காலில் போட்டு மிதித்ததற்கு எதிர்ப்புக் …
சிகப்புச் சட்டையினர் ஊர்வலம் சென்றபோது லோ யாட் மூடப்பட்டது
இன்று பிற்பகல் மணி 3.30க்கு சிகப்புச் சட்டைப் பேரணியைச் சேர்ந்த ஒரு குழு பாடாங் மெர்போக் செல்லும் வழியில் ஜாலான் புக்கிட் பிந்தாங் வழியாகச் சென்றபோது லோ யாட் பிளாசா அதன் தலைவாசலை மூடியது. வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு கருதி அது மூடப்பட்டதாக அந்த விற்பனை மையத்தின் பொதுத் …
கான்கிரிட் நிரப்பப்பட்ட எண்ணெய் பீப்பாயில் இருந்தது மொராய்ஸின் சடலம்தான்: போலீஸ்…
சுபாங் ஜெயா அருகே காங்கிரிட்டால் நிரப்பப்பட்ட ஒரு எண்ணெய் பீப்பாயில் இருந்தது காணாமல்போன அரசாங்க வழக்குரைஞர். அந்தோனி கெவின் மொராய்ஸின் சடலம்தான் என்பதை போலீஸ் உறுதிப்படுத்தியது. புக்கிட் அமான் குற்றவியல் புலனாய்வு இயக்குனர் முகம்மட் சாலே அதை உறுதிப்படுத்தினார். “அந்த எண்ணெய்ப் பீப்பாய் ஆற்றில் கிடந்தது. “உடலை எடுப்பதற்காக …
கான்கிரிட் நிரப்பப்பட்ட எண்ணெய் பீப்பாயில் மொராய்ஸின் சடலம்
செப்டம்பர் 4-இலிருந்து காணாமல்போய் தேடப்பட்டு வந்த சட்டத்துறை தலைவர் அலுவலக அதிகாரி அந்தோனி கெவின் மொராய்ஸின் சடலம் சுபாங் ஜெயா அருகே இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிகிறது. காங்கிரிட்டால் நிரப்பப்பட்ட ஒரு எண்ணெய் பீப்பாயில் அது இருந்தது. சுங்கை கிளாங்-கை ஒட்டியுள்ள யுஎஸ்ஜே வீடமைப்புப் பகுதியான பெர்சியாரான் சுபாங் …
மெர்டேகா மையம்: இன உறவுகள் மோசமடைந்துள்ளன
நாடு மலேசிய தினத்தைக் கொண்டாடும் வேளையில் இன உறவுகள் மோசமடைந்திருப்பது கவலை அளிப்பதாக மெர்டேகா மையத்தின் திட்ட இயக்குனர் இப்ராகிம் சுபியான் கூறினார். அம்மையம் பிப்ரவரி 14 தொடங்கி ஜூன் 8வரை நடத்திய ஆய்வு ஒன்றைத் தாக்கல் செய்து பேசிய இப்ராகிம், நாட்டில் அவநம்பிக்கை பெருகியிருக்கிறது என்றார். அது …


